Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. தமன்னாவுக்கு பிடித்த 10 . தமிழில் அறிமுகமான முதல் படத்தில் வில்லி வேடம். இரண்டாவது படத்தில் நெஞ்சை உருக்கும் பாத்திரம். இப்படி எந்த வேடத்திலும் பாந்தமாக பொருந்துகிற கதாநாயகியாக தமிழுக்கு கிடைத்திருப்பவர் தான் தமன்னா. . பொங்கல் மலருக்கு சிறப்பு பேட்டி என்று அவரிடம் கேட்டதும், அய்யோ! எனக்கு கோர்வையாக பேச வராது. ஒருவரி பதிலாக கேளுங்கள் என்று கொஞ்சும் மொழியில் அவர் கூற, மறுத்து பேச மனமில்லாமல் நாம் கேட்ட கேள்விகளும் அவர் கூறிய பதில்களும். "கல்லூரி' படத்தில் நடித்தீர்களே உங்கள் கல்லூரி அனுபவம்... அய்யோ! நான் கல்லூரிக்கே சென்றதில்லை. தமிழா? தெலுங்கா எதற்கு முன்னுரிமை? நல்ல படம், நல்ல கதை எதுவோ அதற்கே முன்னுரிமை. காதல் படம் பார்த்துவிட்டு த…

    • 4 replies
    • 1.9k views
  2. Started by nunavilan,

    அடிமைப் பெண் - 1969 . 1968 ஆம் ஆண்டு எட்டு படங்களில் நடித்த எம்ஜிஆர், அடுத்த ஆண்டில் நடித்தது இரண்டே படங்களில்தான். அதில் ஒன்று அவரது சொந்தத் தயாரிப்பில் வெளி யான "அடிமைப் பெண்' ஆகும். "நாடோடி மன்னன்' படத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் தயாரித்த படமான "அடிமைப் பெண்' பல ஆண்டுகள் தயாரிப்பில் இருந்தது. எனினும் கதை, நடிகர், நடிகைகள் என பல முறை மாற்றப்பட்டு, எம்ஜிஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவைச் சேர்ந்த ஆர்.எம்.வீரப்பன், வே.லட்சுமணன், எஸ்.கே.டி.சாமி ஆகியோரால் தொய்வில்லாமல் உருவாக்கப்பட்ட கதை இதோ. . வேங்கை நாட்டு ராணி மங்கம்மா மீது சூரக்காட்டு மன்னன் செங்கோடன் மோகம் கொள் கிறான். வேங்கை மலை மன்னனுக்கு மனைவியாகி, ஆண் குழந்தைக்குத் தாயான பிறகும் மங்க…

  3. ஹாலிவுட் நடிகர் மரணம் Wednesday, 23 January, 2008 11:04 AM . நியூயார்க், ஜன. 23: ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஹாலிவுட் நடிகர் ஹீத் லெட்ஜர் நேற்றிரவு மர்மமான முறையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 28. . ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் பிறந்தவர் ஹீத் லெட்ஜர். தனது 10 வயதிலேயே நாடகங்களில் நடிக்க தொடங்கியவர். 16 வயதில் ஆஸ்திரேலிய தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்க ஆரம்பித்தார். தனது 19வது வயதில் "டென் திங்ஸ் ஐ ஹேட் அபவுட் யூ' என்ற படம் மூலம் ஹாலிவுட் திரையுலகில் கால் பதித்தார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த அவர், "புரோக்பேக் மவுண்டெய்ன்' படம் மூலம் பரபரப்பாக பேசப்பட்டார். கடைசியாக "தி டார்க் நைட்' என்ற படத்தில் ஜோக்கர் வேடத்தில் நடித்தி…

