Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பொது இடங்களில் பெண்கள் பேசக்கூடாது; தலிபான்கள் கட்டுப்பாடு ஆப்கானிஸ்தானில் பொது இடங்களில் பெண்கள் பேசக்கூடாது மற்றும் முகத்தையும் உடலையும் காட்டக்கூடாது என்று தலிபான்கள் கட்டுப்பாட்டை விதித்துள்ளனர். புதிய சட்டங்கள் ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிப்பாக கடுமையாக பாதித்தது, பெண்கள் தங்கள் முகத்தையும் உடலையும் மட்டுமல்ல, தங்கள் குரலையும் வீட்டிற்கு வெளியே மறைக்க வேண்டும். இந்த சட்டத்தை ஐக்கிய நாடுகள் சபையும் உரிமைக் குழுக்களும் சமீபத்திய விதிகளை கடுமையாக விமர்சித்துள்ளன. அமெரிக்கப் படைகளை வெளியேற்றி ஆகஸ்ட் 2021 இல் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து , தலிபான்கள் பெண்களின் உரிமைகள் விஷயத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களில் அடைந்த முன்னேற்றத்தைப் ப…

  2. பட மூலாதாரம்,PLANET LABS படக்குறிப்பு, ரஷ்யா மீது தாக்குதல் நடத்தும் யுக்ரேன் பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்தி வருகிறவருகிறது கட்டுரை தகவல் எழுதியவர், ஜானதன் பீல் & தாமஸ் ஸ்பென்சர் பதவி, பிபிசி பாதுகாப்புச் செய்தியாளர் & பிபிசி வெரிஃபை 30 ஆகஸ்ட் 2024, 02:23 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் மேற்கத்தியத் தொழில்நுட்பமும் நிதியும் ரஷ்யாவிற்குள் நூற்றுக்கணக்கான தொலைதூரத் தாக்குதல்களை நடத்த யுக்ரேனுக்கு உதவி வருகின்றன. மோதல்கள் தீவிரமடையும் என்ற அச்சத்தால், மேற்கத்திய நாடுகளால் வழங்கப்பட்ட வெடிமருந்துகளைப் பயன்படுத்த யுக்ரேனுக்கு நேட்டோ நட்பு நாடுகள் இன்னும் அனுமதி வ…

  3. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2050ம் ஆண்டில் 10-ல் ஒரு நபருக்கு இது போன்ற கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளது உலக சுகாதார நிறுவனம் 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று, 2050-ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் 250 கோடி நபர்கள் ஏதோ ஒரு வகையில் கேட்கும் திறனில் பாதிப்பைச் சந்திப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. 2050-ஆம் ஆண்டில் 10-இல் ஒரு நபருக்கு கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். தற்போதைய சூழலில் உலக மக்கள் தொகையில் 5% நபர்களுக்கு, அதாவது 43 கோடி மக்கள் கேட்கும் திறனில் பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர். இதில் 3.4…

  4. ரஷ்யா – உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. உக்ரைனின் மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்ய ராணுவம் நேற்று மிகப்பெரிய தாக்குதல் நடத்தியது. இதனால், உக்ரைனின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 2022 பெப்ரவரி முதல் போர் நடந்து வருகிறது. கடந்த 6-ம் திகதி ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் 1,263 சதுர கி.மீ. பரப்பளவை உக்ரைன் ராணுவம் கைப்பற்றியது. அப்போதுமுதல் இரு நாடுகள் இடையே போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்த சூழலில், ரஷ்யாவின் சரடோவ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மீது நேற்று அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சரடோவ் நகரில் 38 மாடிகள் கொண்ட ‘வோல்கா ஸ்கை’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் 28-வது மாடியில…

  5. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 29 ஆகஸ்ட் 2024, 03:09 GMT புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர் எறும்புகளின் வாழ்வியல், அவற்றின் சமூகக் கட்டமைப்பு மனிதர்களுக்கு நிகரானவை என்பதை ஆய்வாளர்கள் பல தருணங்களில் உறுதி செய்துள்ளனர். அவைதம் சகோதரிகளுடன் கொண்டிருக்கும் உறவு, பாசப் பிணைப்பு ஆகியவை பல தருணங்களில் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அப்படிப்பட்ட ஒரு கண்டுபிடிப்பு சமீபத்தில் கிடைத்துள்ளது. ஈரப்பதம் மிக்க கட்டைகளில் கூடமைத்து வாழும் கட்டெறும்பு வகையைச் சேர்ந்த எறும்பு வகை ஒன்றில், ஃப்ளோரிடாவை சேர்ந்த விஞ்ஞானிகள் ஓர் அதிசயமான பழக்கத…

