Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சம்பந்தன் என்னுடைய நண்பர்.மட்டக்களப்பில் நேற்று நீதியரசர் விக்கினேஸ்வரன்இப்படித்தெரிவித்தார். July 3, 2020 0 19 சம்பந்தன் என்னுடைய நண்பர். அவர்தான் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தார். ஆனால் அவருடைய பார்வை வித்தியாசமாக இருந்தது. அதனை நான் முன்பே கண்டுகொள்ளவில்லை. பின்னர்தான் கண்டுகொண்டேன் என்று முன்னாள் வடமாகாண முலமைச்சரும் ஓய்வு பெற்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். முன்னாள் வடமாகண முலமைச்ச…

  2. தாமரை மொட்டு ஆகஸ்ட்க்கு பின்னர் கருகிப்போகும் – வேலுகுமார் ஆளுங்கட்சியின் அரசியல் முகாம் ஆட்டம் கண்டுள்ளது. எனவே, ஜனாதிபதி தேர்தலின்போது மலர்ந்த மொட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 5ம் திகதிக்கு பின்னர் கருகிவிடும் என்பது உறுதி என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார். நேற்று (03) கண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் இதனை தெரிவித்தார். மேலும், “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே நாட்டின் காவலன் என்றும் அவரே மீட்பார் என்றும் மக்கள் மத்தியில் மாயையை உருவாக்கி, இனவாதத்தையும், மதவாதத்தையும் கையிலெடுத்து – தேசப்பற்று தொடர்பில் தொண்டைக்கிழிய போலியாக கொக்கரித்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரச்சாரம் செய்துவருகின்றது. ஆனால், கடந்த 6 மாதங்…

  3. மின்சாரம் தாக்கி விவசாயிகள் இருவர் பலி! மட்டக்களப்பு – உன்னிச்சை வயல் பிரதேசத்தில் யானைகளில் இருந்து வேளாணன்மையை பாதுகாக்க அமைக்கப்பட்ட மின்சார வேலியின் மின்சாரம் தாக்கியதில் வேளாண்மை காவலில் இருந்த இரு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (02) இரவு வயல் பிரதேசங்களை நோக்கிவந்த யானைகளை துரத்த முற்பட்டபோது இடம்பெற்றுள்ளது. இதன்போது கரவெட்டியாறு பிரதேசத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான (58-வயது) முனிச்சாமி தங்கையா , 7 பிள்ளைகளின் தந்தையான (51-வயளு; சின்னத்தம்பி மணிவண்ணன் ஆகிய இரு விவசாயிளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். https://newuthayan.com/மின்சாரம்-தாக்கி-விவசாயி/

  4. தேர்தலுக்குப்பின் யாழ்.பல்கலை துணைவேந்தரை ஜனாதிபதி தெரிவு செய்வார்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும், எதிர்வரும் ஆகஸ்ட் 7ம் திகதி இடம்பெற இருப்பதாக தெரியவருகிறது. துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையில் மதிப்பீடு செய்து தெரிவான மூவரின் பெயர்களை ஜனாதிபதியின் தெரிவுக்காக முன்வைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவுக்குப் பரிந்துரைப்பதற்கான யாழ் பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டம் அன்றைய தினம் இடம்பெறவுள்ளது. குறித்த கூட்டத்தில் மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்படும் மூவரின் பெயர்களும், அங்கிருந்து உயர் கல்வி அமைச்சுக்கு அனுப்பப்படுவதுடன், குறித்த அமைச்சின்…

  5. தீர்மானம் எடுக்கும் துறைக்குள் பெண்கள் வர வேண்டும் – மஹாலட்சுமி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது அரசியல் களத்தில் இருக்கின்ற அனைத்துப் பெண்களுக்கும் வாக்களியுங்கள் என்று மன்னார் மாதர் ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் மஹாலட்சுமி குருசாந்தன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள மாதர் ஒன்றியத்தின் மாவட்ட அலுவலகத்தில் இன்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும், “தற்போது இலங்கையில் ஜனநாயக அரசியல் என்று சொல்லப்படுகின்ற அரசியலில் பல்வேறு குறைபாடுகள் தாங்கிக் கொண்டு செல்வதை நாங்கள் அறிவோம். அரசியலில் ஈடுபடும் பெண்களை குறித்து சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான விமர்சனங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆணுக்கு நிகராக பெண்கள் பல துறைகள…

