உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26890 topics in this forum
-
சிரியா மற்றும் ஈராக்கில் ஐஎஸ் அமைப்பினை கட்டுப்படுத்துவது குறித்த சர்வதேசமாநாடு இன்று ரோமில் ஆரம்பம் 02 பெப்ரவரி 2016 சிரியா மற்றும் ஈராக்கில் ஐஎஸ் அமைப்பினை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆராயும் சர்வதேச மாநாடு இன்று ரோமில் ஆரம்பமாகின்றது. 23 நாடுகள் கலந்துகொள்ளும் இந்த மாநாட்டில் லிபியாவில் எவ்வாறு ஐஎஸ் அமைப்பினை கட்டுப்படுத்துவது என்பது குறித்தும் ஆராயப்படவுள்ளது. ரோமில் ஆரம்பமாகவுள்ள இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் 23 நாடுகளும் ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் பிடியில் உள்ள பகுதிகளை எவ்வாறு மீட்பது என்பது குறித்து ஆராயவுள்ளன.. சமீபத்தில் ஐஎஸ் அமைப்பிடமிருந்து மீள கைப்பற்றப்பட்ட திக்ரித் நகரில் எவ்வாறு ஸ்திரதன்மையை ஏற்படுத்துவத…
-
- 0 replies
- 263 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - மியன்மாரில் சுதந்திரமான தேர்தலின் மூலமாக தேர்வான முதல் நாடாளுமன்றம் கூடியது! ஆனால், கிழக்கில் இராணுவத்துக்கும் கிளர்ச்சிக்குழுக்களுக்கும் இடையிலான மோதல்களும் தொடர்கின்றன! - எத்தியோப்பியாவில் வறட்சி, பஞ்சம்! ஒரு கோடிக்கும் அதிகமானோர் பட்டினி கிடக்கும் அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது பிபிசி! - பறக்கும் தேவதை! பளபளக்கும் பழங்காலத்துப் பட்டாடைகள்! நீரில் மிதக்கும் வெனிஸ் நகரம் தற்போது வீதிக் கொண்டாட்டங்களில் மிதக்கிறது!
-
- 0 replies
- 311 views
-
-
மீண்டும் ஒரு அய்லான் சிறுவன்! கடந்த ஆண்டு உலகையே உலுக்கிய அய்லான் என்ற அகதிச் சிறுவனைப் போன்றே, மீண்டும் ஒரு சிறுவனின் உடல் துருக்கி கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது. காவலர் ஒருவர் அச்சிறுவனின் உடலை எடுத்துச் செல்லும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் பார்ப்பவர்களின் மனதை நெகிழ வைத்துள்ளது. அதிக எண்ணிக்கையில் அகதிகளை ஏற்றிக் கொண்டு வந்த படகு ஒன்று, துருக்கி கடல் பகுதியில், கிரீஸ் நாட்டின் லெஸ்பாஸ் தீவு அருகே கடலில் மூழ்கியது. தகவல் அறிந்த துருக்கி கடற்பாதுகாப்பு படை வீரர்கள் விரைந்து சென்று, அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர. இதில், 37 பேரின் உடல்களை கடற்படை வீரர்கள் மீட்டனர். அவர்களில் குழந்தைகளும் அடங்குவர். …
-
- 1 reply
- 516 views
-
-
3,600 டன் பொருட்களுடன் நடுக்கடலில் மூழ்க போகும் கப்பல்! (வீடியோ) பிரெஞ்சு கடற்கரையில் சரக்கு கப்பல் ஒன்று கடலில் மூழ்கும் நிலையில் தத்தளித்துக்கொண்டிருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. பனாமா நாட்டிலிருந்து 3,600 டன் மரக்கட்டைகள் மற்றும் மணலினை ஏற்றிக்கொண்டு சென்ற ஸ்மிட் சால்வெஜ் (Smit Salvage) நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று, பிரான்ஸின் மேற்கு கடற்கரையில் நகர முடியாமல் நின்றுவிட்டது. இதனைத் தொடர்ந்து அதில் பயணம் செய்த 22 சிப்பந்திகள் ஹெலிகாப்டர் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால், 3 நாட்களாகியும் சரக்கு கப்பலினை கரைக்கு கொண்டு வரமுடியவில்லை. கடலின் கரையில் இருந்து சுமார் 270 கிலோ மீட்டர் தொலைவில் தத்தளித்த வண்ணம் கப்பல் இருக்…
-
- 0 replies
- 1.9k views
-
-
