Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. தீவிரவாதி என நினைத்து அமெரிக்க விமான நிலையத்தில் நடிகர் மம்மூட்டி இரண்டு மணிநேரம் சிறைவைக்கப்பட்டார். இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி அவரை விடுவித்தனர். பிரபல மலையாள மற்றும் தமிழ் நடிகர் மம்மூட்டியின் நெருங்கிய நண்பர் ஸ்டேன்லி அமெரிக்காவில் நிரந்த குடியுரிமை பெற்று தங்கியுள்ளார். இவர் நியூயார்க் நகர கவுன்சில் தேர்தலில் போட்டியிடுகிறார். தனது நண்பருக்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காக மம்மூட்டி சென்னையில் இருந்து பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானம் மூலம் கடந்த 29ந்தேதி நியூயார்க் சென்றார். ஜான் எப்.கென்னடி விமான நிலையத்தில் மம்மூட்டி இறங்கியதும் அவரது பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தனர். இதையடுத்து திடீரென மம்மூட்டியை அதிகாரிகள் பி…

  2. விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு பற்றி புதிய படம் தயாராகிறது. இதுபற்றிய தகவலை நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ளார். ஆனால் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் யார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. இதில் பிரபாகரன் வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். ஏற்கனவே இருவர் படத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி கேரக்டரில் வந்தார். சிறந்த நடிப்புக்காக இவருக்கு மாநில அளவில் 18 விருதுகள் கிடைத்துள்ளன. 3 தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். பிரபாகரன் வேடத்தில் நடிக்க பிரகாஷ்ராஜை அணுகிய போது உடனே ஒப்புக்கொண்டாராம். இந்த வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவேன் என்றார். அவர் பிரபாகரன் கேரக்டருக்கான பிரத்யேகமான பயிற்சி எதுவும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். ஆனால…

    • 6 replies
    • 8.7k views
  3. பழம்பெரும் நடிகரும், தயாரிப்பாளருமான கே.பாலாஜி சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணம் அடைந்த அவரது உடல் எழும்பூரில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று இரவில் வந்து அஞ்சலி செலுத்தினார். நடிகர் ரஜினிகாந்த் இன்று காலையில் பாலாஜியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நடிகர் பிரபு, ராம்குமார் இருவரும் குடும்பத்துடன் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் மோகன்லால், நடிகைகள் கே.ஆர். விஜயா, சுகுமாரி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள். தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் உள்ளிட்ட திரையுலகத்தினர் திரண்டு வந்…

    • 1 reply
    • 2.7k views
  4. தமிழைக் காப்பாற்ற இயற்கை என்னை விட்டு வைத்திருக்கிறது: கருணாநிதி, மே 2, 2009, 10:35 [iST] திருச்சி: தமிழுக்கு ஏதாவது நேரிட்டால் அதைக் காப்பாற்ற இயற்கை என்னை விட்டு வைத்திருக்கிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி. லோக்சபா திமுக தேர்தல் பிரசாரத்தை முதல்வர் கருணாநிதி திருச்சியில் நேற்று நடந்த பிரமாண்டக் கூட்டத்தில் தொடங்கினார். இக்கூட்டத்தில் மே தின கொண்டாட்ட கூட்டமும் நடந்தது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்பாக முதல்வர் கருணாநிதி பேசுகையில், அனைவருக்கும் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முன்பு பேசிய திருமாவளவன் விட்ட முழக்கம் விரைவில் பாராளுமன்றத்தில் கேட்கும். அவருடன் சேர்த்து சாருபாலா தொண்டைமான் முழக்கமும் கேட்கும். …

    • 10 replies
    • 3k views
  5. ஈழப்பிரச்சனை பற்றி படம் எடுக்க ஆசை இருக்கிறது;ஆனால் பயமாக இருக்கிறது:கமலஹாசன் உலகநாயகன் கமல்ஹாசன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் என இரண்டு ஜாம்பவான்கள் இணைந்து அசத்தும் படமான உன்னைப் போல் ஒருவன் படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவின் போது செய்தியாளர்கள் கமலிடம், இலங்கை பிரச்னையை மையமாக வைத்து படம் எடுப்பீர்களா என கேட்டதற்கு, ’’ஆசை இருக்கிறது; ஆனால் அதை விட பயம் அதிகமாக இருக்கிறது’’ என்றார். எதற்காக என நிருபர்கள் கேட்டதற்கு, ’’ஏன் பயம் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்’’ என்று புன்னகையுடன் கூறினார். நக்கீரன்