  4. நேற்று மாலை அந்த தகவல் மளமளவென பரவியது. பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதிகளின் மகள் சரண்யா தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவர் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இப்படி செய்தி பரவியதும், பரபரப்பானது கோடம்பாக்கம். தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை உறுதி செய்து கொள்வதற்காக சில நிருபர்கள் அந்த மருத்துவமனைக்குள்ளேயே சென்று விட்டனர். இதற்கிடையே இந்த தகவல் குறித்து மறுப்பு தெரிவித்த பாக்யராஜ், பூர்ணிமாவுக்கு உடல்நிலை சரியில்லை. அதன் காரணமாகதான் அந்த மருத்துவமனைக்கு சென்றோம். நீங்கள் குறிப்பிடுவது போல், சரண்யா தற்கொலைக்கு முயலவில்லை என்று தெரிவித்தார். பாரிஜாதம் படத்தின் மூலம் அறிமுகமான சரண்யா, சில மலையாள படங்கள…

  5. சிம்பு நடித்து வெளியாகியுள்ள காளை படு 'கொம்பாக' வந்திருப்பதால் அவரது தந்தை விஜய டி.ராஜேந்தர் பெரும் கோபமாக உள்ளாராம். இயக்குநர் தருண் கோபியை கடுமையாக விமர்சித்து திட்டினாராம். சிம்பு நடிக்க ஒரே நேரத்தில் மூன்று படங்களுக்கு படப்பிடிப்பை தொடங்கினார்கள். அதில் முதலில் ஆரம்பித்தது கெட்டவன். பின்னர் வந்தது காளை, லேட்டஸ்டாக தொடங்கியது சிலம்பாட்டம். இதில் கெட்டவன், சில பல காரணங்களால் தள்ளிப் போய் விட்டது. இதையடுத்து காளையை வேகம் வேகமாக எடுத்து முடித்தனர். திமிரு என்ற மிகப் பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்த தருண் கோபி இயக்கிய படம் இது. சிம்புவுக்கு ஜோடியாக வேதிகா நடித்திருந்தார். சங்கீதா கிளாமர் கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வல்லவனுக்குப் பிறகு வரும்…

  6. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றுள்ளார். அங்கு பாபா குகைக்குச் செல்கிறாராம். ரஜினிகாந்த் அதிக விருப்பத்துடன் செல்லக் கூடிய இடம் இமயமலை. வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக இமயமலைக்குச் சென்று விடுவார் ரஜினி. அங்குள்ள பாபா குகையில் உள்ள பாபா கோவிலில் வழிபடுவதை பெரும் நிம்மதியான விஷயமாக ரஜினி கருதுகிறார். அந்த வகையில் தற்போதும் அவர் இமயமலைக்குச் சென்றுள்ளார். அங்குள்ள பாபா கோவிலில் பிரார்த்தனை செய்யவுள்ளார். அடுத்த 2 வாரங்களுக்கு அவர் பாபா குகையில்தான் தங்கியிருப்பாராம். பிப்ரவரி முதல் வாரத்தில்தான் அவர் சென்னைக்குத் திரும்பவுள்ளார். வந்தவுடன் குசேலன் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். இதுகுறித்து ரஜினிகாந்த்தின் செயலாளர் சத்யநாராயணா கூறுகையில், புதி…

  7. மம்முட்டி, சீனிவாசன், மீனா நடிப்பில் உருவான கத பறயும்போல் படத்தைப் பார்த்து தூக்கம் வராமல் தவித்தாராம் ரஜினி. இதையடுத்தே இப்படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம். கே.பாலச்சந்தரின் கவிதாலயா மற்றும் மலையாளத் தயாரிப்பு நிறுவனமான செவன் ஆர்ட்ஸ் பிலிம்ஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கவுள்ள குசேலர் என்ற படத்தில் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கவுள்ளார். பி.வாசு இப்படத்தை இயக்கவுள்ளார். இதுகுறித்த முறைப்படியான அறிவிப்பை பி.வாசு சென்னையில் வெளியிட்டார். அப்போது கே.பாலச்சந்தர், அவரது மகளும் கவிதாலயா நிர்வாகியுமான புஷ்பா கந்தசாமி, அவரது கணவர் கந்தசாமி, செவன் ஆர்ட்ஸ் பிலிம்ஸ் அதிபர் விஜயக்குமார், தெலுங்குத் தயாரிப்பாளர் அஸ்வினி தத் (இவரது வைஜயெந்தி பிலிம்ஸ்தா…

