வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5554 topics in this forum
-
பாடகி சுசித்ரா தனுஷ் தொடர்பில் பரபரப்பு தகவல் : டுவிட்டரில் சர்சையான படங்களும் பதிவேற்றம் தமிழ் சினிமாவின் பிரபல பாடகியான சுசித்ரா நேற்று தனது டுவீட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷ், பாடகி சின்மயி, ஆன்மிகவாதி சத்குரு இவர்களையெல்லாம் விமர்சிக்கும் விதமாக டுவீட்களை பதிவு செய்துள்ளார். மேலும் குறித்த டுவீட்டர் பதிவில், அவருக்கும் இவர்களுக்கும் இடையில் என்ன பிரச்சினை என்பதை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. ஆனால் அவர் காயமுற்ற அவரது கையை புகைப்படம் எடுத்து அதையும் டுவீட்டரில் பதிவிட்டுள்ளார் எந்த முடிவுக்கும் வர முடியாத குழப்பமான அவரது டுவீட்டர் பதிவுகள், பலராலும் கவனிக்கப்பட்ட நிலையில், அவற்றில் சிலவற்றை அவர் அழித்தும் வருகி…
-
- 51 replies
- 7.4k views
- 1 follower
-
-
பாகுபலி 2 டிரெய்லருக்கு அதிவேக ஒரு கோடி பார்வைகள்! எந்த மொழியில் அதிகம்? பாகுபலி 2 டிரெய்லர் வெளிவந்து சில மணித்தியாலங்களே கழிந்துள்ளன. அதற்குள் யூடியூப் இணையத்தளத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது. நேற்று காலை முதல்முதலில் தெலுங்கு டிரெய்லரை வெளியிட்டார் இயக்குநர் ராஜமெளலி. அது மாலை 4 மணி வரை அதிகபட்சமாக 76.20 லட்சம் பார்வைகளை யூடியூப் இணையத்தளத்தில் பெற்றுள்ளது. இதன்பிறகு அவர் ஹிந்தி டிரெய்லரை வெளியிடுவார் என்று எதிர்பார்த்த தருணத்தில் தமிழ் டிரெய்லரை வெளியிட்டார். அது மாலை 4 மணி வரை 8.95 லட்சம் பார்வைகளை யூடியூப் இணையத்தளத்தில் பெற்றுள்ளது. பிறகு மலையாள டிரெய்லரை வெளியிட்டார். அது அதே நேரக் கணக்கில் 2.72 லட்சம் பார்வைகளை யூடியூ…
-
- 0 replies
- 489 views
-
-
’என்னைப் படுக்கைக்கு அழைத்த பணக்காரர்கள்!’ - விளாசும் நடிகை கஸ்தூரி #VikatanExclusive தமிழ்நாட்டில் கடந்த பல மாதங்களாக 'அரசியலில்' மிகப் பெரும் புயல் வீசிக்கொண்டிருந்ததால், பிரேக்கிங் நியூஸ்களுக்குப் பஞ்சம் இல்லாமல் இருந்தது. தற்போது அந்தப் புயல், திசை மாறி திரைத்துறை பக்கம் திரும்பியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக கமல், தனுஷ் தொடங்கி.. பாடகி சுசித்ரா, நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி வரை தொடர்ந்துகொண்டு இருக்கிறது. சினிமாவில், நடிகைகளிடம் அட்ஜஸ்மென்ட் கலாசாரம் இருப்பதாக நடிகை கஸ்தூரி கூறியதாக ஒரு செய்தி சமீபத்தில் வைரல் ஆனது. அது குறித்து விகடனுக்கு என்று பிரத்யேகமாகப் பேசினார் கஸ்தூரி. "ஒரு நடிகையாக வாழ்வது எப்போதும் சவாலாகவே இருக்கிறது. ப…
-
- 1 reply
- 4.1k views
-
-
பழம்பெரும் நடிகை கே.ஆர்.இந்திரா காலமானார் பழம்பெரும் நடிகையான கே.ஆர்.இந்திரா இன்று சென்னையில் காலமானார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம். பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் அனுராதாவின் அக்காவும், டப்பிங் ஆர்டிஸ்ட் ஜெய கீதாவின் தாயாரும் கலைமாமணி பட்டம் பெற்ற பழம்பெரும் நடிகையுமான கே.ஆர்.இந்திரா இன்று காலமானார். அவருக்கு வயது 65. இவர் ‘கொஞ்சும் குமாரி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதே படத்தில் தான் பழம்பெரும் நடிகையான மனோரமாவும் அறிமுகமானார். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த ‘பெற்றால் தான் பிள்ளையா’ படத்தில் நடிகர் நம்பியாருக்கு ஜோடியாக நடித்தார். ‘ஹலோ Mr.ஜமீ…
-
- 0 replies
- 368 views
-
-
என்னை போல் வேறு யாரையும் ஏமாற்றாதீர்கள்கோபிநாத் செயலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இளம்பெண் !!
