வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
ஆஸ்கரை வெல்லுமா இந்த அமேசான் காட்டின் கதை?! ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டி சூடுபிடிக்க துவங்கிவிட்டது. வழக்கம்போல, உலகின் பல பகுதிகளில் இருந்து, பல கலைப்படைப்புகள் ஆஸ்கரை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் முதன்முறையாக கொலம்பிய சினிமா ஒன்று ஆஸ்கர் இறுதிப்பட்டியலுக்கு தேர்வாகியிருக்கிறது. கொலம்பிய நாட்டில் இருந்து முதல்முறையாக ஒரு இயக்குநர், சினிமா ஆர்வலர்களால் ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறார் ஒரே படைப்பில் அத்தனை பேரையும் கவனிக்க வைத்த அந்த இயக்குனர் சிரோ கியூரா. அமேசான் காடுகள் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது என்னவாக இருக்கும் ? சிலருக்கு அரியவகை மூலிகைகள் கிடைக்குமிடம் என தோணலாம். சிலருக்கு ‘உலகின் நுரையீரல்’ என அழைக்கப்படும் அதன் பெ…
-
- 0 replies
- 370 views
-
-
தாரை தப்பட்டை - திரை விமர்சனம் சாமிப் புலவன் (ஜி.எம்.குமார்) பிரபலமான இசைக் கலைஞர். இவருடைய மகன் சன்னாசி (சசிகுமார்), தாரை தப்பட்டை மற்றும் கரகாட்டக் குழுவை நடத்தி வருகிறார். அதில் பிரதான நடனக்காரி சூறாவளி (வரலட்சுமி). சூறாவளிக்கு சன்னாசி மீது தீராக் காதல். சன்னாசிக் கும் சூறாவளி என்றால் கொள்ளைப் பிரியம் ஆனால் வெளிக்காட்டுவ தில்லை. செல்லும் இடங்களில் எல்லாம் சூறாவளிக்குச் சிறப்பான வரவேற்புக் கிடைக்கிறது. அவளுடைய ஆட்டத்தைத் தொடர்ச்சியாகக் காணும் அரசாங்க ஊழியர் கருப்பையா (ஆர்.கே.சுரேஷ்) சூறாவளியை மணமுடிக்க விரும்புகிறார். “ஆயுளுக்கும் ஆட்டக்காரியாக அவள் அவதிப்பட வேண்டாம் நிம்மதியாக வாழட்டும்” என நினைக்கும் சன்னாசி, தனது காதலைத் தியாகம் செய்கிறான். திருமணத்த…
-
- 1 reply
- 632 views
-
-
நடிகை அசின் மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மா திருமணம் டெல்லியில் நேற்று நடந்தது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர். மலையாளம், தெலுங்கில் ஒருசில படங்களில் நடித்த அசின் (30), தமிழில் 2004-ல் வெளிவந்த ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படத்தில் அறிமுகமானார். ‘சிவகாசி’, ‘வரலாறு’, ‘போக்கிரி’ உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், ‘கஜினி’ படத்தின் இந்தி ரீமேக் படத்தில் நடித்ததன் மூலம் இந்தியில் வாய்ப்புகள் அதிகரித்தது. இதற்கிடையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவுக்கும் (40), அசினுக்கும் நட்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் சம்மதம் கிடைத்ததை அடுத்…
-
- 6 replies
- 461 views
-
-
