உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26883 topics in this forum
-
போர்க்கப்பல்களுக்காக பாகிஸ்தான் துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்தது சீனா APR 16, 2015 | 9:03by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் புதிய அரசாங்கம் சீன நீர்மூழ்கிக் கப்பல்களை கொழும்புத் துறைமுகத்துக்குள் அனுமதிக்க மறுத்து விட்டதையடுத்து, இந்தியப் பெருங்கடலில், தமது போர்க்கப்பல்களின் பராமரிப்பு மற்றும் விநியோகத் தேவைகளுக்காக பாகிஸ்தானின் குவடார் துறைமுகத்தை சீனா குத்தகைக்கு எடுத்துள்ளது. குவடார் துறைமுகத்தை சீன 40 ஆண்டு குத்தகைக்கு பாகிஸ்தானிடம் இருந்து பெற்றிருக்கிறது. இதுகுறித்து சீனாவின் குளோபல் ரைம் நாளிதழக்கு கருத்து வெளியிட்டுள்ள, அனைத்துலக கற்கைகளுக்கான சங்காய் நிறுவகத்தின், தெற்காசிய கற்கைகள் பிரிவின் பணிப்பாளர், சாவோ கன்செங், “இந்தியப் பெருங்கடலில் சீனாவின் க…
-
- 2 replies
- 532 views
-
-
சென்னையில் பிறந்து தனது 16வது வயதில் அமெரிக்காவுக்கு சென்றவரான ராஜ ராஜேஸ்வரி, நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். தற்போது 43 வயதாகும் ராஜ ராஜேஸ்வரி, ரிச்மாண்ட் கவுண்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் உதவி வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அவரை நியூயார்க் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ரிச்மாண்ட் கவுண்டி மேயரான பில் டி பிளாசியோ பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் நியூயார்க் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக ராஜேஸ்வரி பொறுப்பேற்றார். நீதிபதியாக தான் பொறுப்பேற்றது குறித்து அவர் கூறுகையில், இது கனவு போல தோன்றுகிறது. நான் நினைத்ததை விட, மிக அதிகமான பதவி கிடைத்துள்ளது என்றார். இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து…
-
- 1 reply
- 328 views
-
-
தீவிரவாதத்திற்கு ஏதிராக உலகநாடுகள் ஒன்றுபட்டு போரிட ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கனடாவில் வலியுறுத்தி உள்ளார். பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி நேற்று கனடா சென்றார். கடந்த 1973–ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சென்ற பிறகு, அங்கு செல்லும் இந்திய பிரதமர் மோடியே ஆவார். ஒட்டாவாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அவரது விமானம் தரை இறங்கியது. விமான நிலையத்தில் அவரை கனடா ராணுவ மந்திரி ஜேசன் கென்னடி, சர்வதேச வர்த்தக விவகாரங்களுக்கான மந்திரி எட் பாஸ்ட், கனடாவுக்கான இந்திய தூதர் விஷ்ணு பிரகாஷ் ஆகியோர் வரவேற்றனர். ஏராளமான இந்தியர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், கனடா பிரதமர் ஸ்…
-
- 0 replies
- 207 views
-
-
நைரோபி: உலகின் கடைசி வெள்ளை நிற ஆண் காண்டாமிருகத்தை வேட்டைக்காரர்களிடமிருந்து காப்பாற்ற, அதற்கு 24 மணி நேர கமாண்டோ பாதுகாப்பு வழங்கி பாதுகாத்து வருகிறது கென்யா. விலை மதிப்பு மிக்க அவற்றின் கொம்புகளுக்காக வெள்ளைக் காண்டாமிருகங்கள் சட்டவிரோதமான வகையில் வேட்டையாடிக் கொல்லப் படுகின்றன. இதனால், தற்போது அந்த இனமே அழிவின் விளிம்பில் உள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மிருகக்காட்சி சாலையில் இருந்த ஆங்கலீஃபூ என்ற ஆண் வெள்ளை காண்டாமிருகம் ஒன்று முதுமை காரணமாக 44 வயதில் உயிரிழந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது, உலகில் வெள்ளை காண்டாமிருகங்கள் மொத்தத்தில் ஐந்து மட்டுமே எஞ்சியுள்ளன. கென்யாவில் மூன்று... இவற்றில் ஒன்று கலிஃபோர்னியாவிலும், மற்றொன்று செக் குடியரசின் மிருகக்காட…
-
- 3 replies
- 553 views
-
-