-
- 0 replies
- 244 views
-
-
திரை விமர்சனம்: நிசப்தம் எட்டு வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படு வதால் ஏற்படும் பாதிப்புகளை யும், அவற்றிலிருந்து மீளும் வழியையும் உரக்கச் சொல்கிறது ‘நிசப்தம்’. பெங்களூருவில் வசிக்கும் ஆதி (அஜய்) ஆதிரா (அபிநயா) தம்பதியின் ஒரே மகள் எட்டு வயது பூமிகா (பேபி சாதன்யா). எளிய நடுத்தர வாழ்வை நடத்தி வரும் இக்குடும்பத்தில் திடீரென புயல் வீசுகிறது. பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கும் பூமிகா, ஒரு காம வெறியனால் பிய்த்தெறியப்படு கிறாள். கொடூரமான பலாத்காரத் துக்குப் பின் குற்றுயிராக மீட்கப் படும் அவள், உடலாலும் மனதாலும் அடையும் சேதாரங்களைக் கண்டு, அவளது பெற்றோரின் வாழ்க்கை நொறுங்கிப்போகிறது. ஊடகங்கள் செ…
-
- 0 replies
- 324 views
-
-
Dheepan Dheepan L'équipe du film au festival de Cannes 2015. Données clés Réalisation Jacques Audiard Scénario Jacques Audiard Thomas Bidegain Noé Debré Pays d’origine France Genre Film dramatique Sortie 2015 Pour plus de détails, voir Fiche technique et Distribution Dheepan est un film français réalisé par Jacques Audiard, sorti le 26 août 2015. Le film, qui retrace l'histoire d'un réfugié tamoul en France, est sélectionné, en compétition, au Festival de Cannes 2015 où il remporte la Palme d'or. Sommaire [masquer] 1 Synopsis 2 Fiche technique 3 Distribution 4 Distinctions4.1 Récompense 5 Notes et références 6 Liens externes Synopsis[modifi…
-
- 19 replies
- 5.6k views
-
-
போர் முற்றுப்புள்ளி இல்லை!- ஈழத்திலிருந்து மற்றுமொரு ஆவணம் மே 2009, இனப்போரும் படுகொலைகளும் எங்கேயோ தூர தேசத்தில் நிகழ்ந்து வருவதைப் பற்றி மட்டுமே செய்தியாகப் படித்த வந்த தமிழக மக்களுக்கு தங்கள் அருகிலேயே ஈழத்தில் அப்பாவிப் பொதுமக்கள் உடைமையும் உயிரும் துண்டாடப்பட்டு உரிமைக்கான போர் முடிவுக்கு வந்த மாதம், அங்கே இலங்கையில் மக்கள் சிந்திய ரத்தம் கடல்வழியே தமிழகக் கறைகளை அடைந்து பல்லாயிரக்கணக்கான மக்களை இந்த இனப்படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுக்க செய்தது. போருக்கு பிறகு சூறையாடப்பட்ட அந்த மக்களின் நிலங்களை திருப்பித் தருவதாக அரசு அறிவித்தது ஆனால் இராணுவ ஆக்கிரமிப்புகள் இன்றளவும் அந்த பகுதியில் தொடர்ந்தபடிதான் இருக்கிறது. மேலும் சிங்கள மக்களின் குடியேற்றம…
-
- 1 reply
- 335 views
-
-
வாவ்...தமிழில் செம சினிமா! - ‘மாநகரம்' விமர்சனம் நான்கு கோணங்கள், மூன்று பிரச்னைகள், இரண்டு காதல்கள் இவை ஒரு சம்பவத்தில் மாநகரின் இயக்கத்தில் என்னவெல்லாம் சலனங்களை உண்டாக்குகிறது என திக் திடுக் திரைக்கதையில் விவரிக்கிறது ‘மாநகரம்’..! படத்தைப் பற்றி பார்ப்பதற்கு முன்... படக்குழுவுக்கு அழுத்தமான கைகுலுக்கல் மற்றும் பாராட்டு. சென்னைக்கு மாநகர அந்தஸ்து கொடுக்கும் பின்னணியை, அந்த அந்தஸ்துக்காக சென்னை கொடுக்கும் விலையை இவ்வளவு உயிரும் உணர்வுமாக கண்முன் கொண்டு வந்ததற்கு சபாஷ்..! ஸ்டார் வேல்யூ, மாஸ் புரமோஷன், டாப் ஸ்டார் நடிகர்கள், உலகளாவிய ரிலீஸ் என்று தமிழ் சினிமா உலகம் பரபரக்கிறது. இடையே, ’சிங்கம்’ சூர்யா வில்லனை விரட்டி முந்துவதுபோல், …
