உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26888 topics in this forum
-
உலக அழகி 2015 போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மிரியா உலக அழகியாக தெரிவு சீனாவில் நடைபெற்ற உலக அழகி 2015 போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மிரியா லாலகுனா ரொயா என்பவர் உலக அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சீனாவில் சான்யா நகரில் உள்ள பியூட்டி ஓப் கிராவுன் அரங்கத்தில் 65வது உலக அழகி போட்டி நடைபெற்றது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 114 அழகிகள் இந்த விழாவில் கலந்துகொண்டனர். இதனால் நகரம் முழுவதுமே விழா கோலம் பூண்டது. இந்நிலையில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மிரியா லாலகுனா ரொயா( Mireia Lalaguna Rozo) என்பவர் 2015 ஆம் ஆண்டின் உலக அழகியாக தெரிவு செய்யப்பட்டார். அவருக்கு …
-
- 2 replies
- 1.2k views
-
-
ஆண்ட்ராய்டுகளுக்கு இந்திய உணவுப்பொருள்களின் பெயர்: சுந்தர் பிச்சை தகவல்! கூகுளின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை கடந்த புதன்கிழமை இந்தியாவிற்கு வந்தார். கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற பின்பு, சுந்தர் பிச்சையின் முதல் இந்தியப்பயணம் இது. கூகுளின் வருங்காலத்திட்டங்கள், இந்திய அரசுடன் இணைந்து செயல்படுதல், இளைஞர் சக்தியை பயன்படுத்துதல் என கூகுளின் பல்வேறு எண்ணங்களை, கோணங்களை வெளிப்படுத்தி விட்டு சென்றுள்ளார். அவரது இந்திய பயணத்தின், சில முக்கிய மணித்துளிகள் இங்கே.. 1. இந்தியாவில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 100 ரயில் நிலையங்களில் இலவச அதிவேக வை-பை வசதி ஏற்படுத்தப்படும். வரும் ஜனவரியில் மும்பை ரயில் நிலையத்தில் இந்த திட்ட…
-
- 0 replies
- 588 views
-
-
துருக்கியின் இரு தென்கிழக்கு பிரதேசங்களில் உள்ள குர்தீஷ் போராளிகள் மீது துருக்கி படையினர் மேற்கொண்ட தாக்குதல்களின் போது, 69 குர்தீஷ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது. கடந்த 4 நாட்களாக நடைபெற்று வரும் இந்த தாக்குதல்களினால் துருக்கியில் உள்ள சிஸ்ரே மற்றும் சிலோபி ஆகிய நகரங்களில் முகாமிட்டிருந்த குர்தீஷ் திவிரவாதிகள் மீது நடந்த தாக்குதல்களால், நகரில் தொடர்ச்சியாக வெடிகுண்டு சத்தங்கள் கேட்டபடியே இருந்தது. இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து நேற்று செய்தி வெளியிட்டுள்ள துருக்கி ராணுவ அதிகாரி ஒருவர், கடந்த 4 நாட்களாக நடந்த தாக்குதலில் மொத்தம் 69 குர்தீஷ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் ராணுவத்தின் தரப்பில் 2 பேர…
-
- 0 replies
- 479 views
-
-
ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.ஈராக் பாதுகாப்பு படைகளின் தகவலின் பேரில், அமெரிக்க கூட்டுப்படைகள் அங்கு பலுஜா நகர் அருகே ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து வான்தாக்குதல்கள் நடத்தின.ஆனால் இந்த வான்தாக்குதல் ஒன்றில் ஈராக் படை வீரர்கள் சிக்கி பலியாகி விட்டதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “ஈராக்கில் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் படை வீரர்கள் சிக்கி பலியானதாக வெளியாகி உள்ள தகவல்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும். உண்மை கண்டறியப்படும். இதற்கு முன்பு கூட்டுப்படைகள் தாக்குதலில் இப்படி ஈராக் படை வீரர்கள் சிக்கி பலியா…
-
- 0 replies
- 387 views
-
-
