உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27057 topics in this forum
-
சிரியாவில் யுத்த நிறுத்தம் அமுலிலுள்ள பகுதிகளில் 135 பேர் பலி [ Sunday,6 March 2016, 06:19:58 ] சிரியாவில் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் ஒரு வாரகாலத்தில் 135 பேர் உயிரிழந்துள்ளதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ஐ.எஸ் ஆயுததாரிகள் தாக்குதல் நடத்திவரும் இடங்கள் உள்ளிட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுல்படுத்தப்படாத இடங்களில் 552 பேர் உயிரிழந்தமைக்கான ஆதாரம் உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிரியா அமைதி பேச்சுவார்த்தைகள் நாளை திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் சற்று முரண்பாடுகளுடன் இருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் சிரியாவுக்கான தூதுவர் ஸ்டீபன் தே மிஸ்துரா தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 382 views
-
-
கிரேக்க எல்லையில் சிக்கியுள்ள குடியேறிகள் மஸிடோனியாவுடனான கிரேக்கத்தின் எல்லையில் ஆயிரக்கணக்கான குடியேறிகள் சிக்கியுள்ள நிலையில், அங்கு அவசரகால நிலை ஒன்றை அறிவிக்குமாறு, கிரேக்கத்தின் வடக்கு பகுதியின் ஆளுனர் ஒருவர் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளார். ஐடோமினி எல்லைக்கு அருகில் உள்ள குடியேறிகளின் கூடாரங்கள் அங்குள்ள நிலைமையை, ஒரு மிகப் பெரிய மனிதாபிமான நெருக்கடி எனவும் அவர் வர்ணித்துள்ளார். கிரேக்கத்திலிருந்து மஸிடோனியாவிற்குள் செல்ல தினந்தோறும் அனுமதிக்கப்படும் அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் கட்டுப்படுத்தியுள்ளது. தற்போது எல்லையை கடந்து செல்வதற்கு, மிக சிறிய அளவிலான அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்களே அனுமதிக்கப்படுகின…
-
- 0 replies
- 595 views
-
-
துருக்கியின் மிகப் பெரிய பத்திரிகையான Zaman (ஜமான்), அரசாங்கக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்படுவதாக, நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் காவல்துறையினர் அந்தப் பத்திரிகை அலுவலகத்தை சோதனையிட்டுள்ளனர்.காவல்துறையினர் Zaman பத்திரிகை அலுவலகத்தை சோதனையிட்டுள்ளனர்அந்த ஊடகம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு நீதிமன்றம் எந்தவொரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை. வெள்ளிக்கிழமையைன்று பத்திரிகை அலுவலகத்தின் வெளியே கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரை பீச்சியடித்தும் அவர்களைக் கலைப்பதற்கு காவல்துறையினர் முயற்சிகளை மேற்கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களில் ஒருவர், `தாம் ஊடக சுதந்திரத்திற்காக சண்டையிட போவதாக' எழுதப்பட்ட பதாகை ஒன…
-
- 0 replies
- 293 views
-
-
குடியரசு வேட்பாளர்களின் ‘யோகா’ விவாதம் அமெரிக்காவின் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர்கள் பங்கேற்ற நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சியில் ‘யோகா’ முக்கிய இடம்பிடித்தது. பாக்ஸ் செய்தி சேனல் சார்பில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர்கள் டோனால்டு டிரம்ப், மார்கோ ரூபியோ, டெட் குரூஸ், ஜான் கேசிக் ஆகியோர் பங்கேற்ற விவாத நிகழ்ச்சி டெட்ராய்ட்டில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் 4 வேட்பாளர்களும் காரசாரமாக வாக்குவாதம் செய்தனர். ‘டோனால்டு டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும்’ என்று மார்கோ ரூபியோ குற்றம் சாட்டினார். இதற்கு பதிலடி கொடுத்த டோனால்டு, கடந்த 2012 அதிபர் தேர்தலின்போது ஒபாமாவிடம் மிக மோசமாக தோல்வி அடைந் தவ…
-
- 0 replies
- 329 views
-
-
ஏமன் நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 இந்திய நர்சுகள் உள்பட 16 பேர் பலியாகியுள்ளனர். ஏமன் நாட்டில் உள்ள ஏடெனில் செயல்பட்டு வரும் ஒரு முதியோர் இல்லத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சுற்றி வளைத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலரை சுட்டுக் கொன்றனர். பின்னர் அந்த இல்லத்துக்குள் நுழைந்த தீவிரவாதிகள், அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி விட்டு, அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். தீவிரவாதிகளின் இந்த தாக்குதலில் அந்த முதியோர் இல்லத்தில் இருந்த 4 இந்திய நர்சுகள் உள்பட 16 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. இருப்பினும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவி…
