Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஜம்மு-காஷ்மீரில் ராணுவத்தை விலக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆம் ஆத்மியின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் பூஷண் அதிரடி கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இது பிரசாந்த் பூஷணின் சொந்த கருத்து என ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் மறுப்பு தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்த பிரசாந்த் பூஷண், ஜம்மு காஷ்மீர் மக்கள் விரும்பினால் பொதுவாக்கெடுப்பு நடத்தி ராணுவ பாதுகாப்பை விலக்கி கொள்ளலாம் என்று கூறியிருந்தார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி கூறுகையில், காஷ்மீரில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் ராணுவத்தை திரும்ப பெறுவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்…

  2. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்திருப்பது பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார். இன்று 48வது பிறந்த நாள் கொண்டாடும் ரஹ்மான் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’உள்ளத்திலிருந்து ஒலிக்கும் நிஜ குரலை கேட்க வேண்டும். இத்தனை புகழ் பெற்றும் அடக்கமாக இருப்பது பற்றி கேட்கிறீர்கள். நான் தேர்ந்தெடுத்துள்ள பாதை என்னை அப்படி இருக்க செய்கிறது. சர்ச்சைகளில் சிக்காமல் இருப்பதற்கு நான் எனக்காக வகுத்துள்ள கொள்கைகளே காரணம். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, ஆட்சி அமைத்திருப்பது பற்றி கேட்கிறீர்கள். இந்திய மக்கள் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். இனி யாரும் அவர்களை ஏமாற்ற முடியாது. ஜெய்ஹிந்த்’’என்று கூறனார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?PVN=11428…

  3. மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுவதால் தேர்தல் முடிவுகளில்... மாற்றம் இருக்கும் : 73% மாற்றம் இருக்காது : 25% நோட்டா : 2% மொத்த வாக்குகள்: 4233 வாக்களிக்க இங்கு செல்லுங்கள்: http://tamil.thehindu.com/

  4. டெல்லி: ஜம்மு-காஷ்மீரில் ராணுவத்தை விலக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆம் ஆத்மியின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் பூஷண் அதிரடி கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இது பிரசாந்த் பூஷணின் சொந்த கருத்து என ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் மறுப்பு தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்த பிரசாந்த் பூஷண், ஜம்மு காஷ்மீர் மக்கள் விரும்பினால் பொதுவாக்கெடுப்பு நடத்தி ராணுவ பாதுகாப்பை விலக்கி கொள்ளலாம் என்று கூறியிருந்தார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி கூறுகையில், காஷ்மீரில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் ராணுவத்தை திரும்ப பெறுவதற்கு பொதுவாக்கெடுப்ப…

  5. ஜெட்டா மீது பறந்த விமானத்திலிருந்து விழுந்த மனித உடல் உறுப்புகள்! ஜெட்டா: சவூதி அரேபியா மீது பறந்த விமானத்திலிருந்து மனித உடல் உறுப்புகள் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தின் சக்கரத்தில் யாராவது சிக்கியிருக்கலாம். அவரின் உடல் உறுப்புகளே கீழே விழுந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஜெட்டா மீது விமானம் பறந்தபோது இந்த உடல் உறுப்புகள் கீழே விழுந்தன. இதுகுறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் பின் நசீர் அல் போக் கூறுகையில், அதிகாலை 2.30 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. முஷ்ரபா பகுதியில் மனித உடல் உறுப்புகள் விமானத்திலிருந்து விழுந்ததாக அந்தத் தகவல் வந்தது. இதையடுத்து நாங்கள் அங்கு விரைந்தோம் என்றார். விமானத்தின் லேன்டிங் கியர் ப…

  6. 03.01.2014 பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டதும் வடமாநில டி.வி.க்களும், இணைய தளங்களும் அதை பெரிது படுத்தி தகவல்கள் வெளியிட்டன. தினமும் அவரைப் பற்றிய கருத்து கணிப்புகள், பேச்சுகள், செயல்பாடுகள் ஆகியவை பற்றி பரபரப்பாக வெளியாகி வந்தன. 5 மாநில சட்டசபை தேர்தலின் போதும் நரேந்திர மோடிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆனால் டெல்லி சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரசையும், பாரதீய ஜனதாவையும் வீழ்த்தியதால் டி.வி., இணைய தளங்களின் பார்வை கெஜ்ரிவால் பக்கம் திரும்பியது. அதற்கு ஏற்ப கெஜ்ரிவால் வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. கெஜ்ரிவால் பற்றிய தகவல்களுக்கு வடமாநில டி.வி.க்…