சவுதி அரேபியாயில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 தமிழர்கள் பலி! ராமநாதபுரம்: சவுதி அரேபியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 தமிழர்கள் பலியாகியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியைச் சேர்ந்தவர் முகம்மது கில்மி (48), சவுதி அரேபியாவின் எல்லை பகுதியான நஸீரான் என்ற இடத்தில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த 10 ஆண்டுகளாக சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பரக்கத்நிஷா, மகன் வாசிம் அக்ரம், மகள் அம்ஷத்நிஷா ஆகியோர் ஏர்வாடியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சவுதி அரேபியாவின் எல்லை பகுதியான நஸீரான் பகுதியில் ஏமன் நாட்டை சேர்ந்த தீவிரவாத குழுக்கள் நேற்று குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் முகம்மது கில்மி பலியாகியுள்ளார்.…
-
- 0 replies
- 694 views
-
-
அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவதாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அன்னை தெரசா, மேற்கு வங்காளத்தை சேர்ந்த மோனிகா பெஸ்ரா என்ற பெண்ணின் வயிற்று புற்றுநோயை 2002–ம் ஆண்டு குணப்படுத்தி அற்புதம் செய்தார். இதற்காக அவருக்கு 2003–ம் ஆண்டு, போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பால் முக்திப்பேறு வழங்கினார். முக்திப்பேறுக்கு அடுத்த நிலை, புனிதர் பட்டம். புனிதர் பட்டம் பெற வேண்டுமானால் இரண்டாவது அற்புதம் நிகழ வேண்டும். இந்த நிலையில், பிரேசிலை சேர்ந்த ஒரு ஆண் மூளை கட்டிகளால் அவதியுற்றபோது, அவரது உறவினர்கள் அன்னை தெரசாவை பிரார்த்தித்தனர். அதில் அவர் அற்புதமாக குணம் அடைந்தார். இதை போப் ஆண்டவர் பிரான்சிஸ…
-
- 1 reply
- 691 views
-
-
சிரியாவில் ஐஎஸ் தோற்றால் அந்த இடத்தை நிரப்ப வேறு 15 குழுக்கள் தயார்' 'ஆயுதக்குழுக்களை மிதவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் வகைப்படுத்துவது தோல்விகரமான முயற்சி' சிரியாவில் இஸ்லாமிய அரசு ஆயுதக்குழுவினர் அமெரிக்கா தலைமையிலான கூட்டுநாடுகளால் தோற்கடிக்கப்பட்டால், அந்தத் தீவிரவாதக்குழுவின் வெற்றிடத்தை நிரப்ப குறைந்தது 15 கிளர்ச்சிக்குழுக்கள் தயாராக உள்ளதாக புதிய ஆய்வொன்று கூறுகின்றது. பிரிட்டனின் முன்னாள் டோனி பிளேயருடன் தொடர்புபடுத்தப்படுகின்ற நிறுவனமான மத மற்றும் புவிசார் அரசியல்கள் தொடர்பான நிலையத்தின் ஆய்வறிக்கையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் உள்ள ஆயுதக்குழுக்களை மிதவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் வகைப்படுத்துவது தோல்விகரமான …
-
- 0 replies
- 536 views
-
-
படகு மூழ்கி 18 அகதிகள் பலி துருக்கி கடல் பகுதியில் அகதிகள் பயணம் செய்த படகு மூழ்கியதில் 18 பேர் உயிரிழந்தனர். 14 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டனர். உள்நாட்டுப் போர் தீவிர மடைந்துள்ள சிரியா, இராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடு களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி செல் கின்றனர். ஆபத்தான கடல் பயணம் மூலம் துருக்கி மற்றும் கீரிஸ் நாடுகளின் தீவுப் பகுதி களில் அவர்கள் கரையேறி வருகின்றனர். சிரியா, இராக்கை சேர்ந்த அகதிகள் கிரீஸ் நாட்டுக்கு மரப்படகில் பயணம் செய்தனர். அவர்கள் சென்ற படகு நேற்றுமுன்தினம் துருக்கி கடல் பகுதிக்கு வந்த போது தண்ணீரில் மூழ்கியது. துருக்கி கடலோர காவல் படையினர் 14 பேரை காப்பாற்றினர். 18 பேர் …
-
- 0 replies
- 436 views
-
-
