Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. 1958 ம் ஆண்டு எம்ஜி.ராமச்சந்திரன் அவர்கள் இலங்கை வாணோலிக்கு வழங்கிய செவ்வி. http://www.archive.org/details/MgrInterviewInCeylonRadio1-3-1958.mp3

    • 0 replies
    • 1.2k views
  2. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் என்றாலே மற்ற பத்திரிகைகளுக்கு படங்கள் கொடுப்பதையோ, தனி ஷோ போடுவதையோ விரும்ப மாட்டார்கள். ஆனால் ரிலீசுக்கு சில தினங்களுக்கு முன்பு போனால் போகிறதென்று சில படங்களை அனுப்பி வைப்பார்கள். எந்திரன் படத்திற்கு இப்படி ஒரு இழுபறி ஏற்பட்டதால் தனது வெப்சைட்டில் படங்களை வெளியிட்டார் ஷங்கர். இந்த முறை ஆடுகளம் படத்திற்கு அதுவும் நடக்கவில்லை. ஷங்கருக்கு இருக்கிற தைரியம் வெற்றிமாறனுக்கு இல்லை என்பதும் ஒரு காரணம். பொங்கல் நெருங்கிக் கொண்டிருக்கிற இந்த நேரம் வரை வழக்கமாக அனுப்பி வைக்கிற ஸ்டில்களோ, ட்ரெய்லரோ கூட யாருக்கும் வழங்கப்படவில்லை. சன் பிக்சர்ஸ் கண்டு கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. நாம் பத்திரிகைகளோடு நெருக்கமாக இருக்க வேண்டும் என்று நினைத்…

    • 0 replies
    • 1.2k views
  3. விஜயகாந்த், விஜய் இருவரையும் சுற்றிய அரசியல் இப்போது சத்யராஜ் பக்கம் வீசத் தொடங்கியிருக்கிறது. விஜயகாந்தோடு நெருக்கம்; விடுதலைச் சிறுத் தைகளோடு ஊர்வலம் என்று தென்பட்டவரை நேரில் சந்தித்தே கேட்டோம். ‘சட்டப்படி குற்றம்’ படத்துக்காக வயது குறைந்து தெரிந்தார். எப்படி போயிட்டிருக்கு உங்க சினிமா கேரியர்... எத்தனை படங்கள்ல டூயட் பாடுறீங்க...? ‘‘ஐயோ... அந்த தப்பை மட்டும் இனிமேல் செய்யமாட்டேன். டூயட் இல்லாத கேரக்டர் உள்ள படங்களை செலக்ட் பண்ணி நடிக்கிறேன். கலவரம், முறியடி, த்ரீ இடியட்ஸ், வெங்காயம், குலசேகரனும் கூலிப்படையும், சட்டப்படி குற்றம், சினம், ஆயிரம் விளக்கு இப்படி நான் நடிக்கிற எந்தப் படத்திலும் எனக்கு டூயட் கிடையாது. இனி நான் கதையின் நாயகனாதான் வருவேன்.’’ ‘எ…

    • 0 replies
    • 897 views
  4. ஒரு ரிலாக்ஸ் மூடில் விஜயைச் சந்தித்தோம். ‘வேலாயுதம்’ படத்தில் வரும் அதிரடி சூப்பர் ஹீரோ கெட்டப்பில் இருந்தவர் ஜாலியாக பேச ஆரம்பித்தார். இனி விஜயின் மினி பேட்டி... ‘வேலாயுதம்’ மூலமாக மீண்டும் பரபர ஆக்ஷன்ல இறங்கிட்டீங்க போல.. “விஜய் ஃபார்முலான்னு சொல்வாங்களே அதில் மறுபடியும் நான் நடிக்கிற ஒரு சூப்பர் கமர்ஷியல் படம். ஹீரோ இருப்பார். வில்லன் இருக்கார். ஒண்ணுக்கு ரெண்டு ஹீரோயின்கள். ஆனால், இதுல வில்லனை ஹீரோ அடிச்சு துவம்சம் பண்ணணும்னு படம் பார்க்கிற ஆடியன்ஸ் ஃபீல் பண்ணுவாங்க. அதற்கான காரணம் புதுசு. ஆஸ்கர் ரவிச்சந்திரன் சார், ‘ஜெயம்’ ராஜான்னு நல்ல டீம். ராஜாவுக்கும் எனக்கும் நல்லா செட்டாகியிருக்கு. இந்தப் படத்துக்குப் பிறகு ராஜா கூட சேர்ந்து படம் பண்ணணும்னு எல்லா ஹ…

