உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26710 topics in this forum
-
வெளிநாட்டு தலைவர்கள் இந்தியா வரும் போது விமான நிலையத்தில் அவர்களை நாட்டின் பிரதமரோ, ஜனாதிபதியோ வரவேற்கும் மரபு கிடையாது. வழியனுப்பும் போது மட்டும் விமான நிலையம் வந்து வழியனுப்புவார்கள். மத்திய மந்திரி ஒருவர்தான் தலைவர்களை வரவேற்க விமான நிலையம் வந்து காத்திருப்பார். அதேபோல் இப்போது ஒபாமாவை வரவேற்கும் வரவேற்பு குழு தலைவராக மத்திய மந்திரி பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் ஒபாமாவை வரவேற்க பாலம் விமான நிலையம் வந்து வரவேற்பறையில் காத்து இருந்தார். ஆனால் திடீர் என்று பிரதமர் நரேந்திர மோடி பாலம் விமான நிலையத்துக்கு வந்தார். ஒபாமா விமானம் தரை இறங்கியதும் மோடி அந்த விமானத்தின் அருகே சென்று நின்று கொண்டார். அங்கிருந்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேசிக் கொண்டு இருந…
-
- 1 reply
- 320 views
-
-
ஜப்பானியப் பிணைக் கைதிகள் சிரியாவில் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள தமது பிரஜைகள் இருவரில் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறும் வீடியோ காட்சிகளைத் தாம் சரிபார்த்து வருவதாக ஜப்பான் கூறியுள்ளது. இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் இவர்களை பிடித்து வைத்துள்ளனர். ஹருணா யாக்காவா என்ற பணயக் கைதி கொல்லப்பட்டதாக அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் மற்றொரு பணயக் கைதியான கென்ஜி கோடோ இன்னும் உயிருடன் இருப்பதாகவும் அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து ஆராய பிரதமர் ஷின்ஸோ அபே தலைமையில் அமைச்சரவை அவசரமாகக் கூட்டப்பட்டது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு ஜப்பான் பணியாது என்று பிரதமர் கூறியுள்ளார். இந்த வீடியோ வெளியிட்டுள்ள கொலையை மன்னிக்க முடியாதது என்று தலைமை…
-
- 2 replies
- 382 views
-
-
இஸ்லாமிய அரச தீவிரவாதிகளுக்கு உதவும் நோக்கில் சிரியாவுக்கு செல்லத் திட்டமிட்டிருந்த ஒரு பெண்ணுக்கு அமெரிக்காவின் டென்வர் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. கடந்த ஆண்டு ஜெர்மனி செல்லும் விமானத்தில் ஏறத் தயாராகிக் கொண்டிருந்த 19 வயதான ஷனான் கனோலியை காவல்துறையினர் கைது செய்தனர். இவர் முஸ்லீமாக மதம் மாறியவர். பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு உதவ சதி புரிந்த குற்றச்சாட்டை கானோலி நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். மேலும், தன்னைக் கைது செய்ததன் மூலம் தனது உயிரை அமெரிக்காவின் மத்தியப் புலனாய்வுத் துறை காப்பாற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சிரியாவிலும், மத்திய கிழக்கின் பிற நாடுகளிலும் நடக்கும் போர்களில் பங்கு பெற மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த ஏராளமான…
-
- 4 replies
- 650 views
-
-
சா பாலோவில் பெய்ய வேண்டிய மழையில் மூன்றில் ஒரு பங்கு மழையே பெய்துள்ளது. பிரேசில் நாட்டில் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகள் மிக மோசமான தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்வதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் இஸபெல்லா டெய்க்ஸெரியா தெரிவித்துள்ளார். 1930க்குப் பிறகு இவ்வளவு மோசமான பஞ்சம் ஏற்பட்டதில்லை என அவர் கூறியுள்ளார். தலைநகர் பிரெசிலியாவில் நடந்த அவசரநிலைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய அவர், சா பாலோ, ரியோ டி ஜெனிரோ, மினா கெரியா ஆகிய மாநிலங்கள் தண்ணீரைச் சேமிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். இந்த தண்ணீர் பிரச்சனை மிகக் கவலையளிப்பதாகவும் அவர் கூறினார். இந்த வறட்சியின் காரணமாக தொழில்துறை, விவசாயம் ஆகியவை பாதிக்கப்படும் என்பதால், பிரேசிலின் பொருளாதாரத்திற்கு இது ப…