சிரியாவிற்கான ஐநாவின் திட்டம் ஒரு மைல்கல்' பொதுமக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்திக் கொள்ளுமாறு ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் மோதலை முடிவிற்கு கொண்டுவரும் முயற்சிகளில், சிரியாவிற்கான ஐநாவின் திட்டம் `ஒரு மைல்கல்' என, அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் ஜோன் கெர்ரி தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம், யுத்தம் மற்றும் சமாதானம் ஆகியவற்றுக்கிடையே ஒரு உண்மையான தெரிவை சிரியர்களுக்கு கொடுத்துள்ளதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆறு மாதங்களுள், முறையான பேச்சுக்களை நடத்துவது மற்றும் ஒற்றுமை அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவது ஆகியவற்றுக்கு ஒரு நேர அட்டவணையை முன்மொழிந்த குறித்த திட்டத்தை, ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 510 views
-
-
அம்பலப்படுத்திய போட்டோகிராபர் : உலகின் இன்னொரு ஈழமாக மாறி வரும் சிரியா! ஒருவழியாக ஓட்டம் பிடித்து, சிரியாவை விட்டு சீசர் வெளியேறியபோது 2013- ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓடிக் கொண்டிருந்தது . மற்ற அகதிகளெல்லாம் தாங்கள் சந்தித்த அவலங்களை வேதனைகளுடன் பகிர்ந்து கொண்டிருந்தபோது, சீசர் மட்டும் தனது அனுபவங்களை புகைப்படங்களாக எடுத்து வந்திருந்தார். ஒன்றல்ல, இரண்டல்ல, சரியாகச் சொன்னால் 53 ஆயிரத்து 275 போட்டோக்கள் சீசருடன் இருந்தது. கடந்த 2011-ம் ஆண்டில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரத்தின்போது சிரிய அரசாங்கத்திற்கு, தடவியல் போட்டோகிராபராக பணியாற்றி வந்தவர்தான் இந்த சீசர். போர்க்காலங்களில் ஏற்பட்ட சேதங்களையும், உயிரிழப்புகளையும் படமெடுத்து ஆவணப்படுத்துவதுதான் இவரது முக்க…
-
- 2 replies
- 794 views
- 1 follower
-
-
சுவிட்ஸர்லாந்து முஸ்லிம் தலைவர் மீதான வழக்கு ஆரம்பம் சுவிட்ஸர்லாந்தின் முக்கிய முஸ்லிம் தலைவர் மீதான வழக்கு நடவடிக்கைகளை சுவிஸ் அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர் சுவிட்ஸர்லாந்து இஸ்லாமிய மத்திய கவுன்சிலின் முன்னணி உறுப்பினர் ஒருவருக்கு எதிராக பயங்கரவாதத்தில் ஈடுப்பட்டதான குற்றச்சாட்டுகள் தொடர்பிலான வழக்கு நடவடிக்கைகளை சுவிஸ் அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். அல்கைதா மற்றும் இஸ்லாமிய அரசு போன்ற தீவிரவாத குழுக்களை தடைச்செய்யும் சுவிஸ் சட்டத்தை இந்த ஜெர்மனிய பிரஜை மீறியதாக சந்தேக்கிக்கப்படுகிறது. சிரியாவின் சண்டை பிரதேசங்களுக்கு தான் மேற்கொண்ட பயணத்தின் காணொளிகளை தனது பிரச்சாரத்திற்கு இவர் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கான ஏற்பாடு…
-
- 0 replies
- 435 views
-
-
வளர்ந்து வரும் நிதிச்சந்தைகளின் அடிப்படையில் விரைவில் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் நாடுகளை போல சர்வதேச நிதியத்தின் டாப்-10 உறுப்பினர்களில் ஒன்றாக இந்தியா இடம் பிடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, டாப்-10 பட்டியலில் 4 முக்கிய வளர்ந்து வரும் பொருளாதார நாடாக பிரேசில், சீனா, இந்தியா மற்றும் ரஷியா நாடுகளும், அதுதவிர அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளும், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து என பெரிய ஐரோப்பிய நாடுகளும் இடம் பெறுகின்றன. http://www.dailythanthi.com/News/World/2015/12/19002742/India-to-join-US-Japan-as-top-largest-10-members-of.vpf
-
- 0 replies
- 392 views
-
