உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26617 topics in this forum
-
உக்ரைன் ஜனாதிபதி – டிரம்ப் விசேட தொலைபேசி உரையாடல்! ரஷ்ய பயங்கரவாதத்திற்கு எதிரான எங்களுடைய திறனை வலுப்படுத்த உதவியமைக்கு அமெரிக்காவுக்கு உக்ரைன் எப்போதும் நன்றியுடன் இருக்கும் என ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதுடன், இதில், குடியரசு கட்சிக்கான வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலை முன்னிட்டு, பல்வேறு வெளிநாட்டு தலைவர்களிடம் டிரம்ப் ஆதரவு கோரி பேசி வரும் நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மற்றும் டிரம்ப் ஆகிய இருவரும் தொலைபேசி வழியே பேசி கொண்டுள்ளனர். அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசு கட்சிக்கான வேட்பாளராக நியமிக்கப்பட்டதற்காக, எ…
-
- 0 replies
- 229 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெஸ் பார்க்கர் மற்றும் ஜேம்ஸ் வாட்டர்ஹவுஸ் பதவி, பிபிசி செய்தியாளர்கள், பெர்லின், கீவ் நகரங்களில் இருந்து 3 மணி நேரங்களுக்கு முன்னர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபரானால் அது ஐரோப்பாவில் என்ன விளைவை ஏற்படுத்தும்? அமெரிக்காவில் அதிகார மாற்றம் ஏற்பட்டால் இந்த சவாலை எதிர்கொள்ள ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் வியூக வகுப்பாளர்கள் ஏற்கனவே தயாராகி வருகின்றனர். டொனால்ட் டிரம்ப் ஓஹியோவைச் சேர்ந்த செனட்டர் ஜே.டி.வான்ஸை துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தபோது, அதிபரான பிறகு டிரம்பின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது குறித்த தெளிவான செய்தி ஐரோப்பாவுக…
-
- 0 replies
- 301 views
- 1 follower
-
-
19 JUL, 2024 | 10:13 PM பாலஸ்தீனபகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளமை சட்டவிரோதமான செயல் என நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையிலும் ஜெரூசலேத்திலும் குடியேற்றங்களை ஏற்படுத்துவதை இஸ்ரேல் நிறுத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் அந்தபகுதிகளிலும் காசாவிலும் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பை இஸ்ரேல் விரைவில் முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. பாலஸ்தீனபகுதியில் இஸ்ரேல் தொடர்ந்தும் பிரசன்னமாகியிருப்பதை சட்டவிரோதமானதாக கருதுவதாக நீதிமன்றத்தின் தலைவர் நவாஸ் சலாம் தெரிவித்துள்ளார். மிகவிரைவில் தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பை முடிவிற்கு கொண்டுவரவேண்டிய கடப்பாடு இஸ்ரேலிற்…
-
- 2 replies
- 414 views
- 1 follower
-
-
காசாவில் (Gaza) போலியோவை ஏற்படுத்தும் வைரஸ் இருப்பது கண்டறிப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யுனிசெஃப் (UNICEF) நிறுவனத்துடன் இணைந்து கழிவுநீர் மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனையில் இது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், கழிவுநீரில் வைரஸ் இருப்பதும், குடிநீரின் பற்றாக்குறையும் சேர்ந்து ஆயிரக்கணக்கானோர் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதல் இதன்படி, இஸ்ரேலின் (Israel) தாக்குதலை நிறுத்தவும், கழிவுநீர் அமைப்பை சீர் செய்யவும், இடம்பெயர்ந்த பலஸ்தீனியர்கள் தஞ்சம் அடைந்துள்ள நிரம்பிய முகாம்களுக்கு குடிநீரை வழங்கவும் இஸ்ரேலுக்கு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. …
-
- 1 reply
- 360 views
- 1 follower
-
-
அணு ஆயுதம் வைத்துள்ள இஸ்லாமிய நாடு பிரித்தானியா – ஜேடி வேன்ஸ் அணு ஆயுதம் வைத்துள்ள ஒரு இஸ்லாமிய நாடு பிரித்தானியா என, அமெரிக்க குடியரசு கட்சி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜேடி வேன்ஸ் (JD Vance) தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், குடியரசுக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக 39 வயதுடைய ஜே.டி.வேன்ஸ் அண்மையில் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், கூட்டமொன்றில் உரையாற்றிய ஜேடி வேன்ஸ், அணு ஆயுதம் பெறும் முதல் இஸ்லாமிய நாடு எது என்பது குறித்து தனது நண்பர் ஒருவருடன் விவாதித்ததாக குறிப்பிட்டுள்ளார். இதன்போது, முதலில் ஈரான் அல்லது பாகிஸ்தானாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால், உண்மையில், தொழிலாளர் கட்சி ஆட்…