-
- 1 reply
- 676 views
-
-
ஐ.நா. சபையில் பரதநாட்டியம் ஆடிய ஐஸ்வர்யா தனுஷ் ஐ.நா. சபையின் மகளிர் தின நிகழ்வில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா பரதநாட்டியம் ஆடியுள்ளார். இதன’ மூலம், ஐ.நா. சபையில் இந்தியத் தூதரகத்தின் சார்பில் பரதநாட்டியம் ஆடிய முதல் பெண் என்கின்ற பெருமையை ஐஸ்வர்யா தனுஷ் பெற்றுள்ளார். பெண்களின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் வகையிலும் இந்திய கலாசாரத்தை உலகிற்குப் பறைசாற்றும் வகையிலும் இந்த நடன நிகழ்வு இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. http://newsfirst.lk/tamil/2017/03/ஐ-நா-சபையில்-பரதநாட்டியம/
-
- 30 replies
- 5.1k views
-
-
110 கோடிக்கு விலை போனது '2.0' தொலைக்காட்சி உரிமை கோப்பு படம் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் '2.0' தொலைக்காட்சி உரிமம் 110 கோடிக்கு விலை பெற்றுத் தந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் '2.0'. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சுமார் ரூ.400 கோடி பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது பிரதான காட்சிகள் அனைத்துமே படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டது. இன்னும் ஒரே ஒரு பாடலும், …
-
- 0 replies
- 228 views
-
-
பூனம் பாண்டேயின் 'ஹோலி' வீடியோ “2011ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி, உலகக் கோப்பையை வென்றால் எனது ஆடைகளை அவிழ்ப்பேன்” என, அறிவித்து அதிர்ச்சி கொடுத்த, அப்போது மொடலாக இருந்த பூனம் பாண்டே பற்றி இணைய உலகில் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். அதனைத் தொடர்ந்து, பல அரைகுரை ஆபாச வீடியோக்களை வெளியிட்டு ஹிந்தித் திரையுலகிலும் நடிகையாக அறிமுகமானார். இந்நிலையில், 'ஹோலி' பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சில தினங்களுக்கு முன்பாகவே, “என்னுடன் ஹோலி கொண்டாடத் தயாரா” என ஒரு ஆபாச புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து, பிகினி உடையில் 55 விநாடிகள் ஓடக் கூடிய ஒரு வீடியோவை தனது யூ-டியூபில் வெளியிட்டு புதிய பரபரப்…
-
- 0 replies
- 303 views
-
-
பைரவா விமர்சனம் நடிகர்கள்: விஜய், கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சதீஷ், டேனியல் பாலாஜி ஒளிப்பதிவு: சுகுமார் இசை: சந்தோஷ் நாராயணன் தயாரிப்பு: விஜயா புரொடக்ஷன்ஸ் இயக்கம்: பரதன் எந்த விஜய் படத்துக்கும் இல்லாத அளவுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இந்த பைரவாவுக்கு இருந்தது ரசிகர்களிடம். காரணம் தன்னை வைத்து படம் இயக்கி தோற்ற ஒரு இயக்குநருக்கு மீண்டும் விஜய் வாய்ப்புக் கொடுத்தது. அந்த வாய்ப்பை பரதன் எப்படி பயன்படுத்தியிருக்கிறார்? வாங்க பார்க்கலாம்... ஒய் ஜி மகேந்திரன் மேலாளராக இருக்கும் வங்கியில் கடன் வசூலிக்கும் வேலைப் பார்ப்பவர் விஜய். ஒய்ஜி சிபாரிசில் ரூ 64 லட்சத்தை கடனாக அந்த வங்கியில் பெறும் மைம் கோபி, அதைத் திருப்பித் தராமல் ஏமாற…
-
- 3 replies
- 1.5k views
-
-