-
- 0 replies
- 342 views
-
-
கனடாவில் தனது பெற்றோரைக் கொலை செய்வதற்குத் திட்டமிட்ட குற்றச்சாட்டின் பேரில், டொரன்டோவைச் சேர்ந்த ஜெனிஃபர் பான் (Jennifer Pan) என்ற பெண்ணுக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு நவம்பர் 8ம் திகதி, ஜெனிஃபர் பானின் தாயான, Bieh Ha Pan கொல்லப்பட்டதுடன், அவரது தந்தையான Hann Pan மிகக் கடுமையான காயங்களுக்கு உட்பட்டார். தனது பெற்றோர் மிகவும் கடுமையான முறையில் பிள்ளை வளர்ப்பில் ஈடுபட்டார் என்பதற்காக அவர்களைக் கொலை செய்வதற்கான திட்டத்தை ஜெனிஃபர் பான் மேற்கொண்டார் என அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இவருடன் சேர்த்து இந்தக் குற்றத்திற்கு உதவிய Lenford Crawford, David Mylvaganam மற்றும் ஜெனிஃபர் பானின் பாலியல் நண்பரான Daniel Wong ஆகியோருக்கும் நேற்றயதினம் ஆயுட்கால…
-
- 0 replies
- 338 views
-
-
கனடாவின் எட்மன்டன் நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் தீவிரவாதக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதற்காக அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். Sayfildin Tahir Sharif என்ற இந்த நபர் புறூக்லினிலுள்ள நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்படுகின்றார். வெளிநாடுகளிலுள்ள அமெரிக்கர்களைக் கொலைசெய்ய திட்டமிட்டமை மற்றும் அதற்கான உதவிகளை வழங்கியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் 36 வயதான ஷரிஃப் மீது சுமத்தப்பட்டுள்ளன. ஈராக்கில் பல்வேறு தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய தீவிரவாத அமைப்பொன்றிற்கு இவர் உதவியதாக நியூயோர்க்கிலுள்ள வழக்கறிஞர் அலுவலகம் தெரிவிக்கின்றது. இவர்மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஆயுட்கால சிறைத்தண்டனையை அவர் எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. - See more at: …
-
- 0 replies
- 214 views
-
-
பாகிஸ்தானிலிருந்து டொரன்டோவிற்கு வந்த விமானத்திலிருந்து சுமார் 17 கிலோகிராம் Heroin போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் கண்டுபிடிக்கப்ட்ட இந்தப் போதைப் பொருள் கடத்தல் சம்பவம் மிகவும் முக்கியமானது என கனேடிய எல்லைப்பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 16ம் திகதி விமானத்திலிருந்து பொதிகள் இறக்கப்படும்போது, ஒரு பொதி மிகவும் பாரமாக இருந்ததாகவும் அதனைப் பரிசோதனையிட்டபோது போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அந்தப் பொதிக்குள் ஆறு கற்கள் சுற்றப்பட்ட நிலையில் இருந்ததாகவும் அதில் போதைப் பொருள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.canadamirror.com/canada/37172.html#sthash.aOdH…
-
- 0 replies
- 237 views
-
-
கடன் அட்டைகள் மோசடியில் ஒரு புதிய திருப்பம் கனடாவில் வெளிப்பட்டுள்ளதாக கூட்டாட்சி அரசாங்கத்தின் நிறுவனமான கனடிய மோசடி எதிர்ப்பு மையத்தின் கருத்துப்பிரகாரம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது. ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை திருட முற்படும் இப்புதிய சூழ்ச்சி அதிகாலையில் தூக்கத்தில் இருக்கும் போது மக்களை இலக்கு வைக்கப்படுகின்றதோடு அவர்களை பாதிப்பிற்கும் உள்ளாக்கு கின்றது. இதற்கான தொலைபேசி அழைப்பு அதிகாலை 5-மணிக்கும் 7-மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஆரம்பிக்கப் படுகின்றது என மோசடி எதிர்ப்பு மையத்தை சேர்ந்த டானியல் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். அழைப்பவர் தான் பாதிக்கப்பட்டவரின் வங்கியில் இருந்து அழைப்பதாகவும் இவரின் கடன் அட்டை முந்தய மாலை அங்கீகாரம் இல்லாமல் உபயோகிக்கப்பட்டுள்ளதெனவு…
