உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
லெபனானில் கைது செய்யப்பட்ட இஸ்ரேலியக் கழுகு விடுதலை லெபனானில் கைது செய்யப்பட்டிருந்த கழுகு ஒன்று விடுதலை செய்யப்பட்டுள்ளது. அந்தக் கழுகின் உடல்பகுதியில் கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்தன. இஸ்ரேலுக்காக உளவு பார்த்தது எனும் சந்தேகத்தின் பேரில் அந்தக் கழுகு லெபனானில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. மிகப்பெரிய அந்தக் கழுகு இஸ்ரேலிய எல்லையைக் கடந்து தெற்கு லெபனானுக்குள் பறந்தது. பின்னர் அந்தக் கழுகு அங்கு இறங்கியபோது டெல் அவிவ் பல்கலைக்கழத்தின் அடையாள அட்டை அதன் கால்களில் கட்டப்பட்டிருந்தது தெரிந்தது. அதுமட்டுமன்றி அந்தக் கழுகு இருக்கும் இடத்தை அறிந்து கொள்வதற்கான கருவி ஒன்றும் அதனுடன் பொருத்தப்பட்டிருந்தது. இருநாட்ட…
-
- 1 reply
- 466 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், ஐநா அணுசரணையில் நடக்கும் சமாதானப் பேச்சுகள் ஜெனீவாவில் ஆரம்பிக்கவுள்ளன! ஆனால் எந்தெந்த எதிரணி கலந்துகொள்கிறது என்பதில் இன்னும் குழப்பம்! - ஸீக்கா வைரஸ் வேகமாக பரவ, பிரேசிலில், தேங்கிய தண்ணீரை சுத்தம் செய்ய வீடுவீடாக நடவடிக்கை! - மிதக்கும் மருத்துவமனை! வங்கதேசத்தின் நதிக்கரையோரத்து வறிய கிராமங்களுடைய சுகாதார தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு புதிய வழி!
-
- 0 replies
- 315 views
-
-
சவுதியில் ஷியாப் பள்ளிவாசல் மீது தாக்குதல்: மூவர் பலி சவுதி அரேபியாவில் ஷியாப் பள்ளிவாசல் ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறைந்து மூவர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சவுதியில் தொடர்ச்சியாக ஷியா பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன(கோப்புப்படம்) நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள மெஹசின் நகரிலுள்ள இமாம் ரேசா பள்ளிவாசலில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலின் போது தற்கொலை குண்டுதாரி ஒருவர் தற்கொலை இடுப்புப் பட்டியை இயக்க முயன்றபோது, வழிபாடு செய்யவந்திருந்த ஒருவரால் தடுக்கப்பட்டார் என சமப்வத்தை நேரில் கண்ட ஒருவர் கூறுகிறார். …
-
- 0 replies
- 294 views
-
-
ஏம்பா அவரு வாராரு... அதையெல்லம் மூடுங்கப்பா...! ஈரானிய அதிபரின் இத்தாலிய பயணத்தை முன்னிட்டு ரோம் நகரில் உள்ள புகழ்பெற்ற கெப்டோலியன் மியூசியத்தில் உள்ள நிர்வாணச் சிலைகள் மூடி வைக்கப்பட்டன. அதிபர் ஹசன் ரஹானி, பார்வையிட்டு சென்ற பின்னரே, சிலைகள் பழைய நிலைக்குத் திரும்பின. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு, ஈரான் அதிபர் ஒருவர் இத்தாலி நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஈரான் அதிபர் ஹசன் ரஹானி, இத்தாலி வருகையையொட்டி அவரை மனம் கோணாமல் பார்த்துக் கொள்ள இத்தாலி அரசு முடிவு செய்தது. ரோம் நகரில் உள்ள புகழ்பெற்ற கேப்டொலியன் மியூசியத்தை ஈரான் அதிபருக்கு சுற்றி காட்டவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த மியூசியத்தில் ஏராளமான நிர்வாண நிலை சிலைகள் உ…
-
- 0 replies
- 589 views
-
-
Friday, 29 January 2016 - 12:06 அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்ற இலங்கையர் ஐ.எஸ் இயக்கத்தில்!: வீடுகளை சுற்றிவளைத்த படையினர்! இலங்கையில் பிறந்து அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்ற ஐ.எஸ் தீவிரவாதியொருவரின் வீடுகளில் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் தீவிர பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மொஹமட் உனைஸ் மொஹமட் அமீன் என்ற குறித்த , 41 வயதான இலங்கையர் , ஐ.எஸ் இயக்கத்தில் இணையும் பொருட்டு 2014 ஆம் ஆண்டில் சிரியாவுக்கு சென்றுள்ளார். மேலும் தற்போது ஐ.எஸ் இயக்கத்திற்கு ஆதரவு தேடும் பிரச்சார காணொளிய…
