Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வான்வெளியில் பாகிஸ்தான் விமானத்தில் நடந்த சம்பவத்தை அடுத்து இருவர் கைது' கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 24 மே, 2013 - 13:39 ஜிஎம்டி பிரிட்டனின் வான்பரப்புக்குள் வந்த பயணிகள் விமானமொன்றுக்குள் இடம்பெற்ற ஒரு சம்பவத்தை அடுத்து, அதனை வழி மறித்த போர் விமானங்கள் அவசரமாக வேறு விமான நிலையத்தில் தரையிறக்கின. பிரிட்டனின் வான்பரப்புக்குள் பறந்த பாகிஸ்தான் இண்டர்நாஷனல் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமொன்றுக்குள் இடம்பெற்ற சம்பவம் ஒன்றை அடுத்தே அதனை வழி மறித்து பாதுகாப்பு வழங்க பிரிட்டிஷ் விமானப்படைக்குச் சொந்தமான டைபூன் ஜெட் போர் விமானங்கள் அனுப்பப்பட்டன. பாகிஸ்தானில் லாகூரில் இருந்து பிரிட்டனின் மான்செஸ்டர் விமானநிலையத்துக்கு சென்று கொண்டிருந்த இந்த விமானம் இந்த விவகாரத்தை அடுத்த…

  2. மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகே பாண்டிங் நகரில் என்.பத்மநாபன் (வயது 44) என்ற தமிழ் வக்கீலுக்கு சொந்தமான பண்ணை உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ந் தேதி அங்கு சென்ற அழகுக்கலை பெண் தொழில் அதிபர் சோசிலாவதி (வயது 47) உள்ளிட்ட 4 பேரை காணவில்லை. சில நாட்கள் கழித்து அவர்களின் எலும்புகள் அந்த பண்ணையில் கண்டெடுக்கப்பட்டன. அதையடுத்து ரத்த மாதிரியும் கிடைத்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், பத்மநாபனும், அவருடைய பண்ணை ஆட்களும், தமிழர்களுமான டி.தில்லையழகன் (22), ஆர்.மதன் (23), ஆர்.காத்தவராயன் (33) ஆகியோரும் சேர்ந்து, காணாமல் போன 4 பேரையும் கொலை செய்து எரித்து இருப்பது தெரிய வந்தது. 4 பேரின் உடல் பாகங்களையும் அங்குள்ள நீரோடையில் வீசி உள்ளனர். சோசிலாவதியுடன் கொல்லப்பட்டவர்க…

  3. கல் உடைக்கும் மெஷினில் சிக்கி முகம் சிதைந்து உயிருக்கு போராடிய தொழிலாளிக்கு முகம் மாற்று ஆபரேஷன் செய்து போலந்து டாக்டர்கள் சாதனை போலந்து நாட்டின் ரஸ்லா பகுதியை சேர்ந்தவர் கிரஸ்கோர்ஸ் (33). கல் உடைக்கும் ஆலையில் வேலைசெய்யும்போது, எதிர்பாராதவிதத்தில் அவருடைய முகத்தை டிரில்லிங்கி மெஷினின் கூரிய முனைகள் பதம் பார்த்தன. முகம் சின்னாபின்னமாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடனடியாக க்ளிவைஸ் நகரில் உள்ள கேன்சர் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையத்துக்கு கொண்டு வரப்பட்டார். வேறொருவரின் முக தோலை பொருத்தி முகம் மாற்று ஆபரேஷன் செய்தால் மட்டுமே அவரை பிழைக்க வைக்க முடியும் என்ற நிலை உருவானது. புதிய முகத்தை’ ஒரு போர்வை போல கிரஸ்கோர்சின் முகத்தில் டாக்டர்…

  4. டொரண்டோவில் உள்ள Lake Ontarioவில் ஒரு இளம்பெண்ணின் பிணம் பிளாஸிக் பேக் ஒன்றில் அடைத்து மிதந்து கொண்டிருந்ததை போலீஸார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். Lake Ontarioவில் நேற்று பக, 12 மணியளவில் ஒரு பிளாஸ்டிக் பேக் ஒன்று மிதந்து கொண்டிருந்ததை பார்த்த டொரண்டொ போலீஸார் அதை கைப்பற்றி திறந்து பார்க்கையில் அதில் ஒரு இளம்பெண்ணின் பிணம் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அந்த பிளாஸ்டிக் பேக் Yonge Street and Queen’s Quay என்ற பகுதியில் சுமார் 30 மீட்டர் தொலைவில் மிதந்து கொண்டிருந்ததாக Const. Victor Kwong அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதோடு அந்த பெண்ணின் பிணம் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறினார். மேலும் ப…