-
- 0 replies
- 428 views
-
-
ஒபாமா வருகையை முன்னிட்டு, டெல்லியில் 7 அடுக்கு பாதுகாப்பு வளைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள சுமார் 80 ஆயிரம் போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து பணியாற்ற 10 ஆயிரம் துணை நிலை ராணுவ வீரர்கள் டெல்லியில் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி அருகில் உள்ள மாநிலங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் போலீசாரும் தயார் நிலையில் உள்ளனர். ஆக ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். என்றாலும் அமெரிக்க அதிகாரிகள் ஒபாமா பாதுகாப்புக்காக 1600 வீரர்களை அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு அழைத்து வந்துள்ளது. இந்த 1600 வீரர்களும் ஒரு கொசுவை கூட ஒபாமா அருகில் நெருங்க முடியாதபடி பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை செய்துள்ளனர்…
-
- 5 replies
- 514 views
-
-
பிரிட்டிஷ் அரசியல்வாதி ஒருவரின் டுவிட்டர் பதிவு சவுதி மன்னர் அப்துல்லாவின் மரணத்தைத் தொடர்ந்து பிரிட்டனில் அரச கட்டடங்களில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது. வெளிநாட்டு மன்னர் ஒருவர் உயிரிழந்தால் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுவது பிரிட்டனின் வழக்கம். எனினும், சவுதி மன்னரின் மரணத்துக்கு கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டமையை சில அரசியல்வாதிகளும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பத்திரிகைகளும் எதிர்த்துள்ளன. சவுதியில் பெண்களுக்கு எதிரான பாரபட்சமான போக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கு உள்ள மட்டுப்பாடுகளும் மதச் சுதந்திரத்துக்கு உள்ள கட்டுப்பாடுகளும் நிலவுகின்ற சூழ்நிலையில் அந்நாட்டு மன்னருக்கு…
-
- 8 replies
- 577 views
-
-
குடியரசுத் தின விழாவில் கலந்து கொள்வதற்காக சிறப்பு விருந்தினராக இந்தியா வரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ஆக்ரா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 27-ம் தேதியன்று ஒபாமா அவரது மனைவி மிச்செல் ஒபாமாவுடன் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு செல்வதாக இருந்தது. ஆனால் அவரது ஆக்ரா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிபர் ஒபாமா 27-ம் தேதியன்று டெல்லியில் இருந்து சவுதி அரேபியா செல்கிறார். இதன் காரணமாக அவரது ஆக்ரா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆக்ரா பயணம் ரத்தானது குறித்து உ.பி. மாநில அரசுக்கு அமெரிக்க தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்புக் குழுவினரும் ஆக்ராவிலிருந்து வெளியேறியிருக்கின்றனர். அமெரிக்க அதி…
-
- 4 replies
- 626 views
-
-
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பவானி நகர் என்ற இடத்தில் கொத்தடிமைகளாக இருந்து அபாயகரமான பணிகளை மேற்கொண்டு வந்த 200 சிறார்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். ஐதராபாத்தில் முக்கியக் குற்றவாளிகளைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்த போது, ஒரே கட்டடத்தில் 200க்கும் மேற்பட்ட சிறார்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் அனைவரும் பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும், கொத்தடிமைகளாக இருந்து வளையல் தயாரிப்பு, தோல் பதனிடுதல் போன்ற மிக அபாயகரமான பணிகளில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து 10 பேரை கைது செய்துள்ளனர். மீட்கப்பட்ட சிறார்களில் வெறும் 5 முதல் 6 வயது கொண்டவர்கள…
