உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26859 topics in this forum
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அனா ஃபாகுய் & கிறிஸ்டல் ஹேய்ஸ் பதவி, பிபிசி நியூஸ் 12 ஜூலை 2024, 08:31 GMT புதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் தேர்தலில் வயது மற்றும் மனநலம் முக்கியமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தற்போதைய அதிபர் ஜோ பைடனின் வயது 81. அவருக்கு எதிராகப் போட்டியிடும் டொனால்ட் டிரம்பின் வயது 78. கடந்த மாதம் பைடன் நடத்திய மிகவும் பலவீனமான விவாத நிகழ்வு, இந்த விவகாரத்தைப் புதிய உச்சத்திற்கு எடுத்துச் சென்றது. அமெரிக்காவின் மிகவும் வயதான அதிபராக இருக்கிறார் பைடன். தற்போது டிரம்ப் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால் இரண்டாவது வயத…
-
- 4 replies
- 204 views
- 1 follower
-
-
டுபாயில் புதிய கடற்கரையை உருவாக்கும் திட்டம் ஆரம்பம். ஐக்கிய அரபு இராச்சியத்தில் சுற்றுலாத்துறைக்கு பெயர் பெற்ற நாடாக டுபாய் விளங்குகிறது. நாள் தோறும் பல்லாயிரம் கணக்கான மக்கள் துபாயை சுற்றி பார்ப்பதற்காக மட்டும் வேறு நாடுகளிலிருந்து வருகிறார்கள். மேலும் மக்களை கவரும் வகையில் உலகின் மிக உயரமான கோபுரம், ஆடம்பரமான உணவகங்கள் மற்றும் தங்குவதற்கான ஹோட்டல்கள் என அட்டகாசமான இடங்களும் தடுபாயில் இருக்கின்றன. அந்த வகையில் சுற்றுலா தளங்களை மேலும் அதிகரிக்கும் வகையில் புதிய திட்டத்தை டுபாய் முன்னெடுத்துள்ளது. பொதுமக்களுக்காக 6.6 கிலோ மீட்டர் தூரம் கடற்கரையை உருவாக்க உள்ளது. அதில் நீச்சல் அடித்து கொண்டே டுபாயின் அழகை ரசிக்க 2 கி.மீ வரை நீச்சல் குளமும் அமைக்கப்படவ…
-
- 0 replies
- 331 views
-
-
12 JUL, 2024 | 12:28 PM உக்ரைனுக்கு எதிரான தனது ஆக்கிரமிப்பை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் மற்றும் ஜபோரிஜியா அணுமின் நிலையத்திலிருந்து தனது ராணுவம் மற்றும் பிற அங்கீகரிக்கப்படாத பணியாளர்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோரும் வரைவு தீர்மானத்தை, உக்ரைன் கொண்டு வந்தது. ஜபோரிஜியா அணுமின் நிலையம் உட்பட உக்ரைனின் அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பு என்ற தலைப்பிலான இத்தீர்மானத்தில், “உக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்பை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் உள்ள உக்ரைன் பிரதேசத்தில் இருந்து தனது அனைத்து ராணுவப் படைகளையும் நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும். ஜபோரிஜியா அணுமின் நிலையத்திலிருந்த…
-
- 1 reply
- 272 views
- 1 follower
-
-
12 JUL, 2024 | 12:10 PM ரஷ்யாவை பிறப்பிடமாகக்கொண்ட இரு அவுஸ்திரேலிய பிரஜைகள் ரஷ்ய அதிகாரிகளுக்கு உளவு தகவல்களை வழங்கிய விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரிஸ்பேர்னில் வசிக்கும் தம்பதியினரே கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தம்பதியினருக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் புதிய வெளிநாட்டு தலையீட்டு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. குறைந்தபட்சம் 15 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2018 இல் வெளிநாட்டு தலையீட்டு சட்டம் இயற்றப்பட்ட பின்னர் இத்தம்பதியினருக்கு எதிராகவே இச்சட்டம் முதன்முறையாக தற்போது பயன்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் ஆஸ்திரேலிய பாதுகாப்பு படையிலும் இருந்துள்ளனர். கு…
-
- 0 replies
- 232 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபையின் சமீபத்திய அறிக்கை உலக மக்கள் தொகையானது 820 கோடியில் இருந்து 1030 கோடியை அடையும் என்று கணித்துள்ளது. வேர்ல்ட் பாப்புலேசன் ப்ரோஸ்பெக்ட்ஸ் (World Population Prospects) என்ற தலைப்பில் உலக மக்கள்தொகை தினமான ஜூலை 11ம் தேதி வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், 2080ம் ஆண்டு மக்கள் தொகை உச்சத்தை தொட்டு, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என்று குறிப்பிட்டுள்ளது. இன்று பிறக்கும் குழந்தைகள் சராசரியாக 73.3 வயது வரை உயிர்வாழ்வார்கள். இது 1995ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 8.4 ஆண்டுகள் அதிகம் என்றும் குறிப்பிடட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் வெளியிடும் உ…