நடுவானில் பழுதான சக்கரங்கள்: ரியல் ஹீரோவாக மாறிய விமானி! பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமானத்தை பத்திரமாக விமானி தரையிறக்கினார். பிஏ295 (BA295) என்ற விமானம், லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து சிகோகோவிற்கு சென்றுள்ளது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, விமானத்தின் பின்புறத்தில் உள்ள இரண்டு சக்கரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. நிலைமையை புரிந்துகொண்ட விமானி, சாதுரியமாக செயல்பட்டு விமானத்தை உடனடியாக ஹீத்ரோ விமான நிலையத்தில் தரை இறக்கியுள்ளார். விமானம் தரை இறக்கப்படும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில், பின்புற சக்கரங்கள் தெளிவாக புலப்படவில்…
-
- 0 replies
- 507 views
-
-
நைஜீரியாவில் போகோ ஹராம் கொலைவெறித் தாக்குதல்: அப்பாவி மக்கள் 86 பேர் பலி போகோ ஹராம் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற டேலோரி கிராம மக்கள் எரிந்து போன வீட்டின் சாம்பலைப் பார்க்கின்றனர்..| படம்: ஏ.பி. நைஜீரியாவில் உள்ள டேலோரி என்ற கிராமத்தில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான போகோ ஹராம் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் பல குழந்தைகள், பெண்கள் உட்பட 86 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. சனிக்கிழமை நள்ளிரவு போகோ ஹராம் நடத்திய இந்தத் தாக்குதலிலிருந்து தப்பிய ஒரு நபர் மரத்தின் கிளைகளில் மறைந்திருந்து தான் கண்ட கொடூர காட்சிகளை அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார். எரிந்த நிலையில் உடல்களும், தோட்டாக்காயங்களுடனான சடலங்களும் தெரு முழுதும்…
-
- 0 replies
- 605 views
-
-
10,000 சிறுவர்கள் மாயம் : பாலியல் தொழிலாளிகளாகவும் அடிமைகளாகவும் விற்கப்பட்டிருக்கலாம் என அச்சம் ஐரோப்பாவுக்கு சட்டவிரோமாக வந்த அகதிச் சிறுவர்களில் குறைந்தது 10,000 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களில் பலர் கடத்தப்பட்டு பாலியல் தொழிலாளிகளாகவும் மற்றும் அடிமைகளாகவும் விற்கப்பட்டிருக்கலாம் என நம்புவதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்ட அமுலாக்க முகவர் நிலையமான யூரோபோல் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவுக்கு பாதுகாப்பற்ற பயணத்தை மேற்கொண்டு வரும் அகதிச் சிறுவர்களை குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்கள் இலக்கு வைத்து கடத்திச் சென்று சுய ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தி வருவதாக அந்த நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருட…
-
- 0 replies
- 283 views
-
-
யுத்தம் முடிவடைந்ததும் அகதிகள் சொந்த நாடுகளுக்கு திரும்புவர் - ஜேர்மனிய சான்சலர் ஏஞ்சலா மேர்கல் 2016-02-01 10:54:51 ஜேர்மனிக்கு சென்றுள்ள சிரியா மற்றும் ஈராக் அகதிகள் அந் நாட்டில் யுத்தம் முடிவடைந்ததும் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்வார்கள் என அந் நாட்டு சான்சலர் ஏஞ்சலா மேர்கல் உறுதியளித்துள்ளார். ஜேர்மனிக்குள் வரும் அகதிகளை தடுக்க பல தரப்பினர் எதிர்த்து வந்தாலும் ஏஞ்சலா மேர்கல் அகதிகளை தொடர்ந்து ஏற்று வருகிறார். கடந்தாண்டு சுமார் 1.1 மில்லியன் அகதிகளை ஜேர்மனி ஏற்றது. அந்த அகதிகளை ஜேர்மனிய சமூகத்திற்குள் ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகள் …
-
- 0 replies
- 583 views
-
-
