உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26603 topics in this forum
-
திங்கட்கிழமை, 1, ஜூன் 2009 (16:43 IST) 215 பயணிகளுடன் பிரான்ஸ் விமானம் மாயம் ஏர் பிரான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் 215 பயணிகளுடன் பாரிசிலிருந்து புறப்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அது ரேடார் கண்கானிப்பிலிருந்து மாயமானது. அந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலா
-
- 21 replies
- 3.8k views
-
-
தமிழருவி வானொலியின் நேயர்களுக்கு வணக்கம். நாம் உங்களுக்காக தாயகத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற கொடுமையானதும், அநீதியானதுமான நிகழ்வுகளை உடனுக்குடன் வழங்கியமையால் இலங்கை அரசாங்கத்தினதும், அதனோடு இணைந்து செயற்படும் ஒட்டுக்குழுக்களினதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளோம். அத்தோடு அவர்கள் எமது வனொலியின் சேவையை முடக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதனால் எமது ஒலிபரப்புகளில் தடங்கல்கள் ஏற்படலாம் என்பதனை உங்களுக்கு பணிவுடன் அறியத்தருகின்றோம். நன்றி நிர்வாகம் தமிழருவி வானொலி www.tamilaruvifm.com தமிழருவி வானொலியின் நேரடி
-
- 0 replies
- 1.4k views
-
-
தொல்.திருமா, தமிழ்நாட்டில் நடத்திய "இலங்கை தமிழ் மக்களுக்கான அமைதி பேரணி" மாபெரும் வெற்றியாக அமைந்தது போலும், திருமா அவர்கள் தான் இன்னும் குரல் குடுப்பவர் போலும், சித்தரித்துள்ளது "தினகரன்" நாளேடு!!! வெக்கம், வேதனை... அநீதி இழைத்த கருணாநிதி கூட்டில் இருக்கும் இவர், அவரை போல தான் இருப்பார்!! தன்னிடம் நிறைய கோமாலிகள் உண்டு (vote bank) என்று சொல்லி இருக்கிறார். இங்க வெறும் ஜாதி அரசியல் செய்யும், இவரெல்லாம் தலைவனாம்!!! எந்தன் பாசமிகு தமிழ் மக்களே, இந்த கேவலமான அரசியல் செயல்களை கண்டு கொள்ளாமல், நம் விடுதலைக்கு நாமே போராடுவோம் என்று சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்கிரேன்...
-
- 1 reply
- 2.6k views
-
-
கனடா தூதரகம் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டுள்ளது சிறிலங்காவில் உள்ள கனடா தூதரவாலயம் இன்று, புதன்கிழமை, சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கனடா ஆதரிப்பதாகவும், கனடா பயங்கரவாதிகள் நிறைந்த நாடு என்றும் கோஷமிட்டபடியே தூதரவாலயச் சுவர்கள் மற்றும் வளாகமானது காடையர்களால் தாக்கப்பட்டுள்ளது.
-
- 20 replies
- 3.7k views
-
-
இந்தியாவைப் புறம்தள்ளும் இலங்கை அரசு புலிகளுடனான தற்போதைய போர் முடிந்ததும் இந்தியா இனித் தேவையில்லை என்ற ரீதியில் புறம்தள்ளப்பட்டுள்ள நிலைதான் இன்றுள்ளது. புலிகளை பலமிழக்கந்வெய்ய வேணடுமெனில் இந்தியாவின் நட்புறவு வேண்டும். அது முடிந்து பத்து நாட்களும் இல்லை இந்தியா ஓரம் கட்டுப்பட்டவிட்டது. ரஸ்சியாவிற்கும், சீனாவிற்கும் பாகிஸ்த்தானுக்கும் நன்றி தெரிவிக்கும் ஒரு நாடகம் இந்தியா எமக்குத் தேவையில்லை என்பதை மறைமுகப்பாணியில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. மீண்டும் இலங்கையில் இந்தியா மண்கவ்வியுள்ளது. இன்று ஆசியப்பிராந்தியத்தில் எதுவுமே இல்லாத சிறீ லங்கா கொட்டமடித்து பேசத்தொடங்கியுள்ளது. வல்லரசுகள் கூட பேசப்பயப்பிடும் விடயங்களில் கூட சிறீலங்கா முரசம் அடித்துப் பேசுகின்…
-
- 1 reply
- 1.1k views
-
-