-
- 0 replies
- 157 views
- 1 follower
-
-
10 JUL, 2024 | 04:02 PM காசாவில் பட்டினியால் குழந்தைகள் உயிரிழந்து வருவதாக ஐ.நா வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாகவும் அவர்கள் நேற்று (ஜூலை 9) தெரிவித்தனர். இது ஒருவகையில் பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலை என்றும் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் வசித்து வரும் மக்கள் தங்களது வசிப்பிடங்களில் இருந்து கான் யூனிஸ் பகுதிக்கு புலம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், அங்கு நிலவும் பட்டினி சூழல் கவனம் பெற்றுள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் உள்நோக்கத்துடன் பட்டினி சூழலை ஏற்படுத்தியுள…
-
- 1 reply
- 545 views
- 1 follower
-
-
10 JUL, 2024 | 01:06 PM (ஆர்.சேதுராமன்) 737 மெக்ஸ் ரக விமானங்கள் தொடர்பில் அமெரிக்க அரசை ஏமாற்றுவதற்கு சதி செய்தமை தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டு ஒன்றில், தான் குற்றவாளி என ஒப்புக்கொள்வதற்கு போயிங் நிறுவனம் சம்மதித்துள்ளது என அமெரிக்க நீதித் திணைக்களம் தெரிவித்துள்ளது. டெக்ஸாஸ் நீதிமன்றமொன்றில் தாக்கல் செய்த மனுவில் நீதித் திணைக்களம் இவ்வாறு தெரிவித்துள்ளது. விமான அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு 487 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கவும் அந்நிறுவனம் சம்மதித்துள்ளது. போயிங் நிறுவனம் தயாரித்த 737 மெக்ஸ் ரக விமானங்கள் 2018…
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 10 JUL, 2024 | 05:43 PM ஈழத்தமிழர்களிற்கு அரசியல் தீர்வை வழங்குவதற்காக சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என கோரும் அமெரிக்க காங்கிரஸ் தீர்மானத்திற்கு 50க்கும் மேற்பட்ட புலம்பெயர் அமைப்புகள் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளன. 2024 மே 15ம் திகதி அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு பரந்துபட்ட ஆதரவு காணப்படுகின்ற நிலையில் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் அதற்கு ஆதரவை வெளியிட்டுள்ளன. இது தொடர்பான கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள 150க்கும் மேற்பட்ட புலம்பெயர் அமைப்புகள் அமெரிக்க காங்கிரஸ் தீர்மானத்தின் வரலாற்று சூழமைவையும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு தீர்வு…
-
- 0 replies
- 238 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இந்தத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளதாக காஸா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர், ருஷ்டி அபுவலூஃப் மற்றும் டாம் மெக்ஆர்தர் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஸா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, மத்திய காஸாவில் உள்ள நுசேராத் அகதிகள் முகாமில் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்த கட்டடம் தங்குமிடமாக இருந்தது. இஸ்ரேல் பாதுகா…
-
- 1 reply
- 664 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முன்னோட்டமாக ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் இடையே ஜூன் 27-ஆம் தேதி நடந்த நேருக்கு நேர் விவாதம், அமெரிக்க அரசியல் களத்தில் பல கேள்விகளையும், குழப்பங்களையும் உருவாக்கியுள்ளது. அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதித்துக்கொள்வது அமெரிக்க அதிபர் தேர்தலின் முக்கிய நிகழ்வு. அதன்படி, ஜூன் 27-ஆம் தேதி அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் இடையே விவாதம் நடைபெற்றது. இந்த விவா…
