வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
ஸ்டார் ட்ரெக் படங்களில் நடித்த ஆன்டன் எல்சின் விபத்தில் உயிரிழப்பு 27 வயதான ஹாலிவுட் நடிகர் ஆன்டன் எல்சின் விபத்து ஒன்றில் உயிரிழந்த செய்தியை அவருடைய ரசிகர்களும், நண்பர்களும் அதிர்ச்சியுடன் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். பாவெல் செக்கோவ் என்ற கதாபாத்திரத்தில் சமீப ஸ்டார் ட்ரெக் படங்களில் நடித்துள்ள எல்சின், லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் அவருடைய காரால் நசுக்கப்பட்டு உயிரிழந்தார். செங்குத்தான சாலை ஒன்றில் அந்த கார் பின் நோக்கி கீழே உருண்டு, எல்சினை செங்கல் தூண் மற்றும் வேலி ஒன்றின் மீதும் மோத செய்தது. நிறைய திறமைகளை கொண்ட எல்சின், தாராள இதயம் கொண்டவர் என்றும், வயதுக்கு மீறிய அறிவை கொண்டிருந்தவர் ஆனால் அவரது ந…
-
- 0 replies
- 346 views
-
-
தொடர் சறுக்கலும் துப்பாக்கியின் ஒற்றை வெற்றியும் அரவிந்த கிருஷ்ணா மின்னத் தவறிய நட்சத்திரங்கள் துப்பாக்கி படம் வெற்றிபெற்றதும் கோலிவுட்டில் பலர் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்கள். காரணம் தொடர்ந்து பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் தோற்றுவருவதுதான். கடந்த ஆண்டு 'மயக்கம் என்ன' 'ஒஸ்தி' ஆகியவற்றிலிருந்து தொடங்கிய இந்தச் சறுக்கல் 'மாற்றான்' வரை மாற்றமில்லாமல் தொடர்ந்தது. பெரிய நட்சத்திரங்கள், பெரிய பட்ஜெட், வெளிநாடுகளில் பாடல் காட்சிகள், நாயக பிம்பங்கள் ஆகியவை படத்தின் வெற்றிக்கு எந்த உத்தரவாதமும் தராது என்பதைக் காட்டிவிட்டன இந்தப் படங்கள். துப்பாக்கி இந்தச் சரிவைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது. துப்பாக்கியைப் பற்றிப் பேசுமுன் இந்தச் சறுக்கலின் விவரங்களை அலசலாம்.…
-
- 0 replies
- 4.3k views
-
-
அமெரிக்க கோவிலில் மகளுடன் வழிபட்ட ரஜினி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யாவுடன் அமெரிக்காவிலுள்ள சச்சிதானந்தா கோவிலில் வழிபாடு செய்துள்ளார். ரஜினியின் கபாலி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அவர் அமெரிக்காவிலுள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார் என வதந்திகள் பரவின. இந்த நிலையில் ரஜினி தனது மகள் ஐஸ்வர்யாவுடன் அமெரிக்காவின் வெர்ஜினியா நகரிலுள்ள சச்சிதானந்தா கோவிலில் வழிப்பாடு நடத்தியுள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை ஐஸ்வர்யா தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கபாலி திரைப்படம் எதிர்வரும் 22ஆம் திகதி வெளியாவதால், அதற்கு முன்பாகவே ரஜினி நாடு த…
-
- 0 replies
- 380 views
-
-