    • 0 replies
    • 1.2k views
  5. உடல்நலமில்லாத தன்னை தாயைப் போல கவனித்துக் கொண்டார் சல்மான்கான் என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார் நடிகை அசின். ரெடி இந்திப் படத்தில் சல்மான்கான் அசின் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பு முடியும் கட்டத்தில் உள்ளது. இருவருக்கும் காதல் மலர்ந்து, கல்யாணம் வரை போய்விட்டதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. சமீபத்தில், இருவரும் திருமணம் செய்து கொண்டுவிட்டதாக செய்திகள் வந்துள்ளதே என்று தொலைக்காட்சி பேட்டியொன்றில் கேட்கப்பட்டது. அதற்கு சல்மான்கான் பதில் அளிக்கையில் அப்படி நடந்து இருந்தால் மிகவும் சந்தோஷப்படுவேன் என்றார். அசின் குறுக்கிட்டு சல்மான்கான் ஜோக்கடிக்கிறார் என்று சொல்லி நழுவிவிட்டார்;. இதற்கிடையில் ரெடி படப்பிடிப்பில் சல்மான்கான் தாய் போல் தன்னை கவனித்துக் க…

  6. தள்ளாடும் காவலன் வெள்ளி, 31 டிசம்பர் 2010( 13:47 IST ) ஈழத் தமிழர்களின் எதிர்ப்பு, ஆளும் அதிகாரத்தின் ஓர வஞ்சனை, திரையரங்கு உ‌ரிமையாளர்களின் கோபம் என பல்முனை தாக்குதல்களு‌க்கு உள்ளாகியுள்ளது விஜய்யின் காவலன். பொங்கலுக்கு எப்படியும் படத்தை வெளியிடுவது என உறுதியாக உள்ளது தயா‌ரிப்பாளர் தரப்பு. அம்மாவின் ஆசிர்வாதத்தையும் விஜய்யின் தந்தை நே‌ரில் சென்று பெற்றிருக்கிறார். ஆனாலும் காவலனின் நிலை இன்னும் தள்ளாட்டத்தில்தான் உள்ளது. பொங்கலுக்கு வெளிவரும் ஆடுகளம், சிறுத்தைப் படங்களின் மீதுதான் திரையரங்கு உ‌ரிமையாளர்களின் கவனம் உள்ளது. இதன் காரணமாக விஜய் படங்களை விரும்பி திரையிடும் திரையரங்குகளும் காவலனுக்கு முகத்தை திருப்பிக் கொண்டுள்ளன. பொதுவாக விஜய் படங்கள் …

    • 1 reply
    • 1.3k views
  7. 2009 இல் வெளிவந்த இந்தப் படம்,இரு மனிதர்களின் போராட்டத்தைப் பற்றியது.The struggle of two men, to uplift a beaten up nation by uplifting a beaten up sports team.இது தான் கதை. 1990 வருடம் நெல்சன் மண்டேலா தன்னுடைய நீண்ட சிறைத் தண்டனையில் இருந்து விடுவிக்கப்படுவதை காட்டி ஆரம்பிக்கறது படம்.அவரை விடுவித்துச் செல்லுவதை பார்க்கும் ஆப்ரிக்க சிறுவர்கள் குதூகலப்படும் அதே நேரம்,ஒரு வெள்ளையன் இன்னொருவனிடம், “நம் நாடு நாய்களுக்கு போகும் காலம் இது!(This is the day our country(??) goes to the dogs)“ என்கிறான். எங்கே இவர் நிலைமையை சீர் செய்து விடுவாரோ என்று பயப்படும் ஆங்கில அரசாங்கம்,தீவிரவாத கும்பல்களுக்கு மறைமுகமாக ஆயுதம் கொடுத்து நாட்டில் வன்முறையை கட்டவிழ்த்து நிலைமையை மேலு…