-
- 0 replies
- 326 views
-
-
அய்லான் மரணம்: இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை! துருக்கியில் 3 வயதுச் சிறுவன் அய்லான் உள்ளிட்ட 5 பேர் உயிரிழப்புக்குக் காரணமான அகதிகள் படகு விபத்து தொடர்பாக, 2 பேருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. துருக்கியிலிருந்து கிரீஸ் நாட்டின் மோஸ் தீவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்று கொண்டிருந்த அகதிகள் படகு ஏஜியன் கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் அய்லான் குர்தி, அந்தச் சிறுவனின் சகோதரன், தாய் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். துருக்கியின் பொத்ரும் நகரில் கரையொதுங்கிய அய்லானின் படம், ஊடகங்களில் வெளியாகி உலக அளவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்…
-
- 0 replies
- 431 views
-
-
6 ஏவுகணைகளை ஏவியது வடகொரியா: அமெரிக்கா, தென்கொரியாவுக்கு எச்சரிக்கை வடகொரியா முன்னர் நடத்திய ஏவுகணை சோதனை. (கோப்புப் படம்) அமெரிக்கா, தென்கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கொரிய தீபகற்ப கடல் பகுதியில் 6 ஏவுகணைகளை வடகொரியா நேற்று ஏவியது. அவை கடலில் விழுந்து வெடித்துச் சிதறின. கடந்த 2006-ம் ஆண்டில் வடகொரியா அணுகுண்டு சோத னையை நடத்தியதால் அந்த நாட்டின் மீது ஐ.நா. சபை பொரு ளாதாரத் தடைகளை விதித்தது. கடந்த ஜனவரி 6-ம் தேதி சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோத னையை வடகொரியா நடத்தியது. இதைத் தொடர்ந்து அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோத னையை வடகொரியா நடத்தியது. …
-
- 0 replies
- 428 views
-
-
உலகின் அனைத்து நவீன கண்டுபிடிப்புகளின் பின்னனியிலும், இந்தியர்கள் மூளையாக செயல்பட்டுள்ளதால், 'உலகளவில் இந்தியரின் மூளையே சிறந்தது' என, திருச்சி என்.ஐ.டி., விழாவில், ஆந்திர கவர்னர் நரசிம்மன் தெரிவித்தார். திருச்சி என்.ஐ.டி.,யில் முன்னாள் மாணவர்களை கவுரவித்து விருது வழங்கும் நிகழ்ச்சி, இயக்குனர் சுந்தர்ராஜன் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில கவர்னர் நரசிம்மன் கலந்து கொண்டு, என்.ஐ.டி.,யில் பயின்ற முன்னாள் மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி பேசியதாவது: நாட்டில், என்.ஐ.டி., போன்ற தொழில்நுட்ப கழகங்களில் பயிலும் மாணவர்கள், நாட்டில் உணவுப் பாதுகாப்பு, மனித குல மேம்பாடு, கல்வி, மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை மேம்படுத்தும் தொழில்நுட்பங்களை உ…
-
- 0 replies
- 327 views
-
-
`எஃப்.பி.ஐ. ஆப்பிளை நிர்பந்திப்பது பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் கொலையாளி ஒருவரின் கைத்தொலைபேசியை 'அன் லாக்' செய்யும்படி ஆப்பிள் நிறுவனத்தை எஃப்.பி.ஐ. நிர்ப்பந்திப்பது, பல பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும் என, ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சில, ஆப்பிள் நிறுவனத்திற்கு ஆதரவாக உள்ளன. அப்படி ஒரு தொழில்நுட்பம் எஃப்பிஐக்குக் கொடுக்கப்பட்டால், லட்சக் கணக்கானவர்கள் பாதிக்கப்படுவார்கள் என செய்த் ராட் அல் உசைன் எச்சரித்துள்ளார். இந்த விவகாரத்தில் கூகுள், மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக், அமேசன் அமெரிக்காவின் பல பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஆதரவாக உள்ளன. …
-
- 1 reply
- 471 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - வடகொரியா மீது கடுமையான தடைகளை கொண்டுவர ஐநா வாக்களித்து சில மணி நேரத்தில் அதற்கு பதிலடியாக வடகொரியா கடலை நோக்கி ஏவுகணைகளை ஏவியுள்ளது. - பிரேசில் பொருளாதாரம் கடந்த வருடத்தில் அது மூன்று புள்ளி எட்டு வீதத்தால் சுருங்கியுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. - சீன அரசாங்கம் விசித்திரமான மற்றும் மேற்கத்திய பாணி கட்டிடங்களுக்கு கட்டுப்பாடு கொண்டு வருகிறது. புதிய கட்டிடங்கள் தேசிய கலாச்சாரத்தை பிரதிபலிக்க வேண்டுமாம்.
