உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26660 topics in this forum
-
திருடாதே பாப்பா, திருடாதே' என்று மாணவர்களுக்குக் கற்றுத் தர வேண்டிய ஆசிரியர் வழிப்பறி வழக்கில் சிக்கியுள்ளார்.தமிழ்நாடு - கர்நாடகா எல்லைப் பகுதியில்உள்ள ஓசூரில் அடிக்கடி வழிப்பறிகள் நடந்து வந்தன. அதனால் போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். சந்தேகத்திற்கு உரிய வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்ததில், அவர் தான் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தவர் என்பது தெரியவந்தது. அவர் பெயர் மதன்மாறன். ஓசூர் அருகே பங்களாப்பள்ளி என்ற கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் 4 ஆம் வகுப்பு ஆசிரியராக இருக்கிறார். கல்வி கற்றுத் தர வேண்டிய ஆசிரியர் களவு கற்பது தவறல்லவா என்று கேட்டால், சொகுசாக வாழ்வதற்காக வழிப்பறியில் ஈடுபட்டதாக அந்த வாலிப ஆசிரியர் கூறியுள்ளார். அவரிடமிருந்து 8 ச…
-
- 0 replies
- 531 views
-
-
நாங்க ஆடுனா மட்டும் இடிஞ்சிடுமா... கலைஞருக்கு ”கலைஞனின்“ கடிதம் அன்பான முதல்வர் அவர்களுக்கு... வணக்கமுங்க. தஞ்சாவூர்லயிருந்து பறையடிக்கிற கருப்பன் எழுதுற கடிதமுங்க இது.அய்யா எனக்கு முப்பது வயசுதான் ஆவுதுங்க.எங்க பாட்டன்,முப்பாட்டன் காலத்துலயிருந்தே பறையடிக்கறதுதாங்க எங்க தொழில். சாவு வூடு, கண்ணாலம், கோயிலு கொடை, கட்சிமீட்டிங்கு,ஊர்வலம், எல்லாத்துக்கும் பறையடிக்கிறோமுங்க. பறையடிக்கிறத மத்தவங்க கேவலமா நினைக்கிறாங்க.ஆனா, நாங்க அத கேவலமா நெனைக்கிறது இல்லீங்க.ஏன்னா,அது எங்க ரத்தத்துலயே ஊறியிருக்குங்க.அதுவுமில்லாம அது எங்களுக்கு சோறு போடுதுங்க.காலங்காலமா அந்த தொழில எங்களுக்குன்னே ஒதுக்கி குடுத்து எங்களயும் ஊரைவிட்டே ஒதுக்கியும் வச்சிட்டாங்க.இத …
-
- 0 replies
- 618 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் முன்னால் எவரேனும் நிர்வாணமாக தோன்றினால், அந்நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை பரிசாக வழங்கத் தயாரென பிரிட்டனைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் அறிவித்துள்ளார் . அல்கி டேவிட் என்பவர் பிரித்தானிய பத்திரிகையொன்று வெளியிட்ட பெரும்பணக்காரர்கள் பட்டியலில் 45 ஆவது இடத்தில் உள்ளார். அவரிடம் இருக்கும் சொத்துக்களின் பெறுமதி 1.15 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர் நிர்வாணமாக ஒபாமாவின் முன்னால் தோன்றுபவர்களுக்கு 10 லட்சம் டொலர் பரிசளிப்பதாக உறுதியளித்துள்ளார். புதிய இணையத்தளம் ஒன்றுக்கான பிரச்சாரமாக இந்த விபரீதமான பரிசுத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட தொழிலதிபரான 42 வயதான அல்கி டேவிட…
-
- 4 replies
- 641 views
-
-
Hi All, For the first time in the history of the LG ICC Awards, fans will have the opportunity this year to have their say on one of the winners. Through an online voting process, supporters from across the globe will be able to celebrate the contribution of one of the game's international superstars through the presentation of a unique cricket award. In making their choice for who they believe should win the LG People's Choice Award, fans are asked to consider the player who during the voting period (24 August 2009-10 August 2010) has had an all-round impact on the sport. Not only will the winning player have shown themselves to not only be th…
