Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. மெல்போர்ன்: சென்னையைச் சேர்ந்த பிரபல தமிழ் நாடக நடிகர் பிரகாஷ், சிட்னியில் தான் தங்கியிருந்த ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதீத குடிபோதையில் அவர் இறந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர். ஆனால் அவர் அப்படிக் குடிப்பவரல்ல என்று சக நடிகர்ள் தெரிவித்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த ஒரு நாடகக் குழு 'ஷேக்ஸ்பியரின் ஏ மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம்' என்ற நாடகத்தை பல்வேறு நாடுகளில் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மார்ச் 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை சிட்னி தியேட்டரில் நடத்தப்பட்டது. இந்தக் குழுவில் பிரகாஷும் இடம் பெற்றிருந்தார். இவர் சென்னையைச் சேர்ந்தவர். பிரபல நாடக நடிகர். மார்ச் 23ம் தேதி நாடகக் குழுவினர் நாடு திரும்ப சிட்னி விமான ந…

    • 1 reply
    • 1.2k views
  2. வெள்ளித் திரையில் அழகு தேவதையாய் மின்னியவர். எம்.ஜி.ஆர், சிவாஜி, எம்.ஆர்.ராதா, சந்திரபாபு, நாகேஷ், ஜெய்சங்கர், தேங்காய் சீனிவாசன், சிவகுமார் என்று பலருடன் 400 படங்களுக்கு மேல் நடித்து ஏராளமான சொத்துக்களைச் சம்பாதித்தவர். அந்தக் காலத்திலேயே மூன்று இம்பாலா கார்களில் பவனி வந்தவர். ஆனால் இன்று சொத்துக்கள் பறிபோய், சொகுசு வாழ்வு கைநழுவிப் போய் சாப்பாட்டுக்குக்கூட வழி யில்லாத நிலையில் இருக்கிறார் நடிகை புஷ்பமாலா. பெரியார் மாவட்டம், பெருந்துறை, வண்ணாம்பாறையில் நெடிய சந்திலுள்ள ஒரு சிறு அறை கொண்ட வீட்டில்தான் புஷ்பமாலாவின் வாழ்வு கடந்து கொண் டிருக்கிறது. அவரைச் சந்தித்துப் பேசினோம். ‘‘1958ல் ‘இரும்புத்திரை’ படத்தில் சிவாஜி யின் அண்ணன் மகளாக அறிமுகமானேன். முதல் படத்திலே…

    • 8 replies
    • 3.1k views
  3. கோவிலுக்கு வந்த இடத்தில் இடுப்பைப் பிடித்துக் கிள்ளிய ரசிகரின் கன்னத்தை பதம் பார்த்தார் நடிகை ஷ்ரியா. சிவாஜி நாயகி ஷ்ரியா, உகாதியையொட்டி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். சுப்ரபாத தரிசன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பய பக்தியுடன் சாமி கும்பிட்டார். அவருடன் திருப்பதி எம்.எல்.ஏ வெங்கட்ரமணா என்பவரின் உதவியாளர் கோட்டி என்பவர் துணைக்கு வந்திருந்தார். தரிசனத்தை முடித்துக் கொண்டு கிளம்பினார் ஷ்ரியா. அதுவரை எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. திடீரென ஷ்ரியாவை பார்த்த ரசிகர்கள் ஷ்ரியாவை சுற்றிச் சூழ்ந்தனர். ஆளுக்கு ஒரு பக்கமாக பாய்ந்து ஷ்ரியாவைத் தொட்டும், தடவியும் பரபரப்பை ஏற்படுத்தினர். அதில் ஹரி என்பவர் சற்று அத்துமீறி, ஷ்ரியாவின் …

  4. ஆந்திர மாநிலம் கேசம்பேட்டை என்ற இடத்தில் நடந்த படப்பிடிப்பின்போது தேனீக்கள் கொட்டியதில் நடிகை மீராஜாஸ்மின் உள்ளிட்ட படக்குழுவினர் காயமடைந்தனர். அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ், மலையாளத்தில் பிரபலமாக உள்ள மீரா ஜாஸ்மின் தெலுங்கிலும் தீவிரமாக நடித்து வருகிறார். தற்போது கோரிண்டகு என்ற தெலுங்குப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் மீரா. இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் மாவட்டம் கேசம்பேட்டை என்ற கிராமத்திற்கு அருகே இன்று காலை நடந்தது. அப்போது படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு அருகே உள்ள மரத்தில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் திடீரென கூட்டமாக படையெடுத்து வந்தன. பின்னர் மீரா ஜாஸ்மினையும், படக்குழுவனரையும் தாக்கி கொட்டத் தொடங்கி…