  6. பட மூலாதாரம்,BBC படக்குறிப்பு, சீமேநே எனும் ஒரு நாடோடி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் மார்டினா கட்டுரை தகவல் எழுதியவர், அலெகான்ட்ரோ மிலன் வலென்சியா பதவி, பிபிசி நியூஸ் முண்டோ 27 ஆகஸ்ட் 2024 பொலிவியக் காட்டில் மார்டினா காஞ்சி நேட் நடந்து செல்லும்போது, சிவப்பு வண்ணத்துப்பூச்சிகள் அவரைச் சுற்றி பறக்கின்றன. அவரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் எங்கள் குழு அவரை மெதுவாக நடக்க கோரிக்கை வைத்தது. அவருடைய அடையாள அட்டை அவருக்கு 84 வயது என்று சொல்கிறது. ஆனால் 10 நிமிடங்களுக்குள், மூன்று யூக்கா (Yucca) மரங்களின் வேர்களில் இருந்து கிழங்குகளைப் பிரித்தெடுக்க அவற்றை தோண்டி எடுக்கிறார். தனது கத்தியால் இரண்டே வெட…

  7. 29 AUG, 2024 | 11:33 AM இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கி பிரயோகத்தினால் தனது வாகனம் சேதமடைந்ததை தொடர்ந்து காசாவிற்கான மனிதாபிமான நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. இவ்வாறான தாக்குதலில் தனது வாகனம் சிக்கியது இதுவே முதல்தடவை என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் சோதனை சாவடிக்கு அருகில் தனது வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ள உலக உணவு திட்டத்தின் தலைவர் சின்டி மக்கெய்ன் காசாவில் தனது அமைப்பின் பணியாளர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ள தொடர்ச்சியான…

  8. உக்ரைனில் (Ukraine) மட்டுமன்றி பிரித்தானிய நிலைகள் மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் என ரஷ்யாவின் (Russia) பாதுகாப்பு அமைச்சர் வெளிப்படையாக கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். பிரித்தானியா (UK) வழங்கியுள்ள ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்தினால், ரஷ்யா கடுமையான தாக்குதலில் இறங்கும் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், குறித்த அறிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் இரு நாடுகளும் நேரடியாக மோதும் நிலை ஏற்படலாம் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது. பிரித்தானியா வழங்கியுள்ள ஆயுதங்கள் இதற்கான காரணம், பிரித்தானியா பல நவீன ரக ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கியுள்ள நிலையில், அமெரிக்கா வழங…

  9. சூடானில் கனமழை – 30 பேர் பலி. சூடானில் பெய்து வரும் பலத்த மழையினால் நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு உடைந்துள்ளதையடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 20 கிராமங்கள் பாதிக்கபட்டுள்ளதுடன் 30 பேர் உயிரிழந்துள்ளர். இந்த சம்பவத்தில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. குறித்த பகுதி அடையாளம் காண முடியாத அளவிற்கு அழிந்துள்ளதோடு மின்சாரம் மற்றும் தண்ணீர் குழாய்கள் சேதமடைந்துள்ளன. 150 முதல் 200 பேர் வரை காணமல் போயுள்ளதுடன் ஏறக்குறைய 50,000 பேரின் வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2024/1397201

  10. அமெரிக்க தேர்தல் வரலாற்றில் கமலா ஹாரிஸ் சாதனை! அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுவதுடன், குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதலாவது கறுப்பின மற்றும் ஆசிய அமெரிக்க பெண் என்ற வரலாற்று சாதனையை கமலா ஹாரிஸ் படைத்துள்ளார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் கமலா ஹாரிஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதுடன், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அவர் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்த நிலையில் கமலா ஹாரிஸ் பி…

