உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம் * Friday, December 10, 2010, 4:15 சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்தும் வகையிலும், மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கத்துடனும் டிசம்பர் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச மனித உரிமைகள் தினத்தைப் பிரகடனம் செய்ததையடுத்து கடந்த 62 ஆண்டுகளாக மேற்படி தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இலங்கையில் பல பாகங்களிலும் பல்வேறு விசேட நிக…
-
- 1 reply
- 429 views
-
-
லட்சக்கணக்கான ரகசியங்களை வெளியிட்டு அமெரிக்காவை பெரும் சிக்கலுக்கும் தலைகுனிவுக்கும் உள்ளாக்கியுள்ள விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜுலியன் அஸாங்கே கைது Wikileaks founder Julian Assange arrested in London The founder of the whistle-blowing website Wikileaks, Julian Assange, has been arrested by the Metropolitan Police. The 39-year-old Australian denies allegations he sexually assaulted two women in Sweden. Scotland Yard said Mr Assange was arrested on a European Arrest Warrant by appointment at a London police station at 0930 GMT. He is due to appear at City of Westminster Magistrates' Court later. Mr Assange is accused by the Swedish authori…
-
- 7 replies
- 1.1k views
-
-
ரானின் கடற்படையினரால் பெருந்தொகையான தற்கொலைப் படகுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பயங்கர வெடிமருந்துகள் இணைக்கப்பட்ட 9000 க்கும் அதிகமான வேகப் படகுககளை ஈரானின் கடற்படை உருவாக்கியுள்ளது. இந்தப் படகுகள் பாரசீக வளைகுடாப் பிரதேசத்தில் காவல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இந்தப் பிரதேசத்தில் தான் பிரிட்டிஷ் கடற்படைக் கப்பல்களும் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இந்தத் தற்கொலைப் படகுகள் அனைத்திலும் தீவிர தற்கொலைப் போராளிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எதிரிக் கப்பல் ஒன்றில் மூர்க்கமாகப் பாயும் ஆற்றல் கொண்ட இந்தப்படகுகள் ஒரு கப்பலில் ஏழு மீட்டர் ஆழமான குழியை ஏற்படுத்தும் அளவுக்கு வெடிமருந்துகளைக் கொண்டவை. ஈரானியப் போர்க்கப்பல்களையும். இத்தகை…
-
- 0 replies
- 626 views
-
-
மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் தொடர்பாக, அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கமல், நடிகை த்ரிஷா மற்றும் இசையமைப்பாளருக்கு இந்து மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வக்கீல் ராஜசெந்தூர் பாண்டியன் மூலம் அனுப்பியுள்ள நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கண்ணோடு கண்ணை கலந்தாள் என்றால் என்ற பாடலில் இடம் பெற்றுள்ள நேரடி கருத்து தொடர்பாக இந்த நோட்டீஸ் உங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த பாடல் இந்து சமயத்தை வழிபடுபவர்களையும், கோடி கணக்கான இந்து சமயத்தை சார்ந்தவர்களையும், இந்து சமயத்தை பின்பற்றுபவர்களையும் மனவருத்தம் அடையும் அளவிற்கு அமைந்துள்ளது. நமது நாட்டின் சட்டங்களையும், மதஉ…
-
- 0 replies
- 888 views
-
-
