Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. Sunday, January 9th, 2011 | Posted by admin தென் சூடான்: சுதந்திரத்திற்கான பாதையில் புதிய பெயரொன்றைத் தேர்ந்தெடுப்பது ஓர் ஆரம்பம் இந்தப் புதிய தேசத்திற்கு இன்னமும் பொருத்தமான பெயர் தோந்தெடுக்கப்படவில்லை. தெற்கு, தெற்கு சூடான், புதிய சூடான் அல்லது குஸ் [south, Southern Sudan, New Sudan or even Cush] என இந்தப் புதிய தேசத்திற்குப் பெயர் சூட்டப்படலாம். இங்கு இடம்பெறும் மக்கள் கருத்துக்கணிப்பின் பலம்தான் இந்த உலகின் புதிய நாட்டினது முதன்மையான வெற்றியாக அமையும். ஆனால் எண்ணெய் மற்றும் எல்லைப் பிரச்சினைகள் தொடரும். இவ்வாறு பிரித்தானியாவை தளமாகக் கொண்ட guardian.co.uk இணையத்தளத்தில் Mark Tran எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்க…

    • 2 replies
    • 933 views
  2. இலவசங்களால் அழியும் என் தமிழகம் இந்த நாட்டில் ஏழை, எளிய மக்கள் இருக்கும் வரை இலவச உதவிகள் வழங்கப்படும் என்ற தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் பேச்சு வரவேற்கத்தக்கதா அல்லது வருந்தத்தக்கதா என்று தெரியவில்லை. உழைப்புக்குப் பெயர் பெற்ற தமிழர்கள் தற்போது இலவசம் என்ற பெயரில் அரசிடம் கையேந்தி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலவசம் என்றால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கிடைப்பதை விடக் கூடாது என்ற நோக்கத்கோடு, அனைத்தையும் கைப்பற்ற வேண்டும் என்ற மனப்பான்மை தற்போது தமிழக மக்களிடம் அதிகரித்துவிட்டது. இந்த மனப்போக்கை மனதில் கொண்ட அரசியல் கட்சியினர் இலவசத் திட்டங்களை அறிவித்து, அதன்மூலமாக ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று கணக்கிடுகிறார்கள். அதற்கு முன்ன…

  3. ஜிஹாட் தீவிரவாத அமைப்பிற்காக கனேடியர்கள் பயிற்சிபெற்று வருவதாக வெளியாகிய தகவல் தொடர்பாக ஆர்.சி.எம்.பி (R.C.M.P - கனேடிய தேசிய காவல்துறை) யினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கனடாவில் தாக்குதுல் நடத்துவதற்காக பல வெளிநாட்டவர்கள் குறிப்பாக கனேடியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுவதாக, தலிபான்களை ஆதூரம் காட்டி ஹொங்கொங்கைச் சேர்ந்த பத்திரிகை, ஏசியா ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தகவலின் உண்மைத் தன்மையையும், நம்பகத்தன்மையையும் அறிவதற்காக ஆர்.சி.எம்.பியினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, ஆர்.சி.எம்.பியின் பிரதி ஆணையாளர் ஜில் மிஷெளட் தெரிவித்தார். கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 12 கனேடியர்கள் ஆப்கானிஸ்தானுக்கு சென்று பயிற்சி பெற்றதாக, இந்தச் செய்தியில் பாகிஸ்தான…

  4. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் நடந்த பொது நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குடியரசுக் கட்சி எம்.பி. கேப்ரியல் கிஃப்போர்டு படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர். முதலில் கிஃப்போர்டு இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாயின. பின்னர் அதனை மறுத்த மருத்துவப் பேச்சாளர், கிஃப்போர்டு உயிருடன் உள்ளார். தலையில் குண்டு பாய்ந்துள்ளது. ஆனால், காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவருக்கு தற்போது அறுவை சிகிச்சை நடந்து வருகிறது. குண்டுக் காயங்களுடன் மேலும் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார். ஷாப்பிங் சென்டர் ஒன்றில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கிஃபோர்டு …