-
- 0 replies
- 304 views
-
-
Published By: RAJEEBAN 19 JUL, 2024 | 01:11 PM பாரிய தகவல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சர்வதேச அளவில் வங்கிகள் விமானசேவைகள் ஊடக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவே பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. லண்டனின் பங்குசந்தை பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் அவசரசேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, விமானசேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன, வணிக வளாங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன, கணிணிகள் செயல் இழந்துள்ளதால் ஊடக நிறுவனங்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றன. செயல் இழப்பிற்கான காரணம் சரியாக தெரியவராத போதிலும் பாதிக்கப்பட்ட பலர் மைக்ரோசொப்டின…
-
-
- 20 replies
- 2k views
- 1 follower
-
-
அவுஸ்திரேலியாவின் விர்ஜின் விமான நிறுவனத்தில் இணைந்துள்ள பெண்ணொருவர் தற்போது சமூக ஊடகங்களில் அதிக பாராட்டையும், நன்மதிப்பையும் பெற்றுவருகிறார். விசேட தேவையுடைய அலே சேயர்ஸ் என்ற குறித்த பெண் தனது திறமையால் விமான நிறுவனத்தில் கடமைகளை பொறுப்பேற்று கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் சீருடையுடன் உள்ள புகைப்படமானது தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. விர்ஜின் விமான நிறுவனம் அலே சேயர்ஸ் பிறப்பிலிருந்தே விசேட தேவை உடைய பெண்ணாக காணப்பட்டுள்ளார். எனினும் தனது தனித்துவ திறமையாலும், அவரது செயற்பாட்டினாலும் சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக மாறியுள்ளார். அலே சேயர்ஸின் தந்தை ஒரு தொழிலதிபர் ஆவார். தனது மகளின் திறமைகளை வெளிக்கொண்…
-
- 0 replies
- 220 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஓமன் கடற்கரையில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 13 இந்தியர்கள் உள்பட 16 பணியாளர்களை காணவில்லை. அவர்கள் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்திய வெளியுறவு அமைச்சகம் ஓமன் கடல் அதிகாரிகளுடன் சேர்ந்து இந்த நடவடிக்கையை ஒருங்கிணைத்து வருவதாக பிபிசியிடம் பேசிய இந்திய அதிகாரி தெரிவித்தார். ஓமனின் ராஸ் மத்ரக்கா தீபகற்பத்தில் இருந்து தென்கிழக்கே 25 கடல் மைல் தொலைவில் பிரஸ்டீஜ் ஃபால்கன் (Prestige Falcon) என்ற எண்ணெய் டேங்கர் கவிழ்ந்ததாக ஓமன் அதிகாரிகள் தெரிவித்தனர். காணாமல் போன 16 பணியாளர்களில் 3 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். …
-
-
- 2 replies
- 308 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 17 JUL, 2024 | 03:54 PM தாய்லாந்தின் தலைநகரில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இரண்டு அமெரிக்கர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதேவேளை அவர்கள் உட்கொண்ட தேநீர், காப்பியில் சயனைட் கலக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. ஆறு பேரினது தேநீர் கோப்பைகளில் சயனைட் கலக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோசமான முதலீடு தொடர்பான தகராறு காரணமாக இந்த கொலைகள் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஐந்து நட்சத்திர ஹோட்டலிற்கு சென்றவேளை பொலிஸார் மூன்று ஆண்களினதும் மூன்று பெண்களினதும் சடலங்கள…
-
-
- 5 replies
- 691 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,நெதர்லாந்தில் மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச்17 விமானத்தின் புனரமைக்கப்பட்ட மாதிரியை நீதிபதிகள் ஆய்வு செய்கிறார்கள் கட்டுரை தகவல் எழுதியவர், ஓல்கா இவ்ஷினா பதவி, பிபிசி ரஷ்யன் 7 மணி நேரங்களுக்கு முன்னர் ஜூலை 17, 2014 அன்று மலேசியன் ஏர்லைன்ஸின் பயணிகள் விமானம் (MH17) ரஷ்ய ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது, அதில் ஏறக்குறைய 300 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் பற்றிய நான்கு முக்கிய கேள்விகள் இங்கே முன்வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை தற்போது வரை பதிலளிக்கப்படவில்லை. 'எம்எச் 17' விமானம் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்குச் சென்று கொண்டிருந்தப…
