Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சவூதி அரே­பிய இள­வ­ர­சர்­களில் ஒரு­வ­ரான மஜித் அப்துல் அஸிஸ் அல் சௌத், தம்மை 3 நாட்கள் தடுத்து ­வைத்து பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­த­தாக அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பெண்கள் மூவர் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர். அமெ­ரிக்­காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நக­ரி­லுள்ள மாளி­கை­யொன்றில் பணிப்­பெண்­க­ளாக கட­மை­யாற்­று­வ­தற்­காக கடந்த செப்­டெம்பர் மாத இறு­தியில் தாம் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­த­தாக லொஸ் ஏஞ்சல்ஸ் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள மனுவில் இப்­பெண்கள் குறிப்­பிட்­டுள்­ளனர். இப்­பெண்­களின் பெயர் விப­ரங்கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. 29 வய­தான இள­வ­ரசர் மஜித் அப்துல் அஸிஸ் அல் சௌத், சவூதி அரே­பி­யாவின் முன்னாள் மன்னர் அப்­துல்­லாவின் புதல்­வர்­களில் ஒரு­வ­ராவார். இவர் கடந…

  2. நான் எதிர்பார்த்ததைவிட தாஜ்மகால் மிகவும் அற்புதமாக இருக்கிறது: மார்க் ஸக்கர்பெர்க் மார்க்கின் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த படம் இந்தியா வந்திருக்கும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் நேற்று (செவ்வாய்க் கிழமை), தாஜ்மகாலுக்கு சென்றிருக்கிறார். உலக அதிசயங்களில் ஒன்றாக, காதலின் நினைவுச் சின்னமாகப் போற்றப்படும் தாஜ்மகாலுக்குச் சென்ற மார்க், அங்கே கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கும் தனது புகைப்படத்தை, ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். மாலை 04.30 மணி அளவில் பதிவேற்றப்பட்ட அப்பதிவில், 'டவுன்ஹால்- கேள்வி பதில்' நிகழ்ச்சிக்காக இந்தியா வந்திருக்கிறேன். இந்தியா வருவது குறித்த திட்டத்தின் போதே, தாஜ்மகாலுக்குச் செல்ல முடிவு செய்துவிட்டேன். தாஜ்மகாலைப் பார்க்க வேண்டும்…

  3. ஸ்லோவீனியாவுக்குள் பெருந்திரளான குடியேறிகள் வருகை ஸ்லொவீனியாவுக்குள் கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் 12,000க்கும் மேற்பட்ட குடியேறிகள் வந்திறங்கியுள்ளதாக, அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது. குடியேறிகள் வருகையை ஸ்லொவீனியா சமாளிப்பதில், ஐரோப்பிய ஒன்றியம் எப்படி உதவ வேண்டும் என்பது தொடர்பிலான பேச்சு வார்த்தைகளுக்காக, குடியேற்றத்துக்கான ஐரோப்பிய ஆணையர் டிமிட்ரிஸ் அப்ரம்போலிஸ் இன்று ஸ்லொவீனியா செல்லும் நிலையில், இந்த புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. மக்களின் வருகையை சமாளிப்பதில் ஐரோப்பிய ஒன்றித்தின் உதவி வேண்டும் என்று ஸ்லொவீனியாவின் உள்துறை அமைச்சர் வெஸ்னா யோர்கோஸ் நிந்தார் கோரியுள்ளார். ஐரோப்பாவுக்கு பயணிக்கும் குடியேறிகளின் பெரும் எண்ணிக்கையை கையாள ஒருங்கிணைந்த ஐர…

  4. தனி விமானம் மூலம் பாரியளவில் போதைமருந்து கடத்திய சவூதி இளவரசர் கைது சவூதி அரேபியாவின் இளவரசர் ஒருவர் உட்பட மேலும் நான்கு பேர் லெபனானின் பெய்ரூட் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக போதை மருந்து கடத்த முற்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியான விமானம் ஒன்றில் இரண்டு டொன் போதை மருந்தை இவர்கள் கடத்த முற்பட்டதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட இளவரசர் உட்பட்ட நால்வரையும் லெபனான் சுங்கப் பிரிவினர் விசாரணை செய்து வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இளவரசரின் பெயர் அப்த் அல்-முஹ்சின் பின் வலீத் பின் அப்துல் அஜிஸ் அல் ஸௌத் என தெரியவந்துள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=73848

