உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26603 topics in this forum
-
பல்பொருள் சில்லரை வர்த்தக வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது. காங்கிரஸ் ஆட்சி செய்த மாநிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. டெல்லியிலும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் டெல்லியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சி அமைத்தது. இந்நிலையில் டெல்லி மாநில அரசு சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான அனுமதியை திரும்ப பெற்றது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. http://www.dailythanthi.com/2014-01-13-Delhi-withdraws-permission-for-FDI-funded-retail-stores
-
- 0 replies
- 350 views
-
-
ரொஹிஞ்சா நெருக்கடி இன்று ஐநா கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, எர்மா சூறாவளியால் தாக்கப்பட்ட பிரிட்டிஷ் வேர்ஜின் தீவுகளை நோக்கி இன்னுமொரு பலமான சூறாவளி வந்து கொண்டிருக்கிறது; தனது எடை அதிகமாக இருப்பதாகக்கூறி தனது சம்பளத்தை குறைத்த விமான நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுத்த விமான பணிப்பெண் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 336 views
-
-
Mariupol இல்... 10,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்துள்ளனர் – நகர முதல்வர் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து தெற்கு துறைமுகத்தில் குறைந்தது 10 ஆயிரம் பொதுமக்கள் இறந்துள்ளனர் என மரியுபோல் நகர முதலவர் தெரிவித்துள்ளார். மரியுபோலில் இன்னும் 120,000 பொதுமக்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருந்து ஆகியவை அவசரமாகத் தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார். இதேவேளை இறந்தவர்களின் உடல்களை சேகரித்து வணிக வளாகங்களில் உள்ள குளிர்சாதன பெட்டிகளில் ரஷ்ய இராணுவம் வைக்கின்றது என்ற குறைபாடுகளும் கிடைத்துள்ளதாக கூறினார். https://athavannews.com/2022/1276419
-
- 0 replies
- 165 views
-
-
ரஷிய அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார் தொலைக்காட்சித் தொகுப்பாளர் சோப்சாக் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 2018ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கிற ரஷிய அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் பெண் தொலைக்காட்சி தொகுப்பாளர் க்சேனியா சோப்சாக் (35). படத்தின் காப்புரிமைEPA Image captionசோப்சாக் விளம்பரம் பிரபலமான எதிர்க்கட்சித் தலைவர் அல்க்சி நவல்னி முற…
-
- 0 replies
- 387 views
-
-
சென்னை: கள் இறக்க அனுமதி கோரி கொங்குநாடு முன்னேற்றப் பேரவை நடத்தும் போராட்டத்துக்கு பாஜக வாழ்த்து தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மது விற்பனையில் முதல் மாநிலமாக, போதைக்கு அடிமையானவர்களை அதிகமாகக் கொண்டிருப்பதில் முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்றியே தீருவது என்பதில் தமிழக அரசு தீவிரமாகவும் திட்டமிட்டும் செயல்பட்டு வருகிறது. தினமும் காலை 8 மணிக்கே மதுக் கடைகளை திறந்து வைத்து இரவு 10 மணி வரை மது விற்பனையில் ஈடுபடுவதும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள மகாவீர் ஜெயந்தி, காந்தி ஜெயந்தி தினங்களில் கூட கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபடுவதும் நிச்சயம் மக்கள் நல அரசுக்கு இலக்கணமல்ல. பள்ளிகள், கல…
-
- 0 replies
- 468 views
-
-
நேட்டோவில் இணையும் சுவீடன் – ஃபின்லாந்துக்கு, அமெரிக்கா முழுமையான ஆதரவு! நேட்டோ உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கும் சுவீடன் மற்றும் ஃபின்லாந்துக்கு அமெரிக்கா முழுமையான ஆதரவை வழங்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் இந்த வாரம் மேற்கத்திய பாதுகாப்பு கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்க தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்தன. இது ஐரோப்பிய புவிசார் அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது. கூட்டணியில் சேர, இரு நாடுகளுக்கும் 30 நேட்டோ உறுப்பு நாடுகளின் ஆதரவு தேவை. ஆனால் நார்டிக் நாடுகளின் இந்த நடவடிக்கைக்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் நேற்று (வியாழக்கிழமை) வெள்ளை மாளிகையில் ஸ்வீடன் பிரதமர் மக்டலேனா ஆண்டர…
-
- 0 replies
- 143 views
-
-
பலஸ்தீனியர்கள் தங்களுக்கான நாட்டை அங்கீகரிக்கக் கோரி ஐ நாவில் பிரேரணை கொண்டுவர ஆயத்தமாகின்றனர். இந்தத் தகவலைப் பாலஸ்தீனிய அதிபர் அப்பாஸ் அவர்கள் சற்று முன்னர் வெளியிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன: பலஸ்தீனியர்களால் இந்தப்பிரேரனை ஐ நாவில் முன்வைக்கப்பட்டால் அமேரிக்கா முன்மொழிந்த சமாதானப் பேச்சுவார்த்தையில் தடங்கல் ஏற்படலாம் எனவும் கருதப்படுகின்றது.
