உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26662 topics in this forum
-
சிட்னி விமானங்கள் தாக்குதல் குறித்து கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்; தீவிரவிசாரணை காரணமாக மன உளைச்சலிற்குள்ளாகியுள்ளார் சிட்னியில் பயணிகள் விமானங்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள முயன்றனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் ஓருவரை காவல்துறையினர் விடுதலை செய்துள்ள அதேவேளை குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகள் குறித்து அந்த நபர் அதிர்ச்சியடைந்துள்ளார் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார் கைதுசெய்யப்பட்டுள்ள நால்வரில் அப்துல் மெர்கி என்ற 50 வயது நபரை காவல்துறையினர் செவ்வாய்கிழமை இரவு விடுதலை செய்துள்ளனர். விசாரணைகள் தொடர்கின்றன எனவும் உரிய தருணத்தில் தகவல்களை வ…
-
- 0 replies
- 242 views
-
-
ஜப்பானின் மிகப்பெரிய கப்பல் ஒன்றில் தீ விபத்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட பயணிகள் கப்பலில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ பல மணிநேர போராட்டத்தின் பின்னர் கப்பலில் பணிபுரிந்தவர்கள், தீயணைப்பு மற்றும் கடற்படைவீரர்கள் ஆகியோரினால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதோடு தீ விபத்தில் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஜப்பானின் மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றான அசுகா II என்ற கப்பலின் மேல் தளத்தில் உள்ள ஒரு களஞ்சியசாலையில் தீப்பற்ற தொடங்கியதாக உள்ளூர் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. இதன்போது கப்பலில் அத…
-
- 0 replies
- 242 views
-
-
பிரிட்டன் கன்சர்வேட்டிவ் கட்சியின் மைக்கேல் கோவின் தேர்தல் கொள்கை வெளியீடு பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டுமென்று பரப்புரை செய்த தலைவர்களில் ஒருவரான மைக்கேல் கோவ், கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்தத் தலைவராகவும், பிரதமராகவும் வருவதற்கு போட்டியிடப் போகும் நிலையில், தனது தேர்தலுக்கான தனது கொள்கைத் திட்டத்தை வெளியிட்டுள்ளார். இதுவே சரியான செயல்பாடு என்பதால் போட்டியிடப் போவதாக கூறியுள்ள மைக்கேல் கோவ், இதே காரணத்திற்காக தான் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டுமென வலியுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வருகின்ற கட்டுப்பாடற்ற குடியேற்றத்தை முடிவுக்கு கொண்டுவர அவர் உறுதியளித்துள்ளார். பெரி…
-
- 0 replies
- 242 views
-
-
டோக்கியோ ஒலிம்பிக்கில், கொவிட் பாதிப்பை தவிர்க்க முடியாது: உலக சுகாதார அமைப்பு! டோக்கியோ ஒலிம்பிக் தொடரில், கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க முடியாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கூறுகையில், ‘கொரோனா பாதிப்பு புள்ளிவிபரத்தின் மூலம், ஒலிம்பிக் தொடரில் வைரஸ் பாதிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. வைரஸ் பிரச்சினையை முற்றிலும் ஒழிப்பதென்பது முடியாத காரியம். விளையாட்டு வீரர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை விரைவாக அடையாளம் கண்டு, தனிமைப்படுத்த வேண்டும். இதன்மூலம் நோய் பரவலை கட்டுப்படுத்தலாம். ஆனால், உலகில் வழங்கப்பட்ட தடுப்பூசியில், 75 சதவீதத்தை, 10 நாடுகள் மட்டுமே பங்கு போட்டுக் கொண்டுள்ளன. உலகின் ப…
-
- 1 reply