ராஜீவ் கொலை வழக்கை மூடுகிறது இந்திய அரசு! கொழும்பு: பிரபாகரன் ‘கொல்லப்பட்டதாகவும்’, அவரது டிஎன்ஏ மேப்பிங் மற்றும் இறப்புச் சான்றிதழை இலங்கை அரசு தயாரித்துக் கொடுப்பதாகக் கூறியுள்ளதாகவும், இதனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கை முடித்துவிட இந்தியா தயாராக இருப்பதாகவும் இந்திய வெளியுறவு அதிகாரிககள் எம்கே நாராயணன், மேனன் ஆகியோர் கொழும்பில் அறிவித்துள்ளனர். கொழும்பில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இருவரும் மேலும் கூறியதாவது: “இலங்கை அரசு பிரபாகரனைக் கொன்றுவிட்டதாக நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளது. அதுகுறித்த டிஎன்ஏ சோதனை அறிக்கை மற்றும் இறப்புச் சான்றிதழை இலங்கை அதிபர் ராஜபக்சே தருவதாகக் கூறியுள்ளார். இந்த சான்றிதழ்கள் வந்ததும் ராஜீவ் காந்தி கொலை வழக்கை முடித்துவி…
-
- 8 replies
- 7.5k views
-
-
அகதிகளுக்கு உதவ தொண்டர் அமைப்புகளுக்குத் தடை விதிக்கக் கூடாது உகந்த அரசியல் தீர்வு காணாவிடில் முந்திய வரலாறு மீண்டும் திரும்பும்! ஐ.நா. பொதுச்செயலாளர் மூன் எச்சரிக்கிறார் [24 மே 2009, ஞாயிற்றுக்கிழமை 9:00 பி.ப இலங்கை] இலங்கையில் வாழும் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைக்கு உகந்த அரசியல் தீர்வு காணப்படவேண்டும். அதன் மூலம் அவர்களிடம் நம்பிக்கையை கட்டி எழுப்ப வேண்டும் .இல்லையேல் இந்த நாட்டில் முந்திய வரலாறு மீண்டும் வரும் நிலையேஉருவாகும். இவ்வாறு எச்சரிக்கும் தொனியில் கருத்து வெளியிட்டிருக்கிறார் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன். போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு தொண்டர் நிறுவனங்கள் செல்வதற்கு எந்தவித தடையும் …
-
- 0 replies
- 937 views
-
-
25 டன் மருந்து பொருட்களுடன் இந்திய மருத்துவக்குழு இலங்கை சென்றது (முதற் பக்க செய்தி) http://dkn.dinakaran.com/firstpage.aspx# தேதி: 5/23/2009
-
- 1 reply
- 3.1k views
-
-
விடைபெறுகிறார் பிரபாகரன் என்று அவருக்கு 83 ஆம் பக்கத்தை ஒதுக்கியிருக்கும் குமதம் காங்கிரசின் குலக்கொழுந்தும், ராஜீவ் - சோனியாவின் பட்டத்து இளவரசரும், இந்தியாவின் அடுத்த பிரதமருமான ராகுல் காந்தியின் பத்து மேன்மைகளை 2ஆம் பக்கத்தில் வெளியிட்டு யாருக்கு முதலிடம் என்பதில் நன்றி விசுவாசத்தைக் காட்டியிருக்கிறது. குமுதத்தின் அந்த பத்து வரலாற்றுப் புகழ்மிக்க சாதனைகளை வினவு என்கவுண்டர் செய்கிறது. குமுதம்: டெல்லியில் உள்ள ஸ்டீபன்ஸ் கல்லூரியில் படிக்க ராகுலுக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் இடம் கிடைத்ததாம். வினவு: இதனால் ராகுல் எந்த விளையாட்டில், எந்த இந்திய அணியில் விளையாடினார் என்று தேடாதீர்கள். பிரதமரின் பிள்ளையை நன்கொடை வாங்கி சேர்த்துக் கொள்ள கல்லூரி நிர்வாகத்திற்கு பயமிருந…
-
- 1 reply
- 3.2k views
-
-
காங். கூட்டணியை வெளியில் இருந்து ஆதரிப்போம்: திமுக திடீர் அறிவிப்பு மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வெளியில் இருந்து ஆதரிப்போம் என்று திமுக திடீர் அறிவிப்பை வெளீயிட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு, இத்தகவலை தெரிவித்தார். மத்தியில் திமுக கோரிய முக்கிய பதவிகளை வழங்க காங்கிரஸ் மறுத்துள்ளதால் இந்த முடிவெடுத்தாக பேசப்படுகிறது. பதவிக்காக இதுவும் செய்வார்கள் இன்னும் செய்வார்கள் தமிழர்கள் இவ்வளவு துயருக்குக் காரணம் திமுக. இனிமேல் தமிழர்க்கு ஆதரவான கட்சி என்று சொல்ல அருகதையற்றவர்கள். துரோகி கருணாநிதியே தமிழனின் வரலாற்றில் உனக்கும் தேசத்துரோகி பட்டியலில் இடமுண்டு.