    • 12 replies
    • 2.1k views
  5. பெங்களூர் கோவிலுக்கு பிச்சைக்காரன் வேடத்தில் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை, நிஜமான பிச்சைக்காரன் என நினைத்து, மார்வாடிப் பெண் ஒருவர் 10 ரூபாய் பிச்சை போட்டாராம். அதை ரஜினி சந்தோஷமாக ஏற்றுக் கொண்டாராம். டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் எழுதியுள்ள தி நேம் இஸ் ரஜினிகாந்த் நூலில்தான் இந்த சுவாரஸ்யத் தகவல் பதிவாகியுள்ளது. ஆசியாவின் நம்பர் 2 சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் ரஜினி. ஜாக்கி சானுக்கு அடுத்து அதிகம் சம்பாதிப்பவர் ரஜினி. ஆனால் அவருக்கு பத்து ரூபாய் பிச்சையாக வந்தபோது, அவர் அதைத் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக மனதுக்குள் மாபெரும் தத்துவம் உதித்துள்ளது. அந்த சுவாரஸ்ய அனுபவத்தை காயத்ரியின் வார்த்தைகளிலேயே காண்போம் .. பணத்திற்குக் கணக்கே இல்லை என்ற போதிலு…

  6. இந்திர விழா படத்திலிருந்து நான் விலகவில்லை. தற்போது கர்ப்பமாக இருப்பதால் 3 மாதம் கழித்து அப்படத்திற்காக ஒரு பாடலுக்கு ஆடிக் கொடுக்கவுள்ளேன் என்று கூறியுள்ளார் மாளவிகா. திருமணத்திற்கு முன்பு நடித்ததைப் போலவே திருமணத்திற்குப் பிறகும் கிளாமராக நடித்து வருகிறார் மாளவிகா. அவர் சமீபத்தில் ஒப்பந்தமாகியிருந்த படம் ஸ்ரீகாந்த் நடிக்க, ராஜேஷ்வர் இயக்கத்தில் உருவாகும் இந்திர விழா. இப்படத்தின் நாயகி நமீதா. இருந்தாலும் மாளவிகாவையும் கூடுதல் கிளாமருக்காக படத்தில் சேர்த்திருந்தார் ராஜேஷ்வர். ஒரு பாடலில் படு கிளாமராகவும் ஆடுகிறார் மாளவிகா. இந்த நிலையில் கர்ப்பம் தரித்து விட்டதால் படத்திலிருந்து மாளவிகா விலகிக் கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்கிறார் மாளவி…

  7. வீரகேசரி: நமீதாவை வைத்து அடுத்து படத்திற்கு ரெடியாகி விட்டார் ஷக்தி சிதம்பரம். ஷக்தியின் சினிமா 'சக்தியாக' நமீதா விளங்குகிறார். அவர் இயக்கும், தயாரிக்கும் படங்களில் நமீதா 'டிபால்ட் பிராப்பர்டி' ஆகி விட்டார். கதை இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக நமீதா இருப்பார் என்ற அளவுக்கு நமீதாவுக்கும், ஷக்திக்கும் இடையிலான நட்பு ஆழமாக உள்ளது. சமீபத்தில் வெளியான சண்டை படத்திலும் நமீதா நீக்கமற நிறைந்திருந்தார். கரகாட்டக்காரியாக ஆடி, ரசிகர்களின் நெஞ்சங்களில் அவர் ஏற்படுத்திய பதைபதைப்பு இன்னும் கூட போயிருக்காது. இந்த நிலையில் அடுத்த படத்திற்கு ரெடியாகி விட்டார் ஷக்தி. இதில் நமீதாதான் நாயகி. அதேபோல ஹீரோவாக சுந்தர்.சியையே புக் செய்து விட்டார். இப்படத்திற்கு சுந்தர்.சிக்கு பெரும்…