  7. சிரியா மற்றும் துருக்கியைச் சேர்ந்த குர்து இனப் பெண்கள் தமக்கான தன்னாதிக்க அரசுக்காக ஆயுதம் ஏந்தியுள்ளார்கள். பெரும்பாலும் துருக்கிக்கு எதிராக, சுதந்திர குர்திஸ்தானுக்காகப் போராடுகின்ற பிகேகே என்னும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் தீவிரவாதிகளால் அவர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றார்கள். பிகேகேயின் 40 வீதமான போராளிகள் பெண்களாவர். அந்த குர்து இனப் பெண் போராளிகளின் தளபதியை பிபிசியின் ஜிஹார் கொல் அவர்களுக்கு சென்று சந்திக்க்க் கிடைத்தது. குர்து இனத்தவர்களுக்கான தாயகத்துக்கு அப்பாலும் அவர்களது போராட்டம் விரிவடைந்துள்ளதாக அவர் கூறுகிறார். அது குறித்த காணொளி தமிழ் (03:03 min) http://www.bbc.co.uk/tamil/multimedia/2014/01/140105_pkkfemale.shtml

  8. டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலை ஏப்ரல் மாதம் பிற்பாதியில் தொடங்கி மே மாதம் வரை 5 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருவதாக தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் மட்டத்தில் கூறப்படுகிறது. நாடே பெருமளவில் எதிர்பார்க்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பு பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பிற்கு முன்னர் 2014-15 இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் வகையில் ஒரு முறை மக்களவை கூடும். தவிர, ஊழலுக்கு எதிரான சட்ட மசோதாக்கள் சிலவற்றை தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்றும் வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் ஒன்று நடைபெறும் என கூறப்படுகிறது. நடப்பு மக்களவையில் ஆயுள் காலம் ஜூன் 1-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. நாடாளுமன்றத்…

  9. டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து அடுத்து ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தலிலும் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது ஆம் ஆத்மி கட்சி. அதேபோல வருகிற லோக்சபா தேர்தலில் 300 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தவும் அது தீர்மானித்துள்ளது. ஹரியானா சட்டசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக கட்சியின் மூத்த தலைவரும், அரசியல் கொள்கை வகுப்புப் பிரிவுத் தலைவருமான யோகேந்திர யாதவ் அறிவிக்கப்படவுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று தொடங்கி இன்று வரை நடந்தது. இதில் லோக்சபா தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடு தழுவிய அளவில் ஆம் ஆத்மி கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப…

  10. டெல்லி: ஆம் ஆத்மி சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோர், தாங்கள் போட்டியிட விரும்பும் லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும் தலா 100 பேரிடமிருந்து ஆதரவுக் கையெழுத்துப் பெற்று சமர்ப்பித்தால்தான் டிக்கெட்டுக்குப் பரிசீலிக்கப்படுவர் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. இப்படிச் செய்யாமல் யாராவது விண்ணப்பித்தால் அவர்களது பெயர் வேட்பாளர் தேர்வுக்குப் பரிசீலிக்கப்பட மாட்டாது என்றும் அக்கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டசபைத் தேர்தலில் 2வது இடத்தைப் பிடித்ததோடு, தற்போது காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சியிலும் அமர்ந்துள்ளது. அடுத்து லோக்சபா தேர்தலிலும் மகத்தான முத்திரையைப் பதிக்க அது ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலைய…

  11. கனமான பனிப் பொழிவு இன்று ஞாயிற்றுக் கிழமை ரொறன்ரோ பெரும் பாகத்தில் இடம்பெறும் என எதிர்வு கூறப்படுகிறது . ஒன்ராறியோவின் தென்பகுதி, ரொறொன்ரோ பெரும்பாகம் உட்பட்ட பகுதிகளில் இன்று மாலை தொடக்கம் 10 - 15 சென்ரி மீற்றர்கள் வரையிலான பனி பெய்யலாம் எனவும் ஞாயிற்று கிழமை இரவிற்குள் 20 சென்ரிமீற்றர்களை எட்டி, நடு இரவிற்குப்பின்னர் தொடங்கி திங்கள் கிழமை உறைபனி மழையாக மாறக்கூடும் எனவும் கனடா சுற்றுச் சூழல் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனத்த பனிபொழிவு பிற்பகல் தொடங்குமென எதிர்பார்க்கப் படுவதாகவும் வீதிகளின் போக்குவரவு நிலைமைகள் அபாயகரமானதாகவும், பார்க்க கூடிய நிலை கடினமானதாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதே சமயம் வெள்ளிக்கிழமை இரவு காணப்பட்ட அதிகுறைந்த வெப்பநிலையான -22…