-
- 1 reply
- 877 views
-
-
இலங்கையர் உட்பட 23 மாலுமிகளை விடுவிக்க 4 மில்லியன் டொலர்களை கப்பமாக கேட்கும் சோமாலிய கடற் கொள்ளையர்கள்! திகதி:23.08.2010 இலங்கையைச்சேர்ந்தவர்கள் உட்பட 23 மாலுமிகளைக் கொண்ட எகிப்திய வணிகக் கப்பலை பிடித்துவைத்திருக்கும் சோமாலியக் கடற்கொள்ளையர்கள் கப்பலை விடுவிப்பதாயின் 4 மில்லியன் டொலரைக் கப்பமாகத் தரவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். எகிப்திய பத்திரிகையான அல் ஆரம் இதனை நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறது. ஆகஸ்ட் 2 இல் செங்கடலில் வைத்து சீமெந்துப் பொதிகளை ஏற்றிச் சென்ற எம்.வி.சுயஸ் என்ற சரக்குக் கப்பல் கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டது. சோமாலியாவின் வடக்குக் கரையிலுள்ள இடத்திற்குக் கடற்கொள்ளையர்கள் அந்தக் கப்பலைக் கொண்டு சென்றுள்ளனர். 11…
-
- 0 replies
- 454 views
-
-
ஆக 23, 2010 / பகுதி: செய்தி / 25.08.10 அன்று காலை 12 மணி அளவில் செந்தமிழன் சீமான் தேசிய பாதுக்காப்பு சட்டம் முறையீட்டு தீர்ப்பாயத்தில் முன்னிறுத்தப்படுகிறார். தமிழின எழுச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து போராடியும் வரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மீது கருணாநிதியின் தலைமையிலான அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஏவிக் கைது செய்து வேலூர் சிறையில் உள்ளார். சீமான் தன்னை தேசிய பாதுக்காப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கு தற்பொழுது நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தன்னை தேசியப்பாதுகாப்பு சட்டத்தில் அடைத்தது தவறு என்றும் தனது தரப்பு முறையீட்டினைத் தெரிவிக்க வரும் 25 ஆம்…
-
- 0 replies
- 365 views
-
-
செக்கோஸ்லாவோக்கியா நாட்டில் எலும்புகள்,மண்டை ஓடுகளால் அலங்கரிக்கப்பட்ட தேவாலயம் ஒன்றை அந்நாட்டு அரசு அமைத்துள்ளது. இதைக் காண்பதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். Thanks to http://www.thedipaar.com/news/news.php?id=17442
-
- 1 reply
- 479 views
-
-
போதை மருந்து கடத்தல்:சிக்குகிறார்கள் 60 நடிகர்-நடிகைகள் போதை மருந்து விவகாரத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்-நடிகைகள் 60 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் சகோதரர்கள் பரத்ராஜூ, ரகுநாத்ராஜூ ஆகியோரை ஆந்திர போலீசார் அண்மையில் கையும்,களவுமாக கைது செய்தனர். இவர்களுக்கு போதைமருந்து விநியோகம் செய்ததாக, நைஜீரியாவைச்சேர்ந்த சிமா கிளமெண்ட் என்பவர் பிடிபட்டார். அவருடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் பற்றி போலீசார் செய்த விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. சிமா கிளமெண்ட் வைத்திருந்த செல்போனை ஆய்வு செய்ததில் தெலுங்கு முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் வளர்ந்துவரும் நடிகர்-நடிகைகள் உட்பட 60 பேருக்கு போதை மருந்து …
-
- 0 replies
- 939 views