    • 8 replies
    • 4.6k views
  6. ஈழத் தமிழர்கள் பெரும் இன்னலில் உள்ள நிலையில் தான் இந்த ஆண்டு பிறந்த நாளை கொண்டாடப் போவதில்லை என்று நடிகர் அஜீத் அறிவித்துள்ளார். ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன் ஆகியோர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிறந்த நாள் கொண்டாட்டங்களை ரத்து செய்தனர். அதேபோல முதல்வர் கருணாநிதி, அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோரும் பிறந்த நாள் கொண்டாட்டங்களை ரத்து செய்தனர். இந்த வரிசையில் தற்போது அஜீத்தும் இணைந்துள்ளார். இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அசல் திரைப்பட தொடக்க விழாவில் நேரில் கலந்து கொண்டும், தொலைபேசி மூலமாகவும், தலைமை இயக்கத்தின் மூலமாகவும் வாழ்த்து சொன்ன ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்…

    • 4 replies
    • 5.4k views
  7. விட்டால் ரஜினிக்கே சொல்லித்தருவார் போலிருக்கிறது ரம்பா! முதல்வர் கலைஞரை சந்திக்க திடீரென்று அவரது வீட்டிற்கு சென்றார் ரம்பா. போதாதா... அரசியலில் நுழையப் போகிறார் என்றும், திமுக வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போகிறார் என்றும் ஏராளமான கசமுசாக்கள். முதல்வரை சந்தித்து அவருக்கு பக்கத்தில் நின்று போட்டோவும் எடுத்துக் கொண்டவர், முகங்கொள்ளாத சிரிப்போடு வெளியே வந்தார். அவரை சூழ்ந்து கொண்ட நிருபர்கள் 'நீங்க திமுகவிலே சேரப்போவதாகவும், பிரச்சாரத்திற்காக தமிழகத்தை சுற்றி வரப்போவதாகவும் தகவல்கள் வருகிறதே?' என்றார்கள். அப்போது ரம்பா சொன்னதுதான் ரஜினி ஸ்டைல் வார்த்தைகள்! 'அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை எனக்கில்லை. எது எப்போது நடக்கும் என்று யாருக்கு தெரியும்? ஆண்டவன் என்ன…

    • 0 replies
    • 2.9k views
  8. Started by kirubakaran,

    அனுஷ்காவின் வீரத்தையும், ஆந்திரா காரத்தையும் நிரப்பிக் கொண்டு வந்திருக்கிற படம். ஆவி, பிசாசு, அமானுஷ்யம் என்று மிக்சியில் அடித்து 'ரத்த ஜுஸ்' கொடுக்கிறார்கள். அடிக்கிற ஏசியிலும் வியர்த்துக் கொட்டுகிறது. ஆங்கிலப் படங்களுக்கு சவால் என்று சவடால் விடுகிறவர்களுக்கு மத்தியில், நிஜமாகவே சவால் விட்டிருக்கிறார் இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா. யாருக்கும் அடங்காத ஒருவனை தனது வாள் வீச்சில் வீழ்த்தி வீட்டிற்குள்ளேயே சமாதி கட்டுகிறாள் சமஸ்தான இளவரசி அருந்ததி. குற்றுயிரும், குலை உயிருமாக கிடக்கிறவன் உள்ளேயே ஆவி ரூபத்தை அடைந்தாலும், வெளியே வர முடியாதபடி மந்திரக்கட்டுகள் சமாதியை சுற்றி! போகிற வருகிறவர்களை நள்ளிரவில் அழைத்து சமாதியை உடைக்க சொல்கிறான். எதற்கு? அருந்ததியை பழிவாங்க. அவளோ, ம…