  6. நாக்கை அடக்குமாறு எச்சரித்தது கூட்டமைப்பு தலைமை ! - விக்கி ஜனாதிபதி, பிரதமர் முன்பாக எமது நாக்கை அடக்கி வைக்குமாறு மறைமுகமாக கூட்டமைப்பின் தலைமை என்னை பலமுறை எச்சரித்ததாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இதனை கூறியுள்ளார். “1982 – 1986 வரையில் நான் ஐந்து வருடங்கள் மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றிய மல்லாகம் நீதிமன்றம் அருகில் உங்கள் யாவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். அந்தக் காலகட்டத்தில் எனக்கு வலதுகரமாக இருந்து கடமையாற்றியவர் உங்களில் ஒருவர் தான். அன்றைய பலமுகங்கள் இன்று இங்கில்லை. சிலர் வெளிநாடு சென்றுவிட்டார்கள். …

    • 16 replies
    • 1.8k views
  7. எதிர்வரும் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது ஒவ்வெருவருடைய தனிப்பட்ட சுதந்திரம். ஆனால், மாவீரர்களின் பெற்றோர்கள், எம்மை வழிநடத்திய தலைவர் பிரபாகரனை இன்றும் நேசிக்கும் முன்னாள் போராளிகள், ஆதரவாளர்கள் அனைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஆபிரகாம் மதியாபரணம் சுமந்திரனுக்கு வாக்களிப்பது தமிழ் இனத்துக்கு செய்யும் துரோகமாகும் என முன்னாள் மூத்த போராளி காக்கா அண்ணா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சத்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், https://www.ibctamil.com/srilanka/80/146274

    • 10 replies
    • 1.6k views
  8. (செ.தேன்மொழி) இலங்கை கிரிக்கட் வீரர்களுக்கு ஏற்படுத்திய அவமானம் தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மன்னிப்பு கோரவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் மனோகணேசன் வலியுறுத்தினார். வெள்ளவத்தையில் அமைந்துள்ள ஐ.டி.எம். நேசன்ஸ் கெம்பஸ் நிறுவனத்தின் கட்டிடத் தொகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, அரசாங்கம் சௌபாக்கியத்துக்கான அரசாங்கம் என்பதை விட குழப்பகரமான அரசாங்கமாக மாறியுள்ளது. ஆரம்பத்தில் எம்.சீ.சீ. ஒப்பந்தம் தொடர்பான குழப்பம் , கருணா அம்மான் குழப்பம் , நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள கிரிக்கட் வீரர்களை அவமானப்படுத்திய குழப்பம…

    • 1 reply
    • 694 views
  9. (இராஜதுரை ஹஷான்) எம் சி . சி. ஒப்பந்தம் அழகானதாக இருந்தாலும் அதில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் இலங்கையின் இறையாண்மைக்கும், தேசிய பாதுகாப்பிற்கும் மற்றும் பொதுச் சட்டத்திற்கும் முரணானது. ஆகவே எவ்வித நிபந்தனைகளுமின்றி ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் என்பதே எம். சி. சி. ஒப்பந்தம் தொடர்பான மீளாய்வு குழுவினரது இறுதி பரிந்துரையாகும். ஒப்பந்தத்தின் முன் தயார் நிலைக்கு 2017, 2018ம் ஆண்டுகளில் 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுவதற்கான இரு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதே தவிர நிதி கிடைக்கப் பெற்றது என்று அறிக்கையில் எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை. அமெரிக்க தூதுவராலயம் நிதி வழங்கவில்லை, என்றும் கடந்த அரசாங்கம் நிதி பெறவில்லை என்று குறிப்பிடும் நிலையில் ஒப்பந்த…

  10. தமிழ்த் தேசிய அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது? அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, தமிழ் மக்களின் கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைப்பதற்கு தவறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முதலில் தங்களை புலிநீக்கம் செய்தார்கள். அதன் விளைவாகத் தான் கஜேந்திரகுமார், பத்மினி போன்றவர்கள் வெளியேற வேண்டி வந்தது. அதற்குப் பிறகு அவர்கள் தங்களை தேசிய நீக்கம் செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் கிட்டத்தட்ட ஆயுதப் போராட்டத்துக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை போலவும் தாங்கள் ஆயுதப் போராட்டத்தோடு முழுதளவு உடன்படவில்லை போலவும் காட்டிக் கொள்ளும் விதத்தில் ஆயுதப் போராட்டத்தின் பின்னடியாக வந்த …

