Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஈராக் மற்றும் சிரியாவில் சில இடங்களை பிடித்து வைத்துக்கொண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இருநாடுகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். அத்துடன் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர். இதேபோல் சிரியாவில் அதிபருக்கும், உள்நாட்டு கிளர்ச்சியாளருக்கும் இடையிலும் சண்டை நடைபெற்று வருகிறது.இதனால் ரஷ்யா சிரியா அதிபருக்கு ஆதரவாகவும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகவும் விமான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இன்று கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வடமேற்கு சிரியாவில் உள்ள அரிஹாவின் முக்கிய நகரத்தில் உள்ள மார்க்கெட்டில் விமான தாக்குதல் நடத்தியது. இதில் குறைந்தது 40-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். ரஷ்ய விமானத்தை…

  2. தேர்தல் பிரச்சாரத்தில் சவுதி பெண்கள் சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளை அந்நாட்டு பெண்கள் முதன் முறையாக ஆரம்பிதுள்ளனர். உள்ளூராட்சித் தேர்தலில் சவுதி பெண்கள் முதல் முறையாக வாக்களிக்கவுள்ளனர் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்த தேர்தலில், சுமார் 900 பெண்கள் போட்டியிடுகின்றனர். மக்கள் பிரதிநிதிகளை தேர்தெடுக்கும் தேர்தல் ஒன்றில் சவுதியில் பெண்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும். சவுதியில் பொது இடங்களில் இருபாலாரும் ஒன்றாக இருப்பதற்கு கடுமையான தடைகள் உள்ளன. பொது இடங்களில் இருபாலாரும் ஒன்றாக இணைந்து இருப்பதை சவுதி சட்டங்கள் கடுமையாக எதிர்க்கும் நிலையில், ஆண் மற்றும் பெண் வேட்பா…

  3. ரஷ்ய விமானியின் உடலை ஒப்படைக்கிறது துருக்கி சிரியாவுடனான எல்லைப் பகுதியில் கடந்த வாரம் துருக்கி சுட்டு வீழ்த்திய ரஷ்ய போர் விமானத்தில் இருந்த விமானியின் உடலை தாங்கள் மீட்டுள்ளதாக துருக்கி கூறுகிறது. துருக்கிய ஏவுகணை ஒன்று ரஷ்ய போர் விமானத்தை கடந்த வாரம் வீழ்த்தியது அவரது உடலை ரஷ்யாவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும் துருக்கி தெரிவித்துள்ளது. துருக்கி வீசிய ஏவுகணை ஒன்றால் அந்த விமானம் தாக்கப்பட்ட பிறகு, அதிலிருந்து அவர் பாராச்சூட் மூலம் குதித்தபோது, சிரிய கிளர்ச்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த விமானத்தில் இருந்த இரண்டாவது விமானி மீட்டக்கப்பட்டார். இச்சம்பவம் துருக்கி மற்றும் ரஷ்யாவுக்கு இடையே மேலோங்கிய …

  4. பிரதமர் மோடி வீட்டின் மீது வான்வழி தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஈராக் மற்றும் சிரியாவில் அந்நாட்டு அரசுகளுக்கு எதிராக போரிட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், அந்நாடுகளின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக் கொண்டு வந்துள்ளனர். மேலும், அவற்றை ஒருங்கிணைந்து தனிநாடாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.ஈராக், சிரியா மட்டுமின்றி லெபனான், எகிப்து, பிரான்ஸ் உள்பட பல நாடுகளிலும் ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் பல்வேறு நாசவேலைகளை அரங்கேற்றி வருகின்றனர். இதேபோல், சமீபத்தில் பாரீஸ் நகரில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். இதற்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலைய…

  5. சிஞ்சார் நகரில் ஆறாவது மனிதப் புதைகுழி இராக்கின் வடக்கே கண்ணிவெடிகள் சூழ காணப்படும் மனிதப் புதைகுழிகளில் 160க்கும் அதிகமானவர்களின் உடல் எச்சங்கள் இருப்பதை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐ எஸ் அமைப்பினர் யாசிடிகளைக் கொன்று புதைத்திருக்கலாம் என கருதப்படுகிறது இவர்கள் ஐ எஸ் அமைப்பின் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. சிஞ்சார் நகர் ஐ எஸ் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து கைப்பற்ற பிறகு அங்கோ அல்லது அதற்கு அருகிலோ கண்டுபிடிக்கப்படும் ஆறாவது மனித புதைகுழியாகும் இது. கடந்த ஆண்டு அந்த ஜிகாதி அமைப்பினர் சிஞ்சார் நகரைக் கைப்பற்றிய பிறகு யாசிடி சிறுபான்மை இனத்தவர் ஏராளமானவர்களை சிறைபிடித்து, பாலியல் வ…

