Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. திரிஷாவுடன் இணைந்து நடிக்க தயங்கி பல ஹீரோக்கள் அவர் நடிக்கும் அபி படத்தில் நடிக்காமல் ஓடுகிறார்களாம். பிரகாஷ் ராஜ் தயாரிக்க, ராதா மோகன் இயக்க உருவாகும் புதிய படம் அபி. அழகிய தீயே, மொழி ஆகிய இரு வெற்றிப் படங்களுக்குப் பிறகு இப்படத்தின் மூலம் இணைகிறார்கள் பிரகாஷ் ராஜும், ராதா மோகனும். பல பெயர்களைப் பரிசீலித்து கடைசியில் அபி என்ற பெயரை முடிவு செய்துள்ளனராம் பிரகாஷ் ராஜும், ராதா மோகனும். கதையையும், படத்தின் பெயரையும் வெற்றிகரமாக முடித்து விட்ட இருவராலும், ஹீரோவைத்தான் இதுவரை இறுதி செய்ய முடியவில்லையாம். அபி படத்தில் நாயகியாக நடிப்பவர் திரிஷா. வழக்கமாக பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் வரும் படத்தில் ஹீரோயினுக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும். எனவே அபி படத்தில…

    • 1 reply
    • 1.3k views
  2. பாரில் திரிஷாவுக்கு விழுந்த 'பளார்'!! பார்ட்டிக்குப் போய், பெரிய இடத்துப் பெண்ணுடன் மோதி, பளார் பளார் என அறை வாங்கித் திரும்பியுள்ளார் திரிஷா. பார்ட்டிகளும் (தண்ணி பிளஸ் டான்ஸ்), திரிஷாவையும் எப்போதும் பிரித்துப் பார்க்கவே முடியாது. ஏற்கனவே மூன்று முறை மப்பில், தள்ளாடி போலீஸிடம் பிடிபட்டு திரும்பியவர் (திருந்தாமல்) திரிஷா. சில மாதங்களுக்கு முன்பு கிழக்குக் கடற்கரை சாலையில் விஜய் வீட்டுக்கு இரண்டு தெரு முன்பாக, நடுத் தெருவில் தோழியர்களுடன் மப்பும், மந்தாரமுமாக ஆட்டம் போட்டு போலீஸிடம் திரிஷா மாட்டி மீண்டது நினைவிருக்கலாம். இதேபோல அடிக்கடி பார்ட்டிகளில் ஆட்டம் போட்டு ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்வது திரிஷாவுக்கு வழக்கமாகி விட்டது…

    • 3 replies
    • 2k views
  3. 'ஹேராம்' படத்தில் கமலின் ஜோடியாக நடித்தவர் ராணி முகர்ஜி. பாலிவுட்டின் முடிசூடா ராணி. இவரது திருமண நிச்சயதார்த்தம் நேற்று முன்தினம் மும்பையில் ரகசியமாக நடந்தது. ராணி முகர்ஜி ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா போல் பேரழகி இல்லை. பிபாஷா பாசு, மல்லிகா ஷெராவத் மாதிரி கவர்ச்சியானவரும் அல்ல. ஆனால், ராணி முகர்ஜி நடிப்பில் மகாராணி. 'பிளாக்' படம் இவரது நடிப்புக்கு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ராணி முகர்ஜிக்கும் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆதித்யா சோப்ராவுக்கும் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. ஆதித்யா சோப்ரா பிரபல இந்தி தயாரிப்பாளர் யாஷ் சோப்ராவின் மகன். பதினொன்று வருடங்களாக தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர்.…

    • 4 replies
    • 2k views
  4. மீண்டும் கற்பு சர்ச்சையில் குஷ்பு! பாமக வக்கீல் நோட்டீஸ்!! மீண்டும் கற்பு குறித்த விவாதத்திற்குள் நுழைந்து ஆறிப் போன புண்ணை நோண்டிப் பார்த்துள்ளார் குஷ்பு. அவரது புதிய பேச்சால் ஆத்திரமடைந்த பாமக வக்கீல் ஒருவர் குஷ்புவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சர்ச்சையைக் கிளப்பும் என்று தெரிந்தே, சென்சிட்டிவான விஷயங்களை பப்ளிக்காக பேசி பப்ளிசிட்டி தேடிக் கொள்வது சிலரின் வழக்கமாக உள்ளது. தாங்கள் பேசும் பிரச்சினைக்கு தீர்வு இருக்கிறதா என்பது குறித்தெல்லாம் யோசிக்காமல் பேசி விடுவார்கள். குண்டைப் போடுவதற்கு முன்பு அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து யோசிப்பதே இல்லை. அந்த வரிசையில் நடிகை குஷ்புவையும் சேர்க்கலாம். கொஞ்ச காலத்திற்கு முன்பு கற்பு குறித்துப் பேசி…