  8. செக் நாட்டுக்குச் சென்ற பாரீஸ் ஹில்டன், புகைப்படக்காரர்களின் கண்களில் படாமல் தப்பி ஓட முயன்றபோது கீழே விழுந்து காயமடைந்துள்ளார். சர்ச்சை நாயகியாக அறியப்பட்டவர் பாரீஸ் ஹில்டன். காலாவதி ஆன டிரைவிங் லைசென்சுடன் காரை படு வேகமாக ஓட்டி பிடிபட்டு, சமூக சேவை செய்ய வேண்டும் என்று கோர்ட்டால் முன்பு உத்தரவிடப்பட்டார். இந்த நிலையில், செக் நாட்டில் பாப்பராஸி புகைப்படக்காரர்களிடம் சிக்கி காயமடைந்துள்ளாராம் ஹில்டன். செக் தலைநகர் பிராக் நகருக்கு வந்துள்ளார் பாரீஸ் ஹில்டன். அப்போது அவரது வருகையை அறிந்து ஏராளமான புகைப்படக்காரர்கள் அங்கு வ்து குவிந்தனர். அதை சற்றும் எதிர்பாராத பாரீஸ் ஹில்டன் வேகமாக ஓட முயன்றார். அப்போது தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதில் அவரது அழகிய க…

    • 0 replies
    • 836 views
  9. தசாவதாரம்' ஆடியோ 25-ல் ரிலீஸ் அப்படி, இப்படியென்று ஒரு வழியாய் `தசாவதாரம்' ஆடியோ வெளியீட்டு விழா ஏப்ரல் 25-ம் தேதி என்பது முடிவாகி விட்டது. நேரு உள்விளையாட்டரங்கில், இந்த விழாவிற்காக முழு வீச்சில் புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்கர் விருது வழங்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் 'கோடாக்' அரங்கம் போன்ற செட், முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையில், ஜாக்கிசான் சிறப்பு விருந்தினராக வருகை, கோலிவுட், பாலிவுட் பிரபல நட்சத்திரங்களின் பங்களிப்பு என்று ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது இந்த விழா. இந்நிகழ்ச்சியில் கமல் செய்த பத்து வேடங்களின் வித்தைகளையும் ரசிகர்களின் கண்ணுக்கு விருந்தாக்கப் போகிறார்களாம். தனது படங்களில் அவ்வப்போது தலைகாட்டுவதை வழக்கமா…

    • 0 replies
    • 785 views
  10. தனது காதலனுடன் இன்று காலை வீட்டைவிட்டு ப்ரியாமணி ஓடி விட்டதாக வந்த செய்தியால் கோடம்பாக்கமே பரபரப்பாகிவிட்டது. ப்ரியாமணியும் கிரிக்கெட் வீரரும் தெலுங்கு நடிகருமான ராஜாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும், காதலுக்கு ப்ரியாமணியின் அம்மா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இன்று அதிகாலை இருவரும் எஸ்கேப் ஆகிவிட்டதாகவும் தகவல்கள் கசிந்தன. இதைத் தொடர்ந்து சில எப்.எம்களிலும் இந்த செய்தி ஒலிபரப்பானது. இதுகுறித்து ப்ரியாமணியின் அம்மாவிடம் கேட்டபோது, "நெனச்சேன்... இந்த வருஷம் ஏப்ரல் முதல் தேதி யார் மாட்டப் போறாங்களோன்னு யோசிச்சப்பவே, ப்ரியாமணி பத்திதான் ஏதாவது பரபரப்பு கிளம்பும்னு எதிர்பார்த்தேன். அது இப்ப நடந்துடுச்சு. என் பொண்ணு யாரையும் லவ்வும் பண்ணல... இ…

