Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. காதலை தேடினேன் காத்திருப்பு தந்த வலியினால் காணாமல் போனது கற்பனைகள் மட்டுமல்ல மகிழ்ச்சிகளும் தான்... அன்புள்ளங்களை தேடினேன் அத்தனையும் தந்த வலியினால் அறுபட்டு போனது ஆனந்தம் மட்டுமல்ல அரவணைப்புக்களும் தான் அன்பைத் தேடினேன் பாச உறவுகள் தந்த வலியினால் பறந்தே போனது பந்தங்கள் மட்டுமல்ல பாசங்களும் தான் அகிம்சையை தேடினேன் பொறுமை தந்த வலியினால் வற்றிப்போனது பொதுநலம் மட்டுமல்ல மனத நேயங்களும் தான் கனவுகளை தேடினேன் காலம் தந்த வலியினால் காணாமல் போனது நிஐங்கள் மட்டுமல்ல நிழல்களும் தான் :?

    • 15 replies
    • 3.2k views
  2. Started by வர்ணன்,

    கவிதை! ஊரறியாமல் நீயழுத கண்ணீர்........ பாயின் துவாரமூடு ...... பாய்ந்து செல்ல பார்த்திருக்கிறியா? அது கவிதை! ஊரழுத கண்ணீரை - உணர்வின் ........ முதுகில் தாங்கி ........ சோர்ந்து போனாயா? துவண்டு போனாலும் ....... நீ வாழ்ந்தாய் மனிதனாய் அது கவிதை! எது கவிதை? சொல் என்ற மானும் அல்ல.......... மொழி என்ற காடும் அல்ல........ மொழி காட்டில் சலங்கை எடுத்து ...... சொல் மானுக்கு கட்டி விடு..... பின் ..கற்பனைகாட்டில் கலைத்துவிடு... அது கவிதை! நேற்றைய பொழுதில் மை எடு.. இன்றைய பொழுதின் எழுதுகோலில் நிரப்பு....... நாளைய பக்கங்களை ..... வீச்சோடு .... எழுதி நிரப்பு...... புலர்கின்ற பொழுதில்......... நீ இல்லாமல் போனாலும்....... பொய் …

    • 5 replies
    • 1.8k views
  3. வணக்கம் பிள்ளைகள், வயசுபோன நேரத்திலை இந்தக் குளிருக்குள்ளை நானும் என்னத்தைத் தான் செய்யுறது. ஊரிலை மாதிரிக் காத்தாட வெளியிலை போகேலுமோ அல்லது நாலு பேர் சேந்து விடுப்புக் கதைக்கேலுமோ அல்லது பேரப் பிள்ளைகளைப் பிடிச்சு வைச்சுப் பாட்டி வடை சுட்ட கதையைச் சொல்லிப் பேக்காட்ட ஏலுமோ. சரி உந்த ரீவீப் பெட்டியிலை எங்கடை நாடகப் பெண்டுகள் அழுதுகொண்டு இருப்பாளவை. அதைப் பாக்கலாமெண்டால் உந்தச் சின்னவன் தான் காட்டூன் பாக்கவேணும் எண்டு போட்டு தூரத்திலை இருந்து ரீவீ போடுற கட்டையைப் பறிச்சுக்கொண்டுபோய் வைச்சுக் கொண்டு இருக்கிறான். பின்னை இந்தக் கட்டிலிலை வந்து கூரையைப் பாத்துக் கொண்டு கிடக்கேக்கை தான் அந்தக் கால ஞாபகம் வந்துது. அதுதான் எழுதி உங்களிட்டைக் காட்டுறன். நீங்களும் வாசிச்சுப் போட…