  11. அமெரிக்காவில் உள்ள தலைவர்கள் தூங்கிக் கொண்டு இருப்பதால் மூன்றாம் உலகப்போர் மூள வாய்ப்பு உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையே சண்டை தீவிரமடைந்துள்ள நிலையில், இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது; அமெரிக்காவுக்காக மத்திய கிழக்கு நாடுகளில் பேச்சுவார்த்தை நடத்துவது யார்? எல்லா இடங்களிலும் குண்டுகள் வீசப்படுகின்றன. ஜனநாயக கட்சியினரால் வெளியேற்றப்பட்ட ஜோ பைடன் கலிபோர்னியாவில் உள்ள கடற்கரையில் தூங்குகிறார். கமலா ஹாரிஸ், துணை ஜனாதிபதி வேட்பாளருடன் வாகனப் பேரணி நடத்தி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இச்சூழல் மூன்றாம் உலகப்போரை நோக்கி …

  12. பட மூலாதாரம்,EPA கட்டுரை தகவல் எழுதியவர், ஜரோஸ்லாவ் லூகீவ் பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவுவதற்கான நகர்வுகளைக் கண்டறிந்த நிலையில், லெபனானில் உள்ள ஹெஸ்புலா இலக்குகள் மீது தங்கள் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. “இந்த அச்சுறுத்தல்களைக் களைவதற்கான தற்காப்பு நடவடிக்கையாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் பயங்கரவாத இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக” இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார். இரானால் ஆதரவளிக்கப்படும் ஷியா முஸ்லிம் குழுவான ஹெஸ்புலா இயங்கும் பகுதிகளி…

  13. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,நூற்றுக்கானக்கானோர் குரங்கம்மை நோயால் உயிரிழந்துள்ளனர் கட்டுரை தகவல் எழுதியவர், ஜேம்ஸ் கல்லாகர் & சிமி ஜோலாசோ பதவி, பிபிசி செய்திகள் 15 ஆகஸ்ட் 2024, 10:31 GMT புதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர் குரங்கம்மை (எம்-பாக்ஸ்) நோய்த்தொற்றை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. எம்-பாக்ஸ் அல்லது குரங்கம்மை, கொடிய நோய்த்தொற்று வகையைச் சேர்ந்தது. இது முதலில் காங்கோ நாட்டில் வேகமாகப் பரவியதால் சுமார் 450 நபர்கள் உயிரிழந்தனர். தற்போது, இந்த நோய்த்தொற்று மத்திய மற்றும் கிழக்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பரவி வரு…

  14. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ட்யூரின் சவக்கோடியில் உள்ள தாடி வைத்த மனிதரின் உருவம் கட்டுரை தகவல் எழுதியவர், ஜெர்மி ஹோவெல் பதவி, பிபிசி செய்தியாளர் 24 ஆகஸ்ட் 2024, 13:19 GMT புதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர் இயேசுவின் உடலில் போர்த்தப்பட்ட துணியாக கருதப்படும் ட்யூரின் சவக்கோடி (Turin Shroud) இயேசுவின் காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அவர்களின் ஆய்வு முடிவு, முதலில் 2022 இல் வெளியிடப்பட்டது. ட்யூரின் சவக்கோடி இடைக்காலத்தில் உருவாக்கப்பட்டது என்றும் இயேசு காலத்தை சேர்ந்தது அல்ல என்றும் பரவலாக சொல்லப்படும் கருத்துகளை…

  15. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதி மற்றும் யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி 2 மணி நேரங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோதி இந்த வாரம் யுக்ரேனுக்கு அதிகாரபூர்வ பயணமாகச் செல்ல இருக்கிறார். இந்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு செய்தியாளர் சந்திப்பில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. "யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோதி ஆகஸ்ட் 23 வெள்ளிக்கிழமை யுக்ரேனுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வார்" என்று வெளியுறவு அமைச்சக செயலர் (மேற்கு), தன்மய் லால் திங்களன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். "இதுவொரு முக்கியமான மற்றும் வரலாற்றுப் பயணம். ஏனெனில் நமது தூதாண்மை உறவுகள் ஏற்படுத்…

  16. 10 மணி நேர ரயில் பயணம் – உக்ரைன் , போலந்து செல்லும் மோடி இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுப் பயணமாக இன்று காலை டெல்லியில் இருந்து போலந்துக்கு விஜயம் செய்துள்ளார். சுமார் 45 வருடங்களுக்கு முன் இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய் போலந்து சென்றிருந்தார். அதன்பின் போலந்து செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார். போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு உக்ரைன செல்ல இருக்கிறார். உக்ரைனுக்கு சுமார் 10 மணி ரெயில் பயணம் மூலமாக போலந்தில் இருந்து செல்லவிருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் பிரதமர் மற்றும் அதிபரை சந்தித்து பேசும் மோடி, வர்சாவில் இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து உரையாடவுள்ளார். போலந்து- இந்தியா தூதரக உறவின் 70 ஆண்டுகள் ந…