-
- 0 replies
- 464 views
-
-
இங்கிலாந்து அரசின் கட்டுப்பாட்டில் வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து பகுதிகள் இருந்து வருகின்றன. இங்கிலாந்திலிருந்து ஸ்காட்லாந்தை பிரிக்க பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. இது நூலிழையில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் ஸ்காட்லாந்துக்கு கூடுதல் அதிகாரங்களை பகிர்ந்து அளிக்கும் பணிகள் துவங்கியுள்ளன என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார். இங்கிலாந்து அரசின் ஐக்கிய கூட்டமைப்பில் ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் சவுத் வேல்ஸ் பகுதிகள் இருந்து வருகின்றன. இவை அனைத்தும் தனித்தனி அமைப்புகளாக இருப்பினும், இங்கிலாந்து அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில், ஸ்காட்லாந்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் தங்கள் நாட்டுக்கு சுயமாக முடிவெடுப்ப…
-
- 0 replies
- 184 views
-
-
அதி நவீன சிறப்பு வசதிகளுடன் கூடிய பீஸ்ட் என அழைக்கப்படும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பிரத்யேக வாகனம் டெல்லி வந்தடைந்துள்ளது. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் தலைவர்கள் ஜனாதிபதியுடன் ஒரே காரில் வருவதான் வழக்கமான நடைமுறையாக உள்ளது. ஆனால் இந்த நடைமுறையை தகர்த்தெறிந்துவிட்டு ஒபாமா தனது பீஸ்ட் காரில் வந்திறங்குவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அமெரிக்க அதிபர் ஒபாமா பாரம்பரியாமாக கடைபிடித்து வரும் நெறிமுறைகளை தகர்க்காமல் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் ஒரே காரில் ராஜபாதையில் வருகை தந்தால், அதிக பாதுகாப்பு அம்சங்களை கொண்ட தங்களது சொந்த காரில் பயணிக்காத ஒரே அமெரிக்க அதிபர் என்ற பெருமையை ஒபாமா பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. லின்கான்…
-
- 2 replies
- 879 views
-
-
கனடா- நபர் ஒருவர் அண்மையில் ஒட்டாவா ஹொட்டேல் ஒன்றில் இருந்து கலிவக்ஸ்சிலுள்ள தனது வீட்டில் இரசாயனப் பொருட்கள் வைத்திருப்பதாக பயமுறுத்தியதும் பின்னர் 42-வயதுடைய குறிப்பிட்ட நபர் கைது செய்யப்பட்டதும் பரபரப்பாக பேசப்பட்டது. வெள்ளிக்கிழமை பல்வேறு வகைப்பட்ட கொள்கலன்களில் அடைக்கப்பட்ட இரசாயனப் பொருட்கள் இவரது குடில் மற்றும் கொட்டகைக்குள் தரையில் இருந்து உட்கூரை வரை அடுக்கப்பட்டிருந்ததை புலன்விசாரனையாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இவற்றில் சில ஸ்திரமற்றவையாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரையில் மட்டுமின்றி குளிரூட்டிகளின் உள்ளேயும் மற்றய தனிப்பட்ட உபகரணங்கள் சிலவற்றின் உள்ளேயும் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானவை ஸ்திரமற்றவையாகையால் தாங்கள் தீவிர எச்ச…
-
- 0 replies
- 248 views
-
-
இந்தியாவின் உள் நாட்டுத்தயாரிப்பான தேயாஸ் விமானம் விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளது
-
- 3 replies
- 478 views
-
-