  12. பத்தொன்பதாம் நூற்றாண்டு பல புதிய கண்டுபிடிப்புகளின் காலமாகத் திகழ்ந்தது.அவற்றுள் ஒன்றுதான் புகைப்படக்கலை. ஓவியர்கள் கண்டும், கற்பனையிலும் வரைந்த ஓவியங்களின் மூலமே முந்தையகால மேதைகளையும், மகான்களையும் நம்மால் உணர நேரிட்டது. ஆனால் புகைப்படக்கலை வந்த பிறகு அந்த மேதைகளின் உருவங்களை உள்ளது உள்ளபடியே காண நம்மால் முடிந்தது. அந்த வகையில் அப்போது அறிமுகமான புகைப்படக்கலையால் நாட்டின் பெருமைமிகு வீரத்துறவியான விவேகானந்தரின் பல்வேறுவிதமான புகைப்படங்களை காணும் பாக்கியம் கிடைத்துள்ளது. நாட்டின் பெருமையை உலகிற்கு பறைசாற்றிய அதே வேகத்தில் நாட்டின் சிறுமை கண்டு பொங்கியவர் இவர் ஒருவரே. விவேகானந்தரின் கண்கள் வறட்டு ஞானியின் கண்களைப்போல அல்லாமல் பக்தனின் கருணைக் கண்களாக உள்ளன என்று அவரது…

    • 0 replies
    • 2.3k views
  13. அமெரிக்காவில், இந்திய தூதரக அதிகாரி, தேவயானி கைது செய்யப்பட்ட பின், அவரது ஆடைகளை கலைந்து, அமெரிக்க அதிகாரிகள் சோதனை செய்தது போன்ற வீடியோ காட்சிகள், அமெரிக்க சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 'இந்த வீடியோ காட்சிகள் பொய்யானவை' என, அமெரிக்கா மறுத்துள்ளது. விசா மோசடி வழக்கு: அமெரிக்காவுக்கான, இந்திய துணைத் தூதராக பணியாற்றிய தேவயானி கோப்ராகேட், விசா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். அந்நாட்டு அதிகாரிகள், தன் ஆடைகளை கலைந்து சோதனையிட்டதாகவும், தூதரக அதிகாரிக்கான மதிப்புடன் தன்னை நடத்தவில்லை எனவும் தேவயானி குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், தேவயானியை அமெரிக்க அதிகாரிகள் சோதனையிடுவது போன்ற வீடியோ காட்சிப் பதிவுகள், அமெரிக்க சமூக வலைதளங்களில், வேகமாக பரவி வருகிறது. …

  14. ராகுலால் அது முடியாது: அன்னா ஹசாரே உறுதி மக்களவை தேர்தல் தோல்வியில் இருந்து காங்கிரசை ராகுல் காந்தியால் காப்பாற்ற முடியாது’’ என்று பிரபல சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள தனது சொந்த ஊரான ராலேகன் சித்தியில் நேற்று அவர் அளித்த பேட்டியில், ஜன்லோக்பால் மசோதாவுக்கு காங்கிரசார் ஒப்புதல் அளித்திருக்கிறார்கள். பிற நடவடிக்கைகள் பற்றியும் பேசுகிறார்கள். ஆனால், இவையெல்லாம் காங்கிரசுக்கு உதவ போவதில்லை. ஜன்லோக்பால் மசோதாவை ராகுல் காந்தி ஆதரித்ததற்காக அவருக்கு நன்றி. ஆனால், சமீபத்தில் நடந்த மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் மக்களின் கோபத்துக்கு ஆளான பிறகுதான் காங்கிரஸ் இந்த நடவடிக்கையை எடுத்தது. தோல்வியை சந்தித்த பிறகுதான் ஊழல் பிரச்சினையில் கவனம் செலு…