-
- 0 replies
- 206 views
- 1 follower
-
-
ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் - மாநாட்டில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு 16 JUL, 2024 | 07:52 AM அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சியின் வேட்பாளராக டொனால் டிரம்ப் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் மாநாட்டில் இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. துணை ஜனாதிபதி வேட்பாளராக செனெட்டர் ஜேடி வின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான பின்னர் முதல் தடவையாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பொதுநிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். குடியரசுக் கட்சியின் மாநாட்டில் அவர் துணை ஜன…
-
-
- 100 replies
- 7.3k views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 16 JUL, 2024 | 04:24 PM (ஆர்.சேதுராமன்) அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான, இரகசிய ஆவணங்கள் தொடர்பான வழக்கை அந்நாட்டு நீதிபதி ஒருவர் நேற்று தள்ளுபடி செய்தார். ஜனாதிபதி பதவிக்காலத்தின் பின்னர், அமெரிக்க அரசின் இரகசிய ஆவணங்கள் பலவற்றை முறையற்ற வகையில் கையாண்டார் என்பது தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் மீது 40 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இவ்வழக்கில் தான் நிரபராதி என ட்ரம்ப் கூறியிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்டிருந்த விசேட விசாரணை அதிகாரி ஜெக் ஸ்மித்தின் நியமனமும், இவ்வி…
-
- 0 replies
- 332 views
- 1 follower
-
-
33 இந்திய கொத்தடிமை தொழிலாளர்களை மீட்ட இத்தாலி போலீஸார் கோப்புப்படம் ரோம்: கொத்தடிமைகளாக இத்தாலி நாட்டின் பண்ணைகளில் பணியாற்றி வந்த 33 இந்திய தொழிலாளர்களை விடுத்துள்ளதாக இத்தாலி போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனை சனிக்கிழமை அன்று போலீஸ் தரப்பு தெரிவித்தது. கடந்த ஜூன் மாதம் இத்தாலியில் உள்ள ஸ்ட்ராபெர்ரி பழத்தோட்டம் ஒன்றில் 31 வயதான சத்னம் சிங் என்ற இந்திய தொழிலாளியின் கை இயந்திரத்தில் சிக்கி துண்டானது. இந்த சம்பவத்தை அடுத்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாமல் அவரை சாலையில் விட்டு சென்றனர் அவர் வேலை பார்த்து வந்த தோட்டத்தின் உரிமையாளர்கள். அதன் பின்னர் அவர் உயிரிழந்தார். இதையடுத்து இத்தாலியில் கொத்தடிமை தொழிலாளர்கள் மீதான அத்துமீறல் கவனம் ப…
-
-
- 11 replies
- 1.1k views
-
-
கென்யாவின் 42 பெண்களின் சடலங்கள் மீட்பு! கென்யாவின் நைரோபிக்கு அருகிலுள்ள கல்குவாரி ஒன்றில் அதிகளவான பெண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன இதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பின்னர் சந்தேகநபர் தெரிவிக்கையில் மனைவி உட்பட 42 பெண்களைக் கொன்று சடலங்களை அந்த இடத்தில் வீசியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். கொலை செய்யப்பட்ட பெண்களுடையது என நம்பப்படும் பல்வேறு சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2024/1392420
-
- 1 reply
- 448 views
- 1 follower
-
-
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது உலக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த டிரம்ப் மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்ட நிலையில் அவரது வலது காதின் மேற்பகுதியை குண்டு துழைத்துச் சென்றது. நூலிழையில் டிரம்ப் உயிர்தப்பியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதிகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் சுடப்படுவது இது முதல் முறை அல்ல. கறுப்பின அடிமை முறையை ஒழித்து அமெரிக்காவின் சகாப்தத்தை மாற்றி எழுதிய ஆபிரகாம் லிங்கனே சுட்டுக்கொல்லப்பட்டவர் தான். அந்த வகையில் வரலாறு நெடுகிலும…