  17. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சௌதி அரேபியாவின் முதல் மன்னர் குறைந்தது 42 மகன்களுக்கு தந்தையாக இருந்தார். இளவரசர் முகமது பின் சல்மானின் தந்தை சல்மானும் அதில் ஒருவர். கட்டுரை தகவல் எழுதியவர், ஜோனாதன் ரக்மேன் பதவி, ஒளிபரப்பாளர், எழுத்தாளர் 20 ஆகஸ்ட் 2024 புதுப்பிக்கப்பட்டது 21 ஆகஸ்ட் 2024 ஜனவரி 2015, சௌதி அரேபியாவின் 90 வயதான மன்னர் அப்துல்லா மருத்துவமனையில் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருந்தார். அவரது ஒன்றுவிட்ட சகோதரர் சல்மான், மன்னராகப் போகிறார். சல்மானுக்கு மிகவும் நெருக்கமான மகன், முகமது பின் சல்மான், அதிகாரத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தார். இளவரசர் முகமது பின் சல்மான் '…

  18. 19 AUG, 2024 | 05:53 PM இத்தாலியின் சிசிலி தீவில் ஏற்பட்ட சூறாவளியில் பிரித்தானியக் கொடியை ஏந்தி பயணித்த 180 அடி உயரமுடைய சொகுசு படகு ஒன்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த படகில் பிரித்தானியா, நியூசிலாந்து, அமெரிக்கா , இலங்கை, அயர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 22 பேர் பயணித்துள்ளனர். இந்த விபத்தின் போது, படகில் பயணித்த நான்கு பிரித்தானியர்கள் மற்றும் இரண்டு அமெரிக்கர்கள் உட்பட ஏழு பேர் காணாமல் போயுள்ளனர். படகிலிருந்த பயணிகளைக் காப்பாற்றும் பணிகளில் கடலோர பாதுகாப்புப் படையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் இணைந்து செயற்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/191474

  19. காசா போர் நிறுத்த முயற்சியில் முன்னேற்றம் இன்றி அமெரிக்கா திரும்புகிறார் பிளிங்கன் -இஸ்ரேலின் தாக்குதல்களில் மேலும் பல பலஸ்தீனர்கள் பலி sachinthaAugust 22, 2024 காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு தவறிய நிலையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் நேற்று (21) பிராந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். பரந்த அளவிலான போர் ஒன்றை தவிர்ப்பதற்கான கடைசி வாய்ப்பாக இது உள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார். எனினும் காசாவில் இஸ்ரேல் நேற்றும் உக்கிர தாக்குதல்களை நடத்தியதோடு கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் முற்றுகையில் இருக்கும் அந்தப் பகுதியில் மேலும் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் முன்வைக்கப்பட்டி…

  20. Published By: DIGITAL DESK 3 22 AUG, 2024 | 10:21 AM போஸ்னியா நாட்டின் மேற்கே சன்ஸ்கி மோஸ்ட் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் பணியாளர் ஒருவர் புதன்கிழமை (21) துப்பாக்கி சூடு நடத்தியதில் பாடசாலை அதிபர், செயலாளர் மற்றும் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியை உயிரிழந்தனர். துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் தன்னை தானே சுட்டுக் கொண்டுள்ளார். நெஞ்சில் காயம் பட்ட அவரை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். பாடசாலையில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் யாரும் பாடசாலைக்கு வரவில்லை. எனினும், பரீட்சை எழுதுவதற்காக சில மாணவர்கள் வந்துள்ளனர். இந்த சம்பவத்தில் பாடசாலை மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸ் திணைக்கள ப…

