Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. புத்தரின் எலும்புகளை இலங்கைக்கு அனுப்பக் கூடாது: பிரதமருக்கு வைகோ கடிதம். சென்னை: புத்தரின் எலும்புகள் உள்ளிட்ட புனிதப் பொருள்கள் இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், டெல்லியில் உள்ள தேசிய ஆவணக் காப்பகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள, புத்த பெருமானின் எலும்புகள் உள்ளிட்ட புனிதப் பொருள்களை, வரும் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி முதல், செப்டெம்பர் மாதம் 5ம் தேதி வரையிலும், இலங்கை முழுவதும் காட்சிப் பொருளாக வைப்பதற்காகக் கொண்டு செல்வது என, இந்திய அரசும், இலங்கை அரசும் ஒப்பந்தம் செய்து கொண்டு இருப்பதாக, ஏடுகளில் செய்திகள் வெளியாகி உள்ளன. இலங்கை குடியரசுத்…

    • 11 replies
    • 1.7k views
  2. தென் சீனக்கடல் பகுதியில் பெட்ரோலிய எண்ணை வளம் குறித்த ஆய்வை கைவிடுவதாக இந்தியா திடீரென்று அறிவித்துள்ளது. வியட்நாமுடன் கடந்த 2006-ல் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, தென் சீனக்கடல் பகுதியில் பெட்ரோலிய எண்ணை வளம் குறித்த ஆய்வை இந்தியா மேற்கொண்டு வந்தது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.சீனாவின் எதிர்ப்புக்கு பணியாமல் இந்தியா தொடர்ந்து ஆய்வை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் இந்த ஆய்வை கைவிடுவதாக இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் திடீரென்று அறிவித்துள்ளது. வர்த்தகம் மற்றும் பொருளாதார நிலை கருதி இந்த ஆய்வை கைவிடுவதாக இதற்கு விளக்கம் கூறியுள்ளது. இந்த ஆய்விற்காக இந்திய அரசு ரூ.244 கோடி முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வை கைவிடப்பட…

  3. பாகிஸ்தான் வழியாக நேட்டோ படைகளுக்கு கொண்டு செல்லப்படும் ஒரு டிரக் பொருட்களுக்கு 5000 டாலர் வரி கொடுக்க முடியாது என்று அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன. இவர்களுக்கு தேவையான பெட்ரோல் உள்பட அத்தியாவசிய பொருட்கள் பாகிஸ்தான் வழியாக ஆப்கனுக்கு டிரக்குகளில் கொண்டு செல்லப்படுகின்றன. இதற்காக அமெரிக்கா வரி செலுத்துகிறது. கடந்த 6 மாதத்துக்கு முன்பு பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தான் வீரர்கள் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து, நேட்டோ படைகளுக்கு பொருட்கள் எடுத்து செல்லும் டிரக்குகளுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்…

  4. டெல்லி: நாட்டின் அடுத்த பிரதமராக குஜராத் முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான நரேந்திர மோடிக்கு 17 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 16 சதவீதம் பேர் மட்டுமே பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு 13 சதவீதம் பேரும், சோனியா காந்தி பிரதமராக 9 சதவீதம் பேரும் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், ABP நியூஸ் மற்றும் சர்வதேச கருத்துக் கணிப்பு நிறுவனமான ஏ.சி.நீல்சன் ஆகியவை இணைந்து ஒரு சர்வே நடத்தியுள்ளன. இந்தக் கருத்துக் கணிப்பின்படி, அடுத்த பிரதமராக 17 சதவீதம் பேர் குஜராத் முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். …

  5. இந்திய மீனவர்களை இத்தாலி கப்பல் படை வீரர்கள் சுட்டுக் கொன்ற வழக்கு விவகாரத்தில் இந்திய அரசின் செயற்பாட்டினால் அதிருப்தி அடைந்துள்ள இத்தாலி, புதுடெல்லியில் உள்ள தமது தூதுவரை திருப்பி அழைக்கப் போவதாக எச்சரித்துள்ளது. இத்தாலிய கப்பல் படை வீரர்கள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு இன்று கொல்லம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த கொல்லம் கோர்ட்டு அவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. இது குறித்து இத்தாலி நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது, இரு வீரர்களையும் இத்தாலி அரசின் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை இந்திய அரசு ஏற்க மறுத்து விட்டது. இது குறித்து இத்தாலிய பிரதமர் மரியோ மோன்டி மூன்று முறை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங…