  11. காணாமல் போன கிணறு இன்னமும் நெடுந்தீவிலேயே நெடுந்தீவு பிரதேசத்தில் கிணறு ஒன்று கானாமல் போயிருப்பதாக பிரதேச சபையில் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளதாக 04.06.2020 எமது இப் பக்கத்தில் வெளியாகிய செய்தியினை மறுக்கிண்றார் குறித்த காணி பராமரிப்பாளர். அவர் தெரிவித்ததாவது.. எமது முன்னோரின் நிலத்தில் அமைந்துள்ள கேணியும் கிணறும் அயலவரினதும் கால்நடைகளினதும் வாழ்வியல் நன்மை கருதி பாவனைக்கு விடப்பட்டது .எனினும் சீரான பராமரிப்பும் கொடுத்த தேவைக்கும் பயன்படுத்தப்படாத காரணத்தால் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது. எனினும் சீரான பராமரிப்போடு கால்நடைகளிற்கு நிறைவாக நீர் வழங்க பிரதேச சபை நடவடிக்கை எடுத்தால் பாதுகாப்பு வேலியை அகற்ற தயார் என்கின்றார் பராமரிப்பாளர். https://new…

  12. சிறப்புற நடைபெற்ற நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தினது இரதோற்சவம்! வரலாற்று சிறப்பு மிக்க யாழ் நயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலய மஹோற்சவத்தின் முத்தேர் திருவிழா இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவரையில் வீற்றிருக்கும் ஸ்ரீ நயினை நாகபூசணி அம்மனுக்கும், வசந்த மண்டபத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் விநாயகர் மற்றும் முருகன், வள்ளி – தெய்வானை என சகதெய்வங்களுக்கு விசேட அபிஷேகங்கள், ஆராதனைகள் இடம்பெற்று உள்வீதியூடாக வலம் வந்து காலை 06 மணியளவில் வெளிவீதி வந்து 07 மணியளவில் மஹோற்சவ தேரில் வீற்று அருள்பாலித்தனர். இம் மஹோற்வத் திருவிழா, கடந்த மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகியது. இன்று இரதோற்சவம் நடைபெற்றது. நாளை தீர்த்த உற்சவத்துடன் மஹோற்சவம் நிறைவடையும் …

  13. உலக வங்கியின் புதிய தரப்படுத்தலில் இலங்கையின் நிலை….! உலக வங்கியின் புதிய தரப்படுத்தலுக்கு அமைய, இலங்கை உயர் மத்திய வருமானம் கொண்ட நாடுகள் பட்டியலில் இருந்து கீழ் மத்திய வருமானம் பெறும் நாடுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு பின்னர் உலக வங்கி இலங்கையை கீழ் மத்திய தர வருமானம் பெறும் நாடு என வகைப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. உலக வங்கியின் இந்த தரப்படுத்தல் வருடாந்தம் ஜூலை முதலாம் திகதி புதுப்பிக்கப்படும். பல்வேறு நாடுகளின் வருமானங்களுக்கு அமைய அந்நாடுகள் தரப்படுத்தப்படும். இதனடிப்படையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு வேறு தரப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 10 நாடுகளுக்குள் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. …

  14. மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்து அறிக்கை ஜூலை 10 இல்…! ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 44ஆவது கூட்டத்தொடர் தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், இலங்கை தொடர்பான அறிக்கை எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து விவாதம் இடம்பெறவுள்ளது. இலங்கைக்கு கடந்த வருடம் விஜயம் செய்த சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிபுணரின் அறிக்கையே இதன்போது ஜெனிவா மனித உரிமை பேரவையில் வெளியிடப்படவுள்ளது. ஏற்கனவே விசேட நிபுணரின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், முதலில் விசேட நிபுணர் அந்த அறிக்கையின் சாராம்சத்தை வெளியிடுவார். சாராம்சம் சபையில் வெளியிடப்பட…