கதகளி - திரை விமர்சனம் இயக்குநர் பாண்டிராஜ் இயக் கத்தில் விஷால், கேத்ரீன் தெரசா நடித்திருக்கும் ‘ஆக்ஷன் - த்ரில்லர்’ திரைப்படம் ‘கதகளி’. கடலூர் தாதா தம்பாவுடன் (மது சூதன் ராவ்) ஏற்படும் பிரச்சினையால் ஊரைவிட்டுச் செல்கிறான் அமுதன் (விஷால்). அதற்குப் பிறகு, நான்கு ஆண்டுகள் அமெரிக்காவில் வேலை செய்துவிட்டு, தன் காதல் திருமணத் துக்காக ஊருக்குத் திரும்பிவரு கிறான். அமுதனின் காதலி மீனுக்குட்டி (கேத்ரீன் தெரசா). திருமணத்துக்கு நான்கு நாட்கள் இருக்கும்போது தாதா தம்பாவை யாரோ கொன்று விடுகிறார்கள். அந்தக் கொலைப் பழி அமுதன் மீது விழுகிறது. திருமண வேலைக்காகச் சென்னைக்குச் சென்றிருக்கும் அமுதனைக் காவல் துறை உடனடியாகக் கடலூருக்கு வர…
-
- 0 replies
- 742 views
-
-
கெத்து - திரை விமர்சனம் இயற்கை எழில் சூழ்ந்த குமுளியில் கதை நடக்கிறது. கதை குமுளிக்கு வருவதற்கு முன் இஸ்ரோ விஞ்ஞானி ஒருவரைக் கொல்வதற்கான சர்வதேசச் சதி பற்றிய காட்சி அரங்கேறுகிறது. விஞ்ஞானியைக் கொல்லும் பொறுப்பை விக்ராந்த் ஏற்றுக்கொள்கிறார். குமுளியில் உள்ள பெண்கள் பள்ளியில் உடற்கல்வி ஆசிரிய ராகப் பணியாற்றுகிறார் சத்யராஜ். சாந்தமே உருவான அவரது மகன் உதயநிதி ஒரு நூலகர். மகள் தீபிகா, மனைவி பிரகதி ஆகியோ ருடன் அமைதியான வாழ்க்கையை நடத்திவரும் சத்யராஜ் துணிச்சலா னவர். பள்ளிக்கு அருகில் நடத்தப் படும் ஒரு ‘பார்’, கல்லூரி மாணவி களுக்குப் பெரும் தொல்லையாக அமைய, அவர் காவல்துறையில் புகார் கொடுத்துவிடு…
-
- 0 replies
- 443 views
-
-
பூலோகம் திரை விமர்சனம் [ Friday, 8 January 2016 ,09:00:44 ] நடிகர் : ஜெயம் ரவி நடிகை : திரிஷா இயக்குனர் : கல்யாண கிருஷ்ணன் இசை : ஸ்ரீகாந்த் தேவா ஓளிப்பதிவு : சதீஷ் குமார் சென்னையில் 1948ல் இருந்து இரண்டு பகுதிகளுக்கு இடையே குத்துச் சண்டைப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஜெயம் ரவி சிறுவயதில் இருக்கும்போது அவருடைய அப்பா, எதிராளியுடன் குத்துச் சண்டையில் போட்டியிருக்கிறார். இதில் தோற்கும் ஜெயம்ரவியின் அப்பா, அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் ஜெயம்ரவி சிறு வயதில் இருந்தே பெரிய குத்துச் சண்டை வீரனாகி எதிராளியின் மகனை தோற்கடித்து பழியை தீர்க்க வேண்டும் என்ற கொள்கையோடு வளர்கிறார். இந்நிலையில், தொலைக்காட்சி ந…
-
- 0 replies
- 444 views
-
-
முதல் பார்வை: தாரை தப்பட்டை - இன்னொரு பாலா படம்! பாலா இயக்கத்தில் வெளியாகும் ஏழாவது படம், குரு இயக்கத்தில் சிஷ்யர் சசிகுமார் நடிக்கும் முதல் படம், இளையராஜா இசையில் வெளியாகும் 1000-வது படம் என்ற இந்த காரணங்களே 'தாரை தப்பட்டை' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. பொதுவாக பாலா படமென்றால் வன்மம், குரோதம், கொடூரமாகப் பழிவாங்கும் படலம், குரல்வளையைக் கடித்து துப்புவது, ரத்தம் தெறிப்பது என்ற டெம்ப்ளேட் நிச்சயமாக இருக்கும். 'தாரை தப்பட்டை' படத்துக்கு 'ஏ' சான்றிதழ் கொடுத்திருப்பதால், அதீத வன்முறை பீதியுடன் தயங்கியே தியேட்டருக்குள் நுழைந்தோம். 'தாரை தப்பட்டை' படம் எப்படி? சசிகுமார் சன்னாசி தாரை தப்பட்டை மற்றும் கரகாட்டக் குழுவை நடத்தி வருகிறார…
-
- 0 replies
- 715 views
-
-
