Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கச்சதீவை நோக்கி 10 ஆயிரம் இந்திய மீனவர்கள் படையெடுப்பு: ஒக்டோபர் 11 இல் போராட்டத்துக்கு ஏற்பாடு! இந்திய மீனவர்கள் 10,000 பேர் கச்சத்தீவை நோக்கிச் செல்லும் போராட்டம் ஒன்றை எதிர்வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி வருவதற்குக் கண்டனம் தெரிவித்தே இவர்கள் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கச்சத்தீவு அருகே சென்று மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுடுவது தொடர்கதையாகிவிட்டது. இது குறித்து மத்திய அரசும் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. இந்திய அரசின் மெளனமும், அலட்சியமும் இலங்கை கடற்படையினருக்கே சாதகமாக உள்ளன. சுடப்படுவதும், உயிரிழப்பதும், …

  2. அமெரிக்க பணக்காரர்கள்: தொடர்ந்து முதலிடத்தில் பில் கேட்ஸ் பாஸ்டன், செப்.23: அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 17-வது ஆண்டாக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் முதலிடத்தில் உள்ளார். 400 பேர் கொண்ட இந்தப் பட்டியலை "ஃபோர்ப்ஸ்' நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் 4 அமெரிக்க வாழ் இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர். 5,400 கோடி டாலர் சொத்து மதிப்புடன் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார் பில் கேட்ஸ். இவருக்கு அடுத்தபடியாக தொழிலதிபர் வாரன் பஃபட் 4,500 கோடி டாலர் சொத்துடன் இரண்டாவது இடத்திலும், ஆரக்கிள் இணை நிறுவனர் லாரி எலிசன் 2,700 கோடி டாலர் சொத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இணையதளத்தில் மிகவும் பிரபமான ஃபேஸ்புக் வலைதளத்தின் நிறுவனர் மார்க் ஜுகர்ப…

  3. சந்தோசமாக இருக்க வேண்டுமானால் முதலில் பிரித்தானியாவை விட்டு வெளியேறுங்கள் - புதிய ஆராய்ச்சி புதன், 22 செப்டம்பர் 2010 12:21 ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரிய நாடுகள் எவை என்பது குறித்த ஆய்வொன்று நடத்தப்பட்டு அதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில் பிரித்தானியாவும் , அயர்லாந்தும் வாழத் தகுதியற்ற நாடுகள் எனக் கூறப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் சிறந்த நாடாக தெரிவாகியுள்ளது. வருமானம், வரி, அத்தியாவசிய பொருட்களின் விலை, பொதுவாக ஓய்வு பெறும் வயது வரம்பு , பாதகமான சீதோஷ்ண நிலை, விடுமுறை நாட்கள் , செலவு இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் ஆராய்ச்சிக்குட்படுத்தப்…

  4. டெல்லி செங்கோட்டையிலிருந்து கன்னியாகுமரி வட்டகோட்டை வரை தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆட்சி அலங்கோலத்தைப் பற்றி பேசாதவர்கள் மிக குறைவு, வடக்கில் இருந்து வந்து தமிழகத்தை சுரண்டுகிறார்கள் என்று வீதிதோறும் மேடை போட்டு பாட்டுபாடி தீர்த்தவர்கள், இன்று வடக்கே சென்று ஆட்சி பீடத்தில் ஒட்டிக்கொண்டு ஒட்டுமொத்த தேசத்தையே உண்டுயில்லை என்று ஆக்கி கொண்டிருப்பதாக நாடு முழுவதும் பேசப்படுகிறது தி.மு.காவின் சுரண்டலை தாங்க முடியாமல் திரு. ராகுல்காந்தி கூட கொதித்து போயிருப்பதாக கேள்வி, இப்படி எல்லாதரப்பிலும் கரித்து கொட்டும் அளவிற்கு இவர்கள் செய்த தவறுகள் தான் என்ன? கலைஞர் அரசால் ஒரு ரூபாய்க்கு அரசி உட்பட இரண்டு ஏக்கர் நிலம், இலவசதொலைக்காட்சி பெட்டி, மருத்துவ காப்பிடு திட்டம் என ஏகப்பட்ட…