  8. சத்யராஜ், மாதவன், த்ரிஷா ஆகியோர் ஒரே படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த கூட்டணியை ஒன்று சேர்த்தது பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ்! டூயட் மூவிசுடன், மோசர் பேர், மிர்ச்சி மூவிஸ் இணைந்து தயாரிக்கும் 'வெள்ளித்திரை' ஓர் இளம் இயக்குனரை பற்றியது. இதில் பிரபல நடிகர்கள் நடிப்பது போன்ற காட்சிகள் வருகின்றன. நடிகை த்ரிஷாவிடம் ப்ருதிவிராஜ் கதை கூறுவதுபோல் ஒரு காட்சி வருகிறது. இக்காட்சியில் த்ரிஷா நடிகை த்ரிஷாவாகவே நடித்துள்ளார். அதேபோல் சத்யராஜ், மாதவன், கார்த்தி ஆகியோர் ஒரு காட்சியில் நடிகர்களாகவே படத்தில் தோன்றுகின்றனர். இந்தக்காட்சி சமீபத்தில் ஏவி.எம்.ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. இதனை ஷூட் செய்த இயக்குனர் விஜி, மலையாள 'உயனாறு தாரம்' படத்தை அப்படியே ரீ-மேக் செ…

  9. Started by kirubakaran,

    ந(ர)கர வாழ்க்கையில் ஓசைபடாமல் நடந்துகொண்டிருக்கும் நிழல் உலகம் பற்றி லிங்குசாமியின் பங்குக்கு எடுத்திருக்கும் படம். கெட்டவர்களுக்கு கெட்டவனாக நல்லவர்களுக்கு நல்லவனாக வாழும் நாயகன் பாணியிலான தாதா பிரகாஷ்ராஜ். அவருக்கே வித்தை காட்டும் அதிரடி நாயகன் விக்ரம். பிரகாஷ்ராஜின் ஆட்கள் செய்து முடிக்க வேண்டிய காரியங்களை விக்ரமின் புஜபலமும் புத்திசாலித்தனமும் முந்திக்கொண்டு முடிக்கிறது. என்ன வேணும் உனக்கு? நேருக்கு நேர் மிரட்டும் பிரகாஷூக்கு பயப்படாத விக்ரம், அடியாளில் ஒருவராய் சேர்த்துக்கொள்ளப்பட ஆரம்பமாகிறது உயிர் வேட்டை. போலீஸ் தூரத்தலில் ஒரு வீட்டின் ஓட்டை பிய்த்துக்கொண்டு குதிக்கும் விக்ரம், த்ரிஷாவின் மீது விழுந்து புரள, இதுவரை பார்த்திராத ஹீரோயின் சந்திப்பையும் …

  10. கடவுளை பிடிக்காத சிலர் இருந்தாலும் அவர்கள் பக்கம் கடவுள் இருக்கிறார். முதல்வர் கருணாநிதிக்கும் கடவுளின் ஆசிர்வாதம் நிறையவே உள்ளது என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார். ரஜினிகாந்த்தின் சிவாஜி பட வெள்ளி விழா சென்னையில் நடந்தது. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா நினைவு மண்டபத்தில் நடந்த இந்த விழாவில் முதல்வர் கருணாநிதி நடிகர், நடிகைகளுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் கேடயங்களை வழங்கினார். விழாவில் ரஜினியின் பேச்சும், முதல்வர் கருணாநிதியின் பேச்சும் ஹைலைட்டாக அமைந்தன. ரஜினி பேசுகையில், சிவாஜி படத்தில், அரசியல் விஷயங்கள் இருக்கிறது என்று தெரிந்திருந்தும், அந்த படத்தை பார்த்து பாராட்டிய முதல்வர் கருணாநிதிக்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், …