    • 0 replies
    • 2.1k views
  9. காதல், காலேஜிலிருந்து மெல்ல மெல்ல ஸ்கூல் லெவலுக்கு இறங்கி வருவதை ஆபாசமில்லாமல் (இதானே பலருக்கு வர மாட்டேங்குது) சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரோஹன் கிருஷ்ணா! பசங்களின் பாய்ச்சலும், பயங்கர கூச்சலுமாக படம் நகர்ந்தாலும், தேவையா இந்த டிராஜடி? என்ற கேள்வியோடு வெளியே வருகிறார்கள் ரசிகர்கள். ஒரு ஸ்கூல், இரு கோஷ்டிகள். அடிக்கடி சண்டை வருகிறது இவர்களுக்குள். 'பசங்கன்னா அப்படிதான்' என்ற லாஜிக்கோடு அவர்களை கையாள்கிறார் நதியா மிஸ்! அதே பள்ளிக்கு படிக்க வருகிற மாணவி ஒருத்திக்கும், மாணவனுக்கும் காதல் வர, கூடவே சந்தேகமும் வருகிறது அவனுக்கு. தனது காதலியுடன் மனம் விட்டு பேசும் சக நண்பனையே போட்டுத்தள்ள முடிவு செய்கிறான். வன்முறையின் இருபக்கமும் இருக்கிற கூர்மை மாணவர் தரப்பை பதம் பார…

    • 0 replies
    • 1.4k views
  10. ஆஸ்கர் விருதுக்குப் பிறகு தனது சம்பளத்தை ரஹ்மான் ஏற்றாவிட்டாலும், சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் தானாகவே அவர் சம்பளத்தை உச்சாணிக் கொம்பில் ஏற்றிவிட்டன. உலகப் புகழ் பெற்ற கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் இதுவரை தோன்றி வந்த மோட்டரோலா செல்போன் விளம்பரத்தில் விளம்பர மாடலாக நடிக்க மட்டும் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானுக்கு ரூ.28 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். உலகின் 2வது மிகப் பெரிய செல்போன் தயாரிப்பு நிறுவனம் மோட்டரோலா. அமெரிக்காவைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் சர்வதேச விளம்பர மாடலாக முன்னணி கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் இருந்து வந்தார். அவரது ஒப்பந்த காலம் இப்போது முடிவடைந்துவிட்டது. இந் நிலையில், புதிய விளம்பர மாடலாக ஏ.ஆர். ரகுமானை மோட்டரோலா நியமித்துள்ளது. …

  11. ந்ந்ந்.விடுப்பு.cஒம்/ மேலும் புதிய படங்கள் இணைய தளம் மற்றும் ப்ளாக்குகளை இப்போது கலக்கும் சமாச்சாரம் என்ன தெரியுமா... விஜய் வீடியோதான். சேச்சே... தப்பா நினைக்காதீங்க. இது வேற வீடியோ. பார்க்க பரம சாதுவாய் தெரியும் அதே விஜய் கோபத்தின் உச்சியில் நின்றால் எப்படியிருப்பார் என்பதைத் தெரிந்து கொள்ள உதவும் நிஜ வீடியோ. சமீபத்தில் ரிலீசான அவரது வில்லு படத்துக்காக அவரும் இயக்குநர் பிரபு தேவாவும் புரமோனல் டூர் போனார்கள் அல்லவா... அப்போது திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் விஜய். அந்தப் பேட்டியின் போது அவரிடம் அவருக்குப் பிடிக்காத சில கேள்விகளைக் கேட்டு மடக்கினார்களாம் நிருபர்கள். குறிப்பாக, 'உங்களுக்குப் பொருத்தமில்லாத எம்ஜிஆர், ரஜினி இமேஜை…

    • 10 replies
    • 6.6k views
  12. பிரபல நகைச்சுவை நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மரணமடைந்தார். சூரியன், ஜென்டில்மேன், முதல்வன் உள்பட ஏராளமான படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் ஓமகுச்சி நரசிம்மன் (வயது 73). எம்ஜிஆர்-சிவாஜி காலத்தில் சின்னச் சின்ன வேடங்களில் நடிக்கத் துவங்கிய ஓமக்குச்சி நரசிம்மன், கவுண்டமணி-செந்திலுடன் பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து பிரபலமானார். குறிப்பாக சூரியன் படத்தில், கவுண்டமணி, 'நாராயணா இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலடா' என ஓமக்குச்சி நரசிம்மனைப் பார்த்துச்சொல்லும் வசனம் மிகப் பிரபலம். ஓமக்குச்சி நரசிம்மன் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை ஓமகுச்சி நரசிம்மன் மரணம் அடைந்தார். இது பற்றி அறிந்ததும் திரை உலகை சேர்…

