உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26701 topics in this forum
-
"ஆப்ரிக்கக் கரையோரம் கிடைத்தது மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் துகள்கள் " இரண்டாண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் உடைந்த துகளாக இருக்கும் என்று கருதப்படும் , கிழக்கு ஆப்ரிக்கக் கடற்கரைக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்ட துண்டு ஒன்றை ஆராய்ந்த ஆஸ்திரேலிய அதிகாரிகள் இது அந்த விமானத்தின் உடைந்த பகுதியாக இருப்பது அதிக அளவில் சாத்தியமானதே என்று கூறுகின்றனர். கிழக்கு ஆப்ரிக்கா கடற்கரையருகே கிடைத்த உடைந்த விமான பாகம் - இரண்டாண்டு ஆகியும் மர்மம் தீரவில்லை கிடைத்த இரண்டு துண்டுகளை தொழில் நுட்பரீதியில் ஆராய்ந்ததில், இவை ஏறக்குறைய நிச்சயமாக , காணாமல் போன எம்.எச்.370 விமானத்தின் பகுதிகளாக இருக்கலாம் என்று முடிவுக்கு வந்ததாக ஆஸ…
-
- 0 replies
- 457 views
-
-
'எச்சரிக்கையை உதாசீனம் செய்தது பெல்ஜியம்' பெல்ஜியத் தலைநகர் ப்ரஸல்ஸில் இடம்பெற்ற தாக்குதல்களில், விமான நிலையத்தில் தாக்குதல்களை மேற்கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் சகோதரர்களில் ஒருவர் தொடர்பாக, தங்களால் விடுக்கப்பட்ட எச்சரிக்கையை, பெல்ஜியம் உதாசீனம் செய்ததாக, துருக்கி அறிவித்துள்ளது. குறித்த சந்தேகநபரைத் தடுத்து வைத்து, அவரை நாட்டிலிருந்து வெளியேற்றியதாகத் தெரிவித்துள்ள துருக்கி, அவர் ஒரு 'வெளிநாட்டுப் பயங்கரவாதப் போராளி" என்ற எச்சரிக்கையையே விடுத்ததாகத் தெரிவித்துள்ளது. ப்ரஸல்ஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் முதலாவது தாக்குதல், விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது. அங்கு தற்கொலைத் தாக்குதலே மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதை ம…
-
- 0 replies
- 519 views
-
-
பிரஸ்ஸல்ஸ் தாக்குதல்: உயிர் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் செவ்வாயன்று நடந்த தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் பிரஸ்ஸல்ஸில் செவ்வாயன்று நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த டஜன் கணக்கானோர் இன்னமும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று பெல்ஜிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் நடந்த தாக்குதல்களில் முப்பத்தியோரு பேர் கொல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளனர். பெல்ஜியத் தலைநகரில் ஒரு அவசரக் கூட்டம் ஒன்றை ஐரோப்பிய ஒன்றிய உள்துறை மற்றும் நீதித்துறை அமைச்சர்களும் நடத்தவுள்ளனர். இதனிடையே தனது குண்டு செயலிழந்துப்…
-
- 0 replies
- 297 views
-
-
தற்போதைய தேசியக் கொடியையே வைத்திருக்க நியுசிலாந்து மக்கள் முடிவு வெள்ளிநிற, ஃபேர்ன் என்ற ஒரு வகைத் தாவரத்தின் இலையுடன் கூடிய கறுப்புநிறக் கொடியை புதிய கொடியாக கொண்டுவர வேண்டும் என்ற யோசனையை பிரதமர் ஜான் கீ கடுமையாக ஆதரித்துவந்தார் பிரிட்டிஷ் யூனியன் கொடியை உள்ளடக்கிய தேசியக் கொடியையே நியுசிலாந்து தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர். இதுவரை எண்ணப்பட்டுள்ள 20 லட்சம் வரையான வாக்குகளின் முதற்கட்ட முடிவுகளின்படி, 57 வீதமான மக்கள் வேறு கொடியொன்றை அறிமுகப்படுத்தும் யோசனையை நிராகரித்துள்ளனர். ஃபேர்ன் என்ற ஒரு வகைத் தாவரத்தின் இலையுடன் கூடிய கறுப்புநிறக் கொடியை புதிய கொடியாக கொண்டுவர வேண்டும் என்ற யோசனையை பிரதமர் ஜான்…
-
- 0 replies