-
- 13 replies
- 3.7k views
-
-
தமிழரைப் பாதுகாக்க யுத்தம் என்று யுத்தம் செய்தவர்கள். புலிகளின் ஆயுதங்கள் மௌனித்தபின் வெற்றி விழாவும், விடுமுறையும் கொண்டாடுகின்றார்கள். இவர்களா? தமிழரைப்பாதுகாக்க யுத்தம் செய்தவர்கள். யுத்தமா செய்தவர்கள்? யுத்த விதிமுறை தெரிந்திருந்தார்களா? உண்மையாக தமிழரும் தங்கள் தேசியம் எனறு எண்ணி இருந்தால் இவ்விழாக்கள் எல்லாம் நடைபெற்றிருக்காது. தாங்கள் வேறு. தமிழர் வேறு என்ற கோட்பாட்டை அவர்களே வெளிப்படுத்தியிருக்கின்றார
-
- 0 replies
- 1k views
-
-
இவ்வுலகில் நீதி கிடைக்குமா? ராஜபக்சே மீது போர்க்குற்றங்கள் சுமத்தி தண்டனை வழங்க சாத்தியங்கள் இல்லை. ஏனெனில் இலங்கையில் தமிழர் இனப்படுகொலை தொடர்பான விடயங்களில் சர்வதேசமே பங்காளியாக இருப்பதும், இந்தியா பின்னணியில் இருப்பதும் தான் காரணம். அநியாயத்தை கண் கொண்டு பார்த்தும், கேட்டும் நிறுத்த முயல்வதுபோல் நாடகம் ஆடியவர்கள் இதற்கும் போர்க்குற்றம் பதியப்படும் என்று சொல்லி ஒரு நாடகம் ஆடி விட்டு கிடப்பில் விட்டுவிடுவார்கள். புலிகளின் துவக்குகள் ஓய்ந்தும் மீதமுள்ள தமிழனைக் காப்பாற்ற சர்வதேசம் இன்னும் அங்கு செல்லவில்லை. அடுத்த அடுத்த வம்சாவழி சிங்களத்தால் கொடூரமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதையே தடுத்து நிறுத்த இவர்கள் செல்லவில்லை. உலகம் இன்று நல்லவர்கள் கைகளில் இல்லை …
-
- 1 reply
- 1.2k views
-
-
இந்தியாவின் தேர்தல் களம் 2010 இலத்திரனியல் இயந்திர தேர்தல் பெட்டிகளால் மோசடி செய்யப்பட்டே காங்கிரசும், திமுகவும் வெற்றிவாகை சூடியது. பின்வரும் காரணங்கள் சில: 1. தேர்தல் கள ஆய்வாளர்களின் எந்தவொரு முடிவும் இதனுடன் ஒத்துப்போகவில்லை 2. காங்கிரசும், திமுகவும் தேர்தலில் தாங்கள் வெற்றி பெறுவோம் என்று எண்ணவும் இல்லை 3. ஈழத்தின் தேசியத்தை ஆதரிக்கும் திருமா திமுக அணியில் இருந்ததால் வெற்றிபெற்றுள்ளார் 4. வைகோ, ராமதாஸ் தோல்வி அடைந்துள்ளனர். 5. தமிழகத்தின் ஈழஆதரவு மிகவும் எழுச்சியில் உள்ளது. 6. இலத்திரனியல் தேர்தல் வாக்குப்பெட்டிகளில் மென்பொருள் கொண்டு உடனடி மாற்றம் செய்யமுடியும். 7. இலத்திரனியல் தேர்தல் வாக்குப்பெட்டி ஒவ்வொரு தேர்தல் நிலையங்களுக்கு கொண்டு சென்ற…
-
- 1 reply
- 1.5k views
-
-