திரை விமர்சனம்: திருநாள் டெல்டா மாவட்டங்களில் நீதிபதி களையே கதிகலங்க வைக்கும் அதிரடி தாதா நாகா (சரத் லோகிதஸ்வா). அவரது விசுவாச அடியாள் பிளேடு (ஜீவா). தாதாவின் சாக்கு மண்டித் தொழிலில் மட்டும் நேர்மையான பங்குதாரராக ஜோ மல்லூரி, அவர் மகள் நயன்தாரா. இவருக்கும் ஜீவாவுக்குமிடையே காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் காதலில் ஏற்படும் பிரச்சினையால் தாதாவுக்கும் ஜீவாவுக்கும் முரண்பாடு தொடங்குகிறது. இன்னொரு பக்கம் ‘நீயா, நானா?’ கோபிநாத் தலைமை யில் காவல் துறைக் குழு ரவுடிகளைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறது. காதலர்கள் சேர்ந்தார்களா? தாதா - அடியாள் மோதல் என்ன ஆனது என்பதே மீதிக் கதை! என்னதான் கதை பழைய பாணி யில் இருந்தாலும் தேர்ந்தெடுத்து…
-
- 0 replies
- 408 views
-
-
கமல் விஸ்வரூபம் படத்தை ஆரம்பித்தது முதல் பலவித சோதனைகளை சந்தித்து கொண்டிருக்கின்றார். தற்போது அவர் ஒரு புதுவிதமான எதிர்ப்பில் இருக்கிறார். அதற்காக அவர் இன்று சென்னையில் டிஜிபி அலுவலகம் சென்று புகாரும் கொடுத்துள்ளார். அதாவது விஷயம் இதுதான். விஸ்வரூபம் டி.டி.எச் என்ற தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பு செய்யும் நேரத்தில் உள்ளூர் மின்வாரிய அதிகாரிகளை கைக்குள் போட்டு அந்த நேரத்தில் மின்சாரத்தை கட் செய்யப்போவதாக திடீரென ஒரு வதந்தி கிளம்பியுள்ளது. இது எதற்குமே கலங்காத கமல்ஹாசனை அதிர வைத்துள்ளது. அந்த நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் இல்லாமல் செய்துவிட்டால், அவருடைய திட்டம் தவிடுபொடியாகிவிடும்., மீண்டும் ஒரு காட்சி போடுவதற்குள் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகிவிடும். பணம் கொ…
-
- 0 replies
- 451 views
-
-
தித்திப்பான தெய்வமகள் முதல்...திகிலான நாகினி வரை...2016ன் ஹிட் லிஸ்ட் சீரியல்கள்! #2016Rewind 2014...2015...2016னு வருடங்கள் நிற்காம ஓடி 2017ம் ஆண்டும் பிறந்துவிட்டது. ஆனால், ’சின்னத்திரை’ எனப்படும் டிவி உலகின் சீரியல்களுக்கு வருஷக் கணக்கெல்லாம் இல்லவே இல்லை. அந்த வகையில் 2016 ஆம் ஆண்டில் சீரியல் ரசிகர்களின் மத்தியில் சக்கை போடு போட்ட சில ஹிட் சீரியல்களின் ஒரு சிறு பார்வை இங்கே உங்களுக்காக! தெய்வமகள்: ’சத்யா - பிரகாஷ்’ ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும் அளவிற்கு சன் டி.வியின் இந்த சீரியலின் ரீல் ஜோடிக்கு பட்டிதொட்டியெங்கும் ஃபேன்ஸ் அதிகம். அதைவிட முக்கியமாக ஜெய்ஹிந்த் விலாஸ் குடும்பத்தினரின் கண்களுக்குள் விரலை விட்டு ஆட்டும் வில்லிய…
-
- 0 replies
- 1.4k views
-
-
இந்த கதையில் சொல்லப் படும் அபலைச் சிறுமி கனகா. முதல்வர் NT ராமராவ் . அம்மா தேவிகா. இந்த கருமங்கள் எல்லாம் பண்ணி, கடைசியில் முழு ஐந்தாண்டுகள் கூட பதவியில் இருக்க முடியாமல், சொந்த மருமகன் சந்திரபாபு நாயுடுவினால் பதவி இழந்தார். அதே கட்சி, அதே MLA கள் ஆதரவுடன் கடசியினை ஆரம்பித்தவரை இறக்கி மருமகன் முதல்வரானார். மக்கள் பேராதரவு, கட்சி ஆதரவு இழக்க ஒரே காரணம் இந்த நாதாரி வேலை தான். கடைசி வரை மீண்டும் முதல்வராக முடியாமல் மரணித்தார். மகிந்தரைப் போல யோதிடர்களால் நாசமாய்ப் போன ஒருவர் இவர்.