வடஇந்தியாவின் காசி மாநகரில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். பால் பாத்திரத்துக்குள் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததாக உத்திரப் பிரதேசக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மாலையில் கங்கையில் நீராட வந்திருந்த பக்தர்கள் மத்தியில் குண்டு வெடித்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். குண்டு வெடிப்பைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் காவல் துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காசியில் இடம்பெற்ற மற்றொறு குண்டு வெடிப்பில் இருபது பேர் கொல்லப்பட்டனர். இந்துக்களின் புனித நகரங்களில் காசி முக்கிமானது. இந்த குண்டு வெடிப்பை தாங்கள்தான் செய்ததாக இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு உரிமைகோர…
-
- 2 replies
- 492 views
-
-
சொந்தங்களுக்காக பதவி வகிப்பவர் கருணாநிதி: விஜயகாந்த் சிதம்பரம் : சொந்தங்களுக்காக பதவி வகிக்கும் கருணாநிதி மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை என விஜயகாந்த் எம்.எல்.ஏ., கூறினார். கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட சிதம்பரம் நேரு நகர், நந்திமங்கலம், குமராட்சி, கீழவன்னியூர், திருநாரையூர் ஆகிய பகுதிகளை தே.மு.தி.க., நிறுவனத் தலைவரும், விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான விஜயகாந்த் நேற்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கன மழையால் கடலூர் மாவட்டம் தான் அதிகம் பாதித்துள்ளது. சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதிகளை பார்வையிடும் போது, குடிசை வீடுகள் இடிந்த…
-
- 0 replies
- 505 views
-
-
சவுதி அரேபியாவில் தனது பராமரிப்பில் இருந்த குழந்தையைக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிஷானா நஃபீக்கின் தண்டனையை சவுதி மன்னர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரிஷானாவின் தண்டனை ரத்துச் செய்யப்பட்டு அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்ததை அடுத்தே இந்த தண்டனையை தற்காலிகமாக இடை நிறுத்த சவுதி மன்னர் ஒப்புக்கொண்டுள்ளதாக இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலவாழ்வு அமைச்சர் டிலான் பெரேரா நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் அடிப்படையில் ரிஷானாவின் தண்டனையை ரத்துச் செய்யும் …
-
- 0 replies
- 839 views
-
-
வரும் ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் சரக்கடிக்கும் வரையோ அல்லது அடுத்த புதியத் தமிழ்த்திரைப்படம் வெளியாகும் வரையோ, பேசிப் பொழுதுபோக்குவதற்கு வழிசெய்திருக்கிறது ஒரு இணையதளம், பெயர் 'விக்கிலீக்ஸ்' (www.wikileaks.org).ஆரம்ப காலங்களில் இருந்து விக்கிலீக்ஸ் குறித்து அவதானித்து வருபவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. கிட்டத்தட்ட நம் ஊர் ஏ.வி.எம் ஸ்டுடியோஸிற்கு அடுத்தப்படியாக சொன்ன தேதி தவறாமல் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு, அதிரடித் திருப்பங்களை உருவாக்குவதில் கெட்டிக்காரர்கள். வழக்கம் போல நாம் விக்கிலீக்ஸ் வெளியிட்ட புதிய/பழையத் தகவல்கள் குறித்து இங்கு பேசப்போவதில்லை, விக்கிலீக்ஸ் எப்படிக் கட்டமைக்கப் பட்டது, அதன் வரலாறு, எவ்வாறு செயல்படுகிறது, இணையத்தளத்தின் பாதுகாப்பு, அதில் ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