    • 4 replies
    • 1.8k views
  11. எலிசபெத் ரெய்லர் Elizabeth Taylor with Richard Burton in Cleopatra மரம் பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி இரந்தழைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு பெண்ணிடம் அழகும் இளமையும் இருக்கும் போது அவள் காலடியில் கூட விழத் தயாராக இருப்பார்கள் ஆண்கள். திரையுலக தேவதை எலிசபெத் ரெய்லர் இன்று தனிமையில் வாடுகிறார். அன்புக்காக ஏங்குகிறார். அவரது தோலில் சுருக்கங்கள் விழ ஆண்களும் அவரை விட்டுப் போய் விட்டார்கள். தற்போது 72வயதுகளைத் தொட்டிருக்கும் எலிசபெத் ரெய்லர், சமையற்கலைஞர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர், அரசியல்வாதி, கட்டிடத் தொழிலாளர் என சமூகத்தின் பல மட்டங்களிலும் இருந்தும் எட்டுத் தடவைகள், ஏழு ஆண்களைத் திருமணம் செய்து கொண்டார். எட்டுத் தடவைகள் விவாகரத்தும் செய்து …

    • 1 reply
    • 988 views
  12. என் மகனுக்கு அரசியல் விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கிறது என்று ஒரு முறை தெரிவித்திருந்தார் சுஹாசினி மணிரத்னம். அவர் சொன்னதை போலவே இயக்குனர் மணிரத்னத்தின் மகன், நந்தன் மணிரத்னம் ஒரு புத்தகத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். கான்டர்ஸ் ஆஃப் லெனினிசம் என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்புத்தகம் கோவையில் நடந்த மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது தேசிய மாநாட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது. எதிர்பாராமல் நடந்த சம்பவம் அது. மற்ற தொண்டர்கள் போலவே மாநாட்டில் வளைய வந்தார் நந்தன். பின்பு இவர் எழுதிய கம்யூனிசம் தொடர்பான புத்தகம் அந்த மேடையில் வெளியிடப்பட்டது. அப்போது இவர் மணிரத்னத்தின் மகன் மாநாட்டு மேடையில் குறிப்பிட, அடுத்த வினாடியே…

  13. எத்தனை உணர்வுகள் தொலைத்தோம்? எதற்கு நாங்கள் பிழைத்தோம்? நடந்த தெல்லாம் கனவைப் போல கரைந்து போகாதா? நாளைக்காவது எங்கள் குழந்தைகள் நலமாய் வாழாதா?’’ அகதிகளாய் வாழ்வதன் ‘வலியை அழுத்தமாகச் சொல்கிறது’ ‘ராமேஸ்வரம்’ பாடல். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் நிருவும் ஒரு இலங்கை அகதிதான். சிறு வயதிலேயே ஈழத்திலிருந்து பிரான்சுக்குப் புலம்பெயர்ந்துவிட்ட நிரு வெளிநாட்டில் வாழ்ந்தாலும், தமிழ் சினிமாவின் இசை நுட்பங்களைத் தேடித் தேடித் தெரிந்து கொண்டு, குறுகிய காலத்தில் இசையமைப்பாளர் ஆனவர். இயற்பெயர் நிர்மலன். ‘‘யாழ்ப்பாணம் பக்கத்துல இருக்குற அளவெட்டிதான் என் சொந்த ஊர். இசைக்கலைஞர்களுக்கும் கவிஞர்களுக்கும் பஞ்சமில்லாத ஊர். ஆடியோ கேசட் கடை, போட்டோ ஸ்டூடியோனு அப்பா மாறி மாறிப் பல தொழில்கள் …

  14. மலையாள‌ ‌சி‌னிமா‌வி‌ல் த‌மிழ‌ர் ‌சி‌த்த‌ரி‌ப்புக‌ள்! செவ்வாய், 1 ஏப்ரல் 2008( 14:17 IST ) த‌மி‌ழ் ‌சி‌னிமா‌வி‌ல் மாறாதவை எ‌ன்று ‌சில உ‌ண்டு. சே‌ட்டுக‌ள் சரளமாக த‌மி‌ழ் பேச‌க் க‌ற்று பல கால‌ம் ஆ‌கிறது. ஆனா‌ல் இ‌ந்த சே‌தி இ‌ன்னு‌ம் த‌மி‌ழ் ‌சி‌னிமா‌வை‌ப் போ‌ய்‌ச் சேர‌வி‌ல்லை. தலை‌யி‌ல் கு‌ல்லா மா‌ட்டி, கை‌யி‌ல் கோலுட‌ன் ந‌ம்ப‌ள், ‌நி‌ம்ப‌ள் எ‌ன்று த‌மிழை மெ‌ன்று து‌ப்‌பினா‌ல் ம‌ட்டுமே த‌மி‌ழ் ‌சி‌னிமா‌வி‌ல் அவ‌ர் சே‌ட். மலையா‌ளிக‌ள் கு‌றி‌த்த ‌சி‌த்‌திர‌ம் இ‌ன்னு‌ம் ‌விசேஷ‌ம். ஒரு ‌டீ‌க்கடை, அ‌தி‌ல் வ‌த்தலாக ஒரு நாய‌ர், சாயா எடு‌த்து‌க் கொடு‌க்க ஷ‌கிலா சை‌ஸி‌ல் நாய‌ரி‌ன் மனை‌வி! ‌திரும‌தி நாய‌ர் உ‌‌த‌ட்டை‌ அ‌‌ழு‌த்‌தி, பு‌ட்டு வேணுமா எ‌ன்று கே‌ட்க…