  5. பயங்கர நிலநடுக்கம்: ஆப்கனில் 17 பேர், பாகிஸ்தானில் 12 பேர் பலி; டெல்லி, ஸ்ரீநகரில் நில அதிர்வுகள் டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து அலுவலகங்களில் இருந்து ஊழியர்கள் பலரும் கட்டிடங்களை விட்டு வெளியேறினர். | படம்: ஏஎஃப்பி ஆப்கானிஸ்தானின் ஜார்ம் என்ற இடத்துக்கு தெற்கு தென்மேற்கே இந்துகுஷ் மலைப்பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 7.7 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்திற்கு பாகிஸ்தானில் 12 பேர் பலியானதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் ஊடகத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆப்கானில் ரிக்டர் அளவில் 4.8 என்று பதிவான பின்னதிர்வு ஏற்பட்டுள்ளது. ஆப்கானில் …

  6. சவுதியில் பள்ளிவாசல் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் Reuters சவுதியில் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் அண்மையில் அதிகரித்து வருகின்றன( ஆவணப் படம்) சவுதி அரேபியாவில் ஒரு பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவில் ஒரு பள்ளிவாசல் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நாட்டின் தெற்கேயுள்ள நர்ஜான் நகரில் தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகக் கூறும் அரச ஆதரவு தொலைக்காட்சியான அல் அரேபியா, அதில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது. இந்த ஆண்டு சவுதி அரேபியாவில் பல பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. அதற்கு ஐ எஸ் அமைப்பு தாங்களே பொறுப்பு …

  7. குடியேறிகளின் பிரச்சினையை சமாளிக்க புதிய திட்டம் bbc ஐரோப்பா நோக்கி வரும் குடியேறிகள் பல நெருக்கடிகளை சந்திக்கின்றனர். ஐரோப்பா நோக்கி வரும் குடியேறிகளை சமாளிக்க மேலும் ஒரு லட்சம் தற்காலிக குடியிருப்புகளை அமைக்க பல நாடுகள் இணங்கியுள்ளன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை வந்தடைய முயற்சிக்கும் மேலும் ஒரு லட்சம் குடியேறிகளுக்கான தற்காலிக குடியிருப்புகளை அமைப்பதற்கு, மத்திய ஐரோப்பிய மற்றும், பால்கன் நாடுகளின் தலைவர்களும் இணங்கியுள்ளனர். பிரசல்ஸில் இடம்பெற்ற அவசர மாநாட்டில், ஒப்புதல் அளிக்கப்பட்ட பல விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். ஸ்லோவேனியா, மற்றும் கிரேக்கம் ஆகியவை தமது எல்லைகளை பாதுகாத்துகாத்துக் கொள்வதற்கு, அவர்களுக்கு உதவ நூற்றுக்கணக்கான காவல்துறையினர் அனுப்பி வைக்கப்பட உ…

  8. துனீசிய நாட்டில் அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மக்களுக்கும், அரசியல் இயக்கங்களுக்கும் இடையே சமரசப் பேச்சுகளை நடத்தி, அமைதியான முறையில் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்ட 4 தேசிய அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்ட பேச்சுவார்த்தைக் குழுவுக்கு 2015-ம் ஆண்டுக்கான சமாதான நோபல் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. துனீசிய பொதுத் தொழிற்சங்கம், துனீசிய தொழில்துறைக் கூட்டமைப்பு, துனீசிய மனித உரிமைகள் லீக், துனீசிய வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளே இந்த ஆண்டின் நோபல் சமாதானத் தூதர்கள்! துனீசியாவில்தான் 2011-ல் முதன்முதலாக ஆட்சியாளருக்கு எதிராக மக்களுடைய கிளர்ச்சி மூண்டது. அதை ‘மல்லிகைப் புரட்சி’ என்று வர்ணித்தார்கள். அது பிற நாடுகளில் ஏற்படுத்திய தொடர்ச்சியான கிளர்ச்சியைத்தான…