பயங்கரவாத நாடுகள் பட்டியலில் இருந்து கியூபாவை நீக்குவதாக அமெரிக்கா அறிவிப்பு! [Wednesday 2015-04-15 20:00] கியூபாவை பயங்கரவாத நாடுகள் பட்டியலில் இருந்து நீக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்த நேற்று இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். கியூபாவிற்றும் அமெரிக்காவுக்கும் இடையில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பகை நிலவி வந்தது. எனினும் கடந்த வாரம் அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி கியூப உயர் மட்டத் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். அதனை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும் கியூப தலைவர் ராகுஸ் கெஸ்ரோவிற்கும் இடையிலான நேரடி சந்திப்பு இடம்பெற்றது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்…
-
- 2 replies
- 362 views
-
-
வன்கூவர்- இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி இந்த வாரம் கனடாவிற்கு விஜயம் செய்கின்றார். இவரின் வருகையை இவரது ஆதரவாளர்களும் எதிரிகளும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக கூறப்படுகின்றது. 42-வருடங்களில் முதல் தடவையாக ஒரு பெரிய ஜனநாயகத்தின் தலைவர் கனடா வருகின்றார். செவ்வாய்கிழமை ரொறொன்ரோவில் உள்ள Ricoh Coliseum- த்தில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் 1985-ல் எயர் இந்திய குண்டு வெடிப்பில் பலியான 331-பேர்களின் நினைவுச்சின்னங்களிற்கும் சென்று மரியாதை செலுத்துவார். 2002-ல் குஜராத்தில் மரணமடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுபான்மை முஸ்லீம்கள் மற்றும் சீக்கியரின் மரணத்தில் மோடியின் பங்கு குறித்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சீக்கியர்களின் சார்…
-
- 9 replies
- 563 views
-
-
கனடா- ஒன்ராறியோவின் புதிய பாலியல் கல்வி பாடத்திட்டத்தினால் கோபமடைந்த ஆயிரக்கணக்கான பெற்றோர் செவ்வாய்கிழமை குயின்ஸ் பார்க்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் சுலோக அட்டைகளை தாங்கிய வண்ணம் காணப்பட்டனர். மாகாண பாரளுமன்ற பிசி உறுப்பினரான ஜக் மக்லரனும் பேரணியில் கலந்து கொண்டார். புதிய திட்டத்தின் பிரகாரம் 3-ம் வகுப்பு மாணவர்கள் ஒரே- பாலின உறவுகள் கல்வியை பெறுவர். 4-ம் வகுப்பு மற்றும் மேற்பட்ட வகுப்பு மாணவர்கள் ஆன்லைனில் கொடுமைப் படுத்துதலின் ஆபத்துக்கள் குறித்தும் 9-ம் வகுப்பில் பாலியல் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் செய்திகளை செல் பேசி மூலம் அனுப்புவதன் ஆபத்துக்கள் குறித்தும் படிப்பார்கள் என கூறப்படுகின்றது. பூப்படைதல் பற்றிய பாடங்கள் 5-ம் வகுப்பில் இர…
-
- 1 reply
- 218 views
-
-
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடற்கரை கழிமுகத்தில் ஓர் அழகான வீடு அமைந்திருக்கிறது. மரங்களை வைத்து நீரின் மேல் வீடு கட்டியிருக்கிறார்கள். அனைத்து வசதிகளும் கொண்ட பெரிய வீடு, பசுமைக்குடில்கள், கலங்கரை விளக்கம், விளையாட்டுத் திடல் எல்லாம் இங்கே இருக்கிறது. சூரிய சக்தியைக் கொண்டு தேவையான மின்சாரத்தைத் தயாரித்துக்கொள்கிறார்கள். மழை நாட்களில் தண்ணீரைச் சேமித்துக்கொள்கிறார்கள். பசுமைக்குடில்கள் மூலம் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்களை விளைவித்துக்கொள்கிறார்கள். வீட்டின் உரிமையாளர்கள் கிங், ஆடம்ஸ் இருவரும் நகர நெருக்கடி பிடிக்காமல், 20 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே வந்து குடியேறிவிட்டனர். குழந்தைகளுடன் சேர்த்து நால்வர் மட்டுமே இந்தப் பெரிய வீட்டில் வசிக்…
-
- 0 replies
- 249 views
-
-
