கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
ஆதவனாய் அவதரித்த மாதவ அவதாரங்கள் பிரபஞ்சம் ஆளும் பிரபாவின் பிள்ளைகள் தாயின் அன்புதனை தலைவரில் கண்டவர்கள் சூரியனாய் ஒளிதந்து உரிமைக்கு உயிர்தந்து கார்த்திகை விளக்கான களம்கண்ட வேங்கைகள் வாழும் வயதினிலே வாழ்வை எமக்காக வழங்கிய வள்ளல்கள் பூமிக்கு மழைதரும் வானம் போல தம்மையே தாய் நிலத்துக்கு விதையாகத் தந்தவர்கள் மண்ணுலகில் தமிழ்வாழ விண்ணுலகை நிறைத்தவர்கள் தம் சுவாசம் தனை ஈந்து ஈழத்தாயை உயிர்ப்பித்த ஈழத்தின் விடி வெள்ளி கார்த்திகை மைந்தர்கள் http://www.thayakaparavaikal.com/kavithaigal.php
-
- 16 replies
- 2.2k views
-
-
வெள்ளை மனம் பத்துத் தடவைகள் பட்டுச்சேலையுடுத்தி பத்தரை மாற்றுத்தங்கப் பதுமையாய் பலர் முன்னிலையில் கொழு பொம்மையாய் பார்வையிட்ட பெண்ணிடம் பக்குவமாய் பாடத் தெரியுமா சமையல் தெரியுமா என்றே பலரும் தங்கள் சந்தேகம் தீர்ந்திட பத்துக்கு பலநூறு கேள்விகள் கேட்டுவிட்டே பட்சணங்கள் பல வகை வகையாயிருந்ததை பண்போடு வயிறார உண்டு விட்டு களித்துவிட்டே பாலின் நிறம் பால் வெள்ளை பெண்ணின் நிறமதில் வெள்ளையில்லையென்றே வெளிநடப்பு செய்த மாப்பிள்ளை வீட்டார்கள் வெள்ளைமனம் கொண்ட என் புண்பட்ட நெஞ்சமும் பாறையாய் போனதை அறிவீரோ பண்பட்ட மனதுடன் சின்னஞ்சிறு ஆசைதனை வெண்தூரிகை கொண்டே என் புகைப்படத்தை வெள்ளை நிற மை கொண்டே மையிட்டு வெள்ளை மனதுடன் மகிழ்கிறேனே
-
- 16 replies
- 4.1k views
-
-
காதலும் நட்பும் என் விரல் நகம் கூட என் காதலியின் உடல் மீது படாமல் எவ்வளவு கண்ணியமாகக் காதலிக்கிறேன் என்பதை என் தோழியிடம் கூறிக் கொண்டிருந்தேன் அவளது தோளில் சாய்ந்தபடி.
-
- 19 replies
- 4.3k views
-
-
-
புது உலகம் படைத்திடப் பிறந்தான் -தமிழ் தவத்தால் தலைவன் கிடைத்தான் இவன் விழிகளில் தீப்பொறி பறக்கும்.. பார்க்கும் வழிகளில் தென்றல் நடக்கும் புது உலகம் படைத்திடப் பிறந்தான் -தமிழ் தவத்தால் தலைவன் கிடைத்தான் ஏறென நடக்கிறான் பாரு-பிரபாகரன் இறங்கிப்போவது ஏது இரக்கம் இவனிடமிருக்கும்..எமை ஏளனம் செய்தால் கொதிக்கும்.. ஒழுக்கம் சொல்லித் தந்தான்.. உலகே வியந்து பார்க்க படைகள் பலவும் செய்தான்.. பகைகள் தொடைகள் ஆட கடலில் காவியம் படைக்கும் கரிகாலன் படைதான் நிலைக்கும்.. எங்கள் நெஞ்சைக் கொள்ளை கொண்ட ஏக தலைவனம்மா..அவனாயுள் கூட எந்தனாயுள் இன்றே தருவோமம்மா.. புது உலகம் படைத்திடப் பிறந்தான் -தமிழ் தவத்தால் தலைவன் கிடைத்தான் வாழ்வைத் தமிழுக்குத்…
-
- 5 replies
- 1.6k views
-
-
முற்றும் துறந்த முனிவர் முற்றும் துறந்த முனிவர் அவர் - வேதம் கற்றுணர்ந்த காரணத்தால் மானைப் போன்ற துணையை விட்டு கானைத் தேடிப் புறப்பட்டார் - திரு மாலைத் தேடித் தவமியற்ற விலங்கினம் வாழும் ஒரு காடு - அங்கு அமைத்தார் தான் வாழ ஒரு வீடு ஏந்தினார் கையில் கமண்டலத்தை மறந்தார் ஊன் முதல் உறக்கத்தை - புந்தியில் வைத்தர் ஐயன் நாமத்தை மறுநாள் காலை விடியும்வேளை புறப்பட்டார் அருவியை நோக்கி சந்தியாவந்தனம் செய்வதற்கு - அங்கு கண்டார் ஓர் இளங் குருவியை ஆடை நெகிழக் குளிப்பதை விடுவாரா! முற்றும் துறந்த மாமுனிவர் விரகம் அவரைத் தலையெடுக்க அடையத் துடித்தார் அந்தப் பெண்மலரை நெருங்கினார் அவளைத் தாகத்துடன் காமம் கண்களில் கொப்பளிக்க விலகினா…