-
- 1 reply
- 409 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக உள்ள இந்தியா மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் ஜநாயகக் கட்சி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும், குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் களம் காண்கின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையிலான நேரடி விவாத நிகழ்ச்சி கடந்த ஜூன் 28 ஆம் திகதி நடந்தது. ஜோ பைடன் இந்த நிகழ்ச்சியில் பலமுறை திக்கித் திணறி பேசத் தடுமாறினார். சில நொடிகள் அப்படியே ஸ்தம்பித்து நின்றார். 81 வயதாகும் ஜோ பைடன் சமீப காலங்களாகவே தடுமாற்றத்துடனேயே காணப்படுகிறார். எனவே இந்த விவ…
-
-
- 3 replies
- 753 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 09 JUL, 2024 | 11:19 AM உக்ரைனின் சிறுவர் மருத்துவமனை உட்பட பல பகுதிகள் மீது ரஸ்யா தாக்குதல் மேற்கொண்ட தினத்தில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திப்பதை காண்பது கடும் ஏமாற்றமளித்துள்ளது என உக்ரைன் ஜனாதிபதி வொலெடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் ரஸ்ய ஜனாதிபதியை மொஸ்கோவிற்கு வெளியே உள்ள நோவோ ஓகாரியோவோ என்ற இடத்தில் சந்திப்பில் ஈடுபட்டிருந்த அதேவேளை உக்ரைன் நகரங்களை காலைவேளையில் ரஸ்யாவின் ஏவுகணைகள் தாக்கின. இந்த தாக்குதல்கள் காரணமாக 37 கொல்லப்பட்டுள்ளதுடன் 170 பேர் காயமடைந்துள்ளனர். ரஸ்யா உக்ரைனின் மீது இரண்டு வருடங்களிற்கு முன்ன…
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 08 JUL, 2024 | 06:30 AM பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கூட்டணி எதிர்பாராத வெற்றியை பெற்றுள்ளது. தீவிரவலதுசாரி கட்சியான ஆர்எல் அதிகளவு ஆசனங்களை கைப்பறக்கூடும் என எதிர்பார்ப்பு வெளியாகியிருந்த நிலையில் பிரான்சில் இடதுசாரி கூட்டணி அதிக ஆசனங்களை கைப்பற்றும் நிலையில் உள்ளதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கட்சி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முதலாவது சுற்று தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதும் அதில் தீவிரவலதுசாரிகள் அதிக ஆசனங்களை கைப்பற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக பிரான்சில் இரண்டாம் உலக யுத்தத்…
-
-
- 6 replies
- 650 views
- 2 followers
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கெய்வன் ஹொசைனி பதவி, பிபிசி பாரசீகம் 7 ஜூலை 2024 50 நாட்களில் இரானில் எல்லாமே மாறிவிட்டது. ஒரு கடுமையான, மேற்கத்திய எதிர்ப்பு ஆட்சி மாறி, ஒரு சீர்திருத்தவாதியின் ஆட்சி அமையப்போகிறது. இப்படி நடக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. சனிக்கிழமையன்று இரானின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மசூத் பெசெஷ்கியன் 19 ஆண்டுகளுக்கு முன்பு இரானின் கடைசி சீர்திருத்தவாத அதிபரின் ஆட்சியின் போது சுகாதார அமைச்சராக இருந்தார். அப்போதிருந்து, சீர்திருத்தவாதிகள் அதிபர் தேர்தல் போட்டிகளில் கட்டுப்பாடுகளை எதிர்கொண்டனர். அவர்களது செல்வாக்கை ஒப்பிடுகையில் …
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,REUTERS/YVES HERMAN ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐரோப்பிய நாடுகளில் மிக முக்கியமான நாடான பிரான்ஸில் தற்போது இரண்டு சுற்றுக்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று வாக்குப்பதிவு நேற்று (ஜூன் 30) நடைபெற்றது. பிரான்ஸைப் பொறுத்தவரை அதிபர் ஆட்சி முறை நிலவுகிறது. இந்த தேர்தல் முடிவுகளால் தற்போதைய அதிபர் எமானுவேல் மக்ரோங்கின் பதவிக்கு எந்த ஆபத்தும் கிடையாது. காரணம் இப்போது நடைபெறும் தேர்தல் என்பது பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் 577 உறுப்பினர்களுக்கான தேர்தல் மட்டுமே. இதன் மூலம் பிரான்ஸ் நாட்டின் பிரதமர் யார் என்பது முடிவு செய்யப்படும். ஆனால் அதிபரும் பிரதமரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அத…