    • 16 replies
    • 2.9k views
  5. கலைப்படம் - தமிழ்ச் சினிமா தவறவிட்ட அத்தியாயம் தாஜ் கனவுகளைச் சுட்டு காசு பார்க்கும் வியாபாரத்தில் அதிஷ்டம் வாய்ந்தது சினிமா! இதில் அமெரிக்காவின் தாயாரிப்புகள் அமர்க்களப்படுத்தும் ரகமென்றால், அடுத்த கலக்கல் இந்திய தயாரிப்புகள்தான். படங்களின் எண்ணிக்கைகளில், தொழில் நுட்பத் திறமைகளில், இன்னும் மிதமிஞ்சிய அதன் கற்பனை வளத்திலும்கூட நம்ம பாலிவுட்டும் கோலிவுட்டும் ஹாலிவுட்டை விட்டேனாபார் என்ற ரீதியில் துரத்திக்கொண்டே இருக்கிறது. ‘கோலிவுட்’ என்று செல்லமாக அழைக்கப்படும் நம்ம கோடம்பாக்கத்தை, பார்க்க கிடைக்கிறபோதெல்லாம் கட்டத்தெரியாமல் கட்டிய கட்டி வரிசைகளுக்கிடையேயான சாலைகளில், அதன் சந்துப்போந்துகளில் சதாநேரமும் திமிரி வழியும் மக்கள் கூட்டம் எப்பவும் மாறா காட்சி!…

    • 2 replies
    • 1.4k views
  6. சென்னை திரைப்பட ரசிகர்களுக்கு சர்வதேச திரைப்படங்களை அறிமுகம் செய்வதில் முன்னணியில் உள்ளது, இன்டர்நேஷனல் சினி அப்ரிசியேஷன் பாரம். (Internationl Cine appreciation Forum). பிரான்ஸ், இத்தாலி, துருக்கி, ஜெர்மன், இஸ்ரேல், ஈரான், லெபனான், அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், சிலி, பிரெசில், பெரு உள்ளிட்ட உலகில் சினிமா தயாரிக்கும் அனைத்து நாடுகளின் சிறந்த திரைப்படங்களையும் இவ்வமைப்பு சென்னையில் திரையிட்டுள்ளது. மேலும் தொடர்ந்து திரையிட்டு வருகிறது. டிசம்பர் மாதம் இவ்வமைப்பு (ICAF) நடத்தும் சர்வதேச திரைப்பட விழாவே தமிழ்நாட்டில் நடக்கும் மிகப் பெரிய சர்வதேச திரைப்பட விழா! நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்படும். சென்ற மாதம் துருக்கி திரைப…

    • 0 replies
    • 728 views
  7. இதில் சிறீகாந்த் விவகாரம்.. http://thatstamil.oneindia.in/specials/cin...ana_070616.html இதில் பிரசாந்த் விவகாரம்.. http://thatstamil.oneindia.in/news/2007/06/16/prashanth.html நடிகர் நடிகைகளை றோல் மொடலாக்கி வாழப்பழகி வரும் இளைய சந்ததி என்னாகுமோ..??! குறிப்பாகா புலம்பெயர்ந்த தமிழர்கள் சினிமாப் பைத்தியமாக அலைவதை சர்வசாதாரணமாகக் காணலாம்..! தாயக விடுதலைப் போர் பற்றிய உணர்வின்றி சின்னத்திரைக்குள்ளும் சினிமாத் திரைக்குள்ளும் காலம் கழிக்கும் தமிழர்களும் அவர்களின் நவீன சந்ததியும்.. உண்மைகள் உணர்வது எப்போ..??!