  15. அரசியல் தீர்வு கிடைத்தால் மாத்திரமே அபிவிருத்தியை நோக்கிச் செல்ல முடியும்; திருமலையில் சம்பந்தன் July 3, 2020 “அரசியல் தீர்வு கிடைத்தால் மாத்திரமே அபிவிருத்தியை நோக்கிச் செல்ல முடியும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்விதமான அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை என மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது எனக் கூட்டமைப்பின் தலைவரிடம் உள்ளூராட்சி சபைகளின்…

  16. கிராம மக்களின் தேவைகளை அடையாளம் காண வேண்டும்! கிராம புற மக்களின் பொருளாதார மட்டம் மற்றும் கிராம வாழ் மக்களின் தேவைகளை அடையாளம் கானும் வகையில் வங்கிகள் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (02) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தேசிய அபிவிருத்தி நடைமுறையில் கலைஞர்களை இணைத்துக் கொள்ளப் போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் பல சந்தர்ப்பங்களில் கலைஞர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள். இதன்மூலம் பல்வேறு மட்டங்களை சேர்ந்தவர்களும் தத்தமது படைப்புக்கள் மூலம் பங்களிப்பு நல்க முடிந்தது என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கொவி…

    • 1 reply
    • 581 views
  17. மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த அறிக்கை 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 44ஆவது கூட்டத்தொடர் தற்போது ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில், இலங்கை தொடர்பான அறிக்கை எதிர்வரும் 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து விவாதம் இடம்பெறவுள்ளது. இலங்கைக்கு கடந்தவருடம் விஜயம் செய்த சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிபுணரின் அறிக்கையே இதன்போது ஜெனிவா மனித உரிமை பேரவையில் வெளியிடப்படவுள்ளது ஏற்கனவே விசேட நிபுணரின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், முதலில் விசேட நிபுணர் அந்த அறிக்கையின் சாராம்சத்தை வெளியிடுவார். சாராம்சம் சபையில் வெளிய…

  18. அமைச்சரவை தீர்மானங்கள் 2020.07.01 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: கொவிட் 19 தொற்றின் போது உடனடியாக பதிலளிப்பதன் ஆரம்ப ஒத்துழைப்பாக இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்த கடன், மானியங்கள் மற்றும் பொருட்கள் ரீதியிலான உதவி. மத்திய கலாசார நிதியத்தின் ஊழியர்களுக்கான சம்பளத்தை செலுத்துவதற்கான மானியத்தைப் பெற்றுக்கொள்ளல். சிறைச்சாலை திணைக்களத்திற்கு உணவுப் பொருட்களை கொள்வனவு செய்தல் 2019 / 2020. உரத்தைக் கொள்வனவு செய்தல் – 2020 (ஜுலை மாதத்திற்காக). மகாவலி விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு கொவிஜன மந்திரஹேஹி என்ற விவசாய மாளிகையை அமைத்தல். நெல்லுக்கான இரசாயன உரத்தை விவசாய …

  19. “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டமைப்பை விமர்சிக்கலாம். அதைவிடுத்து தமிழ் மக்களுக்கு அவரால் என்ன செய்ய முடியும்?” இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு அவர் வழங்கியுள்ள நேர்காணலில் மேலும் தெரிவித்ததாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் யாரையும் நாம் விலக்கவில்லை. சிலர் விலகினார்கள். அதற்கான காரணத்தை அவர்கள் இதுவரை கூறவில்லை. விக்னேஸ்வரனை நானே அரசியலுக்குக் கொண்டு வந்தேன். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். ஆனால், தற்போது அவர் என்ன செய்கின்றார்? …