சமீபத்தில் இந்தியாவில் பாரியளவில் வீழ்ச்சியடைந்து வரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை ஆனது தேசிய அளவிலான ஒரு அவசர பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என ஐ.நா சபை அறிவித்திருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் இப்பிரச்சினைக்குக் காரணமான இந்திய மக்களின் மனப்பாங்கைக் கண்டித்துள்ளதுடன் இதற்கெதிரான பிரச்சாரத்தையும் ஆரம்பித்துள்ளார். இது தொடர்பாக இன்று ஹரியானாவில் மோடி உரையாற்றிய போது, ‘எமது அண்டை வீடுகளில் அதிகளவில் பெண் குழந்தைகள் தமது தாயின் கருப்பையிலேயே கொல்லப் பட்டு வருகின்றனர் என்பது உண்மை என்ற போதும் எம்மால் அதன் வலியை உணர முடிவதில்லை என்பதால் நாம் அலட்சியமாகவே இருந்து விடுகின்றோம். உண்மையில், எம்மில் எவருக்கும் எமது புதல்வியரை எந்த விதத்திலும் கொல்லும் உரிம…
-
- 0 replies
- 309 views
-
-
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் வரும் மதவாரி கணக்கெடுப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளி வருவதற்கு முன்பே, எக்கச்சக்க கதைகள் பேசப்படும். அவை உண்மையான முடிவுகள் வெளிவரும் பொழுதுதான் எத்தனை அபத்தமானது என்றே நமக்கு புலப்பட்டு இருக்கிறது. எடுத்துக்காட்டாக இந்தியாவின் இந்து - முஸ்லீம்களின் எண்ணிக்கையை எடுத்துக்கொள்வோம். 1991 மக்கள் தொகை கணக்கெடுப்பு 10.67 கோடி இஸ்லாமியர்கள், 69.01 கோடி இந்துக்கள் இருப்பதாக சொன்னது. பத்து வருடங்கள் கழித்து இந்த எண்ணிக்கை முறையே 13.82 கோடி, 82.76 கோடி என்று உயர்ந்துள்ளது. இதை வேறு வகையில் சொல்வது என்றால் வருடத்துக்கு 2.62% என்கிற அளவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 29.5% அதிகரித்து உள்ளது. இந்துக்களின் எண்ணிக்கை வருடத்துக்கு 1.83% என்கிற அளவில்…
-
- 0 replies
- 467 views
-
-
சவுதி மன்னர் தனது 90வது வயதில் இறந்து விட்டார்.இவர் சுவாசத்தொற்று காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு மரணமானதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக செய்திகள் விரைவில்.................... Saudi Arabia's King Abdullah bin Abdul Aziz Al Saud has died, aged in his 90s. http://bbc.in/1xFRLHL http://www.bbc.com/news/world-middle-east-10214554
-
- 2 replies
- 521 views
-
-
யு.எஸ். தலைநகரை தாக்க திட்டமிட்டதாக சின்சினாட்டி பகுதியை சேர்ந்த மனிதன் ஒருவர் மீது புதன்கிழமை குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யு.எஸ். வழக்கறிஞர்கள் 20-வயதுடைய கிறிஸ்ரோபர் லீ கோர்நெல் என்பவர் 2014-ஆகஸ்ட் முதல் ஜனவரி மாதம் வரை தாக்குதல் ஒன்றை நடாத்த சதிசெய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். இச்சதி மூலம் யு.எஸ். அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கொல்லப்படுவதுடன் இரண்டு அரை-தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் 600-வெடி பொருட்கள் சுற்றுக்கள் வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது - See more at: http://www.canadamirror.com/canada/37060.html#sthash.G7iEnN37.dpuf
-
- 0 replies
- 260 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா– மிசிலி தம்பதியருக்கு சசா, மலியா என்று 2 மகள்கள் உள்ளனர். சசாவுக்கு 16 வயதாகிறது. மலியாவுக்கு 13 வயதாகிறது. சசா, மலியா இருவரும் வாஷிங்டனில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்கள் இருவரும் ஒபாமா வெளிநாடுகளுக்கு செல்லும் போது உடன் செல்வதுண்டு. வருகிற 25–ந்தேதி ஒபாமா இந்தியா வரும் போது, சசா, மலியா இருவரும் உடன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் படிக்கும் பள்ளியில் அவர்களுக்கு லீவு கிடக்கவில்லை. பள்ளிக்கு விடுமுறை விடப்படும் நாட்களில் வெளிநாடு செல்லுங்கள். இப்போது வகுப்புகளை தவிர்க்காதீர்கள் என்று சசா, மலியா, இருவரிடமும் பள்ளி நிர்வாகம் கேட்டு கொண்டது. இதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். எனவே ஒபாமா இந்தியா வரும் போது அவருடன் அ…
-