    • 0 replies
    • 1.3k views
  9. பாகிஸ்தானில் இருந்து இன்று நாடு திரும்புகிறார் கீதா கராச்சியில் உள்ள எதி அறக்கட்டளை இல்லத்தில் தனது குடும்பத்தினரின் புகைப்படத்தை நிருபர்களுக்கு காட்டுகிறார் கீதா. படம்: ஏஎப்பி பாகிஸ்தானில் தவிக்கும் இந்திய பெண் கீதா (23) இன்று கராச்சியில் இருந்து டெல்லிக்கு திரும்புகிறார். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு வழிதவறிய கீதா பாகிஸ் தானின் லாகூர் நகருக்குச் சென்றார். அவரை போலீஸார் மீட்டு கராச்சி யில் உள்ள எதி அறக்கட்டளையிடம் ஒப்படைத்தனர். காது கேளாத, வாய் பேச முடியாத அந்த சிறுமியால் தான் யார் என்பதை கூறமுடியவில்லை. இதையடுத்து எதி அறக்கட்டளை நிர்வாகம், சிறுமிக்கு கீதா என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். தற் போது அவருக்கு 23 வயதாகிறது. கடந்த பல ஆண்டுகளாக அவரது இந்திய பெற்றோரை…

  10. டைட்டானிக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பிஸ்கட் அக்.24-ல் ஏலம்: ரூ.10 லட்சத்துக்கு ஏலம் போகும் என எதிர்பார்ப்பு இங்கிலாந்தில் உள்ள சவுத் தாம்டன் துறைமுகத்தில் இருந்து நியூயார்க் நகருக்கு சென்றுகொண்டிருந்த உலகின் மிகப்பெரிய கப்பலான டைட்டானிக் 1912-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி பனிப்பாறை ஒன்றில் மோதி கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த பயணிகள், கப்பல் ஊழியர்கள், கேப்டன் உட்பட 1,503 பேர் பலியாயினர். இந்நிலையில் கப்பலில் பயணம் செய்த முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவுக்கான மெனு கார்டு ஒன்று, அதில் பயணம் செய்து, பின்னர் லைப் போட் மூலம் தப்பித்த ஆபிரகாம் லிங்கன் சாலமன் என்ற பயணியிடம் இருந்தது. அந்த மெனு கார்டு கடந்த வாரம் ஆல்லைன் மூலம் ஏலம் விடப்பட்டது. சுமார் ரூ.5.82 கோடிக்கு …

  11. லிபியா கடற்கரையில் 40 சடலங்கள் : தொடரும் அகதிகளின் சோகம் சஹாரா துணைகண்டத்தில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த சுமார் 70 அகதிகளை ஏற்றிவந்த படகு லிபியா நாட்டின் கடல் எல்லையில் நேற்று கவிழ்ந்து, மூழ்கியுள்ளது. குளிர்ந்த கடல்நீரில் மூழ்கி, மூச்சுத்திணறி உயிரிழந்த 40 பேரின் சடலங்கள், லிபியா நாட்டின் தலைநகரான திரிபோலியின் கிழக்கேயுள்ள ஸ்லிட்டன், கோம்ஸ் ஆகிய நகரங்களில் உள்ள கடற்கரையோரம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் செம்பிறை தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், மீதமுள்ள 30 பேரை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/articles/2015/10/25/லிபியா-கடற்கரையில்-40-சடலங்கள்-தொடரும்-அகதிகளின்-சோகம்

  12. லண்டன் : லண்டனில் உள்ள உலகப்புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்காக, இந்திய மாணவர்கள் இங்கிலாந்து செல்வது ஆண்டு தோறும் உயர்ந்த வண்ணம் உள்ளது. அங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில், இந்தியர்கள் 3வது இடத்தில் உள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. லண்டனில் சர்வதேச தரம் வாய்ந்த, உலகின் முன்னணி பல்கலைக்கழகங்கள் இருப்பதால், அமெரிக்கா, இந்தியா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஹாங்காங், கிரீஸ், நைஜீரியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிகளவில் மாணவர்கள் படிக்கின்றனர். அங்கு கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் வரிசையில் சீன மாணவர்கள் முதலிடத்தையும், அமெரிக்க மாணவர்கள் 2வது இடத்தையும், இந்திய மாணவர்கள் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். 2014ம் ஆண்டு நிலவரப்படி, லண்டன் பல்கலைகழகங்களி…