- 242 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நாடின் யூசிப் பதவி, பிபிசி நியூஸ் 9 அக்டோபர் 2024 அமெரிக்காவின் மூத்த மற்றும் பிரபல நிருபர் பாப் உட்வர்டின் புதிய புத்தகம் ஒன்று, ‘டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் கோவிட்-19 சோதனை இயந்திரங்கள் பற்றாக்குறையாக இருந்தபோது, அவற்றை ரஷ்ய அதிபர் புதினின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ரகசியமாக அனுப்பி வைத்தார்’ என்று கூறுகிறது. ஆனால் இந்தக் கூற்றை டிரம்பின் பிரச்சாரக் குழு நிராகரித்துள்ளது. 'வார்' (War) என்று பெயரிடப்பட்ட அந்த புத்தகத்தில், டிரம்ப் அதிபர் பதவியை விட்டு வெளியேறிய பிறகும் கூட ரகசியமாக புதினுடன் தொடர்பில் இருந்தார் என, அமெரிக்க ஊடகங்கள் மேற்கோ…
-
- 0 replies
- 242 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் உயர்நிலைப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் உட்பட மூவர் உயிரிழப்பு: 7பேர் காயம்! அமெரிக்காவின் மிசோரியில் உள்ள செயின்ட் லூயிஸில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், சந்தேக நபர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர். நேற்று (திங்கட்கிழமை) உள்ளூர் நேரப்படி 09:00 மணிக்கு சென்ட்ரல் விஷுவல் அண்ட் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் உயர்நிலைப் பாடசாலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பாடசாலைக் கட்டடத்தின் கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், சந்தேக நபர் எப்படி உள்ளே நுழைந்தார் என்பது உடனடியாகத் தெரியவில்லை. துப்பாக்கிதாரியின் ஆயுதம், தாக்குதலின் இடைநடுவே செயலிழந்ததால், பல உயிர்கள் …
-
- 0 replies
- 242 views
-
-
18 மாதங்களின் பின் கொவிட்-19 பயண ஆலோசனைகளை எளிதாக்கிய அவுஸ்திரேலியா 18 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக அடுத்த வாரம் முதல் தனது எல்லைகளை மீண்டும் திறக்க அவுஸ்திரேலியா தயாராகி வருகிறது. இந் நிலையில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகளுக்கான கொவிட்-19 தொடர்பான பயண ஆலோசனையையும் அவுஸ்திரேலியா வியாழக்கிழமை தளர்த்தியுள்ளது. கொவிட்-19 தடுப்பூசி திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து, நவம்பர் 1-ஆம் திகதி முதல் முழுத் தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்களுக்கான வெளியூர் பயணத் தடையை அவுஸ்திரேலியா நீக்குகிறது. ஏனெனில் அதன் பெரிய நகரங்களான சிட்னி மற்றும் மெல்போர்ன் ஆகியவை தனிமைப்படுத்தலின்றி வெளிநாட்டுப் பயணிகளின் உள் நுழைவ…
-
- 0 replies
- 242 views
-
-
உக்ரைன் போரில், தலையிட முயற்சிக்கும் எந்தவொரு நாடும்... மின்னல் வேக பதிலடியை, எதிர்கொள்ளும்: ரஷ்யா எச்சரிக்கை! உக்ரைன் போரில் தலையிட முயற்சிக்கும் எந்தவொரு நாடும் மின்னல் வேகமான பதிலடியை எதிர்கொள்ள நேரிடும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். ‘யாரும் பெருமை கொள்ள முடியாத அனைத்து ஆயுதங்களும் எங்களிடம் உள்ளன. தேவைப்பட்டால் நாங்கள் அவற்றைப் பயன்படுத்துவோம்’ என புடின் மேலும் கூறினார். இது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. உக்ரைனின் நட்பு நாடுகள் ஆயுத விநியோகத்தை முடுக்கிவிட்டுள்ளனர். உக்ரைன் ரஷ்யாவை தோற்கடிப்பதை உறுதி செய்வதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. ஆனால், கிழக்கில் ரஷ்யா தனது முயற…
-
- 0 replies
- 242 views
-
-