-
- 1 reply
- 552 views
-
-
அமெரிக்கா உட்பட 25 நாடுகளை அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்: கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு எச்சரிக்கை ஜிகா வைரஸ் பாதிப்பு காரணமாக பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கொசு மருந்து தெளிக்கும் சுகாதார ஊழியர். படம்: புளூம்பெர்க் பிரேசில், அமெரிக்கா உட்பட 25 நாடுகளில் ஜிகா வைரஸ் வேக மாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சலை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப் படாததால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன. கடந்த ஆண்டு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பரவியது. இதில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். பல்லா யிரக்கணக்கானோர் பாதிக்கப் பட்டனர். அந்த வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. அதற்குள் ஜிகா என்ற புதிய வைரஸ் தென்அ…
-
- 0 replies
- 271 views
-
-
நம்மில் வாழும் வில்லியம் சேக்ஸ்பியர் டேவிட் கமரூன் தமிழில்:- நியூசீலந்திலிருந்து கிஷாளன் வரதராஜன்: உலக நாடக இலக்கிய மேதை வில்லியம் சேக்ஸ்பியரின் 500 ஆவது ஆண்டு நினைவையிட்டு பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் நியூசீலந்து ஹரல்ட் நாளிதழுக்கு எழுதிய விசேட கட்டுரை இது. நியூசீலந்தில் சேக்ஸ்பியரின் நாடகங்கள் இன்றும் பல்கலைக்கழக மட்டத்திலும் பாடசாலைகளிலும் ஆண்டுதோறும் நினைவு கூர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. டேவிட் கமரூனின் பிரத்தியேகக் கட்டுரையை தமிழில் தருபவர் கிஷாளன் வரதராஜன். 13 வயதில் இலங்கையிலிருந்…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஏமன் அதிபர் மாளிகை அருகே தற்கொலைப்படை தாக்குதல்: 8 பேர் பலி! அதென்: ஏமன் அதிபர் மாளிகை அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் பலியாகியுள்ளனர். ஏமன் ஆளுநராக இரந்த ஜாபர் சாட் கொல்லப்பட்டதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் அய்தரஸ் அல்-ஜூபாய்தி ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், அல்-ஜூபாய்தியை குறி வைத்து இந்த மாத தொடக்கத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவர் தப்பித்து விட்டார். இந்நிலையில், நேற்று (28-ம் தேதி) ஏமன் அதிபர் மாளிகை அருகில் திடீரென தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ராணுவ வீரர்கள் உள்பட 8 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், 12 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் சிக…
-
- 0 replies
- 423 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - கொசுவால் பரவும் ஸீகா கிருமி பிரசிலிலில் ஒரு பெரிய சுகாதார நெருக்கடியை உருவாக்கிவரும் நேரத்தில், அங்கு லட்சக்கணக்கான புதிய கொசுக்கள் காற்றில் விடப்படுவது ஏன்? வாருங்கள் விடை காணலாம்! - லிபிய புரட்சி ஆரம்பித்த பெங்காஸி நகரம் பெரும் போர்க்களமாக மாறியுள்ளது! ஐ எஸ்ஸின் கை ஓங்கிவரும் ஒரு மோதல்களத்திலிருந்து பிபிசி பிரத்யேகத் தகவல்! - பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப, வாழும் விதத்தை மாற்றிக்கொள்ளும் பென்குவின்கள்! தென் துருவக் கண்டத்தில் கண்காணிப்பு கேமராக்களைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் ஆய்வு!