    • 6 replies
    • 2.5k views
  11. படங்கள் ஆறு.. அத்தனையும் ஜோரு? மொத்தம் படமும் முடிவடைந்தாலும் தியேட்டர் கிடைக்காமல் சில படங்கள் பின் தங்கிவிட்டன. முட்டி மோதி தியேட்டருக்கு வந்திருக்கும் படங்கள் ஆறே ஆறு. இதில் எவையெல்லாம் ஜோரு என்கிற விஷயத்தை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். முதலில் ரலீஸ் ஆகிற படங்களின் லிஸ்டை பார்ப்போம். பீமா - கடைசிநேரத்தில் கூட யாராவது தடை வாங்க கூடும் என்ற அச்சத்திலேயே ரிலீஸ் ஆகிற படம். நினைத்த மாதிரியே தெலுங்கு ரிலீசில் சிக்கல். இப்படி தடையாகிற படங்கள் எல்லாம் வெற்றியை குவிக்கும் என்பது தமிழ்சினிமா சென்ட்டிமென்ட். அந்த வகையில் பார்க்காவிட்டாலும், சண்டக்கோழி இயக்குனர் லிங்குசாமி, விக்ரம்-த்ரிஷா என்ற அட்ராக்ஷன் அதிகம்! சண்டைக்காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலம். கதாநாயகியை…

  12. பழைய பாடல்களை ‘ரீமிக்ஸ்’ செய்வது தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட இசை அமைப்பாளர்கள் மீது வழக்குத் தொடர்வேன்’ என்று தனது ஆதங்கத்தை ‘அய்யா வழி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் வெளிப்படையாகவே சீற்றத்தோடு வெளிப்படுத்தி, ஒரு புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் பாடலாசிரியர் புலமைப்பித்தன். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நாடகம், சினிமா, அரசியல் ஆகிய தளங்களில் இயங்கி வரும் இவர், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியவர். அவரிடமே பேசினோம். உங்களுக்கு ‘ரீமிக்ஸ்’ பாடல்கள் மீது அப்படி என்ன கோபம்? ‘‘ ‘ரீமிக்ஸ்’ செய்வதன் மூலம் அந்தப் பாடல்களை உருவாக்கிய படைப்பாளிகளைக் கேவலப்படுத்துகிறார்கள். ஒரிஜினல் பாடலில் உள்ள அழகைக் கெடுத்து காட்டுமிராண்டித்தனமான இசையைச் சேர்க்கிறார்கள…

    • 10 replies
    • 2.4k views
  13. காதல் கடிதம் - உலகத் தமிழருக்கான திரைப்பொங்கல்- நோர்வேயில் 02.02.2008 Soria Moria Kino, Oslo, Norway 02.02.2008 KL.21.00 உலகெங்கிலும் வாழுகின்ற எம் தமிழ் உறவுகளுக்கு வணக்கம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். ஆனால் நாங்கள் உடல் முதல் உயிர் வரை வலிகள் சுமந்த வண்ணமே வாழ்ந்து வருகின்றோம்: தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளில் உங்களுக்கு இணையத்தின் வாயிலாக என் இதயத்தின் பொங்கல் வாழ்த்துகள். காதல் கடிதம் இறுவட்டின் மூலம் ஏற்கனவே உங்களுக்கெல்லாம் அறிமுகமான ஓர் தமிழனின் உள்ளத்தில் இருந்து எழுகின்ற குரல். எங்கள் கலைகளின் வளர்ச்சி தொடர்பாகவும், எங்களுடைய காதல் கடிதம் திரைப்படம் சார்பாகவும் உங்களோடு மனம் விட்டுப் பேசவே இந்த ம…

  14. பட்டம் என்பது நடிகர்களுக்கு - குறிப்பாக தமிழ் நடிகர்களுக்கு - ஹெட்லைட் மாதிரி.அது இல்லையென்றால், இவர்களின் சினிமா வண்டி முன்னோக்கி போகாது. புரட்சி தமிழன், புரட்சி கலைஞர் வரிசையில் விஷாலும் புரட்சி தளபதி என தனக்குத்தானே பட்டம் சூட்டிக் கொண்டார். பரத் வைத்துக் கொண்டது சின்ன தளபதி. இந்த இருவர் வைத்த பட்டங்களும் அரசியல் தளபதி தரப்பையும், இளைய தளபதி தரப்பையும் சூடாக்கின. இந்த பட்டம் மோகம் காமெடி நடிகர்களையும் விடவில்லை. ஆளுக்கு அரைடஜன் பட்டங்கள் இருந்தாலும் புதிது புதிதாக பெயருக்குமுன் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். 'லொடுக்கு' கருணாசின் பெயர் 'சாது மிரண்டா' படத்துக்குப் பிறகு காமெடி கிங் கருணாஸ் என மாறுகிறது. வடிவேலு தனது வைகைப்புயல் பட்டத்துடன் நகைச்சுவை திலகம் …