  13. திரு ரஜனிகாந்த் அவர்களுக்கு வணக்கம், ஒரு ரசிகனாக இருந்தும் உங்களை தலைவா என்று அழைக்காததற்கு மன்னித்துக் கொள்ளுங்கள். ஈழத்தில் பிறந்ததால் தலைவா என்று ஒரு நடிகரை அழைப்பது எனக்கு அந்நியமாக இருக்கிறது. ஆயினும் நான் உங்கள் பரம ரசிகன். ஈழத்தை சேர்ந்த பெரும்பாலானவர்கள் உங்கள் ரசிகர்கள்தான். தமிழ்நாட்டில் இருப்பவர்களை விட நாங்கள் உங்களை அதிகமாக நேசிக்கின்றோம். இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இதுதான் உண்மை. தமிழ்நாட்டில் குசேலன் படத்தை மக்கள் தோற்கடித்த பொழுது, வெளிநாடுகளில் அதை நாங்கள் வெற்றி பெறச் செய்தோம். வெளிநாடுகளில் தசாவதாரமா அல்லது குசேலனா நன்றாக ஓடியது என்று விசாரித்துப் பாருங்கள். நான் சொல்வது உண்மை என்று புரியும். படத்தைப் பார்க்காது உங்களை …

    • 0 replies
    • 3.6k views
  14. காலம் சென்ற நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள், மீனாவுடனான செவ்வி

    • 0 replies
    • 4.4k views
  15. Started by kirubakaran,

    அம்மணக் குண்டியாக சென்னைக்கு வரும் ஹீரோ, ஒண்டி ஆளாக நின்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் கலங்கடிப்பதுதான் கதை! கதை புதுசு. காட்சிகள் பழசு என்பதால் கடுப்பும், கைத்தட்டல்களுமாக கலப்பட ரசனைக்குள்ளாக்குகிறார் இயக்குனர் கிச்சா. ஆரம்ப காட்சியில் சென்சார் கொஞ்சம் அசந்திருந்தாலும் ரசிகர்களுக்கு முடி கயிறு வைத்தியம் அவசியப்பட்டிருக்கும். நல்லவேளை... நிர்வாண கோலத்தில் ஓங்கு தாங்காக நடந்து வரும் சுந்தர்சி க்கு ஒரு கட்சி பேனரை இடுப்பில் கட்டி காப்பாற்றுகிறார் தலைவாசல் விஜய். பின்பு அதே கட்சியில் எம்.எல்.ஏ ஆகிற அளவுக்கு தன்னை வளர்த்துக் கொள்கிறார் சுந்தர்சி. பிரபல அரசியல் தலைவனிடம் திட்டம் போட்டு தஞ்சமடையும் இவர், அவர்களை பழிவாங்குவதுதான் க்ளைமாக்ஸ். ஏன் என்பதற்கு நெஞ்சை பதற வைக்…

    • 1 reply
    • 1.9k views
  16. டாக்சியில் பயணிக்கும் கோடீஸ்வரன் ஒருவனுக்கு அந்த டாக்சிக்காரன் கொடுக்கிற டார்ச்சர்தான் கதை! காலையில் துவங்கி இரவில் முடிவதாக கதை அமைந்தாலும், இரண்டே மணி நேரத்தில் 'சுருக்' என்று படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் லட்சுமிகாந்தன். அதற்காகவே மீட்டருக்கு மேலே போட்டுக் கொடுக்கலாம் (16 ரீலில் படம் எடுத்து பாடாய் படுத்தும் இயக்குனர்கள் இவரிடம் ட்யூஷன் எடுத்துக் கொள்க!) தன்னை எல்ஐசி ஏஜென்ட் என்று மனைவி சிம்ரனிடம் பொய் சொல்லும் பசுபதி, பார்க்கும் தொழிலோ கால் டாக்சி ஓட்டுகிற டிரைவர் வேலை. சவாரிக்கு வரும் அஜ்மல், 'வேகமா போ வேகமா போ' என்று துரத்த, ஆக்சிலேட்டர்.... சிக்னல்... ஆக்சிடென்ட்! தன்னை காப்பாற்ற வேண்டிய பயணி கூச்சல் குழப்பத்துக்கு நடுவே காணாமல் போக, கம்பி எண்ணுகிறார் ப…