    • 6 replies
    • 2.2k views
  8. பெயிண்ட் தொழிற்சாலையில் தீ: வாலிபர் கருகி சாவு- நடிகர் ஜீவா உயிர் தப்பினார் செங்குன்றம், ஜுன். 15- சென்னையை அடுத்த புழல் கதிர்வேடு பகுதியில் தனியார் பெயிண்ட் தொழிற்சாலை உள்ளது. இதன் அருகே உள்ள மர டிப்போவில் நடிகர் ஜீவா நடிக்கும் "தெனாவெட்டு'' சினிமா படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது. நேற்று மாலை 4 மணி அளவில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. நடிகர் ஜீவாவும், ஸ்டண்ட் நடிகர்களும் கலந்து கொண்டு நடித்தனர். அப்போது திடீர் என்று அருகில் இருந்த பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. தொழிற்சாலைக்குள் இருந்த 4 கெமிக்கல் டேங்குகள் வெடித்து சிதறி பயங்கரமாக தீப்பற்றி எரிந்தன. தொழிற்சாலைக்குள் பணி யில் ஈடுபட்டு இருந்த தொழி லாளர்கள் நாலாபுறமும் ச…

  9. எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி-கமல் நீதிமன்றில் புகார் எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி என சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் கமல்ஹாசன். செந்தில்குமார் என்ற அசிஸ்டெண்ட் டைரக்டர் `தசாவதாரம்' கதை என்னுடையது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கமல் மீது பொலிஸிலும் புகார் கொடுக்கப்பட்டது. கமலை விசாரித்த பொலிஸ் கமலின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டது. அதேநேரம், செந்தில்குமார் தொடர்ந்த வழக்கில் பதில் மனு அனுப்பும்படி கமலுக்கும், படத்தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கும் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி பதில் மனுத் தாக்கல் செய்தார் கமல்ஹாசன். செந்தில்குமாரின் குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது. நான் கடந்த நாற்பது ஆண்டுகளாக சின…

    • 4 replies
    • 1.7k views
  10. "உலக பிரசித்த பெற்று... காலம் கடந்து நிற்கும் மறக்க முடியாத எல்லா திரைப்படங்களுமே.. காதலை மையமாகக் கொண்டு மனித வாழ்வினை பதிவு செய்யப்பட்டதே... ராமேஸ்வரமும் இந்த வகையைச் சார்ந்தவையே... சிவாநந்த ராசா என்ற ஜீவனுக்கும் (ஜீவா) வசந்தி என்ற (பாவனா) பெண்ணுக்கும் ஏற்படும் காதலே கரு." 'ராமேஸ்வரம்' கதைப்பற்றி அழகாக விவரிக்கிறார் இயக்குனர் செல்வன். பாரதிராஜாவிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ள இவர் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ITA Films சார்பில் S.N. ராஜா தயாரிக்கிறார். ஜீவாவிற்கு கெட்டப் மாற்றம் இருக்கிறதா? வேகமும், வேதனையும் கொண்ட முகம், வரண்ட உதடுகள்... அனல் கக்கும்பார்வை... இதுதான் ஜீவா...! ஒரு அகதி இளைஞனாக வாழ்ந்திருக்கிறார். பேச்சும்,…

    • 3 replies
    • 1.9k views
  11. முழு நேர நடிகராக அவதாரம் எடுக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன். புதிதாக கலகம் என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார் திருமாவளவன். இதில் அவருக்கு டூயட் பாட்டெல்லாம் உண்டாம். முழு வீச்சில் அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, தமிழ் சினிமாவின் போக்கைக் கண்டித்து குரல் கொடுத்துக் கொண்டிருந்த, போராட்டங்கள் நடத்திக் கொண்டிருந்த திருமா, நடிகர் ஆவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் திருமா ஒரு நாள் நடிகரானார். அவரை வைத்து அன்புத்தோழி என்ற படம் பஜை போடப்பட்டது. இதில் புரட்சிக்காரராக நடித்துள்ளார் திருமா. பலவித தடைகளுக்குப் பின்னர் படம் முடிந்து சென்சார் போர்டுக்குப் போனது. ஆனால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கேரக்டரா…