-
- 0 replies
- 312 views
-
-
கிரீஸில் 30,000 அகதிகள் பரிதவிப்பு ஐரோப்பிய நாடுகள் தங்களது எல்லைகளை மூடியிருப்பதால் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற் பட்ட அகதிகள் கிரீஸ் நாட்டில் பரிதவித்து வருகின்றனர். சிரியா, இராக், ஆப்கானிஸ் தானில் இருந்து ஆயிரக்கணக் கான அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி வருகின்றனர். ஆபத்தான கடல் பயணம் மூலம் துருக்கி, கிரீஸ் நாடுகளின் தீவுகளில் கரை யேறும் அவர்கள் அங்கிருந்து நடைபயணமாக ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். ஆனால் அண்மைக் காலமாக அகதிகளால் ஐரோப் பிய நாடுகள் பல்வேறு இன்னல் களை சந்தித்து வருகின்றன. கடந்த 2015 நவம்பரில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தி 130 பே…
-
- 1 reply
- 491 views
-
-
MH370 விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு : அமெரிக்கா அறிவிப்பு 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி 12 ஊழியர்களுடனும் 227 பயணிகளுடனும் மலேசியாவிலிருந்து பீஜிங் நோக்கி பயணித்த எம் எச் 370 விமானம் காணாமல் போயிருந்த நிலையில் அதன் பாகங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆபிரிக்காவில் இருந்து குறித்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. போயிங் 777 என்ற ரக விமாமொன்றின் பாகமொன்றை ஆபிரிக்க நாடான மொஸாம்பிக்கில் கண்டெடுத்ததாக மலேஷியாவும் உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த பாகம் எம் எச் விமானத்தினுடையது என்பதற்கு உயர் சாதகத்தன்மைகள் காணப்படுவதாக எம் எச் 370 விமானமும்…
-
- 2 replies
- 559 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - வடகொரியா மீது கடுமையான தடைகளை கொண்டுவர ஐநா வாக்களித்து சில மணி நேரத்தில் அதற்கு பதிலடியாக வடகொரியா கடலை நோக்கி ஏவுகணைகளை ஏவியுள்ளது. - பிரேசில் பொருளாதாரம் கடந்த வருடத்தில் அது மூன்று புள்ளி எட்டு வீதத்தால் சுருங்கியுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. - சீன அரசாங்கம் விசித்திரமான மற்றும் மேற்கத்திய பாணி கட்டிடங்களுக்கு கட்டுப்பாடு கொண்டு வருகிறது. புதிய கட்டிடங்கள் தேசிய கலாச்சாரத்தை பிரதிபலிக்க வேண்டுமாம்.
-
- 0 replies
- 307 views
-
-
சட்டவிரோத பொருளாதார குடியேறிகளுக்கு ஐரோப்பாவில் இடமில்லை' பொருளாதார காரணங்களுக்காக, சட்டவிரோத குடியேறிகளாக ஐரோப்பாவினுள் வர வேண்டாம் என, ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க் நேரடி வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். சட்டவிரோத பொருளாதார குடியேறிகளுக்கு ஐரோப்பாவில் இடமில்லை மனிதக் கடத்தல்காரர்களை நம்பக்கூடாது எனத் தெரிவித்த அவர், பணத்தையும் உயிரையும் அவர்கள் பணயம் வைக்கக்கூடாது என கேட்டுக் கொண்டார். சட்டவிரோத குடியேறிகள் இனிமேல் கிரேக்கத்தை கடந்து செல்ல முடியாது என, ஏதென்சில் பேசியபோது டஸ்க் தெரிவித்தார். அதே நேரத்தில் ஐரோப்பிய நாடுகள், பிற ஐரோப்பிய நாடுகளுடனான தங்கள் எல்லைகளை தன்னிச்சையாக மூடக்கூடாது என…
-
- 0 replies
- 394 views
-
-
முதன்முதலாக பாகிஸ்தான் செல்கிறார் போப் பிரான்சிஸ்! இஸ்லமபாத்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் அழைப்பை ஏற்று, போப் பிரான்சிஸ் இந்த ஆண்டு இஸ்லாமிய நாடான பாகிஸ்தானுக்கு செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானுக்கு வருமாறு போப் பிரான்சிஸ்-க்கு, பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்திருந்தார். இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தை, கடந்த மாதம் வாட்டிகனுக்கு சென்ற அப்போதைய பாகிஸ்தானின் ஒரேயொரு அமைச்சர் கம்ரான் மைக்கேல், போப் பிரான்சிஸிடம் வழங்கினார். இந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட போப் பிரான்சிஸ், நவாஸ் ஷெரீப்பின் அழைப்பை ஏற்றுக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பாகிஸ்தான் அமைச்சக வட்டாரங்கள், ''போப் பிரான்ஸிஸ் பாகிஸ்தான் வரு…