இன்று காங்கிரஸ் வென்றிருக்கின்றது. இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. மீண்டும் பலமாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது என்றால் அது சோனியாவின் பங்கோ, மன்மோகன் சிங்கின் பங்கோ, அதைக்காட்டிலும் தயாநிதி மாறனின் பங்களிப்பே முக்கியத்துவம் பெறுகின்றது என்றால் மிகையல்ல. தகவற் தொழிநுட்ப துறையில் தனக்கிருக்கும் செல்வாக்கினைப் பாவித்து ஓர் வாக்களிப்பு மோசடி வேலைமூலம் வெற்றி அடைந்த அரசு என்றால் இன்றைய தேர்தல் வெற்றி பெற்ற அரசாகத்தான் கருதப்படவேண்டும். இன்றைய தேர்தல் முடிவுகள் வெளியாகி இருந்தாலும் தேர்தல் வன்முறையில் இறந்த தங்கவேல் மற்றும் காயமடைந்த அந்த ஆத்மாக்களின் மனச்சாட்சியானது தொட்டுச்சொல்லும். பாவிக்கப்பட்ட இலத்திரனியல் வாக்குப்பதிவுக் கருவிகள் பெரும்பாலும் மாற்றி அ…
-
- 13 replies
- 4.3k views
-
-
சனிக்கிழமை, 16, மே 2009 (22:29 IST) பாரதிராஜா அலுவலகம் மீது மர்ம கும்பல் தாக்குதல் இயக்குநர் பாரதிராஜா திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் ஆரம்பித்து இலங்கைதமிழர் பிரச்சனை தொடர்பாக பிரச்சாரம் செய்துவந்தார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களிக்கக்கூடாது என்று தீவிர பிரச்சாரம் செய்தார். மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவந்து காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், சென்னையில் இன்று இரவு இயக்குநர் பாரதிராஜா அலுவலகம் மர்ம கும்பலால் தாக்கப்பட்டது. அலுவலகத்தில் இருந்த பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. நக்கீரன்
-
- 0 replies
- 1.5k views
-
-
இந்திய தேர்தல் ரொம்ம்ப ரொம்ம்ப முறையாக நடந்து முடிந்து இருக்கிறது. மக்கள் எது நியாயமோ அதற்கு பணம் வாங்கி ஓட்டு போட்டு இந்திய ஒரு ஜனநாயக நாடு என்று நிருபித்து உள்ளார்கள். மேற்கத்திய நாடுகளில் இன்னும் பேப்பரை நம்பி ஓட்டு குத்திக்கொண்டு இருக்க அட இந்தியாவில் மின்வாக்கு இயந்திரமாம். அடேங்கப்பா என்ன ஒரு வளர்ச்சி. இதுவல்லவா குளறுபடி செய்வதற்கு நல்ல முயற்சி. வாழ்க ஜனநாயகம். ஆனாலும் தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும். தமிழர்களே என் இனமே நாம் ஊழல் மிகுந்த இந்தியாவை நம்பி கூனல் விழுந்த கருணாநிதியை நம்பி இல்லை. நாம் தர்மத்தை நியாயத்தை நம் ஆற்றல் மிகுந்த தலைவனை நம்பி இருக்கிறோம். எதற்கும் கலங்கி நிற்க நாம் பிறந்தவர்கள் இல்லை.