    • 7 replies
    • 1.7k views
  12. உரு பட்டேல் என்ற பெயரை இதுவரை கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இவர் வெளிநாட்டு வாழ் இந்தியர். டாலர்களில் புரளும் மில்லினர். குஜராத்தில் பிறந்த உரு பட்டேலுக்கு ஓர் ஆசை. ராமாயணம் கதையை படமாக்க வேண்டும்! இதே ஆசையுடன் திரிந்த இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷி 'ராமாயணம்' என்ற பெயரில் ஸ்கிரிப்ட் தயார் செய்து, அஜய்தேவ்கானை ராமனாகவும் அவரது மனைவி கஜோலை சீதையாகவும ஆக்கி விட்டார். இந்தப் படத்தின் பட்ஜெட் நூற்றைம்பது கோடி! ராஜ்குமார் சந்தோஷியின் இந்த அட்டாக்கால் சற்றும் மனம் தளராத விக்கிரமாத்தியன் உரு பட்டேல், 'அனுமான்' என்ற பெயரில் அதே ராமாயண கதையை தயாரிக்கிறார். இதுவொரு சர்வேதச புராஜெக்ட். பட்ஜெட் ராஜ்குமார் சந்தோஷியின் ராமாயணத்தைவிட அதிகம். இதனை புரிந்து கொள்ள ஒரு சின்ன சாம்…

    • 0 replies
    • 998 views
  13. மதுரை மண் கொடுத்த மக்கா பாலாவும், அமீரும் தங்களுக்குள் நிலவிய பூசல்களை மறந்து விட்டு கை கோர்த்து மீண்டும் நட்பாகியுள்ளனர். கோலிவுட்டையும், மதுரையையும் பிரித்துப் பார்க்க முடியாது. பாலும், தண்ணீரும் மாதிரி இரண்டையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. அப்படிப்பட்ட மதுரை மண்ணிலிருந்து வந்தவர்கள்தான் பாலாவும்,அமீரும். எப்படி பாரதிராஜாவும், இளையராஜாவும் டிரவுசர் போட்ட காலத்திலிருந்து நட்பு பாராட்டி வருகிறார்களோ,அதேபோலத்தான் பாலாவும்,அமீரும் சிறு வயது முதல் தோழர்கள். பள்ளிப் படிப்பிலிருந்தே பின்னி் பிணைந்து திரிந்த இருவரும் தொழிலிலும் சேர்ந்தே ஜொலிக்கத் தொடங்கினர். சேது, நந்தா ஆகிய இரு படங்களிலும் பாலாவுடன் இணைந்திருந்தார் அமீர். ஆனால் அதன் பின்னர் நட்ப…

    • 1 reply
    • 1.1k views
  14. 'ஃபர்ஸ்ட் டைம்' என்ற பெயரில், அட்டகாசமான ஒரு 'அப்பர் கிளாஸ்' படம் தமிழில் வருகிறது. தமிழ்ப் படங்களுக்கு ஆங்கில டைட்டில் கூடாது என்ற குரல்களுக்குப் பின்னர் தமிழக அரசு தமிழில் பெயர் வைத்தால் சலுகை என்று உத்தரவு போட்டது. இதைத் தொடர்ந்து ஆய், ஊய் என்ற ரீதியில் வந்து கொண்டிருந்த படங்கள் எல்லாம் தமிழுக்கு மாறத் தொடங்கின. இந்த உத்தரவு அமலுக்கு வந்த பின்னர் ஆங்கில டைட்டிலில் ஒரு படமும் வரவில்லை. இந்தநிலையில் ஃபர்ஸ்ட் டைம் என்ற சுத்தமான ஆங்கிலப் பெயரில் ஒரு தமிழ்ப் படம் உருவாகியுள்ளது. மணிரத்தினம், பி.சி.ஸ்ரீராம் ஆகியோரிடம் பணியாற்றிய அனுபவம் கொண்ட கிருஷ்ணன் சேஷாத்ரி கோமதம் இப்படத்தை இயக்கியுள்ளார். இதற்கு முன்பு பல விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவமு…