    • 0 replies
    • 321 views
  5. நைஜீரிய தற்கொலை குண்டு தாக்குதலில் 12 பேர் பலி இராணுவ பாசறை மற்றும் பிரான்ஸ் அரசால் நடத்தப்படும் யுரேனியம் சுரங்கத்தின் மீது நைஜீரியாவில் இயங்கி வரும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் தற்கொலை படை நேற்று நடத்திய தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். மாலியில் இஸ்லாமிய தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திவரும் பிரெஞ்சு படைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக முஜ்வா தீவிரவாத இயக்கம் தெரிவித்துள்ளது. நைஜீரியாவின் அகாடேஸ் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மற்றும் அர்லிட் பகுதியில் உள்ள அரேவா யுரேனியம் சுரங்கம் ஆகிய இடங்களில் முஜ்வா இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 21 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 16 வீரர்கள் படு…

    • 0 replies
    • 403 views
  6. லண்டணில் அப்பாவில் ராணுவ வீரர் ஒருவர் பயங்கரவாதிகளால் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். ராணுவ முகாமிற்கு காரில் சென்று கொண்டிருந்த இராணுவ வீரரை வழிமறித்த பயங்கரவாதிகள் இருவர், அவரை கீழே இழுத்து போட்டு ஆட்டின் கழுத்தை அறுப்பது போல் அறுத்து கொன்றனர். இதை நேரில் பார்த்த இங்கிரிட் லோயா - கென்னட் என்ற பெண், பயங்கரவாதிகளிடம் சென்று எதற்காக இப்படிச் செய்தீர்கள்?'' என, கோபமாக கேட்டார். ஆப்கன் முஸ்லீம் இளைஞர்கள் சாவுக்கு காரணமான இங்கிலாந்து ராணுவ வீரர்களை கொல்வதே தங்கள் லட்சியம் என பதிலளித்தனர் பயங்கரவாதிகள். இதற்குள் அங்கு கூட்டம் கூடிவிட்டதால், பயங்கரவாதிகள் துப்பாக்கியை காட்டி கூட்டத்தினரை மிரட்டினர். அப்பொழுது அங்கு வந்த போலீஸார் பயங்கரவாதிகளின் காலில் சுட்டு, சுற்ற…

    • 1 reply
    • 1.9k views
  7. டொரண்டோவில் உள்ள Lake Ontarioவில் ஒரு இளம்பெண்ணின் பிணம் பிளாஸிக் பேக் ஒன்றில் அடைத்து மிதந்து கொண்டிருந்ததை போலீஸார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். Lake Ontarioவில் நேற்று பக, 12 மணியளவில் ஒரு பிளாஸ்டிக் பேக் ஒன்று மிதந்து கொண்டிருந்ததை பார்த்த டொரண்டொ போலீஸார் அதை கைப்பற்றி திறந்து பார்க்கையில் அதில் ஒரு இளம்பெண்ணின் பிணம் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அந்த பிளாஸ்டிக் பேக் Yonge Street and Queen’s Quay என்ற பகுதியில் சுமார் 30 மீட்டர் தொலைவில் மிதந்து கொண்டிருந்ததாக Const. Victor Kwong அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதோடு அந்த பெண்ணின் பிணம் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறினார். மேலும் ப…

    • 0 replies
    • 231 views
  8. பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த 16 வயது இளைஞர் ஒருவர், தனது செல்ல நாய்க்குட்டியை காட்டுப்பூனை இனத்தை சேர்ந்த cougar என்ற கொடிய விலக்கு தாக்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து, மிகவும் போராடி தன்னுடைய நாய்க்குட்டியை காப்பாற்றியுள்ளார். நேற்று இரவு தன்னுடைய வீட்டில் ஜன்னல் அருகே நின்றிருந்த போது தனது செல்ல நாய், பயங்கரமாக அலறும் சத்தத்தை கேட்டு திடுக்கிட்டதாகவும், உடனே அருகே சென்று பார்த்தபோது தனது Daisy என்ற நாய், cougar என்ற கொடிய விலங்கு பயங்கரமாக தாக்கிக்கொண்டு இருந்ததாகவும் தெரிவித்தார். உடனே அந்த விலங்கை மிகவும் போராடி விரட்டிவிட்ட்டு, தனது நாயை காப்பாற்றியதாகவும், இந்த போராட்டத்தில் தனக்கும், தனது Daisy நாய்க்கும் காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.…