கோவையில் விரட்டியடிக்கப்பட்ட சிங்கள அமைச்சர், எம்பி!! – மதிமுக, பெரியார் திக ஆவசம் இன்று கோவையில் ஜவுளி வர்த்தகக் கண்காட்சியை திறந்து வைக்க வந்த இலங்கை அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் எம்பி காசிம் பைசல் இன்று பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்களால் விரட்டியடிக்கப்பட்டனர். இலங்கையில் ஆயிரக்கணக்கில் தமிழைக்கொன்று குவித்த போர்க்குற்றவாளி ராஜபக்சே அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இவர்கள் தமிழ் மண்ணில் கால்வைக்கக் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, கண்காட்சியை திறந்து வைக்காமலேயே பின்வாசல் வழியாக இருவரும் ஓட்டம் பிடித்தனர். கோவை கொடிசியாவில் ஜவுளி கண்காட்சி நடைப்பெற்று வருகிறது. இதில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளர்களாக இலங்கை…
-
- 0 replies
- 747 views
-
-
தனது தேசிய பாதுகாப்புக்கு இன்றியமையாதவையென அமெரிக்கா கருதும் உலக நாடுகளிலுள்ள பல கட்டமைப்புகள், தலங்களின் பட்டியலை விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. அனைத்து நாடுகளிலும் தனது பாதுகாப்புக்கு முக்கியமான கட்டமைப்புகளை பட்டியல்படுத்துமாறு தனது தூதரகங்களுக்கு 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிணங்கவே மேற்படி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் காஸ் விநியோகக் குழாய்கள், சுரங்கங்கள், தொலைத் தொடர்பு நிலையங்கள்,போன்றவையும் இடம்பெற்றுள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய யுத்தமொன்றை நடத்துவதாக அமெரிக்கா கருதினால், அமெரிக்காவின் பாதுகாப்புக்கு முக்கியமான கட்டமைப்புகளின் விபரத்கொத்தாக இப்பட்டி…
-
- 0 replies
- 523 views
-
-
41 வயது மதிக்கதக்க ஒருவர் லண்டன் மாட்ரிட் தொடரூந்து நிலையத்தில் நிற்கும் போது , தவறுதலாக பின்னோக்கி நடந்து தண்டவாளத்தில் தலையின் பின் பக்கம் அடிபட விழுந்துள்ளார் , முள்ளந்தண்டிலும் தலையிலும் அடிபட்ட காரணத்தினால் அவரால் எழுந்திருக்க முடியவில்லை , அவர் குறுக்கே இருக்கமால் தண்டவாளத்துக்கு நடுவே நகர்த்தி கொள்கிறார் , அப்போது இன்னும் ஒரு நிமிடத்தில் தொடரூந்து வர இருப்பதாக நிலையத்தில் காண்பிக்க படுகிறது , தொடரூந்தை மக்கள் காண மக்கள் அதனை மறிக்க முற்படுகின்றனர் ..... ஆனால் ..30 வயது உடைய முந் நாள் போலீஸ் அதிகாரி ஒருவர் உடனடியாக குதித்து அம் மனிதரை சரியான நேரத்தில் காப்பாற்றுகிறார் இக் காட்சியை நிலைய கமராக்கள் படம் பிடித்துள்ளது .. வீடியோ வை இங்கே பாருங்கள். http…
-
- 0 replies
- 607 views
-
-
சில நாட்களுக்கே முன்னதாக வட கொரியா தென் கொரியா மீது வீசிய செல் தாக்குதல்களால் இருவர் கொல்லப்பட்டது தெரிந்ததே. இன்று இது சம்பந்தமாக ஆரம்ப யுத்த குற்ற விசாரணைகளை வட கொரியாவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடங்கியது! ICC Prosecutor: alleged war crimes in the territory of the Republic of Korea under preliminary examination The Office of the Prosecutor has received communications alleging that North Korean forces committed war crimes in the territory of the Republic of Korea. The Prosecutor of the ICC, Luis Moreno-Ocampo, confirmed that the Office has opened a preliminary examination to evaluate if some incidents constitute war crimes under the jurisdicti…
-
- 0 replies
- 463 views
-
-