  15. மேலும் புதிய படங்கள்ஸ்ரீகாந்த்துடன் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த இந்திரவிழா படத்திலிருந்து மாளவிகா விலகி விட்டாராம். அவர் கர்ப்பமாகியுள்ளதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார் மாளவிகா. திரைப்படங்கள் தவிர சன் டிவியில் சூப்பர் டான்ஸர் நிகழ்ச்சியில் நடுவராகவும் அசத்தி வருகிறார். இந்த நிலையில் ஸ்ரீகாந்த்துடன் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த இந்திர விழா படத்திலிருந்து மாளவிகா திடீரென விலகியுள்ளார். ராஜேஷ்வர் இயக்கத்தில், ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்திர விழாவில் நமீதா நாயகியாக நடிக்கிறார். முழு நீள கவர்ச்சியில் நமீதா நடித்தபோதிலும், மாளவிகாவுக்கும் படத்தில் ஒரு ரோல் கொடுத்து அவரையும் புக் செய்திருந்தனர். மாளவி…

  16. தொலைக்காட்சி நாடகம் ஏற்படுத்திய விபரீதம் வீரகேசரி நாளேடு 3/30/2008 7:12:42 PM - தொலைக்காட்சி நாடகத்தில் இடம்பெற்ற தற்கொலைக்காட்சியை பார்த்துவிட்டு அதேபோன்று கழுத்தில் துப்பாட்டாவைக்கட்டி சுருக்கிட முயற்சித்ததாகக் கூறப்படும் 12 வயது சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கொழும்பு பாலத்துறை பகுதியிலுள்ள 12 ஆம் இலக்கத் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. ரிகாசா (வயது 12) என்ற முஸ்லிம் சிறுமியே இச்சம்பவத்தில் இறந்தவராவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது சம்பவ தினமான சனிக்கிழமை மேற்படி சிறுமியின் பெற்றோர் தொழில் நிமித்தம் வெளியில் சென்றுள்ளனர். தனது பாட்டியுடன் வீட்டிலிருந்த சிறுமி வீட்டின் மேல்மாடியி…

  17. வாழ்த்துகள் - விமர்சனம் மாதவன், பாவனா, கூத்தப்பட்டறை முத்துசாமி, இளவரசு, மல்லிகா சுகுமாரன் நடிப்பில், பி.எல். சஞ்சய் ஒளிப்பதிவில், யுவன் சங்கர்ராஜா இசையில், சீமான் இயக்கியுள்ள படம். தயாரிப்பு பிரமிட் சாய்மீரா அண்ட் அம்மா கிரியேஷன்ஸ். மாதவன் நண்பன் திருமணமானவன். அவன் மனைவி சண்டைபோட்டதன் விளைவாக நண்பனின் பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறி முதியோர் இல்லம் சென்று விடுகிறார்கள். நண்பனின் மனைவியே இதற்குக் காரணம். திருமணமானால் தன் பெற்றோருக்கும் இந்த நிலை வந்துவிடுமோ என பயன்படும் மாதவன், தன் பெற்றோரை மதிக்கிற மாதிரி ஒரு பெண் கிடைக்கமாட்டாள் என்று நினைக்கிறார். அப்போது மாமியாரையும் தாயைப் போல நினைப்பதாகக் கூறும் ஒருவளின் பேட்டி டிவியில் வருகிறது. அது பாவனா. …