  8. படித்த புத்தகம் : டான் பிரவுன் (Dan brown) எழுதிய தி லாஸ்ட் சிம்பல் (The lost symbol) நாவல். செம த்ரில்லிங்கான மறக்க முடியாத க்ரைம் கதை. மறக்க முடியாத பயணம் : ஜூலை,ஆகஸ்டில் அமெரிக்காவில் தங்கியிருந்த இருபது நாட்கள். அங்குள்ள தமிழர்களின் கவனிப்பும் உபசரிப்பும் ரொம்பவே பிரமிக்க வச்சது.ஊர் விட்டு ஊர் போய் வாழ்றவங்களோட உண்மையான ஏக்கத்தை உணர்ந்தேன். உங்களை ஆச்சரியப்பட வைத்த திரைப்படம்: இன்செப்ஷன் (Inception) ஹாலிவுட் படம். கிரிஸ்டோபர் நோலன் (Christopher Nolan) டைரக்ட் பண்ண படம். ரொம்பவே மனசை பாதிச்சதுன்னு சொல்லலாம்.ஒவ்வொரு காட்சியும் எதிர்பாராத ஆச்சரியங்களை தந்துச்சு. அறிமுகமான நண்பர்கள் : நாகார்ஜுனா, சூர்யா, தமன்னா, சுமந்த், சுதீப் எல்லோ ரு…

    • 0 replies
    • 1.1k views
  9. கவர்ச்சி நடிகையான சோனா ‘கனிமொழி’ படத்தைத் தொடர்ந்து ‘பாக்யராஜ்’ என்ற படத்தைத் தயாரிக்கிறார். இதற்குப் பிறகு ஒரு படத்தை இயக்கும் முடிவிலும் இருக்கிறார். இவரது சொந்த வாழ்க்கைதான் இவரது படக்கதையாம். கவர்ச்சியாக நடிக்கும் சோனாவிற்கு ஆண்கள் மீது வெறுப்பு உண்டாம். இதற்குக் காரணம் என்ன என்று சோனாவிடம் கேட்கிறார்கள். காரணத்தை இதுவரை எவரிடமும் சொல்லவில்லை. ‘எனக்குத் திருமணமே வேண்டாம்’ என்று மட்டும் சொல்கிறார். எனவேதான் தனது கதையையே படமாக்கி வருகிறார். உண்மையான காரணத்தை படத்தைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும் போல் தெரிகிறது. படங்கள் பார்க்க.... http://www.thedipaar.com/cinema/cinema.php?id=5823

    • 0 replies
    • 1.1k views
  10. பரஸ்பர விவாகரத்து கேட்டு, சென்னை குடும்ப நல கோர்ட்டில் நடிகர் பிரபுதேவா, அவரது மனைவி லதா மனு தாக்கல் செய்தனர். நடிகர் பிரபுதேவாவுக்கும், ரமலத்பேகம் என்கிற லதாவுக்கும் காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது, பிரபுதேவாவும், நடிகை நயன்தாராவும் சேர்ந்து சுற்றி வருகின்றனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக, சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.இந்நிலையில், சென்னை குடும்ப நல கோர்ட்டில் லதா தாக்கல் செய்த மனுவில், "எனது கணவர் பிரபுதேவா, நடிகை நயன்தாராவுடன் சேர்ந்து சுற்றுகிறார். வீட்டுக்கும் வருவதில்லை. மாதச்செலவுக்கும் பணம் தருவதில்லை. அவருடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன். அவரை நம்பி தான் நாங்கள் உள்ளோம். எங்களுடன் சேர்ந்து குடும்பம் நடத…