  5. இந்திய அரசமைப்பு சட்டம் உருவானபோது ஒரு முக்கிய விவாதம் நடந்தது. அமெரிக்கா போன்று “”பெடரல் “”அமைப்பா?--அல்லது ஒருங்கிணந்த இந்தியாவின் “”சமஷ்ட்டி ஆட்சிமுறையா? அமெரிக்கவில் பெடரல் அமைப்பில் உள்ள மாநிலங்கள்--எப்போதுவேண்டுமானாலும் பிரிந்துபோகலாம்--புதிதாகவும் வந்து சேரலாம்--இக்காரணத்தால் இது இந்தியாவுக்கு ஒவ்வாது--என பெடரல் முறையை கடுமையாக எதிர்த்தவர் பாபா சாகிப் அம்பேத்கார் அவர்கள். பிரிந்துபோகும் எண்ணமே வரக்கூடாது என்பதற்காகத்தான் “”இந்திய யூனியன்--யூனியன் ஆஃப் இந்தியா “”---என்ற வாசகங்கள் அரசமைப்பு சட்டதில் சேர்க்கப்பட்டது. 63 ஆஅண்டுகள் கழித்து இந்தியாவிற்கு ஒரு நிலை காஷ்மீர் மூலம் வந்துவிடுமோ என்ற ஐயத்தில் அம்பேத்கார் தொலைநோக்கு பார்வையோடு சிந்தித்திருக்கிறார். …

  6. நன்றி – விகடன் 22-09-2010 (சோவுடன் ஒரு சந்திப்பு…) “தனது ஐந்தாவது ஆட்சிக் காலத்தின் இறுதிப் பருவத்தில் இருக்கிறார் கருணாநிதி. இந்த ஆட்சியின் ப்ளஸ், மைனஸ்களைப் பட்டியல் இடுங்களேன்?” “இது தனது குடும்பத்துக்கு என கலைஞரால் டெடிகேட் செய்யப்பட்ட ஐந்தாண்டு காலம். கலைஞரின் குடும்பத்தினர் மென்மேலும் சிறப்பு பெற்றிருக்கிறார்கள். பல பதவிகளை அடைந்திருக்கிறார்கள். செல்வம் பெருகியிருக்கிறது. ஆக, ஐந்தாவது முறை முதலமைச்சர் பதவிக் காலம் என்பது, கலைஞரின் குடும்பத்துக்கு மிகச் சிறப்பான ஒன்றாகவே கடந்திருக்கிறது!” “அப்போ இந்த ஆட்சியில் ப்ளஸ் பாயின்ட் என்று எதுவுமே இல்லையா?” “என்ன சார் இப்படிக் கேட்டுட்டீங்க? நான் சொன்னது ப்ளஸ் பாயின்ட் இல்லையா? ஒரு குடும்பம…

  7. துருக்கி விரைவுப்பாதையில் சிறுமியின் உல்லாசநடைப்பவனி... Raw Video: Lucky Escape for Turkey Highway Baby

  8. கடும்போக்குடைய இணைய தளங்களின் எண்ணிக்கையில் சடுதியான உயர்வு ‐ இன்டர்போல் 22 September 10 07:28 am (BST) கடும்போக்குடைய இணைய தளங்களின் எண்ணிக்கையில் சடுதியான உயர்வு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச காவல்துறை சேவையான இன்டர்போல் அறிவித்துள்ளது. கடும்போக்குடைய இணைய தளங்களின் வளர்ச்சி, அல் கய்தா அமைப்பிற்கு ஆட்களை இணைத்துக் கொள்ளவதற்கு சுலபமாகியுள்ளதென இன்டர்போலின் தலைவர் ரொனால்ட் நொபல் தெரிவித்துள்ளார். இவ்வாறான கடும்போக்குடைய இணைய தளங்களினால் சர்வதேச ரீதியான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 1998ம் ஆண்டு இவ்வாறான கடும்போக்குடைய 12 இணைய தளங்களே செயற்பட்டு வந்ததாகவும், 2006ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 4500 ஆக உயர்வடைந்துள்ளதெனவும்…