திரை விமர்சனம்: முப்பரிமாணம் சாதி, மதம், அந்தஸ்து போன்ற வற்றால் காதல் தோல்வி யைச் சந்திப்பது உண்டு. இந்தப் படத்தில் அந்தக் காரணம் கண்ணுக்குத் தெரியாத ஒரு பரிமாணம் என்று சொல்லும் இயக்குநர், அந்தப் பரிமாணத்தையே ‘முப்பரிமாண’த்தின் ஆதாரமாக்கியிருக்கிறார். கல்யாண மண்டபத்தில் மணப் பெண்ணைக் கடத்துவதில் இருந்து தொடங்கும் படம், கடத்தலின் பின்னணியைச் சொல்ல, பழைய நிகழ்வுகளை அசைபோடத் தொடங்கு கிறது. கதிரும் அனுஷாவும் அக்கம்பக் கத்து வீட்டுச் சிறார்கள். பிள்ளைக் காதலுடன் பிரிந்துபோகும் இவர்கள், பெரியவர்கள் ஆனதும் (சாந்தனு - சிருஷ்டி) மீண்டும் சந்திக்கிறார்கள். அப்போதும் அவர்களது…
-
- 0 replies
- 247 views
-
-
போலீஸ், லேடி ஜர்னலிஸ்ட்களுக்கு இவர் கெட்ட சிவாதான்! - `மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் எப்படி? தமிழகத்தில் 23765வது சூப்பர் ஸ்டாராக உருவெடுக்க விருப்பப்பட்டு, மக்கள் சூப்பர் ஸ்டாராக ராகவா லாரன்ஸ் அவதாரமெடுத்திருக்கும் படம் மொட்டசிவா கெட்டசிவா. குழந்தைகள், மாணவர்கள், பெண்கள், காவல்துறை, மூன்றாம் பாலினத்தவர், இஸ்லாமியர்கள், நாட்டு மக்கள் என்று அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தி நல்ல பெயர் எடுக்க விழைந்திருக்கும் ராகவா லாரன்ஸின் மொ.சி.கெ.சி எப்படி இருக்கிறது? ஏதோ ஒரு காட்டில், ஒழுங்காக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ராகவாவுக்கு, சென்னைக்கு மாற்றலாக ஆசை. காட்டில் மாட்டிக்கொள்ளும் அமைச்சரைக் காப்பாற்றி அவர்மூலம் டிரான்ஸ்ஃபர் வாங்கிக் கொள்கிறார். அங்கே போய் சம…
-
- 0 replies
- 853 views
-
-
அஞ்சலியை டுவிட்டரில் கொஞ்சிய ஜெய் ஜெய் - அஞ்சலி இருவரும் தற்போது பலூன் படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். அதனோடு அவர்களின் காதலும் இணைந்துள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. அதற்கு ஏற்ப இருவரும் டுவிட்டரில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஜெய்-அஞ்சலி நடிப்பில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘எங்கேயும் எப்போதும்’. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, அந்த நேரத்தில் ஜெய்-அஞ்சலி இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும் பேசப்பட்டது. இந்தநிலையில் ஐந்து வருடங்களுக்கு பின்னர் சினிஷ் இயக்கும் `பலூன்´ படத்தில் இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படம் காதல் கலந்த திகில் படமாக உருவாகி வருகிறது. மேலும் பல பிரச்சனைகளை தாண்டி இப்படத்தில் அஞ்சலி ரீஎன்ட…
-
- 0 replies
- 399 views
-
-
http://tamil.thehindu.com/multimedia/video/ஓப்பன்-சேலஞ்ச்-நீயா-நானானு-பார்த்துடறேன்-தமிழ்-ராக்கர்ஸுக்கு-விஷால்-சவால்/article9575953.ece?ref=video
-
- 0 replies
- 462 views
-
-
ரஜினி குடும்பத்திற்கும், தனுஷ் குடும்பத்திற்கும் இது போதாத காலம். இது வரை இருந்த பெயர் கெட்டு தலை குனிந்து நிற்கிறது இரு குடும்பங்களும்.! சுசித்ரா இன்னும் பல வலுவான வீடியோ ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டுதான் இந்த அளவிற்கு ஆக்ரோஷமாக களம் இறங்கியுள்ளார் என்று கோடம்பாக்கம் நம்புகிறது. இன்னொரு தரப்பு, மலேசிய திருட்டு வி சி டி நிறுவனம் தான் மொத்த ஆதாரங்களையும் வைத்துக் கொண்டு சுசியை களம் இறக்கியுள்ளது என்றும் கூறுகிறார்கள். இந்த நிலையில் தனுஷின் அக்கா ஒரு டாக்டர். அவர் கடும் மன உளைச்சலுக்கும் ஏச்சு பேச்சுகளுக்கும் ஆளாகி தலை குனிந்து நிக்கிறார். நேற்று தற்காலிகமாக தனது பேஸ்புக் மற்றும் டிவிட்டர் கணக்குகளை டி-ஆக்டிவேட் செய்வதாக தனுஷின் சகோதரியும்,மருத்துவரு…