  11. இயக்குனர் சங்கருக்கு பொழுதுபோக்குக்கான சிறந்த இந்தியர் விருதை தட்டிச் சென்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சிஎன்என் ஐபிஎன் லைவ் நியூஸ் ஏஜென்ஸி சிறந்த இந்தியர்கள் என்ற பெயரில் விருதுகளை அளித்துவருகிறது. அரசியல், விளையாட்டு, வர்த்தகம், பொது சேவை, மற்றும் பொழுதுபோக்கு என ஐந்து துறைகளுக்கும் தனித்தனியாக விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் 6 பேருக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. பின்பு வாக்குகள் சேகரிக்கப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்படும். இந்த ஆண்டு பொழுதுபோக்குக்கான சிறந்த இந்தியர் விருதுக்கு, அமீர் கான், ரஜினிகாந்த். சல்மான் கான், இயக்குனர் ஷங்கர், ஷிலாங் செம்பர் நிறுவனம் மற்றும் விக்ரம் ஆதித்தியா பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. இதில் இந்திய சினிமாவை உலக அளவிற்…

    • 1 reply
    • 906 views
  12. ஐஸ்வர்யா ராய் தனது காதல் சர்ச்சைகள் மற்றும் திருமணம் குறித்து சுயசரிதை எழுதினால் கோடிக்கணக்கில் பணம் தருவதாக வெளிநாட்டு பதிப்பகம் ஒன்று முயற்சி செய்துள்ளது. ஆனால் எத்தனை கோடி கொடுத்தாலும் சொந்த வாழ்க்கையை எழுத சம்மதிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம் ஐஸ்வர்யா ராய். முன்னாள் உலக அழகியும், இந்தியாவின் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யா ராயின் வாழ்க்கை பரபரப்பும் திருப்பங்களும் நிறைந்தது. மொடலிங்கில் கொடிகட்டிப் பறந்தது, உலக அழகிப் பட்டம் வென்றது, திரையுலகிற்கு வந்தது என மூன்று கட்டங்களைக் கொண்ட அவர் வாழ்க்கையில் ஏராளமான சுவையான சம்பவங்கள். ஐஸ்வர்யா ராய்க்கும் சல்மான்கானுக்கும் காதல் ஏற்பட்டு பிரச்சனையில் முடிந்தது. இருவரும் பிரிந்தனர். பின்னர் விவேக் ஓபராயுடன் காதல் ஏற்பட…

    • 0 replies
    • 743 views
  13. நான்கு வருசங்கள் படுக்கையில் இருந்த நாட்கள் – விக்ரம்: முழுமையான நேர்காணல் -மு.ராமசாமி “ராவணன் படத்தின் வணிகரீதியான வெற்றியைப் பொறுத்தவரை சலசலப்புகள் இருந்தாலும் ராவணனில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு நடித்தவர் – விக்ரம். அடுத்தடுத்து இரண்டு படங்களுக்காகத் தேசிய விருதுகளைப் பெற்றிருக்கும் விக்ரம் தன்னுடைய பயணத்தின் சிரமங்களை விவரிக்கிற விரிவான நேர்காணலை இங்கே தருகிறோம். பேட்டி கண்டவர் வஸந்த் செந்தில். இந்தியாவின் சிறந்த நடிகர் விருது ஏழு வருடங்களுக்குப் பிறகு தமிழுக்குக் கிடைத்திருக்கிறது. 14 வருடப் போராட்டங்களுக்குப் பிறகு இந்த விருதை அடைந்திருக்கும் விக்ரம் கடந்து வந்த பாதை மிகக் கடினமானது. தன்னம்பிக்கையின் வேரை அசைத்துப் பார்க்கும் புயல் …