பிரபல ஒலிபரப்பாளர் டெர்ரி வோன் காலமானார் பல தசாப்தங்களாக பிரிட்டிஷ் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் மிகப்பெரிய நட்சத்திரங்களுள் ஒருவராக இருந்த, மூத்த ஒலிபரபாளர் டெர்ரி வோன் தமது 77ஆவது வயதில் காலமானார். ஒரு ஒலிபரப்பாளராம தனித்துவம் பெற்றிருந்தார் டெர்ரி வோன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அதை குறுகிய காலத்திற்கு தைரியமாக எதிர்கொண்டு இறந்ததாக அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. அயர்லாந்தில் பிறந்த, டெர்ரி வோன் 1960களில் பிபிசியில் சேர்ந்தார். விரைவில் வானொலியில் நேரடியாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் ஒரு ஒலிபரப்பாளராக தம்மை நிலைநிறுத்திக் கொண்டார். அவரது மென்மையான ஒலிபரப்பு பாணி மற்றும் உடனடி நகை…
-
- 0 replies
- 444 views
-
-
சிரியா : ஷியாக்களின் முக்கிய வழிபாட்டிடத்துக்கு அருகே குண்டுத்தாக்குதல் தெற்கு டமாஸ்கஸ் பகுதியில் சைதா ஷெய்னப் எனப்படும் ஷியா வழிபாட்டிடத்துக்கு அருகே இரட்டைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக சிரியாவின் அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது. சிரியா : ஷியாக்களின் முக்கிய வழிபாட்டிடத்துக்கு அருகே குண்டுத்தாக்குதல் பலர் இதில் கொல்லப்பட்டதாகவும் காயமடைந்ததாகவும் அரச ஊடகம் கூறுகின்றது. ஷியா முஸ்லிம்களால் பெரும் புனித இடமாக கருதப்படும் இந்த வழிபாட்டிடத்துக்கு பெருமளவு யாத்திரிகர்கள் வருவது வழக்கம். முஹமது நபியின் ஒரு பூட்டியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த வழிபாட்டிடத்தை பாதுகாக்க வேண்டும்…
-
- 1 reply
- 259 views
-
-
ஜனாதிபதியாக தெரிவான பின் முதன்முறையாக மசூதிக்கு செல்லும் ஒபாமா முஸ்லிம்கள் அனைவரையுமே தீவிரவாதிகளாக சித்தரிப்பதை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் மத்திய அட்லாண்டிக் பிரதேசத்தில் அமைந்துள்ள மேரிலாந்து மாநிலத்தில் உள்ள பாட்லிமோர் நகருக்கு விரைவில் சென்று அங்கு பெரும்பானமையாக வாழும் இஸ்லாமிய மக்களை அங்குள்ள பிரபல மசூதியில் சந்தித்துப் பேச அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. நாட்டுக்கு முஸ்லிம் சமுதாய மக்கள் ஆற்றியுள்ள பங்களிப்பை கொண்டாடும் வகையிலும், விரும்பிய மதங்களை கடைபிடிக்கும் பரிபூரண சுதந்திரம் அமெரிக்க மக்களுக்கு உண்டு என்பதை உறுதிப்படுத்தும் விதமாகவும் முஸ்லிம் பிரதிநிதிகளுடனான ஒபாமாவின் இந்த சந்த…
-
- 0 replies
- 368 views
-
-
சீனாவில் நிகழ்ந்த சுரங்க விபத்து: 36 நாட்களுக்குப் பின் 4 பேர் உயிருடன் மீட்பு சீனாவில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் பூமிக்கடியில் 660 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 4 சுரங்க தொழிலாளர்கள் அதிசயமாக வகையில் 36 நாட்களுக்கு பின், உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி பின்ஙி மாகாணத்தில் இயங்கி வந்த சுண்ணாம்பு சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் பணியாற்றிய 29 தொழிலாளர்களில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். 11 பேர் மீட்கப்பட் டனர். எஞ்சியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டபோது, நான்கு பேர் பூமிக்கு அடியில் 660 அடி ஆழத்தில் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு தேவையான உணவு, உடைகள் மற்றும் விளக்கு…
-
- 0 replies
- 264 views
-
-