    • 15 replies
    • 3.3k views
  4. உன்னை சுவாசித்த நாட்கள் கண்களை ழூடிப்பாத்தேன் கண்ணீர் வரவில்லை-- கண்களை திறந்து பாத்தேன் கண்ணீர் வந்தது --காற்றின் ஒளியினால் உன்னை நினைத்து கண்களை ழூடினேன் கனவுகள் வருவதில்லை நீயும் தெரிவதில்லை-- என்னையே நினைத்து கண்களை ழூடினேன் அந்த கனவில் நீ அல்லவா ...தெரிந்தாய் உன்னிடம் பேசினேன் உன் மௌனத்தை புரிந்து கொண்டேன் ------- மெய்யானாலும் பொய்யானாலும் உன் மனசுக்குள் இருப்பவன் நான் அல்லவா காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி கனவில் வந்து என்னை கலாட்டா பண்ணுவாய் ஆனால் நேரில் வந்து நின்றாலும் நிமிந்தே பாக்கமாட்டாய் ஏய் திருட்டு பொம்மை உன்னையே நினைத்து ...பாரு உன் கண்களில் நீர் கசியுமா உன் கல்லான மனதாலே என்…

    • 11 replies
    • 2.2k views
  5. Started by hari,

    தொ.சூசைமிக்கேல் (tsmina2000@yahoo.com)

    • 14 replies
    • 2.3k views
    • 14 replies
    • 2.2k views
  6. அந்த சிறுமியின் சிந்தனை என் அம்மா -அப்பாவுக்கு ஒரே பிள்ளை வறுமையான குடும்பத்தில் பிறந்த நான் Üலி வேலை செய்து தான் அப்பா என்னை படிப்பித்தார்--------------- சிறு வயதில் படிப்பு படிப்பு என்று படித்தால் படிப்பில் அக்கறை செழித்தினால்-- என் அம்மா அப்பாவுக்கு என்னால் நல்ல பெயர் கிடைக்கனும் அதுக்கு நான் தான் படிப்பில் அக்கறை காட்டனும்-- வறுமையிலும் கொடுமையிலும் கண்ணீரிலும் வாழ்ந்து படிக்கின்ற நான்--- சொந்தங்கள் உறவுகள் இருந்தும் உதவி இல்லை பணம் இருந்தால் தான் அவர்கள்மதிப்பினம் பணம் இருந்தும் உதவாத உறவுகள் எதுக்கு நாங்கள் ஒதிங்கி போனோம் ------ அப்படி இருந்தும் அவர்கள் எல்லாரும் எங்களை மதிக்கனும் அதுக்கு நான் நல்லாய் படித்து…

    • 7 replies
    • 1.8k views
  7. சந்தியா ரசித்தவை நீங்களும் ரசிக்க

  8. இனிக்கும் நினைவலைகள் நெடிதுயர்ந்த நிழல்மரங்கள் கீழ் நிழலில் நீட்டிக்கால் வைத்துநான் நீண்டு படுத்திருந்திருந்தேன் விடிகாலை எழில்கூடி வெளிவந்த ஆதவனும் நடுவானில் நின்றிருந்து சுடுகதிரை வீசிநின்றான் துடிகூட அசையாத தளிர்ச்சோலை மலர்க்கூட்டம் தம்மழகால் எனைமயக்கி தாள்வாரம் நின்றுவிட இடையிடையே தொலைவினிலே இறக்கையினம் இசைபாட இன்னிசைபோல் தென்றலிலே மிதந்து வந்ததுவே முடிசார்ந்த மன்னவரின் முன்சரிதை மலர்எடுத்து இடையின்றி ஒவ்வொன்றாய் இனித்துச் சுவைத்திருந்தேன் துடியிடையும் பிடிநடையும் துவளும் தமிழ்ப்பாவையர்கள் வடிவழகின் வர்ணனையை மனக்கண்ணால் ரசித்திருந்தேன் அடியாளும் அடிசிலொடு இரசமுடன் இருகறிகள் மடைபோட்டு முடித்துவிட்டு மன்னவ…