-
- 0 replies
- 427 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ் கொலைவழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரை விடுவிப்பதாக முடிவு எடுத்துள்ளதாகவும், அதற்கான கருத்தை கேட்டு மத்திய அரசின் உட்துறைச் செயலருக்கு, தமிழக தலமைச்செயலர் ஞானதேசிகன் கடிதம் எழுதி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தின் இந்தக்கைதிகளை விடுதலை தொடர்பான முடிவுக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவை பெற்றிருக்கிறது மத்திய அரசு. குற்றப்புலனாய்வுப் பிரிவால் குற்றம் சட்டப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்…
-
- 6 replies
- 528 views
-
-
அமெரிக்கத் தேர்தலில் அதிகரிக்கும் பிளவுக்கு என்ன காரணம்? அமெரிக்காவின் அதிபர் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான கட்சி மட்ட தேர்தல்கள், அந்த நாடு அரசியல் ரீதியாக எவ்வாறு பிளவு பட்டிருக்கிறது என்பதை காண்பிக்கின்றன. குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் ஒரு நாட்டின் எதிரெதிர் அரசியல் கட்சிகள் என்றில்லாமல் ஒருவரை ஒருவர் அறிந்திராத இரு வேற்றுகிரகவாசிகள் போல மாறிவருவதாக அறிவுஜீவிகள் கூறுகிறார்கள். அமெரிக்கத் தேர்தலிலும் அரசியலிலும் அதிகரித்துவரும் கடும்போக்கு நிலைப்பாடுகள் மற்றும் வேகமாக மறைந்துவரும் மிதவாத மையநிலைப்பாடுகள், அதற்கான காரணிகள் குறித்த ஒரு விரிவான பார்வை. http://www.bbc.com/tamil/global/2016/03/1603…
-
- 0 replies
- 428 views
-
-
ஏழு தமிழர் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும்: பெ.மணியரசன் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இராசீவ் கொலை வழக்கில் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய 7 தமிழர்கள், தாங்கள் 20 ஆண்டுகளைக் கடந்தும் நீண்ட காலம் சிறையில் வாடுவதைக் குறிப்பிட்டு, தங்களை விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை மனு செய்திருந்தனர். இதனடிப்படையில், தமிழ்நாடு அரசு இந்த ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வது என முடிவு செய்து நடுவண் அரசின் உள்துறை அமைச்சகத்திற்குக் கருத்துக் கேட்டு இன்று, கடிதம் அனுப்பியிருக…
-
- 0 replies
- 677 views
-
-
இந்தியர்களை அவமதித்தாரா மார்ட்டினா நவ்ரடிலோவா ?: ட்விட்டர் காரசாரம்! பிரபல டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவ்ரடிலோவா இந்தியாவையும் இந்திய அரசியல் சூழலையும் அவமதிக்கும் வகையில் ட்விட்டரில் கருத்துகளை பகிர்ந்துள்ளார் என அவருக்கு எதிராக எழுந்த சர்ச்சைகளுக்கு பதிலளித்திருக்கிறார். ஜே.என்.யூ மற்றும் வேறு சில பல்கலைகழங்களில் வெடித்துள்ள மாணவர் போராட்டங்கள் குறித்தும் அதன் விளைவுகள் குறித்து ஆளும் அரசை சாடும் வகையில் எழுதப்பட்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் இரண்டு கட்டுரைகளை பிப்ரவரி 22 ஆம் தேதி மார்டினா ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அதிலிருந்து இவர் கருத்துக்கு எதிரான காரசாரமான பதிவுகளை ட்விட்டரில் பலர் பதிவேற்றி இவரை வசைபாடி வருகின்றனர். ‘டென்னிஸ் பற்றி…
-
- 0 replies
- 362 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - சுமத்ரா தீவுகளில் ஏற்பட்ட பூகம்பம் ஒன்றை அடுத்து இந்தோனேசியா சுனாமி எச்சரிக்கை விடுத்து பின்னர் அதனை மீளப்பெற்றது. - அமெரிக்க அதிபர் தேர்தலுகான வேட்பாளர் தேர்வுகளில் இரு முக்கிய கட்சிகளின் முன்னணி வேட்பாளர்களாக குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்பும் ஜனயாகக் கட்சியின் ஹிலாரி கிளிண்டனும் பெரு வெற்றிகளை பெற்றுள்ளனர்! - பிரிட்டனின் சுகாதார சேவைக்காக பிலிப்பைன்ஸில் தாதிகளை ஆட்சேர்க்கும் அதிகாரிகள்.