-
-
- 8 replies
- 719 views
- 1 follower
-
-
பிரித்தானியாவின் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி. பிரித்தானியாவின் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதற்கமைய புதிய பிரதமராக Keir Starmer பதவியேற்பார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. https://athavannews.com/2024/1391016
-
-
- 11 replies
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மைக் வென்ட்லிங் பதவி, பிபிசி செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது வேட்புமனு மீதான ஜனநாயகக் கட்சியின் கவலையைத் தணிக்கும் முயற்சியாக ஒரு பிரைம் டைம் நேர்காணலில் பங்கு பெற்றிருக்கிறார். அந்த பேட்டியில், "சர்வவல்லமை படைத்த இறைவன்" மட்டுமே அவரை மறுதேர்தலுக்கான வேட்பு மனுவைத் திரும்பப் பெற வற்புறுத்த முடியும் என்று கூறியுள்ளார். பைடன் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) ஏபிசி நியூஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், அவர் மற்றொரு பதவிக் காலத்துக்கு பணியாற்றத் தகுதியானவர் என்று மக்களுக்கு உறுதியளிக்கும் வகையில் அறிவாற்றல்…
-
-
- 3 replies
- 815 views
- 1 follower
-
-
03 JUL, 2024 | 11:15 AM பிரிட்டனில் நாளை பொதுத்தேர்தலில்மக்கள் வாக்களிக்கவுள்ள நிலையில் கருத்துக்கணிப்புகளில் தொடர்ந்தும் தொழிற்கட்சி அதிக ஆதரவு காணப்படுவதாக கார்டியன் தெரிவித்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளி;ல் காணப்பட்ட நிலையில் மாற்றமில்லை தொழில்கட்சிக்கான ஆதரவு சிறிய அளவில் குறைந்துள்ளது என தெரிவித்துள்ள கார்டியன் எனினும் அந்த கட்சியே தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளது என செய்தி வெளியிட்டுள்ளது. கென்சவேர்ட்டிவ் கட்சியின் 14 வருடகால ஆட்சியின் பின்னர் கெய்ர் ஸ்டாமெரின் தொழில்கட்சி2022 முதல் கருத்துக்கணிப்புகளில் முன்னிலையில் காணப்படுவதாக கார்டியன் தெரிவித்துள்ளது. தற்போதைய கருத்துக்கணிப்புகளின் படி தொழில்கட்சிக்…
-
-
- 28 replies
- 1.6k views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 07 JUL, 2024 | 10:28 AM புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் ரிசி சுனாக் அரசாங்கத்தின் திட்டத்தினை தனது அரசாங்கம் தொடராது என பிரிட்டனின் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டர்மெர் தெரிவித்துள்ளார். ருவாண்டா திட்டம் அது ஆரம்பமாவதற்கு முன்னரே உயிரிழந்து புதைக்கப்பட்டுவிட்டது அது ஒரு போதும் ஒரு தடுப்பு நடவடிக்கையில்லை என அவர் தெரிவித்துள்ளார். குடியேற்றவாசிகள் புகலிடக்கோரிக்கையாளர்களின் வருகையை உண்மையில் கட்டுப்படுத்த எந்த போலியான நடவடிக்கைகளையும் தொடர்வதற்கு நான் தயாரில்லை என அவர் தெரிவித்துள்ளார். ருவாண்டா திட்டத்தினை நாங்கள் உள்வாங்கும் பிரச்சினை என அவர் விபரித்துள்ளார். ருவாண்டா திட்டம் தோல்வியட…
-
- 0 replies
- 165 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 29 JUN, 2024 | 12:54 PM ஈரானில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட இரு பிரதான வேட்பாளர்களிற்கு இடையில் கடும் போட்டி நிலவுவது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. எட்டு மில்லியனிற்கு மேற்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் கடும்போக்காளர் சயீட் ஜலீலிக்கும் மிதவாத வேட்பாளர் மசூட் பெசெக்கியானிற்கும் இடையில் கடும் போட்டி நிலவுகின்றது - இருவரும் சுமார் 40 வீத வாக்குகளை பெற்றுள்ளனர். இரண்டு வாக்காளர்களும் 50 வீத வாக்குகளை பெறவிட்டால் வெள்ளிக்கிழமை இரண்டாம் சுற்று தேர்தல் இடம்பெறும். மே 19ம் திகதி முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிக்கொப்டர் விபத்தில் உயி…
-
- 3 replies
- 419 views
- 1 follower
-
-