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மத்திய அரசை தாக்கிப் பேசி வரும் காங்கிரஸ் கட்சி, சுப்ரமணிய சுவாமி, பிரதமர் மோடியின் முகமூடி என்று கருத்துத் தெரிவித்துள்ளது.நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, ஆனந்த் ஷர்மா உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், மத்திய அரசு பழிவாங்கும் அரசியலை நடத்துகிறது. நேஷனல் ஹெரால்டு வழக்கைத் தொடர்ந்த சுப்ரமணியன் சுவாமி, மோடியின் முகமூடியாகச் செயல்படுகிறார் என்று கூறியிருந்தனர். மோடியின் இதுபோன்ற நடவடிக்கைகளால் காங்க…
-
- 0 replies
- 570 views
-
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் ஜாமீன்! புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோர் சற்று முன் ஆஜராகினர். இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி டெல்லி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ''நேஷனல் ஹெரால்டு நிறுவனத்துக்கு ரூ.90 கோடி கடன் இருந்தது. இந்த தொகையை காங்கிரஸ் கட்சியின் பணத்தில் இருந்து வட்டியின்றி கொடுத்து, விதிமுறைகளை மீறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் அடைத்தனர். அதற்கு பதிலாக நேஷனல் ஹெரால்டு நிறுவனத்துக்கு சொந்தம…
-
- 0 replies
- 615 views
-
-
விமான பயணத்தில் தூங்கிய சீக்கியரை பின்லேடனாக சித்தரித்து வீடியோ வெளியீடு சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோவில் பின்லேடனாக சித்தரிக்கப்பட்ட சீக்கியர். விமான பயணத்தின்போது தூங்கிய சீக்கியரை வீடியோ படம் எடுத்து அவரை ஒசாமா பின்லேடனாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலிபோர்னியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சீக்கியர் ஒருவர் அண்மையில் நியூயார்க்கில் இருந்து கலிபோர்னியாவுக்கு விமா னத்தில் சென்றார். அப்போது அவர் அசதி காரணமாக தூங்கினார். அவருக்கு அருகில் இருந்த அமெரிக்க இளைஞர் ஒருவர், தூங்கிய சீக்கியரை வீடியோ படம் எடுத்து அதை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டுள்ளார். நீங்கள் (அமெரிக்கர்கள்) பாது …
-
- 0 replies
- 486 views
-
-
ரகசியமாக அணுசக்தி நகரம் கட்டும் இந்தியா: செய்தி வெளியிட்ட அமெரிக்கா இந்தியா உயர்மட்ட ரகசிய அணுசக்தி நகரத்தை கட்டுகிறது என்று அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை ஜெர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கர்நாடக மாநிலம், மைசூர் அருகேயுள்ள சல்லாகெரே என்ற இடத்தில் இந்த அணு ஆயுத நகரம் கட்டப்பட்டு வருவதாகவும், வரும் 2017-ம் ஆண்டுக்குள் இந்த நகரத்தின் கட்டுமானப்பணிகள் முடிந்துவிடும் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரம் தெற்காசியாவில் மிகப் பெரிய ராணுவ கேந்திரமாகவும், அணு ஆயுதங்கள் தேக்கி வைக்கப்படும் இடமாகவும், அணு ஆயுத ஆராய்ச்சி கூடங்களும் கொண்டிருப்பதோடு, அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் ஏ…
-
- 0 replies
- 540 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவுக்கான ஒரு போர் யுக்தி மற்றும் அரசியல் மாற்றத் திட்டம் ஆகியவை குறித்து அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிராந்திய நாடுகள் உடன்பாடு காண முயற்சி. - சர்ச்சைக்குரிய கருத்துகளை திரும்பத் திரும்பச் சொன்னாலும் குடியரசுக் கட்சியின் டோனல்ட் டிரம்ப்புக்கு ஆதரவு அதிகரித்தே வaருகிறது. அவரை ஆதரிப்பவர்கள் யார் என்று ஆராய்ந்தது பிபிசி. - ஒல்லி மட்டுமே அழகல்ல, அழகுக்கு பல அளவுகளும் வடிவங்களும் உண்டு என்பதை வலியுறுத்தும் மாடல் அழகி.