  15. விஷால் நடிக்க, பூபதி பாண்டியன் இயக்கத்தி்ல மலைக்கோட்டை படு விறுவிறுப்பாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. தனுஷை வைத்து தேவதையைக் கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம் என இரு வெற்றிப் படங்களைக் கொடுத்த பூபதி பாண்டியன் முதல் முறையாக விஷாலுடன் இணைந்துள்ள படம்தான் மலைக்கோட்டை. முதலில் திரிஷா நடிப்பதாக இரு்நதது. ஆனால் எநத நேரத்திலும் சூப்பர்ஸ்டாரின் அடுத்த படத்திறகு அழைப்பு வரலாம் என எதி்ர்ப்பார்ப்பதால் மலைக்கோட்டையிலிருந்து பாதியிலேயே இறங்கி விட்டார் திரிஷா. இதையடுத்து முத்தழகி பிரியாமணியை ஜோடியாக்கி விட்டனர். பருத்தி வீரனைத் தொடர்ந்து மலைக்கோட்டை மூலம் தனது வெற்றி பவனியை தொடர தீர்மானித்துள்ள பிரியா மணி அதற்கேற்ப இப்படத்தில் திறமை காட்டவுள்ளார். படப்பிடிப…

  16. பில்லாவில் அஜீத்துடன் ஜோடியாக நடிப்பது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளதாக நமீதா கூறியுள்ளார் ரஜினிகாந்த்தின் பில்லா அஜீத் நடிக்க ரீமேக் ஆகிறது. மலேசியாவில் கேம்ப் போட்டு பில்லா படத்தி்ன் ஷூட்டிங் நடந்து வந்தது. மலேசிய ஷூட்டிங் முடிந்து அஜீத், நமீதா உள்ளிடடோர் சென்னை வந்து சேர்ந்தனர். பில்லாவில் பிரவீணா நடித்த கேரக்டரில் நமீதா நடிக்கிறார். பில்லாவை ஒரு தலையாக காதலித்து அவர் கையாலேயே உயிரிழக்கும் கேரக்டர் அது. மலேசிய ஷூட்டிங் குறித்து நமீதாவிடம் கேட்டபோது, ஒரே நேரத்தில் விஜய்யுடனும், அஜீத்துடனும் நடிக்கும் நடிகை நானாகத்தான் இருப்பேன். அது எனக்குப் பெருமையாக உள்ளது. முன்பு ஒரே நேரத்தில் ரஜினி, கமல்ஹாசனுடன் இதுபோல ஸ்ரீபிரியாவும், ஸ்ரீதேவியும்…

    • 10 replies
    • 2k views
  17. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜியை வாங்கிய சூடு கூட குறையாத நிலையில் இன்னும் எடுத்தே முடிக்கப்படாத தசாவதாரம் படத்தையும் திமுகவின் கலைஞர் டிவி பெரும் தொகை கொடுத்து வாங்கி விட்டதாம். சன் டிவிக்கும், திமுகவுக்கும் ஏடாகூடமாகி விட்ட நிலையில்,புதிதாகப் பிறக்கப் போகிறது கலைஞர் டிவி.பெயர் வைத்துவிட்ட நிலையில் குழந்தை எப்போது பிறக்கும் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் குழந்தை ஊட்டமாக வளரத் தேவையான வேலைகளில் கலைஞர் டிவி நிர்வாகம் படு தீவிரமாக இறங்கி விட்டது. சாட்டிலைட் சேனல்கள் நிலைத்து நீடிக்க வேண்டுமானால் சினிமாதான் முதல் பலம் என்பதை உணர்ந்த கலைஞர் டிவி முதல் வேலையாக சிவாஜி படத்தை பெரும் தொகை கொடுத்த விலைக்கு வாங்கியது. இந்த நிலையில், கமல்…

  18. பில்லாவைத் தொடர்ந்து அஜீத் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவரது ஜோடியாக ஷ்ரியா நடிக்கவுள்ளார். கிரீடம் படத்தை முடித்து விட்ட அஜீத், அடுத்து பில்லா ரீமேக்கில் நடித்து வருகிறார். பில்லாவுக்குப் பிறகு நடிக்கவுள்ள படம் குறித்தும் அவ்வப்போது டிஸ்கஷனில் ஈடுபட்டு வந்தார்.அதில் ஒரு கதையை முடிவு செய்து விட்டார். ஆனால் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால் நாயகி முடிவாகி விட்டாராம். அதாவது அஜீத்தே ஹீரோயினை பிக்ஸ் செய்து விட்டார். அது ஷ்ரியா என்கிறார்கள். ரஜினியுடன் சிவாஜியி்ல நடித்ததால் பிரபலமாகி விட்ட ஷ்ரியாவைத் தேடி பல வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. தற்போது விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் நடித்து வரும் ஷ்ரியா, ஜெயம் ரவியுடனும் ஒரு படத்தில் இணைகிறார்.…