  6. கூடங்குளத்தில் அணுமின் நிலையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பிரிட்டிஷ் எம்பிக்கள் சிலர் கடிதம் எழுதியுள்ளனர்.அந்த கடிதத்தில், கூடங்குளம் சுனாமி மற்றும் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதியில் அமைந்துள்ளது. மேலும் சிறிய அளவில் எரிமலை வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளன. தண்ணீர் பற்றாக்குறையாலும் கூடங்குளம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அணுசக்தி கழகத்தின் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதால் அணுமின் நிலைய கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அந்த எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள எம்பிக்கள், கூடங்குளத்தில் மக்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் க…

  7. இந்தியா Vs சீனா - இராணுவ பலம் எப்படி உள்ளது என்பதை அறிய உதவும் தளம் http://chinavsindia.org/index.html

  8. காலஞ்சென்ற ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோவின் 26 அடி உயரமான சிலையொன்று அமெரிக்காவின் சிகாகோ நகரின் பயோனியர் சதுக்கத்தில் நிறுவும் பணிகள் கடந்த வருடம் ஜூலை முதல் நடைபெற்றன. துருப்பிடிக்காத இரும்பு மற்றும் அலுமினியத்தாலான இந்த சிலை 40,000 பவுண்டுகள் எடையுடையது. "சேவார்ட் ஜான்ஸன்" எனும் சிற்பக் கலைஞர் இச்சிலையை உருவாக்கினார். 1955 ஆம்ஆண்டு வெளியான 'தி செவன் இயர் இட்ச்' எனும் திரைப்படத்தில் வரும் மர்லின் மன்றோவின் வெகு பிரபல்யமான காட்சியொன்றை சித்தரிக்கும் விதத்தில் இச்சிலை வடிமைக்கப்பட்டது. இச்சிலை நிறுவப்பட்ட நாள்முதல் கடும் கண்டனங்களும், சர்ச்சைகளுக்கும் எழுந்தன. சிலை தற்பொழுது அகற்றப்பட்டு 'பாம் ஸ்பிரிங்க்' என்ற இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவ…

    • 16 replies
    • 3.7k views
  9. கடந்த வருடம் ஐ. நா அறிக்கை போர்குற்றத்தைப் பற்றி விரிவாக பேசி, இரு தரப்பும் தவறு செய்தனர் என்று விவரித்ததை ஏற்றுக்கொள்ள மறுத்து, தமிழீழ விடுதலைப் போராட்டம் போர்குற்றமாக பார்க்க இயலாது அது விடுதலைப் போராட்டம், அதை ஒடுக்க இனப்படுகொலை செய்யப்பட்டது என்று அறிவித்தோம். ஐ. நாவிற்கு தமிழர்களின் பார்வையை கொண்டு செல்வதற்காக கடந்த வருடம் ஜூன் 26இல் பெரும் மக்கள் திரள் மூலம் மெரினாவில் , தமிழீழத்தில் நிகழ்ந்தது ஒரு ‘ ஹோலோகாஸ்ட்’க்கு ஒப்பான நிகழ்வு என்று, தமிழர்களாகிய நாம், உணரவைத்தோம். கடந்த வருடம் அனைத்து தூதரங்களுக்கும் , ஐ. நாவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. சென்ற வருடத்தில் ஐ. நா அறிக்கைக்கான கூட்டத்தில் விவரித்ததைப் போல, அமெரிக்கா, போர்குற்றம் என்கிற கதையை முன்வைத…