யு.எஸ்.-வாசிங்டன் நெடுஞ்சாலையில் இருந்து விழுந்த கான்கிரீட் பலகையால் இளம் தம்பதியர் மற்றும் அவர்களது எட்டுமாத குழந்தை மூவரும் கொல்லப்பட்ட துயர சம்பவம் நடந்துள்ளது. இவர்கள் அண்மையில் தங்கள் ஐந்தாவது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இவர்கள் இருவரும் கிறிஸ்தவ சமய இளைஞர்கள் பாதிரியார்களாவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜோஷ் மற்றும் வனெஸ்சா ஆகிய இருவரும் தங்கள் 20-ன் மத்திய வயதுடையவர்கள். தங்கள் பிக்அப் டிரக்கில் சென்றுகொண்டிருந்த போது ராக்கோமா பகுதியில் பொனி லேக் வழியாக பயணித்துக் கொண்டிருந்த போது பாரிய கான்கிரீட் பலகை டிரக் மீது விழுந்து இவர்களை நெரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர்களது எட்டுமாத மகன் ஹட்சனும் பின் இருக்கையில் இருந்துள்ளான். மூவரும் கொல்லப்பட்டனர். - S…
-
- 0 replies
- 229 views
-
-
கனடா- வன்கூவரில் இருந்து பிறின்ஸ் ஜோர்ஜ் நோக்கி இரு விமானிகளுடன் சென்று கொண்டிருந்த எயர் விமான் 66 விமானம் திங்கள்கிழமை காலை காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இது வரை விமானம் கண்டு பிடிக்கப்படவில்லை. பசிபிக் நேரப்படி காலை 6.43-மணிக்கு வன்கூவர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் காலை 8மணிக்கு பிறின்ஸ் ஜோர்ஜ் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியது. காலை 7மணியளவில் இந்த சரக்கு விமானம் ரேடார் தொடர்பை இழந்து விட்டதாக நவ் கனடாவின் கம்லூப்ஸ் விமான தகவல் மையம் தெரிவித்துள்ளது. கூட்டு மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைந்து விமானத்தை தேடும் முயற்சியில் வன்கூவர் மற்றும் பிறின்ஸ் ஜோர்ஜ் விமான நிலைய அதிகாரிகளும் விமானத்தை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள…
-
- 0 replies
- 306 views
-
-
கடந்த 2004-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி தாக்குதல் போன்று அமெரிக்கா பற்றிஎரியும் என்று மிரட்டல் விடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் வீடியோ வெளியிட்டு உள்ளனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. ஈராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தனிநாடு உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து நாசவேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். தீவிரவாதிகளை குறி வைத்து அமெரிக்கா போர் விமானங்கள் மூலமாக வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. உலகில் உள்ள அனைத்து அமெரிக்கர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று மிரட்டல் விடுத்து ஐ.எஸ். தீவிரவாத அமைப்பால் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது என்று ட…
-
- 0 replies
- 267 views
-
-
இந்தியாவிற்கு செல்ல விரும்பும் இலங்கை பயணிகள் விமான நிலையத்தில் வைத்தே இந்திய விசாவினைப் பெற்றுக்கொள்ள முடியும். கடந்த மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயத்தின் போது விசா தொடர்பாக வழங்கிய உறுதிமொழிக்கு அமைய இந்த சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்தியா 43 நாடுகளுக்கு ‘ஒன் அரைவல் விசா’ அதாவது விமான நிலையத்தில் வீசா பெற்றுக்கொள்வதற்கான அனுமதியை வழங்கியிருந்தது. அதனடிப்படையில் இலங்கை 44 ஆவது நாடாக அந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் புதுடில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், கொச்சின் மற்றும் கோவா ஆகிய விமான நிலையங்களில் வைத்து இலங்கையர்கள் 30 நாட்களுக்கு விசா பெற்றுக்கொள்ள முடியும். இந்த சந்தர்ப்…
-
- 4 replies
- 778 views
-
-