    • 2 replies
    • 1.8k views
  14. கமல் ஜோடியாகிறார் அனுஷ்கா First Published : 27 Dec 2010 12:30:22 AM IST Last Updated : "மன்மதன் அம்பு'வை முடித்துவிட்ட கையோடு அடுத்த படத்துக்கான தயாரிப்பில் இறங்கி விட்டார் கமல்ஹாசன். ஹாலிவுட் நிறுவனத்துடன் ராஜ்கமல் மூவிஸ் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது. படத்துக்கு "தலைவன் இருக்கிறான்' என்ற பெயர் பரிசீலனையில் உள்ளது. கடந்த ஆண்டு வெளியான "உன்னைப் போல் ஒருவன்' படத்துக்கு இந்த தலைப்புதான் வைக்கப்படுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது. ஆனால் இந்தப் படத்துக்கு நிச்சயம் "தலைவன் இருக்கிறான்' என்ற பெயரை வைக்க கமல் முடிவெடுத்து விட்டதாக கூறப்படுகிறது. ஹீரோயினாக நடிக்க அனுஷ்காவிடம் பேச்சு நடக்கிறது. dinamani.com

  15. City of God - நரகத்தின் நுழைவாயில் அனேகமாக அதிக முறை காப்பி இந்திய சினிமா/தமிழ் சினிமாவில் காப்பி அடிக்கப்பட்ட படம் என்றால் இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். இந்த படம் பார்த்தபிறகுதான் பல தமிழ் சினிமா படைப்பாளிகளின் படைப்பு திறமை நன்றாக புரியத்தொடங்கியது இது ஒரு ஆங்கில படம் கிடையாது. போர்த்துகீசிய/ஸ்பேனிஷ் மொழி படம் சப்டைட்டிலுடன் பார்க்கலாம். இந்த படம் பார்த்து சில நாட்களுக்கு வேறு படம் பார்க்கவில்லை அதன் பாதிப்பு அப்படி. மேலும் இது ஒரு உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டப் படம் முடிவில் போது சினிமாவில் வரும் பாத்திரங்களின் ஒரிஜினல் ஆட்களின் புகைப்படத்தையும் சேர்த்து போடுகிறார்கள். முதலில் காட்சி கோழியை வெட்டி சமைப்ப…

  16. கோடம்பாக்கம் திரைப்பாடல்களின் திருவிழாவிற்குத் தயாராகிவிட்டது. கவிப்பேரரசு வைரமுத்து தன் தங்கத் தமிழால் எழுதி முடித்த ஏழாயிரம் திரைப் பாடல்களிலிருந்து இலக்கியச் செழுமை கொண்ட ஆயிரம் பாடல்களை தானே தேர்ந்தெடுத்து தொகுத்திருக்கிறார். ஒவ்வொரு பாடலுக்கு முன்பும் அந்தப் பாடல் உருவான சூழலை அழகு நடையில் எழுதியிருப்பது படிக்கப் படிக்க சுவாரஸ்யம். மரபு, நவீனம் இரண்டையும் குழைத்து தனக்கென்று தனி கவிதை மொழியை உருவாக்கிக் கொண்ட வைரமுத்துவின் இந்த ஆயிரம் பாடல்களையும் இசையில்லாமல் கூட வாசிக்கும் வகையில் வடிவமைத்திருப்பது சிறப்பு. ஆயிரம் பாடல்கள் என்ற இந்தத் தொகுப்பிற்கு முதல்வர் கலைஞர் ‘‘வைரமுத்து எங்கள் குடும்பத்தோடு பழகி ஐக்கியமாகிவிட்டார். அவரை நான் பாராட்டுவதும் அதற்காக என்…

  17. Sunday, December 19th, 2010 அசின் நடிப்பில் வெளிவரும் காவலன் படத்தை புறக்கணிப்போம் தமிழர்களே! அன்பார்ந்த உலகத் தமிழ் மக்களே… வெகு விரைவில் வெளிவர இருக்கும் விஜய் அசின் நடித்த காவலன் படத்தை உலகமெங்கும் புறக்கணிக்குமாறு உரிமையோடு வேண்டும் அதே நேரம் அதற்கான வலுவான காரணங்களையும் முன்வைக்க விரும்புகின்றோம். முதலில் படப்பிடிப்புக்கு மட்டுமே இலங்கை சென்றேன் என்றார் அசின் பின்பு போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவே சென்றேன் என பல்டியடித்தார். எல்லாவற்றையும் விட கொடுமையான விடயம் எதுவெனில் ஒருவருக்கு கண் சிகிச்சை முடிந்த பின் நீங்கள் முதலில் யாரை பார்க்க விரும்புகின்றீர்கள் என கேட்ட கேள்விக்கு நான் அசினை மட்டுமே பார்க்க விரும்புகின்றேன் என அவர் கூற…