தமிழ் சினிமாவும் திடீர் தமிழர்களும்! கருப்பு வெள்ளை காலம் தொடங்கி இன்று வரை, தமிழ் சினிமாவில் ஏகபோக கதை களங்கள். அண்ணன் தங்கை பாசம், காதல், தாய் தந்தை பாசம், தோழமை என அடுக்கிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு படமும் ஒரு பிள்ளையை பெற்றெடுப்பதற்கு சமம். இப்படி உயிர் கொடுத்த படத்தை வெளியிடுவது தான் இங்கே மிக மிக சிரமம். எந்த நேரம் யார் மனுவுடன் நீதிமன்ற வாசலில் நிற்பார்களோ என தயாரிப்பு நிறுவனங்கள் விழிபிதுக்கிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம். 2000 வரை கூட வெகு ஜன மக்கள் திரைப்படங்களை வெறும் திரைப்படங்களாகவே பார்த்தனர் தமிழக மக்கள். 2000-க்கு பிறகு மக்கள் திரைப்படங்களை தங்கள் வாழ்வியலோடு ஒப்பிட்டு பார்க்க தொடங்கினர். அதற்கு பிறகுதான் தொடங்கியது தலைவலி. எதை எடுத்தாலும் குற்…
-
- 0 replies
- 643 views
-
-
சென்னை சர்வதேச பட விழா | உட்லண்ட்ஸ் | 6.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் புதன்கிழமை உட்லண்ட்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை » காலை 10.30 மணி Eksik|Eksik Dir.: Baris Atay Turkey |2015|110’ 1981ல் இருந்து 1984 வரை நடந்த இராணுவப் புரட்சியிலிருந்து கதை துவங்குகிறது. அப்போது புரட்சியாளர்கள் பலர் வேட்டையாடப்பட்டனர். கர்ப்பமாக இருக்கும் மேலேக்கின் கணவன் கைதுசெய்யப்பட்டு கொல்லப்படுகிறான். குழந்தை பெற்றவுடனேயே தனது மாமனாரால் வீட்டிலிருந்து விரட்டப்படுகிறாள். அவளது மூத்த மகன் டெனிஸை மாமனார் தன்னிடம் வைத்துக் கொள்கிறார். 30 வருடங்கள் கழித்து தனித…
-
- 18 replies
- 2.2k views
-
-
திருமணத்திற்கு தயாராகும் அசின்! [Monday 2016-01-11 22:00] மலையாள அழகியான நடிகை அசின் வட மாநல மருமகளாகிறார். நடிகை அசீனுக்கும், டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் ராகுல் சர்மாவுக்கும் வருகிற 23–ந்தேதி திருமணம் நடக்கிறது. டெல்லியில் திருமணம், மும்பையில் வரவேற்பு விழா என்று திட்டமிட்டு உள்ள அசின் திருமண ஏற்பாடுகளை தனது வருங்கால கணவர் ராகுல் சர்மாவுடன் இணைந்து தீவிரமாக செய்து வருகிறார். சமீபத்தில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது அசினுக்கு காதலர் ராகுல்சர்மா ரூ.6 கோடி மதிப்பிலான வைர மோதிரத்தை பரிசாக அளித்தார். இது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பிறகு நெருங்கிய நண்பர்களுக்கு ‘‘எங்கள் திருமணத்துக்காக உங்கள் 3 நாட்களை சேமித்து வையுங்கள்’’ என்ற பொருள்…
-
- 1 reply
- 425 views
-
-
தமிழ் சினிமாவின் 'டாப்-10' கலெக்ஷன் மாஸ்டர்ஸ்! கார்த்தி, விஷால், ஆர்யா ஹீரோக்களாக இவர்கள் மூவரும் பக்கா. ஸ்க்ரீன் பிரசன்ஸ், காதல், ஆக்ஷன் என எந்த ஏரியாவுக்குள்ளும் எகிறி அடிப்பார்கள். பெரும்பாலும் தங்கள் சொந்த பேனரிலேயே நடித்து கலெக்ஷன் அள்ளிக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், இவர்கள் என்னதான் பெர்ஃபார்ம் செய்தாலும், இயக்குனர், கதை, உடன் நடிப்பவர்கள் எனப் பல காரணங்கள்தான் இவர்கள் நடிக்கும் படங்களில் வெற்றி சதவிகிதத்தை தீர்மானிக்கிறது! ‘ஜெயம்’ ரவி அமுல்பேபி நாயகர்கள் லிஸ்ட்டில் இருந்தவர் சமீபகாலமாக ஆக்ஷனில் பொறி பறக்க வைக்கிறார். 'பேராண்மை’ படத்தில் பிடித்த ரூட்டில் கச்சிதமான கிராப் ஏற்றிக் கொண்டவர். 'தனிஒருவன்’, 'பூலோகம்’ எ…