கொலம்பியாவில் சீகா தொற்றினால் 2 ஆயிரம் கர்ப்பிணிகள் பாதிப்பு [ Sunday,31 January 2016, 06:24:22 ] தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் சீகா தொற்று நோய்க்கு இலக்கான கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய 2 ஆயிரம் கர்ப்பிணி பெண்கள் சீகா தொற்று நோய்க்கு இலக்காகியுள்ளதாக கொலம்பிய தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் கொலம்பியா முழுவதும் 20 ஆயிரம் பேர் சீகா தொற்று நோய்க்கு இலக்காகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் கொலம்பியாவில் 5 லட்சம் பேர் சீகா தொற்றினால் பாதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடு…
-
- 0 replies
- 390 views
-
-
ஏஜியன் கடலை கடக்க முயன்ற குடியேறிகள் 33 பேர் பலி வடக்கு ஐரோப்பாவை நோக்கி செல்லும் முயற்சியாக கடந்த சில வாரங்களில் ஆயிரக்கணக்கான குடியேறிகள் லெஸ்போஸ் தீவுக்கு வந்துசேர்ந்துள்ளனர் ஏஜியன் கடலை கடந்து கிரேக்கத்துக்கு வர முயற்சித்த குடியேறிகளில் குழந்தைகள் அடங்கலாக குறைந்தது 33 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக துருக்கியிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் லெஸ்போஸ் தீவுக்கு வரமுயற்சித்ததாக கடலோர காவற்படையினர் தெரிவித்துள்ளனர். 75 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் 20 பேரைக் காணவில்லை என்று உயிர்தப்பிய ஒருவர் கூறியுள்ளார். வடக்கு ஐரோப்பாவை நோக்கி செல்லும் முயற்சியாக கடந்த சில வாரங்களில் ஆயிரக்கணக்கான குடியேறிகள் லெஸ…
-
- 1 reply
- 424 views
-
-
ஐ.எஸ்.-ல் இணைய கைக்குழந்தையுடன் சிரியா சென்ற பிரிட்டிஷ் பெண் குற்றவாளியாக அறிவிப்பு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைய கைக்குழந்தையுடன் சிரியா சென்ற பிரிட்டிஷ் பெண் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவருக்கான தண்டனை விவரம் திங்களன்று வெளியிடப்படுகிறது. பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரைச் சேர்ந்தவர் தரீனா ஷகீல் (26). கணவரை பிரிந்து வாழும் அவருக்கு 2 வயதில் மகன் உள்ளார். கடந்த 2014 அக்டோபரில் துருக்கிக்கு சுற்றுலா செல்வதாக கைக்குழந்தையுடன் தரீனா ஷகீல் புறப்பட்டார். அங்கிருந்து சிரியா எல்லையில் உள்ள காஸியன்டப் நகருக்கு சென்றார். அவரையும் அவரது குழந்தையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவின் ராக்கா நகருக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள விடுதியில் தரீனா தங்க வைக்கப்பட…
-
- 0 replies
- 312 views
-
-
ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 7.0 ஆக பதிவு ரஷ்யாவில் கிழக்கு பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் யெலிசோவோ நகருக்கு வடகிழக்கே 95 கி.மீ தொலைவில் பூமிக்கு அடியில் 160 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்திருந்ததாக புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம் 7.0 ரிக்டராக இருந்தாலும், தேசிய பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ள குறிப்பில் சுனாமி அபாயம் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளது. இதுவரை சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. http://tamil.thehindu.com/world/%…
-
- 0 replies
- 279 views
-
-