    • 0 replies
    • 1.4k views
  13. இராக் விவகாரத்தில் விட்ட தவறுகளுக்காக மன்னிப்பு கோரிய பிரிட்டனின் முன்னாள் பிரதமாரான டொனி பிளயர், இராக் போரே இஸ்லாமிய அரசின் உதயத்துக்கு காரணம் என்ற கூற்றில் உண்மையும் இருப்பதாக கூறியுள்ளார். இராக் விவகாரத்தில் மன்னிப்பு கோரிய பிளயர் சதாம் ஹுசைனை அகற்றிய தமக்கும் இன்றைய இராக் நிலைமையில் பொறுப்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் சிஎன்என் ஒளிபரப்பாளர்களுக்கு செவ்வி வழங்கிய பிளயர், 12 வருடங்களுக்கு முன்னதாக இராக் மீதான அமெரிக்காவின் நடவடிக்கைகளில் தாம் இணைந்ததில் எந்த விதமான தவறும் கிடையாது என்றும் கூறியுள்ளார். அத்துடன், சதாமை பதவியில் இருந்து அகற்றியதற்காக மன்னிப்பு கோருவது கடினம் என்றும் அவர் கூறியுள்ளார். http://www.bbc.com/tamil/global/2015/10/151025…

    • 0 replies
    • 1.1k views
  14. பெட்ரோலிய விற்பனையில் கோடிகளை குவிக்கும் ஐஎஸ் தீவிரவாதிகள் இராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐஎஸ் தீவிர வாதிகள் தங்கள் பிடியில் உள்ள இடங்களில் எடுக்கப்படும் பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றனர். இப்பணத்தை கொண்டு ஆயுதம் வாங்குவது, இயக்கத்தில் சேர்பவர்களுக்கு சம்பளம் வழங்குவது போன்றவற்றை செய்து வருகின்றனர்.எண்ணெய் விற்பனை மூலம் மாதம்தோறும் சுமார் 300 கோடி ரூபாயை தீவிரவாதிகள் பெற்று வருவதாக ஈரான் உளவுத்துறையினரும், அமெரிக்க அதிகாரிகளும் உறுதிபடுத்தியுள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தாக்குதல் நடத்துவதற்கு முன்பே சிரியா, இராக்கில் பல எண்ணெய் கிணறுகளை ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக் கொண்டு வந்து விட்டனர். எண்ணெய…

    • 1 reply
    • 563 views
  15. தகுதியற்ற அகதிகளை உடனடியாக நாடுகடத்த முடிவு: நிதியுதவியையும் குறைக்க அரசு திட்டம் [ சனிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2015, 06:29.14 மு.ப GMT ] ஜேர்மனி நாட்டில் குடியேற தகுதியற்ற வெளிநாட்டினர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் வகையில் புதிய சட்டத்தை அடுத்த வாரம் முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாக அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலின் ராஜாங்க அதிகாரியான Peter Altmaier நேற்று அவசர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜேர்மனியில் குடியேற ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட அகதிகள் மற்றும் தற்போது குடியேற முயற்சித்து தகுதியற்றதாக தீர்மானிக்கப்பட்ட வெளிநாட்டினர்களை கட்டுப்படுத்த அரசு இன்று(சனிக்கிழமை) கடுமையான புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது. இந்த புதிய ச…

  16. ஐ.நா-வின் 70-வது ஆண்டு விழா கொண்டாட்டம்: கண்டுகொள்ளப்படாத தாஜ்மஹால்! பன்னாட்டு அமைதியையும் பாதுகாப்பையும் பேணிக் காக்கவும், உலக நாடுகளுக்குள் இருக்கும் வேற்றுமைகளை நீக்கவும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தொடங்கப்பட்டு, உலகின் மிகப்பெரிய பொது அமைப்பாகக் கருதப்படும் ஐ.நா.சபையின் 70 வது ஆண்டு விழா, அக்டோபர் 24-ம் தேதி உலகம் முழுக்க வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட இருக்கிறது. இதன் ஒரு கட்டமாக பல நாடுகளில் உள்ள உலக நினைவுச் சின்னங்கள் நீல நிறத்தில் மிளிரவுள்ளன. இரண்டு உலகப் போர்களால் சிதையுண்டு, வேற்று கிரகத் தீவுகள் போல் ஆகிப்போன பல தேசங்களில், வேற்றுமை காரணமாக மூன்றாம் உலகப் போர் மூண்டால் மனித குலமே அழிந்துவிடும் எனக்கருதி வலிமை மிக்க ஒரு அமைப்பாக, பல்வேறு நாடுகள் …