-
-
பாலிவுட்டின் பழைய பந்தாவெல்லாம் இப்போது போயே போச்சு. எந்த ஈகோவும் பார்க்காமல் தெலுங்கு மற்றும் தமிழில் சூப்பர் ஹிட்டாகும் படங்களை ரீமேக் செய்து சைலண்டாக பணம் பண்ணுகிறார்கள். இதனால் பாலிவுட்டின் வண்டி இப்போது தென்னிந்திய சினிமாவின் கதை, இயக்குனர்கள். இசையமைப்பாளர்கள், ஒளிபதிவாளர்கள் இல்லாமல் ஓடமாட்டேன் என்கிறது. ஹிந்தியில் சுடச்சுட இப்போது ரீமேக் ஆகிவரும் இரண்டு தென்னிந்திய ஹிட் படங்கள் காக்க காக்க மற்றும் தில்லாலங்கடி. தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன கிக் படத்தின் ரீமேக்தான் தில்லாலங்கடி. தில்லாலங்கடி வெளிவரும் முன்பே கிக் படத்தின் தெலுங்கு வெர்ஷனைப் பார்த்த பாலிவுட் படத்தயாரிப்பாளர் சஜித் நதியாவாலா அதன் ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்கி, ஜெயம் ரவி கேரக்டரில…
-
- 5 replies
- 1.3k views
-
-
அமெரிக்க இராணுவத்தின் கடைசி படையணி இன்று வெளியேறியது ஈராக்கிலிருந்து அமெரிக்க இராணுவத்தின் கடைசி படையணியும் இன்று வெளியேறி குவைத் எல்லைப் பகுதிக்குச் சென்றது. கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஈராக் மீது படையெடுத்த அமெரிக்க இராணுவம், சதாம் உசேன் தலைமையிலான அரசை அகற்றிவிட்டு, தனது கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பொம்மை அரசு ஒன்றை அமைத்தது. சதாம் உசேன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களும் தூக்கிலிடப்பட்டார்கள். இந்நிலையில், நீண்டகாலமாக அமெரிக்க இராணுவத்தினர் ஈராக்கில் முகாமிட்டிருப்பது மற்றும் அதற்கு ஆகும் செலவினங்கள், இராணுவ வீரர்களின் உயிரிழப்புகள் குறித்து சொந்த நாட்டிலேயே விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் கிளம்பியதைத் தொடர்ந்து, ஈராக்கிலிருந்து அமெரிக்க…
-
- 3 replies
- 587 views
-
-
மியான்மர் இராணுவ அரசுக்கு எதிராக போர்க்குற்ற ஆணையம்‐ அமெரிக்காவின் முடிவுக்கு வரவேற்பு 19 August 10 02:35 pm (BST) மியான்மர் இராணுவ அரசுக்கு எதிராக ஐ.நா. போர்க்குற்ற ஆணையம் அமைப்பதற்கு ஆதரவளிப்பது என்ற அமெரிக்காவின் முடிவுக்கு மியான்மர் ஜனநாயக ஆதரவு கட்சித் தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஜனநாயகம் கோரி போராடி வரும் ஹான் சூ கியின் தேசிய லீக் கட்சியின் (இக்கட்சி தற்போது கலைக்கப்பட்டுவிட்டது) முன்னாள் துணைத் தலைவர் டின் ஓ இது குறித்து கூறுகையில், இது ஒரு முதல்கட்ட நடவடிக்கைதான் என்றும், இன்னும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். மியான்மரில் ஆட்சி செய்து வரும் இராணுவ அரசை, அரசியல் அமைப்பை திறந்துவிடச் ச…
-
- 2 replies
- 473 views
-
-
ராஜிவ் உண்மையில் ஒரு தலைவர் அல்ல; அவரிடம் சில திட்டங்கள் இருந்தன. அவை சாதாரணமானவை தான். ராகுல், தன் தந்தையை விட அதிபுத்திசாலியாக உள்ளார்' என்று, பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங்(95) கூறியுள்ளார். இந்தியாவின் பிரபல மூத்த எழுத்தாளரான குஷ்வந்த் சிங், "அப்சொல்யூட் குஷ்வந்த்: தி லோ டவுன் ஆப் லைப், டெத் அண்டு மோஸ்ட் திங்ஸ் இன் பிட்வீன்' என்ற புத்தகம் எழுதியுள்ளார். அதில் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள், நிகழ்ச்சிகள் குறித்த தன் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். அதில் அவர் எழுதியிருப்பதாவது: ராகுலுக்கு என்று ஒரு தொலைநோக்கு இருக்கிறது. மாயாவதி மற்றும் சிவசேனாவின் மண்ணிலேயே அவர்களை ராகுல் எதிர்கொண்டிருக்கிறார். அமேதியில் தாழ்த்தப்பட்டோரின் வீடுகளில் தங்கி, அவர் உணவ…