-
- 0 replies
- 519 views
-
-
டில்லி மாணவி கொலை வழக்கின் 'சிறுபராய- குற்றவாளி' விடுதலையாகிறார் சம்பவம் நடந்தபோது 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்த காரணத்தினால், குற்றவாளிக்கு அளிக்கப்பட்ட மூன்றாண்டு சிறைக்காலம் நிறைவடைகிறது இந்தியத் தலைநகர் டில்லியில் 2012-ம் ஆண்டில் மாணவி ஒருவர் பலரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் ஒருவர் விடுதலை செய்யப்படுவதை தடுக்க முடியாது என்று டில்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றம் நடந்தபோது 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தவரே ஞாயிறன்று விடுதலை செய்யப்படுகின்றார். இந்தியாவில் சிறுபராய குற்றவாளிகளுக்கு அளிக்கப்படக்கூடிய அதிகபட்ச தண்டனையான மூன்றாண்டு சிறைத் தண்டனைய…
-
- 0 replies
- 461 views
-
-
உலகை உலுப்பிய இரண்டு புகைப்படங்கள்! உங்களின் மனதைக் குழப்பியது எது? Peter December 16, 2015 Canada இரண்டு சிறுவர்கள் இரண்டு வேறான சந்தர்ப்பங்களில் எடுத்த இருவேறான மரணம் மனதை உலுக்கும் புகைப்படங்கள் இவை. முதலாவது 1945ல் அமெரிக்காவின் அமெரிக்காவின் அணுகுண்டுத் தாக்குதலில் ஜப்பானே உருக்குலைந்து போன நேரத்தில் ஜப்பானில் எங்கோ ஒரு பகுதியில் தாய் தந்தையரெல்லாம் இறந்த நிலையில், தனது இறந்த தம்பியாரைப் புதைக்கக் கொண்டுபோன சிறுவன் தம்பியாரின் உடலைச் சுமந்தபடி அமைதி வணக்கத்திற்காக கம்பீரமாக தனது நாட்டை நேசிக்கின்றவனாக, போர் வெறியர்களிற்கு எதிரான பற்றாளனாக அமைதி மரியாதை செலுத்துகின்றான். அடுத்த படம் அமெரி;க்கா ஈராக்கியப் போரில் ஈடுபட்டு ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட போர் வ…
-
- 1 reply
- 970 views
-
-
சீனாவில் காற்றை பாட்டிலில் அடைத்து விற்கும் கனடா நாட்டு நிறுவனம் காற்று மாசு அபாய எச்சரிக்கையை விளக்கும் விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்ட இளம் பெண். | படம்: ராய்ட்டர்ஸ். சீனாவில் காற்று மாசடைந்து வரும் சூழலில் கனடா நாட்டு நிறுவனம் ஒன்று தூய்மையான மலைக் காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்கின்றது. டிசம்பர் தொடக்கத்தில் சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு காற்று மாசு காரணமாக அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் தலைநகரில் பள்ளிகள் மூடப்பட்டன. கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில், தொழில் துறை வளர்ந்து வருக…
-
- 1 reply
- 736 views
-
-
அமெரிக்காவில் வெடிகுண்டு 'ஜோக்' கூறிய சீக்கிய சிறுவன் கைது இடது: சிறுவன் அர்மான்சிங் சராய். தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக நண்பரிடம் விளையாட்டாக கூறிய அமெரிக்க சிறுவனை போலீஸார் கைது செய்தனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அர்லிங்டன் நிகோலஷ் பள்ளியில் படித்து வரும் சீக்கிய சிறுவன் அர்மான்சிங் சராய்(12). சில தினங்களுக்கு முன்னர் வகுப்பரையில் மாணவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது அனைவரும் விளையாட்டாக வெடிகுண்டி பற்றி பேசினர். அப்போது விளையாட்டாக 'என் பையில் வெடிகுண்டு. அதைகொண்டு இந்தப் பள்ளியை தகர்க்கப் போகிறேன்' என்று சிறுவன் அர்மான்சிங் கூற இதனை அப்படியே தனது ஃபேஸ்புக் நிலைப்பதிவில் வெளியிட்டார் இவரது சகோதரர் கினீ ஹயி…
-
- 0 replies
- 994 views
-
-