    • 1 reply
    • 674 views
  10. நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன்! தனித்தமிழ்நாடு என்ற ஒன்று தற்சமயம் அமைவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை. அந்தக் கொள்கையை, அந்த திட்டத்தை மக்களிடம் எடுத்துச் சென்று, அதை புரியவைத்து, அதற்கான அத்தியாவசிய தேவையை உணர்த்தி பொதுமக்கள் ஆதரவுடன் அதற்கான போராட்டத்தில் இறங்குவதற்கான தலைமையோ, இயக்கமோ தற்சமயம் தமிழகத்தில் ஒன்றுகூட கிடையாது. ஒரு விஷயத்தை நாம் உறுதியாக நம்பலாம். ஓட்டரசியலில் இருக்கும் கட்சிகள் தமிழ்தேசியக்கொள்கையை சூடுபறக்கும் உரைகளுக்காக பயன்படுத்திக் கொள்வார்களேயொழிய அதற்கான செயல்களில் இறங்கமாட்டார்கள். ஏனெனில் இறங்கினால் எக்கச்சக்கமாக இழக்கத் தயாராக இருக்கவேண்டும். தமிழ்நாட்டிலேயே ஒரு வரலாற்று உதாரணம் உண்டு. அதன் பெயர் திமுக! திமுக என்ற கட்சி ஒரே இரவில் அம்பாரி ஏற…

  11. அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ச்சியாக சமீபகாலமாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. நேற்று இந்திய நாணயச் சந்தையில் டாலருக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு கட்டத்தில் ஒரு டாலருக்கு 54.46 என்ற அளவுக்கு வீழ்ந்தது. பின்னர் இந்திய ரிசர்வ் வங்கியின் தலையீட்டால் சற்று மீண்டது. இந்த மாதிரியான வீழ்ச்சிக்கு, இந்தியாவின் ஏற்றுமதிகளில் ஏற்பட்டிருக்கும் சரிவும், இறக்குமதிகள் தொடர்பான செலவு அதிகரித்திருப்பதும் ஒரு காரணம் என்று பொருளாதாரப் பகுப்பாய்வாளர் பேராசிரியர் ஸ்ரீநிவாசன் கூறினார். ஏற்றுமதிகள் சரிவுக்கு ஐரோப்பிய பொது நாணய நாடுகளிடையே (யூரோ வலயம்) நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகளும் ஒரு பகுதிக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் ஏற…

  12. http://youtu.be/bnLd1rQHfSw 2009 மே, ஈழத்தில் வன்னி முள்ளிவாய்க்காலில் என்ன நடந்ததோ அதை விட கொஞ்சம் குறைவாகவே நடத்திருயிந்த முன்னாள் யுகோசொலவாக்கியாவின் பொஸ்னிய - சேர்பிய யுத்த கால சேர்பிய இராணுவத் தளபதியான Ratko Mladic சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் யுத்த காலத்தில் சரணடைந்த.. பிடிபட்ட.. சுமார் 7000 பொஸ்னிய முஸ்லீம் இளைஞர்களை மற்றும் சிறுவர்களை பொதுமக்களை கையைக் கட்டி.. சுட்டுக் கொன்று புதைகுழிகளில் புதைத்தவர். இதனை இவர் பொஸ்னிய - சேர்பிய யுத்தத்தின் போது 1992- 1995 காலப் பகுதியில் மேற்கொண்டிருந்தார். குறிப்பாக 1995 யூலையில் Srebrenica என்ற பொஸ்னிய முஸ்லீம்களின் இடத்தை ஆக்கிரமித்து மேற்கொண்ட படுகொலை முக்கியமானது..! களத்தில் நின…

  13. இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெற்றுத்தர முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி விரும்பினார் என்று எந்தவிதமான கூச்சமும் இன்றி திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் எழுதிய 5 நூல்கள் வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது: தமிழன் தலைகுனிந்து கிடப்பது ஜனநாயகத்தின் பெயரால் அல்ல. கடந்த தேர்தலில் நமக்கு ஏற்பட்ட முடிவுகளால் அல்ல. தேர்தல் தோல்வியைப் பற்றி கவலைப்படுகின்ற கட்சி அல்ல திராவிட முன்னேற்ற கழகம். நமக்குள்ளே இன ஒற்றுமை இல்லை. நமக்குள்ளே மொழி ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது. இதை மறுத்தும் பயனில்லை. டெசோ மாநாடு இலங்கை தமிழர்களுக்காக, ஈழத்தமிழர்களுக்காக என…