    • 0 replies
    • 1.5k views
  17. வணக்கம் இசை ரசிகர்களே, இந்த "அசலும் நகலும்" எந்த இசையமைப்பாளர்களையும் புண்படுத்தும் நோக்கில் இணைக்கவில்லை! ஒரு இசை ரசிகனாய் எனக்குள் எழும் கேள்விகளே இவை! ஏன் உங்களுக்குள் எழும் கேள்விகளுமே!! என்னை பொறுத்தவரையில் இசையை இப்படித்தான் பார்க்கிறேன்! அதாவது உதாரணத்துக்கு கடந்தகால இசையின் ஒலிப்பதிவுகளை வைத்து பார்த்தால்... Mono: விஸ்வநாதன் Stereo: இளையராஜா digital: றஹ்மான் எனக்கு இம் மூன்றுமே பிடித்திருக்கு. ஒவ்வொருவர்கும் ஒவ்வொரு இசையமைப்பாளாரை பிடிக்கும். உங்களுக்கு பிடித்த இசையமைப்பாளர்கள் அசலில் இருந்து நகல் எடுக்கவில்லை என்று வாதாடவாருங்கள்! உதாரணங்களை நிரூபியுங்கள். நிரூபிக்கமுடியாமல் தேவையில்லாவிதண்டாவாதங்களை முன்வைக்கவேண்டாம்!!!.... நான் கீழே உதா…

  18. லாஸ் ஏஞ்செல்ஸ்: ஸ்லம்டாக் மில்லியனர் படம் சிறந்த படத்துக்கான ஆஸ்ரையும், அதன் இயக்குனர் டேனி போயலுக்கு சிறந்த இயக்குனருக்கான விருதும் கிடைத்துள்ளது. இதன்மூலம் இந்தப் படம் மொதமதம் 8 விருதுகளை வென்றுள்ளது. இதில் பணியாற்றிய இந்தியர்களான ரஹ்மான் 2 விருதுகளையும், சவுண்ட் மிக்சிங்குக்கு பூக்குட்டி ஒரு விருதையும் வென்றுள்ளனர். இந்தப் படத்துக்கான மற்ற ஆஸ்கர் மற்ற விருதுகளை வென்றவர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். சிறந்த திரைக்கதை தழுவல் (Bஎச்ட் ஆடப்டெட் ஸ்cரேன்ப்லய்) விருது இந்தப் படத்தின் கதாசிரியர் சிமேன் பியேபோய்க்கும், சிறந்த சினிமாட்டோகிராபிக்கான விருது ஆண்டனி டாட் மாண்டலுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படம் மொத்தம் 10 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுக…

  19. உலகின் அதிஉயர் திரை விருதான அமெரிக்காவின் 'ஒஸ்கார்' விருது வழங்கும் மேடையில் இரண்டு இசை விருதுகளைப் பெற்ற தமிழரான இசை மேதை ஏ.ஆர்.ரஹ்மான் "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என அரங்கத்தில் தமிழில் உரையாற்றினார். தொடர்ந்து வாசிக்க

    • 22 replies
    • 3.4k views
  20. ரஹ்மானும், ஆஸ்கரும்... ஒரு பிரார்த்தனையும்! விடிந்தால் ஆஸ்கர் அதிகாரப்பூர்வ பட்டியல் தெரிந்துவிடும். நம்ம 'மெட்ராஸ் மொசார்ட்'டுக்கு விருது உண்டா இல்லையா என்ற சஸ்பென்ஸும் நீங்கி விடும். ஆனால் அதற்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணம் சுருட்ட ஒரு கும்பல் தீவிரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏராளமான புதுப்புது இணைய தளங்களை உருவாக்கி வைத்துள்ள இவர்கள், ஸ்லம்டாக் மில்லியனேர் எத்தனை ஆஸ்கர் விருதுகள் வாங்கும்... என்னென்ன பிரிவுகளில் வாங்கும்? ரஹ்மானுக்கு விருது உண்டா இல்லையா? என சூதாட்டம் நடத்தி பணம் பறித்துக் கொண்டுள்ளன. இன்னொரு பக்கம், ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தே தீர வேண்டும்... அவர் தகுதிக்கு முன் ஆஸ்கர் ஒரு பொருட்டே அல்ல, என்ற குரல்கள் ஒலிக்கத் து…

    • 11 replies
    • 2.5k views
  21. நான் கடவுள் படத்தை பெரும்பாலான விமர்சகர்கள் ஆகா ஓகோ என்று பாராட்டிக் கொண்டிருக்கின்றார்கள். சிலர் படத்தில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டுகின்றார்கள். ஆனால் திரைப்படத்தின் முடிவு பற்றி யாரும் கோபப்படவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. "வலியால் துடிக்கும் கன்றுக் குட்டியை கொல்வதில் தப்பில்லை" என்று சொன்னதாகக் கருதப்படும் காந்தி வாழ்ந்த மண்ணில் இருப்பதால் அவர்கள் படத்தின் முடிவை இயல்பாக எடுக்கின்றார்களோ தெரியவில்லை. யார் கண்டது? பாலாவும் இதை மனதில் வைத்துக் கொண்டு முடிவை அமைத்திருக்கக் கூடும். உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்களின் இன்னொரு உலகத்தை பொட்டில் அறைந்தது போன்று இந்த சமூகத்திற்கு அறிமுகப்படுத்தும் ஒரு பெரும் பணியை பாலா செய்திருக்கின்றார். நகைச்சுவை, கோபம…