-
- 0 replies
- 428 views
-
-
சிரியாவில் ஐ.எஸ். குழுவின் கடைசி கட்டுப்பாட்டுப் பகுதியாக கருதப்பட்ட எல்லை நகரம் மீட்பு - ஆனால், ஷியா போராளிகளின் ஆதிக்கத்துக்கு இது வழியமைக்குமா? களத்தில் இருந்து பிபிசி தரும் பிரத்யேகத் தகவல்கள். பிளாஸ்டிக் மாசுபாட்டால் பெருங்கடல்களுக்கும் அச்சுறுத்தல் - அரிய வகை உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கவலை ஐரோப்பா செல்லும் கனவுகளுடன் செர்பியாவில் காத்திருக்கும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அகதிகளை இணைக்கும் கிரிக்கெட் போட்டிகள். ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 240 views
-
-
உலக நாடுகளிடமுள்ள... அணு ஆயுதங்களின் எண்ணிக்கை, அடுத்த 10 ஆண்டுகளில்... அதிகரிக்கும் என கணிப்பு உலக நாடுகளிடமுள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அடுத்த 10 ஆண்டுகளில் அதிகரிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். சுவீடனிலுள்ள ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறுவனம் பல்வேறு நாடுகளின் அணு ஆயுத குவிப்பு குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘எஸ்.ஐ.பி.ஆர்.ஐ. ஆண்டு புத்தகம் 2022’ என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 35 ஆண்டுகளாக குறைந்து இருந்த அணு ஆயுத உற்பத்தி உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக மீண்டும் உயரும் என நிபுணர்கள் இதன்போது கணித்துள்ளனர். உலகளவில் தற்போது அமெரிக்கா, இந்தியா உள்பட 9 நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துள்ளன. …
-
- 0 replies
- 116 views
-
-
கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் தெய்வாதீனமாக 130 பேர் உயிர் தப்பியுள்ளனர் 17 August 10 04:24 pm (BST) கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் தெய்வாதீனமாக 130 பேர் உயிர் தப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கரீபிய தீவான சென் அன்ட்ராஸில் தரையிறக்கப்பட்ட விமானம் விபத்துக்குள்ளாகியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஏனைய அனைவரும் அதிசமானய முறையில் உயிர் பிழைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. விமான தரையிறக்கப்பட உள்ளதாகவும், பயணிகள் தயாராகுமாறும் விமானி அறிவித்து சில நொடிகளில் விமானம் பாரிய சத்தத்துடன் ஓடு தளத்தில் விபத்துக்குளானதாகத் தெரிவிக்கப்படுகிறது. விமானத்தில் பரவிய தீ உடனடியாக கட்ட…
-
- 0 replies
- 520 views
-
-
செய்தித்தாளில் இன்று: “இந்தியாவில் ஆட்டோ ரிக்ஷாவை விட விமானத்தின் கட்டணம் குறைவு” முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமலர்: மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த இந்தூர் மேலாண்மை சங்கத்தின் சர்வதேச மேலாண்மை மாநாட்டில் பேசிய மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா,'' நம் நாட்டில், தற்போது ஆட்டோ ரிக்ஷாக்களில் வசூலிக்கப்படுவதை விட, விமான பயணத்திற்கு குறைவாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு நான் கூறுவதை சிலர் முட்டாள்தனம் என கூறலாம். ஆனால், இதுதான் உண்மை'' என கூறியதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. டைம்ஸ் ஆ…
-
- 0 replies
- 319 views
-
-
சிரியாவில் நடக்கும் குத்தகைப் போர்! சில வாரங்களுக்கு முன்னர், சிரியா – இஸ்ரேல் எல்லையில் கோலன் ஹைட்ஸ் பகுதிக்கு (இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட சிரிய பகுதி) சென்றிருந்தபோது, கொரிய தீபகற்பத்துக்குப் பிறகு, உலகின் மிக ஆபத்தான இரண்டாவது போர்ப் பிரதேசம் அந்த எல்லைப் பகுதிதான் என்று ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன். மதிப்புக்குரியவர்களே, அந்தக் கட்டுரையில் முக்கியத் திருத்தம் செய்ய விரும்புகிறேன். சியோலில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில், வட கொரிய வீரர்களும் தென் கொரிய வீரர்களும் கொண்டாட்ட மனநிலையில் ஒன்றாகப் பேரணியாகச் சென்றதைப் பாரத்த பிறகு, சிரியாவிலிருந்து பறந்துவந…