  14. பிரான்ஸ் புதிய அதிபராக பொறுப்பேற்ற ஹாலண்ட் சென்ற விமானம் மீது மின்னல் தாக்கியது. பிரான்சில் நடந்த அதிபர் தேர்தலில் சோஷலிஸ்ட் கட்சியை சேர்ந்த ஹாலண்ட் வெற்றி பெற்று நேற்று புதிய அதிபராக பொறுப்பேற்றார். இதையொட்டி பாரிசில் உள்ள எலைசி அதிபர் மாளிகையில் நடந்த விழாவில் ஹாலண்ட், அவரது காதலி வலேரி, முன்னாள் அதிபர் சர்கோசி, அவரது காதல் மனைவி கர்லா ப்ரூனி பங்கேற்றனர். முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்த பிறகு, அதிபர் மாளிகையில் இருந்து சர்கோசி வெளியேறினார். பதவியேற்ற சில மணிநேரங்களில் ஐரோப்பிய யூனியனின் பொருளாதார வளர்ச்சி குறித்து பேசுவதற்காக ஹாலண்ட் ஜெர்மனிக்கு விமானத்தில் புறப்பட்டார். நடுவானில் செல்லும்போது, விமானம் மீது மின்னல் தாக்கியது. இதில் விமானம் லேசாக கு…

  15. புதுவை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா வருகிற 19ம் தேதி நடைபெறவிருப்பதாகவும், இதில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவ் பங்கேற்பதாக துணைவேந்தர் தரீன் தெரிவித்துள்ளார். புதுவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுவை பல்கலைக்கழகத்தின் 22வது பட்டமளிப்பு விழா வருகிற 19ம் ÷தி நடைபெற உள்ளதென்றும், இதில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவ் கலந்து கொண்டு பட்டங்களை வழங்க உள்ளதாக தெரிவித்தார். அவருக்கு புதுவை பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளதென்ற துணைவேந்தர் தரீன், இதேப்போன்று இந்திய அரசின் முன்னாள் தலைமை நீதிபதி வெங்கடாச்சலய்யாவுக்கு டாக்டர். பட்டம் வழங்கப்பட உள்ளதாகவும், விழாவில் 16 ஆயிரத்து 755 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளதென்றார…

  16. பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக பிரான்கோய்ஸ் ஹோலண்டே இன்று பதவியேற்றுக் கொண்டார். மத்திய பாரிஸ் பகுதியில் உள்ள எலிஸீ பேலஸில் இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது.இந்த விழாவின் போது புதிய அதிபரிடம் நிக்கோலஸ் சர்க்கோசி முறைப்படி அதிகாரத்தை ஒப்படைத்தார். இந்நிலையில், ஹோலண்டே பொறுப்பை ஏற்றுக் கொண்டதும் பிரான்ஸ் நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்துவது குறித்து புதிய கொள்கைகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோலண்டே பதவியேற்றதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரிட்டன் பிரதமர் கேமரூன், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக நடைபெற்ற பிரான்ஸ் அதிபர் தேர்தலில் சோசலிச கட்சி வேட்பாளர் பிரான்கோய்ஸ் ஹோலண…

  17. இந்தியக் கடலோரக் காவல்படை கப்பல் மோதி மரணம் அடைந்த ராமேசுவரம் மீனவர் மரணம் பற்றி கடலோரக் காவல்படை விசாரணை நடத்தவேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கைவிடுத்துள்ளது. இது பற்றி தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று காலை வெளியிட்ட அறிக்கை விவரம்: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், இந்நிகழ்வுகளை ஒரு தேசிய பிரச்சனையாக கருதி பிரச்சனைக்கு தீர்வு காணவும் பாரதப் பிரதமரிடம் கடிதம் மூலம் பலமுறைவலியுறுத்தியுள்ளேன். இந்தச் சூழ்நிலையில், 10.5.2012 அன்று பாம்பன் கிராமத்தைச் சார்ந்த 5 மீனவர்கள் ஒரு நாட்டுப் படகில் ராமேஸ்வரம் அருகே அரியமான் கடற்கரையிலிருந்து நான்கு கடல் மைல் தொலைவில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டி…