-
- 5 replies
- 7.3k views
-
-
பார்ப்பன எதிர்ப்பு (பார்ப்பன எதிர்ப்பு யாழ் இணையத்தளத்தில் பல தலைப்புக்களில் விவாதிக்கப் பட்டு வருகிறது. ஒரு சிலர் நாங்கள் ஏதோ பெரியாரின் நூல்களை மட்டும் படித்து விட்டு இப்படி கதைப்பதாக நினைக்கிறார்கள். பார்ப்பன எதிர்ப்பு ஒரு இனத்தை வெறுக்கும் பாசிச நோக்கோடு அமைந்ததல்ல. பெரியாரின் நோக்கமும் அதுவல்ல. பெரியாருக்கு முன் தமிழ் சித்தர்கள் பார்ப்பனியத்தை மிகக் கடுமையாக சாடியிருக்கின்றனர். திருவள்ளுவர் எதிர்த்திருக்கிறார். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் பல இடங்களில் பார்ப்பன எதிர்ப்புக் கருத்துக்கள் காணப்படுகின்றன. பாரி மன்னனின் அரசவைப் புலவராக இருந்த கபிலர் தனது பாடல் ஒன்றில் பார்ப்பனர்களை கடுமையாக விமர்சித்திருக்கிறார். பார்ப்பன எதிர்ப்பின் தேவை அன்றில…
-
- 1 reply
- 1.3k views
-
-
செருக்களத்துப் புலியொடுக்க தரணியெங்கும் முறுக்கெடுத்து தருக்குடனே தடைபோட்ட தனவான் தேசங்களே! கல்லுறங்கும் மாவீரர் எங்கள் உள்ளிருக்கும்வரை வில்கொண்ட கணைகளுக்கு வீதித்தடை என் செய்யும்?
-
- 6 replies
- 1.9k views
-
-
எங்கு போய் ஒளிந்தாய்....??? ஏய் பெண்ணே... விழுந்து வெடித்த உன் புன்னகை வெடி குண்டில்.... என் இதயம் அதிர்ந்ததடி... உன் நினைவில் உறைந்ததடி.... வெற்றிடமாய் இருந்த என் இதயத்தில்.... வெறி பிடித்து உன் நினைவுகள் அலையுதடி.... தேடி அலைகிறேன் என் காதலை சொல்ல உன்னிடததில்... ஆனால் உன்னை காணவில்லையே.... எங்கோ போய் ஒளிந்து கொண்டாய்....??? -வன்னி மைந்தன் -
-
- 2 replies
- 1.1k views
-
-
ஈழம் என்றொரு நாடு -தந்த தலைவனை இன்று நீ பாடு துள்ளியே வந்து தென்றலே ஆடு அள்ளியே வந்து புமாலை போடு.... புயலே வந்தொரு முரசதை கொட்டு புரட்சி நாயகன் புகழது பாடு அண்ணணிண் அகவை ஜம்பத்திரண்டு ஜயனே வாழணும் நீயே பல்லாண்டு..... செய்யணும் தமிழுக்கு நீயே தொண்டு நீயே எங்களின் நம்பிக்கை மன்று உரிமை போரதில் நீயே வென்று தரணும் ஈழத்தை நீயே ஈன்று.... அடிமை ஒழிந்தது தமிழன் நிமிந்தது உந்தன் ஜெனனத்திலே என்றும் நீ.. வாழிய..வாழியவே... -வன்னி மைந்தன் -
-
- 0 replies
- 804 views
-
-
இரந்து வாழ்பவனுக்கு... நித்தம் இறப்பு........! இனத்துக்காய் வாழ்பவனுக்கு... புத்தம் புதிதாய் தினமும் பிறப்பு!! வானம் இருண்டு போனால்... பூமி அழியாது! சிறு நரிகள் கத்தி... சிறுத்தை புலி சாகாது! நேற்றைய சந்ததி போட்ட- எச்சம்... தாயின் ......... பொட்டு-இடும் இடத்தில் எரிவாய்.... ஓடிவந்து அசிங்கம் துடைத்தீர்..... நீர் ஓராயிரமாண்டு வாழ்க ... நலமாய்!! மண் ஆள நினைப்பவர் எல்லாம்.. மகுடம் தமக்காய் சூடி கொள்வார்... மாமலையே-மண்ணை நேசித்த நீர்... போனால் - என்ன தர போகிறோம் உமக்காய் நாம்?!