-
- 0 replies
- 1.2k views
-
-
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தமிழினத்திற்கே ஆச்சரிய படுத்திய முடிவாக அமைந்தள்ளது . இந்தியாவே எதிர்பார்த்த தமிழக தேர்தலில் தமிழன் பணத்திற்காக இன மானத்தை விலை பேசியதன் விளைவு தான் இந்த தேர்தல் முடிவுகள் . திருமங்கலம் தொகுதியில் துவங்கிய பண விநியோகம் இன்று நாடாளுமன்றம் வரை வந்திருக்கிறது என்றால் இது ஒரு தவறான முன்னுதாரணமே . எட்டி கால் வைக்கும் தூரத்தில் சிங்கள இனவெறியர்களால் தினம் தினம் தமிழர்கள் இன படுகொலை செய்து கொண்டிருக்கிறேன் . அதற்கு மத்திய காங்கிரஸ் மற்றும் திமுக அரசுகள் உதவி செய்கிறது . சிங்கள ராணுவத்தால் நம் மீனவர்கள் சுட்டு கொள்ள பட்ட போதும் இந்த ஆட்சிகள் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வில்லை . இதற்கு மாற்று அணி வந்தால் தான் தமிழன் மானம் ரோசம் கொ…
-
- 0 replies
- 1.7k views
-
-
பல்லாயிரக்கணக்கானத் தமிழர்கள் படுகொலை போராட தயாராகுமாறு இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு: இந்தியாவில் தேர்தலுக்கு பின் அரசு மாற்றம் ஏற்படுவதற்கு முன்பாகவும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் எச்சரிக்கையைத் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு முன்னரும் தமிழர்களை முற்றாக அழித்துவிட முடிவு செய்து கொத்துக் குண்டுகளையும் இரசாயனக் குண்டுகளையும் வீசி பல்லாயிரக்கணக்கான மக்களை சிங்கள இராணுவம் படுகொலை செய்துள்ளது. அதைவிட பல மடங்கு அதிகமானோர் படுகாயத்துடன் மருத்துவ உதவியில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இச்செய்திகள் நமது நெஞ்சங்களைப் பிழிகின்…
-
- 2 replies
- 1.2k views
-
-
இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ய அந்நாட்டு அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அதிபர் ஒபாமா ஈழத்தமிழர்கள் மீதான கொடூரத் தாக்குதலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். முற்றிலுமாக போர் நிறுத்தம் செய்வதே இப்போதைக்குள்ள உடனடித் தேவையாகும். புலிகள் ஒட்டமொத்த ஈழத்தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகள் என்பதை மறுத்துவிட முடியாது. அவர்களை அழித்தொழித்துவிட்டால் வேறு எவருடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும்? அவ்வாறு ஏதேனும் நடந்துவிட்டால் ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் ஆயுள் கால அடிமைகளாகவே சி…
-
- 10 replies
- 1.8k views
-
-
இலங்கையில் தமிழர்கள் பட்டினியால் சாவதை தடுக்கும் வகையில் சமைத்த உணவு, காய்கறிகள், தண்ணீர் பாக்கெட்டுகளை விமானம் மூலம் முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு போட ராணுவம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார். இதுவரை செய்த வரலாற்று பிழைகளுக்கு பிராயசித்தமாக இந்த மனிதாபிமான நடவடிக்கையை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை ராணுவம் இலங்கைத் தமிழர்கள் மீதான இனவெறித் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. உணவு, குடிநீர் போன்றவைகள் கிடைக்காமல் இலங்கைத் தமிழர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மருத்துவமனைகளின் மீதும் இலங்கை ராணுவத்தினர் கடும் தாக்குதலை நடத்…
-
- 5 replies
- 1.2k views
-
-