-
- 0 replies
- 656 views
-
-
பலாத்காரம் செய்பவர்களுடன் சண்டைபோட ஒவ்வொரு பெண்ணுக்கும் கராத்தே கற்றுத் தரவேண்டும் என்றார் நீது சந்திரா. ‘ஆதிபகவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நீது சந்திரா. இவர் கூறியதுகடந்த ஆண்டு டெல்லியில் மருத்துவக்கலூரி மாணவி ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். அதில் குற்றவாளிக்களுக்கு தண்டனை கிடைத்தது. அந்த வருத்தம் ஆறுவதற்குள் சமீபத்தில் மும்பையில் ரவுடிகள் சிலரால் பெண் பத்திரிகையாளர் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். ஒரு சம்பவம் நடந்த சில மாதங்களிலேயே மீண்டும் ஒரு அசம்பாவித சம்பவம் நடந்திருக்கிறது.இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொள்ள பெண்கள் எல்லோருக்கும் மார்ஷல் ஆர்ட் எனப்படும் சண்டை பயிற்சிகளை கற்றுத் தர வேண்டும். குறிப்பாக 4 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகள் எல்லோருக்…
-
- 0 replies
- 390 views
-
-
'இருப்பாய் தமிழா நெருப்பாய் ! ' - கவிஞர் காசி ஆனந்தனின் திரைப்பாடல் 'இருப்பாய் தமிழா நெருப்பாய் -இருந்தது போதும் இதுவரை செருப்பாய் ' என்று உணர்ச்சியை வளப்படுத்தும் இக்கவிதை வரியை தமிழ் நேசிப்பாளர்கள் எவரும் அறிந்திருப்பர்.தமிழீழ விடுதலைப் போராட்ட பாடலில் இருந்த இந்த வரிகளும் அதை புனைந்த உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனும் தமிழ் திரைப்படப் பாடல் துறைக்கு வர வேண்டும் என்பது கோடிக்கணக்கான தமிழர்களின் ஆசை. ஈழ சோகங்களை இலக்கிய வடிவில் படைத்திருக்கும் 'உச்சிதனை முகர்ந்தால்' என்ற புகழேந்தி தங்கராஜின் திரைப்படம் மூலம் தமிழர்களின் அவ்விருப்பத்தை நிறைவேற்றியிருக்கிறார் காசி ஆனந்தன். "இருப்பாய் தமிழா நெருப்பாய் ... நீ! இழிவாய் கிடக்க செருப்பா... நீ! ஓங்கி ஓங்…
-
- 0 replies
- 4.1k views
-
-
பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் (63). இவர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உலக அளவில் சூப்பர் ஹிட்டான டைட்டானிக் படத்தைத் தயாரித்தார். இந்தப் படத்துக்காக ஆஸ்கர் விருதை வென்றுள்ள இவர், அடுத்து அவதார் (2009), அவதார்: தி வே ஆஃப் வாட்டர் (2022) படங்களைத் தயாரித்தார். இதுவும் உலக அளவில்வெற்றி பெற்றது. இந்தப் படங்களைத் தவிர, கேம்பஸ் மேன், சோலாரிஸ், அலிடா: பேட்டல் ஏஞ்சல் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்த அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக மகன் ஜேமி தெரிவித்துள்ளார். அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த ஜான் …
-
- 0 replies
- 214 views
-
-
[size=2] ‘உன்ன வெள்ளாவில வச்சு வெளுத்துகல, இல்ல வெயிலே படாம வளர்த்தகல என்ற கவிஞர் சினேகனின் வரிகளுக்கு சொந்தகாரர் லூதியானாவிருருந்து கிளம்பி வந்துள்ள கவர்ச்சி புயல் டாப்ஸி. தமன்னாவுக்கு போட்டியாக தமிழ் சினிமாவில் களம் இறக்கப்பட்டு இருப்பவர். [/size] [size=2] செஞ்சு வைச்ச வெண்ணை சிலைப் போல் தகதகக்கிறார் தப்ஸி. தனுசுடன் ஆடுகளத்தில் தனது ஆட்டத்தை தமிழில் தொடங்கி இருக்கிறார். [/size] [size=2] ஜுவாவுடன் ‘வந்தான் வென்றான்’ என அம்மணியின் இன்னிங்க்ஸ் தொடர்கிறது. டாப்ஸி முதலில் அறிமுகமானது தெலுங்கில் தான். ‘ஜிம்மன்டி நாதம்’ முதல் படமே சூப்பர் ஹிட். இப்போது தமிழ், தெலுங்கு கதாநாயகர்கள் டாப்ஸி ஜோடி சேர வரிசை கட்டி நிற்கிறார்கள். இடையில் காதலர்கள் சர்ச்சை சிக்கியவர் தற்போ…