    • 10 replies
    • 3.6k views
  9. வணக்கம் உறவுகளே இது ஒரு புதிய முயற்சி. இம் முயற்சிக்கு அனைவரது ஒத்திழைப்பும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இரண்டு வாரத்தில் ஒரு நிகழ்ச்சியாக தொடர்வதற்கான ஏற்பாடுகளில் களமிறங்கியுள்ளோம். யாழ்களத்தில நிறைய கவிஞர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் நல்ல வாய்ப்பாக இப்போட்டி நிகழ்ச்சி அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இப் போட்டி நிகழ்ச்சியானது முற்றும்முழுதாக இளங்கவிஞர்களை ஊக்குவிக்கும் ஒரு சிறந்த முயற்சியே என்பதை பெருமையுடன் அறியத் தருகிறோம். இதற்காக எமது இளங்கவிஞர்களின் ஆக்கங்களை இப்பகுதியில் எதிர்பார்க்கின்றோம்...! சரி நிபந்தனைக்கு வருவோம். அதவாவது இரண்டு கிழமைக்கு ஒருக்கா இங்கு ஒரு படம் அல்லது தலைப்பு தரப்படும். அத் தலைப்புக்…

    • 105 replies
    • 37.7k views
  10. யாழ் உறவுகளே யாரும் இல்லாத் தனியனென்று யாரோ சொன்ன வார்த்தையினால் சோகம் கொண்ட எந்தனுக்குச் சுகமாய் வந்த யாழ்தளமே வாழப் பிடிப்பும் இல்லாமல் வெழும் வழியும் தெரியாமல் சோம்பிப் பொன எந்தனையும் சுறுசுறுப் பாக்கிய உறவுகளே அனைவருக்கும் வணக்கம் உங்கள் எல்லாரோடையும் கொஞ்சம் மனம்விட்டுக் கதைக்கோணும் போலக் கிடக்குது. என்ன சொல்ல வந்தனான் எண்டா நான் இந்த யாழ் குடும்பத்துக்குள்ளை சேந்து ஒரு கிழமைதான். ஆனா அதுக்கள்ளை எனக்குள்ளை நிறைய மாற்றங்கள். சத்தியமாச் சொல்லுறன் ஏதோ தனிமைப் பட்ட மாதிரி யாருமில்லாத மாதிரி ஒரு உசாரில்லாமை இருக்கேக்கைதான் தற்செயலா இந்தத் தளத்துக்குள்ளை புூந்தனான். ஆனா இப்ப தான் தெரியுது எனக்கு எத்தினை பேர் இருக்கிறியள் எண்டு.. என்ரை கதை கவி…

  11. நண்பர்களுக்கு ஓரிரு வார்த்தைகள். எல்லாருக்கும் மணிவாசகனின் வணக்கங்கள். இந்தக் கவிதையும் கொஞ்சம் நீளமாத் தான் போச்சுது. அதுக்காக கோவிச்சுக் கொண்டு இடையிலை நிப்பாட்டிப் போடாமை முழுக்க வாசியுங்கோ சும்மா ஆக்களைக் கவரத் தான் இப்படித் தலைப்பு ஒண்டு போட்டனான். அதுக்காக ஆம்பிளைப் பிள்ளையள் வாசிக்காமை விட்டிடாதேங்கோ. ஆம்பிளைப் பிள்ளைகள் பொம்பிளைப் பிள்ளைகள் எல்லாம் என்ரை கவிதையை முழுசா வாசிச்சுப் போட்டு என்ரை கவிதை மாதிரி நீளமா உங்கடை விமாசனத்தை எழுதுங்கோ. நல்ல பிளைளைகள் தானே. இப்ப கவிதையைத் தொடங்கட்டே? சீர்தூக்கிப் பாருங்கள் சீரழிவாய்ப் போய்விட்ட சீதனம் செய்துவிட்ட சிறுமையினைப் பாரென்று சினந்திருக்கும் பெண்களுக்கு சந்தோச வாழ்க்கைக்கு சாபமாய்ப்…

    • 29 replies
    • 5.8k views
  12. உரிமை குரல் பாடல் ஒலி வடிவில் http://www.alaikal.com/voice.smil