-
- 3 replies
- 1k views
-
-
-
- 27 replies
- 5.5k views
-
-
''மா வீரர்கள்....'' கார்த்திகை மாதம் கண்ணீர் வடிக்கும் கல்லறை மீது தீபங்கள் ஏற்றும்.... பொன்னவர் உடல்கள் புக்களால் குளிக்கும் தேசமே திரண்டு அஞ்சலி செலுத்தும்... எங்களை காக்கவே தம்மையே அழித்தவர் மண்ணையே காக்கவே மரணத்தை ஏற்றவர்.... தீர செயல் கண்டு நெஞ்சமே விறைக்கும் உணர்வுகள் சிலிர்க்கும்... மெழுகாய் உருகி வழிகள் அழும் அவர் கல்லறையதையே கண்ணீர் கழுவும்... எழுந்தே வந்து என்னை உதைப்பான் அழுகிறாய் ஏனென்று என்னை கேட்பான்... அழுதே என்னை அசிங்கமாக்காய் எழுந்தே போய் களத்தில் நிற்ப்பாய்... அந்நியன் அவனை அடித்தே கலைப்பாய் அன்னை மண்ணை மீட்டே எடுப்பாய்... கல்லறை இருந்து கட்டளை இடுவான் இற…
-
- 2 replies
- 1.1k views
-
-
''புலியென எழுக தமிழா நீயும்......'' அழுகிறாய் ஏனடா நீ அடிமையா தமிழா...??? இன்னும் உனக்கென்ன இழப்பதற்கிருக்கு...??? இன்னும் எதற்காய் அமைதியாய் இருக்காய்....??? பொறுத்தது போதும் பொங்கியே எழடா. போர்களம் ஏறியே விடுதலை காணடா... அழுதது போதும் அழுகையை நிறுத்தடா அணியாய் வந்தெங்கள் அணியினில் இணையடா... இதுவரை இருந்தாய் அடிமையாய் நீயும் இனியும் எழுவாய் புலியென நீயும்....!!! - வன்னி மைந்தன் -
-
- 0 replies
- 826 views
-
-
தோழி காலை புலர்ந்தவுடன் - தோழி என் கண்ணில் நீ நிற்கின்றாயே! காதல் மயக்கமல்ல - தோழி என் இதயத்தின் நட்பு அன்றோ! வானில் தெரியும் நிலா - தோழி உன் குளிர் முகப் புன்னகையோ! பாலும் முக்கனியும் - தோழி உன் கனிவுப் பேச்சும் ஒன்றோ! தாயாய் அரவணைப்பாய் - தோழி உன் சேயாய் நான் மாறிடுவேன்! இனிதாய் பேசும் பேச்சை - தோழி நீ எங்கு கற்றுக்கொண்டாய்! கோபமும் வருவதில்லை - தோழி உன் நல் நட்புக் கிடைத்ததினால்! பாடும் குயில் தன் குரலை - தோழி உன்னிடம் கடன் வாங்கியதோ! கொட்டும் அருவி போலே - தோழி என்னிடம் பரிவை நீ காட்டுகின்றாய்! மாறாப் பற்றுக்கொண்ட - தோழி நீ என் நெஞ்சின் நீரூற்று! நன் செய் நிலம் விளையும் - தோழி நீ என் வாடா அன்புப் பயிர்! ஏதனால் ஈடு செய்…
-
- 13 replies
- 4.5k views
-
-
]''இப்போ...விட்டிடு....'' புலம்பெயர் நாட்டினில் புலமையோடிருந்தவன் புரட்சியாய் எழுந்த புலி வீரன் கண்டான்... தலைவனை கண்டவன் தன்னிலை உரைத்தான் தன்னையும் விடுதலை வேட்கையோடிணைந்தான்... திறமைகள் கொண்டவன் திருப்பங்கள் கொடுத்தான் விடுதலை விருட்சமாக விருட்சங்கள் விதைத்தான்..... மறைவிடம் தன்னில் மறைவாய் இருந்தவன் மதியுரை உரைத்தவன் மக்களை ஈர்த்தான்... விடுதலைக்காய் வந்த விடயங்கள் சொன்னான் அரசியல் நுட்பங்கள் வித்தையாய் கற்றவன்.... ஆட்சி பீடங்களை ஆடவே வைத்தான் நூலகம் என்ன- இவனே நூலகம்.... வந்தே குந்தியார் வாய்விட்டு கதறுவார் வரலாற்றை புரட்டியே வகுப்புகள் கொடுப்பான்... பட்டறை போட்டு பயிற்சிகள் எடுத்தவர…