    • 0 replies
    • 424 views
  9. ஆஸ்திரேலியாவின் பனிச்சறுக்குப் பகுதியில் காணாமல் போன கனடிய மனிதர் ஒருவரை கடந்த ஒருவாரமாக மீட்புக்குழுவினர் தீவிரமாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே கூடுதல் மீட்புப்படையினரை அனுப்ப கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மே மாதம் 13 ஆம் தேதி காணாமல் கனடிய நபர் Prabhdeep Srawn என்பவர், Kosciuszko National Park அருகே தனது காரை நிறுத்திவிட்டு, பனிச்சறுக்கு பகுதிக்கு சென்றதாகவும், அதன்பின் அவர் திரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. மோசமான வானிலை மற்றும் அதிகப்படியான பனிப்பொழிவு காரணத்தால் மீட்புப்படையினரின் தேடுதலில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. காணாமல் போன Prabhdeep Srawn என்பவரின் குடும்பத்தினரும் நண்பர்களும் ஆஸ்திரேலியா விரைந்து சென்று, Prabhdeep Srawn அவர்களை தேடுவதற்க…

    • 0 replies
    • 322 views
  10. டொரண்டோவில் பயணிகள் இரயில் ஒன்றில் குண்டு வைத்ததற்காக கைது செய்யப்பட்ட முஸ்லீம் தீவிரவாதி, தனக்காக வாதாட, முஸ்லீம்களின் புனித நூலான குர்ரானை படித்து அறிந்த ஒரு முஸ்லீம் வழக்கறிஞர் தேவை என வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று காலை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் டொரண்டோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தீவிரவாதி, Chiheb Esseghaier என்பவர்தான் இந்த கோரிக்கையை வைத்தவர். மேலும் மனிதர்களால் எழுதப்பட்ட சட்டபுத்தகங்கள் தன்னை தண்டிக்க உரிமையில்லை என்றும், இறைவன் எழுதிய குர்ரான் படியே தனது ஒவ்வொரு செயலும் இருந்ததாகவும் எனவே, தான் குற்றவாளி இல்லை எனவும் வாதாடினார். அல்கொய்தா இயக்கத்தை சேர்ந்த Chiheb Esseghaier மற்றும் அவரது கூட்டாளி ஆகிய இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் இரயிலில்…

    • 1 reply
    • 428 views
  11. மலேசியாவில் எதிர்கட்சியைச் சேர்ந்த மூன்று முக்கிய உறுப்பினர்களை கைது செய்துள்ள காவல்துறையினர் ஒரு மாணவர் மீது தேசத் துரோக குற்றமிழைத்தார் என்று கூறி வழக்கு பதிவு செய்துள்ளனர். அண்மையில் எதிர்கட்சியினர் நடத்திய ஒரு எதிர்ப்பு கூட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்தனர் தேர்தலில் மோசடிகள் நடைபெற்றதாக கூறி அதற்கு எதிராக மக்களை வீதியில் இறங்கி போராடும்படி அந்த மாணவர் அழைப்பு விடுத்திருந்தார். இந்த மாதத்தின் முற்பகுதியில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் மோசடிகள் இடம்பெற்றன என்று கூறி அதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் இந்த மாணவ செயற்பாட்டாளர் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆனால் தான் குற்றமற்றவர் என்று அவர் கோல…

  12. சுபாஷ் சந்திர போசின் அஸ்தி எங்கு இருக்கிறது? நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அஸ்தி எங்கு இருக்கிறது என்பதை தெரிவிக்கும்படி இந்திய மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியை சேர்ந்தவர் பிரசாந்த் பாலிவால். டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொதுநலன் வழக்கில் இவர் கூறியிருப்பதாவது, சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போசின் அஸ்தி, ஜெர்மனியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வரும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதை இந்தியா கொண்டு வந்த பிறகு பொது மக்கள் அஞ்சலிக்காக பொது இடத்தில் வைக்க வேண்டும். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி போன்ற பல்வேறு தலைவர்களின் அஸ்தி கங்கையில் கரைக்கப்பட்டு, இமயம…