    • 5 replies
    • 2.3k views
  13. Started by gowrybalan,

    என்- இடத்தில் என்னை இழந்தேன் வாழ்வது நானல்ல என்னினைவில் நீ தான் இங்கு....! களங்கமற்ற உன் நினைவில்- கனவில் நிழல்களுடன்....நிதமும்.. நிஜமாகுமா...........?? "அம்மா.......'' அலறிடத் துடித்தேன் அழுதால் வாய் விட்டு..... அயலில் இருந்து அன்னியமாவேன்...! மனதுள் விக்கி...முனகி... முடியாமல் கதவினை மூடி... தாப்பாள் போட்டு கட்டிலில் சாய்ந்து.. கண்களை மூடினால்...... ''அம்மா.......'' அலறிடத்துடித்தேன் அழுதால் வாய்விட்டு.......? களங்க மற்ற-உன் நினைவில்....கனவில்.... நிழல்களுடன்....நிதமும்.... நிஜமாகுமா...... :?: :?: :?:

    • 17 replies
    • 3.1k views
  14. உனக்காக காத்திருப்பேன்.... முதற் சந்திப்பில் என் மனதைக் கவர்ந்தாயடி ஒவ்வரு நாளும் உன் பேச்சால் -என்னை சாகடித்தாயடி ஒரு நாள் என் கூட பேசாமல் - என் மரண வலியை எனக்கு உணர்த்தினாய் பெண்ணே...... தெண்றல் காற்றாய் என் மனதுக்குள் நுழைந்து விட்டாய்... நீ என் மேல் காட்டும் அன்பும் ஆதரவும் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. ஆனால் நானோ உன்னை விட பலமடங்கு உன்னை நேசிக்கின்றேன். அது உனக்கும் தெரியும் ஆனால் நீயோ என்னை விட பல மடங்கு இன்னொருவணை நேசிக்கின்றாய் அதுவும் எனக்கு தெரியும்..... அன்பே... அன்பே உன் சந்தோசம் தான் என் சந்தோசம் உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்... உன் சந்தோசத்துக்காக அவனிடம் உன்னை விட்டுக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். ஆனாலும் உன்…

    • 6 replies
    • 7k views
  15. வசந்தத்தைத் தருவாயா காலக் களத்தினிலே கடுங்காயம் பட்டவனாய் உடலெல்லாம் புண்ணாகி உயிர்போகக் கிடந்தவனை பத்திரமாய் அணைத்தெடுத்துப் பாச மருந்திட்டுக் காதற் துணிகொண்டு காயத்தைக் களைந்தவளே அழகிழந்த சித்திரமாய் அடிவளவில் கிடந்தவனை கனிவுடனே கரமெடுத்துக் கறையானைத் தட்டி அன்பு நீர்கொண்டு அழுக்கெல்லாம் களைந்தகற்றி அழகாய் முன்னறையில் அமர்ந்திருக்கச் செய்தவளே வாழ்க்கைப் படகிழுக்க வழியெதுவும் தெரியாமல் துன்பப் பெருங்கடலில் துடுப்பிழந்து நின்றவனை மூர்ச்சித்து மெல்லமெல்ல மூச்சிழந்து போனவனை கைப்பற்றி மெல்லமெல்ல கரையிழுத்து வந்தவளே வெறுமைக் கோடையெனும் வெந்தணலில் சிக்கியதால் வெந்து தினங்கருகி வெளிறிப் போகையிலே நட்பென்னும் ந…

    • 7 replies
    • 1.7k views
  16. மாறிவிடு தமிழினமே அநியாயச் சிங்களத்தின் ஆக்கினைகள் பொறுக்காமல் அந்நியத்தை வந்தடைந்த அன்பான சோதரரே அதிகாரச் சிங்களத்தின் அடக்குமுறை தாங்காமல் அகதிகளாய் புலம்பெயர்ந்த அன்பான உறவுகளே அந்நியத்தில் நீர்செய்யும் அழுக்கான செயல்கள்தந்த கவலைகளை இறக்கிவைக்க கண்ணீரால் எழுதுகிறேன் புலம்பெயர்ந்த மண்ணில்நீh புரிகின்ற அராஜகத்தால் புண்ணான மனத்துடன்நான் புலம்பியிதை எழுதுகிறேன் சீருடனே வாழுமுந்தன் சிறப்பினைநான் காணவந்தேன் சில்லறைச் செயல்கண்டு சினந்துநான் எழுதுகிறேன் குடும்பம் போல்நீங்கள் கூடி வாழாமல் குழுக்கள் பலசெய்து குழம்புவதும் முறைதானோ அண்ணன் தம்பியாக அனுசரித்து வாழாமல் அடிதடியில் இறங்கிநீரும் அழிவதுவும் …