-
- 0 replies
- 253 views
-
-
தொழில் அதிபராக மாறப்போகிறேன்: அமலாபால் தொழில் அதிபராக மாறப்போகிறேன். ஓட்டல் தொழிலில் ஈடுபடுவேன் என்று நடிகை அமலாபால் கூறினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம். நடிகை அமலாபால் அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:- கேள்வி:- தனுசுடன் அதிக படங்களில் நடிக்கிறீர்களே? பதில்:- தனுஷ் ஜோடியாக வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தேன். தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும், வட சென்னை படத்திலும் நாங்கள் சேர்ந்து நடிக்கிறோம். தனுஷ் எனக்கு பிடித்த நடிகர். அவரிடம் பலவிதமான திறமைகள் இருக்கிறது. கதை மற்றும் கதாபாத்திரங்களை கவனமாக தேர்வு செய்து நடிப்பார். தனுஷ் படங்கள…
-
- 0 replies
- 247 views
-
-
ஆந்திர அரசின் நந்தி விருதுகள் அறிவிப்பு: சமந்தா சிறந்த நடிகையாக தேர்வு திரைப்படத்துறையினருக்கான ஆந்திர அரசின் நந்தி விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சமந்தா சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ஆந்திர அரசு சார்பில் சிறந்த தெலுங்கு படங்கள் மற்றும் நடிகர்-நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் நந்தி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த சில வருடங்களாக இந்த விருதுகள் வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2012 மற்றும் 2013-ம் ஆண்டுக்கான நந்தி விருதுகளை ஆந்திர அரசு தற்போது அறிவித்து உள்ளது. தமிழில் ‘நான் ஈ’ என்ற பெயரிலும் தெலுங்…
-
- 1 reply
- 276 views
-
-
#LiveUpdates ஆஸ்கர் 2017 : ஜொலிக்கும் ’மூன்லைட்’ திரைப்படம்! சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதினை 'Moonlight' திரைப்படம் வென்றது. சிறந்த படங்களின் பட்டியலில் லா லா லேண்ட், லயன், மான்செஸ்டர் பை தி சீ, மூன்லைட், அரெய்வல், ஃபென்சஸ், ஹாக்சா ரிட்ஜ் உள்ளிட்ட படங்கள் இருந்தன. ’லா லா லேண்ட்’ மற்றும் ’மூன் லைட்’ படங்கள் மீது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமான இருந்தது. இந்நிலையில் விருதை மூன்லைட் தட்டி சென்றுள்ளது. சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை 'Manchester by the Sea' படத்தில் நடித்த கேஸி அஃப்லெக் வென்றார். சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதினை La La Land படத்தில் நடித்த எம்மா ஸ்டோன் வென்றார். …
-
- 9 replies
- 2.3k views
-
-