திங்கட்கிழமை, 6, டிசம்பர் 2010 (13:12 IST) கிளிநொச்சி நகர்: திருச்சி அருகே பரபரப்பு இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காக போராடி உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 27ஆம் தேதி மாவீரர் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் மாவீரர் நாள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நவம்பர் 27ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டது. இதேபோல் கடந்த நவம்பர் 27ஆம் தேதி திருச்சி அருகே எடுமலை கிராமத்தில் உள்ள காட்டில் மாவீரர் நாள் அன்று நாம் தமிழகம் கட்சியின் மண்ணச்சநல்லூரி பகுதியின் ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இளம்பரிதி உள்பட சிலர் அஞ்சலி செலுத்தினர். அப்போது அந்த காட்டுப் பகுதிக்கு கிளிநொச்சி நகர் என பெயர் சூட்டி பெயர் பலகையு…
-
- 0 replies
- 906 views
-
-
மூர்க்கத்தனமான கொலை வெறித் தாக்குதலில் நெற்றியை இழந்த இளைஞர்! (பட இணைப்பு) சனி, 04 டிசம்பர் 2010 16:20 Share290 ஸ்டீவன் குளோக் என்ற 26 வயது நபர் ஒருவரால் முரட்டுத்தனமாகத் தாக்கப்பட்டதால் தனது நெற்றியின் ஒரு பகுதியை இழந்துள்ளார். இவரைத் தாக்கிய ஜெக் ஹொப்ஸ் என்ற நபர் அவரின் முகத்தில் குத்தி கீழே வீழ்த்தி பூட்ஸ் கால்களால் தலையில் ஏறி மிதித்துள்ளார். ஒரு இடத்தில் பொருள் வாங்கிக் கொண்டிருந்த போது தன்மீது மோதிவிட்டுத் தன்னை முறைத்துப் பார்த்ததாலேயே இவரைத் தாக்கியதாக ஜெக் ஹொப்ஸ் தெரிவித்துள்ளார். தாக்குதலை நடத்திய போது இவர் மதுபோதையில் இருந்துள்ளார். தாக்கப்பட்ட ஸ்டீவனின் தலையிலும் மூளையிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நெற்றியின் பெ…
-
- 0 replies
- 752 views
-
-
அமெரிக்காவுக்கு ஏன் இந்தியாவின் வளர்ச்சி தேவை? சதுக்கபூதம் India’s prosperity is good news for US - ஒபாமாவின் இந்த பேச்சை தான் இந்தியாவில் (மட்டும்) அனைத்து பத்திரிக்கைகளும் முக்கிய செய்தியாக வெளியிட்டு உள்ளது. அமெரிக்காவில் தற்போதுள்ள பொருளாதார பின்னடைவு காரணமாக ஏற்பட்ட அமெரிக்க கம்பெனிகளின் இழப்பை ஈடுகட்ட இந்தியாவின் வளரும் பொருளாதாரம் உதவியாக இருக்கும் என்று தான் அனைவரும் நினைக்க தோன்றும். அதற்கு பின் வேறொரு முக்கிய காரணமும் உள்ளது. அது என்ன காரணம் என்று பார்ப்போம். எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் முக்கிய காரணகர்த்தாவாக உள்ளது அந்நாட்டில் உள்ள இளைஞர்களின் சக்தியே. இளைஞர்களிடம் கடின உழைப்பு, புதுமையான சிந்தனை, எளிதில் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் தன்மை ப…
-
- 0 replies
- 881 views
-
-
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பதவியும், இந்தியாவின் தகுதியும்! உலகத் தலைவர்களில் ஒருவராக இடம்பெறுவதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு இந்தியா முட்டி மோதிக்கொண்டிருக்கையில், இந்தியாவின் தலைமை பொறுப்பில் இருப்பவர் யார் என்பது குறித்தே உலகின் பெரும்பாலான நாட்டவர்களுக்கு தெரியவில்லை என்று ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஆசியாவின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளதாகவும், வேகமாக வளரும் நாடாக திகழ்வதாகவும், சர்வதேச பிரச்சனைகளில் தீர்மானிக்கிற சக்தியாக உள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளதாகவும் இந்தியாவுக்கு வந்துவிட்டு போகும் பல உலக நாட்டு தலைவர்கள் புகழ்ந்துவிட்டு போவது உண்டு.ஏன் நமக்கு நாமே அவ்வாறு புகழ்ந்து கொள்வதும் உண்டு. இந்நி…