  9. . தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 அதிமுகவினரையும் அக். 8ம் தேதி தூக்கிலிட உத்தரவு சேலம்: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்ட நெடுஞ்செழியன் , மாது, முனியப்பன் ஆகிய மூன்று முன்னாள் அதிமுகவினரையும் வருகிற அக்டோபர்8ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றுமாறு சேலம் செஷன்ஸ் கோர்ட் வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதற்கான வாரண்ட்டை வேலூர் சிறைக்கு சேலம் முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி ராகவன் அனுப்பியுள்ளார். கடந்த 2000மாவது ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெயலலிதா தண்டனை வழங்கி சென்னை தனி கோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து தமிழகத்தில் வன்முறை வெடித்தது. தர்மபுரி அருகே நடந்த போராட்டத்தின்போது கோவை வ…

  10. தமிழர் என்ற அடையாளத்தைவிட இந்தியர் என்ற அடையாளமே முக்கியம்-கார்த்தி சிதம்பரம் சென்னை: இந்தியர் என்ற உணர்வு இல்லாமல் தமிழகத்தில் ஒரு தலைமுறை உருவாகிவிட்டதோ என்ற அச்சம் எனக்கு உள்ளது என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் அகில இந்திய காங்கிரஸ் [^] கமிட்டி உறுப்பினருமான கார்த்தி கூறினார். சென்னையில் நடந்த சிதம்பரத்தின் 65வது பிறந்த நாள் விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள் இந்தியாவை எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் குறித்துப் பேசுவதில்லை. அவர்கள் எல்லை தாண்டி பேசினால் ஒன்று நதி நீர் பிரச்சனை பற்றி பேசுவார்கள் அல்லது இலங்கைப் பிரச்சனை குறித்து பேசுவார்கள். காஷ்மீர் பிரச்னை, பொருளாதார தாராளமயமாக்கல், உலக வங்கி பற்றியெல்லாம் திராவிடக்…

  11. இந்தியா ஜனநாய்க போராட்டம்.. எனும் நாய் குரைப்பு.. (உண்ணா விரதம்-பேரணி -பொது கூட்டம்- சாலை மறியல்) http://www.youtube.com/watch?v=mElGhdKnvtI http://www.youtube.com/watch?v=6B3nEhOacdg தொண்டை கிழிய கத்துவதாலோ... மைக்கு அதிர்வதாலோ... ஒரு அணுவிக்கும் இங்கே பயனில்லை... அவனவன் போக்குவரத்து அடைத்த் கொண்டு இம்சை கொடுக்கிறார்களே என முணுமுணுப்பை தத்தான் கேட்க முடிகிறது.. அதற்கும் மேலாக இவர்கள் கத்தி எதையும் சாதிக்கபோவதில்லை.. வருங்கால தலைமுறைகளுக்கு சென்று சேர்க்கிறார்க்ளாம்... ஆக இங்கு எவனுக்கும் தெரியாது என்று முடிவு செய்துவிட்டார்கள்.. சொம்படிப்பதில் தகரறாறு இங்கே... பிணங்களை காட்டி வரும் சட்ட சபை தேர்தலுக்கு வாக்கு கேட்க கோஸ்டிகள் தயாராகிவருகின்றன.. …

  12. ஆத்தாடி டெல்லியின் மானாம் காத்தாட இன்று கனடாவில் இருந்து வெளிவரும் பல முன்னணிப் பத்திரிகைகளிலும். bbc யிலும் முக்கிய தலைப்புச் செய்தியாக இந்தியாவில் டெல்லியில் நடக்கவிருக்கும் 'கொமன் வெல்த்" (Commonwealth ) விளையாட்டு போட்டி ஏற்பாட்டில் நடக்கும் குளறுபடிகளைப் பற்றியும், விளையாட்டு வீரர்கள் தங்கும் விடுதிகளில் உள்ள பாரியளவிலான குறைபாடுகளைப் பற்றியும் வந்துள்ளது. கோடிக்கணக்கான ஏழைகளை சுரண்டி, சிறுபான்மைத் தேசிய இனங்களின் குரல்வளையை நெரித்து கொள்ளும் தப்பிப் பிழைக்கும் இந்திய தேசியத்தின் ஊழல் முகம் சர்வதேசம் எங்கும் கிழிபடுகின்றது ===================================================== Delhi Games village 'unfit for athletes' The Commonwealth Games Fed…