    • 7 replies
    • 1.7k views
  17. கடவுளுக்கோர் கடிதம் எல்லாம் வல்லவராம் எல்லாம் தெரிந்தவராம் எல்லாம் செய்பவராம் எங்கும் இருப்பவராம் அகிலத்தில் வாழ்பவர்கள் அப்படித்தான் சொல்லுகின்றார் ஆனாலும் என்னிடத்தில் அடுக்கடுக்காய் பலகேள்வி மனச்சிறையில் இதைப்போட்டு மறுவிக் கொள்ளாமல் மனந்திறந்து கேட்டுவிட மடலிதனை வரைகின்றேன் அண்டத்தை ஆள்கின்ற ஆண்டவன்உன் செயல்களுக்கு காரணத்தை அறியாத காரணத்தால் ஒருகடிதம் அடுக்காத செயல்செய்த அநியாயக் காரனைப்போல் தலைமறைவாய்ப் போயிருக்கும் தங்களுக்கே இக்கடிதம் முறையாக அனுப்பிவைக்க முகவரியும் தெரியாது இரகசியமாய் அனுப்பிவைக்க இருக்குமிடம் தெரியாது திருமுகத்தை அனுப்பிவைக்க திசைதெரியாக் காரணத்தால் திறந்த மடலாகத் த…

    • 34 replies
    • 4.5k views
  18. தோல்வி எனைத் தொடும் முன்னே தோழமையுடன் தோள் கொடுப்பாயடி. கவலைகள், மனதை காயப்படுத்தும் முன்னே காயத்தை ஆற்றும், மருந்தாக, வருவாயடி,,,! ஒரு நாள் பேசாவிட்டால் ஒரு ஜென்மம் போனதடி - என நீ துடிப்பதை நான் நன்கு அறிவேனடி! நினைவினில் நிஜமானவளே - என் கனவிலும் கரைந்தாயடி.. என் தோழி என்ற உரிமையுடனே உன் தோளில் சாய்வேனடி.. உன் சிநேகிதி என்ற உரிமையுடனே உனை நான் அதிகாரமும் செய்வேனடி! என் ஒற்றை விழியாக என் தோழி ,- நீ என்னில், என்றுமே வாழ்வாயாடி.. !

  19. நான் நேசித்தவள் -___________________ வறுமையிலும் கொடுமையிலும் வேலை செய்துகொண்டிருக்கும் என்னை-- காதல் என்ன என்று புரியாத எனக்கு நட்சத்திரம்போல என் வாழ்க்கையில் அவள் வந்தால்-------------- நானும் அவளும் பழக ஆரம்பித்தோம் முகம் தெரியாதவர்களாகவும் இருந்தாலும் ஒன்றாக தொலைபேசியில் கதைப்போம் அவளின் கதைகள் சிரிப்புக்கள் எல்லாம் என் மனதை கொள்ளை கொண்டன அவளோ ஒவ்வொருநாளும் தொலைபேசியில் கதைப்பால் நாட்கள் ஓட ஓட என் வாழ்க்கையில் ஓர் ஏக்கம் அந்த ஏக்கம் எனக்கே தெரியாதே-- அவளின் சிரிப்புக்கள் --என் காதில் கணீர் கணீர் என்றே ஒலித்துக்கொண்டிருந்தன<------ அவளோ என்னை தன் சகோதரங்கள் என்று நினைத்து கதைப்பால் அவள் வேறு மொழி நான்வ…