  15. நடிகர் பாண்டியன் மரணம்! மண்வாசனை படத்தில் அறிமுகமாகி ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்துள்ள நடிக‌ர் பாண்டியன் இன்று மதுரையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 47. குடல்வால் அறுவைசிகிச்சை செய்து கொண்ட பாண்டியன், சில காலமாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். பாண்டியனின் இறுதிச் சடங்குகள் நாளை அவரது சொந்த ஊரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாண்டியனின் மறைவுக்கு திரைப்படத் துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். புதுமைப் பெண், கிழக்க…

  16. சிவாஜியால் பெரும் நஷ்டம் - விநியோகஸ்தர்கள் போர்க்கொடி! சிவாஜி படத்தால் தங்களுக்கு ரூ. 3 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக 3 விநியோகஸ்தர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதை ஏவி.எம். நிறுவனம் ஈடு கட்ட வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர். உலகெங்கும் 1000க்கும் மேற்பட்ட பிரிண்டுகளுடன் திரையிடப்பட்ட படம் சிவாஜி. தமிழகத்தில் மட்டும் 450 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது. சிவாஜி படத்தை தமிழகத்தில் திரையிட 8 விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கினர். விநியோக உத்தரவாத அடிப்படையில் இப்படத்தை அவர்கள் வாங்கினர். சிவாஜியால் பெரும்பாலான விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது. ஆனால் திருச்சி, செங்கல்பட்டு - பாண்டிச்சேரி, கிருஷ்ணகிரி பகுதி விநியோகஸ்தர்கள…

    • 2 replies
    • 1.9k views
  17. ஆச்சி மனோரமாவிற்கு பாராட்டுவிழா உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் ஒய்யாரமாக அமர்ந்துள்ள ஆச்சி மனோரமாவின் 50 ஆண்டு கால கலைச்சேவையைப் பாராட்டும் வகையில், முதல்வர் கருணாநிதி தலைமையில் அவருக்கு ஜனவரி 14ம் தேதி சென்னையில் பிரமாண்ட பாராட்டு விழா நடைபெறுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகமே திரண்டு வந்து ஆச்சியை பாராட்டவுள்ளது. மணிமகுடம் என்ற நாடகத்தின் மூலம் கலை உலகுக்கு அறிமுகமானவர் மனோரமா. 1957ம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் தயாரித்த மாலையிட்ட மங்கைதான் மனோரமா நாயகியாக, நடிகையாக நடித்த முதல் திரைப்படம். இவர் திரையுலகிற்கு நடிக்கவந்து 50 வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரை 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த ஒரே நடிகை என்ற உலக ச…

  18. ஷங்கர் டைரக்ஷனில் ரஜினி நடிக்கும் ரோபோ படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு சிவாஜியை ஏ.வி.எம். நிறுவனம் ரூ.80 கோடி செல வில் தயாரித்து உலகம் முழுவதும் திரையிட்டப்பட்டு ரூ.150 கோடி வரை வசூல் சாதனை படைத்தது. ஷங்கரின் அடுத்த படம் என்ன? ரஜினி நடிக்கப்போகும் புதிய படத்தின் பெயர் என்ன? என்பது கேள்வியாக இருந்தது இந்நிலையில் சிவாஜிக்கு பிறகு ஷங்கரும், ரஜினியும் மீண்டும் ரோபோ படம் மூலம் இணைகிறார்கள். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.ரோபோவை தயாரிக்கும் ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கே.கருணா மூர்த்தி, ஈரோஸ் மல்டி மீடியா கிஷோர் லுல்லா ஆகியோர் வெளியிட்டனர். அதில் கூறி இருப்பதாவது:- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ரோபோ படத்தை இந்திய திரையுலகி…