  13. சாட்சிகளற்ற போரின் சாட்சிகள் உதயம்! இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக தான் நடத்திய இனப் படுகொலைப் போரில் நடந்த அத்துமீறல்களையும், போர்க் குற்றங்களையும் மறைக்கவே ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த மனித உரிமை நிபுணர் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று அதிபர் மகிந்த ராஜபக்ச கடும் எதிர்ப்புக் காட்டினார். அதே நேரத்தில், போரில் தனது படைகள் நிகழ்த்திய குற்றங்களை புதைக்கவும், தனது இனவாத முகத்தை மறைக்கவும், உலகத்தின் பார்வைக்கு ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தார். அதுவே போரினால் ‘கற்ற பாடங்கள் மற்றும் இணக்கப்பாடு ஆணையம்’ ஆகும். ஆனால் அந்த ஆணையத்தின் முன் அளிக்கப்படும் பல சாட்சியங்கள் ராஜபக்ச அரசு மறைக்க நினைத்த பல அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளியே கொண்டு வந்து…

  14. உலகம் அழியப் போகிறது என்று உள்ளூர் சாமியார்கள் முதல் நாசா விஞ்ஞானிகள் வரை அவ்வப்போது பீதி கிளப்புவார்கள். ‘2010, 2012&ல் உலகம் அழிஞ்சா இப்படித்தான் இருக்கும்.. பார்த்துக்கோங்க’ என்று சில ஹாலிவுட் படங்களும் அடிக்கடி வெளியாகி லப்டப்பை அதிகரிக்கின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் முன்பு தென்அமெரிக்காவில் வாழ்ந்ததாக கூறப்படும் இனம் மயன் இனம். கி.மு. 3113&ல் ஆரம்பித்து மிகத் தெளிவாக அந்த காலத்திலேயே காலண்டர் தயாரித்திருக்கின்றனர். அந்த காலண்டர் 2012&ம் ஆண்டுடன் முடிகிறது. ‘மயன் மக்களே சொல்லிட்டாங்க.. 2012&ல் உலகம் அழியப்போகுது’ என்று ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. புரளிகள் ஒரு பக்கம்.. ‘ஒருவேளை அழிஞ்சிடுமோ’ என்று சீரியசாய் ஆராய்ச்சிகள் …

  15. பழைய பெயர் :எட்விஜ் ஆண்டனியா அல்பினா மெய்னோ வாழ வைத்த பெயர் : சோனியா காந்தி போபர்ஸ் : மறக்க வைக்கும் பெயர் குவோட்ராச்சி : தப்பிக்க வைக்கும் பெயர்; அதிர்ஷ்டம் : 40 தடவை கூட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆகக் கூடிய வாய்ப்பு சூப்பர் அதிர்ஷ்டம் : பி.ஜே.பி போல ஒரு மொக்கை எதிர்க்க்ட்சி அமைந்தது இலங்கை ; தமிழர்களை தீர்த்து கட்ட வேண்டிய இடம் ராஜபக்சே : சிவப்பு கம்பளம் கொடுத்து வரவேற்கப்பட வேண்…

  16. அழகிரி அவர்கள் ஒரு தொலைக்காட்சி சேவையை தொடங்கவுள்ளார். His Own Remote The buzz in Chennai is that Union minister for chemicals M.K. Azhagiri (aka Alagiri) is going to launch another Tamil TV channel soon. Karunanidhi’s eldest son even approached a prominent journalist to head the project but was turned down. Obviously, Azhagiri’s reputation as a money-and-muscles man does not bode well in the attractive employers criteria. Incidentally, two reasons are being bandied about for his TV ambitions. One, he’s fed up of Delhi since he’s constantly being tripped up by the rule book. Recently, AIADMKk chief Jayalalitha was scoring points, demanding the PM “…

  17. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் பல இடங்களில் காங்கிரஸ் கொடிக்கம்பம் மாயமாகி உள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியின் பேனர்கள் கிழிக்கப்பட்டு இருப்பதாலும் தொண்டர்களிடம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பிரசார பயணம் நடத்தப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் கொடியேற்று விழா பள்ளிப்பட்டு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இதற்காக நகரின் பல இடங்களில் சோனியா, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் தலைமை…