    • 16 replies
    • 2.2k views
  20. கல்குடாவில் ஸ்ரீ சீலாலங்கார ஆரம்ப பாடசாலை திறப்பு! மட்டக்களப்பு – கல்குடா கல்வி வலயத்தில் கல்குடா வலைவாடி பிரதேசத்தில் ஸ்ரீ சீலாலங்கார ஆரம்பப் பாடசாலை நேற்று (01) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர்,23வது படைப்பிரிவின் மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜெயரதன, அகில இலங்கை புத்ததாசன சபை தவிசாளர் ஜகத் சுமத்திபால, பௌத்த மதகுருமார்கள், இராணுவ உயர் அதிகாரிகள், அரச அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன்போது உரையாற்றிய ஆளுநர் அனுராதா ஜகம்பத், “கிழக்கு மாகாணம் மூவின மக்களும் ஒன்றாக செயற்படும் மாகாணமாகும். இங்கு இன, மத, மொழி வேறுபாடுகளின்றி ஒத்துழைப்பாக இருந்து வருகின்றனர். ஸ்ரீ சீலாலங்கார ஆரம்பப் பாடசாலையில் பௌத்த சமயத்தினை மாத்திரம் கற்…

    • 1 reply
    • 502 views
  21. நிர்மானத் தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடம் திறந்து வைப்பு! கிழக்கு மாகாணத்திற்கான நிர்மானத் தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடம் மட்டக்களப்பு – திராய்மடுவில் கமநல அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் வீரசேகரவால் நேற்று (01) திறந்து வைக்கப்பட்டது இதன்போது கமநல அபிவிருத்தி திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் கே.ஜெகநாத் கருத்து தெரிவிக்கையில், “மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படும் நிர்மாணங்களின் மூலப் பொருட்களான கல், மண், சீமெந்து, கொங்ரீட் போன்றவற்றின் தரம் மற்றும் விவசாய நிலம் உட்பட ஏனைய நிலங்களின் மணலினையும் ஆய்வு செய்து அறிக்கையிடும் நிர்மான தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடமாக இந்த ஆய்வுகூடம் அமைகின்றது. இக்கட்டிடமானது இலங்கையில் அமைந்துள்ள தரக்கட்டுப்பாட்ட…

    • 1 reply
    • 487 views
  22. பிரித்தானிய தூதர்களை சந்தித்தார் சுரேஸ் பிரித்தானிய தூதரகத்தின் பிரதித் தூதுவர் நெஜில் கவனாக் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான இரண்டாவது செயலாளர் சிவோன் லெதம் ஆகியோர் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் துணைத் தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிறேமச்சந்திரன் மற்றும் முன்னாள் கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளனர். இன்று (02) இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது வடக்கு மாகாணத்தில் இருக்கக் கூடிய பாதுகாப்பு நிலவரங்கள், தொடர் கைதுகள், இராணுவ பிரசன்னங்கள் போன்றவை தொடர்பாகவும் தேர்தல் கள நிலவரங்கள் தொடர்பாகவும், தமிழ் மக்களினுடைய அரசியல் நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்திகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது. https://newuthayan.…

  23. மின் கட்டண விவகாரம்; நிவாரணம வழங்க அரசு முடிவு! ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலத்தில் அதிகரித்து காணப்பட்ட மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மனித்துள்ளது. குறித்த நிவாரணத்தை எவ்வாறு பெற்றுக்கொடுப்பது என்பது தொடர்பில் கலந்து ஆலோசிப்பதற்காக இன்று (02) குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலங்களில் மின் கட்டணம் பாரியளவில் அதிகரித்து காணப்பட்டதாக பாவனையாளர்களினால் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதன…

  24. துறைமுக ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளதாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் பொருத்தப்பட்டுள்ள பழுதூக்கி மீதேறி, துறைமுக ஊழியர்கள் மூவர், நேற்று ஆரம்பித்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/செய்திகள்/தறமக-ஊழயரகள-பணபபறககணபப/175-252709

  25. நூற்றுக்கணக்கான தீர்ப்புக்களை வழங்கிய நான் இன்று தமிழ் மக்களின் தீர்ப்புக்கு காத்திருக்கிறேன்: கிளிநொச்சியில் விக்கி உரை July 2, 2020 தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் ஒரு மதிப்பீட்டை செய்து அதன்பின் இம்முறை தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென கோரியுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் வழங்கும் தீர்ப்பு இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுத் தருவதாகவும் தமிழ் மக்களை ஏமாற்றியவர்களுக்கு பாடம் புகட்டுவதாகவும் சென்றமுறை வழங்கிய அதிகாரத்தை அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்து சலுகைகளை அனுபவித்தவர்களுக்கு தண்டனை வழங்குவதாகவும் அமைய வே…

    • 2 replies
    • 385 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.