  6. இந்திய அளவில் உள்ள தீவிரவாத இயக்கங்களில் முதலிடத்தில் உள்ளது ஆர்.எஸ்.எஸ். தான் என்று மகாராஷ்டிராவின் முன்னாள் ஐ.ஜி., எஸ்.எம். முஷ்ரிப் கூறியிருப்பது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முஷ்ரிப் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "இந்தியாவில் நடந்த கொடூரமான 13 பயங்கரவாத சம்பவங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். , பஜ்ரங் தளம் போன்ற பிற இந்து மத அமைப்புகள் மீது மொத்தம் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் மிகப் பெரிய தீவிரவாத இயக்கம் ஆர்.எஸ்.எஸ். என்பதில் எந்த ஒரு சந்தேகமும் தேவையில்லை. கடந்த 2007-ம் ஆண்டு ஹைதராபாத்தில், 2006 - மெக்கா மஸ்ஜித் மசூதி குண்டுவெடிப்பு, 2007- ம…

  7. சவுதியில் தமிழக பெண்ணின் கை துண்டிப்பு: வீட்டுப் பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரத்துக்கு மத்திய அரசு கண்டனம் கஸ்தூரியை மீட்க உடனடி நடவடிக்கைக் கோரி, வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆ.நந்தகோபாலிடம் கண்ணீர் மல்க முறையிட்ட உறவினர்கள். | படம்: சி.வெங்கடாசலபதி சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்குச் சென்ற தமிழக பெண்ணின் கை துண்டிக்கப்பட்ட சம்பவத்துக்கு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா கண்டனம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் வேலூர் மாவட்டம் மூங்கிலேரியைச் சேர்ந்த கஸ்தூரி முனிரத்தினம் (55) எனத் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தை கடுமையாக கண்டித்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சவுதி அரேபியாவில் வீட்டு வேலை செய்துவந்த இந்தியாவைச் சேர்ந்த 55 வயத…

  8. இந்தியாவுடன் நிபந்தனையற்ற பேச்சுக்குத் தயார்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் அறிவிப்பு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷேரீப் | கோப்புப் படம்: ஏ.பி. எவ்வித நிபந்தனையும் இன்றி இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்த நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். தெற்கு ஐரோப்பாவில் மத்திய தரைகடலில் அமைந்துள்ள மால்டா தீவு நாட்டில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்றுள்ளார். இதையொட்டி பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: "இந்தியா, ஆப்கானிஸ்தான் உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் சுமுக உறவைப் பேண பாகிஸ்தான் விரும்புகிறது. தெற்காசியப…

  9. துருக்கி ராணுவம் ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய விவகாரம் தொடர்பாக அமெரிக்கா மீது ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடீன் குற்றம் சாற்றியுள்ளார். ரஷ்ய போர் விமானம் துருக்கியில், சிரியாவின் எல்லைப் பகுதியில் பறந்தபோது, கடந்த 24 ஆம் தேதி சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த விமானத்தை துருக்கி ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இதில் ஒரு விமானி உயிரிழந்தார். மற்றொரு விமானி ரஷ்யா மற்றும் சிரியாவின் பாதுகாப்பு படையினரால் உயிருடன் மீட்கப்பட்டார். ரஷ்ய போர் விமானம் தங்களது வான் எல்லையில் பறந்தால், 10 முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதன் பிறகு சுட்டு வீழ்த்தியதாகவும் துருக்கி தெரிவித்துள்ளது. …

  10. மாலியில் ஐநா முகாம் மீது தாக்குதல்: 3 பேர் பலி மாலியில் ஐநா முகாம் மீது ராக்கெட் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 பேர் பலியானதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஆலிவர் சல்காடோ தெரிவித்துள்ளார். மாலியின், வடக்கு கைடல் பகுதியில் உள்ள ஐநா அமைதி காப்பாளர்கள் முகாம் மீது சனிக்கிழமையன்று ராக்கெட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 அமைதி காப்பாளர்களும் ஒரு ஒப்பந்ததாரரும் பலியாகினர். மேலும், காயமடைந்த 4 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் ஆலிவர் சல்காடோ தெரிவித்தார். கடந்த வாரம் மாலியின் பமாகோவில் ஆடம்பர விடுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியாகினர், இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். இதன் எதிரொலியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட…

