Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வானம் வைகறை ஏறும் என்றவன் காணும் போதினில் சாகும் என்சனம், ஏறும் கிபிர்கூட ஏகும் குண்டினால் வேகும் உடல்கூட வெந்தணலாடும் வேளையில் என்மனம் வேகும் போதிலே சாகும் போதிலும் காக்க எமனா வருவான் இனி நாமே போகும் இடம் தேடி நாடும் போதினில் கிடைத்திடும் தனித்தமிழீழம் www.nilavan.tk

  2. நான் உன்னைப் பார்க்கையில் நீ என்னைப் பார்க்கின்றாய்… நான் என்னவள் நினைவோடு பார்க்கையில்… உன் முன்னாடி நின்று மணிக்கணக்கில் பேசுவேனே… தலைவாரி தலைவாரி முடி போனதே… நீ என்னை அறியாது சிரித்தாய் நான் என்னை அறியாமற் சிரித்தேன்…. இப்போது புரிகின்றது ஏன் நீ சிரித்தாய் என்று… கள்ளியடி நீ… முடிபோன என் தலை உன் சகோதரமாகப் போகின்றது என எண்ணித்தானே சிரித்தாய் குறும்புக் காரக் கண்ணாடி ஓ நான் அவளைக் காதலிக்கவில்லை… அப்படியானால் உன்னையா காதலித்தேன்?… www.nilavan.tk

  3. இந்தத் தண்டவாளங்களுக்குத்தான் என்ன மனமோ? ஒன்றை ஒன்று ஆழமாய்க் காதலிக்கின்றன…. அருகருகே இருந்தும் தொட்டுக்கொள்ளாத பாசக் காரர்கள்…. முத்தம் மட்டும் பிறக்கும் போதும் பிரியும்போதும் கொடுத்துக் கொள்கின்றன… ஆனாலும் கள்ளன் தொடர்வண்டி அடிக்கடி வந்து போவான்… அணைத்துமே முத்தமாய்க் கொடுப்பான்… மறுபடி ஓடிவிடுவான்…. ஆனால் நேரந்தவறா முத்தம் அதுமட்டும் கொடுப்பான்… முத்தமிடும்போது உடற்சூடேற்றுவான்.. அவனது உள்ளமும், ஏன் உதடுகளும் கூட கொதித்துக் கொண்டிருக்கும்… ஆனால் இவ்விரு தண்டவாளங்களும் அப்படியல்ல… மானசீகக் காதலர்கள்…. ஒருவரை ஒருவர் பிரியாது காதலிக்கும் காதலர்கள்…. இவர்கள் பிரிந்தால் வந்துபோனவனின் இறப்பு நிச்…

  4. நண்பர்களே நாமும் ஒரு சிலநிமிடம் கற்காளாகுவோம்… கற்களின் வேதனை எம் மனதின் வேதனை ஒத்துப் போகின்றது…. தார்வீதி… தறிகெட்டோடும் வாகனங்கள்… என்மீது ஏன் இத்தனை அழுத்தமோ? என்றெண்ணிக் கண்ணீர் வடித்தேன் கீழே பார்த்தால் என்சுமையும் சேர்த்துச் சுமக்கும் என் காதலி… அடடா என்னதான் என்மீது பாசமோ? பாரவூர்தி வந்தாலும் என்னை அணைப்பாள் முத்தமாய் கொடுப்பாள் பாழ்பட்ட வீதி செப்பனிடும் மானிடன் வந்து எம்மைப் பிரித்துவிட்டான் அதனாற்தான் மானிட வர்க்கத்தில் விவாகரத்துக்களே நடக்கின்றன… என்னவள் எங்கே இருக்கின்றாளோ? எப்பாரம் சுமக்கின்றாளோ? என்றெண்ணும் நாம் பாதுகாப்பாக அடியில் இருந்தேன் இன்று மழையிலும் வெயிலிலும் வேர…