- 252 views
-
-
பிரஸ்சல்ஸ் தாக்குதல்: தீவிரவாதி விட்டுச்சென்ற உயில் மீட்பு பிரசல்ஸ், பெல்ஜியம் நாட்டில் பிரசல்ஸ் நகரில் விமான நிலையம், சுரங்க ரயில் நிலையம் ஆகியவற்றில் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்திய தற்கொலைப்படை தீவிரவாதிகள் உயில் போன்ற ஒன்றை எழுதி வைத்துள்ளனர். இருவரில் பிராஹிம் விமான நிலையத்திலும், காலித் சுரங்க ரயில் நிலையத்திலும் மனித வெடிகுண்டுகளாக மாறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இவர்களில் பிராஹிம் தனது கணனியில் உயில் போன்ற ஒன்றை எழுதி வைத்துள்ளான். அதில் அவன், ‘‘நான் இனி என்ன செய்வது என்று தெரியவில்லை. எல்லா பக்கமும் என்னை வேட்டையாடுகின்றனர். இனி பாதுகாப்பு இல்லை. சிறையில் அவருக்கு அடுத்த அறையில் அடைபட விருப்பம் இல்லை’’ என கூறி உள்ளார். ‘அவர்’ எ…
-
- 0 replies
- 472 views
-
-
பொஸ்டன், பாரிஸ், பிரஸல்ஸ் ஆகிய 3 தாக்குதல்களிலும் உயிர்த்தப்பிய இளைஞர் 2016-03-24 12:47:38 பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸல்ஸில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் காயடைந்த இளைஞர் ஒருவர், ஏற்கெனவே அமெரிக்காவின் பொஸ்டன் குண்டுத்தாக்குதல் மற்றும் பாரிஸ் தாக்குதல்களிலும் நூலிழையில் உயிர் தப்பியவர் என்பது தெரியவந்துள்ளது. 19 வயதான மாசன் வேல்ஸ் எனும் இந்த இளைஞருக்கு பிரஸல்ஸ் விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின்போது, முகத்திலும் கைகளிலும் காயங்கள் ஏற்பட்டன. இதனால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது மாசன் வேல்ஸ் எதிர்கொண்ட 3 ஆவது பயங்கரவாத…
-
- 0 replies
- 402 views
-
-
பெல்ஜியம் தாக்குதலில் மாயமான சென்னை இன்போசிஸ் ஊழியர்- தாயார் கண்ணீர் பேட்டி பெல்ஜியத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து, அங்கு பணியாற்றி வரும் சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் காணாமல் போய் உள்ளார். குண்டுவெடிப்பு நடத்த வழியில்தான் மகன் தினமும் அலுவலகத்துக்கு செல்வான், அவனை கண்டுபிடித்து கொடுங்கள் என்று கணேசனின் தாயார் கண்ணீர் மல்க வேண்டுகோள் வைத்துள்ளார். பெல்ஜியம் தலைநகர் பிரசெல்ஸ் நகரில் விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 35 பேர் பலியானார்கள். 2 இந்தியர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்நிலையில், பிரசெல்சில் பணியாற்றி வரும் சென்…
-
- 0 replies
- 350 views
-
-
பெல்ஜியம் தலைநகர் பிரஸெல்ஸ் நகரில் நடந்த தாக்குதல் தொடர்பாக சந்தேகிக்கப்படும் பிரதான நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளியிட்ட செய்திகளை திரும்பப் பெறுவதாக பெல்ஜிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. பிரஸெல்ஸ் ஜாவுண்டம் விமான நிலைய தாக்குதலுக்கு முன்பாக பதிவான சிசிடிவி பதிவுகளில் காணப்பட்ட நஜீம் லாஷ்ராவி என்ற நபர் ஆந்தர்லெக்ட் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் அந்தச் செய்தியினை தாம் திரும்ப பெறுவதாக அந்நாட்டு ஊடகங்கள் மீண்டும் தெரிவித்துள்ளன. முதலாம் இணைப்பு பெல்ஜியம் தலைநகர் பிரஸெல்ஸ் விமான நிலைய தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் பிரதான நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நீ…
-
- 2 replies
- 423 views
-
-