  18. மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு வருகிற டிசம்பர் 24&ம்தேதி 23&ஆண்டு நினைவுநாள். உறவுகள் முகத்தைக்கூட மறைந்தவுடன் மறந்துவிடுகிற மக்கள், எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் ‘தலைவா... உங்களை மறந்தால்தானே நினைப்பதற்கு...’ என்று சுவரொட்டி ஒட்டி தங்களின் பாசவெளிப்பாட்டைக் காட்டுகின்றனர். மறைந்த அந்த மக்கள் தலைவனின் கடைசி நாட்கள் பற்றிய ஒரு சின்ன அலசல்... 1987 டிசம்பர் 2... ராமவரம் தோட்டம். ஆறு மாச ஆண் குழந்தையோடு நடிகர் ராஜேஷ் வந்தார். மலங்க மலங்க விழித்த மழலையைக் கொஞ்சுகிறார், எம்.ஜி.ஆர். மூன்று முத்தம் வரை உம்மென்று முறைத்த குழந்தை நான்காவது முத்தத்தில் பொக்கை வாய்திறந்து புன்னகைக்கிறது. அடுத்து கமகமக்கும் அமர்க்களமான விருந்தோம்பல். டிசம்பர் 5... …

    • 0 replies
    • 1.5k views
  19. சரக்கேஸ்வரரை' வணங்காதவர்கள் சினிமாவுலகத்தில் வெகு சிலரே! பாட்டில்களை வணங்கும் பக்தகோடிகளில் ஆணுக்கு பெண் சளைத்தவளில்லை என்பதை நிருபித்திருக்கிறார் நடிகை ஒருவர். இவரது பதிலால் ஆடிப்போயிருக்கிறது திரையுலகம். முன்னணி ஆங்கில இதழ் ஒன்று சென்னை, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் எங்கே சரக்கடித்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. (கலீஜ் டாஸ்மாக்கிற்கு இந்த போட்டியில் இடமில்லை என்பதையும் இந்த நேரத்தில் வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்) ருசித்தவர்களுக்குதானே அருமை தெரியும்? அதன்படி முன்னணி நடிகையான ஸ்ரேயாவை அணுகியிருக்கிறது இந்த இதழ். அவரது சாய்ஸ் சென்னையல்ல. ஐதராபாத்! பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும் பார் ஒன்றையும், ஜுப்ளி ஹில்ஸ் ப…

  20. சென்னை, டிச. 20: மன்மதம் அம்பு படத்தில் கமல்ஹாசன் எழுதிய சர்ச்சைக்குள்ளான பாடலை தாமாக முன்வந்து நீக்குவதாக கமல் தெரிவித்துள்ளார். இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மன்மதன் அம்பு சினிமா படத்தில் நான் எழுதிப் பாடிய பாடல் ஒன்று இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக வந்த சேதி பரவலாகக் கிளம்பியதை நான் அறிவேன். இதை தணிக்கை செய்த குழு, இப்பாடலில் புண்படுத்தக் கூடிய வரிகள் ஏதுமில்லாததால் அதை அனுமதித்தனர். இதுவே எனது நிறுவனத்தின் படமாக இருந்தால் கண்டிப்பாய் அந்த வரிகளை நிஜ ஆன்மிகவாதிகளைப் புண்படுத்தாது என்ற முழு நம்பிக்கையுடன் சென்ஸார் சான்றிதழ் சகிதம் வெளியிட்டிருப்பேன். இது ரெட் ஜெயண்ட் மூவிஸ் படம். உதயநிதி ஸ்டாலின் படம் என்பதாலும் எல்லோரும் …