    • 4 replies
    • 1.1k views
  5. முதல்வர் கருணாநிதிக்கு எதிராக பொது வேட்பாளராக களமிறக்கப்படுகிறார் சீமான் செவ்வாய்க்கிழமை, ஜனவரி 11, 2011, 14:22[iST] சென்னை: நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானை, முதல்வர் கருணாநிதிக்கு எதிராக பொது வேட்பாளராக களம் இறக்குகிறது அதிமுக. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தனக்குச் சாதகமான முறையில் அனைத்தையும் மாற்றும் வேலையில் படு மும்முரமாக, கில்லாடித்தனமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அத்தனை பேரும் கூட்டணி குறித்து கவலையில் உள்ள நிலையில் இவர், கூட்டணியைத் தாண்டி வேறு பல முக்கிய விஷயங்களையும் கவனத்தில் கொண்டு காய் நகர்த்தி வருகிறார். ஜாதி ரீதியாக, உணர்வு ரீதியாக திமுகவுக்கு எதிராக உள்ளவற்றை ஒருங்கிணைத்து தன் பக்கம் திருப்ப முயன்று வருகிறார் ஜெயலலிதா. அதில் ஒன்றுத…

  6. எத்தனை ‘ஸ்பெக்ட்ரம்’ வந்தாலும் சமாளிக்க நம்ம குஷ்பு இருக்கிறார்’ என்று குஷியாக இருந்தது தி.மு.க. வட்டாரம். ஆனால், அ.தி.மு.க.விற் காக தேர்தல் பிரசாரம் செய்ய நடிகர் விஜய்க்காக கேரளாவில் சொகுசு வாகனம் தயாராகிறது என்ற செய்தியால் தி.மு.க. தரப்பு ரொம்பவும் ‘அப்செட்’ ஆகியிருக்கிறதாம். வேட்டைக்காரனுக்குப் பிறகு விஜய்யை ஒரு தரப்பினர் துரத்த... ‘காவலன்’ படத்தைத் திரையிட தியேட்டர்கள் மறுக்க... விநியோகஸ்தர்கள் நிபந்தனை விதிக்க... இப்படி ஏகப்பட்ட சிக்கலில் தவித்த விஜய்க்கு போயஸ்கார்டன் ஆதரவுக்கரம் நீட்டியது. தி.மு.க. ஆதரவாளரான இயக்குநர் சந்திரசேகர் தன் மகனுக்கு வந்த சோதனையைத் தடுத்து நிறுத்த ஜெயலலிதாவைச் சந்தித்தார். இது தி.மு.க. வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படு…

  7. தேர்தல் வரப்போவதால், தன்னிடம் வைக்கப்படும் கோரிக்கைகளை ஆராயாமல், அதை நிறைவேற்றி வைப்பதாக வாக்குறுதி கொடுத்து, வம்பில் சிக்கி வரு கிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா. கடந்த மாதம் 23-ம் தேதி குமரி மாவட்டம் அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற ஜெயலலிதா, ‘‘நான் ஆட்சிக்கு வந்தால், குமரியில், பட்டா நிலங்களில் மத வழிபாட்டுத் தலங்கள் அமைக்க இருக்கும் தடைகளை நீக்குவேன்’’ எனப் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். உண்மையில் 1982-ல் மண்டைக்காடு கலவரத்தைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். அமைத்த நீதிபதி வேணுகோபால் கமிஷன்தான் குமரியில் புதிதாக மத வழிபாட்டுத் தலங்கள் அமைக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதையெல்லாம் தெரிந்து கொள்ளாமலே ஜெயலலிதா பேசிச் சென்றதை அ.தி.மு…

  8. கருணாநிதி ஒரு தெலுங்கர். தி.மு.க.விலிருந்து விலகியபோது, எம்.ஜி.ஆரும் இதைச் சொன்னார். அவர் தெலுங்கர் என்பதால்தான் தி.மு.க.வில் தெலுங்கு பேசும் ஏழு பேர் அமைச்சர்களாக இருக்காங்க. தமிழர் என்ற உணர்வு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே தென்னிந்தியர்களைக் குறிக்கும் திராவிடன் என்ற வார்த்தையை தமிழனுக்கும் சூட்டிவிட்டார்கள்’’ என்று பரபரப்பு குண்டுகளை வீசியிருக்கிறார், குடும்பப்பட இயக்குநர் வி.சேகர். சென்னையில் பத்திரிகையொன்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வி.சேகர், ‘‘தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும்னு தயாரிப்பாளர் சங்கத்தில் நான் சொன்னபோது, அங்கிருந்த சிலர் கேலியா சிரிச்சாங்க. கொஞ்சம் கவனிச்சப்பதான் புரிஞ்சது, சிரிச்சவங…