பிரஸ்ஸல்ஸ் தாக்குதல்களை நடத்தியவர்களின் பின்னணி என்ன? ------------------------------------------------------------------------------------------------------------------- பிரஸ்ஸல்ஸில் நேற்று (22-03-2016) நடந்த தாக்குதல்களில் பலியானவர்களின் நினைவாக அஞ்சலி பிரார்த்தனைகள் நடந்துள்ளன. நாடெங்கிலும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கின்றன. குண்டுத் தாக்குதல் நடந்த மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சில நூறு மீட்டர் தூரத்தில் உள்ள ஐரோப்பிய ஆணையத்தில் ஒருநிமிட மௌன அஞ்சலி கடைபிடிக்கப்பட்டது. சந்தேக நபர்களுக்கு வலைவீசித் தேடும் பணிகள் தொடர்கின்றன. நாடு முழுவதும் பாதுகாப்புப்படைகள் உச்சகட்ட உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலதிகத் தாக்…
-
- 0 replies
- 423 views
-
-
பிரஸ்ஸல்ஸ் பயங்கரவாதத் தாக்குதல்களின் சந்தேகநபர்களுக்கு வலைவீசி, தேடுதல் வேட்டை தொடர்கிறது ஸீக்கா வைரஸ் பரவிவரும் பிரெஸிலில் மேலும் பல குழந்தைகள் வளர்ச்சிக் குறைபாட்டுடன் பிறந்துள்ளதாக உறுதிப்படுத்தும் அதிகாரிகள். முதியவர் பராமரிப்பு அரசுக்கும் சமூகத்துக்கும் சுமையல்ல என்று காட்டுகிறது ஜப்பானின் புதிய முயற்சி ஒன்று
-
- 0 replies
- 235 views
-
-
பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் சந்தேக நபர் ஒருவர் கைது பிரஸ்ஸல்ஸ் நகரில் நேற்று செவ்வாய்க் கிழமையன்று நடந்த தாக்குதல் தொடர்பாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பெல்ஜிய ஊடகங்கள் கூறுகின்றன. விமான நிலைய தாக்குதலுக்கு முன்பாக பதிவான சிசிடிவி பதிவுகளில் காணப்பட்ட நஜீம் லாஷ்ராவி என்ற நபர் ஆந்தர்லெக்ட் பகுதியில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். நேற்று செவ்வாய்க்கிழமை பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸின் செவென்டம் (Zaventem) விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்திலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. விமான நிலையத்திலும் மெட்ரோ நிலையத்திலும் நடந்த இந்த தாக்குதலில் 34 பேர் உயிரிழந்தனர். 250 பேர் காயமடைந்தனர். இந்த தொடர் குண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்க…
-
- 1 reply
- 400 views
-
-
ஐ.எஸ் சந்தேகநபர்களின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன பெல்ஜியத் தலைநகர் ப்ரஸல்ஸில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குதல்களை நடத்துவதற்கு வருகைதந்ததாகக் கூறப்படும் ஐ.ஸ்.ஐ.எஸ் அமைப்பைச்சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மூவரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி கமெராவில் பதிவான புகைப்படங்களை அடிப்படையாக வைத்தே, இந்த மூவரின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த மூவரில் இருவர், தற்கொலைக்குண்டுத்தாக்குதலை நடத்தியதாகவும் மற்றையவர் ஏனைய குண்டுத்தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச்சென்றுவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியத் தலைநகர் ப்ரஸல்ஸில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குத…
-
- 2 replies
- 479 views
-
-