    • 0 replies
    • 445 views
  13. ஸ்வீடன் நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு வன்முறைக் கலவரங்கள் நடைபெற்றுள்ளன. தலைநகர் ஸ்டாக்ஹோமின் அருகில் உள்ள ஏழ்மையான குடியேற்ற மக்கள் வசிக்கும் புறநகர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள்ப்கார்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், காவல்துறையினரையும், மீட்புப் பணிக்கு வந்தவர்களைத் தாக்கியும் மூன்று இரவுகளாக வன்முறைக் கலவரங்களில் ஈடுபட்டனர். செவ்வாய் அன்று இரவு ஜாகொப்ஸ்பர்கில் உள்ள காவல்நிலையம் இளைஞர்களால் தாக்கப்பட்டது. இரண்டு பள்ளிகள் சேதப்படுத்தப்பட்டன. பிரதமர் பிரெட்ரிக் ரெயின்பெல்ட் அமைதி காக்குமாறு கோரிக்கை விடுத்தும்கூட, கலைப்பொருட்கள் விற்பனை மையம் ஒன்று எரிக்கப்பட்டது. 30 கார்களுக்கு மேல் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இத்தகைய வன்முறைகள் உலகின் பணக்கார நகரங்களுள் ஒன…

  14. ஸ்ரீநகர்: போலீசாரால் தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஒருவர் ஸ்ரீநகரில் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார். ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், படேஹ்கடல் பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து, சிறப்பு அதிரடிப் படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த மோதலில் போலீசாரல் மிகவும் தேடப்பட்டு வந்த தீவிரவாதிகளில் ஒருவரான ஹிலால் மௌல்வி சுட்டுக் கொல்லப்பட்டார். சுமார் 15 நிமிடம் நடந்த இந்த தாக்குதலில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://news.vikatan.com/article.php?module=news&aid=15198

  15. லண்டனில் நடைபெற்ற ஒரு பாரதூர தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு தேசிய அவசரகால குழுக் கூட்டத்தை பிரிட்டிஷ் அரசு கூட்டியுள்ளது. லண்டனில் நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்துள்ள நிலையில் கோப்ரா என்று அழைக்கப்படும் அவசரக் குழுவின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதை சந்தேகத்துக்குரிய இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதலாக காவல்துறை பார்ப்பதாக பிபிசியின் அரசியல் பிரிவின் தலைவர் தெரிவிக்கிறார். பயங்கரவாத தாக்குதல் இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்பதற்கான வலுவான சான்றுகள் இருப்பதாக கூறியுள்ள பிரிட்டிஷ் பிரதமர் இத் தாக்குதல் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். வாள் போன்ற ஒரு ஆயுதத்தைப் பயன்படுத்திய இருவர் மற்றொருவரை தாக்கியதாக நேரில் பார்த்தவர…

    • 7 replies
    • 838 views
  16. உலகின் அதிவேக ஏவுகணையான பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்தியா இன்று மீண்டும் வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. கோவா கடற்பகுதியில் ஐஎன்எஸ் தர்காஷ் போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, 290 கி.மீ. தூரம் பறந்து சென்று, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியது. இந்தியா-ரஷ்யா கூட்டுத் தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணையானது, 300 கிலோ எடை கொண்டது. ஒலியை விட 2.8 மடங்கு வேகத்துடன் பறக்கும். இன்று ஏவுகணை செலுத்தப்பட்ட அதிநவீன போர்க்கப்பலான ஐஎன்எஸ் தர்காஷ், கடந்த ஆண்டு கப்பல் படையில் சேர்க்கப்பட்டது. http://www.seithy.com/breifNews.php?newsID=83281&category=IndianNews&language=tamil

    • 5 replies
    • 820 views
  17. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேலாடை அணியாமல் ஆபாசமாக சுற்றித் திரிந்த பெண்களை போலீசார் கைது செய்து அபராதம் விதிக்கும் நடைமுறை தற்போது உள்ளது. எனினும், இந்த கட்டுப்பாட்டை எல்லாம் மீறி அமெரிக்காவின் பல நகரங்களில் ஆகஸ்ட் 21ம் தேதியன்று மேலாடை அணியாத பல பெண்கள் பேரணி நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நியூயார்க் நகரில் மேலாடை அணியாமல் நடமாடும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மேலாடை அணியாமல் சுற்றுப்பயணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய ஹோல்லி வேன் வோஸ்ட் நியூயார்க் நகரிலும் தனக்கே உரிய பாணியில் சுற்றி வந்தபோது அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்தனர். பல மாதங்களாக நடைபெற்ற இந்த வழக்கில் ஹோல…