05 JUL, 2024 | 05:08 PM தொழில்கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டர்மெர் இங்கிலாந்தின் புதிய பிரதமராகியுள்ளார். மன்னர் சார்ல்ஸை சந்தித்த பின்னர் அவர் உத்தியோகபூர்வமாக பிரதமராகியுள்ளார். இன்னும் சில நிமிடங்களில் அவர் டவுனிங் வீதியிலிருந்து பிரிட்டன் மக்களிற்கு உரையாற்றுவார். முன்னதாக மன்னர் சார்ல்ஸை சந்தித்த பின்னர் ரிசி சுனாக் பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார். https://www.virakesari.lk/article/187773
-
- 1 reply
- 260 views
- 1 follower
-
-
வரலாற்றில் முதல்முறையாக கனடா இராணுவ தளபதியாக பெண் நியமனம் கனடாவின் இராணுவ தளபதியாக இருந்து வரும் வெய்ன் அயர் விரைவில் ஓய்வு பெற உள்ளார். இதையொட்டி புதிய இராணுவ தளபதியாக மூத்த பெண் இராணுவ அதிகாரியான ஜென்னி கரிக்னன் என்பவரை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நியமித்துள்ளார். இதன் மூலம் கனடா வரலாற்றில் இராணுவ தளபதியாகும் முதல் பெண் என்கிற பெருமையை ஜென்னி கரிக்னன் பெற்றுள்ளார். தற்போது ஆயுத படைகளின் தொழில்சார் நடத்தை மற்றும் கலாசாரத்தின் தலைவராக உள்ள ஜென்னி கரிக்னன் கடந்த 35 ஆண்டுகளாக இராணுவத்தில் சேவை புரிந்து வருகிறார். 2008-ம் ஆண்டில், கனடா ஆயுத படைகளின் வரலாற்றில் ஒரு போர் படை பிரிவுக்கு தலைமை தாங்கிய முதல் பெண் என்ற பெருமையை பெற்றார். அதைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் மற்ற…
-
- 0 replies
- 402 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 05 JUL, 2024 | 11:26 AM அட்லாண்டிக் சமுத்திரத்திலிருந்து 89 குடியேற்றவாசிகளின் உடல்களை மீட்டுள்ளதாக மொரெட்டேனியாவின் கரையோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். ஐந்து வயது சிறுமி உட்பட 9 பேரை உயிருடன் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர்கள் ஆனால் பலர் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர். செனெகல் கம்பியா எல்லையிலிருந்து 170 பேருடன் படகொன்று பயணம் புறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் மொரெட்டேனியாவின் தென்மேற்கு கடலோரப்பகுதியில் படகு கவிழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேற்கு ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பா செல்ல முயலும் குடியேற்றவாசிகளிற்கான பிரதான இடைத்தங்கல் நாடாக மொரெட்டேனியா காணப்படுக…
-
- 0 replies
- 271 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,API கட்டுரை தகவல் எழுதியவர், வில் கிராண்ட் பதவி, மத்திய அமெரிக்கா மற்றும் கியூபா செய்தியாளர், பிபிசி நியூஸ், மெக்ஸிகோ 3 ஜூலை 2024, 15:00 GMT புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர் ’பெரில்’ சூறாவளி தனது மூர்க்கமான முழு சக்தியுடன் யூனியன் தீவை தாக்கியதன் காரணமாக ஏற்பட்ட பேரழிவின் அளவைக் கண்டு கத்ரீனா காய் அதிர்ச்சியடைந்தார். கரீபியனில் செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் தீவுக் கூட்டத்திற்கு அப்பால் அமைந்துள்ள இந்தத் தீவில் ஏறக்குறைய எல்லா கட்டடங்களும் தரைமட்டமாகியுள்ளன அல்லது மோசமாகச் சேதமடைந்துள்ளன என்று அவர் கூறினார். “பெரில் சூறாவளி கரையைக் கடந்த பிறகு யூ…
-
- 2 replies
- 752 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜப்பானில் கட்டாயக் கருத்தடையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக 2018இல் ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம். கட்டுரை தகவல் எழுதியவர், கெல்லி என்ஜி பதவி, பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஜப்பான் நாட்டில் 1950கள் மற்றும் 1990களுக்கு இடைப்பட்ட காலத்தில் 16,500 மாற்றுத் திறனாளிகளுக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை செய்யப்பட்டது. இதற்குக் காரணம் அப்போது ஜப்பானில் அமலில் இருந்த யூஜெனிக்ஸ் (Eugenics) சட்டம். இந்தச் சட்டமும், அதன் மூலம் நடத்தப்பட்ட கட்டாயக் கருத்தடைகளும் அரசமைப்பிற்கு எதிரானது என்று ஜப்பான் உச்சநீதிமன்றம் புதன்கிழமையன்…
-
- 0 replies
- 233 views
- 1 follower
-