-
- 0 replies
- 764 views
-
-
ஆஸ்கருக்கு இணையான கோல்டன் க்ளோப் விருது பெற்றவர்கள் -முழு பட்டியல் ஆஸ்கருக்கு இணையான மற்றும் ஆஸ்கார் விருதிற்கு முன்னோட்டமாகக் கருதப்படும் கோல்டன் க்ளோப் விருது வழங்கும் விழா நேற்று அமெரிக்காவில் நடைபெற்றது. 73வது கோல்டன் க்ளோப் விருது சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறந்த தொலைக்காட்சித் தொடர்களுக்கும், கலைஞர்களுக்கும் வழங்கப்பட்டன. இந்த விருதில் சிறந்த நடிகருக்கான விருதை டைட்டானிக் நாயகனான லியனார்டோ டிகாப்ரிகோ 2015ல் வெளியான ரெவனண்ட் படத்திற்காகப் பெற்றார். இப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து மைக்கேல் புன்கே என்பவரால் எழுதப்பட்ட நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டது. சிறந்த நடிகர் மட்டுமின்றி சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்கத்திற்கான விருதினையும் தட்…
-
- 1 reply
- 756 views
-
-
பொங்கல் ரிலீஸ் படங்கள்- சிறப்புப் பார்வை! இந்த வருடம் பொங்கலுக்கு போட்டி போட்டுக்கொண்டு 4 பெரிய படங்கள் வெளியாகவுள்ளன. வெள்ளி அன்று பொங்கல் என்ற நிலையில் வெள்ளி , சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் விடுமுறையை சரியாக டார்கெட் செய்துள்ளன இந்தப் படங்கள். விஷாலின் கதகளி, பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை, சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன், உதயநிதியின் கெத்து. எந்தப் படம் எப்படி இருக்கும்? கதகளி: விஷால், கேத்ரீன் தெரசா, சூரி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கியுள்ள ஆக்ஷன் த்ரில்லர் படம். படத்துக்கு இசை ஹிப்ஹாப் தமிழா. விஷால், பாண்டிராஜ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் , இதுவரை நாம் பார்த்திராத விஷால் படமாக இருக்கும் என்கிறார் பாண்டிராஜ். கதகளி நடனத்தில் …
-
- 0 replies
- 751 views
-
-
உலகின் தலைச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து இசைஞானி இளையராஜா மட்டுமே 9ம் இடத்தில் இடம்பெற்றுள்ளார் என்பது பெருமைக்குரிய விசயம். இது இந்திய மக்கள் தொகையின் 120 கோடி மக்களில் ஒருவர் என்ற மிகப்பெரிய பிரதிநிதித்துவத்தை காட்டுகிறது. இந்த தரவரிசை கணிப்பீடை நடத்திய 'டேஸ்ட் ஆஃப் சினிமா' என்ற இணையதளம், இசைக்கோர்ப்பு, இசை ஒருங்கிணைப்பு, பாடல் இயற்றும் தன்மை, பாடகராகவே உருவாகிய விதம், இசைக்கருவிகள் கையாளும் வல்லமையென எல்லாதுறைகளிலும் இளையராஜாவின் பெரும்பங்கை சுட்டிக்காட்டிருக்கின்றது. சக தமிழனாக, இசைரசிகனாக இசைஞானி இளையராஜாவை நினைத்து பெருமைப்படுகிறேன். அவரின் சமகாலத்தில் வாழும் மனிதன் என்பதும் கூடுதல் சிறப்பே. …
-
- 0 replies
- 338 views
-
-