-
- 0 replies
- 428 views
-
-
கிரீஸ் கடற்பகுதியில் படகு மூழ்கி 10 குழந்தைகள் உட்பட 24 அகதிகள் பலி அகதிகள் பயன்படுத்தும் ரக படகுதான் இது. அதிகம் பேரை ஏற்றிக் கொண்டு வருவதால் கிரீஸில் கவிழ்ந்து அகதிகள் பலர் மூழ்கி இறக்கின்றனர். | படம்: ஏ.பி. கிரீஸ் கடற்பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 10 குழந்தைகள் உட்பட 24 அகதிகள் இறந்தனர். மேலும் சுமார் 11 பேரை காணவில்லை. ஏஜியன் கடற்பகுதியிலிருந்து 10 அகதிகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளோரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டுப் போர் காரணமாக சிரியா, இராக் உள்ளிட்ட மேற்காசிய நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்கின்றனர். ஆபத்தான கடல்பயணத்தில் இவர்களின் படகு வ…
-
- 0 replies
- 326 views
-
-
'கங்காருவில் குண்டை கட்டி போலிஸை தாக்க திட்டமிட்ட சிறுவன்' இஸ்லாமிய அரசு குழுவால் ஈர்க்கப்பட்ட ஒரு சிறுவன் கங்காரு மிருகத்தில் குண்டை கட்டி போலிஸாரை தாக்குவது எப்படி என்று கலந்துரையாடியதாக ஆஸ்திரேலியாவில் உள்ள வழக்குத் தொடுனர்கள் கூறியுள்ளனர். கங்காருவில் குண்டை கட்டி போலிஸை தாக்க திட்டமிட்ட சிறுவன்' மெல்பேர்னில் நடந்த வழக்குக்கு முன்னதான விசாரணை ஒன்றில், செவ்டெட் ரமதான் பெசிம் இவ்வாறு செய்ததாக நீதிமன்றத்துக்கு கூறப்பட்டது. தன்மீது சுமத்தப்பட்ட பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் நான்கை அவர் மறுத்திருந்தார். மோதல்களில் கொல்லப்பட்ட ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து படையினரை நினைவுகூரும் அன்ஷாக் தினத்தில் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் மெல்பேர்னில் ஒரு பொ…
-
- 0 replies
- 365 views
-
-
80,000 அகதிகளை வெளியேற்றவுள்ள சுவீடன் சுவீடனை, கடந்த வருடம் (2015) வந்தடைந்த அகதிகள், புகலிடக்கோரிக்கையாளர்களில், புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டோரில், 80,000 வரையானோரை வெளியேற்றும் சமிக்ஞையை சுவீடன் வெளிப்படுத்தியுள்ளது. நாங்கள், 60,000 பேர் பற்றியே கதைத்துக் கொண்டிருக்கின்றோம், ஆனால் இவ்வெண்ணிக்கையானது, 80,000ஆக அதிகரிக்கலாம் என சுவீடனின் உள்விவகார அமைச்சர் அன்டேர்ஸ் இச்மன் தெரிவித்துள்ளார். தவிர, அகதிகளுக்கு பொறுப்பான பொலிஸாரையும் அதிகாரிகளையும் அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கையை ஒழுங்கமைக்குமாறு அரசாங்கம் வினவியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். வழமையாக வெளியேற்றப்படுபவர்கள், வர்த்தக விமானங்களிலேயே …
-
- 0 replies
- 417 views
-
-
ஐரோப்பிய நாடுகளில் ஐ.எஸ்.கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தவுள்ளதாக ஈரோப்போல் எச்சரிக்கை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று பாதுகாப்பு அமைப்பான ஈரோப்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது. நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டமில் இது குறித்து தெரிவித்துள்ள ஐரோப்பிய யூனியன் பாதுகாப்பு இயக்குநர் ராப் வைன் வரிக்த்ட் சர்வதேச அளவில் தற்கொலை படை தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ள ஐ.எஸ்.கிளர்ச்சியாளர்கள் முதல் கட்டமாக ஐரோப்பாவில் தாக்குதல் நடத்தக்கூடும் என கூறியுள்ளார். பிரான்ஸில் கடல் வழியே ஊடுருவி தாக்குதல் நடத்த ஐ.எஸ்.கிளர்ச்சியாளர்கள…
-
- 0 replies
- 342 views
-
-