-
- 0 replies
- 438 views
-
-
நாளிதழ்களில் இன்று: அரசியலில் ரஜினிகாந்தை எதிர்க்கும் சூழ்நிலை வந்தால் எதிர்ப்பேன் - கமல் ஹாசன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி - "அரசியலில் ரஜினிகாந்தை எதிர்க்கும் சூழ்நிலை வந்தால் எதிர்ப்பேன்" படத்தின் காப்புரிமைGETTY IMAGES எங்களின் போராட்டம் மக்கள…
-
- 0 replies
- 366 views
-
-
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை ஒழிக்க அமெரிக்கா உறுதி! – ஐ.நாவில் ஒபாமா கர்ஜனை. [Thursday 2014-09-25 09:00] வன்முறையால் உலகின் பல நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஐ.நா.சபை பொதுக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். போருக்கும் சமாதானத்துக்கும் இடையே உலகம் சிக்கி தவிக்கிறது.ம் ஒழுங்கின்மைக்கும் ஒருங்கிணைப்புக்கும் இடையே உலகம் சிக்குண்டுள்ளது. ஈராக், சரியாவில் செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புகள் அழிக்கப்பட்டாக வேண்டும். அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை ஒழிக்க பாடுபட வேண்டும். ஒழிக்க ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை ஒழிக்க அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது. கெடுபிடிப் போர் காலத்துக்குப் பிந்தைய நிலையை ரஷிய நடவடிக்கை மாற்றிவிட்டது. உக…
-
- 0 replies
- 533 views
-
-
பாரசூட் மூலம் கீழே குதித்து ”கூகுள்” துணைத்தலைவர் புதிய சாதனை! வாஷிங்டன்: உலகத்தின் பிரபலமான சர்ச் இஞ்சினான கூகுளின் துணைத்தலைவர் பாராசூட் மூலமாக தரையில் குதித்து சாதனை புரிந்துள்ளார். அமெரிக்க கூகுள் செய்தி நிறுவனத்தின் சீனியர் துணை தலைவர் ஆலன் எஸ்டாஸ் . சமீபத்தில் இவர் அமெரிக்காவின் நியூமெக்சிகோவில் விண்ணில் இருந்து பாராசூட் மூலம் தரையில் குதித்து சாதனை புரிந்தார். பாரகான் விண்வெளி வளர்ச்சி கார்ப்பரேஷன் இதற்கான போட்டி நடத்தியது. அதில் பங்கேற்க அவர் ஹீலியம் பலூனில் பூமிக்கு மேலே 40 கிலோ மீட்டர் உயரத்துக்கு பறந்து சென்றார். அங்கிருந்து பாராசூட் மூலம் மணிக்கு 1300 கிலோ மீட்டர் வேகத்தில் குதித்து சாதனை படைத்தார். இவர் 1 லட்சத்து 35 ஆயிரத்து 890 அடி உயர…
-
- 0 replies
- 506 views
-
-
பாக்முட் அருகே உள்ள கிராமத்தை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு ! உக்ரேனிய நகரமான பாக்முட் அருகே உள்ள கிராமத்தை வான்வழி படையினரின் உதவியோடு கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள நகரத்தை சுற்றி வளைக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. சுமார் 75 ஆயிரம் சனத்தொகையை கொண்ட பக்முட் நகரை கைப்பற்றுவது ரஷ்யாவின் முதல் பெரிய போர்க்கள சாதனையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதேநேரம் பக்முட் மீது ரஷ்யா நடத்திய பீரங்கி தாக்குதலில் சிறுவன் உட்பட இரண்டு பொது மக்கள் கொல்லப்பட்டதாக அப்பிராந்திய ஆளுநர் தெரிவித்திருந்தார். இந்த மாத தொடக்கத்தில், சுமார் 400 …
-
- 0 replies
- 712 views
-
-