அமெரிக்காவின் விருதை பெற்ற முதல் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா! லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் 'மக்களின் மனம் கவர்ந்த நடிகை' என்ற விருது முதன்முதலாக இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவின் 'ஏ.பி.சி' என்ற சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'குவாண்டிகோ' என்ற தொலைக்காட்சி தொடரில் புலனாய்வு நிறுவன அதிகாரியாக நடித்துள்ளார். இந்த தொடருக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, அமெரிக்கா வழங்கும் சிறந்த அறிமுக நடிகை விருதுக்கு பிரியங்கா சோப்ரா தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு 'பீயுப்பிள் சாய்ஸ்' எனப்படும் 'மக்களின் மனம் கவர்ந்த நடிகை' விருது வழங்கப்பட்டுள்ளது. பிரபல நடிகைகளான எம்மா…
-
- 0 replies
- 327 views
-
-
மோடியை சந்தித்த பின்னர் அரசியலில் நுழைகிறார் அஜித்? Published by Rasmila on 2016-01-08 09:19:33 நடிகர் அஜித் விரைவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கப் போவதாகவும், இந்த சந்திப்பிற்குப் பின்னர் அவர் அரசியலில் களமிறங்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. தமிழ்நாட்டில் தனக்கென்று ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் அஜித். தற்போதைய சூழ்நிலையில் தான் நடிக்கும் படங்கள் தொடர்பான விழாக்களில் கூட அஜித் கலந்து கொள்வதில்லை. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியை அஜித் விரைவில் சந்திக்க இருப்பதாகவும், இந்த சந்திப்பிற்குப் பின்னர் அரசியலில் அவர் ஈடுபடப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமிழ்ந…
-
- 0 replies
- 424 views
-
-
இளையராஜா ஒரு டி.வி நிருபரை பார்த்து “உனக்கு அறிவிருக்கா?” என்று கேட்டது பெரிய விஷயமாகிவிட்டது. நாடெங்கிலும் இந்த சம்பவத்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் குரல்கள் ஒலித்து வருகிறது. பத்திரிகையாளர் சங்கங்கள் பல, “அப்படி கேட்டதற்கு இளையராஜா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று அறிக்கைகள் அனுப்ப, அப்செட் ஆகிவிட்டாராம் அவர். அவருக்கு பதிலாக அவரது மகன் கார்த்திக் ராஜா, “அப்பாவுக்கு எழுபது வயசுக்கும் மேலாகிவிட்டது. நெஞ்சுவலி காரணமாக ஆபரேஷனும் செய்திருக்கிறார். இந்த சம்பவம் அவரது மனதை வெகுவாக பாதித்திருக்கிறது. அதனால் இந்த விஷயத்தை இதோடு விட்டுவிடுங்கள்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். விட்ருவீங்களா? விட்ருவீங்களா? http://www.seithy.com/breifNews.php?newsID=148808&ca…
-
- 2 replies
- 571 views
-
-