- 0 replies
- 335 views
-
-
காண்டாமிருகங்களை பாதுகாக்க தென்னாப்ரிக்கா புதிய நடவடிக்கை காண்டாமிருகங்கள் வேட்டையாடப்படுவதை தடுக்கவும் அவற்றை மேம்பட்ட வகையில் பாதுகாக்கவும், நூறு காண்டாமிருகங்களை அண்டைநாடுகளுக்கு அனுப்புவதாகத் தென்னாப்ரிக்கா தெரிவித்துள்ளது. கொம்புகளுக்காக பெருமளவில் காண்டாமிருகங்கள் கொல்லப்படுகின்றன.உலகிலுள்ள காண்டாமிருகங்களில் 80 சதவீதம் தென்னாப்ரிக்காவில் உள்ள நிலையில், நாட்டில் எஞ்சியுள்ள மிருகங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன என்று சுற்றுச்சூழல் அமைச்சர் எட்னா மொலேவா அம்மையார் தெரிகூறுகிறார். கடந்த ஆண்டு மட்டும் தென் ஆப்ரிக்காவில் 1200க்கும் அதிகமான காண்டாமிருகங்கள் சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்டுள்ளன என்று அரசாங்கம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. தென்னாப்ரிக்காவில…
-
- 0 replies
- 205 views
-
-
ஐஸ்வால்: பிரதமர் நரேந்திர மோடி பற்றி ஃபேஸ்புக்கில் தவறான தகவலை பதிவு செய்ததாக இளைஞர் மீது வழக்குப் பதிவுசெய்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். ஃபேஸ்புக் தளத்தில் பிரதமர் குறித்து தவறான தகவல்கள் பதிவிடப் பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து மிசோரம் மாநில பாஜகவினர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதனடிப்படையில், தீவிர விசாரணை மேற்கொண்ட மிசோரம் மாநில போலீசார், அந்த இளைஞர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66(A) மற்றும் ஐபிசி பிரிவு 500ன் கீழ் பிரதமர் குறித்து தவறான தகவலை பரப்பியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருகிறார்கள் என்று போலீஸார் தெரிவித்தனர். பிரதமர்…
-
- 0 replies
- 381 views
-
-
புதுடெல்லி: கடந்த 2001-2011 ஆம் ஆண்டுகளில் இந்திய அளவில் இஸ்லாமிய மக்கள்தொகை 24 சதவீதம் உயர்ந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் இஸ்லாமிய மக்கள்தொகையின் எண்ணிக்கை 13.4 சதவீதத்தில் இருந்து 14.2 சதவீதமாக உயர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது. அண்மையில் மதவாரியாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள மாநிலமாக ஜம்மு காஷ்மீர் முதலிடத்திலும் (68.3 சதவீதம்), இரண்டாம் இடத்தை அஸ்ஸாமும் (34.2 சதவீதம்) பிடித்துள்ளன. இவற்றுக்கு அடுத்தப்படியாக மேற்கு வங்காளம் (27 சதவீதம்) உள்ளது. நாட்டில் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இஸ்லாமிய மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 29 சதவீதமாக இருந்தது. த…
-
- 3 replies
- 1.7k views
-
-
டெல்லி: இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து, தேடிவரும் சஜித் மிர் (அல்லது) சஜீத் மஜீத் என்ற லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதியை, பத்திரமாக பாதுகாத்து வருவதில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ வெற்றிபெற்று வருகிறது. மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சஜீத் மிர், பாகிஸ்தானுக்குள்ளேயே பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி இரவு பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் மும்பைக்குள் ஊடுருவி ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல் உள்பட முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தினார்கள். கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டனர். வெடிகுண்டுகளையும் வீசினார்கள். இதில் அப்பாவி மக்கள் 166 பேர் பலியானார்கள். http://tamil.oneindia.com/news/india/indi…
-
- 0 replies
- 466 views
-