  18. . டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு-2 தைவான் நாட்டவர் காயம்-பெரும் பீதி டெல்லி: டெல்லியில் இன்று காலை இரண்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து வெளிநாட்டினர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 தைவான் நாட்டு சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் டெல்லியில் பெரும் பதட்டம் நிலவுகிறது. அந்த மர்ம நபர்களைப் பிடிக்க வலை வீசப்பட்டுள்ளது. டெல்லியில் உச்சகட்ட உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை டெல்லியில் உள்ள ஜூம்மா மசூதியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது 3வது நுழைவாயிலுக்கு வெளியே ஒரு மோட்டார் சைக்கிள் மின்னல்வ வேகத்தில் இருந்தது. அதில் உட்கார்ந்திருந்த இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமா…

  19. http://www.yarl.com/forum3/index.php?showtopic=75418 புவி வெப்ப மடைதலுக்கு காரணம் புலிதலைவர் பிரபாகரனே -கற்பனை பேட்டி... நிருபர்: இலங்கை அரசியல் தீர்வு குறித்து? ப.சி: ஆம் புலிகள் மாநில அரசியல் தீர்வினை அன்றே ஏற்றிருந்தால் இந்த இக்கட்டான நிலை வந்திருக்காது. பிரபாகரன் மாநில முதல்வராக இருந்திருப்பார்.. நிருபர்: இன்றுதான் அவர்கள் இல்லையே... மத்திய அரசு அரசியல் தீர்வு குறித்து வலியுறுத்துமா? ப.சி: ஆம் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டே தான் இருப்போம் 2070 ல் அரசியல் தீர்வு வருமென நம்பிக்கை உள்ளது.. நிருபர்: அதுவரை அவர்கள் இருப்பார்களா? பசி: முதலில் ஒன்றினை புரிந்து கொள்ளவேண்டும்.. இலங்கை ஒரு இறை ஆமை உள்ள நாடு.. கொழும்பில…

  20. காஷ்மீரில் தொடர் வன்முறை-நேற்றும் இன்றும் 17 பேர் பலி ஸ்ரீநகர்: அமெரி்ககாவில் திருக்குரான் அவமதிக்கப்பட்டதாக பரவிய செய்தியால் காஷ்மீரில் வெடித்த பெரும் கலவரத்திற்குப் பலியானோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 16 பேர் பலியான நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாரமுல்லா மாவட்டம் தங்மார்க் பகுதியில் 6 பேரும், பத்காமில் ஒரு 7 வயதுக் குழந்தை [^] [உள்பட 7 பேரும், பாம்பூர், பந்திப்புராவில் தலா ஒருவரும் உயிரிழந்தனர். தங்மார்க் நகரில் ஒரு கிறிஸ்தவ மிஷனரி பள்ளி தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இன்று உயிரிழந்தவர்களையும் சேர்த்து ஜூன் 11ம் தேதி தொடங்கிய கலவரத்திற்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு…

  21. வம்சம், கனிமொழி, அஞ்சுகம், இதெல்லாம் கோடம்பாக்கத்தில் எடுக்கப்பட்ட எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாக்களின் பெயர்கள். இனி வரும் காலங்களில் தயாநிதி, கலாநிதி, தயாளு, ராஜாத்தி, காந்தி அழகிரி, துர்கா ஸ்டாலின், இதெல்லாம் தமிழ் சினிமாவில் வரப்போகிற படங்கள். இதற்கு கூட்டம் கூட்டி ஆள் பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை. கருணாநிதியின் வாரிசுகள், வாரிசின் வாரிசுகள் என்று நிறுத்தமில்லாமல் வளர்ந்து விட்ட நிலையில் எல்லா தொழில்களையும் கபளீகரம் செய்து கொண்டிருக்கும் கருணாநிதி குடும்பம் சினிமாவையும் விட்டு வைக்கவில்லை. பிரமாண்ட மல்டிபிள் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், நவீனக் குடியிருப்புகள், சாராய ஆலைகள், ரியல் எஸ்டேட், எந்த வழியேலேனும் சம்பாதித்து தமிழகத்தையே பழைய ராஜராஜ…