-
-
- 7 replies
- 752 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,கான் யூனிஸ் நகரத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட இடம் கட்டுரை தகவல் எழுதியவர், ருஷ்டி அபுலோஃப், டாம் மெக்ஆர்தர் மற்றும் லூசி கிளார்க்-பில்லிங்ஸ் பதவி, பிபிசி நியூஸ் 14 ஜூலை 2024 காஸாவில் கடந்த சனிக்கிழமை முதல் இஸ்ரேல் நடத்தி வரும் வான் தாக்குதல்களில் 141 பேர் உயிரிழந்திருப்பதாக ஹமாஸ் நடத்தும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 400 பேர் காயமடைந்திருப்பதாகவும் அதன் அறிக்கை கூறுகிறது. இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் ஒன்று, கான் யூனிஸுக்கு அருகிலுள்ள அல்-மவாசி என்ற இடத்தில் நடந்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் முகமது டெயிஃபை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதா…
-
- 0 replies
- 165 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், பிரான்டன் டிரெனான் பதவி, பிபிசி 4 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் லூசியானாவில் காணாமல் போன ஒரு வயது குழந்தை, பரபரப்பான நெடுஞ்சாலையோர புல்வெளியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டது. “இரண்டு நாட்கள் தன்னந்தனியாக இருந்த அக்குழந்தை தண்ணீர், உணவு இன்றி உயிர் பிழைத்திருப்பது ஓர் அதிசயம்” என, சட்ட அமலாக்க அதிகாரி கேரி கெலரி பிபிசியிடம் தெரிவித்தார். கடந்த 8ஆம் தேதி அக்குழந்தையின் நான்கு வயது சகோதரன் அருகிலுள்ள குளம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டதிலிருந்து காவல்துறை அக்குழந்தையை தேடிவந்தது. அதேநாளில், கா…
-
- 0 replies
- 636 views
- 1 follower
-
-
அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கேரி ஒடோனொயு, பெர்ண்ட் டெபுஷ்மேன் & மேட் மர்ஃபி பதவி, பிபிசி நியூஸ், பட்லர், பென்சில்வேனியா மற்றும் லண்டனில் இருந்து 2 மணி நேரங்களுக்கு முன்னர் பென்சில்வேனியாவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மேடையில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் முகம் சுளித்தபடி, அவரது வலதுபுற காதில் கை வைத்திருப்பதை சம்பவத்தின் காணொளிக் காட்சி…
-
-
- 70 replies
- 5.5k views
- 2 followers
-
-
ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்கள் – நிறுவனத்துக்கு சீல் ஈரான் நாட்டில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதுடன் இதனை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தலைநகர் தெக்ரானில் உள்ள துருக்கி ஏர்லைன்ஸ் விமான நிறுவன அலுவலகத்தில் பணியாற்றும் ஈரான் நாட்டை சேர்ந்த பெண்கள் ஹிஜாப் அணியாமல் பணி செய்வதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனால் அப்போது பெண் ஊழியர்கள் ஹிஜாப் அணியாமல் இருப்பது தெரியவந்ததையடுத்து துருக்கி விமான நிறுவன அலுவலகத்தை ஈரான் அரசு சீல் வைத்து மூடியுள்ளது. துருக்கி ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்கு பொலிஸார் ஹிஜாபைக் கடைப்பிடிக்காதது குறித்து முதலில் ஊழி…
-
-
- 1 reply
- 344 views
-
-
உக்ரேன் முன்னோக்கி செல்வது உறுதி : மேலும், ஆயுதங்களை வழங்குவோம் – அமெரிக்க ஜனாதிபதி உக்ரைனுக்கு மேலும், ஆயுதங்களை வழங்குவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பின் 75 ஆவது ஆண்டு விழாவையொட்டி, அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் நேட்டோ உச்சி மாநாடு நேற்று ஆரம்பமானது. இந்த மாநாட்டில் நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளதுடன், சிறப்பு அழைப்பாளராக உக்ரைன் ஜனாதிபதி வொளாடிமிர் ஜெலன்ஸ்கியும் பங்கேற்றிருந்தார். இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் ஜனாதிபதி ஜோ பைடன் உரையாற்றுகையில், எதிர்வரும் மாதங்களில் அமெரிக்காவும், அதன் …
-
-
- 15 replies
- 1.3k views
-
-