முதலிடத்தில் மீண்டும் பில் கேட்ஸ் Krish January 27, 2016 Canada போர்ப்ஸ் பத்திரிகையை போலவே உலகின் செல்வந்தர்களை தரவரிசைப்படுத்தும் வெல்த்-எக்ஸ் (Wealth-X) இணையதளம் சொத்துகள், முதலீடு, லாபம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் ஆண்டுதோறும் உலகின் பெரும் செல்வந்தர்களை தரவரிசைப்படுத்தி பட்டியல் வெளியிட்டு வருகின்றது. அவ்வகையில், இந்த ஆண்டின் பட்டியலுக்காக சுமார் ஒரு லட்சம் தொழிலதிபர்களின் பொருளாதார நிலையை சீராய்வு செய்த வகையில் 87.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவன உரிமையாளரான அமனிக்கோ ஆர்ட்டெகா 6…
-
- 0 replies
- 527 views
-
-
நைஜீரியாவில் தற்கொலைப் படை தாக்குதல்: - 10 பேர் பலி! [Thursday 2016-01-28 08:00] நைஜீரியாவில் நடைபெற்ற 3 தற்கொலைப் படை தாக்குதல்களில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நைஜீரியா நகரத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள சிபோக் பகுதியில் இந்த தாக்குதல்கள் நடைபெற்றன. போகோஹரம் தீவிரவாதிகள் 200 பள்ளி மாணவிகளை கடத்தி வைத்திருந்த பகுதி அது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் தாக்குதல் நகருக்குள் நுழையும் வாயிலில் உள்ள சோதனைச்சாவடியில் நடத்தப்பட்டது. இரண்டாது தாக்குதல் மக்கள் நடமாட்டம் உள்ள மார்க்கெட் பகுதியிலும், மூன்றாவது தாக்குதல் மார்க்கெட் பகுதிக்கு அருகிலும் நிகழ்த்தப்பட்டன. இந்த தாக்குதலில் இதுவரை குறைந்தபட்சமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளன…
-
- 0 replies
- 284 views
-
-
3 நிமிடங்கள் திடீர் அதிகரிப்பு.! அழிவின் அறிகுறியாஸ. பதற்றத்தில் மக்கள்? உலக அழிவைக்குறிக்கும் DOOMS DAY கடிகாரத்தின் முட்கள் மேலும் 3 நிமிடங்கள் முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. உலக அழிவைக் குறிக்கும் விதத்தில் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக அணு அறிவியலாளர்களால் கடந்த 1947ஆம் ஆண்டு முதல், கடிகாரம் ஒன்று பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கடிகாரத்தில் இரவு 11 மணி 53 நிமிடங்களைக் காட்டுமாறு நேரம் குறிக்கப்பட்டது. இந்த கடிகாரத்தின் மணி சரியாக நள்ளிரவு பன்னிரண்டு எனக் குறிக்கப்பட்டால் உலகம் அழிந்து விடும் எனப்பொருள். தொடர்ந்து அணு ஆற்றலைப் பயன்படுத்துதல், இயற்கைக்கு விரோதமான செயல்களில் ஈடுபடுதல் போன்ற மனிதத்தவறுகள் மூலம் பூமிக்குப் பாதிப்புக்கள் அதிகமாகும் போது இ…
-
- 0 replies
- 608 views
-
-
“ரஷ்ய ஜனாதிபதி புட்டின் ஓர் ஊழலின் படம்” - அமெரிக்க திறைசேரி உதவிச் செயலாளர் குற்றச்சாட்டு! 2016-01-27 10:50:16 ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஊழலில் ஈடுபடுபவர் என அமெரிக்க திறைசேரி உதவிச் செயலாளர் குற்றம் சுமத்தியுள்ளார். 2014 ஆம் ஆண்டில் யுக்ரைனின் கிரைமியா பிராந்தியத்தை ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்ட பின்னர், ரஷ்யர்கள் பலருக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் தடைகளை விதித்தது. ஆனால், ரஷ்யாவின் ஜனாதிபதி புட்டின் ஊழலில் ஈடுபடுவதாக அமெரிக்கா முன்னர் குற்றம் சுமத்தியிருக்கவில்லை. எனினும், அமெரிக்கத் திறைசேரியின் பயங்கரவாத மற்றும் நிதிப் புலனாய்வு விவகாரங்களுக்கான …
-
- 1 reply
- 342 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - பிரான்ஸ் செல்லும் இரானிய அதிபர் பெரும் வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரான்ஸ்-இரான் உறவின் கடந்தகாலத்தை திரும்பிப் பார்க்கிறது பிபிசி. - முக்கிய நிகழ்ச்சிகளுக்காக தயாராகி வரும் பிரேஸிலில், ஸீகா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தால், பெரும் எடுப்பில் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. - கால்பந்தாட்டம் ஐரோப்பாவுக்கு வந்து சேர்ந்த குடியேறிகளுக்கு நின்மதியை ஏற்படுத்த, ஆசுவாசப்படுத்த உதவுமா என்று முயற்சித்துப் பார்க்கிறது பெரும் குடியேறிகள் படையெடுப்பை எதிர்கொள்ளும் சுவீடன்.