-
- 2 replies
- 1.1k views
-
-
முதல்வர் கருணாநிதி தனது சொத்துக் கணக்கை வெளியிட்டுள்ளார். அதில், கோபாலபுரம் வீட்டைத் தவிர எந்த சொத்தையும் தான் வாங்கவில்லை என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அம்மையார் ஜெயலலிதா தொடங்கி, அந்தக் கட்சியிலே உள்ள அடிமட்டத் தொண்டர்கள் வரையிலும்- ஏன், தமிழகத்திலே உள்ள வேறுசில கட்சிகளின் நண்பர்கள் ஒரு சிலரும்- என்னைப் பற்றி குறிப்பிடும் போது- நான் ஏதோ "சல்லிக்காசு'' கூட கையிலே இல்லாமல் சென்னைக்கு வந்ததைப் போலவும்- இன்றைக்கு ஆசியாவிலேயே முதலாவது பணக்காரனாக இருப்பதாகவும்- என் பெயரில் ஏராளமான சொத்துக்களையும், எஸ்டேட்டுகளையும் வாங்கிக் குவித்திருப்பதைப் போலவும் பேசி வருகிறார்கள், எழுதி வருகிறார்கள். என்னைப் ப…
-
- 3 replies
- 1.4k views
-
-
மூதூர் பிரதேச செயலகத்தில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 3.25மணி வரை இடம்பெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வில் 201 பேர் சாட்சியமளித்துள்ளனர். இன்றைய அமர்வின் போது 93 சாட்சியங்கள் காணாமல் போனோர் தொடர்பிலும் 60 சாட்சியங்கள் தடுப்பு காவலி;ல் உள்ளேர் தொடர்பிலும் 19 சாட்சியங்கள் கடத்தி செல்லப்பட்டோர் தொடர்பிலும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 29 சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேவேளை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினர் மேற்கொள்ளவிருந்த சம்பூர் பகுதிக்கான விஜயம் இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-…
-
- 1 reply
- 589 views
-
-
தற்போது உலகெங்கிலும் பரபரப்பாக பேசப்படும் செய்தி அயர்லாந்து பெயில் அவுட். வெளிப்படையாக செய்தியை பார்ப்போர் எல்லாம் அனுமானிப்பது 'அயர்லாந்து அரசு பொறுப்பில்லாமல் வரவுக்கு மீறி செலவு செய்து நாட்டை படுபாதாளத்தில் தள்ளி இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியால் மீட்கப்படுகிறது' என்பதாகும். ஆனால் உண்மையான செய்தி அதுவல்ல. தற்போது உண்மையில் பெயில் அவுட் நடப்பது அயர்லாந்துக்கு அல்ல. இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய தனியார் வங்கிகளுக்குத் தான். இதன் பயனை அனுபவிக்கப் போவது அயர்லாந்து மக்கள் அல்ல. ஐரோப்பிய தனியார் வங்கிகளும், இங்கிலாந்து மற்றும் யூரோ அரசாங்கமும் தான். ஆனால் இதனால் ஏற்படப் போகும் இழப்புகள் விழப்போவது அயர்லாந்து மக்களின் தலை மீது தான். ஆச்சரியமாக இருக்கிறதா? அது தான…
-
- 4 replies
- 725 views
-
-
சனிக்கிழமை, 4, டிசம்பர் 2010 (22:44 IST) பூலோக அழகியாக இந்திய பெண் தேர்வு 2010ஆம் ஆண்டுக்கான பூலோக அழகியாக இந்தியாவின் நிக்கோல் ஃபாரியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய முன்னாள் அழகியான இவர் பெங்களூருவைச் சேர்ந்தவர். 2010ஆம் ஆண்டுக்கான பூலோக அழகி தேர்வு செய்யும் போட்டி, வியட்நாமில் நடைபெற்றது. பல்வேறு சுற்றுக்களாக நடைபெற்ற இந்த போட்டியில், இந்தியாவின் நிக்கோல் ஃபாரியா பூலோக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அறிவாற்றல் போட்டியில் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினார். nakkheeran
-
- 0 replies
- 658 views
-
-