  18. 2 லட்சத்து 60 ஆயிரம் இந்தியர்கள் உள்ளிட்ட ஒரு கோடியே 10 லட்சம் பேருக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்க உள்ளது. இதற்கான முக்கிய மசோதாவுக்கு, செனட் சபை குழு ஒப்புதல் அளித்தது.அமெரிக்க நாட்டில் உரிய ஆவணங்கள் இன்றி ஒரு கோடியே 10 லட்சம் வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். இவர்களில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் இந்தியர்கள் ஆவார்கள். இவர்களுக்கு குடியுரிமை அளிக்க வகை செய்து, முழுமையான குடியுரிமை சீர்திருத்தம், எல்லை பாதுகாப்பு, பொருளாதார வாய்ப்பு மற்றும் குடியுரிமை நவீனமய சட்ட மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா, அமெரிக்க செனட் சபையின் நீதித்துறை குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த மசோதாவை நீதித்துறை உறுப்பினர்கள் பரிசீலித்து விவாதித்தனர். முடிவில் மசோதாவ…

  19. சீனாவில் பறவை விரும்பிகள் மிக அதிகம் மின்னல் வேகத்தில் பறக்கும் போல்ட் எனும் பெயருடைய ஒரு புறா உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது. அந்த ஆண் புறா ஒரு சீன தொழிலதிபருக்கு நான்கு லட்சம் டாலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. ஒரு வயதாகும் அந்தப் புறா பெல்ஜியம் நாட்டில் வளர்க்கப்பட்டது. பெல்ஜியத்தில் போட்டிகளில் பறக்கும் வேகமான பறவைகள் ஏலம் விடப்பட்ட போதே இந்தப் புறாவை அந்த சீன தொழிலதிபர் வாங்கியுள்ளார். இந்த ஏலத்தில் பெரும்பாலான பறவைகளை சீனா மற்றும் தாய்வான் நாட்டிலிருந்தவர்களே வாங்கியுள்ளனர். இந்தப் புறாவை வளர்த்த லியோ ஹெரிமன்ஸ் பெல்ஜியப் புறாக்களை வளர்ப்பதில் பிரபலமானவர். வேகத்தின் விலை நான்கு லட்சம் தற்போது நடைபெற்ற ஏலத்தில் அவர் தன்னிடம் இருந்த மொத்த பறவைகளையும் ஐம்பது…

    • 4 replies
    • 674 views
  20. புதுடெல்லி: அனைத்து விதத்திலும் தோல்வியடைந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என பா.ஜனதாவின் தேசியச் செயலர் தமிழிசை சௌந்திரராஜன் காட்டமாக கூறியுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கருத்து கணிப்பின்படி ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீது பெரும்பான்மையான மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள்.அவர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் ஆட்சிக்கே வரக் கூடாது என சொல்லி இருக்கிறார்கள். ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, அனைத்துக் கட்சியினருக்கும் பிரதமர் மன்மோகன் சிங் சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையு…

  21. ஒக்லஹோமா நகரின் சுழற்காற்றில் பாதிக்கப்பட்ட இடங்களில் மேலும் சடலங்களோ அல்லது உயிர் தப்பியவர்களோ காணப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று அந்த நகர தீயணைப்புப் படையின் தலைவர் கூறியுள்ளார். சேதமடைந்த அனைத்து வீடுகளும் குறைந்தபட்சம் ஒரு தடவையாவது சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார். 24 பேர் இறந்ததாக தெரிகிறது. அவர்களில் 9 பேர் சிறார்கள். 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மணிக்கு 300 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் தாக்கிய இந்த சுழற்காற்று மிகவும் சக்தி வாய்ந்த சுழற்காற்று என்று தரமுயர்த்தப்படுள்ளது. தனது பாதையில் இருந்த வீடுகள், பள்ளிக்கூடங்கள், வணிக நிறுவனங்களை அது அப்படியே தரை மட்டமாக்கிவிட்டது. மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட சில இடங்கள் அடையாளம…