  21. Published By: DIGITAL DESK 3 21 AUG, 2024 | 03:30 PM பிரேசிலில் அமேசான் காட்டுப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதால் ரொண்டோனியா மாநிலத்திலுள்ள போர்டோ வெல்ஹோவில் சூரிய வெளிச்சத்தை கூட காணமுடியாத அளவிற்கு அடர்த்தியான புகை சூழ்ந்துள்ளது. இந்நிலையில், புகை சூழ்ந்துள்ளமையினால் 460,000 பேர் வசிக்கும் பொலிவியாவின் எல்லைக்கு அருகிலுள்ள நகரத்திலுள்ள 30 வயதுடைய ஆசிரியர் தயானே மோரேஸ், "நாங்கள் சுவாசிக்க சிரமப்படுகிறோம்" என்று கூறியுள்ளார். போர்டோ வெல்ஹோவில் செவ்வாய்க்கிழமை (20) பிஎம்2.5 எனப்படும் புற்றுநோயை உண்டாக்கும் நுண்துகள்களின் செறிவு ஒரு கன மீட்டர் காற்றில் 56.5 மைக்ரோகிராம்களாக அதிகரித்துள்ளது. உலக சுகாதார ஸ்…

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புதிய தொழில்நுட்பங்களின் வருகை ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் ஓர் உத்வேகத்தை அளிக்கும். கட்டுரை தகவல் எழுதியவர், ஓலெக் கார்பியாக் பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தொழிலாளர் சந்தை முன்னெப்போதையும்விட வேகமாக மாறி வருகிறது. இப்போது நடைமுறையில் இருக்கும் பல வேலைகள் நாளை இல்லாமல் போகலாம். உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) சமீபத்திய ஆய்வுப்படி, தொழிலாளர் சந்தையில் இரண்டு முக்கியக் காரணிகள் மாற்றங்களுக்கு வழிவகுக்கின்றன. புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தானியங்கி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பசுமைப் பொருளாதாரம் ம…

  23. ஒரு நாட்டின் தலைநகரமே கடலில் மூழ்கும் பேரழிவு இந்தோனேசியா அதன் தலைநகரான ஜகார்த்தாவை கைவிட்டு, போர்னியாவை (Borneo) தலைநகராக்கும் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டி வருகிறது ஜாவா கடலில் ஜகார்த்தா மூழ்கும் அச்சுறுத்தல் இருப்பதாலும் அடிக்கடி இடம்பெறும் நிலநடுக்கங்கள் காரணமாகவும் தலைநகரை மாற்றும் பணிகளை இந்தோனேசியா ஆரம்பித்துள்ளது. இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ ( Joko Widodo), நெரிசல், காற்று மாசால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஜகார்த்தாவிற்கு நிலநடுக்கம் மற்றும் கடலில் மூழ்கும் அபாயங்களும் காத்திருப்பதால், விரைவில் தலைநகர் என்ற அந்தஸ்திலிருந்து ஜகார்த்தா ஓய்வுபெறும் என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியா 2022ஆம் ஆ…

  24. பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், ஜரோஸ்லாவ் லுகிவ் & சோபியா ஃபெரீரா சாண்டோஸ் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் யுக்ரேன் படைகள் ரஷ்ய எல்லைக்கு புகுந்து தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியான நிலையில், யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முதல்முறையாக அதனை ஒப்புக்கொண்டுள்ளார். "ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் (Kursk) பகுதிக்குள் தனது ராணுவம் எல்லை தாண்டிய தாக்குதலை நடத்தி வருகிறது” என்று அவர் கூறியுள்ளார். சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) மாலை வெளியிட்ட வீடியோவில், யுக்ரேனிய ராணுவம் ஆக்கிரமிப்பாளரின் நிலத்தில் மோதலை முன்னெடுத்து வருவதாக ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். யுக்ரேன் செவ்வாயன்று …

  25. பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, இதுவரை இரு தரப்புக்கும் இடையே ஒரே ஒரு உடன்படிக்கை மட்டும் எட்டப்பட்டுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், டாம் பேட்மேன், ஜேம்ஸ் கிரிகோரி பதவி, பிபிசி நியூஸ் 19 ஆகஸ்ட் 2024 “காஸாவில், போர்நிறுத்தம் கொண்டுவருவதற்கும் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான ஒப்பந்தத்திற்கும் இதுவே சிறந்த, ஒருவேளை கடைசி வாய்ப்பாக கூட இருக்கலாம்" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார். அக்டோபர் மாதம் போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் பகுதிக்கு ஒன்பதாவது முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார் பிளிங்கன். திங்களன்று இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக் உடனான சந்திப்பின் போது, பிளிங்கன் தன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.