  11. அகதிகளை விரட்டும் ஐரோப்பிய நாடுகள்: குளிரில் நூற்றுக்கணக்கானோர் பரிதவிப்பு மேசிடோனியா எல்லையில் நூற்றுக்கணக்கான அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். தாங்கள் கடந்து செல்ல அனுமதிக்குமாறு பாதுகாப்பு படையினரிடம் அகதி ஒருவர் மண்டியிட்டு வேண்டுகிறார். படம்: பிடிஐ பாரீஸ் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் அகதிகளை தடுத்து நிறுத்தி விரட்டுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. உள்நாட்டுப் போர் நடைபெறும் சிரியா, இராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். கடல்மார்க்கமாக துருக்கி மற்றும் கிரேக்கத்தின் தீவுப் பகுதிகளில் கரையேறும் அகதிகள் அங்க…

  12. துருக்கியின் ஆபத்தான சீண்டல்! சிரியா எல்லை அருகில் ரஷ்யப் போர் விமானம் துருக்கியால் சுட்டுவீழ்த்தப்பட்டிருக்கும் சம்பவம், ஏற்கெனவே சிக்கலாகியிருக்கும் சிரிய உள்நாட்டுக் கலவரம் தொடர்பான சூழலை மேலும் மோசமாக்கியிருக்கிறது. ‘எங்களுடைய வான் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்ததால்தான் சுட்டோம்’ எனும் துருக்கியின் பதில், ரஷ்யாவை மேலும் சீண்டியிருக்கிறது. வான் எல்லைக்குள் நுழைந்ததற்காகவே சுட்டதாகக் கூறியிருப்பது கண்டனத்துக்கு உரியது. அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ என்று அழைக்கப்படும் ‘வட அட்லாண்டிக் (ராணுவ) ஒப்பந்த நாடுகள்’ அமைப்பில் துருக்கியும் இடம்பெற்றிருப்பதால், இதைத் தற்செயலாக நடந்ததாகவோ வேறு உள்நோக்கம் இருந்திருக்காது என்றோ கருதிவிட முடியாது.…

  13. அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி; 9 பேர் காயம் மருத்துவமனையை வளாகத்தில் பாதுகாப்பு அதிகாரி | படம்: ஏ.பி. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 3 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்தனர். கொலராடாவில் உள்ளது ஸ்ப்ரிங்ஸ் பெண்களுக்கான பிரத்யேக மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் குடும்பக் கட்டுபாடு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், இந்த மருத்துவமனைக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் போலீஸ் அதிகாரி ஒருவர் உட்பட 3 பேர் பலியாகினர். 5 போலீஸ் உட்பட 9 பேர் காயமடைந்தனர். 5 மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்…

  14. பொதுநலவாய அமைப்பின் முதல் பெண் செயலாளராக ஸ்கொட்லாந்தின் பரோனஸ் பெட்ரீஷியா நியமணம்:- 28 நவம்பர் 2015 மொல்டாவில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பொது நலவாய அமைப்பிற்கான புதிய செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்கொட்லாந்தின் பரோனஸ் பெட்ரீஷியா என்பவரே புதிய செயலாளர் நாயகமாக நியமிக்கப்ட்டுள்ளர். கடந்த நான்கு வருட காலமாக அந்தப்பதவியில் இருந்த கமலேஷ் சர்மாமாவின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்தே பரோனஸ் பெட்ரீஷியா செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுநலவாய அமைப்பின் செயலாளராக பெண்ணொருவர் நியமிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126371/language/t…

  15. ஐரோப்பிய நாடுகளில் குடியேற இனி அகதிகளுக்கு இடமில்லை என பிரான்ஸ் நாட்டு பிரதமரான மேனுவல் வால்ஸ் அறிவித்துள்ளார். ஜேர்மனியில் வெளியாகும் Sueddeutsche Zeitung என்ற பத்திரிகைக்கு பேட்டியளித்த பிரான்ஸ் பிரதமர், ‘அகதிகளுக்கு புகலிடம் கொடுப்பது தொடர்பாக ஏற்கனவே ஐரோப்பிய நாடுகள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அகதிகளுக்கு புகலிடம் அளிப்பதன் மூலம் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் அதிக அளவிலான பிரச்சனைகளை ஐரோப்பிய நாடுகள் சந்தித்து வருகின்றன. இனிமேலும் இதனை அனுமதிக்க முடியாது. ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளை கட்டுப்படுத்தினால் மட்டுமே அவற்றின் தலைவிதியை தீர்மானிக்கும். ஜேர்மனி சான்சலரான ஏஞ்சிலா மெர்க்கல் பிரான்ஸ் அதிபரை சந்திப்பதற்கு சில மணி நேரங்களுக்கு…