  19. அன்புள்ள யாழ்கள உறவுகளுக்கு வணக்கம், அண்மையில் தமிழகத்தில் ஐம்பதற்கும் மேற்பட்ட பத்திரிகை நிருபர்களுக்காக காண்பிக்கப்பட்ட காதல் கடிதம் திரைப்பட காட்சியின் பின்பு இன்று தமிழ்சினிமா இணையத்தளம் இப்படி ஒரு விமர்சனத்தை எங்களுக்காக வழங்கியிருக்கின்றது. நீங்களும் வாசித்து பின் திரையரங்கத்திற்கு வரத் தயாராகுங்கள். நோர்வேயில் 02.02.2008 அன்று வெளிவரும். தமிழகத்தில் தைப்பொங்கல் திருநாளின் பின்பும். இலங்கையில் இந்த மாத இறுதியிலும் வெளிவரும். திரையரங்குகள் கிடைப்பதில் பெரிய சிரமம் ஏற்பட்டுள்ளதாக அறிகின்றேன். காதல் கடிதம்-விமர்சனம் குட்டிப்பூனையை பட்டுத்துணியால் போர்த்திய மாதிரி மென்மையான கதை. சற்று மேன்மையான கதையும் கூட! படம் முடிந்து வெளியே வந்தபின்பும், 'மரணத்தை பார்த்து பா…

  20. எத்தனை உணர்வுகள் தொலைத்தோம்? எதற்கு நாங்கள் பிழைத்தோம்? நடந்த தெல்லாம் கனவைப் போல கரைந்து போகாதா? நாளைக்காவது எங்கள் குழந்தைகள் நலமாய் வாழாதா?’’ அகதிகளாய் வாழ்வதன் ‘வலியை அழுத்தமாகச் சொல்கிறது’ ‘ராமேஸ்வரம்’ பாடல். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் நிருவும் ஒரு இலங்கை அகதிதான். சிறு வயதிலேயே ஈழத்திலிருந்து பிரான்சுக்குப் புலம்பெயர்ந்துவிட்ட நிரு வெளிநாட்டில் வாழ்ந்தாலும், தமிழ் சினிமாவின் இசை நுட்பங்களைத் தேடித் தேடித் தெரிந்து கொண்டு, குறுகிய காலத்தில் இசையமைப்பாளர் ஆனவர். இயற்பெயர் நிர்மலன். ‘‘யாழ்ப்பாணம் பக்கத்துல இருக்குற அளவெட்டிதான் என் சொந்த ஊர். இசைக்கலைஞர்களுக்கும் கவிஞர்களுக்கும் பஞ்சமில்லாத ஊர். ஆடியோ கேசட் கடை, போட்டோ ஸ்டூடியோனு அப்பா மாறி மாறிப் பல தொழில்கள் …

  21. அல்டிமேட் ஸ்டார் அஜீத்-ஷாலினி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 2008ம் ஆண்டு அஜீத்துக்கு அட்டகாசமான ஆண்டாக மலர்ந்துள்ளது. கர்ப்பிணியாக இருந்த அஜீத்தின் மனைவியும், முன்னாள் நடிகையுமான ஷாலினிக்கு சென்னை மருத்துவமனையில் இன்று (ஜனவரி 3) அதிகாலை அழகான பெண் குழந்தை பிறந்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்த ஷாலினி, அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று மாலை 6 மணிக்கு அட்மிட் செய்யப்பட்டார். அவருக்கு இரவுக்குள் குழந்தை பிறக்கலாம் என டாக்டர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ஷாலினி. சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நல்ல நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தை பிற…