  9. அண்மையில் ஒரு நடிகர் தனது பலத்தைகாட்ட மிகப்பெரிய தம்பட்டத்துடன் ஒரு மாநாட்டை கூட்டி இருந்தார். தாம் தான் அடுத்த முதல்வர், ஏற்கனவே தமிழகத்தை ஆண்டுவிட்ட 2 பெரிய திராவிட கட்சிகளை உடைத்தெறிந்து விட்டு வாருங்கள் என்று மக்களை அழைத்திருக்கும் அவர், தனது கூட்டணியை விவரிப்பதாக கூறி ஒட்டுமொத்த அரசியல் முகங்களை திரும்ப செய்தார். கூட்டணியை அவர் அறிவித்தாரோ இல்லையோ அல்லது சூட்சமமாக வெளிப்படுத்தினாரோ. அது ஒருபுறம் இருக்கட்டும். அந்தப் பொதுக்கூட்டத்தில், அந்த பெரு நடிகர் பேசிய பேச்சை கேட்கும் போதுதான் தமிழகத்தின் தலைவிதி எங்ஙனம் உள்ளது என்று நமக்கு புரிகிறது. தமிழக மக்கள் கூத்தாடிகளின் கூத்துக்கு மயங்கிக்கிடக்கிறார்கள் என்று எண்ணி இருப்பாரோ என்னவோ, தனது மோசமான ஒழுக்ககேடான நடத்…

    • 0 replies
    • 1.1k views
  10. தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் செய்த குறுக்கீட்டால் உரையை பாதியில் நிறுத்திக்கொண்டார் கவர்னர். இதனையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர் சபைக் காவலர்கள். ‘கவர்னர் இருக்கும்போது உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை’ என்ற சர்ச்சை இப்போது அவைக்கு வெளியே கிளம்பியுள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரம், விலைவாசி உயர்வு என சாதகமான விஷயங்கள் கையில் இருக்கும் போது விடுவார்களா எதிர்க்கட்சிகள். எதிர்பார்த்தபடியே, பரபரப்புடன் கூடியது இந்த ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம். கவர்னர் உரை தொடங்கியதும், எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கு றுக்கிட்டு பேசத் தொடங்கினார். அப்போது அ.தி.மு.க. உறுப்பினர்கள், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ‘மைக்…

    • 0 replies
    • 996 views
  11. தமிழகத்தில் ‘கள்’ இறக்க அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானதும் கொங்கு மற்றும் நாடார் அமைப்புகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சும்மா இருக்குமா பா.ம.க.? வழக்கம்போல் சங்கு ஊத... சட்டென பின்வாங்கியிருக்கிறது தமிழக அரசு. ‘கள்’ இறக்க அனுமதிக்க வேண்டும் என்று கொங்கு மற்றும் நாடார் சமுதாயத்தினர் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். ஆனால், அரசு அசைந்து கொடுக்கவில்லை. தேர்தல் நேரத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க அரசு திட்டமிட்டது. கள் இறக்க அனுமதி கொடுத்தால் தென்னை, பனைத் தொழிலாளர்களின் ஓட்டுக்கள் அப்படியே கிடைக்கும் என்றும், அரசுக்கு வருவாய் ஈட்டியதாகவும் இ ருக்கும் என்றும் தி.மு.க. கணக்குப் போட்டது. இதற்கான உத்தரவையும் பிறப்பிக்க அரசு தயாரா…

    • 0 replies
    • 664 views
  12. சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 2 கோடியைத் தாண்டிவிட்டதாக திருவாங்கூர் தேவசம் போர்டு பெருமையுடன் கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால்... அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவிக்கும் பக்தர்கள் ‘ஐயோ..அப்பா’ என்று அலறுவது யார் காதிலும் விழவில்லை என்ற குற்றச்சாட்டு தமிழகத்தில் இருந்து புறப்பட்டிருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் 70 நாள் மகரவிளக்கு பூஜை தொடங்கியது. டீசல், பெட்ரோல் விலை உயர்வால் எகிறிப்போன வாகன வாடகையைக் கூட பொருட்படுத்தாமல், ஐயப்பனை தரிசிக்க தினந்தோறும் லட்சக்கணக்கானோர் இந்தியா முழுவதும் இருந்து செல்கின்றனர். கடும் குளிரிலும் வரும் பக்தர்களுக்கு உணவு, இருப்பிடம் போன்ற அத்தியாவசியத் தேவைகளை நி…