டுபாயில் புதிய கடற்கரையை உருவாக்கும் திட்டம் ஆரம்பம். ஐக்கிய அரபு இராச்சியத்தில் சுற்றுலாத்துறைக்கு பெயர் பெற்ற நாடாக டுபாய் விளங்குகிறது. நாள் தோறும் பல்லாயிரம் கணக்கான மக்கள் துபாயை சுற்றி பார்ப்பதற்காக மட்டும் வேறு நாடுகளிலிருந்து வருகிறார்கள். மேலும் மக்களை கவரும் வகையில் உலகின் மிக உயரமான கோபுரம், ஆடம்பரமான உணவகங்கள் மற்றும் தங்குவதற்கான ஹோட்டல்கள் என அட்டகாசமான இடங்களும் தடுபாயில் இருக்கின்றன. அந்த வகையில் சுற்றுலா தளங்களை மேலும் அதிகரிக்கும் வகையில் புதிய திட்டத்தை டுபாய் முன்னெடுத்துள்ளது. பொதுமக்களுக்காக 6.6 கிலோ மீட்டர் தூரம் கடற்கரையை உருவாக்க உள்ளது. அதில் நீச்சல் அடித்து கொண்டே டுபாயின் அழகை ரசிக்க 2 கி.மீ வரை நீச்சல் குளமும் அமைக்கப்படவ…
-
- 0 replies
- 322 views
-
-
12 JUL, 2024 | 12:10 PM ரஷ்யாவை பிறப்பிடமாகக்கொண்ட இரு அவுஸ்திரேலிய பிரஜைகள் ரஷ்ய அதிகாரிகளுக்கு உளவு தகவல்களை வழங்கிய விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரிஸ்பேர்னில் வசிக்கும் தம்பதியினரே கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தம்பதியினருக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் புதிய வெளிநாட்டு தலையீட்டு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. குறைந்தபட்சம் 15 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2018 இல் வெளிநாட்டு தலையீட்டு சட்டம் இயற்றப்பட்ட பின்னர் இத்தம்பதியினருக்கு எதிராகவே இச்சட்டம் முதன்முறையாக தற்போது பயன்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் ஆஸ்திரேலிய பாதுகாப்பு படையிலும் இருந்துள்ளனர். கு…
-
- 0 replies
- 223 views
- 1 follower
-
-
12 JUL, 2024 | 12:28 PM உக்ரைனுக்கு எதிரான தனது ஆக்கிரமிப்பை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் மற்றும் ஜபோரிஜியா அணுமின் நிலையத்திலிருந்து தனது ராணுவம் மற்றும் பிற அங்கீகரிக்கப்படாத பணியாளர்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோரும் வரைவு தீர்மானத்தை, உக்ரைன் கொண்டு வந்தது. ஜபோரிஜியா அணுமின் நிலையம் உட்பட உக்ரைனின் அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பு என்ற தலைப்பிலான இத்தீர்மானத்தில், “உக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்பை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் உள்ள உக்ரைன் பிரதேசத்தில் இருந்து தனது அனைத்து ராணுவப் படைகளையும் நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும். ஜபோரிஜியா அணுமின் நிலையத்திலிருந்த…
-
- 1 reply
- 260 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபையின் சமீபத்திய அறிக்கை உலக மக்கள் தொகையானது 820 கோடியில் இருந்து 1030 கோடியை அடையும் என்று கணித்துள்ளது. வேர்ல்ட் பாப்புலேசன் ப்ரோஸ்பெக்ட்ஸ் (World Population Prospects) என்ற தலைப்பில் உலக மக்கள்தொகை தினமான ஜூலை 11ம் தேதி வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், 2080ம் ஆண்டு மக்கள் தொகை உச்சத்தை தொட்டு, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என்று குறிப்பிட்டுள்ளது. இன்று பிறக்கும் குழந்தைகள் சராசரியாக 73.3 வயது வரை உயிர்வாழ்வார்கள். இது 1995ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 8.4 ஆண்டுகள் அதிகம் என்றும் குறிப்பிடட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் வெளியிடும் உ…
-
- 0 replies
- 148 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அனா ஃபாகுய் & கிறிஸ்டல் ஹேய்ஸ் பதவி, பிபிசி நியூஸ் 12 ஜூலை 2024, 08:31 GMT புதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் தேர்தலில் வயது மற்றும் மனநலம் முக்கியமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தற்போதைய அதிபர் ஜோ பைடனின் வயது 81. அவருக்கு எதிராகப் போட்டியிடும் டொனால்ட் டிரம்பின் வயது 78. கடந்த மாதம் பைடன் நடத்திய மிகவும் பலவீனமான விவாத நிகழ்வு, இந்த விவகாரத்தைப் புதிய உச்சத்திற்கு எடுத்துச் சென்றது. அமெரிக்காவின் மிகவும் வயதான அதிபராக இருக்கிறார் பைடன். தற்போது டிரம்ப் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால் இரண்டாவது வயத…
-
- 4 replies
- 184 views
- 1 follower
-