-
- 0 replies
- 347 views
-
-
பாலியல் வழக்கில் யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி பாலியல் வழக்கில் சிக்கிய இந்திய யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர் பிக்ரம் சௌத்ரி (69வயது). யோகா குருவான இவர் அமெரிக்காவில் தங்கி யோகா பயிற்சி அளித்து வருகிறார். இவர் மீது இந்தியாவைச் சேர்ந்த மீனாட்சி ஐயாயோடன் என்ற பெண் சட்டத்தரணி வழக்கு தொடர்ந்தார். அதில், ‘‘நான் யோகா குரு பிக்ராமிடம் சட்டத்தரணியாக பணியாற்றினேன். அப்போது அவர் தனது ஆசிரமத்தில் உள்ள பெண்களுக்கு ’பாலியல்’ தொந்தரவு கொடுப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரிக்க தொடங்கியதும் எனக்கும் ‘பாலியல் ' தொந்தரவு கொடுத்தார். ம…
-
- 3 replies
- 759 views
-
-
ஐ எஸ் கட்டளைக்கு அமைய இராணுவப் பயிற்சி பெற்ற பலரை ஈராக் சிரியா கடவுச்சீட்டுக்களோடு அகதி என்ற போர்வையில் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை நோக்கி ஐ எஸ் கமாண்டர்கள் அழிவு நோக்கம் கருதி அனுப்பி வருவதாக புலனாய்வு அமைப்புக்கள் எச்சரித்துள்ளன. மேலும்.. தற்போது நிகழ்ந்து வரும் பெரும் குடியேற்றவாசிகளின் வருகையில் சம்பந்தப்பட்டுள்ளவர்களில் 10 இல் 6 பேர் பொருண்மிய அகதிகள் என்றும் அவர்கள் போரால் அல்லது அரசுகளால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல என்றும் இப்படியானவர்கள் அகதி அந்தஸ்துக்கே விண்ணப்பிக்க அருகதை அற்றவர்கள் என்றும்.. இந்த குடியேற்ற வருகையை கண்காணித்து வரும் நிபுணர்கள் தந்த சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. http://www.msn.com/en-gb/news/uknews/isil-exp…
-
- 0 replies
- 600 views
-
-
பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை தொடர்பில் கருத்து வேறுபாடு : பிரஞ்சு நீதி அமைச்சர் ராஜினாமா பிரான்ஸில் பயங்கரவாதம் தொடர்பில் குற்றங்காணப்பட்ட இரட்டை குடியுரிமை பிரஜைகளின் பிரெஞ்சு குடியுரிமையை ரத்து செய்யும் திட்டம் ஏற்படுத்திய சர்ச்சையால் அந்நாட்டு நீதி அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். பயங்கரவாதம் தொடர்பிலான குற்றச்சாட்டுகளில் குற்றங்காணப்பட்ட இரட்டை குடியுரிமை பெற்ற பிரஞ்சுப் பிரஜைகளின் பிரெஞ்சு குடியுரிமையை ரத்து செய்யும் பிரெஞ்சு அரசாங்கத்தின் திட்டம் தொடர்பிலான கருத்து வேறுபாடு காரணமாக, அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் கிரிஸ்டியான் தோய்பிரா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பாரிஸில் கடந்த நவம்பர் மாதம் இஸ்லாமியவாத பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல…
-
- 0 replies
- 334 views
-
-