  5. Started by யாழ்நிலவன்,

    குளிர் காற்று… சுற்றிலும் மழை… என்னவள் நினைவோடு ஆற்றங்கரையில் நடை.. கையிலே ஓர் குடை… கதவற்ற ஓர் குடிசை… என்னவள் நினைவு என்மனது வாட்ட… கால்களோ மணலிலே புதைந்து போக… குளிர்காற்றும் வெப்பம் தேட… என்னவள் கைப் பற்றினேன் .. இறுக்கியே பிடித்துக் கொண்டேன்… குளிர் வாட்டி எடுத்தது… கட்டியே அணைத்துவிட்டேன்… பின்னர்தான் தெரிந்தது… வயதான பாட்டி என்று… குளிருக்கு சூடு கொடுத்ததற்காய் நன்றி சொல்லிச் சென்றாள் அந்த வயதான பிச்சைக்காரி …. www.nilavan.tk

  6. உலகினினில் இழிய நாடு சிறீலங்கா - மனித உரிமையை மதியா நாடு சிறீலங்கா ஞாலத்தில் இழிய நாடு சிறீலங்கா - புத்த ஞானத்தை மறந்த நாடு சிறீலங்கா பாரினில் இழிய நாடு சிறீலங்கா -கொலைப் போரினை நாடும் நாடு சிறீலங்கா புவியினில் இழிய நாடு சிறீலங்கா - பல புதைகுழி கொண்ட நாடு சிறீலங்கா வையத்தில் இழிய நாடு சிறீலங்கா - இன வெறியர் வாழும் நாடு சிறீலங்கா அவனியில் இழிய நாடு சிறீலங்கா - சில அரக்கர்கள் ஆளும் நாடு சிறீலங்கா தரணியில் இழிய நாடு சிறீலங்கா -அப்பாவித் தமிழர் சாகும் நாடு சிறீலங்கா http://gkanthan.wordpress.com/index/izhiya-naadu/

  7. வன்னிமண்ணே வன்னிமண்ணே வானைப்பிழக்கும் உன்குரல் வந்து என்னை வாட்டுகிறது தன்னிச்சையாய் போர் தொடுத்து தருணம் பார்த்து உன்னுயிர் பறிக்க தென்னாசியச்சிங்களங்கள் தோளோடு தோள் சேர்ந்து செறிந்து நிற்கின்றனவாம் உலகத்தமிழன் உறங்காமல் எப்போதும் உனக்காக குரல் கொடுத்தும்- சிங்களவன் அடங்காமல் நிற்கிறானாம் ஆணவத்துடன் குடிக்க நீருமில்லை குழந்தைக்குப்பாலுமில்லை பசிக்குப்பஞ்சமில்லை படுக்க நிழலுமில்லை-அதை கடிந்து கேட்க யாருமில்லை மருந்துப்பொருளுமில்லை மயக்க ஊசியில்லை மரணத்தை தடுக்கவும் யாருமில்லை வணங்காமண் வருகிறான் உனக்காக இணங்காமல் அழிக்கலாம் உந்தச்சிங்களங்கள் கணம் போகும் போதும் காத்திரு- உன்னை பிணம் தின்னும் பேய்கள் சூழ்ந்திருக்கின்றனவாம் …

  8. தரணியில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு - அறம் தருமத்தில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு ஞாலத்தில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு - மெய் ஞானத்தில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு அவனியில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு - மெத்த அறிவினில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு உலகினில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு - விருந்து உபசாரத்தில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு வையத்தில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு - உண்மை வீரத்தில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு புவியினிற் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு - கவிப் புலமையில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு பாரினில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு - உயர் பண்பிலே சிறந்த நாடு எம் தமிழீழ நாடு http://gkanthan.wordpress.com/i…