-
- 7 replies
- 997 views
-
-
-
கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் தெய்வாதீனமாக 130 பேர் உயிர் தப்பியுள்ளனர் 17 August 10 04:24 pm (BST) கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் தெய்வாதீனமாக 130 பேர் உயிர் தப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கரீபிய தீவான சென் அன்ட்ராஸில் தரையிறக்கப்பட்ட விமானம் விபத்துக்குள்ளாகியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஏனைய அனைவரும் அதிசமானய முறையில் உயிர் பிழைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. விமான தரையிறக்கப்பட உள்ளதாகவும், பயணிகள் தயாராகுமாறும் விமானி அறிவித்து சில நொடிகளில் விமானம் பாரிய சத்தத்துடன் ஓடு தளத்தில் விபத்துக்குளானதாகத் தெரிவிக்கப்படுகிறது. விமானத்தில் பரவிய தீ உடனடியாக கட்ட…
-
- 0 replies
- 522 views
-
-
ஞாநி குமுதத்திலிருந்து கழற்றிவிடப்பட்டோ, அல்லது அதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டு அவராகவே வேறு பத்திரிகைக்குப் போய்விட்டதைப் பற்றியோ பத்திரிகைகளில் பெரிய அளவில் பரபரப்பான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.உண்மையில் அவ்வளவு பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்திய எழுத்துக்களாக அவரது எழுத்துக்கள் இருந்தனவா என்பதே கேள்விக்குரியது. ஞாநி பிரபலமாக இருந்ததற்குக் காரணம் அந்தப் பத்திரிகைகள்தாமே தவிர அவரது எழுத்துக்கள் அல்ல. ஆங்கிலத்தில் குல்தீப் நய்யார், எம்.ஜே.அக்பர் போன்ற எழுத்தாளர்கள் அளவுக்குத் தமிழில் பிரபலமான அரசியல் விமர்சகர்கள் இல்லை. சோலை, சின்னக்குத்தூசி, ஜென்ராம் போன்றவர்களைத்தான் பிரபலமானவர்களாகச் சொல்ல முடியும். இவர்களைவிடப் பிரபலமான ஒருவராகச் சோவைச் சொல்லலாம். ஆனால…
-
- 1 reply
- 906 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு அமெரிக்கா உதவுமா?: செண்பகத்தாரின் திறனாய்வு பார்வை [ செவ்வாய்க்கிழமை, 17 ஓகஸ்ட் 2010, 12:54.03 AM GMT +05:30 ] இது காலம் கடந்த கேள்வியாக இருப்பினும் நம்பி ஏமாறுவதை எதிர்வரும் காலத்தில் தவிர்ப்பதற்காக விடை காணும் தேவை எழுந்துள்ளது. அமெரிக்காவின் பார்வையில் ஈழத்தமிழர்கள் விவகாரம் ஒரு பெரிய விடயம் அல்ல என்றாலும் அதை அமெரிக்காவால் முற்றாகப் புறந்தள்ளமுடியாது. அமெரிக்காவின் 44ம் சனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நடந்த சென்ற தேர்தலில் ஒபாமாவுக்கான தமிழர்கள் என்ற தன்னார்வக் குழு தனது முழு ஆதரவை ஜனநாயகக் கட்சிக்கு வழங்கியது. இந்தக் கட்சியின் வேட்பாளராக பாரக் ஒபாமா போட்டியிட்டார். தமிழ் ஈழத் தமிழர்கள், தமிழ் நாட்டுத் தமிழர்கள் அமெரிக்காவில் பிறந்து …
-
- 4 replies
- 796 views
-
-