-
- 0 replies
- 540 views
-
-
சிறைக் கைதி ரஜினி!- கபாலியின் 5 ரகசியங்கள் நான்கு இயக்குநர்களில் தேர்வான ரஞ்சித் ஆரம்பத்தில் ரஜினியிடம் சுந்தர்.சி, ராகவேந்திரா லாரன்ஸ், கெளதம் வாசுதேவ் மேனன், பா. ரஞ்சித் ஆகியோர் கதை சொன்னார்கள். சுந்தர்.சி ரஜினிக்கான முழுக்கதை, திரைக்கதையை தயார் செய்யவில்லை ஒன்லைன் கதை மட்டுமே சொன்னார். அடுத்து ராகவேந்திரா லாரன்ஸ் சொன்ன கதை ரஜினிக்கும், தயாரிப்பாளர் தாணுவுக்கும் ரொம்பவே பிடித்து இருந்தது. முதல் பிரிண்ட் அடிப்படையில் தனக்கு உரிமை தரவேண்டும் என்று ராகவேந்திரா நிபந்தனையை முன் வைத்ததால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதன்பின் கெளதம் மேனன் சொன்ன கதை இருவருக்கும் பிடித்து பூஜை போடுவதற்கு நல்ல நாளும் குறிக்கப்பட்டது. திடீரென கெளதம் மேனனுக்கு குட்பை …
-
- 0 replies
- 440 views
-
-
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு கடலில் மீன்பிடிக்கப் போன கணவன் அருளப்பசாமிக்காக (விஷ்ணு) காத்திருக்கிறார் எஸ்தர் (நந்திதா தாஸ்).. வீட்டு முன்பு அருளப்பசாமியின் எலும்புக்கூட்டை எஸ்தரின் மகன் கண்டுபிடிக்க எஸ்தர் கைது செய்யப்படுகிறார்… எஸ்தரிடம் நடக்கும் போலீஸ் விசாரணையில் பிளாஷ்பேக்காக கதை நமக்கு சொல்லப்படுகிறது… சதா குடித்துக் கொண்டிருக்கும் அருளப்பசாமிக்கும், எஸ்தருக்கும் (சிறு வயது எஸ்தராக சுனைனா) இடையே காதல்… இயலாதவர்களுக்காக பிரார்த்திக்கும் ஒரு கிறிஸ்தவப் பெண் நாயகியாக வருவது தமிழ் சினிமாவுக்கு புதுசு… அருளப்பசாமியின் தலையில் கை வைத்து எஸ்தர் பிரார்த்திப்பது, ‘’சாத்தானே அப்பால போ’’ என அவனைப் பார்த்து பதறுவது என பல காட்சிகள் சுவாரஸ்யம்… கடலோர கிராமத்தை இவ்வளவு அ…
-
- 0 replies
- 668 views
-
-
’நியூ ஜென் காமெடி’ நம் கவலையை தீர்த்ததா? கவலை வேண்டாம் விமர்சனம் "வாழ்க்கை வாழுறதுக்கு இல்லை, கொண்டாடுவதற்கு... தினம் தினம் கொண்டாடு" மயில்சாமி சொல்லும் இந்த பஞ்ச் தான் இந்தப் படத்தின் டேக் லைன். “யாமிருக்க பயமே” படத்திற்கு பிறகு, டிகே இயக்கி, ஜீவா காஜல் அகர்வால் நடித்திருக்கும் படம் “கவலை வேண்டாம்”. படம் பார்த்தவர்களின் கவலை தீர்ந்ததா? ஜீவாவும் காஜலும் பள்ளிக்கால நண்பர்கள். வயது ஏற ஏற, நட்பு காதலாகி அதுவே கல்யாணத்தில் முடிகிறது. ஜீவாவின் சேட்டைகளால் இரண்டே நாட்களில் இருவரும் பிரிந்துவிடுகிறார்கள். சில வருடங்களுக்குப் பிறகு காஜலுக்கு, பாபிசிம்ஹாவை திருமணம் செய்ய வேண்டிய சூழல். விவாகரத்து பெறுவதற்காக ஜீவாவைத் தேடி வருகிறார் காஜல் அகர்வால். வ…
-
- 0 replies
- 411 views
-
-