    • 0 replies
    • 738 views
  21. யாழப்பாணக் கலாச்சார அன்னை சினிமாவில் குதிப்பு - சீரழிய விடுவார்களா? சிறப்பாக்குவார்களா? 2010-12-18 22:58:46 யாழ்ப்பாண கலாச்சார அன்னையை சினிமாவுக்குள் நுளைத்துள்ளார் 'பனைமரக் காடு்' என்னும் திரைப்படத்தை தயாரிக்கும் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத் தலைவர் க. செவ்வேள். இன்று 10 மணிக்கு வண்ணை வெங்கடேஸ்வரப் பெருமாள் ஆலயத்தில் 'AAA' மூவிஸ் இன்ரநஷனல் நிறுவனத்தால் நடைபெற்ற பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து இத் திரைப்படத்திற்கான காட்சிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. இது தொடர்பான அனைத்து காணொளிகளும் சில மணி நேரத்தில் உங்களின் முன் கொண்டுவரப்படும். newjaffna.com

    • 1 reply
    • 953 views
  22. தனது அரசியல் பிரவேசம் தொடர்பாக அஜித்தைச் சந்தித்து ஆலோசனை கேட்டுள்ளார் நடிகர் விஜய். இது தொடர்பான ஆங்கிலச் செய்தியைப் படிக்க : http://funnycric.blogspot.com/2010/12/vijay-seeks-advice-from-ajith.html

  23. ஹாலிவுட் ஜோடி ஏஞ்சலினா ஜூலி - பிராட் பிட் இந்துமத முறைப்படி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். அவர்களது ஆன்மீக குரு தலைமையில் ராஜஸ்தானில் திருமணம் நடக்க உள்ளது. ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி (35). ஆங்கில நடிகர் ஜானி லீ மில்லர் (1996-99), ஹாலிவுட் நடிகர் பில்லி பாப் தான்டன் (2000-03) ஆகியோரை திருமணம் செய்து சில காலம் குடும்பம் நடத்தினார். 2 டைவர்ஸ்களுக்கு பிறகு 2005-ம் ஆண்டு முதல் ஹாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான பிராட் பிட்டுடன் வசித்து வருகிறார். மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். ‘பிரேஞ்சலினா’ என்று மீடியாக்கள் குறிப்பிடும் அளவுக்கு நெருக்கமாக இருக்கிறது இவர்களது உறவு. இந்நிலையில், புத்தாண்டு பிறந்ததும் இந்துமத முறைப்படி இந்தியாவில் தி…

  24. ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் 2 ஆவது முறையாக கோல்டன் குளோப் விருதை பெறும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளார். ஸ்லம்டோக் மில்லியனர் படத்தின் இயக்குநர் டேனி பாயில் இயக்கிய 127 ஹவர்ஸ் படத்திற்காக கோல்டன் குளோப் விருதுக்கு ரஹ்மான் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஸ்லம்டோக் படத்திற்காக ஒரிஜினல் இசைப்பிரிவில் கோல்டன் குளோப் விருதைப் பெற்றவர் ரஹ்மான். தற்போது மீண்டும் ஒரிஜினல் இசைப் பிரிவில் 127 ஹவர்ஸ் படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார் ரஹ்மான். 44 வயதான ரஹ்மான் ஸ்லம்டோக் படத்திற்காக 2 ஒஸ்கார் விருதுகளைத் தட்டிச் சென்ற பெருமைக்குரியவர் என்பது நினைவிருக்கலாம். ஜேம்ஸ் பிரான்கோ நாயகனாக நடித்துள்ள 127 ஹவர்ஸ் படத்திற்கு நல்ல வரவேற்பும் விமர்சனங்களும் கிடைத்து வருவது …

    • 0 replies
    • 633 views
  25. சிவாஜி படத்தில் நாம் திரையில் பார்க்காத சில காட்சிகள். இதுபோன்று இன்னும் சில காணொளிகள் காண http://www.thedipaar.com/cinema/cinema.php?id=5670

    • 1 reply
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.