  18. நடிகர் சத்தியராஜிற்கு வாழ்த்துக்கள் சென்னை திரைப்படப் பத்திரிகையாளர் சங்கம் வருடந்தோறும் வழங்கி வரும் திரை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 2007ம் ஆண்டிற்கான சிறந்த நடிகராக திரு. சத்யராஜ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஒன்பது ரூபாய் நோட்டு பெரியார் ஆகிய படங்களில் அவரது நடிப்புக்காகவே இந்த விருது அவரக்கு வழங்கப்படுகிறது. ஈழத் தமிழர்களைப் பணம் பண்ணுவதற்கு மட்டுமே பாவிக்கும் பெரும்பாலான நடிகர்கள் போலன்றி ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திரு சத்யராஜ் இந்த விருது பெற்றதில் ஈழத்தமிழர்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறார்கள். தொடரட்டும் உங்கள் பணி

  19. 20.09.2008 இன்று கனடா மண்ணில் காதல் கடிதம் திரைப்படம் காண்பிக்கப்படுகின்றது சிறிபாலஜி, அனிசா நடராஜசிவம் மற்றும் பலர் நடிப்பில் காதல் கடிதம் வசீகரன் - வி.எஸ்.உதயா திரை அரங்கம்: Woodside Cinema Showtime: 13.30 மேலதிக தொடர்புகட்கு: தொலைபேசி இலக்கம்: 416 286 9448

  20. பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் தமிழை சரிவர கற்றுக் கொள்ளாமல் கடித்துத் துப்பும் செயலை இசையமைப்பாளர்கள் இனியும் அனுமதிக்கக் கூடாது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். திமிங்கலத்தின் வாயில் சிக்கியதைப் போன்ற நிலையில் இன்று இருக்கிறது சினிமாவில் தமிழ் படும் பாடு. பெரும்பாலான நடிகைகள், தமிழுக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் சற்றும் சம்பந்தம் இல்லாதவர்கள். அதேபோல பின்னணி பாடும் பெரும்பாலான பாடகர், பாடகிகளும் கூட தமிழுக்கு முற்றிலும் அந்நியர்கள். அந்தக் காலத்தில் பி.சுசீலா, எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் தங்களது தாய் மொழி தமிழ் இல்லாவிட்டாலும் கூட மிக அருமையாக வார்த்தைகளை உச்சரித்து, அழகாக பாடினார்கள். அதிலும் ல, ள, ழ வித்தியாசத்தை மிகத் துல்லியமாக அவர்கள…

  21. குசேலன் படத்தில் இடம் பெறும் ரஜினியின் கனவுப் பாடலில், இப்போது ஐந்து நாயகிகள் இணைந்து ரஜினியுடன் ஆடுகின்றனராம். குசேலன் படத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் கேரக்டரில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இப்படத்தில் ரஜினியின் காட்சிகளை படு பிரமாண்டமாக எடுக்கும் இயக்குநர் பி.வாசு, ரஜினிக்கு ஒரு கனவுப் பாடலையும் தொடர்ந்து படிக்க........ http://isoorya.blogspot.com/2008/03/5.html

    • 2 replies
    • 1.4k views
  22. சண்டையை சலாம் போட்டு வாங்குவதற்காகவே லண்டனிலிருந்து இந்தியாவுக்கு வருகிறார் நதியா. (காதுகளை மியூட் பண்ணி படம் பார்த்தால், 80-களில் மனக்கதவை தட்டிய அதே நதியா தெரிவார்! இளமை ரகசியத்தை சொன்னால், ஏகப்பட்ட ரிட்டையர்டு நடிகைகள் மார்க்கெட்டை புதுப்பித்து கொள்ள வசதியாக இருக்குமே நதி?) தன் மகள் ராகிணிக்கு சொந்த கிராமத்தில் வைத்து திருமணம் செய்ய வேண்டும் என்பது அவரது விருப்பம். மாப்பிள்ளையும் லண்டன். வந்த இடத்தில் மகளை அடிக்கடி கடத்திப்போக முயல்கிறது ஒரு கும்பல். அவர்கள் வேறு யாருமல்ல, நதியாவின் அண்ணன் ஃபேமிலிதான். அவர்களிடமிருந்து மகளை காப்பாற்ற அடியாள், தெருப் பொறுக்கி சுந்தர் சியை நியமிக்கிறார் நதியா. ஆனால் காவல் பூனையே மொத்த பாலையும் குடித்துவிட, விக்கித்து நிற்கும் நதியா, அ…