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால், கேயார், டி.சிவா உள்ளிட்ட 5 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். இதுவரை கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான நிர்வாகம் சங்கத்தின் நிர்வாகப் பணிகளை கவனித்தது. அந்த நிர்வாகக் குழுவின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததையடுத்து, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 2-ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது. நிர்வாகப் பதவிகளை கைப்பற்ற பலர் போட்டியிடவுள்ளனர். இதற்கான மனு தாக்கல் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் சென்னையில் புதன்கிழமை வெளியிடப்பட்டது தலைவர் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கேயார், ராதாகிருஷ்ணன், டி.சிவா, விஷால் ஆக…
-
- 0 replies
- 245 views
-
-
இங்கிலாந்து ராணியுடன் சந்திப்பு: கமல் நெகிழ்ச்சி 'இங்கிலாந்து - இந்தியா' கலாச்சார சந்திப்பு நிகழ்வில் இங்கிலாந்து ராணியுடன் கமல் இங்கிலாந்து - இந்தியா' கலாச்சார சந்திப்பு நிகழ்வில், இங்கிலாந்து ராணியை சந்தித்த நிகழ்வு குறித்து கமல் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். 'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பு தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார் கமல். இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற 'இங்கிலாந்து - இந்தியா' கலாச்சார சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் கமல் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் இங்கிலாந்து ராணியை சந்தித்துள்ளார். இச்சந்திப்பு குறித்து தன்னுடைய அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், "ராணி ஆரோக்கியமாக கா…
-
- 0 replies
- 262 views
-
-
நேருவும், என் தாயும் உயிருக்கு உயிராக காதலித்தனர்: மவுண்ட்பேட்டன் பிரபு மகள் லண்டன்: முன்னாள் இந்திய பிரதமர் நேருவும், தனது தாய் எட்வினாவும் உயிருக்கு உயிராக காதலித்ததாக மவுண்ட்பேட்டன் பிரபுவின் இளைய மகள் பமிலா ஹிக்ஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கடைசி வைஸ்ராயான மவுண்ட்பேட்டன் பிரபுவின் வாழ்க்கை வரலாற்று வைஸ்ராய்ஸ் ஹவுஸ் என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது. 1947ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் பிரிவின்போது நடந்த சம்பவங்களை மையமாக வைத்து படம் எடுத்துள்ளனர். குரிந்தர் சதா இயக்கியுள்ள ஹாலிவுட் படமான வைஸ்ராய்ஸ் ஹவுஸில் ஹ்யூ போன்வில் மவுண்ட்பேட்டன் பிரபுவாக நடித்துள்ளார். இந்நிலையில் படம் குறித்து மவுண்ட்பேட்டன் பிரபுவின் இளைய மகள் லேடி பமிலா ஹிக்ஸ் கூறுகையில், மவுண…
-
- 4 replies
- 984 views
-
-
'முந்தானை முடிச்சு' புகழ் நடிகர்... தவக்களை மாரடைப்பால் மரணம். சென்னை: நடிகர் தவக்களை மாரடைப்பால் சென்னையில் உள்ள தனது வீட்டில் இன்று மரணம் அடைந்தார். 1983ம் ஆண்டு பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் வெளியான முந்தானை முடிச்சு படம் மூலம் நடிகர் ஆனவர் தவக்களை. ஆள் குள்ளமாக இருந்தாலும் நடிப்பில் அசத்தி ரசிகர்களின் மனதில் உயர்ந்தவர். அவர் சென்னை வடபழனியில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 42. தவக்களை 496 படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம், இந்தி ஆகிய 6 மொழி படங்களில் நடித்துள்ளார். தவக்களையின் மரணம் குறித்து அறிந்த திரையுலகினர்…
-
- 1 reply
- 892 views
-