-
- 0 replies
- 290 views
-
-
(CNN)A piece of wreckage apparently from a Boeing 777 -- like the missing MH370 airliner -- was found washed ashore over the weekend on the coast of Mozambique, a U.S. official told CNN on Wednesday. The newly discovered debris is on its way to Malaysia for further examination. The wreckage is a piece of horizontal stabilizer skin, the U.S. official said. The horizontal stabilizer is the part of the aircraft's tail that is horizontal as the plane flies. A second aviation source said there was no record of any Boeing 777 missing other than Malaysia Airlines Flight 370, which disappeared on March 8, 2014, wi…
-
- 0 replies
- 577 views
-
-
இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவின் மேற்குபகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பாரிய நில நடுக்கத்தையடுத்து இந்தோனேஷியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை. இதேவேளை, குறித்த நில அதிர்வினால் பாதிப்பு கிடையாது என்றும் இருந்தாலும் சற்று கடற்புர வாழ்மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. http://www.tamilwin.com/show-RUmuyDTWSWewyD.html
-
- 0 replies
- 272 views
-
-
வாஷிங்டன், பாகிஸ்தானுக்கு எதிராக போரிட ஒசாமா பின்லேடன் விரும்பியதாக, அமெரிக்க கைப்பற்றிய ஆவணங்களில் தெரியவந்து உள்ளது. அமெரிக்காவில் வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் 110-மாடி இரட்டை கோபுரத்தின் மீதும் விமானங்களை மோதி கடந்த 2001 செப்டம்பர் 11-ந் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 3 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களை மூளையாக இருந்து செயல்படுத்தியவர் அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பின்லேடன். இந்த பின்லேடன் பாகிஸ்தானில் அப்போட்டாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்தபோது, கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி, அமெரிக்க …
-
- 0 replies
- 206 views
-
-
அமெரிக்கா: வேட்பாளர் போட்டியில் ட்ரம்ப், ஹில்லரி முன்னிலையில் ஜனநாயகக் கட்சியின் ஹில்லரி கிளிண்டன், குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஹில்லரி கிளிண்டன் ஆகிய இருவரும் வரும் அதிபர் தேர்தலில் அவரவர் கட்சியில் அதிக ஆதரவுபெற்ற வேட்பாளர்களாக தங்களின் நிலையை மீண்டும் உறுதிசெய்து கொண்டுள்ளனர். இரண்டு கட்சிகளினதும் அதிபர் தேர்தல் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய உட்கட்சி போட்டியாக பார்க்கப்பட்ட, நேற்றைய 'சூப்பர் டியூஸ்டே' வாக்குப்பதிவில் இருவரும் தங்களின் கட்சி உறுப்பினர்களிடையே அதிக ஆதரவு பெற்றவர்களாக தங்களை தக்கவைத்துக்கொண்டுள்ளனர். குடியரசுக் கட்சியின் வேட்ப…
-
- 0 replies
- 261 views
-
-
உலக பணக்காரர்கள் பட்டியல்; 17 வது ஆண்டாக பில்கேட்ஸ் முதலிடம்! நியூயார்க்; பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 2016 ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 17-வது முறையாக மீண்டும் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். பிரபல அமெரிக்க வணிகப் பத்திரிகையான ஃபோர்ப்ஸ் ஆண்டுதோறும் உலக அளவில் உள்ள பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. கடந்த 21 ஆண்டுகளாக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுவரும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை இந்த ஆண்டுக்கான பட்டியலை நேற்று வெளியிட்டது. மொத்தம் 1810 பேர் வரிசைப்படுத்தப்பட்டுள்ள இந்த பட்டியலில் கடந்த 16 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடம் பெற்றுவரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இம்முறையும் தனது இடத்…
-
- 1 reply
- 770 views
-