வன்னியில் மோதல் பிரதேசத்தில் நிலைமை மிக மோசமடைந்துள்ள கட்டத்தில், சூழலைச் சரிசெய்வதற்கு சர்வதேச சமூ கம் எடுத்த எந்த முயற்சியுமே பலன் தரவில்லை. எல்லாமே விழ லுக்கு இறைத்த நீராகிவிட்ட கட்டத்தில் பல்வேறு சர்வதேசத் தரப் புகளும் மாறி மாறி வெறும் அறிக்கைகளை வெளியிட்டு, வன் னியில் கொன்றொழிக்கப்படும் தமிழர்களுக்காக வெறுமனே நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற வல்லாதிக்க நாடுகள் கூட கொழும்பைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் நீதியை நிலைநிறுத்த முடியாத கையறு சூழலில் வெறுமனே கையைப் பிச்ந்து கொண்டிருக்கின்றன. இலங்கையில் பல நூற்றுக்கணக்கில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க முடியாமல் வெறுமனே பார்த்துக்கொண்டு வாளாவிரு…
-
- 0 replies
- 743 views
-
-
தமிழகத்தில் ஜெயலலிதாவா ? கருணாநிதியா ? அதிக இடங்களை கைப்பற்றுவார்கள் . இன்று தமிழகத்தில் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் வாக்களிப்பு நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது . யாழ் கள அங்கத்தவர்களாகிய ...... உங்கள் ஊகம் யார் முன்னணி வகிப்பார்கள் . எத்தனை இடங்களை அண்ணளவாக கைப்பற்றுவார்கள் . இதன் மூலம் தமிழக அரசியலில் நீங்கள் வைத்த கணிப்பு சரியாக வருகின்றதா என்று பார்க்க மட்டுமே ........ 13 ம் திகதி அதாவது , இன்று முழுக்க நீங்கள் வாக்களிக்கலாம் . எனது கணிப்பின் படி ........ ஜெயலலிதா கூட்டணி --- 28 கருணாநிதி கூட்டணி --- 11 மற்றையோர் ----------------01
-
- 24 replies
- 5.5k views
-
-
Should Tamils be ousted from Parliament Square? பிரித்தானிய மாணவர்களால் இன்று அறிவிக்கப்பட்டது... தமிழர்களை பிரித்தானிய நாடாளமன்ற சதுக்கதுதிலிருந்து அகற்றுவதட்குரிய வாகேடுப்பு. லண்டனில் லிருந்து வெளியாகும் பத்திரிகையான London Lite வாகேடுப்பை எண்ணுகின்றது. தயவு செய்து உடனே என்று வாக்களியுங்கள். No என்றால் ஆர்பாட்டம் தொடர்ந்து நடைபெறும். மாணவர்களுக்கு ஆதரவு வழங்குவோம், உடனே வாக்களியுங்கள் Should Tamils be ousted from Parliament Square? Yes 24% No 76% Thank you for your vote
-
- 0 replies
- 870 views
-
-
வணக்கம், கடந்த தேர்தலில் கனேடிய மக்களை பாரிய பொருளாதார நெருக்கடிகளில் தள்ளிவிட்ட Conservative அரசாங்கம் தனக்கு எதிராக பிரதமர் பதவிக்காக போட்டியிட்ட லிபரல் தலைவருக்கு எதிராக மில்லியன் கணக்கில் செலவளித்து விளம்பரங்கள் மூலம் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தி அதில் வெற்றியும் பெற்று இருந்தது. தற்போது இதேபாணியில் புதிய லிபரல் கட்சி தலைவரை தாக்கும் நடவடிக்கையில் கேவலம்கெட்ட ஸ் ரீபன் காப்பரின் தலமையிலான ஆளும் Conservative கட்சி ஈடுபட்டு இருக்கின்றது. தற்போதைய புதிய விளம்பரம்: மேற்கண்ட விளம்பரம் பற்றி லிபரல் தலைவரின் கருத்து: "On a day when we've got record bankruptcies, we've got unemployment skyrocketing, all this government can think of doing is runn…
-
- 1 reply
- 1.3k views
-
-
திருமா தேர்ந்தெடுத்த திண்டாட்டப் பாதை கணியன் தொல். திருமாவின் முன்னுள்ள பாதைகள் இரண்டு. ஒன்று புரட்சிகர போராட்ட அரசியல். மற்றொன்று பிழைப்புவாத தன்னல அரசியல். இதில் திருமா புரட்சிகர போராட்ட அரசியலைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழ்த்தேச உரிமைகள் காக்கும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று அந்நூலில் கோரியிருந் தோம். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் எதிர்பார்க்க வேண்டியதில்லை என அவர் ஏற்கெனவே இருந்த நிலைக்கும் மிகவும் பின்னடைவான பாதையைத் தேர்ந்தெடுத்ததுதான் பலரையும் வேதனைக்குள்ளாக்கி யிருக்கிறது. தமிழகத்தில் உள்ள தமிழீழ ஆதரவு சக்திகள் ஒன்று திரண்டு ஓரணியில் நிற்கவேண்டும் என்கிற தமிழக மக்களின் விருப்பத்தை ஓரளவேனும் ஈடேற்றும் வகையில் “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இ…
-
- 6 replies
- 2.2k views
-