  18. எதிரி நாடுகளின் ஏவுகணைகளை இடையிலேயே வழிமறித்து அழிக்கும் ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக செய்து பார்த்தது. இதன் மூலம் இதுபோன்ற வசதியை பெற்றுள்ள ஒரு சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. சுமார் 2000 கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை இடையிலேயே வழி மறித்து அழிக்கும் சோதனையை டி.ஆர்.டி.ஓ. வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்தது. இப்பாதுகாப்பு ஏவுகணை மேலும் 5000 கிலோ மீட்டர் அளவிற்கு சென்று தாக்கும் வகையில், 2016 ஆண்டிற்குள் மேம்படுத்தப்படும் என டி.ஆர்.டி.ஓ. தலைவர் சரஸ்வத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இரு நகரங்களில் இந்த ஏவுகணைகள் தயார் நிலையில் நிலைநிறுத்தப்படும் எனவும், அந்த இரு நகரங்கள் இன்னும் முடிவாகவில்லை எனவும் …

  19. முதல்வர் ஜெயலலிதா பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைகிறது. அவர் தலைமையிலான அ.தி.மு.க. அரசு தனி பலத்துடன் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. 150 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. "நிதி நெருக்கடியில் தமிழகத்தை தி.மு.க. அரசு தத்தளிக்க வைத்து விட்டது" என்று குற்றம் சாட்டியது. அதை சீர்திருத்துகிறோம் என்று கூறி சில நிதிநிலை சீர்திருத்தங்களை மேற்கொண்டது. அரசு நிர்வாகம் என்று எடுத்துக் கொண்டால் காவல்துறையில் பெரும் மாற்றங்களை செய்து நிலஅபகரிப்பு புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தது அ.தி.மு.க. அரசு. தமிழகம் முழுவதும் பெரும்பாலான தி.மு.க.வினரே அந்த புகார்களில் சிக்கினார்கள். இதன் மூலம் காவல்துறையில் இருப்போர் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதற்கே செயல்படுவார்கள்…

  20. நேபாளத்திலிருந்து 21 பயணிகளுடன் புறப்பட்ட விமானமொன்று அந்த நாட்டின் வடபகுதியில் இன்று திங்கட்கிழமை விபத்திற்குள்ளானதில் 13 பேர் பலியானதுடன், 8 பேர் காப்பற்றப்பட்டுள்ளனர். அக்னி எயருக்கு சொந்தமான இவ்விமானம் ஜோம்சொம் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது மலையுடன் மோதி வீழ்ந்துள்ளதாக விமானி தெரிவித்துள்ளார். இவ்விமானத்தில் இந்தியப் பிரஜைகள் பலர் பயணித்துள்ளனர். சிறிய விமான விபத்துக்கள் நேபாளின் மலைப்பகுதியில் இடம்பெறுவது அசாதாரண சம்பவங்கள் அல்ல. கடந்த வருடம் எவரஸ்ட் மலையை பார்வையிடுவதற்காக சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் காத்மண்டுவுக்கு அருகில் விபத்திற்குள்ளானபோது 19 பேர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது http://www.tamilmirror.lk/20…

  21. :”எனது நேர்மையை சந்தேகிப்பதைவிட எனது நெஞ்சில் கத்தியால் குத்தலாம்”என்று ஏர்செல்-மேக்ஸிஸ் ஒப்பந்த விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். ஏர்செல்- மேக்ஸிஸ் நிறுவனம் கைமாறியபோது,அப்போதைய நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் அன்னியா செலாவணி பண பரிமாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து காலதாமதம் செய்ததாகவும்,இதில் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆதாயம் அடைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் மாநிலங்களவையில் இன்று இப்பிரச்னையை எழுப்பிய பா.ஜனதா தலைவர் அருண்ஜெட்லி,இது குறித்து சிதம்பரம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து தம்மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துப் பேச…