உலக நாடுகளின் ஊழல் போக்கு: 76-வது இடத்தில் இந்தியா- 9 இடங்கள் முன்னேற்றம் டிரான்ஸ்பெரசி இன்டர்நேஷனல் இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்ட புள்ளி விவரம் 2015-ம் ஆண்டுக்கான உலக நாடுகளின் ஊழல் போக்கு குறித்த தரநிலைப் பட்டியலில், இந்தியா 9 இடங்கள் முன்னேற்றம் கண்டு 76-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் டென்மார்க், ஊழலற்ற நாடாக முதலிடத்தில் இருக்கிறது. சோமாலியாவும், வட கொரியாவும் ஊழல் மலிந்த நாடாக கடைசி இடத்தில் இருக்கின்றன. 2015 ஆண்டின் உலகளாவிய ஊழல் போக்குக் குறியீட்டின் (Global Corruption Perception Index) தரவரிசைப் பட்டியலை, டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் (Transparency International) அமைப்பு வெளியிட்டு…
-
- 1 reply
- 406 views
-
-
இளையராஜா இசையில் கமல்ஹாசன் பாடிய தேசியகீதம் குடியரசு தினமான இன்று சமூக வலைதளமான டுவிட்டரில் தன்னை இணைத்துக் கொண்டார் நடிகர் கமல் ஹாசன். இசையமைப்பாளர் இளையராஜா இசையில் அவரே பாடிய தேசிய கீதத்தை அவர் பதிவேற்றியுள்ளார். இந்திய விடுதலைப் போராட்டம் இன்றைக்கும் தனித்துவத்துடன் விளங்குகிறது என குறிப்பிட்டுள்ளார். கமல்ஹாசனின் வருகையை வரவேற்றுள்ள அவரது மகள் ஸ்ருதி ஹாசன், கமல் பாடிய தேசிய கீதத்தை மீண்டும் பதிவேற்றியுள்ளார். http://www.nakkheeran.in/
-
- 1 reply
- 635 views
-
-
டென்மார்க்: அகதிகளின் சொத்துக்களை பறிக்கும் சட்டத்துக்கு அனுமதி வரலாம் ஐரோப்பாவிலேயே மிக கடுமையான விதிகள் என்று நம்பப்படும் அகதிகளுக்கான புதிய விதிகளை அமல்படுத்துவது தொடர்பிலான சர்ச்சைக்குரிய முன்மொழிவுகளுக்கு டென்மார்க் நாடாளுமன்றம் இன்று ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய விதிகளின்படி, அகதிகளிடமிடமிருக்கும் ஆயிரத்து நானூறு டாலர்களுக்கும் அதிகமான மதிப்பிலான பொருட்களை எல்லை காவல் துறையினர் கைப்பற்றமுடியும். இந்த புதிய விதிகளின்படி, அகதிகளிடமிடமிருக்கும் ஆயிரத்து நானூறு டாலர்களுக்கும் அதிகமான மதிப்பிலான பொருட்களை எல்லை காவல் துறையினர் கைப்பற்றமுடியும். எனினும் ஒருவரது திருமண மோதிரங்கள் போன்ற உணர்வுபூர்வமான …
-
- 0 replies
- 427 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - நெடுநாள் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் விடுவிப்பு! அவரது கணக்கில் விழுந்த பெருந்தொகை, சௌதி அரச குடும்பம் கொடுத்த நன்கொடை என்கிறார் தலைமை சட்ட நடவடிக்கை அதிகாரி! - ரஷ்ய அதிபர் புடின் ஊழல் செய்துள்ளார் என்கிறது அமெரிக்க கருவூலத்துறை! புடின் லஞ்சம் பெற்றதற்கு உதவியதாக கூறுபவர்களிடம் பிபிசி விசேடப் புலனாய்வு! - அத்துடன்.. பிரிட்டனின் ராயல் வெல்ஷ் படைப்பிரிவுக்கு ஒரு புதிய வரவு! பட்டாளத்தில் ஆடு!
-
- 0 replies
- 512 views
-