புரூசெல்ஸ் தாக்குதல் - பின்னணி பாடகர் மனைவி, மகன் தப்பினர்! புரூசெல்ஸ் தாக்குதலில் இந்தியர்கள் யாரும் பலியானதாக தகவல் இல்லை. இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் சுவரூப் கூறுகையில், “நாங்கள் புரூசெல்ஸ் தூதருடன் பேசினோம். இந்தியர்கள் யாரும் பலியானதாக தகவல் இல்லை” என கூறினார். அதே நேரத்தில் இந்தியாவின் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் 2 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களில் ஒருவர் பெண் ஆவார். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான உதவிகளை அங்குள்ள இந்திய தூதரகம் செய்யும் என மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறினார். விமான நிலைய தாக்குதலில் பிரபல இந்திப்பட பின்னணி பாடகர் அபிஜித் பட்ட…
-
- 0 replies
- 470 views
-
-
பிரித்தானிய செய்தி பொதுமக்களின் உடல் எடையை தடுக்க பிரித்தானிய அரசு அதிரடி திட்டம்: வருகிறது புதிய சட்டம் [ திங்கட்கிழமை, 21 மார்ச் 2016, 06:20.13 மு.ப GMT ] பிரித்தானியாவில் அதிகரிக்கும் உடல் பருமனை தடுத்து பொதுமக்களின் நலனை பாதுகாக்க அந்நாட்டு அரசு ஒரு புதிய சட்டத்தை கொண்டு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவில் ‘சர்க்கரை அதிகம் கலந்த குளிர்பானங்களை பொதுமக்கள் அதிகளவில் எடுத்துக்கொள்வதே உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணியாக’ பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பிரித்தானியாவில் பொதுமக்கள் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 14.8 பில்லியன் லிற்றர…
-
- 0 replies
- 576 views
- 1 follower
-
-
பெல்ஜியம் குண்டுவெடிப்பு எதிரொலி: சென்னை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு ! சென்னை: பெல்ஜியம் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டள்ளது. பார்வையாளர்கள் வருகைக்கு வரும் 24 ஆம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 55 பேர் படுகாயமடைந்தனர்.14 பேர் விமான நிலையத் தாக்குதலிலும் 20 பேர் மெட்ரோ ரயில் நிலைய தாக்குதலிலும் பலியாகியுள்ளதாக பிரஸ்ஸல்ஸ் தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் பியர் மெய்ஸ் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 524 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு நிதி உதவி வழங்கிய இருவர் ஆஸ்திரேலியாவில் கைது இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் தீவிரவாதிகளுக்கு நிதி உதவி வழங்கினார்கள் என்ற சந்தேகத்தில் 16 வயது பள்ளி மாணவி ஒருவரையும், 20 வயது ஆண் ஒருவரையும் ஆஸ்திரேலிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் கண்காணிக்கப்பட்டு வந்ததன் பின்னரே, இவர்கள் மீது இந்தக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த இவருவருக்குமான பிணை நிராகரிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 16 வயது பள்ளி மாணவியிடம், காவல்துறையினர் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வெளிநாடுகளிலுள்ள ஐ.எஸ். குழுவினருக்கு எவ்வளவு பணம் அனுப்பப்பட்டது என்பதைத் தெரிவ…
-
- 3 replies
- 436 views
-
-
பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில், ஜெட் ஏர்வேஸ் விமான ஊழியர்களும் காயம் அடைந்தனர். அடுத்த சில மணி நேரங்களில், டெல்லியில் உள்ள ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் அழைப்பு மையத்துக்கு ஒரு மர்ம டெலிபோன் அழைப்பு வந்தது. அதில் பேசிய ஆசாமி, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 5 ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறிவிட்டு, இணைப்பைத் துண்டித்தான். அவன் குறிப்பிட்ட விமானங்களில் 3 விமானங்கள் ஏற்கனவே புறப்பட்டுச் சென்று விட்டன. அந்த விமானங்கள் கோரக்பூர், சண்டிகார், டேராடூன் ஆகிய நகரங்களுக்கு திட்டமிட்டபடி சென்றன. நான்காவது விமானம், சென்னைக்கு வருவதாக இருந்தது.…