இந்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) இணையதளத்தை பாகிஸ்தான் விஷமிகள் சிதைத்துள்ளனர். நேற்றிரவு சிபிஐ இணையதளத்தின் முதல் பக்கத்தில் "சிதைக்கப்பட்டுள்ளது" என்ற தகவலுடன் "பாகிஸ்தான் இணையதள ராணுவம்" என்கிற வாசகமும் அத்துமீறி வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உளவுத்துறையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. தேசிய தகவலியல் மையத்தால் சிபிஐ உள்ளிட்ட அரசின் இணையதளங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இணையதளத்தின் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி இவ்வாறு சிபிஐ இணையதளம் சிதைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிபிஐ உத்தரவிட்டுள்ளது. மேலும், இணையதளம் மீண்டும் பாதுகாப்பாக இயங்க நடவடிக்கை …
-
- 0 replies
- 500 views
-
-
போபால் விஷவாயு சம்பவத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு அதில் உயிரிழந்தோருக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெள்ளிக்கிழமை மெüன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநிலங்களவையில் போபால் சம்பவத்தை நினைவு கூர்ந்த அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி, இத்துயரச் சம்பவம் நிகழ்ந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் அதனால் ஏற்பட்ட கோரமான பாதிப்புகள் இன்றும் நம்மைத் தொடர்கின்றன. அங்கு இன்றும் குறைபாடுகளுடைய குழந்தைகள் பிறக்கின்றனர். பலர் நோயில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர். மனித சமுதாயத்துக்கு நேர்ந்த இந்த மிகப்பெரிய கொடுமை உலகின் மனசாட்சியை இன்று வரை உலுக்கி வருகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் முடிந்த அளவுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்றார். மக்களவையில் அஞ்சல…
-
- 5 replies
- 919 views
-
-
பிரித்தானிய சென்றுள்ள இன வெறி பிடித்த போர்க்குற்றவாளி மகிந்த இராசபக்சேவை கைது செய்யக்கோரி சென்னையில் பிரித்தானிய தூதரகம் முன்னால் தமிழ்நாடு மாணவர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ந.பன்னீர்செல்வம் தலைமையில் போராட்டம் நடத்தி மனு ஒன்றையும் தூதரகத்தில் அளித்துள்ளனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சினர் மற்றும் ஜாதி ஒழிப்பு விடுதலை முன்னணி ஆகியோர்கள் கலந்து கொண்டனர் . http://meenakam.com/2010/12/03/15267.html
-
- 0 replies
- 785 views
-
-
ஐதராபாத்: ஆந்திராவில் புதிய அமைச்சரவை பதவியேற்ற முதல் நாளே சிக்கல் ஆரம்பித்து விட்டது. இலாகா ஒதுக்கீட்டில் அதிருப்தி அடைந்த இரண்டு அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். மேலும் 8 அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் முதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆந்திர முதல்வராக இருந்த ரோசய்யா கடந்த வாரம் திடீரென ராஜினாமா செய்தார். உடல் நலம் சரியில்லாத காரணத்தால் பதவி விலகுவதாக ரோசய்யா வெளிப்படையாக தெரிவித்தாலும், ஜெகன்மோகன் ரெட்டி விவகாரத்தையும், தெலங்கானா விவகாரத்தையும் சரியாக கையாளவில்லை என மேலிடம் அதிருப்தி தெரிவித்த காரணத்தினால்தான் ராஜினாமா செய்ததாக ஐதராபாத் வட்டாரங்கள் தெரிவித்தன. இதை தொடர்ந்து இந்த இரண்டு பிரச்னைகளையும் …
-
- 0 replies
- 554 views
-
-
நாராயணன் கிருஸ்ணன்,சி.என்.என் தொலைக்காட்சியால் உலகில் மக்களுக்கு சேவை செய்த முதல் 10 பேர்களில் ஒரு தமிழராக தெரிவு செய்யப்பட்டார். 10 heros http://www.youtube.com/watch?v=TKhP4B3A0tQ
-
- 1 reply
- 828 views
-