சென்னை மழை வெள்ளப் பாதிப்புகளையும் சாதி, மதங்களை மறந்து மக்கள் உதவியதையும் காட்சிப்படுத்தி நடிகர் விக்ரம் புதிய பாடல் ஆல்பம் உருவாக்குகிறார். இதில் சூர்யா, கார்த்தி, ஜெயம்ரவி, பிரபுதேவா, ஜீவா, பரத், நடிகைகள் அமலாபால், வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சென்னையில் கடந்த மாதம் வரலாறு காணாத மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்தனர். ஹெலிகாப்டர்களில் வந்து ராணுவத்தினர் போட்ட உணவுப் பொட்டலங்களுக்காக மக்கள் அல்லாடிய பரிதாபங்களை பார்க்க நேர்ந்தது. அடையாறு, கூவம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு வந்து நகரம் முழுவதையும் மிதக்க வைத்தது. அரசு துறையினர், தொண்டு நிறுவத்தினர், நடிகர், நடிகைகள், இளைஞர்கள் இரவு பகலாக நிவார…
-
- 0 replies
- 355 views
-
-
இசை தேடும் இசைப்புயல் ஏ,ஆர்.ரஹ்மான் ஹாலிவுட் படங்களை மட்டுமே தமிழன் பார்த்துக்கொண்டிருக்க, ஹாலிவுட்டின் மிகப்பெரிய விழா மேடையில் செம்மொழியாம் நம் தாய்மொழியில் பேசி தமிழர் நமக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் அள்ளிவந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் இன்று. மேற்கத்திய இசை, கர்நாடிக் சங்கீதம், ராப், கிளாசிக்கல் இசை என இசையின் ஒவ்வொரு பிரிவையும் தன் ரத்தநாளங்களில் கலந்து வைத்திருக்கும் ஒரு மேதை தான் இந்த அல்லா ரக்கா ரஹ்மான். ஏறாத மேடைகள் இல்லை, இவர் கையை அலங்கரிக்காத விருதுகள் இல்லை, இவரிடமிருந்து பிறக்காத இசையும் இல்லை. ‘சிநேகிதனே’ என்று உருகவைப்பார், ‘போராளே பொன்னுத்தாயி’யென்று அழவைப்பார், ‘மன மன மன மென்டல் மனதில்’ என குதூகலிப்பார், ‘காதல் ரோ…
-
- 2 replies
- 3.7k views
-
-
திரை விமர்சனம் - மாலை நேரத்து மயக்கம் பெற்றோரின் விருப்பத்துக்காக விருப்பமில்லாத திருமண உறவில் சிக்கிக்கொள்கிறார் மனோஜா (வாமிகா). இவரது கணவன் பிரபு (பாலகிருஷ்ணா) கூச்ச சுபாவம் கொண்டவர். நாகரிகம், நாசூக்கு அறி யாதவர். ஆனால் தன் மனைவி மீது உயிராக இருக்கிறார். மனோஜாவோ பிரபுவை வெறுத்து ஒதுக்குகிறார். இவர் களது திருமணம் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தால் முறிந்துபோகிறது. பிரிந் தவர்கள் சேர்ந்தார்களா, இல்லையா என்பதுதான் படத்தின் கதை. கீதாஞ்சலி செல்வராகவனின் இயக் கத்தில் வந்திருக்கும் இப்படம், அம்மா வும் மகளும் பேசிக்கொள்வதை இயல் பாகக் காட்சிப்படுத்தியபடி தொடங்கு கிறது. பிறகு, திருமண முறிவின் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறது. பிடிக்காத த…
-
- 0 replies
- 480 views
-
-
இந்தியாவின் உயரிய விருது பெற்ற இளம்பெண்ணின் வீரக்கதை 23 வயதான ஒருவர் என்ன செய்து கொண்டிருப்பார். வேலை தேடிக்கொண்டு, பெற்றோரிடம் திட்டு வாங்கி கொண்டு, நண்பர்களுடன் ஊரைச் சுற்றி பொழுதைக் கழித்து கொண்டிருப்பார். ஆனால் நீர்ஜா பானோட்டின் கதை சற்று மாறுபட்டது. கல்யாணம் ஆகி இரண்டே மாதத்தில், வரதட்சணைக் கொடுமையால் மீண்டும் வீட்டிற்கு வந்தவர் அதோடு முடங்கிவிடவில்லை. பேன் ஆம் விமான நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி எடுக்க மையாமி சென்றவர் திரும்பி வந்தது விமான குழு நிர்வாகி எனப்படும் பர்ஸராக. ஆனால் இவற்றை விடப் பெரிது,அவர் செய்த மாபெரும் விஷயம் தன் உயிரைப் பொருட்படுத்தாமல் 350 பயணிகளின் உயிரை காப்பாற்றப் போராடினார். எல்லா நாட்களையும் போல தனது…