  17. மாலைத்தீவுகள் உதவி ஜனாதிபதி கைது மாலைத் தீவு ஜனாதிபதியை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் அந்நாட்டின் உதவி ஜனாதிபதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாலைத்தீவுகளின் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/157384/ம-ல-த-த-வ-கள-உதவ-ஜன-த-பத-க-த-#sthash.CXmClb58.dpuf

  18. மொகரம் ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 16 பேர் பலி! பாகிஸ்தானில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் நடத்திய மொகரம் ஊர்வலத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 16 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானில் மொகரம் பண்டிகைக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் , சிந்து மாகாணத்தில் உள்ள ஜகோபாபாத் என்ற நகரில் இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில், சம்பவ இடத்திலேயே 16 பேர் பலியாகினர். இதில் 2 பேர் குழந்தைகள். மேலும் 12க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். சிந்து மாகாணத்தில் கடந்த இரு நாட்களில் நிகழ்த்தப்பட்ட இரண்டாவது பயங்கரவாத சம்பவம் இது. இந்த மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில…

  19. மெக்ஸிகோவை நெருங்கும் பெரும் சூறாவளி bbc மெக்ஸிகோவை நெருங்கும் பெரும் சூறாவளி மெக்சிகோவில், பட்ரீஷியா சூறாவளி கரைகடக்கும் முன்னதாக தென் மேற்கு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுகின்றனர். மெக்சிகோவில், பட்ரீஷியா சூறாவளி கரைகடக்கும் முன்னதாக தப்பிபதற்காக மெக்சிகோவின் தென் மேற்கு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுகின்றனர். மணிக்கு முன்னூற்று இருபத்தைந்து கிலோமீட்டர் வேகமான இந்த சூறாவளிதான் இதுவரை பதியப்பட்டுள்ளவற்றிலேயே மிகவும் வலிமையான சூறாவளி என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த சூறாவளி தாக்கக் கூடிய மூன்று மெக்சிகோ மாகாணங்களில் அவசர நிலை அற…

  20. கடந்த 1953-ம் ஆண்டு போரில் பிரிந்த வட, தென் கொரிய மக்கள் உருக்கமான சந்திப்பு வடகொரியாவைச் சேர்ந்த தனது சகோதரி கிம் ஜோன் சூனை சந்தித்த மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடிக்கும் தென்கொரிய முதியவர் போக் பேக். படம்: கெத்தி கடந்த 1953-ம் ஆண்டு கொரிய போரின்போது பிரிந்த குடும்பத்தினர் நேற்று சந்தித்துப் பேசினர். கடந்த 1950-53 போரின் விளைவாக கொரிய தீபகற்பம் வடகொரியா, தென்கொரியா என இரு நாடுகளாகப் பிரிந்தது. வடகொரியாவில் கம்யூனிச ஆட்சியும் தென்கொரியாவில் ஜனநாயக ஆட்சியும் நடைபெறுகிறது. இருநாடுகளிடையே அவ்வப்போது உரசல்கள் நீடித்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் நல்லெண்ண நடவடிக்கையாக 1953 போரின் பிரிந்த இருநாடுகளைச் சேர்ந்த குடும்பத்தினர் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டத…