உலக அளவில் அகதிகள், புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 6 கோடியைத் தாண்டியது: ஐநா கிரேக்க தீவான லெஸ்போஸுக்கு வரும் அகதிகள். | படம்: ஏ.பி. உள்நாட்டு போர், தீவிரவாதம் உள்ளிட்ட காரணங்களினால் தங்கள் நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்தோர் மற்றும் அகதிகளாக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 கோடியைத் தாண்டியுள்ளதாக ஐநா தகவலொன்று தெரிவிக்கிறது. ஐநா அகதிகள் ஆணைய அறிக்கை இதனை தெரிவித்துள்ளது, இதில் 2.2 கோடிக்கும் அதிகமானோர் போர்கள் மற்றும் அடக்குமுறை காரணமாக அகதிகளாக்கப்பட்டவர்கள். இதில் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் ஜெர்மனி, ரஷ்யா, அமெரிக்காவிடம் புகலிடம் கோரி விண்ணப்பித்து நிலுவையில் உள்ளது. “முதல் முறையாக வலுக்கட்டாய உலக அகதிகள் மற்றும் புலம்பெயர…
-
- 0 replies
- 495 views
-
-
டிரம்ப்பின் அறிவுக்கூர்மை மகத்தானது: புடின் புகழாரம் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டோனல்ட் டிரம்ப். | படம்: ராய்ட்டர்ஸ். அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பின் அறிவுக்கூர்மை தம்மை வியக்க வைப்பதாக ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார். அதோடு அவரது ரஷ்ய ஆதரவு கொள்கையையும் மறைமுகமாக பாராட்டும் வகையில் அவர் பேசியுள்ளார். மாஸ்கோவில் நடந்த வருடாந்திர பத்திரிகையாளர் சந்திப்பில் ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் பேசினார். சுமார் 2 மணி நேரம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து அவர் பேசினார். அப்போது அதிபர் வேட்பாளர் டிரம்ப் குறித்து கேட்டபோது, "அதிபர் வேட்பாளர் டிரம்ப் அறிவுக்கூர்மை கொண்ட…
-
- 0 replies
- 933 views
-
-
மும்பை ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட விபரீதம்! [ வியாழக்கிழமை, 17 டிசெம்பர் 2015, 06:55.57 PM GMT ] மும்பையில் ஏர் இந்தியா விமானத்தின் இயந்திரம் ஒன்றில் தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் இழுத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அந்த விமானத்தின் விமானி மற்றும் இணை விமானியை ஏர் இந்தியா நிறுவனம் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது. மும்பையில் ஏர் இந்தியா விமானத்தின் இயந்திரம் ஒன்றில் தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் இழுத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அந்த விமானத்தின் விமானி மற்றும் இணை விமானியை ஏர் இந்தியா நிறுவனம் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் கீழ் இயங்கும் விமான விபத்துக்கள் புலனாய்வு அலு…
-
- 2 replies
- 979 views
-
-
பலஸ்தீன ஊடகவியலாளருக்கு இடையூறு செய்த இஸ் ரேலிய படையினருக்கு சிறைத் தண்டனை பலஸ்தீன ஊடகவியலாளரான யுவதியொருவர் நேரடி செய்தி ஒளிபரப்பொன்றில் பங்குபற்றியபோது அவரை கிண்டல் செய்து, இடையூறு விளைவித்த இஸ்ரேலிய இராணுவச் சிப்பாய்கள் மூவர் தண்டிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. சாரா அல் அஸ்ரா எனும் இந்த ஊடகவியலாளர் பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தில் அபுத் எனும் கிராமத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட நேரடி செய்தி ஒளிபரப்பில் தகவல்களை தெரிவித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இஸ்ரேலிய இராணுவ சிப்பாய்கள் மூவர் சாரா அல் அஸ்ராவை குழப்பும் விதமாக கிண்…
-
- 0 replies
- 356 views
-