  19. நான் கடவுள் நாயகி யார் என்பது அந்தக் கடவுளுக்குத்தான் கரெக்டாக தெரியும் போல.அந்த அளவுக்கு பெரும் குழப்பமாக இருக்கிறது. நான் கடவுள் படத்தின் ஆரம்பத்திலிருந்தே பல பஞ்சாயத்துக்கள் தொடர்ந்தபடி உள்ளன.முதலில் அஜீத் நடிப்பதாக இருந்தது. பின்னர் என்ன நடந்ததோ, அஜீத் தூக்கப்பட்டார். ஆர்யா கடவுளாக்கப்பட்டார். பாவனா நாயகியாக நடிப்பதாக இருந்தது. அவரை வைத்து சில காட்சிகளைக் கூட படமாக்கி விட்டார் பாவனா. இந்த நிலையில் பாவனா சரியில்லை என்று கூறி அவரைத் தூக்கி விட்டார். இடையில் படமே கை மாறி விட்டது. முதலி்ல் தயாரிப்பாளராகஇருந்த தேனப்பன் சமீபத்தில் அதிலிருந்து விலகிக் கொண்டு விட்டார். இப்படிஅடுத்தடுத்து குழப்பத்தில் சிக்கித் தவிக்கும் நான் கடவுள் படத்தின் நாயகி யா…

  20. சிலருக்கு மட்டுமே உருமாற்றம் சாத்தியம். பிரகாஷ்ராஜ் இதில் டாக்டரேட்! புரியவில்லை? ஒரு படத்தில் துரத்தி துரத்தி காதலித்து விட்டு அடுத்தப் படத்தில் அதே நடிகைக்கு அப்பாவாக நடிப்பது சாதாரணமா? எஸ்., பிரகாஷ்ராஜுக்கு இது சாதாரணம் மனிதர் ஐ லவ் யூடா செல்லம் என ஒரு படத்தில் மிரட்டுவார். அடுத்தப் படத்தில் சிரிப்பு வைத்தியம் என்று கிச்சு கிச்சு மூட்டுவார். இன்னொன்றில் பீத்தேவன் பிறந்த நாளுக்கு பீர் குடித்து நம் வயிற்றை புண்ணாக்குவார். பீடிகை போதும். விஷயத்துக்கு வருவோம். ராதாமோகனின் புதிய படத்தை அதே பழைய பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் தயாரிக்கிறது. பிரகாஷ்ராஜ் படத்தின் பிரதான கேரக்டர். இன்னொருவர் த்ரிஷா. 'கில்லி' படத்தில் ஐ லவ் யூடா செல்லம் என த்ரிஷாவை துரத்தி துரத்தி ஸாரி,…

    • 0 replies
    • 933 views
  21. விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொ. திருமாவளவன் நடித்த முதல் படமான அன்புத் தோழியில் விடுதலை வேட்கை கொண்ட இளைஞராகவும் நடித்திருந்தார். முழுவதும் முடிந்த நிலையில் இப்படம் தணிப்புக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த அதிகாரிகள் இந்த படம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது போன்று இருப்பதாக கருதினார்கள். படத்திற்கு அனுமதி சான்றிதழ் வழங்க இயலாது என்று கூறிவிட்டார்கள். இதையடுத்து அன்புத்தோழி மேன்முறையீட்டுக்காக டெல்லி சென்றுள்ளது. அன்கேயும் தடை விதிக்கப்பட்டால் நீதிமன்றத்தில்தான் முறையிடவேண்டும்.