  16. சௌதியில் பலருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்ற திட்டம்- அம்னெஸ்டி சௌதி அரேபியா பல டஜன் கணக்கானோருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றத் திட்டமிடுவதாக வரும் செய்திகள் குறித்து அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு அச்சம் தெரிவித்திருக்கிறது. I சௌதியில் பலருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றத் திட்டம் - அம்னெஸ்டி 55 பேர் "பயங்கரவாதக் குற்றங்களுக்காக" மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கிறார்கள் என்று ஒக்காஸ் என்ற பத்திரிகை கூறியது. ஆனால் அல் ரியாத் பத்திரிகையில் வெளியாகி, தற்போது நீக்கப்பட்ட செய்தி ஒன்றில், 52 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவிருப்பதாக்க் கூறப்பட்டிருந்த்து. இதில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட ஷியா முஸ்லீம் பிரிவினரும் …

  17. - இரண்டு வாரங்களுக்கு முன்னர் பாரிஸ் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக பிரான்ஸில் அஞ்சலி - இதனிடையே, ஐரோப்பாவில் இன்றளவில் அதிகம் தேடப்படும் நபரான சலா அப்தஸ்லாமின் நண்பர் பிபிசியிடம் பேசியுள்ளார் ! - குப்பையை சென்றடையும் உணவுப் பொருட்கள் புவி வெப்பமடைவதற்கு காரணமாகி விடுகின்றனவா? ஆராய்கிறது பிபிசி ! - ஊடகங்களில் ஆண்களை விட, குறைவாகத் தெரியும் பெண்கள் - புள்ளிவிபரங்களுடன் பிபிசியின் சிறப்புக் குறிப்பு !

  18. குண்டூஸ் தாக்குதல்: பொய் சொல்லும் அமெரிக்கா ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரிலுள்ள எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பின் (எம்.எஸ்.எப்) வைத்தியசாலை மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல், மனித, தொழிநுட்பத் தவறால் ஏற்பட்டது என, ஐக்கிய அமெரிக்காவின் படைகளின் தளபதி ஏற்றுக் கொண்டுள்ளார். இந்தத் தாக்குதல், அருகிலுள்ள தலிபான்களால் கட்டுப்படுத்தப்படும் பகுதியொன்றின் மீது மேற்கொள்ளப்படவே எண்ணப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஒக்டோபர் 3ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில், வைத்தியர்கள், வைத்திய ஊழியர்கள் உட்பட 30 பொதுமக்கள், உயிரிழந்திருந்தனர். குறித்த விமானத் தாக்குதல், 29 நிமிடங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஐக்கிய அ…

  19. ரஷ்ய போர் விமானத்துக்கு ரேடியோ வழியாக எச்சரிக்கை விடுத்த துருக்கி ( ஆடியோ) துருக்கி வான் எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கு முன், அந்த விமானத்துக்கு ரேடியோ வழியாக பல முறை எச்சரிக்கை விடுத்ததாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான ஆடியேவையும் துருக்கி அரசு வெளியிட்டுள்ளது. அதில், '' நீங்கள் துருக்கி வான் எல்லைக்குள் நுழைந்துள்ளீர்கள். உடனடியாக தெற்கு நோக்கி பயணத்தை மாற்றுங்கள்என்று ஆங்கிலத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது, இது போல் 10 முறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னரே, அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தற்போது துருக்கி அரசு தெரிவித்துள்ளது. வீழ்த்தப்பட்ட விமானம் ரஷ்யாவின் சுகோய்- …

  20. மால்டா காமன்வெல்த் உச்சி மாநாடு துவங்கியது பிரிட்டிஷ் மகாராணி எலிஸபெத் தலைமையில் 53 நாடுகளின் அரச தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர் 24-வது காமன்வெல்த் உச்சி மாநாடு மால்டாவில் துவங்கியுள்ளது. பிரிட்டிஷ் மகாராணி எலிஸபெத் தலைமையில் 53 நாடுகளின் அரச தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். கடும்போக்கு தீவிரவாதத்தால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் உள்ளிட்ட விடயங்கள் இந்த மாநாட்டில் ஆராயப்படவுள்ளன. பருவநிலை மாற்றம் தொடர்பான விடயங்களும் இம்முறை மாநாட்டில் பேசப்படவுள்ளன. உலகின் மொத்த சனத்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் காமன்வெல்த் உறுப்பு நாடுகளில் வாழ்கின்றனர். காமன்வெல்த் அமைப்பின் உறுப்பு நாடு அல்லாத பிரான்ஸின் அதிப…