புதிய சீனப் பிரதமர்: அதிகாரத்தில் தனது பிடியை வலுவாக்கும் ஷி ஜின்பிங் கட்டுரை தகவல் எழுதியவர்,ஸ்டீபன் மெக்டோனல் பதவி,பிபிசி செய்தியாளர் 54 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சீனாவில் இந்த வார இறுதியில் தொடங்கும் தேசிய மக்கள் மாநாடு, அந்நாட்டின் அதிகாரத்தில், அதிபர் ஷி ஜின்பிங்கின் பிடி இறுகுவதன் உச்சபட்சக் குறியீடாக இருக்கும். தன்னை மையமாக வைத்து சீன கம்யூனிஸ்ட் கட்சியை ஷி ஜின்பிங் மாற்றி அமைத்துள்ளார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவரை எதிர்ப்பதற்கு ஆளே இல்லை. கிட்டத்தட்ட 3,000 பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் ரப்பர் ஸ்டாம்ப் அமர்வான வர…
-
- 0 replies
- 992 views
- 1 follower
-
-
ப்ளே பாய் மாடலுடன் பேசிய டிரம்ப் - ரகசிய ஆடியோ பதிவு பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். ப்ளே பாய் மாடலுடன் பேசிய டிரம்ப் - ரகசிய ஆடியோ பதிவு படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க அதிபர் டிரம்பும், முன்னாள் ப்ளே பாய் மாடல் ஒருவரும் பேசிக் கொள்வதை, டிரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கெல் கொஹென் ரகசியமாக பதிவு செய்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு தொடக்கத்தில் நியூயார்க்கில் உள்ள கொஹென் வீட்டில் நடத்தப்பட்ட எஃப் பி ஐ சோதனைக்கு பிறகு, இந்த ஆடியோ பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. …
-
- 0 replies
- 338 views
-
-
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியான நளினியின் மகள் ஆரித்ரா இந்தியா வர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் அவர் இந்திய பாஸ்போர்ட் கோரி விண்ணப்பம் அளிக்கவும் அனுமதி அளித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி ஆகியோருக்கு பிறந்தவர் ஆரித்ரா. வேலூர் சிறையில் இவர் பிறந்தார். அதன் பின்னர் இலங்கையில் உள்ள முருகனின் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். தற்போது இலங்கையில் வளர்ந்து வரும் ஆரித்ராவுக்கு இந்திய குடியுரிமை வழங்க அதிகாரிகள் மறுப்பதாகவும், ஆரித்ரா இந்தியாவில் பிறந்தவர், எனவே அவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்த…
-
- 0 replies
- 748 views
-
-
Published By: RAJEEBAN 16 JUN, 2023 | 05:45 AM கனடாவின் மனிட்டோபா மாகாணத்தில் சிரேஸ்ட பிரஜைகளுடன் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தும் டிரக்கும் மோதி விபத்துக்குள்ளானதில் 15க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். வின்னிபெக்கிற்கு மேற்கே சுமார் 170 கிலோமீற்றர் தொலைவில் கார்பெரி;க்கு வடக்கே இரண்டு நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடம்த்தில் டிரக் பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்ற உடனேயே பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்பதை நாங்கள் உணர்ந்தோம் கனடாவின் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 15 பேர் உயிரிழந்துள்ளனர் 10 பேர் மருத்துவமனைகளிற்கு எடுத்துச்செல்லப்பட்…
-
- 0 replies
- 297 views
- 1 follower
-
-
பாலஸ்தீனத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கு கனடா $50 மில்லியன் வழங்க இணக்கம்! ஐக்கிய நாடுகளின் நிவாரணம் வழங்கும் முகவர் நிறுவனத்தின் ஊடாக பாலஸ்தீன அகதிகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் கனடா 50 மில்லியன் டொலர்களை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் இரண்டு வருட காலத்திற்கு அகதிகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக கனடாவின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் மாரி-க்ளவுட் பிபீயூ நேற்று (சனிக்கிழமை) தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் அகதிகள் மற்றும் வேலைத்திட்ட முகவர் நிறுவனத்தின் ஊடாக பாலஸ்தீனிய அகதிகளின் சிறார் கல்வி, பெண்களுக்கான நலன் அபிவிருத்தி, சுகாதாரம், வாழ்வாதாரம் போன்றவற்றுக்காக கனடாவின் நிதியுதவி பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. இது…