காங்கிரஸ் எம்.எல்.ஏ. ருமிநாத்| கோப்புப் படம். கார் கொள்ளை கும்பலுடன் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட அசாம் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. ருமிநாத் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர் கூறும்போது, "காங்கிரஸ் எம்.எல்.ஏ. ருமிநாத் இன்று காலை 7 மணியளவில் எம்.எல்.ஏ. விடுதியில் இருந்து கைது செய்யப்பட்டார். கார் கொள்ளை கும்பலுடன் தொடர்பு இருப்பதாக அவர் மீது புகார் வந்தது. அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதலில் அவரை திஸ்பூர் காவல் நிலையத்த்துக்கு கொண்டு சென்றோம். விரைவில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். ருமிநாத் மீது கிரிமினல் சதிதிட்டம், ஏமாற்றுதல் உள்ளிட்ட குற்றங்களின் கீ…
-
- 4 replies
- 632 views
-
-
பிரான்ஸ் நிறுவனத்திடமிருந்து 126 போர்விமானங்கள் வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படலாம் என தெரியவந்துள்ளது. இந்திய அரசால் கடந்த 2012-ம் ஆண்டு நடுத்தர வகையை சேர்ந்த 126 போர்விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. இதில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தாஸ்சால்ட் விமான தயாரிப்பு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 25 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இந்தநிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புதுறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் புதிதாக 36 ராபேல் ஜெட் போர் விமானங்கள் பிரான்சிடமிருந்து வாங்கப்படவிருப்பதால், 126 போர்விமானங்கள் வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படலாம் என தெரிவித்துள்ளார். மேலும் இனிமேல் ராப…
-
- 1 reply
- 364 views
-
-
ஆர்மீனிய கத்தோலிக்கருடன் பாப்பரசர் ஒட்டமன் துருக்கிய ஆட்சியில் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டமைதான் இருபதாம் நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை என்று பாப்பரஸர் பிரான்ஸிஸ் பகிரங்கமாக விபரித்துள்ளார். அந்தப் படுகொலையின் நூறாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையிலான பூசை வழிபாடு ஒன்றில் உரையாற்றிய பாப்பரசர், ''நடந்த தீயதை மறுதலித்தல், காயங்களுக்கு மருந்திட மறுத்தலுக்கு சமனாகும்'' என்று கூறினார். இரு வருடங்களுக்கு முன்னதாக இந்த சம்பவத்தை பாப்பரசர் இனப்படுகொலை என்று கூறியபோது, துருக்கி அதனை கடுமையாக எதிர்த்தது. முதலாம் உலகப் போரால் தூண்டப்பட்ட, உள்நாட்டு மோதல்களின் ஒரு பகுதியே இந்த மரணங்கள் என்று அது கூறியது. ஒட்டமன் படைகளால், திட்டமிட்ட வகையில், தமது மக்கள் 15 லட்சம் பேர்வ…
-
- 3 replies
- 402 views
-
-
ஒன்ராறியோவின் தென்மேற்கு பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஒட்டாவாவில் உள்ள பாராளுமன்ற கட்டிடங்களை தகர்க்க போவதாக பயமுறுத்தியதை தொடர்ந்து பொலிசார் அந்நபரை கைது செய்துள்ளனர். இந்த நபர் பாராளுமன்ற நூலகத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராளுமன்றத்திற்கெதிரான “புரட்சியின்” ஒரு பகுதியாக பாராளுமன்றத்தை தகர்க்கப் போவதாக மிரட்டியுள்ளார். 49-வயதுடைய குறிப்பிட்ட நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். இவர் மீது ஏமாற்றும் தன்மை கொண்ட பயங்கரவாத நடவடிக்கை மற்றும் பயமுறுத்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இது குறித்த விசாரனை தொடர்வதாக பொலிசார் தெரிவித்தனர். - See more at: http://www.canadamirror.com/canada/40944.html#sthash.afV29SpT.dpuf
-
- 0 replies
- 205 views
-
-