  21. துருக்கி விமானத்தை தகர்க்க ரஷ்யா வியூகம்: சிரியாவில் அதிநவீன போர்க்கப்பல் ரோந்து ரஷ்யாவின் அதிநவீன எஸ்-400 ஏவுகணை. (கோப்புப்படம்) ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு பழிக்குப் பழியாக துருக்கு போர் விமானத்தை தகர்க்க ரஷ்யா வியூகம் வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்ய விமானப் படை தாக்குதல் நடத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய போர் விமானத்தை துருக்கி ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை எழுந்துள்ளது. ‘ரஷ்யாவின் முதுகில் துருக்கி குத்திவிட்டது, இதனை மன்னிக்க முடியாது: என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்க…

  22. ஐஎஸ்ஐஎஸ்-ன் இணையதளத்தை காலி செய்த வயாகரா..! தொடர் தீவிரவாத தாக்குதல்களால் உலகையே கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கம், சின்ன வயாகரா விளம்பரம் ஒன்றை பார்த்து கலங்கிப் போயிருக்கிறது. எதிர்பாராத வகையில் அடுக்கடுக்காக தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவது, பிரபல நிறுவனங்களின் இணையப் பக்கங்களை முடக்குவது, அப்பாவி பிணைக் கைதிகளின் கழுத்தை அறுத்து அந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றுவது என ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் செய்யும் ஒவ்வொரு செயலும் கொஞ்சம் கூட யாராலும் சகிக்கவும், கணிக்கவும் முடியாதது. ஆனால் இந்த முறை அந்த இயக்கத்தாலேயே கணிக்க முடியாத விஷயம் ஒன்று அதனுடைய இணையதளப் பக்கத்திற்கு நடந்தேறியிருக்கிறது. ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் மிகவும் பழமைவாத கொள்கைகளை பின்…

  23. புர்கா அணிந்தால் 13 லட்சம் ரூபா அபராதம்; சுவிஸ் பிராந்தியமொன்றில் புதிய சட்டம் சுவிட்­ஸர்­லாந்தின் பிராந்­தி­ய­மொன்றில் புர்கா, நிகாப் அணி­ப­வர்­க­ளுக்கு சுமார் 13 லட்சம் ரூபா அப­ராதம் விதிக்கும் சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. சுவிட்­ஸர்­லாந்தின் தென்­பி­ராந்­தி­யத்­தி­லுள்ள “டிசினோ” எனும் பிராந்­தி­ய நாடா­ளு­மன்­றமே இச்­சட்­ட­மூ­லத்தை கடந்த திங்­கட்­கி­ழமை நிறை­வேற்­றி­யுள்­ளது. இதன்­படி டிசினோ பிராந்தி­யத்தில் கடைகள், உண­வ­கங்கள், பொதுக் கட்­ட­டங்கள் உட்­பட பொது இடங்­களில், முகத்தை முழு­மை­யாக மறைக்கும் ஆடை­களை அணி­வது குற்­ற­மாகும். இத்­த­டையை மீறி புர்கா, நிகாப் ஆடை­க…

  24. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 61வது பிறந்த நாள் சென்னையில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலர் வைகோ இனிப்பு வழங்கி பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடினார். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் நவ.26. அந்த இயக்கத்தின் உயிர் நீத்த போராளிகளை நினைவுகூறும் மாவீரர் நாள் நவ. 27. 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்துக்கு முன்னர்வரை விடுதலைப் புலிகள் ஆட்சி செய்த பகுதிகளில் இந்நிகழ்வுகள் ஒரு வாரகாலம் கடைபிடிக்கப்படும். நவம்பர் 27-ந் தேதியன்று மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி பிரபாகரன் உரையாற்றுவது வழக்கம். 2009-க்குப் பின்னரும் தமிழகம் மற்றும் ஈழத் தமிழர் வாழும் நாடுகளில் பிரபாகரன் பிறந்த நாளும் மாவீ…

  25. கத்தாரிலும் கனமழை! (படங்கள்) கத்தாரிலும் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. தலைநகர் தோஹா, சல்வோர்ரோடு, அல்கூர், ஹர்ப்பா, வக்ரா உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று கனமழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்கள் நீரில் மிதக்கின்றன. வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. http://www.vikatan.com/news/article.php?aid=55569

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.