  20. மானிடனே உனக்காக அழகான இவ்வுலகை அன்புடனே படைத்தவன்நான் படைப்பிற்கு மகுடமென மனிதனுன்னை வடித்தவன்நான் வழிதவறிப் போகாமல் வாழ்வதற்காய் உங்களுக்கு சைவமதம் என்கின்ற சர்வமதம் தந்தவன்நான் மகத்தான இவ்வுலகை மகிழ்வுடனே படைத்துவிட்டு நிகழ்வதனை மட்டும்நான் நிம்மதியாய் பார்த்திருந்தேன் கனிவான உந்தன்மனம் கல்லாகிப் போனதனால் கல்லாக இருந்தவன்நான் கடிந்திதனை எழுதுகின்றேன் மனிதாபி மானமிங்கே மதிப்பிழந்து போனதனால் மனிதத்தை உயிர்ப்பிக்க மனந்திறந்து பேசுகிறேன் சிறப்பான படைப்பென்று சிந்தித்த மனிதரின்று செய்கின்ற செயலாலே செவ்வாயைத் திறக்கின்றேன் எளிமையின் வடிவமாகி எல்லார்க்கும் அருளுமெந்தன் சந்நிதியில் பணக்காரச் சடங்குகள…

    • 5 replies
    • 1.6k views
  21. எந்தன்குரல் கேட்கிறதா? அவனியிலே வித்தகனாய் அறிவுடனே நான்வாழ அனுதினமும் கனவுகண்ட அன்பான அம்மாக்கு என்னருகே இருக்கையிலே உன்னருமை தெரியவில்லை அருமையினை உணர்கையிலே அருகினிலே நீயில்லை மெழுகுவாத்தியாய் உருகி வெளிச்சத்தைத் தந்தவளே வெளிச்சத்தின் அருமையினை இருட்டில்தான் உணர்கின்றேன் உன்பேனா பிரசவித்த உரைகளைநான் மேடையேற்றி பேச்சாளன் ஆகியதை பெருமையுடன் நினைக்கின்றேன் பரீட்சைக்கு முதல்நாளும் படுக்கையிலே விழுந்திடுவேன் என்னருகே வந்திருந்து எனக்காக நீபடித்தாய் என்பாடம் தனைப்படித்து எனைஉயர்த்த முயன்றவளே உன்பாசம்தனை எந்த உலகத்தில் காண்பேனோ சிந்தையிலே எந்நாளும் எந்தனையே தாங்கியதால் உந்தனுக்கு எப்போதும் நிம்மதிய…

    • 37 replies
    • 5.1k views
  22. Started by Manivasahan,

    பாரே பார் பாரே உந்தன் இதயம் உள்ள பக்கம் கையை வைத்துப் பார் வீட்டை விதியை எண்ணித் தினமும் விழிகள் கலங்கும் எம்மைப் பார் தனியாய் வாழ்ந்த தமிழரைச் சிங்களத் தலையினில் கட்டியே விட்டவர் நீர் உரிமை இழந்த இனமாய் நாங்கள் உலகம் முழுதும் உழல்வதைப் பார் அல்லற் பிட்டியில் வழிவழி வாழ்ந்தோர் அல்லற் பட்டு மடிவதைப் பார் அகதியாய்த் தினந்தினம் இருப்பிடம் தேடி அலைபவர் துயரைக் களையப் பார் காமுகர் வெறியால் ஆவியை இழந்து கிணற்றில் கிடக்கும் பெண்ணைப் பார் கன்னியர் தங்கள் சுதந்திரம் தேடிக் கருவியை எடுத்த காரணம் பார் புனிதரின் பிறப்பில் பிரார்த்தனை செய்கையில் புலையனை ஏவியே விட்டனர் பார் சிறுமையைப் பேனா முனையால் செப்பிய சிவராம் உயிரும் போனது பார…

    • 9 replies
    • 1.7k views
  23. Started by Manivasahan,

    நல்ல கற்பனை. பலர் வெளிச்சத்தில் நிற்பதற்காய் சிலர் இருட்டில் நிற்கவேண்டியது அவசியமாய் இருக்கிறதே. மணிவாசகன்

    • 2 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.