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 3 நாடுகளுக்கு 9 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக, பிரான்ஸ் நாட்டில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். கடந்த 9-ம் தேதி இரவு பிரான்சுக்கு போய்ச் சேர்ந்த மோடிக்கு நேற்று முன்தினம் எலிசி அரண்மனையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரெஞ்சு வீரர்களின் ராணுவ அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், பிரான்ஸ் பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று, டவ்லவுசில் உள்ள பிரெஞ்சு விண்வெளி நிறுவனத்தை அவர் பார்வையிட்டார். அப்போது தேசிய விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இந்திய மாணவர்கள் “மோடி”…”மோடி” என்று மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தபடி பிரதமர் நரேந்திர மோடியை சூழ்ந்து கொண்டனர். மாணவர்களின் விருப்பத்திற்கிணங்க அவர்களுடன் புன்ன…
-
- 0 replies
- 181 views
-
-
அமெரிக்காவின் வோஷிங்டன் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, U.S.Capital கட்டிடத்தைச் சூழவுள்ள பகுதிகள் மூடப்பட்டுள்ளன அமெரிக்காவின் வோஷிங்டன் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, U.S.Capitol கட்டிடத்தைச் சூழவுள்ள பகுதிகள் மூடப்பட்டுள்ளன. இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு ஒரு தற்கொலையென காவற்துறையினர் அறிவித்திருக்கின்றனர். எனினும் முற்பாதுகாப்பிற்காக அந்தப் பகுதி மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கப்பிற்றல் கட்டிடத்தின் கீழ்ப் பகுதியில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொதி தொடர்பாகவும் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொள்கின்றனர். அமெரிக்க கொங்கிரஸ் இன்று செயற்படாததால், அங்கு பெருமளவிலான உறுப்பினர்கள் இருக்கவ…
-
- 0 replies
- 265 views
-
-
அரசி மார்கெரெத்தே டென்மார்க்கில் வந்து குடியேறியுள்ளவர்கள் முழுமையாக அந்நாட்டு வாழ்க்கைமுறையை உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என நாட்டின் அரசி மார்கெரெத்தே கோரியுள்ளார். குடியேறிகளை வரவேற்கும் கடமை தமது நாட்டுக்கு உள்ளது என்றாலும், அப்படி வருபவர்கள் நாட்டில் பெரும்பான்மையாக உள்ள சமூகத்தினருக்கு ஒவ்வாத விஷயங்களைச் செய்யக் கூடாது எனவும் டென்மார்க் அரசி கூறியுள்ளார். தலைநகர் கோப்பன்ஹேகனிலுள்ள யூத வழிபாட்டு மையத்தில் கருத்துச் சுதந்திரத்தை ஆதரிப்பது தொடர்பிலான ஒரு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு புகுந்த இஸ்லாமியக் குழுவொன்றின் உறுப்பினர், இருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் நடைபெற்று இரண்டு மாதங்கள் ஆன நிலையில் அரசியின் இந்தக் கருத்து வந்துள்ளது. தினசரி பத்திரிகை ஒன்றுக்க…
-
- 0 replies
- 208 views
-
-
அமெரிக்காவை சேர்ந்த பெண் எம்.பி. துள்சி கப்பார்டு (33). இவர் ஹவாய் பகுதியை சேர்ந்தவர். அமெரிக்க வாழ் இந்தியரான இவர் இந்து பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர். இவரும், சினிமா போட்டோகிராபர் ஆப்ரகாம் வில்லியம்ஸ் (29) என்பவரும் காதலித்தனர். இவர்களது திருமணத்துக்கு இரு குடும்பத்தினரும் சம்மதித்தனர். அதை தொடர்ந்து இவர்களது திருமணம் நேற்று முன்தினம் ஹவாயில் உள்ள ஒயாகு நகரில் நடந்தது. இதில் திருமணம் இந்து முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க நடந்ததுதான் சிறப்பு அம்சமாகும். இந்த திருமணத்தில் ஹவாய் பாரம்பரிய பாடல்களும், நடன நிகழ்ச்சிகளும் நடந்தது. சைவ உணவு வகைகளே பரிமாறப்பட்டது. திருமண விழாவில் மணமக்களின் உறவினர், நண்பர்கள் மற்றும் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்ட…
-
- 6 replies
- 968 views
-
-