  9. படைப்போம் படைப்போம் புரட்சிகள் படைப்போம் உடைப்போம் உடைப்போம் இயலாமை உடைப்போம் எடுப்போம் எடுப்போம் அறிவாயுதம் எடுப்போம் தவிர்ப்போம் தவிர்ப்போம் அறியாமை தவிர்ப்போம் துறப்போம் துறப்போம் சுயநலம் துறப்போம் தடுப்போம் தடுப்போம் இருளினை தடுப்போம் மறப்போம் மறப்போம் வேற்றுமை மறப்போம் நிறைப்போம் நிறைப்போம் ஒற்றுமை நிறைப்போம் மறுப்போம் மறுப்போம் புறங்களை மறுப்போம் தெரியோம் தெரியோம் கறைகளாய்த் தெரியோம் அறிவோம் அறிவோம் தன்பலம் அறிவோம் புனைவோம் புனைவோம் புதியன புனைவோம் அழிப்போம் அழிப்போம் மடமையை அழிப்போம் வளர்ப்போம் வளர்ப்போம் இனமானம் வளர்ப்போம் பயில்வோம் பயில்வோம் சரித்திரம் பயில்வோம் முயல்வோம் முயல்வோம் …

    • 2 replies
    • 797 views
  10. என் ரோசாப்பூ சேலைக்காரி.... கவிதை - இளங்கவி........ குட்டைப் பாவாடையுடன் மனதை கொள்ளை கொள்ளும் சிரிப்பு கொண்டு நல்லூர் வீதியெல்லாம் சுற்றிடுவாய் நானும் உன்னை சுற்றிடுவேன்...... கரம்சுண்டல் வாங்கி வந்து என் கைகளிலே வைத்திடுவாய் வாங்க மறுத்துவிட்டால் என் காலை மிரித்திடுவாய்..... கடைக்கண் பார்வைகொண்டும் அடித்திடுவாய்.... நல்லூர் முருகனை மறந்துவிட்டு உனை உன்முடிபோல தொடர்ந்திடுவேன் முழு கண்கள் பார்க்கமுதல் இருளாக மறைந்திடுவேன்.... சில திருவிழாக்கள் ஓடி உன் சிறு அழகெல்லாம் வளர்ந்துவிட ரோசாப்பூ சேலைகட்டி என்மனதை ஜோராக இழுத்தவளே...! சிறுவயதில் நீ தந்த பொரிகடலை சுவையும் போய்.... நீ சிறிதாக வாங்கித்தரும் கரம்சுண்ட…

  11. மாவீர மனம் கொள் மலர்வாய் சிலிர்த்திட தேசியத் தலைவனை தோளிலே தாங்குவோம் தமிழ் தேசியக் கொடியினை பாரிலே தூக்குவோம்,அவன் சேனையின் யாகத்தை யாகித்து ஏந்துவோம்,பகை நோற்றிடும் தோல்வியின் சாரத்தை சாருவோம் தேச மீட்புப் போரை நேசமாய் பேணுவோம் வசமாகிடும் வீரத்தால் வளங்களை குவிப்போம், களம் வீச்சிடும் யோகத்தை வீச்சாக்கி நூற்போம்,எங்கள் பாக விடுதலை கீதத்தை ஏற்றியே சாற்றுவோம். வீம்பினின் பகை சாய்த்த மாவீரம் புனைவோம் வீசாத நகை கொள் நஞ்சினர் களைவோம், தமிழ் மூச்சினில் முகிழ்ந்திடும் முனைவனால் முகிழ்ந்தது தமிழீழ தேசமென இசைப்போம் கந்தக காற்றினி தேசத்தில் வீசாது, பல் குழல் எறிகணை சிந்த அகம் சீந்தாது. மந்தமாய் பகை சாயமும் சாயாது,அன்றி பூந்தளிர் பாலகர் …

    • 0 replies
    • 723 views
  12. நம் தலைவனின் கனவு நிஜமாக..... கவிதை - இளங்கவி..... அடிமை வாழ்வில் குப்பையாய் கிடந்தோம் கூட்டுவார் இன்றி காற்றுக்கும் பறந்தோம் ஏய் தமிழா...! உன் தேச மண்ணில் குப்பையாய் கிடக்கின்றாய் கூனிக் கிடந்து கூன் விழுந்திட்டாய் ; என்று இந்தக் குப்பை மேட்டிலே ஓர் பொறியாக விழுந்தாய் சிறுதணல் மூட்டினாய் சிறிதாகவும் புகைந்தாய்; ;பின் செந்தணல் ஆகி விடுதலை தீயை மூட்டினாய் இன்றோ கோடி தமிழனின் மனங்களில் கொழுந்து விட்டெரிந்து விடுதலைத் தீயாய் வீறுகொண்டு எரிகிறாய்......! வேதனை வாழ்விலும் வீரியம் தந்தவன்..... எங்களின் வாழ்வுக்காய் தன் வாழ்வையும் மறந்தவன்...... இருபதில் தொடங்கி இருபதினாயிரம் கண்டாய்...... இன்னமும் காண்பாய் இற…