  22. Afghan peace negotiator Arsala Rahmani shot dead Arsala Rahmani was responsible for the committee that looked at freeing Taliban prisoners Continue reading the main story A senior Afghan peace negotiator has been shot dead in Kabul, officials say. Arsala Rahmani was a former Taliban minister and a key member of Afghanistan's High Peace Council, which leads Afghan efforts to negotiate a peace deal with the Taliban. Correspondents say his death is a major blow to President Hamid Karzai as Mr Rahmani was a key figure in reaching out to Taliban commanders. Last year the chief of the peace council was killed in a suicide attack. Burhannudin Rabbani was kil…

    • 0 replies
    • 695 views
  23. வேலையின்மை, வறுமை காரணமாக தமிழகத்தில் ஆண்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. அதிலும் தீக்குளித்து உயிரை விடும் வழிமுறையை தேர்ந்து எடுப்பதில் பெண்களுக்கு ஈடாக ஆண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தேசிய குற்றப்பதிவேடுகள் ஆணைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய குற்றப்பதிவேடுகள் ஆணைய கணக்கெடுப்பின்படி கடந்த 5 ஆண்டுகளில் தீக்குளித்து இறக்கும் ஆண்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வந்துள்ளது. இந்திய அளவில் பார்க்கும்போது, இருபாலரின் தற்கொலையிலும், தமிழகம்தான் முன்னிலையில் இருந்து வருகிறது. தீக்குளித்து மரணம் தமிழகத்தில் கடந்த 2005-ல் 875 பெண்களும், 384 ஆண்களும் தீக்குளித்து இறந்துள்ளனர். 2010-ம் ஆண்டில் 1,625 பெண்களும், 863 ஆண்களும் தீக்குளித்து உயிர…

    • 2 replies
    • 773 views
  24. தென் சீனக் கடல் பகுதியில் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டப் போருக்குத் தயாராகவில்லை என்று சீனா கூறியுள்ளது. தென் சீனக் கடல் பரப்பில் பாரம்பரியமாக தங்களுக்கு மட்டும்தான் உரிமை உள்ளது என்றும் பிற நாடுகள் அங்கு வருவதும் எண்ணெய் துரப்பணப் பணிகள், ஆய்வுகள் போன்றவற்றைத் தங்களிடம் அனுமதி பெறாமல் மேற்கொள்வதும் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் சீனா எச்சரித்து வருகிறது. இந்த நிலையில் பிலிப்பின்ஸ் நாடு தென் சீனக் கடலில் உள்ள ஹுவாங்யான் தீவு தங்களுக்கே உரியது என்றும் அதன் பெயர் பனடாக் ஷால் என்றும் கூறி வருகிறது.இந்த இடம் எங்களுடையது தான், உங்களுக்கு ஏதாவது நேருவதற்கு முன்னால் இடத்தைக் காலிசெய்துவிட்டுப் போங்கள் என்று சீனா நேரடியாகவும் மறைமுகமாகவும் பிலிப்பின்ஸை எச்…

  25. சைபீரியா நாட்டைச் சேர்ந்த மிகப் பெரிய எண்ணெய்க் கப்பலான ஸ்மிர்னி சோமாலியா நோக்கிச் சென்று கொண்டிருந்த போது ஓமன் நாட்டுக்கு அருகே வைத்து சோமாலியக் கடற் கொள்ளையர்களால் இன்று நண்பகல் கடத்தப் பட்டுள்ளது. இக்கப்பலில் 11 இந்தியர்கள் உட்பட 26 வெளிநாட்டவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். இக்கப்பல் மூலம் சோமாலியாவுக்கு கொண்டு செல்லவிருந்த 135 000 டன் எடையுள்ள எண்ணெய் சோமாலியக் கடற் கொள்ளையர்களால் கைப்பற்றப் பட்டுள்ளது. செங்கடல் வழியாகவும் இந்து சமுத்திரத்தின் மேற்குப் பகுதியினூடாகவும் பயணம் செய்யும் பல சரக்குக் கப்பல்களை சோமாலியக் கடற் கொள்ளையர்கள் இதற்கு முன்னர் கடத்தியிருந்ததுடன் அவற்றை விடுவிப்பதற்கு பல மில்லியன் டாலர்களைப் பேரம் பேசுவது வழக்கம். இன்று கடத்தப்பட்ட எ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.