-
- 0 replies
- 518 views
-
-
நிர்பயா சம்பவத்திற்கு பிறகு இந்தியாவில் தங்களின் பாதுகாப்பு குறித்து ஏற்பட்ட அச்சத்தால் சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண்களின் எண்ணிக்கை சரிந்துவிட்டதாக மத்திய சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் ஜோதி சிங் என்ற கல்லூரி மாணவி (நிர்பயா) ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது சர்வதேச நாடுகள் வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணிகளுக்கு தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டது. இது இந்திய சுற்றுலாத் துறையையும் கடுமையாக பாதித்துள்ளது. மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் புள்ளி விபரப்படி 2013-ம் ஆண்டு 11.6 சதவீதமாக இருந்த வெளிநாட்டு சு…
-
- 0 replies
- 234 views
-
-
பெல்ஜியம் விமானநிலையத்தில் குண்டுவெடிப்பு.. BREAKING: Explosion at the Explosion at Zaventem airport in #Brussels, airport Being evacuated now. Reason unknown BREAKING: Explosion at the Explosion at Zaventem airport in #Brussels, airport Being evacuated now. Reason unknown At Brussels Airport in Zaventem, it should have come to two explosions. The airport has already been cleared. The explosions are said occurred on American Airlines switch shortly before eight o'clock haben.- Several people were injured. Meanwhile, the train service is interrupted to the airport.
-
- 10 replies
- 1.7k views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… பெல்ஜியத் தலைநகர் பிரசல்ஸில் பயங்கரவாத தாக்குதல். நகரின் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் கட்டமைப்பில் நடந்த தற்கொலைத் தாக்குதல்களில் முப்பத்து நான்கு பேர் பலி; நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயம். விமான நிலைய குண்டு வெடிப்பை நேரில் பார்த்த பிரஸ்ஸல்ஸ் வாழ் தமிழரின் நேரடித் தகவல்கள். பயங்கரவாத சந்தேகநபரின் ஐஃபோனை அன்லாக் செய்ய ஆப்பிள் நிறுவனம் மறுத்துள்ள நிலையில், அதற்கு புதிய வழி ஒன்று கிடைத்திருப்பதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான நீதிமன்றத்திடம் தெரிவித்திருப்பது குறித்த செய்திகள் ஆகியவை இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 334 views
-
-
மியான்மார் அமைச்சரவை: 4 அமைச்சகங்களுக்கு ஆங் சான் சூச்சி பொறுப்பு அதிபராவதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ள ஆங் சான் சூச்சி, மறைமுகமாக ஆட்சி செய்வார் என்று சிலர் கருதியிருந்தனர். மியான்மாரில் ஜனநாயகத்துக்காக பல தசாப்தங்களாக போராடி வந்த ஆங் சான் சூச்சிக்கு அந்நாட்டு அமைச்சரவையில் ஒரு பதவி கிடைக்கப்போகிறது. கடந்த நவம்பரில் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணிக் கட்சியால் அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்தில், நோபல் பரிசு பெற்றவரான ஆங் சான் சூச்சி நான்கு அமைச்சகங்களின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவிருக்கிறார். வெளியுறவுத் துறை, கல்வி, எரிசக்தி/மின்சாரம், மற்றும் அதிபரின் அலுவலகம் ஆகிய அமைச்சகங்கள் இவரது பொறுப்பில் இருக்கும். அதிபராவக…
-
- 1 reply
- 487 views
-
-