  22. எத்தனையோ ‘கள்ளச் சாமியார்கள்’ புதிது புதிதாக வந்துவிட்டார்கள். ஆனாலும், ‘போலிச்சாமியார்’ என்றாலே அகராதியின் பக்கங்களில் இன்றளவும் பிரேமானந்தாவின் பெயர்தான் எல்லோரையும் முந்திக்கொண்டு பளிச்சிடுகிறது. மனிதர் சுப்ரீம் கோர்ட் வரை முட்டி மோதிய பிறகும், அவருக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையில் இருந்து தப்ப முடியவில்லை. பதினாறு ஆண்டுகால சிறை வாழ்க்கை அவரை மாற்றியிருக்கிறதா? அதை அறிந்துகொள்ளும் பொருட்டு அவரை சந்திக்க முற்பட்டோம். ஏகப்பட்ட உடல் உபாதைகள் காரணமாக கோர்ட் அனுமதியுடன் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார் அவர். கடுமையான போலீஸ் கெடுபிடிகளுக்கு மத்தியில் அவரது பக்தர்போல் வேடம் தரித்துதான் அவரைச் சந்திக்க முடிந்தது. நம்மை அறிமுக…

  23. காஷ்மீர்: இந்திய இராணுவமே வெளியேறு! ‘‘இந்திய நாய்களே திரும்பிச் செல்லுங்கள்!”, “இப்பொழுதே வேண்டும் விடுதலை!” என்ற முழக்கங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு எங்கும் மீண்டும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. “இது இந்திய மக்களைப் பற்றியதல்ல; இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் காஷ்மீர் போலீசும் சாதாரண காஷ்மீர் மக்களுக்கு இழைத்த அநீதிகளைப் பற்றியது” என காஷ்மீரில் நடந்துவரும் தெருப் போராட்டங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார், இர்ஷத் என்ற இளைஞர். பெண்களும் தாய்மார்களும் இளைஞர்களும்தான் தற்பொழுது நடைபெற்றுவரும் போராட்டத்தில் முன்னணியாக நிற்கிறார்கள். காஷ்மீரில் கடந்த ஜுன் மாதம் தொடங்கி நடந்துவரும் அரசியல் ஆர்ப்பாட்டங்களை பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக இந்திய அரசு பழிபோட்டு வருகிறது. …

  24. உரச, உரச கல்லும் தேயும் என்பதைப் போல் அரசாங்கத்தின் கள்ள மெளனத்தைச் சுட்டிக் காட்டி தொடர்ந்து அழுத்தங்கள் கொடுத்ததன் விளைவாக ஜனநாயகத்தின் மூலம் நமக்கு இன்னொரு வெற்றி கிடைத்திருக்கிறது. டெல்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுபாஸ் சந்திரா அகர்வால் என்பவர், "மத்திய அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும்' என, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்திற்கு மனு செய்திருந்தார். ஆனால், பிரதமர் அலுவலகம் முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது. "மத்திய அமைச்சர்களின் சொத்துக்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்க முடியாது. இது விதிவிலக்கு பெற்றது' என, கூறியது பிரதமர் அலுவலகம். அகர்வால் இந்த விஷயத்தை மத்திய தகவல் ஆணையத்…

  25. சல்மான், அசின் - இன உணர்விலும் சினிமாத்தனம்? இந்தி நடிகர் சல்மான்கான் நடித்த DABANGG என்ற படம் சென்ற வெள்ளிக்கிழமை வெளியானது. இந்தப் படம் சென்னையில் மட்டும் நான்குக்கும் அதிகமான திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவே வேறு மாநிலமாக இருந்தால் இந்தப் படம் எந்த தடங்கலுமின்றி ஓடுமா என்பது மிகப் பெ‌ரிய கேள்விக்குறி. ஈழப் படுகொலையை மறைப்பதற்காக பாசிஸ ராஜகப்சே அரசு வலிந்து நடத்திய ஐஃபா திரைப்பட விழாவில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என திரைப்பட கூட்டமைப்பு அறிவித்தது. மே 17 இய‌க்க‌ம், நாம் தமிழர் போன்ற கட்சிகள் போராட்டங்கள் நடத்தின. தமிழர்களின் உணர்வை பு‌ரிந்து கொண்ட அமிதாப்பச்சன் திரைப்பட விழாவின் தூதர் பொறுப்பிலிருந்து விலகியதோடு விழாவையும் புறக்கணித்தார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.