-
- 0 replies
- 444 views
-
-
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘கதகளி’ : - பொங்கலன்று வெளியாகிறது! [Sunday 2016-01-03 00:00] பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கதகளி’. பொங்கல் பண்டிகையன்று வெளியாகிறது. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விஷால் மாஸ் ஹீரோ இமேஜை தவிர்த்துவிட்டு, கதாபாத்திரமாக நடித்துள்ளாராம். அதுவும், இப்படத்தில் இரண்டாம் பாதியில் இடம்பெற்ற பாடல்களை, கதைக்கு ஒத்துவரவில்லை என்று விஷாலே எடுக்க சொல்லிவிட்டாராம். அந்த அளவுக்கு இப்படம் ஒரு நாவலைப் போல அமைந்துள்ளதாக கூறினார். கதகளி திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் விஷால், இயக்குநர் பாண்டிராஜ் , இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா…
-
- 0 replies
- 981 views
-
-
2015-ன் டாப் 10 வில்லன்கள்! ஒரு படத்தின் ஹீரோ, ஹீரோவாகத் தெரிய வேண்டுமென்றால் கண்டிப்பாக அந்தப்படத்தில் வில்லன் மிக வலிமையானவனாக இருந்தால் மட்டுமே நடக்கும். கடந்த வருடம் நம் மனதில் தனி இடம் பிடித்த வில்லன்கள்... http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/57124-2015-top-10-villans.art
-
- 0 replies
- 571 views
-
-
2015-ன் நட்சத்திரம்: மர்ம வசீகர ‘மாயா’ ஜால நாயகி! தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை இந்த ஆண்டின் வெற்றியாளர்களில் முதல் இடம் சந்தேகமில்லாமல் நயன்தாராவுக்குத்தான். ‘தனி ஒருவன், ‘மாயா’, ‘நானும் ரவுடி தான்’ என்று மூன்று வெற்றிப் படங்கள்! முதல் வரிசைக் கதாநாயகர்களோ (ஜெயம் ரவியைத் தவிர) இயக்குநர்களோ தயாரிப்பாளர்களோ அடைந்திராத வெற்றி இது. நயன்தாராவின் வெற்றி இந்தத் திரைப்படங்களின் வெற்றிக்கு வெளியிலும் இருக்கிறது என்பதுதான் உண்மை. சமீபத்தில் சேலத்தில் ஒரு கடை திறப்பு விழாவுக்கு நயன்தாரா சென்றபோது அவரைக் காண்பதற்குத் திரண்ட கூட்டத்தின் அளவுக்கு வேறு எந்தக் கதாநாயகிக்கும் திரண்டிருக்குமா என்பது சந்தேகமே. இவ்வளவு ஏன், முன…
-
- 4 replies
- 672 views
-
-
அழகான பேய்கள் 2015ஆம் ஆண்டை வழியனுப்பி வைத்துவிட்டு புதிய ஆண்டை வரவேற்றுக்கொண்டிருக்கும் நிலையில் வருட ஆரம்பத்திலேயே தமிழ் சினிமாவை அழகான பேய்கள் ஆக்கிரமிக்க போகின்றன. அதாங்க தமிழ் சினிமாவின் அண்மைய டிரென்டான பேய் திரைப்படங்கள் வரிசையில் இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் சுந்தர் சியின் அரண்மனை 2 வெளியாகவுள்ளது. இந்தத் திரைப்படத்தில் இரண்டு அழகான பேய்கள்... சாரி... அழகான நடிகைகள் பேய்களாக நடித்துள்ளன. சுந்தர்.சியின் திரைப்படங்கள் என்றாலே, ஒரே திருவிழா கூட்டமாகத் தான் இருக்கும். அரண்மனை 2 திரைப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல. பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளது. சித்தார்த் ஹீரோவாக இருந்தாலும், த்ரிஷா, ஹன்சிகா ஆகியோருக்கு தான், கதையில் …
-
- 2 replies
- 383 views
-