சுதந்திரமான, இறையாண்மை கொண்ட... சொந்த நாட்டில் வசிக்க, பாலஸ்தீன மக்கள் தகுதியானவர்கள்: பைடன்! மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பைடன், இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்குக் கரையில் பாலஸ்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸை நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பெத்லஹேமில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் பின்னர், இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே அமைதி ஏற்படுவதற்கான நடவடிக்கையை அமெரிக்கா கைவிடப் போவதில்லை என பைடன் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, இஸ்ரேலிலிருந்து சவுதி அரேபியாவுக்கு பயணம் செய்த ஜோ பைடனுக்கு ஜெட்டா நகரில் சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், உற்சாக வரவேற்பளித்தார். ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் சவுதிக்கு ஜோ பைடன் பயணம் மேற்க…
-
- 0 replies
- 242 views
-
-
ஸ்பெயினில் நடந்த இரட்டை பயங்கரவாத தாக்குதலில் பதின்னான்கு பேர் பலியானது குறித்த செய்திகள், போதைமருந்துக்கு எதிரான தனது போரை பிலிப்பைன்ஸ் அதிபர் தீவிரப்படுத்தியுள்ளது குறித்த செய்தித் தொகுப்பு மற்றும் முதலாம் வகை நீரிழிவு நோய்க்கான புதிய சிகிச்சை முறை ஒன்று குறித்த சிறப்புச் செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 242 views
-
-
வடகொரியாவுடன் சுமூகமான உறவைப் பேண விரும்புவதாக சீனா அறிவிப்பு வடகொரியாவுடன் சுமூகமான உறவுகளைப் பேண விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது. அண்டை நாடான வடகொரியாவுடன் நட்புறவை பேண விரும்புவதாகவும் சீனாவின் நிலைப்பாடு தெளிவானதும் தொடர்ச்சியானதுமாகும் எனவும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Geng Shuang தெரிவித்துள்ளார். கொரிய பகுதியில் சமாதானத்தையும் அமைதியையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரியுள்ள அவர் வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்ய சீனா விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டுமெனவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அமெரிக்கா வலியுறுத்தி வரு…
-
- 0 replies
- 242 views
-
-
பணயக்கைதிகளின் விடுவிப்புக்கு முன் டெல் அவிவில் கூடிய மக்கள் ஆரவாரம்! ஹமாஸ், இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிப்பதற்கு முன்னதாக, இஸ்ரேலின் டெல் அவிவில் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடியுள்ளனர். கூட்டத்தினரிடையே உரையாற்றிய அமெரிக்க விசேட தூதுவர் ஸ்டீவ் விட்கொஃப், பணயக்கைதிகள் “வீட்டுக்குத் திரும்பி வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் காசா போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை திருப்பி அனுப்பும் ஒப்பந்தத்தை சாத்தியமாக்கியதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை அவர் பாராட்டியுள்ளார். இதேவேளை, காசாவில், இஸ்ரேலிய துருப்புக்கள் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களில் சுமார் 5 இலட்சம் பேர் வடக்கு காசாவிற்குத் திரும்பியுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர்.…
-
- 0 replies
- 242 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். பிரிவினைவாதிகளின் பிடியில் படத்தின் காப்புரிமைEPA பிரிவினைவாதிகளின் கட்டுபாட்டுக்குள், ஏமனின் தெற்கு துறைமுக நகரமான ஏடன் முழுக்க சென்றதாக ஏமன் மக்கள் கூறுகின்றனர். தெற்கு ஏமனை தனி நாடாக அறிவிக்கக்கோரு…
-
- 0 replies
- 242 views
-
-
கிழக்கு லண்டனில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு! கிழக்கு லண்டனில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நியூஹாமின் ஈஸ்ட் ஹாமிலுள்ள ரொன் லெய்டன் வே மற்றும் வேக்ஃபீல்ட் வீதி பகுதியில் நேற்று(சனிக்கிழமை) இந்த கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, அண்மைக்காலமாக பிரித்தானியாவில் இவ்வாறான கத்திக்குத்து தாக்குதல்கள் அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கிழக்கு-லண்டனில்-கத்திக-2/