லெபனானில் கைது செய்யப்பட்ட இஸ்ரேலியக் கழுகு விடுதலை லெபனானில் கைது செய்யப்பட்டிருந்த கழுகு ஒன்று விடுதலை செய்யப்பட்டுள்ளது. அந்தக் கழுகின் உடல்பகுதியில் கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்தன. இஸ்ரேலுக்காக உளவு பார்த்தது எனும் சந்தேகத்தின் பேரில் அந்தக் கழுகு லெபனானில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. மிகப்பெரிய அந்தக் கழுகு இஸ்ரேலிய எல்லையைக் கடந்து தெற்கு லெபனானுக்குள் பறந்தது. பின்னர் அந்தக் கழுகு அங்கு இறங்கியபோது டெல் அவிவ் பல்கலைக்கழத்தின் அடையாள அட்டை அதன் கால்களில் கட்டப்பட்டிருந்தது தெரிந்தது. அதுமட்டுமன்றி அந்தக் கழுகு இருக்கும் இடத்தை அறிந்து கொள்வதற்கான கருவி ஒன்றும் அதனுடன் பொருத்தப்பட்டிருந்தது. இருநாட்ட…
-
- 1 reply
- 468 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், ஐநா அணுசரணையில் நடக்கும் சமாதானப் பேச்சுகள் ஜெனீவாவில் ஆரம்பிக்கவுள்ளன! ஆனால் எந்தெந்த எதிரணி கலந்துகொள்கிறது என்பதில் இன்னும் குழப்பம்! - ஸீக்கா வைரஸ் வேகமாக பரவ, பிரேசிலில், தேங்கிய தண்ணீரை சுத்தம் செய்ய வீடுவீடாக நடவடிக்கை! - மிதக்கும் மருத்துவமனை! வங்கதேசத்தின் நதிக்கரையோரத்து வறிய கிராமங்களுடைய சுகாதார தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு புதிய வழி!
-
- 0 replies
- 318 views
-
-
பாலியல் வழக்கில் யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி பாலியல் வழக்கில் சிக்கிய இந்திய யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்தவர் பிக்ரம் சௌத்ரி (69வயது). யோகா குருவான இவர் அமெரிக்காவில் தங்கி யோகா பயிற்சி அளித்து வருகிறார். இவர் மீது இந்தியாவைச் சேர்ந்த மீனாட்சி ஐயாயோடன் என்ற பெண் சட்டத்தரணி வழக்கு தொடர்ந்தார். அதில், ‘‘நான் யோகா குரு பிக்ராமிடம் சட்டத்தரணியாக பணியாற்றினேன். அப்போது அவர் தனது ஆசிரமத்தில் உள்ள பெண்களுக்கு ’பாலியல்’ தொந்தரவு கொடுப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரிக்க தொடங்கியதும் எனக்கும் ‘பாலியல் ' தொந்தரவு கொடுத்தார். ம…
-
- 3 replies
- 761 views
-
-
சவுதியில் ஷியாப் பள்ளிவாசல் மீது தாக்குதல்: மூவர் பலி சவுதி அரேபியாவில் ஷியாப் பள்ளிவாசல் ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறைந்து மூவர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சவுதியில் தொடர்ச்சியாக ஷியா பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன(கோப்புப்படம்) நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள மெஹசின் நகரிலுள்ள இமாம் ரேசா பள்ளிவாசலில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலின் போது தற்கொலை குண்டுதாரி ஒருவர் தற்கொலை இடுப்புப் பட்டியை இயக்க முயன்றபோது, வழிபாடு செய்யவந்திருந்த ஒருவரால் தடுக்கப்பட்டார் என சமப்வத்தை நேரில் கண்ட ஒருவர் கூறுகிறார். …
-
- 0 replies
- 297 views
-
-
ஏம்பா அவரு வாராரு... அதையெல்லம் மூடுங்கப்பா...! ஈரானிய அதிபரின் இத்தாலிய பயணத்தை முன்னிட்டு ரோம் நகரில் உள்ள புகழ்பெற்ற கெப்டோலியன் மியூசியத்தில் உள்ள நிர்வாணச் சிலைகள் மூடி வைக்கப்பட்டன. அதிபர் ஹசன் ரஹானி, பார்வையிட்டு சென்ற பின்னரே, சிலைகள் பழைய நிலைக்குத் திரும்பின. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு, ஈரான் அதிபர் ஒருவர் இத்தாலி நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஈரான் அதிபர் ஹசன் ரஹானி, இத்தாலி வருகையையொட்டி அவரை மனம் கோணாமல் பார்த்துக் கொள்ள இத்தாலி அரசு முடிவு செய்தது. ரோம் நகரில் உள்ள புகழ்பெற்ற கேப்டொலியன் மியூசியத்தை ஈரான் அதிபருக்கு சுற்றி காட்டவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த மியூசியத்தில் ஏராளமான நிர்வாண நிலை சிலைகள் உ…