  13. என் அன்னை கலைப்பொழுதினிலே என் கடமை முடிக்க முன்னே சேலைத்தலைப்பை தூக்கிச்சொருகி பின்னே வேலைப்பழுவை தன் தோளில் சுமந்து மூலை முடுக்கெல்லாம் தேய்த்துக்கழுவி பாலைக்காய்ச்சி பதம் பார்த்துச்சமைத்து- பாட சாலைக்குச்செல்லும் தன் சேய்க்கு- வாழை இலையில் வதக்கிய கறியுடன் சாதம் இட்டு சாலைவரை தன் கரம்பற்றி வழியனுப்பி- பின்னே காலை விரைந்து வைத்து கடைவீதி சென்று வந்து மாலை வருமுன்னே மதியமும் உண்ணாது நூலைப்போல் இழைத்து என் முகம் காண ஓலைவேலிக்குள் ஒளிந்திருப்பாள் என் அன்னை.

  14. கருகும் பிணங்களிலே புத்தக் கடவுளே உந்தன் கரிய நிறம் தோன்றுதையே யுத்தக் கடவுளே பட்ட மரங்களிலே புத்தக் கடவுளே உந்தன் பச்சை நிறம் தோன்றுதையே யுத்தக் கடவுளே விதவையின் புடவையிலே புத்தக் கடவுளே உந்தன் வெள்ளை நிறம் தோன்றுதையே யுத்தக் கடவுளே சிந்தும் குருதியிலே புத்தக் கடவுளே உந்தன் சிவப்பு நிறம் தோன்றுதையே யுத்தக் கடவுளே குண்டின் வலியினிலே புத்தக் கடவுளே உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதையே யுத்தக் கடவுளே கதறும் ஒலியினிலே புத்தக் கடவுளே உந்தன் கீதம் இசைக்குதையே யுத்தக் கடவுளே அலறும் ஒலியினிலே புத்தக் கடவுளே உந்தன் அகிம்சை வழி தெரியுதையே யுத்தக் கடவுளே http://gkanthan.wordpress.com/index/budha

  15. மங்கையின் கூந்தலை கார் முகில் என்றார் பூங்குழல் என்றார் நதி என்றார் நறுமணம் வீசும் சொத்தென்றார் மயக்கத்தில்..! சூடிய மலர்களும்.. முக்கிய சந்தனப் புகைகளும்.. தடவிய பன்னீரும் திரவியமும்.. தப்பிய சீயாக்காயும்.. கும்பிய கெட் அண்ட் சோல்டரும் (H&S).. கொட்டிய கண்டிசனர்களும்.. அடித்த ஸ்பிரேயும்.. வாசம் வீசியதென்பதால்.. அப்படிச் சொன்னார். உண்மையில்.. பெண்களின் கூந்தலில் வாசம் செய்வது.. பேனும் ஈரும்..!