  23. அஜித் அவ்வளவுதான் என்று சொன்னவர்களுக்கு பில்லா சரியான பதிலடி கொடுத்திருக்கிறது. பில்லாவுக்கு முன் அஜித் கொடுத்த கடைசி ஹிட் 'வரலாறு'. அதன்பிறகு வந்த 'ஆழ்வார்', 'கிரீடம்' இரண்டும் பாக்ஸ் ஆபிஸில் சொல்லும்படியான வெற்றியை பெறவில்லை. அதிலும் 'ஆழ்வார்' எதிர்பாராத படுதோல்வியை சந்தித்தது. அஜித் அவ்வளவுதான் என்று ஆளாளுக்குப் பேசத் தொடங்கியதுபோது பில்லா புராஜெக்ட் டேக் ஆஃப் ஆனது. ரீ- மேக் படம், அதுவும் ரஜினி நடித்தது. அஜித் அதில் என்னச் செய்யப் போகிறார் என ஏளனமும், எதிர்பார்ப்பும் சரிவிகிதத்தில் இருந்தது. ஏளனத்தை முறியடித்து எதிர்பார்ப்பை நிறைவு செய்தது அஜித்தின் பில்லா. சில நடிகர்களைப் போல காசு கொடுத்து ஓட்டாமலே நூறு நாளை பில்லா கடந்திருக்கிறது. 'சிவாஜி'க்குப் பிற…

  24. Started by கறுப்பி,

    கமலின் தசாவதாரம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, இலங்கைத் தமிழ் ஆகிய மொழிகளில் பேசி நடித்த கமல் இப்போது தசாவதாரம் படத்தில் பிரெஞ்சு மொழி பேசி நடிக்க இருக்கிறார். நடிகர் திலகம் ஒன்பது வேடங்களில் நடித்த சாதனையை முறியடித்து பத்து வேடங்களில் இப்படத்தில் நடிப்பது இன்னொரு சிறப்பம்சமாகும். மகாநதி, தேவர்மகன், குருதிப்புனல் ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுதி, பாலமுரளி கிருஷ்ணாவிடம் முறையாக சங்கீதம் பயின்று, குற்றாலம் விஸ்வநாத ஐயரிடம் மிருதங்கம் பயின்று, ராஜபார்வை படத்தின் எடிட்டராக இருந்த கமலின் அடுத்த பெரும் சாதனையே தசாவதாரம் படமாகும். நாடகத்தில் அவ்வை சண்முகத்தையும், திரைப்படத்தில் கே. பாலசந்தரையும் குருவாக ஏற்ற கமல் தான் எவ்வளவுதான் செய்தாலும…

    • 19 replies
    • 6k views
  25. வணக்கம், 2002 ம் ஆண்டு பிரித்தானியாவில் வெளிவிடப்பட்ட Bend It Like Beckham என்ற ஓர் அழகிய படத்தை நான் அண்மையில் கண்டுகளித்தேன். பலர் ஏற்கனவே இந்தப் படத்தை பார்த்து இருப்பீங்கள் என்று நினைக்கின்றேன். லண்டனில் உள்ள சீக்கிய இனத்தை சேர்ந்த ஓர் இளம் இந்தியப் பெண் soccer (உதைபந்தாட்டம்) மீது மிகவும் தீவிர ஆர்வம் கொள்ளும்போது இந்திய கலாச்சாரத்தை கொண்ட அவளது சீக்கிய குடும்பம் மூலம் அவளுக்கு எவ்வாறான பிரச்சனைகள் வருகின்றது என்பது பற்றி படத்தில் விபரமாக காட்டப்படுகின்றது. அழகிய பல பாடல்கள், நகைச்சுவைகள், கண்ணுக்கினிய காட்சிகள் (சீக்கிய முறையில் நடைபெறும் திருமண வைபவம் படத்தில் வருகின்றது) மற்றும் காதல் என பலவித அம்சங்கள் படத்தில் இடம்பெறுகின்றன. சீக்கிய முறையுடன…

    • 3 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.