    • 13 replies
    • 4.5k views
  22. Movie : Before the devil knows you're dead (2007) Director : Sidney Lumet Cast : Philip Seymour Hoffman, Ethan Hawke, Albert Finney, Marisa Tomei சில நேரங்களில் வாழ்க்கை நாம் எதிர்பார்த்ததைவிட குரூரமாக இருந்துவிடுகிறது. அதிர்ச்சியினால் அதனை எதிர்கொள்ள முடியாமல் நிலைதடுமாறும்பொழுது நமது எதிர்வினைகள் பிரச்சினையை மேலும் சிக்கலாக்குகிறது. அத்தகைய ஒரு சிக்கலான கதையுடன் ஒரு குடும்பத்தினுள் நடக்கும் crime thriller திரைப்படமாக வெளிவந்திருக்கிறது, "Before the devil knows you're dead". Sidney Lumet அவரது படங்களுக்கே உரிய வகையில், மனித உணர்வுகளை ஆழமாக தொட்டு செல்வதில் வெற்றி பெற்றிருக்கிறார். சிறு வயதிலிருந்தே பெற்றொரின் போதிய அன்பு கிடைக்காமல் வளரும் Andy, போதைப்பழக்க…

    • 0 replies
    • 1.3k views
  23. Started by சுவைப்பிரியன்,

    பாரதிராஜாவின் மகன் மனோஜ் நடித்த (தாஜ்மகால் இல்லை)வேறு படங்களின் யெர்களை யாராவது தந்து உதவுங்கள்.அவர் நடித்த படம் ஒன்றில் நல்ல பாடல் ஒன்று உள்ளது.அது இப்ப நினைவில் இல்லை.எந்தப்படம் என்றும் தெரியாது.அது தான்.நன்றி.

  24. வணக்கம், கடைசியா உன்னாலே உன்னாலே என்ற தமிழ் படத்தை நாலு மாதத்துக்கு முன்னம் தீபம் தொலைகாட்சி ஊடாக ஓசியாக பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்து இருந்தது. நான் உன்னாலே உன்னாலே படத்தில் உள்ள அழகிய பாடல்களிற்காகவே அந்தப்படத்தை சான்ஸ் கிடைத்தபோது மிஸ்பண்ணாமல் பார்த்து இருந்தேன். நேற்று கிறிஸ்மஸ் தினமன்று வீட்டில் குந்திக்கொண்டு இருந்துவிட்டு ஏதாவது வித்தியாசமாக செய்வம் எண்டு நினைச்சுவிட்டு பக்கத்தில இருக்கிற எனது ஒண்டுவிட்ட அண்ணா ஒருவரிண்ட வீட்டுக்கு சென்றேன். அங்கு பெறாமக்களுடன் விளையாடிக் கொண்டு இருந்துவிட்டு தற்செயலாக தமிழ்படம் பற்றி அவர்களுடன் கதைத்தேன். அவர்கள் வீட்டில் எப்போதும் புதுபட டீவீடீக்கள் வச்சு இருப்பீனம். அழகிய தமிழ்மகன் எண்டும், வேல் எண்டும் ரெண…

  25. Started by kurukaalapoovan,

    உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம். மிகவும் புகழ்பெற்ற திறமையான இசையமைப்பாளர் Wilhelm Furtwangler நாசி யேர்மனி தோற்கடிக்கப்பட்ட பின்னர் கிட்லரின் ஆட்சிக்காலத்தில் யேர்மனியர்கள் யார் யார் கிட்லரின் ஆட்சி உயரப் பலமாக இருந்தார்கள் என்ற விசாரணையில் துருவப்படுவதை மய்யப்படுத்தியது. நேசநாட்டுத்தரப்பின் யேர்மனியில் பாசிசவாதத்தை நீக்கும் நிகழ்ச்சி நிரலின் (de-nazification) அங்கமாக கிட்லர் காலத்தில் பிரபலமானவர்களாக இருந்தவர்களிற்கும் கிட்லரின் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகள் பற்றி கடுமையான விசாரணைகளை மேற்கொண்டார்கள். அவர்கள் இனங்காணப்படாது புதிய யேர்மனியில் இலைமறைகாயாக இயங்குவதற்கு அனுமதிக்கக் கூடாது என்பதோடு பிரபலமானவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.