  15. ஆச்சியம்மா கிழவி, எனது அம்மாச்சியின் அம்மா பலமுறை இதைத் தான் சொல்லிக் கொண்டு இருக்கும், பேசாமல் ஆடு மாடு மேய்க்க போடா என, இத்தனைக்கும் நான் பள்ளியில் நன்றாகவே படித்துக் கொண்டிருப்பேன், ஏன் என்னைப் பார்த்து அப்படிச் சொல்லித் தொலைத்தது என அப்போது புரியவில்லை, இப்போது நன்றாகவே விளங்குகின்றது. சொற்ப வருமானத்துக்காக மாடாய் உழைக்கும் அற்ப மானிடருள் நானும் ஒருவன். இதற்கு மாடே மேய்த்துவிட்டு போயிருக்கலாமோ. ஆச்சியம்மா என்றதும், அவர்கள் எங்களை எல்லாம் கூட்டி வைத்து கூறும் அமானிசிய கதைகள், பேய்க் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் என்பவை தான் இன்றும் ஞாபகத்துக்கு வரும் எனலாம். அதிலும் பேய்க் கதைகள் என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம். என்றாவது ஒரு நாள் ஒரு பேயைப் பிடித்துக் குடுவைக்க…

  16. அமெரிக்காவின் நியு யோர்க் மற்றும் நியு ஜெர்ஸி மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு அமெரிக்காவை பெரும் பனிப்புயலொன்று தாக்கியுள்ளதை அடுத்து இந்த அவசரகால நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பனிப்புயலால் சில இடங்களில் இரண்டு அடி உயரத்துக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதுநூற்றுக்கணக்கான விமானசேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. முக்கிய வீதிகளும் மூடப்பட்டுள்ளன. மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். பெரும்பாலும் பள்ளிக்கூடங்களும் அலுவலகங்களும் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும். சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. வீதியில் கொட்டுவதற்காக வைத்திருந்த உப்புமூடைகள் விழுந்ததில் சிக்கிய பணியாளர் ஒருவரும் உ…

  17. டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பிரதான கட்சிகளை கலங்கடித்த ஆம் ஆத்மி கட்சி லோக்சபா தேர்தலுக்கும் தயாராகி வருகிறது. டெல்லியில் இது தொடர்பாக அக்கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று கூடி விவாதித்தது. டெல்லி சட்டசபை தேர்தல் வெற்றியை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக இன்று தேசிய செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டியது. 23 பேர் கொண்ட அக்கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அடுத்த 10 முதல் 15 நாட்களில் ஆம் ஆத்மி கட்சியின் முதலாவது வேட்பாளர் பட்டியலை வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர …

  18. தேனி: தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த வாழை விவசாயி வி.குருநாதன், ஒரு எக்டேரில் 165 டன் வாழை விளைவித்து, உலகளவில் சாதனை படைத்துள்ளார். விவசாய கூலி தொழிலாளியாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் வி.குருநாதன்,75. 45 ஆண்டுகளுக்கு முன் நிலத்தை குத்தகைக்கு எடுத்து வாழை சாகுபடி செய்தார். இன்று ஒரு எக்டேரில் 165 டன் வாழை விளைச்சல் எடுத்துள்ளதால், உலகின் முதல் சாதனை வாழை விவசாயி என தோட்டக்கலைத்துறை அதிகாரிகளால் பாராட்டு பெற்றுள்ளார். நாடு முழுவதும் இருந்து விஞ்ஞானிகள் இவரது தோட்டத்திற்கு வந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். தற்போது, 150 ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரரான இவர், முழு பரப்பிலும் ஜி 9 திசு வாழை சாகுபடி செய்து வருகிறார். குருநாதன் கூறியதாவது: 1990ம் ஆண்டு 13 ஆயிரம் வா…

  19. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=bQIeZ1pNFfI பிரித்தானியாவில் வெள்ள அபாய எச்சரிக்கை - கடற்கரையில் 30 அடி உயரம் வரை எழுந்த அலைகள்.. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/101254/language/ta-IN/article.aspx

  20. கனடாவானது 5,000 வரையிலான புதிய குடிவரவாளர்களை ஏற்றுக்கொள்ளத் தயாராகிறது எனவும், இந்தப் புதிய குடிவரவாளர்கள் கனடாவில் வதிபவர்களின் பெ;றறோர்கள், மற்றும் தாத்தா, பாட்டி போன்றவர்களை ஏற்றக்கௌ;ள விரும்புகின்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட உறவினர்களை வரவழைப்பவர்கள் சில கடுமையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள் எனவும் தெரியவருகிறது. கனடிய குடிவரவுத்துறை அமைச்சரான கிறிஸ் அலெக்சாண்டர் அவர்கள் இவ்வாறான நடவடிக்கையானது மிகவும் துரிதமான செயற்பாடாக இருக்கும் எனவும் ஆனால் குறிப்பிட்ட நபர்கள் காவலிருக்க வேண்டிய காலத்தின் அளவு குறைவாக இருக்கும் எனவும் தெரிவித்திருக்கின்றார் எனக் கனடிய ஊடகமான சிபிசி செய்தித்தாபனம் வெள்ளிக்கிழமை அன்று தெ…