-
- 4 replies
- 1.2k views
-
-
எதேச்சையாய் ஒரு காகத்தைக் கவனிக்க நேர்ந்ததுஇ எனது பள்ளி வளாகத்தில். உணவு வேளை முடிந்ததும் பிள்ளைகள் சிந்திய உணவுப் பருக்கைகளை தமது அலகால் கொத்தி அவ்விடத்தையே சுத்தம் செய்துவிட்டது காகம். இப்படி காகம் எத்தனையோ வகையில் ஒரு சாதாரண பறவையை விடவும் உயர்ந்த குணங்கள் கொண்டதாய் எனக்குத் தோன்றிற்று. ஆனால் அது் ஏனோ ஒரு பறவையாயக் கூட மதிக்கப்படுவதில்லை. இதற்கு காரணம் அதன் நிறமோஇ வடிவோ அல்லது அபரிமிதமோ தெரியவில்லை. எனது ஆதங்கம் ஒரு கவிதையாக இங்கு வெளிப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 788 views
-
-
எழுந்தோடு....... ஏனடா வருகிறாய் ஏறியே சிங்களா எங்களின் எல்லையில் உனக்கென்ன வேலடா....??? சத்திய வேள்வியில் செத்து மடிந்திட்ட வேங்கைகள் எத்தனை... இத்தனை இழந்தோம் விருட்சமயானோம் தேசத்தை என்ன விட்டிட்டு ஓடவா....??? எரிமலை ஆகியே எழுகிறோம் நாங்களே இனி -தீயினில் பொசுங்குமே உங்களின் அரண்களே... எங்களின் வீரரை என்னென்று நினைத்தாய்...?? கோழையர் என்றா கொக்கரித்து சிரித்தாய்... இந்தோ வருகிறோம் இறப்புனக்கெழுதவே இனியும் நிற்காதே எழுந்தின்று ஓடடா... எத்தனை காலங்கள் எம் மண்ணை ஆழ்வாய்...??? இனியும் பார்த்திட நாமென்ன பைத்தியகாறறா....??? அந்நியா எமக்கு அடிமை சாசனம் எழுதவா முனைந்தய் எழுந்தே ஓடடா... …
-
- 2 replies
- 941 views
-
-
-
- 12 replies
- 5k views
-
-
''இவனுக்கு விடுதலை கொடு.....'' விடுதலை அறியா விடுகாலி எல்லாம் விடுதலைக்காய் இன்று போரிட போகுதாம்... நினைத்தால் சிரிப்பு ஆனால் வெட்கம்... அரசின் மடிக்குள் அவையின்று அணைப்பு.... தேசத்தை மீட்குமாம் இந்த தேச துரோகிகள்... தன் தமிழ் தலையை தானே அறுக்கின்றான்- இவன் விடுதலை என்றேன் விடுகதை விடுகின்றான்... யாருக்கு விடுதலை இவன் யாருக்காய் கேட்கின்றான்....??? தன்னை காத்திட தன்னாலே முடியல இவரா வந்தெம்மை இன்று காப்பார்....??? சிங்கள படைகள் சுற்றியே குவிந்து சுற்று மதிலாய்அவருக்கு காவல் இவரா வந்தின்று பேசிறார் விடுதலை....??? எத்தனை குண்டுகள் கட்டியே பாய்ந்தார் இருந்தும் பெற்றான் சாகவரம்தான்.... ஏ…
-
- 0 replies
- 758 views
-
-
தமிழனுக்கு தமிழன் ஆளும் கட்சி எதிர்க் கட்சி கைவிடப்பட்டு கடித்துக் குதறிய சமாதான தீர்வுகளும் சமரச பேச்சக்களும்....... கொதித்தென்ன? குமுறியென்ன? பட்டினியும் சித்திரவதைகளும் மரணமும் . . முலைப்பால் இல்லாது முடிந்துபோன சிசுக்களும் . . அநாதை குழந்தைகளும் . . அபலைப்பெண்களும் - தான் எங்கள் தலைவிதியென வாழும் மக்கள் . . . . . பௌத்த மொட்டையர்களும் இனவெறி அரசியல்த்தலைவர்களும் கூடிச்சேர்ந்து அலசி ஆராய்ந்து . . . தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்காத மலட்டுச் சிங்களத்தின் மதியிழந்த அரசியல்த்தீர்வுகள் . . . . . . இதையும் ஆதரித்து. . சிலர் நீளமான யுத்தத்தின் நிழலிலே குளிர்காயும் நேற்று வந்த எட்டப்பர்கள் நேத்த…