    • 0 replies
    • 644 views
  13. Tuesday, January 11th, 2011 | Posted by நிலா செந்தமிழன் சீமானை கொலை செய்ய திட்டம்? சீமான் அவர்களை கொலை செய்வதற்கான திட்டங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன என சில வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்தியாவின் தேர்தலை முன்னிட்டு சீமான் அவர்களை கொலை செய்து விட்டு எதிர்க்கட்சிகளிடம் பழியை போடவும் திட்டம் போடப்பட்டிருக்கின்றதாகவும் வதந்திகள் வெளிவருகின்றன. சீமான் அவர்கள் சிறையில் இருந்து வந்ததும் அவரை கொலை செய்வதாக போட்ட திட்டம், ஆனால் அதற்கான சந்தர்ப்பம் சரியாக அமையாததால், இப்போது அதற்கான சந்தர்ப்பம் வந்துள்ளதால் இந்த திட்டத்தை நிறைவேறுவதற்கு வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இத்திட்டத்தை, இலங்கையில் இருக்கும் இரண்டு ஆயுத குழுக்களால் நிறைவேற்ற உள்ளன. எமக்க…

  14. இந்திரா, ராஜிவ் கொலை வழக்கில் வெளிவராத மர்மங்களை இன்னும் மூன்று மாதங்களில் புத்தகமாக வெளியிடப் போவதாக பரபரப்பை ஏற்படுத்தி இ ருக்கிறார் தந்தை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் எஸ். துரைசாமி. தேர்தல் நேரத்தில் வெளிவரப்போகும் இந்தப் புத்தகம் காங்கிரஸ் தலைவர்கள் பலரின் தூக்கத்தைக் கெடுக்கும் என்று ஆரூடம் கூறுகின்றனர் அக்கட்சியினர். தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளை படகு மூலம் வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சி செய்ததாக புதுச்சேரியைச் சேர்ந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகுஐயப்பன், தி.மு.க., கவுன்சிலர் சக்திவேல், காரைக்கால் பா.ம.க., மாநில அமைப்பாளர் தேவமணி ஆகியோர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். ஆனால் கைது ச…

  15. தெல‌ங்கானா கா‌‌ங்‌கிர‌ஸ் எ‌ம்.‌பி.‌க்‌க‌ள், எ‌‌ம்.எ‌ல்.ஏ.‌க்க‌ள் ரா‌ஜினாமா? தெல‌ங்கானாவை சே‌ர்‌ந்த கா‌‌ங்‌கிர‌ஸ் எ‌ம்‌.பி‌.க்‌க‌ள், எ‌‌ம்.எ‌ல்.ஏ.‌க்க‌ள் ரா‌ஜினாமா செ‌ய்வது கு‌றி‌த்து இ‌ன்று மு‌க்‌கிய முடிவு எடு‌க்க உ‌ள்ளன‌ர். தெல‌ங்கானா அமை‌ப்பத‌ற்கான மசோதாவை வரு‌ம் நாடாளும‌ன்ற கூ‌ட்ட‌த் தொட‌ரி‌‌ல் தா‌க்க‌ல் செ‌ய்து ‌நிறைவே‌ற்ற வே‌ண்டு‌ம் எ‌ன்பது அவ‌ர்க‌ளி‌‌ன் கோ‌‌ரி‌க்கையாகு‌ம். த‌ங்க‌ளி‌ன் கோ‌ரி‌க்கையை கா‌ங்‌‌கிர‌ஸ் மே‌லிட‌ம் புற‌க்க‌ணி‌ப்பதாகவு‌ம் தெல‌ங்கானா பகு‌தி கா‌ங்‌கிர‌சா‌ர் கருது‌கி‌ன்றன‌ர். எனவே அடு‌த்த போரா‌ட்ட‌ம் கு‌றி‌த்து முடிவு எடு‌க்க இ‌ன்று ‌பி‌ற்பக‌லி‌ல் அவ‌ர்க‌ள்‌ மு‌க்‌கிய ஆலோசனை‌யி‌ல் ஈடுபட உ‌ள்ளன‌ர். தெல‌ங்கானா மசோதாவை ‌நிறைவே…