தாதா சாகேப் பால்கே விருது! மின்னம்பலம் 2020ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் நடிகர்கள் அஜித், தனுஷ், நடிகை ஜோதிகா உள்ளிட்டோர் விருது பட்டியலில் உள்ளனர். சிறந்த படமாக செழியன் இயக்கிய "டூ லெட்" படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அசுரன் திரைப்படத்துக்காக தனுஷ் இந்த விருதைப் பெற உள்ளார். பன்முகத்தன்மை வாய்ந்த நடிப்பாற்றலுக்காக நடிகர் அஜித்குமாருக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது. ராட்சசி படத்துக்காக நடிகை ஜோதிகாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குனருக்கான விருது ஒத்த செருப்பு படத்தை இயக்கிய பார்த்திபனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இச…
-
- 0 replies
- 415 views
-
-
முதல் பார்வை: C/O காதல் பள்ளிக் காலம், பதின்ம வயது, நடுத்தர வயது, 40 வயதுக்கு மேல் என நான்கு பருவங்களில் நடக்கும் காதல் கதைகள். இதில் எந்தக் காதல் கை கூடியது, எது தோல்வியடைந்தது என்பதே 'C/O காதல்'. காதல் என்பதைத் தாண்டிய பொதுவான விஷயம் ஒன்று இந்த நான்கு காதல்களுக்கு இருக்கிறது. அதுவே படத்தின் முக்கியமான திருப்புமுனை. ஒரு காதலைத் தவிர மற்ற மூன்று காதல் கதைகளிலும் ஏதோ ஒரு விஷயம் கண்டிப்பாக நம்மைப் பாதிக்கிறது. பள்ளி நாட்கள் காதல் கதையில் சிற்பி கதாபாத்திரத்தின் முடிவும், நடுத்தர வயதுக் காதலில் சலீமா கதாபாத்திரத்தின் முடிவும் அதிர்ச்சியைத் தர, 40 வயதைக் கடந்த இருவர் காதலிக்கும் கதையில் அதன் வெகுளித்தனமும், நடக்கும் சம்பவங்களின் நகைச்சுவையும் ஆச்சரியத்தை…
-
- 0 replies
- 588 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் ஜூன் 2021 பட மூலாதாரம்,AMAZON PRIME VIDEO நடிகர்கள்: மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, சமந்தா, ஷரீஃப் ஹாஸ்மி, தேவதர்ஷிணி, மைம் கோபி, அழகம் பெருமாள், அத்னான்சாமி, சீமா பிஸ்வாஸ்; இசை: சச்சின் - ஜிஹார்; ஒளிப்பதிவு: கேமரோன் எரிக் ப்ரைசன்; இயக்கம்: ராஜ் & டிகே. வெளியீடு: அமெஸான் ஓடிடி. The Family Man முதலாவது சீஸன் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் அந்தத் தொடரின் இரண்டாவது சீஸன் இப்போது வெளியாகியிருக்கிறது. இலங்கையின் தமிழ் போராளிக் குழுக்களும் கதையின் ஒரு பகுதி என்பதால் வெளியாகும் முன்பே பெரும் சர்ச்சைக்குள்ளான தொடர் இது. முதலாவது சீஸனின் கதை இதுதான்: தேசியப் ப…
-
- 0 replies
- 259 views
-
-
போடா போடிக்கு பிறகு சரத்குமார் மகள் வரலட்சுமி நடித்திருக்கும் படம் மதகஜராஜா. விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலியுடன் படு கிளாமராக நடித்திருக்கிறார். கிளாமராக நடித்திருப்பத பற்றி அவர் கூறியதாவது: நான் அல்ட்ரா மார்டன் பொண்ணு. ரியல் லைப்புலேயே நான் கிளாமரான ஆளு. அப்புறம் சினிமாவுல அப்படி நடிக்குறதுல எனக்கு என்ன தயக்கம். போடா போடியில ஒரு டான்சரா நடிச்சேன். அதுல அதிகமா கிளாமர் காட்டத் தேவையில்லாம இருந்துச்சு. மதகஜராவுல அட்டகாசம் பண்ற பெண் கேரக்டர். சாங்குல கிளாமர் இருக்கும். மார்டன் பொண்ணா வளர்ந்ததால இந்த வெட்கம், நாணம் எல்லாம் எங்கிட்ட கொஞ்சம் குறைவுதான். சுந்தர்.சி சார் தான் என்னை ஒரு பொண்ணா மாற்றி நடிக்க வச்சார். மதகஜராஜா ரிலீசுக்காகத்தான் வெயிட் பண்ணிக்கிட்டு வேற கேரக்டர்ல நடிக்கா…