  16. வியூகம் யாவும் விடை காண்பார். நினைவிலும்,கனவிலும்,தமிழீழம் பற்றிய பற்றுதலாலான நினைவுகள் ஏந்தி ஒரு சாந்தி தரும் செய்தி ஒன்று பூம்புனலேந்தி ஐம் புலன்களை ஆதங்கமாக நீவி ஆத்ம, ஆதரவுக்கரம் தாராதோ? வனையும் நெஞ்சகத்து கதவின் காந்தங்களை, புனையும் பொய்யர்களின் பீற்றல்களை, புரட்டி,பகை விரட்டி ஏகாந்தமாகும் நமதான ஆதங்கக்கரம் பற்றி! தினையும்,ஆங்கு தினமும் எம் விடுதலை வேங்கைகளின் திளையும் வெற்றிச் சேதி ஆற்றி எம் உளவுரணேற்றி தீந்தான வாகை பகைபுலம் காட்டி நமதான வரமாக்கி மாந்தமாகும் எம் மனவிருளகற்றி,விளக்கேற்றி, விடியல் செய்தித் தீ சுமந்து, நீ எம் அகமாக சுகமான, சுமைஏந்தி சுற்றம் சூழ, மகிழ வலம் வருவாயா? ஏதிலியாக தினம் அங்கு மாயும் எம் இன மாந்தர் ஆ…

    • 0 replies
    • 1k views
  17. இனவெறி கொண்ட சிங்களவன் கொலைவெறிதாண்டி மதவெறி தாண்டி ஏதுமறியாப் பிஞ்சு பிறந்தபின் கொன்ற காலம் போய் கருவிலிருந்ததை மட்டும் கலைத்தழித்தது போய் தாயொடு சேய் சேர்த்துக் கொல்லும் காலமடா தண்ணீர்சிந்திய தேசத்தில் இன்றுகண்ணீர் சிந்தியே வெள்ளபெருக்கோடுதடா கொதிக்கும் சட்டிக்கும் தண்ணீர் படக்கூடாது வெடிக்கும் அடிக்கும் திண்ணையில் என்னை விடக்கூடாது ஒடிக்கும் அந்த நொடிக்கும் எனக்கும் இருக்கும் பந்தம் துடிக்கும் அப்போது வந்தவர் மனமெல்லாம் துடிக்கும் அதைப்பார்த்து நாலஞ்சு நன்றாக இங்கே நடிக்கும் என்றெண்ணி கொடிக்கும் வளரும் இடும்பை கூட மடிக்கும் தன் கொடி நிலம் நோக்கி வெடிக்கும் என் நெஞ்சு கொடுக்கும் அவர்களுக்கு விளக்கம் மூலப் பிரதியைக் காண இங்கே ச…

  18. விழித்திடு பெண்ணே! விடியலைப் படைத்திடு சமுத்திரம் ஒன்றே இலக்கெனக்கொண்ட ஆறுகள் சோர்வது உண்டா? சரித்திரம் படைத்திட புறப்பட்ட பின்னால் தடைகளால் உடைந்திடல் நன்றா? வெளுத்தது எல்லாம் பாலென நம்பிய மனத்துக்கு இது ஒரு பாடம்! நீ குழந்தையல்ல குமரி ஆனாய் இனி விழித்திரு பெண்ணே எப்போதும்! இடையினில் தடை வரும் தடுக்கிடப் பார்த்திடும் தலைவலி உடன் வரும் கடு கடு சொல் வரும் களங்கமும் சேர்ந்திடும் நெருப்பென்று ஆனாய் பெண்ணே நெருப்பினை ஈக்கள் மொய்ப்பது இல்லை சளைக்காமல் நீ தொடு இலக்கினை! பொடி வைத்துப்பேசும் நாக்கு பொய் கூசாமல் சொல்வோர்க்கு விளக்கங்கள் கொடுத்திடல் நன்றோ?! சூரியன் மேற்கினில் உதிப்பது உண்டோ? தோல்விகள் வெற்றியின் படிகள் அன்றோ? இறைவனின் அருளொடு நல்லோர்கள…