. வெனிசூலா விமான நிலையத்திலிருந்து விமானம் திருட்டு. கராகஸ்: வெனிசூலாவின் கராகஸ் நகர விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தை யாரோ சிலர் திருடி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கராகஸில் உள்ள மைகுயெட்டியா சர்வதேச விமான நிலையத்தில்தான் இந்த திருட்டு நடந்துள்ளது. அந்த விமானம் எங்கு போனது என்பது தெரியவில்லை. விமானம் எப்படிக் கிளம்பிச் சென்றது என்பதும் புரியவில்லை. விமானம் கிளம்பிச் சென்றது தொடர்பான எந்த தகவலும் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையிடம் இல்லை. போதைப் பொருள் கடத்துபவர்கள்தான் இந்தக்காரியத்தைச் செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். இந்த விமானம் ஒரு விவசாய வர்த்தக நிறுவனத்திற்குச் சொந்…
-
- 10 replies
- 1.4k views
-
-
காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா நேற்று தேசிய கொடி ஏற்றிய போது அவர் மீது ஷீ வீசப்பட்டது.விழாவில் கலந்து கொண்ட முன்னாள் போலீஸ் ஏட்டு அப்துல் ஆசாத் ஜான் ஷீவை வீசினார். அவரை உடனடியாக கைது செய்தனர். இவர் பணியில் இருந்த போது தவறு செய்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டு இருந்தார். அவர் எதற்காக ஷீவை வீசினார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் போது அரசியல் தலைவர் ஒருவர் சொன்னதால் தான் ஷீவை கழற்றி வீசியதாக கூறி இருக்கிறார். அவர் யார் என கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். உமர் அப்துல்லா கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் பலத்த பாதுகாப்பு போட்டிருந்தும், அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் மட்டுமே அனுமதிக்கப்ப…
-
- 4 replies
- 844 views
-
-
காதலியைக் கற்பழித்து கர்ப்பம் ஆக்கிய சிங்களவருக்கு இத்தாலியில் மறியல்! சனி, 14 ஆகஸ்ட் 2010 17:14 மின்னஞ்சல் அச்சிடுக PDF காதலியை கற்பழித்துக் கர்ப்பம் ஆக்கினார் என்கிற குற்றச்சாட்டின் பேரில் சிங்கள இளைஞன் ஒருவர் ( வயது 21) இத்தாலியின் பொலொக்னா நகரத்தில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் போடப்பட்டுள்ளார்.பாலியல் வல்லுறவுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு இருப்பவர் 25 வயது உடைய இந்திய யுவதி ஒருவர் ஆவார். இந்த யுவதியை துஷ்பிரயோகம் செய்தார், பொல்லால் அடித்துக் காயப்படுத்தினார், கடத்தினார்,கற்பழித்தார், பலாத்காரமாக உடலுறவில் தொடர்ந்தும் ஈடுபடுத்தி வந்தார் என்றெல்லாம் இளைஞன் மீது ஏராளமான புகார்கள் உள்ளன. யுவதி கர்ப்பம் தரித்து 21 நாட்கள் ஆகியுள்ளமை மருத்துவ பரிசோ…
-
- 4 replies
- 1.6k views
-
-
காமன்வெல்த் நாடுகள் விளையாட்டுப்போட்டி ஊழலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்குத் தொடர்புள்ளது. இது தொடர்பான தகவல் நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து எனக்கு வந்துள்ளது என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்; நான் அண்மையில் அமெரிக்காவில் இருந்தபோது நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் மொத்தம் செலவிடப்பட்ட தொகையான ரூ.40,000 கோடியில் ஒப்பந்தக்காரர்கள்,ஆலோசகர்கள் ஆகியோருக்குக் கொடுக்கப்பட்ட ஊதியத்தொகை என்ற போர்வையில் சுமார் ரூ.1,500 கோடி இலஞ்சமாகப் பெறப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. இதில் ஒரு பெருந்தொகை காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்திக்கு லண்டன…
-
- 4 replies
- 770 views
-
-