-
- 0 replies
- 242 views
-
-
வெள்ளையர்களின் நிலம் வெள்ளையருக்கே - உறுதியளித்த அதிபர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். வெள்ளையர்களின் நிலம் வெள்ளையருக்கே - உறுதி அளித்த அதிபர் படத்தின் காப்புரிமைREUTERS வெள்ளையர்களின் நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று ஜிம்பாப்வே அதிபர் எமர்சன் உறுதி அளித்துள்ளார். இன ஒற்…
-
- 0 replies
- 241 views
-
-
தேர்தலில் ரஷ்யத் தலையீடு: ஒபாமா மெத்தனமாக இருந்தார் என்கிறார் டிரம்ப் 2016-ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து முந்தைய அதிபர் பராக் ஒபாமா மெத்தனமாக இருந்தார் என்று ஒபாமா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஒபாமா மீது டிரம்ப் குற்றச்சாட்டு கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதியன்று நடந்த அதிபர் தேர்தலுக்கு முன்னரே தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து நன்கு அறிந்த ஒபாமா, அது குறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று டிரம்ப் தெரிவித்தார். அமெ…
-
- 0 replies
- 241 views
-
-
தனது மகனை தேச துரோகி என குற்றம் சாட்டிய முன்னாள் உயரதிகாரி மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை, யேமெனை அச்சுறுத்தும் புதிய வகை தொற்று நோய் மற்றும் கடும் சூறாவளி, வறட்சி போன்ற பேரிடர்களை இந்த ஆண்டும் உலகம் சந்திக்குமா? உள்ளிட்டவற்றை இந்த செய்தியறிக்கையில் காணலாம்.
-
- 0 replies
- 241 views
-
-
போயிங் விமான விபத்து: 10 ஆண்டுகளில் 320 விபத்துகளை சந்தித்த நூற்றாண்டு கால நிறுவனத்தின் விமானங்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,AIRTEAMIMAGES.COM 132 பேருடன் பயணித்த சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான MU5735 விமானம் குவாங்சி மாகாணத்தில் மார்ச் 21 திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. விமானத்தில் பயணித்தோரின் உறவினர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். இதுவரை விமானத்தின் பாகங்கள் மட்டுமே சில கிடைத்துள்ளன. மேலும், பயணிகளின் சேதமடைந்த உடைமைகள், அடையாள அட்டைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. …
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
கொரோனா நோயாளிகளின் மாதிரிகளை சோதனைகளுக்காக கொண்டு சென்ற சாரதி சுட்டுக்கொலை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மாதிரிகளை பரிசோதனைக்காக கொண்டு சென்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் வாகன சாரதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். மியன்மாரின் மேற்கு ராஹின் மாகாணத்தில் குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. மியன்மாரில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு இலக்காகி ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நோய்த்தொற்றுக்கு இலக்கானவர்களின் மாதிரிகளுடன் வைத்திய சாலைக்கு சென்றுகொண்டிருந்த வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கி சூட்டிலேயே வாகன சாரதி உயிரிழந்துள்ளார் …
-
- 0 replies
- 241 views
-
-
தென்கொரியாவுடன் அடுத்த வாரம் உயர்நிலைக் கூட்டத்தில் பங்கேற்க வடகொரியா ஒப்புதல், எண்ணூறு மீட்டர் உயர மலையில் வாழ ஆபத்தான ஏணிப் பயணம் - சீனாவில் வறுமையை ஒழிக்க அதிபரின் திட்டங்கள் உதவுமா? பிபிசியின் சிறப்புத் தொகுப்பு உள்ளிட்டவற்றை இந்த செய்தியறிக்கையில் காணலாம்.