  19. ஒரு ஈராக்கியனின் சப்பாத்து அடே ஜோர்ஜ் புஷ் கண்ணீரால் எம்மக்களின் வேள்வி அதனால் கேட்கிறேன் ஒரு கேள்வி எதற்காக எம்மீது படை எடுத்தாய் எண்ணற்ற உயிர்களைப் பலி எடுத்தாய் எண்ணெய் மேல் நீ கொண்ட பித்தத்தினால் தண்ணி போல் இரத்தத்தை ஓடவிட்டாய் பேரழிவு ஆயுதங்கள் எம்மிடம் இருக்குதென்றாய் பேரழிவுகளை எம்மிடம் ஏற்படுத்தினாய் இலட்சியம் நிறைவேறியதென முன்னர் முழங்கினாய் அதை ஏமாற்றமெனப் பின்னர் கலங்கினாய் சதாமைப் பின்னர் அழித்தவனும் நீதான் அவனை முதலில் வளர்த்தவனும் நீதான் நீ வருமுன் எம்நாடு நாசமயிருந்தது நீ வந்தபின் இன்னமும் மோசமாயிருக்கிறது இன்று என் கையில் சப்பாத்து முடிந்தால் உன் தலையைக் காப்பாத்து http…

  20. ஓடி விளையாடு பாப்பா - தமிழை பாடி மகிழ்ந்தாடு பாப்பா கூடி களியாடு பாப்பா - விடிவை நாடி நடைபோடு பாப்பா தமிழனுக்கென உண்டு தாயகம் - நற் தமிழீழம் அதன்பெயர் பாப்பா தாய்க்கு நிகரான தாய்நாடு - அதைத் தலையாய்க் காத்திடு பாப்பா எதிரிப் படைவரும் பாப்பா - நீ ஏக்கம் கொள்ளலாகாது பாப்பா சீறும் விமானம்வரும் பாப்பா -நீ சிந்தை கலங்காதே பாப்பா கடவுள் மறந்துவிட்ட போதும் - உன் கடமையை மறவாதே பாப்பா மடமையை ஒழித்துவிடு பாப்பா -தேச உடமையைக் காத்துவிடு பாப்பா காணாதிருக்கும் தமிழரும் உண்டு -முகத்தில் காறி உமிழ்ந்துவிடு பாப்பா காட்டிக்கொடுக்கும் தமிழரும் உண்டு -அவரைக் காலால் மிதித்துவிடு பாப்பா மண்ணுக்காய் மாய்ந்த மாவீரர் - அவரை…

  21. ஈழத்துப் பாப்பா பாடல் – தமிழரின் அவலம் ஓடி மறைந்துகொள் பாப்பா - நீ ஒளிந்து வாழப்பழகிக்கொள் பாப்பா பங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா - நீ பதுங்கி வாழப்பழகிக்கொள் பாப்பா சிங்களப் படை வரும் பாப்பா - வானில் சீறும் விமானம்வரும் பாப்பா எங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் - மனிதர் எவரும் இல்லையடி பாப்பா சினத்தோடு வந்தான் எதிரி பாப்பா - எம்மை இனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா வனத்தோடு விலங்குகளாய் ஆனோம் பாப்பா -எம் மனத்தோடு சோகங்கள் ஆயிரம் பாப்பா பகைவனுக்கு வேண்டியது சண்டை - அவன் வகைவகையாய் வீசினான் குண்டை புகைமண்டலமாய் ஆனதெம்தேசம் - பார்த்து நகை கொள்கிறான் எதிரி பாப்பா தெய்வமும் மறந்ததடி பாப்பா - வெறி நாய்கள் சூழ…

  22. இறைவா எம்மை ஏன் படைத்தாய் இறைவா எம்மை ஏன் படைத்தாய் இழிய வாழ்கை வாழ்வதற்கா ஈழத்தில் எம்மை ஏன் படைத்தாய் ஈன வாழ்கை வாழ்வதற்கா வன்னியில் எம்மை ஏன் படைத்தாய் வனத்தில் விலங்குகளாய் வாழ்வதற்கா யாழ்ப்பாணத்தில் எம்மை ஏன் படைத்தாய் யாருமற்ற அனாதைகளாய் வாழ்வதற்கா கிழக்கில் எம்மை ஏன் படைத்தாய் காணாமற்போனோர் கணக்கில் சேர்வதற்கா இந்துக்களாய் எம்மை ஏன் படைத்தாய் இன்னல்கள் சூழ வாழ்வதற்கா கிறிஸ்தவராய் எம்மை ஏன் படைத்தாய் கிலிகொண்ட வாழ்கை வாழ்வதற்கா முஸ்லிம்களாய் எம்மை ஏன் படைத்தாய் முடங்கி அடங்கி வாழ்வதற்கா தமிழராய் எம்மை ஏன் படைத்தாய் தலை குனிந்த வாழ்கை வாழ்வதற்கா பௌத்த சிங்கள வெறியர் பக்கம் பாவிகளாய் எம்மை…