-
- 0 replies
- 549 views
-
-
மாடலிங்கில் கலை வாழ்க்கையை தொடங்கிய மாதவன் பின்னர் நடிகராக அவதாரம் எடுத்து ஹிட் படங்களை கொடுத்தார். தமிழ் மற்றும் இந்திப்படங்களில் நடித்து வரும் மாதவன் எவனோ ஒருவன் படம் மூலம் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார். இந்நிலையில் தற்போது அவர் கதாசிரியர் என்ற அடுத்த அவதாரத்திலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். முற்றிலும் வித்தியாசமான கதையை எழுதியிருக்கும் மாதவன், அந்த கதையை டைரக்டர் குமரவேலனிடம் கொடுத்து படம் இயக்குமாறு கேட்டிருக்கிறார். கதையை படித்து பார்த்த குமரவேலன், இந்த படத்தில் மாதவனையே நடிக்குமாறு கோரியுள்ளாராம். இதுபற்றி குமரவேலன் அளித்துள்ள பேட்டியில், ரொம்ப சூப்பரான ஸ்டோரி. இந்த படத்தில் நடித்தால் மாதவனின் இன்னொரு முகம் வெளிப்படும். திரைக்கதை பற்றி விவாதிக…
-
- 0 replies
- 1.4k views
-
-
சென்னை, டிச. 20: மன்மதம் அம்பு படத்தில் கமல்ஹாசன் எழுதிய சர்ச்சைக்குள்ளான பாடலை தாமாக முன்வந்து நீக்குவதாக கமல் தெரிவித்துள்ளார். இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மன்மதன் அம்பு சினிமா படத்தில் நான் எழுதிப் பாடிய பாடல் ஒன்று இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக வந்த சேதி பரவலாகக் கிளம்பியதை நான் அறிவேன். இதை தணிக்கை செய்த குழு, இப்பாடலில் புண்படுத்தக் கூடிய வரிகள் ஏதுமில்லாததால் அதை அனுமதித்தனர். இதுவே எனது நிறுவனத்தின் படமாக இருந்தால் கண்டிப்பாய் அந்த வரிகளை நிஜ ஆன்மிகவாதிகளைப் புண்படுத்தாது என்ற முழு நம்பிக்கையுடன் சென்ஸார் சான்றிதழ் சகிதம் வெளியிட்டிருப்பேன். இது ரெட் ஜெயண்ட் மூவிஸ் படம். உதயநிதி ஸ்டாலின் படம் என்பதாலும் எல்லோரும் …
-
- 0 replies
- 738 views
-
-
முருகதாஸ் இயக்கத்தில் ரஜினியின் அடுத்த படம் தெலுங்கில் சமீபத்தில் இயக்குநர் முருகதாஸ் இயக்கிய ஸ்டாலின் சூப்பர் ஹிட் படமாக ஒடிக் கொண்டிருக்கிறது. இதனால் கவரப்பட்ட ரஜினி கடந்த வாரம் இயக்குநர் முருகதாசை அழைத்துக் கொண்டு மும்பை சென்றார். அங்கு புதிய படம் தொடர்பாக அவர்கள் நீண்ட ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. முருகதாஸ் இயக்க உள்ள இந்த படத்தை ஆர்.எம்.வீரப்பனின் ஸ்ரீசத்யா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கான சூட்டிங் 2008 ம் ஆண்டில் தொடங்கப்படும் என்றும் தகவல் கிடைத்துள்ளது. விடுப்பு : Viduppu.com
-
- 0 replies
- 875 views
-
-