    • 0 replies
    • 312 views
  16. தே.மு.தி.க.வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு ஞாயிற்றுக்கிழமை சேலத்தில் நடந்தது. இதையொட்டி பத்திரிகைகளில் தே.மு.தி.க. நிர்வாகிகளால் 7-ம் தேதி மாலை பத்திரிகை ஒன்றில் தரப்பட்ட விளம்பரத்தில், அ.தி.மு.க.வை விமர்சித்து விளம்பரம் ஒன்று வெளியாக, அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணி ஏற்படும் என இருகட்சித் தொண்டர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த மர்ம விளம்பரம் பெரிய பரபரப்பை ஏற்படுத் தியது. இதையடுத்து, பத்திரிகை அலுவலகங்களுக்கு அறிக்கை அனுப்பிய விஜயகாந்த், ‘‘முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வை விமர்சித்து வந்த விளம்பர த்திற்கும், தே.மு.தி.க.விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இன்றைய கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரானவர்கள் ஒன்றுசேர்ந்து விடக்கூடாத…

    • 0 replies
    • 492 views
  17. கனிமொழியும் திமுகவும் (தேர்தல் ஸ்பெஷல்) கழுதையைப் பற்றித் தெரிந்த அளவிற்கு எனக்கு கவிதையைப் பற்றித் தெரியாது. எனவே கனிமொழியின் கவிதையைப் பற்றியும் அவர் உண்மையிலேயே கவிஞர் தானா என்பது பற்றியும் ஆராய்வதை விட்டுவிட்டு, தேர்தல் ஸ்பெஷல் தொடரில் கனிமொழியின் அரசியலைப் பற்றி இன்று பார்ப்போம். சென்ற சட்டமன்றத் தேர்தலில் கலைஞர் ஜெயித்து ஆட்சியில் அமர்ந்தபோது, எதனாலோ ‘இதுதான் அவரது கடைசித் தேர்தல் & ஆட்சி’ என்ற எண்ணம் திமுகவினரிடம் வந்திருந்தது. கலைஞரின் துணைவியான ராஜாத்தியம்மாளுக்கும் அவரது மகளான கனிமொழிக்கும் அந்த எண்ணம் சற்று வலுவாகவே இருந்திருக்க வேண்டும். எனவே கலைஞரின் காலத்திலேயே பொருளாதார ரீதியிலும் அரசியல்ரீதியாகவும் செட்டில் ஆவது என கனிமொழி & கோ முடிவு செய்த…

  18. இது நவீன இன சுத்திகரிப்பு! சாறு உறிஞ்சப்பட்ட சக்கையை இயந்திரம் வெளியே துப்புவதுபோல, 'சிங்காரச் சென்னை’யைத் தங்கள் உழைப் பால் உருவாக்கிய குடிசை மக்கள் நகரத்துக்கு வெளியே துரத்தி அடிக்கப்படுகின்றனர். பறக்கும் ரயில், பறக்கும் சாலை என்ற பிரமாண்டத் திட்டங்க ளுக்கு இரையான இந்தக் கூலித் தொழிலாளர்கள் இப்போது 40, 50 கி.மீ. தாண்டி நவீன 'கார்ப்ப ரேட் சேரி’களில் கிடக்கின்றனர். பழைய மகாபலிபுரம் சாலை, ஒக்கியம் துரைப்பாக்கத்தில் ஒரே இடத்தில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கும் கண்ணகி நகர், அப்படிப்பட்ட குடியிருப்புகளில் ஒன்று! 'குப்ப மாதிரி வாரியாந்து கொட்டிட்டானுங்கோ. இங்க ஒரு வசதியும் கெடியாது. நாங்க தெனமும் செத்துக்கினு கிடக்கோம்’ என்று புலம்பும் இவர்களின் தினசரி வாழ்க்கை மி…