இந்தோனேஷியாவில் இளைஞர் ஒருவர் விமானத்தின் முன் சக்கர பகுதியில் (லேண்டிங் கியர்) மறைந்து கொண்டு பயணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். சாகசம் செய்ய வேண்டுமென்ற ஆர்வத்தில் இவ்வாறு நடந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இருந்து தலைநகர் ஜகார்த் தாவுக்கு நேற்று சரக்கு விமானம் ஒன்று வந்தது. அது தரையிறங்கிய பிறகு அதன் முன் சக்கர பகுதியில் இருந்து ஒரு இளைஞர் வெளியே வந்தார். இதைப் பார்த்த விமான நிலைய அதிகாரிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். அவரைப் பிடித்து விசாரித்த போது அவரது பெயர் மரியோ ஸ்டீவ் அப்ரிடா(21) என்பது தெரிய வந்தது. விமானம் சுமத்ராவில் கிளம்புவதற்கு முன்பு முன் சக்கர பகுதியில் சென்று மறைந்து கொ…
-
- 2 replies
- 373 views
-
-
A bus collided with a fuel tanker in southern Morocco on Friday, a fiery crash that killed at least 35 people -- most of them children -- state and local media reported. The accident caused a fire that hollowed out the bus, leaving little more than its frame. Debris scattered across the road, while smoke rose into the sky, videos posted to social media show. The dead included athletes traveling for a sporting competition, an eyewitness told 2M TV, a Moroccan state-owned network. After the crash, photos appeared on social media of young, smiling boys in soccer uniforms along with condolence messages such as "May God have mercy on them" and "Oh no, they are so young." …
-
- 0 replies
- 294 views
-
-
என் உறவினர் ஜேர்மன் விமான விபத்தில் பலியாகிவிட்டார்: பொய் சொல்லி ஏமாற்றிய கில்லாடி பெண் [ வெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2015, 07:35.26 மு.ப GMT ] ஜேர்மன் விமான விபத்தில் பலியான பயணியின் உறவினர் என பொய்யாக கூறிக்கொண்டு இலவசமாக விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவர் மீது பொலிசார் வழக்கு தொடர்ந்துள்ளனர் கடந்த மார்ச் மாதம் 24ம் திகதி பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளான ஜேர்மன் விங்க்ஸ் விமானத்தில் பயணம் செய்த 150 பேரும் பலியாகினர். இந்த விபத்து நடந்த இடத்திற்கு பலியானர்களின் உறவினர்கள் சென்று அஞ்சலி செலுத்த, லூஃப்தான்சா(Lufthansa) விமான நிறுவனம் இலவசமான விமான சேவையை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிலையில் விமான விபத்தில் பலியான ஆசிரியரின் உறவினர் எ…
-
- 0 replies
- 338 views
-
-
கனடா எல்லைப்பகுதி சேவைகள் முகமை ரொறொன்ரோ மனிதர் ஒருவருக்கு எதிராக தவறான பிரதிநிதித்துவம் மற்றும் மோசடி சம்பந்தப்பட்ட 88-குற்றச்சாட்டுகளை வைத்துள்ளதாக கனடா எல்லைபகுதி சேவைகள் முகமை தெரிவித்துள்ளது. போலி வேலை வாய்ப்பு சரிபார்ப்பு கடிதங்களை ஆதரவாக வைத்து மத தொழிலாளர்கள் சார்பில் தற்காலிக விசாக்கள் மற்றும் பார்வையாளர்கள் நீடிப்புக்கள் போன்ற பல குடிவரவு விண்ணப்பங்களை சமர்ப்பித்ததாக நாகேஷ்வர் ராவ் யென்டமுறி என்பவர் மீது எல்லைப்புற ஏஜன்சி குற்றம் சுமத்தியுள்ளது. யென்டமுறி கனடா குடிவரவு ஒழுங்குமுறை கவுன்சில் ஆலொசகர்களில் ஒருவராக பணிபுரிந்தார் எனவும் கூறப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆலொசனையை தவறாக பிரதிநிதித்துவம் செய்ததாக 44-குற்றச்சாட்டு…
-
- 0 replies
- 348 views
-
-
(CNN)Geraldine Schultz, 67, and Jacklyn Klosa, 69, were neighbors in the rural Illinois hamlet of Fairdale. On Thursday night, their close-knit community was ravaged by a tornado that shredded homes and ripped trees bare of leaves and most limbs. Only the thickest branches remained. Schultz and Klosa were killed, officials said. http://www.cnn.com/2015/04/10/us/severe-weather/index.html
-
- 1 reply
- 437 views
-