  21. இலங்கையில் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகிறது, பணவீக்கம் குறைந்து வருகிறது என்று மத்திய வங்கி கூறுவது தொடர்பில் மாற்றுக் கருத்துக்கள் எழுந்துள்ளன. நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், தாங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து வட்டி வீதங்களை அதிகரிக்கவில்லை என்றும், பணவீக்கம் கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது என்றும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஆனால் சந்தைக்குச் சென்று பொருட்களை வாங்கும்போது பார்த்தால் அரசு கூறும் தகவல்கள் எந்த அளவுக்கு யதார்த்தமானது என்பது தெரியவரும் என பிபிசி தமிழோசையிடம் கூறினார் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் டாக்டர் எம் கணேசமூர்த்தி. எனினும் கடந்த சில மாதங்களில் மறக்கறி போன்ற சில பொருட்க…

  22. காப்பற்றச் சென்ற சீனக்கப்பல் " ஷ்யூ லாங்" , தற்போது பனிக் கட்டிகளால் சூழப்பட்டு நிற்கிறது அண்டார்க்டிக்காவில் பனியில் சிக்கியிருந்த ரஷ்ய ஆய்வுக் கப்பலுக்கு உதவச் சென்ற சீனப் பனிக்கட்டி உடைக்கும் கப்பலும், பயணிக்க முடியாமல் பனிக்கட்டிகளுக்கிடையே சிக்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் கடைசி வாரத்தில், அண்டார்க்டிக்காவில் பனிக்கட்டிகளிடையே சிக்கி, பயணிக்க முடியாமல் இருந்த ரஷ்ய ஆய்வுக்கப்பலான, அக்கடெமிக் ஷோக்கால்ஸ்கியில் இருந்த பயணிகளைக் காப்பாற்ற விரைந்த , சீன ஐஸ் உடைக்கும் கப்பலான, ஷ்யூ லாங், இப்போது பனிக்கட்டிகளால் சூழப்பட்டு பயணிக்க முடியாமல் நிற்பதாக உறுதிப்படுத்தியிருக்கிறது. வியாழனன்றுதான், இந்த சீனக் கப்பலில் இருந்த ஹெலிகாப்டர் மூலம், ரஷ்ய ஆய்வுக் கப்ப…

  23. அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தற்போது பின்பற்றப்படும் "மணி நேரம்" நடைமுறைக்குப் பதிலாக முன்பு கடைபிடித்த பழைய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. இதன்மூலம் டெல்லி, சென்னையில் காலை 8 மணி என்றால் அஸ்ஸாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் 9 மணியாக இருக்கும். கிரீன்வீச் மீன் டைம் 12 ஆக இருந்தால் டெல்லியில் நேரம் 5.30 மணி. ஆனால், இந்தியாவில் இரு தீர்க்க ரேகைகள் செல்கின்றன. இதன்படி வட கிழக்கு மாநிலங்களின் நேரம் டெல்லியை விட 1 மணி நேரம் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால், டெல்லி ஆட்சியாளர்கள் இது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என்று தாங்களாகவே கூறிக் கொண்டு, டெல்லியில் 5 மணி என்றால் அஸ்ஸாமிலும் 5 மணி தான் என்று அர்த்தமில்லாத வாதம் பேசி அதையே வட கிழக்கு மக்களின் தலையிலும் கட்டி…

  24. வடகொரியாவின் சர்வாதிகாரி கிம் யொங் உன் தனது தந்தையாரின் ஒரே சகோதரியின் கணவரான Jang Song-Thaek ஐ ஆடைகளை அகற்றி விட்டு 3 நாள்களாகப் பசித்திருந்த 120 காட்டு நாய்கள் இருந்த கூட்டுக்குள் வீசி கொடுரமாகக் கொலைசெய்திருக்கின்றார் என செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் கிம் தனது முன்னாள் காதலியான பாடகி Hyon Song-wol ஐ சுட்டுக்கொன்றிருந்தார். http://www.mirror.co.uk/news/world-news/north-korea-kim-jong-uns-uncle-2983138

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.