-
- 3 replies
- 1.3k views
-
-
'' போராட புறப்பட்டது பிழையா....???'' கட்டிவைத்த என் வீட்டை கயவன் வந்து இடிக்கின்றான்.... அவனை தட்டிகேட்க துணிவின்றி கை கட்டி நிற்கின்றேன்... துப்பாக்கி முன் நிற்க துணிவு வரும் எப்படி....??? தட்டி கேட்க நிற்பேனா...?? தப்பிக்க நிற்பேனா....??? முரண்டு பிடித்தால் முண்டமாய் நான் கிடப்பேன்.... அடங்கித்தானே போக வேண்டும் சிறு பாண்மை என்ன செய்யும்....??? சீற வா முடியும்..?? சினக்கவா முடியும்..??? இன்றிங்கு இப்படித்தான் நடக்கிறது.... யார் தட்டி கேட்டார்...?? யாரால் முடியும்....??? தட்டி கேட்டால் பதில் என்ன வரும் - நீ பலியாய் போவாய்.... இது என்ன...?? இது தானே அடக்கு முறை... இப்போ சொல் உலகே ந…
-
- 3 replies
- 1.3k views
-
-
-
- 16 replies
- 4.7k views
-
-
அணிகள் அறிவோம்! அணிகள் என்றால் என்ன என்ற கேள்வி சிலருக்கு வரலாம். அதை சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். தமிழ் மொழி தன்னை அழுகுபடுத்துவதற்கு அணிந்து நிற்பவைகளை அணிகள் என்று சொல்லலாம். உடலை அழகுபடுத்தவதற்கும், பெருமைப்படுத்துவதற்கும் அணிகலன்களை அணிகிறோம். அதே போன்று தமிழை அழகு படுத்தி, பெருமைப்படுத்துகின்ற வேலையை அணிகள் செய்கின்றன. அத்துடன் சொல்லப்படுகின்ற கருத்துக்கு ஒரு வலுவை அணிகள் கொடுக்கின்றன. கவிதைகளில் இந்த அணிகள் இடம்பெறுகின்றன. உரை நடைகளில் இதை பயன்படுத்துபவர்களும் உண்டு. இன்றைக்கு கவிதை என்பது புதுக்கவிதை, ஹைக்கூ என்று பல வடிவங்களை எடுத்து விட்டன. அவ்வாறான கவிதைகளிலும் அணிகள் இருக்கின்ற…
-
- 17 replies
- 9.9k views
-
-
'' நான் யாவும் அறிந்தவன்'' நீச்சல் அறியாமல் நீந்த முணைகிறீர் பாவம் தம்பி கரையேற மாட்டீர்.... அலையின் வேகத்திற்கு அசைந்தாட வேண்டும் இல்லையேல் அமிழ்ந்திடுவாய்.... கற்று தர வந்தேன் கடிந்து கொண்டீர் பார்த்தீரோ இப்போ....?? ஆழ கடல் மீது அநாதையாய் காலூன்ற முடியாது கரையேற முடியாது திக்கு திசை தெரியா திசையொன்றில் நீர்.... அண்ட சமுத்திரத்தில் ஆடி வந்தவன் ''பாக்கு நீரினையில் பாய் போட்டு படுத்தவன்.....'' என்னையா எதிர்த்தீர்....?? ஏளனம் செய்தீர்... பார்த்தீரா இப்போ கரையேற முடியாமல் கங்கையில் தவிகின்றீர்... என்னை பகைத்தால் இதுவே நிலமை ''யான் யாவும் அறிந்தவன்..."" ( நானல்ல) -வன்னி மைந்தன் -
-
- 0 replies
- 937 views
-