    • 1 reply
    • 1.3k views
  22. மீண்டும் கோபிகாவை நாடியுள்ளாராம் சேரன். சேரன், சமீபத்தில் மாயக்கண்ணாடி மூலம் பெரும் சரிவைச் சந்தித்தார். இதையடுத்து தனது திறமையை மீண்டும் நிரூபிக்க ஆட்டோகிராப் படத்தின் 2ம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார். முதல் பாகத்தில் மொத்தம் நான்கு நாயகிகள் இருந்தனர். மல்லிகா, கோபிகா, சினேகா, கெஸ்ட் ரோலில் கனிகா என நான்கு பேருடன் நடித்திருந்தார் சேரன். ஆனால் 2ம் பாகத்தில் 2 பேர் மட்டுமே இருப்பார்களாம். கோபிகாவும், கனிகாவும் வருவது போல கதையை உருவாக்கியுள்ளாராம் சேரன். 2ம் பாகத்தில் நடிக்க வேண்டும் என கோபிகாவை அணுகியுள்ளாராம். ஆனால் கோபிகா தரப்பிலிருந்து இன்னும் பதில் வரவில்லையாம். வரும் என்ற நம்பிக்கை சேரனுக்கு உள்ளதாம். கோபிகா இப்போது வீராப்பு படத…

  23. ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகியின் 800வது நாள் விழா முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடக்கிறது. தமிழ்த் திரையுலகில் இதுவரை தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் படம்தான் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்திருந்தது. அந்தப் படம் 770 நாட்கள் ஓடியது. அந்தக் காலத்தில் அது பெரும் சாதனை. அச்சாதனையை தற்போது சந்திரமுகி முறியடித்துள்ளது. இப்படம் 800 நாட்களைத் தொட்டுள்ளது. இது தமிழில் மட்டுமல்லாது தென்னிந்தியாவிலும் புதிய சாதனை ஆகும். இதையடுத்து சென்னையில் பிரமாண்ட விழா எடுக்க முடிவாகியுள்ளது. சிவாஜி புரடக்ஷன்ஸ் நிறுவனமும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து இந்த விழாவை வருகிற 25ம் தேதி நடத்தவுள்ளன. இந்த விழாவுக்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். இ…

  24. இமயமலையில் 38 நாள் ஆன்மீக பயணம் மேற்கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சென்னை திரும்பி விட்டார். ஆண்டுதோறும் இமயமலைக்குச் சென்று குறைந்தது ஒரு மாதம் ஆன்மீக பயணம் மேற்கொள்வது ரஜினியின் வழக்கம். இமயத்தில் உள்ள பாபாஜி குகைக்குச் செல்வதும் இந்த பயணத்தின் முக்கிய நோக்கம். இமயத்திற்குச் செல்வதன் மூலம் மனதுக்கும், உடலுக்கும் புத்துயிர் கிடைக்கிறது, மறு பிறவி எடுப்பது போல உள்ளது என்று பலமுறை ரஜினி கூறியுள்ளார். அது அவரது அனுபவ வார்த்தைகள். இமயத்திற்குப் போனவுடன், ரஜினி என்ற அந்தஸ்திலிருந்து சிவாஜி ராவாக மாறி, சாதாரண மனிதனாக மாறி விடுவது ரஜினியின் வழக்கம். இமயத்தின் ஒவ்வொரு மலைப் பகுதியையும் தனது பாதத்தால் அளவிட்டு மனதுக்குள் ஆன்மீக அலைகளை உலவ விட்டு உற்ச…

    • 18 replies
    • 3.4k views
  25. சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகை ராணி முகர்ஜி- நடிகர் ஹிருத்திக்ரோஷன் புதுடெல்லி, ஜுன். 10- வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் சேர்ந்து `சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி' என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் இந்திய திரைப்பட விழா நடத்தி விருது வழங்குகிறார்கள். இதன் 8-வது திரைப்பட விழா இங்கிலாந்தில் உள்ள யார்க்ஷயர் நகரில் நடந்தது. இதில் சிறந்த படம், டைரக்டர், நடிகர், நடிகை தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டு சிறந்த படமாக ராங்தே பசந்தி தேர்வு செய்யப்பட்டது. லேகேராகோ முன்னாபாய் படத்தை இயக்கிய ராஜ்குமார் ஹீரானி சிறந்த டைரக்டராக தேர்வு செய்யப்பட்டார். சிறந்த நடிகராக `கிரிஸ்' படத்தில் நடித்ததற்காக ஹிருத்திக்ரோஷன் தேர்வு…

    • 7 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.