-
- 0 replies
- 241 views
-
-
கொலம்பியாவில்... ரோந்து பணிக்காக பயணித்த, பொலிஸ் வாகனம் மீது... குண்டுத்தாக்குதல்: 8 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழப்பு! மேற்கு கொலம்பியாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 8 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூய்லாவின் சான் லூயிஸ் நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) ரோந்து பணிக்காக பயணித்த பொலிஸ் வாகனம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாட்டின் கிட்டத்தட்ட 60 ஆண்டுகால மோதலை முடிவுக்கு கொண்டுவருவதாக உறுதியளித்து, தான் பதவியேற்ற பிறகு, பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இது என்று ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ வருத்தம் தெரிவித்துள்ளார். ‘இந்த செயல்கள் முழு அமைதிக்கு ஒரு தெளிவான நாசவேலை. விசாரணைய…
-
- 0 replies
- 241 views
-
-
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுகீட்டு ஊழல் வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா மறுத்துவிட்டதாக அவரிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரி டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஆ. ராசா, 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் 2011 பிப்ரவரி 17-ந் தேதி வரை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கடந்த ஆண்டு மே மாதம் 15-ந் தேதி ஆ.ராசாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சிபிஐ துணை கண்காணிப்பாளரான ராஜேஸ் சஹால் இன்று சாட்சியமளித்தார். அப்போது 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 9-ந் தேதியன்று ஆ. ராசாவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவ…
-
- 1 reply
- 241 views
-
-
கருணைக் கொலை தொடர்பான சட்டமூலத்திற்கு போர்த்துக்கல் நாடாளுமன்றம் அனுமதி கருணைக் கொலை தொடர்பான சட்டமூலத்திற்கு போர்த்துக்கல் நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. போர்த்துக்கலில் ஆளும் சோசலிசக் கட்சி உட்பட 5 அரசியல் கட்சிகளினால் கருணைக்கொலை குறித்த சட்டமூலம் முன்மொழியப்பட்டுள்ளது. 230 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 127 உறுப்பினர்கள் குறித்த சட்டமுலத்திற்கு ஆதரவாகவும் ,124 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்த நிலையில், சட்டமூலம் 3 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2 வருடங்களுக்கு முன்னர் நிராகரிக்கப்பட்ட குறித்த சட்டமூலம் நிலுவையிலிருந்த நிலையில் தற்போது அங்கீகாரமம் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே குறித்த சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன…
-
- 0 replies
- 241 views
-
-
காய்ச்சல், சளி, இருமல்: பாதுகாப்பு குறித்து கவலை உண்டாக்கும் இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் சௌதிக் பிஸ்வாஸ் இந்திய செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, 42 பில்லியன் டாலர் வருவாயில் பகுதி அளவு ஏற்றுமதியில் இருந்து கிடைக்கும் மருந்துகள் தயாரிப்பு தொழில் துறை, தரக்குறைவான மருந்துகள், குழந்தைகளின் துயர மரணங்கள் ஆகியவற்றின் மூலம் மீண்டும் கவனம் பெற்றிருக்கிறது. 2019ம் ஆண்டின் குளிர்காலத்தில் இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சில குழந்தைகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். இது ஒரு மர்மமான உடல்நலக்கோளாறு என்று பலரும் …
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
கனடா அரசியலில் கலக்கும் குஜராத் வம்சாவளியினர்: 4 பேர் வேட்பாளர்களாக போட்டி! கனடாவின் பாராளுமன்ற தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் பஞ்சாபிகளை பின்தள்ளி குஜராத் வம்சாவளியினர் வேட்பாளர்களாக களத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளனர். கனடாவில் 2025ம் ஆண்டு அக்டோபரில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், பிரதமராக பதவியில் இருந்த ஜெஸ்டின் ட்ரூடோவுக்கு ஆளும் லிபரல் கட்சியில் கடும் எதிர்ப்பு எழவே அரசியல் காட்சிகள் மாறின. தனது பதவியை ஜெஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்துவிட பெரும்பான்மை ஆதரவுடன் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமராக மார்க் கார்னி தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் பாராளுமன்றத்தை கலைத்த அவர், ஏப்ரல் 28ல் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார். பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்…
-
- 0 replies
- 241 views
-