-
- 0 replies
- 353 views
-
-
மதுரை: 'சித்திரை திருவிழாவில் கார் குண்டு வெடிக்கும்'- கருணாநிதிக்கும் குண்டு மிரட்டல் ஏப்ரல் 24, 2007 மதுரை: மதுரையில் சித்திரை திருவிழா அன்று கார் குண்டு வெடிக்கும் என மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகி ராஜாவுக்கு அல்-உம்மா அமைப்பின் பெயரில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதே போல முதல்வர் கருணாநிதி மதுரை வரும் போது அவர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் எனவும் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. மதுரையில் உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்ச்சையாக தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வரும் 29ம் தேதி நடைபெறவுள்ளது. கள்ளழகர் வைகை ஆற்றில் …
-
- 0 replies
- 728 views
-
-
நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோஹராம் பயங்கரவாத இயக்கம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் பல்வேறு ஆயுதக் குழுக்களும் செயற்பட்டு வருகின்றன. இந்நிலையில், கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர். நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கெய்டாம் மாவட்டம் குரோகயேயா கிராமத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் உயிரிழந்தனர். பின்னர் அவர்கள் தப்பிச்சென்றனர். பலியானோர் உடல்களை அடக்கம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். அப்போது பயங்கரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதலில் 20 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலையடுத்து அரசு அவசர பாதுகாப்பு கூட்டத்தைக் …
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
இத்தாலியில் நிலநடுக்கத்தை தொடர்ந்து எட்னா எரிமலை வெடிப்பு December 25, 2018 இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள சிசிலித் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து மவுண்ட் எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கியது. சிசிலித் தீவில் நேற்று ரிக்டர் அளவுகோலில் 3.3 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதனையடுத்தே எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கியது. இதனையடுத்து அங்கு புகைமண்டலம் சூழ்ந்துள்ளதனால் சிசிலி தீவில் அமைந்துள்ள கட்டானியா விமான நிலையம் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த முதற்கட்ட தகவல் ஏதுவும் வெளியாகவில்லை. எட்னா எரிமலை வெடிப்பு அடிக்கடி ஏற்படுவதாகவும், கடந்த சில மாதங்களாக எரிமலை வெடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக …
-
- 0 replies
- 512 views
-
-
வெனிசுலாவில் சபாநாயகர் தன்னை தற்காலிக ஜனாதிபதியாக பிரகடனம் : January 24, 2019 Venezuela’s National Assembly head Juan Guaido waves to the crowd during a mass opposition rally against leader Nicolas Maduro in which he declared himself the country’s “acting president”, on the anniversary of a 1958 uprising that overthrew military dictatorship, in Caracas on January 23, 2019. – “I swear to formally assume the national executive powers as acting president of Venezuela to end the usurpation, (install) a transitional government and hold free elections,” said Guaido as thousands of supporters cheered. Moments earlier, the loyalist-dominated Supreme Court or…
-
- 0 replies
- 292 views
-