  19. மாவோயிஸ்ட் தலைவர் கோபால்ஜியுடன் நேர்காணல் அல்பாஷா: உலகின் பிற பகுதிகளில் கம்யூனிசம் வீழ்ச்சியுற்றுக் கிடக்கிறது. இந்தியாவின் சோசலிக அரசை அமைக்க முடியும் என்று நீங்கள் எந்த அடிப்படையில் நம்புகிறீர்கள்? கோபால்ஜி: சோசலிசத்துக்கும் கம்யூனிசத்துக்கும் இனி எதிர்காலமே இல்லை என்கிற கருத்து ஏகாதிபத்தியவாதிகளாலும் முதலாளியத்தைத் தூக்கிப் பிடிப்பவர்களாலும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டில் முதல் சுற்றுப் புரட்சிகள் நடந்தன. உழைக்கும் வர்க்கத்தால், கம்யூனிஸ்டு கட்சிகளின் பாட்டாளிகளால் உலகின் பல பகுதிகளில் - இரஷ்யப் புரட்சி, சீனப்புரட்சி, வியத்நாம் புரட்சி முதலான புரட்சிகள் வெற்றி பெற்றன. 21 ஆம் நூற்றாண்டில் புதிய புரட்சி அலை வீசும். இந்தியாவில் எங்கள் கம்…

  20. தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுவது எங்கள் உரிமை-வைகோவுடன் சீமான் * Monday, January 10, 2011, 14:08 நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான், ம.தி.மு.க. அலுவலகத்திற்கு இன்று காலை 10.55 மணிக்கு வந்தார். 1 1/2 மணி நேரம் அவர் வைகோவை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது வைகோ கூறியதாவது:- தமிழ் ஈழ மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் ஈழ விடுதலைக்காகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் போராடும் போராளி சீமான் மீது இரண்டு முறை தேசிய பாதுகாப்பு தடுப்பு சட்டம் தவறாக பயன் படுத்தப்பட்டது. சிறைச் சாலைகளில் அடக்குமுறை. லட்சிய தாகம் கொண்டவர்களை ஒடுக்க முடியாது. சீமான் கைது செய்யப்பட்டதும் முதல் கண்டன அறிக்கை ம.தி.மு.க. கொடுத்தது. சீமான் ப…

  21. ஞாயிற்றுக்கிழமை, 9, ஜனவரி 2011 (23:46 IST) விமான விபத்து : 105 பயணிகளின் கதி? ஈரானில் 105 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்தவர்கள் பற்றிய தகவல் இதுவரை கிடைக்கவில்லை. nakkheean.

  22. திருந்தாத தி.மு.க.! ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிரடி! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சில நாட்கள் அமைதிக்குப் பிறகு தி.மு.க.வை நோக்கித் தமது சர வெடிகளைக் கொளுத்திப் போடத் தொடங்கிவிட்டார். “தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்ந்தால் தோல்விதான்” என்பது அவரது சமீபத்திய அணுகுண்டு. “காங்கிரஸ் தலை மையையே மிரட்டுகிறார் இளங்கோவன்!” என்று பதிலடி கொடுத்திருக்கிறார் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம். இளங்கோவன் சும்மா இருப்பாரா? இதோ சீறி எழுகிறார்... சில நாட்கள் அமைதியாக இருந்த நீங்கள் ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெடித்தவுடன் கணைகளை வீசத் தொடங்கியுள்ளீர்கள். மேலிடம் அமைதியாக இருக்கச் சொன்னதா? “காங்கிரஸ் ஒரு ஜனநாயக இயக்கம். தொண்டர்களின் கருத்துகளுக்கு நான் ஒரு வடிகாலாக இருக்கிறேன். எனக்கு யா…

  23. 2050 ஆம் ஆண்டு வாக்கில், அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டுவிட்டு, வாங்கும் சக்தி அடிப்படையில், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் சாத்தியம் உள்ளதோடு, சீனாவையும் முந்தக் கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் வருகிற 2020 ஆம் ஆண்டு வாக்கில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு சீனா, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் சாத்தியம் உள்ளதாகவும், "2050ல் உலகம்" என்ற தலைப்பில், சந்தைகள் மற்றும் தொழில்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளும் நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது. சமச்சீரான வாங்கும் திறன் அடிப்படையிலான பொருளாதார அளவீடுகளின் அடிப்படையிலேயே, ஒரு நாட்டின் ஜிடிபி (GDP) எனப்படும் பொருளாதார வளர்ச்சி விகிதம் கண…

    • 5 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.