  22. ஸ்ரீபெரும்புதூரில் வைத்து கொல்லப்படுவதற்கு முன்னதாகவே, மைசூரில் ஒரு கொலை முயற்சி நடந்ததாக, ராஜீவ் காந்தி படுகொலை குறித்து புதிய தகவல் ஒன்றை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்டுள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 22ம் ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது நினைவு நாள் தீவிரவாத தடுப்பு தினமாக நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி, மைசூர் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உரையாற்றினார். அப்போது சித்தராமையா பல புதிய தகவல்களை வெளியிட்டார். 1991ம் ஆண்டு மே மாதம் 2…

  23. போப் பிரான்சிஸ் பேய் ஓட்டினாரா... : வாட்டிகனில் குழப்பம் Posted by: Jayachitra Published: Wednesday, May 22, 2013, 13:10 [iST] வாட்டிகன்: பிரார்த்தனை முடிந்த பிறகு, ஆலயத்தில் வைத்து போப் பிரான்சிஸ் மாற்றுத்திறனாளி ஒருவரிடம் நடந்து கொண்ட விதத்தால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். வாடிகன் நகரில், கடந்த ஞாயிறன்று நடந்த கூட்டுப்பிரார்த்தனை முடிந்த பிறகு, ஆலயத்தின் வாசலில் காத்திருந்த ஒரு மாற்றுதிறனாளியின் தலையை தொட்டு ஆசி வழங்கினார் போப் பிரான்சிஸ். அது பார்ப்பதற்கு அந்த நபரின் உடலில் இருந்து தீய சக்திகளை வெளியேற்றியது போல் இருந்ததாம். இதன்மூலம், போப் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான பேயோட்டும் செயல்களில் ஏடுபடுகிறாரா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால், சக்கர நாற்காலியில் அமர்ந…

  24. ஆப்பிள் தலைமை நிர்வாகி டிம் குக், அமெரிக்க காங்கிரஸ் மன்றத்தில் விளக்கமளிக்கவுள்ளார். உலகின் முன்னணி கணினி நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் தனது இலாபத்தை பல்வேறு சகோதர நிறுவனங்களுக்கும் பகிர்ந்து கணக்கு காட்டிய விதத்தில் ஆயிரம் கோடி டாலர்கள் கணக்கில் வரி செலுத்தாமல் தப்பித்துள்ளது என அமெரிக்க செனெட் ஆய்வறிக்கை ஒன்று கண்டறிந்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் விதிமீறல் எதிலும் ஈடுபட்டதாக இந்த ஆய்வறிக்கை குற்றம்சாட்டவில்லை என்றாலும், ஆப்பிள் நிறுவனத்தின் இந்த துணை நிறுவனங்கள் பல வரி செலுத்துவதற்காக எந்த ஒரு நாட்டிலுமே பதியப்பட்டிருக்கவில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அயர்லாந்தின் கோர்க் நகரில் பதியப்பட்டுள்ள இப்படியான ஒரு துணை நிறுவனம், கடந்த ஐந்து ஆண்டுகளாக தொழில்நுறுவனங்களுக்…

  25. பர்மா மதக் கலவரம்: முஸ்லிம்கள் ஏழு பேருக்கு தண்டனை கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 மே, 2013 - 11:29 ஜிஎம்டி மெய்க்டீலா மதக் கலவரங்களில் பலர் கொல்லப்பட்டனர் பர்மாவில் இந்த ஆண்டு முன்னதாக நடந்த மதக்கலவரங்கள் தொடர்பாக ஏழு முஸ்லிம்களுக்கு பர்மீய நீதிமன்றம் ஒன்று இரண்டாண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையிலான சிறைத் தண்டனைகளை விதித்திருக்கிறது. மத்தியப் பகுதி நகரான மெய்க்டிலாவில் முஸ்லிம் ஒருவரால் நடத்தப்பட்டுவந்த தங்க நகைக்கடை ஒன்றில் ஏற்பட்ட சச்சரவை ஒட்டி நிகழ்ந்த வன்முறையில், புத்த பிக்கு ஒருவரைக் கொன்ற குற்றத்துக்காக ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் மிகவும் மோசமான வன்முறைகள் சிலவற்றில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், அந்தச் சம்பவங்கள் தொடர்பாக பௌ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.