இந்திய வெளிநாட்டு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வெகு விரைவில் இலங்கை வர உள்ளார். அவர் இங்கு அரச உயர் மட்டத்தினரைச் சந்தித்து தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறித்து பேச உள்ளார். அவர் இந்திய நாடாளுமன்றத்தில் இத்தகவலை வெளியிட்டுள்ளார். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=8269:2010-08-13-07-17-04&catid=126:2010-05-07-12-27-22&Itemid=676
-
- 1 reply
- 725 views
-
-
புதுடில்லி : நக்சலைட்கள் தாக்கும் பட்சத்தில், தற்காப்புக்காக அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என, இந்திய விமானப் படைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நக்சலைட் அச்சுறுத்தல் அதிகமுள்ள மாநிலங்களில் அவர்களை ஒடுக்க, விமானப்படை விமானங்களை பயன்படுத்த வேண்டும் என, விமானப்படை கேட்டுக் கொண்டது. இது தொடர்பாக பார்லிமென்டிலும் விவாதங்கள் நடைபெற்றன. உள்நாட்டு பாதுகாப்புக்கு நக்சலைட்கள் மிகவும் அச்சுறுத்தலாக உள்ளனர் என, பிரதமர் மன்மோகன் சிங்கும் கவலை தெரிவித்திருந்தார். தற்காப்புக்காக நக்சலைட்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் பட்சத்தில், அதற்காக சிறப்பு அனுமதி பெற தேவையில்லை என, ராணுவ அமைச்சர் அந்தோணியும், கடந்த நவம்பரில் நடந்த பார்லி கூட்டத்தொடரில் தெரிவித்திருந்தார…
-
- 1 reply
- 591 views
-
-
வில்லனா – காமெடியனா ? டாக்டர் (?)ஆசன ஆண்டியப்பன் ! டாக்டர் (?)ஆசன ஆண்டியப்பன் ! கீழ்க்காணும் புகைப்படங்கள் தென் சென்னையில் வசிப்பவர்கள் பலருக்கும் அறிமுகமானவை தான். அநேக தெருக்களில் ‘no parking area’ அறிவிப்புகளின் கீழே (அல்லது மேலே ) இத்தகைய விளம்பரத்தைப் பார்க்கலாம். இதைத்தவிர டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் படத்தைப் போட்டும் இவர் தனது பெரிய விளம்பரம் ஒன்றைப் போட்டிருக்கிறார். நம் நாட்டில் எதை எதை எல்லாமோ வைத்து வியாபாரம் செய்கிறார்கள். இந்தப் மனிதர் தேர்ந்தெடுத்தது யோகாசனத்தை ! கவர்ச்சியான விளம்பரங்கள் -வாக்குறுதிகள் ! பதினைந்தே நாட்களில் யோகா பயிற்சி அத்தனை வகை நோய்களையும் போக்குவதற்கான…
-
- 0 replies
- 3.8k views
-
-
மதுரையை மிரட்டும் அநாமதேய சுவரொட்டிகள்! சமீபகாலமாக மதுரையை பல அநாமதேய சுவரொட்டிகள் மிரட்டுகின்றன. ''எட்டு பிட்டு” சுவரொட்டிகள்.. அதாவது எட்டு சுவரொட்டிகளை ஒட்டினால்தான் அது ஒரு சுவரொட்டியாகி, முழு விபரம் அதில் தெரியும். அதுதான் “எட்டு பிட்டு” சுவரொட்டிகள்! இந்த சுவரொட்டிகள் எதிலும் அச்சகத்தின் பெயர் இருக்காது. அச்சகத்தின் பெயர் இல்லாமல் சுவரொட்டி அடிக்கக்கூடாது என்பது மதுரை காவல்துறையின் சுற்றறிக்கை கூறுகிறது. அச்சக உரிமையாளர்களை மிரட்டும் இந்த சுற்றறிக்கை, சமீபகாலமாக மதுரையில் ஒட்டப்படும் சிலரது சுவரொட்டிகளுக்கு பொருந்தாது! காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் முதல் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள்வரை இந்த “மிரட்டல்” சுவரொட்டிகளைப் பார்த்துக்கொண்டே செல்லுவா…
-
- 1 reply
- 945 views
-
-
இலங்கைத் தமிழர்கள்.. பிரபாகரன்.. விடுதலைப்புலிகள்.. தமிழக அரசியல் தலைமைகள்.. பற்றி இவர்கள் சொல்வதையும் கேளுங்கள்.
-
- 10 replies
- 1.7k views
-