  22. சின் நடித்த இந்தி `கஜினி’ படம் வசூலில் சாதனை நிகழ்த்தியுள்ளது. இப்படத்தில் அமிர்கானுடன் அசின் ஜோடி சேர்ந்ததன் மூலம் இந்தி திரையுலகில் பிரபலமானார். அங்குள்ள முன்னணி நடிகைகளை வீழ்த்தி முதல் இடத்தை பிடித்துள்ளார். ஓம் சாந்தி ஓம் படத் தில் நடித்ததன் மூலம் தீபிகாபடுகோனே இந்தி திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார். ஒரு படத்திலேயே உச்சிக்கு போனார். படங்கள் குவிந்தது. ஆனால் அவர் நடித்த படம் தோல்வி அடைந்ததாலும் அசின் வரவாலும் மார்க்கெட் சரிந்தது. இந்தி நடிகைகள் அசின் மேல் பொறாமையில் உள்ளனர். அவரை ஒப்பந்தம் செய்யவேண்டாம் என பட கம்பெனிகளையும் முன்னணி ஹீரோக்களையும் மறைமுகமாக நிர்பந்திக்கின்றனர். ஆனாலும் அசின் மார்க்கெட்டை கவிழ்க்க முடியவில்லை. இந்த நிலையில் அசினுக்கு தீப…

    • 0 replies
    • 1.4k views
  23. 25 வருடங்களுக்குப் பின் மீண்டும் ஜென்ஸி! [ Sunday, 08 February 2009, 07:11.11 AM GMT +05:30 ] 'ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்...', 'என் வானிலே...', 'தெய்வீக ராகம்...','ஆயிரம் மலர்களே...', 'இரு பறவைகள்..', 'காதல் ஓவியம்...' நினைக்கும்போதே, ஞாபகங்களில் ஒரு தேன்நதி ஓடும் பரவசம் தெரிகிறதல்லவா... இசைஞானியின் மயக்கும் இசையில், ஜென்ஸியின் சிலிர்க்கும் குரலில் 25 ஆண்டுகளுக்கு முன் வெளியான அமுத கானங்கள் இவை. இந்தப் பாடலைப் பாடிய ஸ்டார் பாடகி ஜென்ஸி, அலைகள் ஓய்வதில்லை வரை ரசிகர்களைக் கிறங்கடித்துக் கொண்டிருந்தார், தன் அருமையான குரல் வளத்தினால். ஆனால் ஒரு கட்டத்தில் என்ன ஆனார் என்றே தெரியாமல் போய்விட்டது. கேரளாவைச் சேர்ந்த இவர், சில காலம் தேவாலயங்களில…

    • 8 replies
    • 7k views
  24. நான் ரசித்த வடிவேலு காமடி

  25. இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஆறு மில்லியன் யூத மக்கள் கிட்லரின் நாசிப் படைகளால் படுகொலை செய்யப்பட்டார்கள். ஒரு இலட்சத்திற்கும் அதிகமான யேர்மனிய மக்களும் நாசிகளால் கொல்லப்பட்டார்கள். இந்த யேர்மனிய மக்கள் எதிரிகளோடு கூட்டுச் சேர்ந்தார்கள் என்பதற்காகவோ, நாட்டைக் காட்டிக் கொடுத்தார்கள் என்பதற்காகவோ கொல்லப்படவில்லை. வாழ "இயலாத" ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு நாசிகளால் "வரமாக" மரணம் வழங்கப்பட்டது. இந்த "வரம்" 1940இல் இருந்து 1941 வரை முழுவீச்சில் வழங்கப்பட்டது. மனநிலை பாதிக்கப்பட்டவர்களும், உடல் உறுப்பு ஊனம் உள்ளவர்களும் ஆயிரக்கணக்கில் அள்ளிச் செல்லப்பட்டு, முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு, கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டார்கள். இவர்களைக் கொல்வதற்கு பெரும்பாலும் வி…

    • 3 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.