-
- 0 replies
- 591 views
-
-
Friday, 29 January 2016 - 12:06 அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்ற இலங்கையர் ஐ.எஸ் இயக்கத்தில்!: வீடுகளை சுற்றிவளைத்த படையினர்! இலங்கையில் பிறந்து அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்ற ஐ.எஸ் தீவிரவாதியொருவரின் வீடுகளில் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் தீவிர பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மொஹமட் உனைஸ் மொஹமட் அமீன் என்ற குறித்த , 41 வயதான இலங்கையர் , ஐ.எஸ் இயக்கத்தில் இணையும் பொருட்டு 2014 ஆம் ஆண்டில் சிரியாவுக்கு சென்றுள்ளார். மேலும் தற்போது ஐ.எஸ் இயக்கத்திற்கு ஆதரவு தேடும் பிரச்சார காணொளிய…
-
- 1 reply
- 554 views
-
-
அமெரிக்கா உட்பட 25 நாடுகளை அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்: கருத்தரிக்க வேண்டாம் என பெண்களுக்கு எச்சரிக்கை ஜிகா வைரஸ் பாதிப்பு காரணமாக பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கொசு மருந்து தெளிக்கும் சுகாதார ஊழியர். படம்: புளூம்பெர்க் பிரேசில், அமெரிக்கா உட்பட 25 நாடுகளில் ஜிகா வைரஸ் வேக மாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சலை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப் படாததால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன. கடந்த ஆண்டு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பரவியது. இதில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். பல்லா யிரக்கணக்கானோர் பாதிக்கப் பட்டனர். அந்த வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. அதற்குள் ஜிகா என்ற புதிய வைரஸ் தென்அ…
-
- 0 replies
- 278 views
-
-
நம்மில் வாழும் வில்லியம் சேக்ஸ்பியர் டேவிட் கமரூன் தமிழில்:- நியூசீலந்திலிருந்து கிஷாளன் வரதராஜன்: உலக நாடக இலக்கிய மேதை வில்லியம் சேக்ஸ்பியரின் 500 ஆவது ஆண்டு நினைவையிட்டு பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் நியூசீலந்து ஹரல்ட் நாளிதழுக்கு எழுதிய விசேட கட்டுரை இது. நியூசீலந்தில் சேக்ஸ்பியரின் நாடகங்கள் இன்றும் பல்கலைக்கழக மட்டத்திலும் பாடசாலைகளிலும் ஆண்டுதோறும் நினைவு கூர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. டேவிட் கமரூனின் பிரத்தியேகக் கட்டுரையை தமிழில் தருபவர் கிஷாளன் வரதராஜன். 13 வயதில் இலங்கையிலிருந்…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஏமன் அதிபர் மாளிகை அருகே தற்கொலைப்படை தாக்குதல்: 8 பேர் பலி! அதென்: ஏமன் அதிபர் மாளிகை அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் பலியாகியுள்ளனர். ஏமன் ஆளுநராக இரந்த ஜாபர் சாட் கொல்லப்பட்டதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் அய்தரஸ் அல்-ஜூபாய்தி ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், அல்-ஜூபாய்தியை குறி வைத்து இந்த மாத தொடக்கத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவர் தப்பித்து விட்டார். இந்நிலையில், நேற்று (28-ம் தேதி) ஏமன் அதிபர் மாளிகை அருகில் திடீரென தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ராணுவ வீரர்கள் உள்பட 8 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், 12 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் சிக…
-
- 0 replies
- 434 views
-