  23. மகிந்தவுக்கு ஒரு மடல் மகிந்தா கிளிநொச்சி இன்று உன் வசம் அதனால் நீ அடைந்திருக்கிறாய் பரவசம் நீ கொண்டாடிக் கொண்டிருக்கிறாய் பட்டாசு வெடித்து அப்பாவித் தமிழர்கள் கதறி அழுகிறார்கள் கண்ணீர் வடித்து சற்றே சிந்தித்துப் பார் ஆறேழு நாடுகளின் உதவி கொண்டு தமிழ்த் துரோகக் கும்பல்களையும் துணைக்குக் கொண்டு மனித உரிமை விதிகளை தட்டிக் கழித்து பத்திரிகைச் சுதந்திரத்தையும் முற்றாக மறுத்து மருத்துவ மனை, அகதி முகாம்களையும் தாக்கி அழித்து அப்பாவித் தமிழர்களையும் கொன்று குவித்து நீ அடைந்திருப்பதெல்லாம் ஒரு வெற்றியா நீ வெட்கமின்றிப் பிதற்றுகிறாய் இதைப் பற்றியா நீ இன்று போட்டிருகிறாய் போர்க் கோலம் அதனால் தமிழர் வீடுகளில் மரண ஓலம் …

  24. ஈழம் எங்கள் தேசம் தமிழ் ஈழம் எங்கள் தேசம் அதை அந்நியன் செய்கிறான் நாசம் பச்சைப் பசேலேன்ற வயற்காடு இன்று பச்சிளம் குழந்தைக்கும் சுடுகாடு வந்தாரை விருந்தோம்பும் புகலிடம் இன்று அந்நியப் படைகளின் உறைவிடம் எல்லாள மன்னனின் கோட்டை இன்று குள்ள நரிகளின் சேட்டை பாட்டன் பூட்டனின் களியாட்டம் இன்று சிங்களப் பேய்களின் வெறியாட்டம் இனியும் பொறுக்குமா எம்மினம் இது கங்கை கொண்ட தமிழினம் ஆற்றில் இரும்பு போல் தாழ மாட்டோம் காற்றில் சருகு போல் வீழ மாட்டோம் ஆற்றில் சருகு போல் மிதந்து நிற்போம் காற்றில் இரும்பு போல் நிலைத்து நிற்போம் நட்போடு வந்தவனை வாழ வைப்போம் நஞ்சோடு வந்தவனை வாளால் முடிப்போம் கையில் எடுப்போம் நெருப்…

  25. என் விரக்தியின் அத்திவாரம் கொத்துக் கொத்தாய் வீழும் குண்டுகளுமல்ல கும்பல் கும்பலாய் சாகும் குடும்பங்களுமல்ல இன அழிப்புக்காய் நடக்கும் யுத்தமுமல்ல ஆறாய்ப் பெருகி ஓடும் இரத்தமுமல்ல வெறிச்சோடிக் கிடக்கும் வயல் வெளிகளுமல்ல நிரம்பி வழியும் புதை குழிகளுமல்ல சோற்றுக்காய் ஏங்கும் தமிழ் மழலைகளுமல்ல தொற்றுநோய் பரவும் அகதி முகாம்களுமல்ல போரை வாழ்த்தும் சில நாடுகளுமல்ல மௌனம் காக்கும் பிற நாடுகளுமல்ல இத்தனை நடந்தும் மனம் கலங்காமல் இன்னமும் பிறர் துயர் விளங்காமல் கண்மூடி இருக்கும் சிலதமிழரின் குணம்தான் என்அடிமன விரக்தியின் அடிப்படைக் காரணம் http://gkanthan.wordpress.com/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.