பிரம்மாண்டமான காட்சியமைப்பு, சமூக அநீதிக்கு எதிரான போராட்டம், சமூகத்துக்கு ஒரு செய்தி என வழமையான சங்கர் படங்களின் பாணியில் தான் இருக்கும் என எதிர்பார்த்துச் சென்றது போலவே 2.0ம் இருந்தது. எனினும் இதில் சங்கர் எடுத்துக்கொண்ட களம் புதிது; இலகுவாகப் புறக்கணித்து ஒதுக்கக் கூடிய, ஆனால் ஒதுக்கிவிடக் கூடாத சமூகப் பிரச்சினை. அதை விறுவிறுப்பான திரைக்கதையுடனும், பிரம்மிக்கும் தொழில்நுட்பத்தின் உதவியுடனும் வழங்கிய விதம் கற்பனைக்கும் மிக மிக அப்பாற்பட்டது. படத்தின் Title cardல் இருந்து ஆரம்பித்து நிறைவுறும் வரையில் தொடர்ந்த 3D அனுபவம் ஒரு Theme park சென்றது போன்ற ஓர் உணர்வு. ஒருபக்கம் stylish, mass hero ரஜினி பல்வேறு ரூபங்களில் அமர்க்களப்படுத்த, மறுபக்கம் அக்க்ஷய் குமாரி…
-
- 0 replies
- 951 views
-
-
தனது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் எழுத்தாளரை, அடியாட்களுடன் வந்து மிரட்டியதாக நடிகர் விவேக் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சினிமாவில் தான் நான் காமெடியன் நிஜத்தில் வில்லன் என்று மிரட்டல் வசனம் பேசி, வீட்டை காலி செய்யச் சொல்லி, ரகளையில் ஈடுபடுகிறார். எனவே, விவேக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நடிகர் விவேக்குக்கு சொந்தமான அப்பார்ட்மென்ட் வீடு சென்னை கே.கே., நகரில் உள்ளது. அந்த வீட்டில் சுப்ரஜா என்ற எழுத்தாளர் வாடகைக்கு இருக்கிறார். 2005ம் ஆண்டு மே மாதம் முதல் ஏழாயிரம் ரூபாய் வாடகை செலுத்தி வருகிறார். இவர் கே.கே., நகர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:என் வீட்டின் உரிமையாளர் காமெடி…
-
- 0 replies
- 997 views
-
-
சினிமா கனவுடன் அலைபவர்களுக்கு.. - அன்புடன் மகேந்திரன் [size=4]எ[/size]னக்கு அறிவுரைகளில் நம்பிக்கை இல்லை. சிநேகிதமாக எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதுதான் எனக்குப் பிடிக்கிறது. நீ கனவு கண்டுகொண்டு இருக்கிற துறையில் நுழைந்து, நான் பெற்ற அனுபவங்களும் சிந்தனைகளும்தான் இந்தப் பகிர்தலுக்கான எனது தகுதி. நான், உன் மீதுகொண்ட அன்பும் அக்கறையும்தான் எனது இந்தப் பகிர் தலுக்கான காரணம். நான் திட்டமிட்டு இங்கே வரவில்லை என்றாலும்கூட, எனக்கும் கனவு இருந்தது. அது சினிமா குறித்த கனவு. ஒரு சினிமா எப்படி இருக்க வேண்டும் என்கிற கனவு. இந்த சினிமா எனக்கானது இல்லை, என் சமூகத்துக்கானது இல்லை என்று, அன்றைய சினிமாக்கள் மீதான எனது அதிருப்தியில் இருந்து உருவான கனவு. எனது தி…
-
- 0 replies
- 992 views
-
-
ரஜினி கேட்டும் கூட, பாலச்சந்தரின் படத்துக்கு இசையமைக்க மறுத்துவிட்டேன் என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார். பிரபல வார இதழில் இளையராஜா வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். புதுப்புது அர்த்தங்கள் படத்துக்குப் பிறகு பாலச்சந்தர் படங்களுக்கு அவர் இசையமைக்காமல் போனது, அதுவும் ரஜினி கேட்டும் கூட இசையமைக்க மறுத்தது பற்றி வாசகர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். அந்த கேள்வி பதில்: கேள்வி: புது புது அர்த்தங்கள் படத்திற்கு பிறகு நீங்கள் பாலசந்தர் படங்களுக்கு இசையமைக்கவில்லையே, ஏன்? பதில்: புது புது அர்த்தங்கள் படத்திற்கு ரீரெக்கார்டிங் நடக்க வேண்டிய நேரத்தில் இங்கே ஸ்ட்ரைக் இருந்தது. அதனால் சிவா என்கிற படத்துக்காக நான் பாம்பே போயிருந்தேன். அப்போ கவி…
-
- 0 replies
- 589 views
-