"ஐபோனை அன்லாக் செய்ய புதிய வழி" ஐபோனை அன்லாக் செய்யக்கோரும் அமெரிக்க அரசின் கோரிக்கையை எதிர்க்கும் ஆர்ப்பாட்ட பதாகை (ஆவணப்படம்) ஆப்பிள் நிறுவன தயாரிப்பான ஐபோனின் பாதுகாப்பு தொழில்நுட்ப பூட்டை உடைத்து அதற்குள் புகுவதற்கான ஒரு தொழில்நுட்ப வழியை அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத்துறை அடையாளம் கண்டிருப்பதாக அமெரிக்க அரசின் நீதித்துறை நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. சான்பெர்னாண்டினோ துப்பாக்கிதாரியான சையத் ரிஸ்வான் ஃபாரூக்கின் ஐபோனின் பாதுகாப்புப் பூட்டை உடைக்க ஐபோனின் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் உதவ வேண்டும் என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. கடந்த டிசம்பரில் 14 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தத…
-
- 1 reply
- 523 views
-
-
ஒபாமாவை ரால் கேஸ்ட்ரோ அவமதித்துவிட்டார்: டொனால்டு டிரம்ப் ட்வீட்! வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவை கியூபா அதிபர் ரால் கேஸ்ட்ரோ விமான நிலையத்தில் சந்தித்து வரவேற்காதது அவமதிப்பு என்று டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டி உள்ளார். அமெரிக்காவின் அருகில் அமைந்துள்ள தீவு நாடான கியூபாவில், 1959–ம் ஆண்டு மக்கள் புரட்சி ஏற்பட்டது. சர்வாதிகாரி பாடிஸ்டாவின் ஆட்சிக்கு கம்யூனிஸ்டுகள் முடிவு கட்டினர். அந்நாட்டின் அதிபராக பிடல் காஸ்ட்ரோ பதவி ஏற்றார். கியூபாவுக்கு முன்னாள் சோவியத் ரஷ்யா, தனது முழுமையான ஆதரவை அளித்தது. இதற்கிடையே, கியூபாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வந்தது. மேலும் அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்தது. இத…
-
- 0 replies
- 521 views
-
-
வெளிநாடுகளில் மருத்துவ பட்டப்படிப்பு படித்து வரும் மாணவர்கள் இந்தியாவில் டாக்டர்களாக பணியாற்ற இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் தகுதித்தேர்வில் வெற்றி அடைந்த பின்னர் தான் அவர்கள் இந்தியாவில் நிரந்தர டாக்டர்களாக அங்கீகரிக்கப்படுவார்கள்.இதுபற்றி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து தேசிய கல்வி வாரியம் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-கடந்த 2004-ம் ஆண்டு 4 சதவீத மாணவர்களே இந்த தகுதி தேர்வில் வெற்றி பெற்றனர். அதிகபட்சமாக கடந்த 2005-ம் ஆண்டு நடந்த தகுதி தேர்வில் 2,851 மாணவர்களில் 2,192 மாணவர்கள் வெற்றி பெற்றனர். இது 76.8 சதவீத தேர்ச்சி ஆகும். கடந்த ஆண்டு நடந்த 2 தேர்வுகளில் முறையே 10.4 சதவீதமும், 11.4 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஜூ…
-
- 0 replies
- 345 views
-
-
ஈராக் நாட்டின் மொசூல் நகரில் கடந்த இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் சுமார் 100 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து மொசூல் பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சர்வதேச நாடுகளின் வான்வெளிப் படைகள் தாக்குதல் நடத்தியதாக ஈராக் இராணுவம் டுவிட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளது.தாக்குதலின் போது மொசூல் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் யாரும் இல்லை என்றும் பல்கலைக் கழக கட்டிடங்கள் பயிற்சிக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் ஈராக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் 17 மூத்த தலைவர்களும், பல்வேறு உள்ளூர் ஆதரவாளர்களும் இந்த வான்வெளி தாக்க…
-
- 0 replies
- 416 views
-