  21. பிரான்சை உலுக்கிய மிகப்பெரிய சாலை விபத்து! பிரான்சில் நடந்த சாலை விபத்தில் 42 பேர் பலியாகியுள்ளனர். 1982 -ம் ஆண்டுக்கு பிறகு பிரான்சில் நடந்த மிகப் பெரிய சாலை விபத்து இதுவாகும். பிரான்சின் தென்மேற்கு பகுதியில் போர்டியாக்ஸ் நகரத்தின் அருகே இன்று அதிகாலை 7.30 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுற்றுலா பேருந்து மீது மரம் ஏற்றிச் சென்ற ட்ரக் மோதிய வேகத்தில், இரு வாகனங்களும் தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளன. இதில், பேருந்தில் இருந்த 41 பேர் சம்பவ இடத்திலேயே எரிந்து பலியாகியுள்ளனர். படுகாயமடைந்த 9 பேர் போர்டியாக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பெடிட் பெலாஸ் என்ற சிறிய நகரத்தை சேர்ந்த சில முதியவர்கள் பக்கத்து நக…

  22. நார்வே தலைநகர் ஓஸ்லோவில் கார்களுக்கு தடை! நார்வே தலைநகர் ஓஸ்லோவில், அனைத்து கார்களுக்கும் வரும் 2019-ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்படுகிறது. இதனால் உலகில் கார்கள் ஓட்ட தடை விதிக்கப்பட்ட முதல் பெரிய நகரம் என்ற பெருமையை ஓஸ்லோ பெறவுள்ளது. நார்வேயின் மிகப் பெரிய நகரமான இங்கு 7 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். நகரில் 3 லட்சத்து 50 ஆயிரம் கார்கள் ஓடுகின்றன. போக்குவரத்து நெரிசலையும், காற்று மாசடைவதை தடுக்கும் வகையிலும் இங்கு அனைத்து கார்களுக்கும் தடை விதிக்க முடிவு செயயப்பட்டுள்ளது. வரும் 2019-ம் ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரும்.பேருந்து போக்குவரத்து, ரயில் சேவை வசதியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு சைக்கிளில் செல்பவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு மாற…

  23. கனடாவில், பத்தாண்டு கால கன்சர்வேட்டிவ் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக, லிபரல் கட்சித் தலைவர் ஜஸ்டின் ட்ருடோ ஆட்சியை பிடித்துள்ளார். அவரது தந்தை பியர் ட்ருடோ 60களில் பிரதமராக இருந்தவர். அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கெனடியை போன்றவர் என்று ஒப்பிட்டு பேசப்பட்டவர். கனடாவின் பெரும் அரசியல் மாற்றத்துக்கு நடுவே, அவரது மகனை யாருடன் ஒப்பிடுவது என்பது தான் பலருக்கும் இப்போதுள்ள கேள்வி. http://www.bbc.com/tamil/global/2015/10/151020_canada_election

    • 5 replies
    • 2.1k views
  24. ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆணுறை வெடிகுண்டுகள்: அலறும் ரஷ்யா! (வீடியோ) டமாஸ்கஸ்: ரஷ்யாவின் போர் விமானங்களை தாக்கி அழிக்க, ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆணுறை வெடிகுண்டுகளை தயாரித்து பறக்கவிட்டு, நெருக்கடி கொடுத்து வரும் காட்சிகள் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளன. சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அதேபோல் அதிபர் பஷர் அல்–ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா, ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் சிரியாவில் கடும் போர் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் சிரியாவின் லடக்கியா மாகாணத்தில…

  25. சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கோல்ஃப் விளையாடத் தடை சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சி, ஊழலை ஒழிக்கும் தனது நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அதன் கட்சி உறுப்பினர்கள் கோல்ஃப் கிளப்புகளில் உறுப்பினர்களாக இருப்பதை தடை செய்துள்ளது. கம்யுனிஸ்ட் கட்சியின் மொத்த உறுப்பினர்ள் 88 மில்லியன் பேரும், கோல்ஃப் கழகங்களில் சேர்வதிலிருந்து தடைவிதித்துள்ளதாக, அந்தக் கட்சியின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆடம்பர உணவு உண்பது, மற்றும் முறையற்ற பாலியல் உறவுகளில் ஈடுபடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. 2012 முதல், சீனா ஊழலுக்கு எதிராக ஒரு கடுமையான நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது. சீனத் தலைவர்கள், சட்டத்தை விடவும் தமது கட்சியின் ஒழுக்கம் கடுமையாக இருக்க வேண்டும் என…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.