ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142940 topics in this forum
-
பேஸ்புக்கில் காதல்..! காதலியை நோில் பார்க்க சென்ற இளைஞன் அடித்து முறிக்கப்பட்டு தொலைபேசி, பணம் திருட்டு. யாழ்.கொக்குவிலில் சம்பவம்.. பேஸ்புக் மூலம் காதலித்து வந்தவர் காதலியை நோில் சந்திக்க சென்றபோது வழிமறித்த இளைஞர்கள் குழு குறித்த இளைஞனை சரமாரியாக தாக்கியதுடன், பணம் மற்றும் தொலைபேசி ஆகியவற்றை பறித்து சென்றுள்ளது. இந்த சம்பவம் இன்று மாலை கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியில் இடம்பெற்றிருக்கின்றது. இச் சம்பவத்தில் இளைஞருடை தலையில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும், சிகிச்சைக்காக அவர் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, ஆவரங்கால் பகுதியில் உள்ள குறித்த இளைஞர் பேஸ்புக்கில் ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டு …
-
- 4 replies
- 865 views
-
-
ஆலையடிவேம்பில் 3 இலட்சம் பெற்ற பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு விளக்கமறியல் Leftin May 28, 2020ஆலையடிவேம்பில் 3 இலட்சம் பெற்ற பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு விளக்கமறியல்2020-05-28T23:11:14+00:00 திருக்கோவில் நிருபர் வீதி நிர்மாண ஒப்பந்தகாரரிடமிருந்து 3 இலச்சம் ரூபா லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலாளர் உட்பட இருவரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம் ஹம்ஸா இன்று வியாழக்கிழமை (28) உத்தரவிட்டார். அரசினால் நட…
-
- 1 reply
- 427 views
-
-
ஏட்டிக்கு போட்டியாக இன்று கூடும் ரணில் – சஜித் அணிகள் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடவுள்ள அதேவேளை சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் இன்று கூடவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் வேறு கட்சிகளின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் அவர்களை கட்சியிலிருந்து நீக்கும் வகையில் ஐ.தே.க இன்று தீர்மானம் எடுக்கவுள்ளது. இந்நிலையில் அதற்கு எதிராக சஜித் பிரேமதாச குழுவினர் கூடி முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளனர். -(3) http://www.samakalam.com/செய்திகள்/ஏட்டிக்கு-போட்டியாக-இன்ற/
-
- 3 replies
- 977 views
-
-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் சற்று முன்னர் காலமானார் http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/அமசசர-ஆறமகன-தணடமன-கலமனர/150-250937 இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் காலமானார். வீட்டிலிருந்து வீழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார் 29 மே மாதம் 1964 ஆம் ஆண்டு பிறந்த ஆறுமுகம் பல்வேறு அரசுகளில் முக்கிய பதவிகளை வகித்து வந்தவராவார். http://www.palmyrahtamilnews.com/2020/05/26/ஆறுமுகம்-தொண்டமான்-காலமா/
-
- 42 replies
- 4.5k views
-
-
யாழ் பன்றித்தலைச்சி அம்மன் ஆலய பூசகரை தாக்கி பணம் நகை கொள்ளை! யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் பூசகரைத் தாக்கிய கொள்ளையர்கள் அவருடைய வீட்டிலிருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. கோவிலுக்கு அண்மையில் தனித்துவாழும் பூசகரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இன்று அதிகாலை 03 மணியளவில் பூசகரின் வீட்டினுள் நுழைந்த இருவர் அவரை கொட்டன் தடிகளால் சரமாரியாகத் தாக்கி, அவர் அணிந்திருந்த நகைகள், வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணம் என்பன உள்ளடங்கலாக ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இ…
-
- 0 replies
- 415 views
-
-
தேர்தலை நடத்தவேண்டியது தேர்தல் ஆணைக்குழுவின் கடமை – பிரதமர் கருத்து Rajeevan Arasaratnam May 30, 2020தேர்தலை நடத்தவேண்டியது தேர்தல் ஆணைக்குழுவின் கடமை – பிரதமர் கருத்து2020-05-30T11:19:54+00:00 தேர்தலை நடத்தவேண்டியது பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவிடமும் தேர்தல் ஆணையாளரிடமும் உள்ளது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தேர்தல் இடம்பெறுவது தவிர்க்க முடியாதது என்பதால் தேர்தல் ஆணைக்குழு அதற்காக தயாராகவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பில் நீதிமன்றம் தனது முடிவை அறிவித்ததும் தேர்தல் ஆணைக்கு அவசியமா…
-
- 0 replies
- 284 views
-
-
இந்தியா, சீனா கோஷ்டியிலேயே இல்லை- அணிசேரா கொள்கையே எங்களது பாதை... 'அடேங்கப்பா' மகிந்த ராஜபக்சே இந்தியாவும் சீனாவும் எங்களுக்கு நட்பு நாடுகள்; அணிசேரா கொள்கைதான் எங்களது பாதை என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே திடீர் ஞானோதயம் பெற்றவராக கூறியுள்ளார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலம் முதலே இலங்கை தீவில் இந்தியாவின் செல்வாக்கு சரிவை சந்தித்தது. அவருக்கு முன்னர் பிரதமராக இருந்த இந்திரா காந்தியை கண்டு இலங்கை தேசம் குலைநடுங்கிப் போய் கிடந்தது. இந்திராவின் காலத்தில் அரசியல் தலைவர்கள், வெளியுறவு கொள்கையை தீர்மானித்தனர்; ராஜீவ் காலத்தில் அதிகாரிகளே வெளியுறவு கொள்கையை தீர்மானித்தனர். இதனால்தான் இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கம் சரிவை சந்தித்தது. ராஜபக்சேவின் சீன…
-
- 17 replies
- 1.7k views
-
-
நன்னீர் மீன்களின் விலை அதிகரிப்பு! – மக்கள் விசனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறுகள் மற்றும் குளங்களில் குறைந்தளவு மீன்கள் பிடிக்கப்படுவதனால் விலைக அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆறுகள் மற்றும் குளங்களில் சிறு மீன் முதல் பெரிய மீன்கள் அனைத்தும் விலை என்றும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. குறித்த மீன்கள் யாவும் வீச்சு வலைகள் மற்றும் மீன் கூடுகள் மூலம் பிடிக்கப்படுகின்றது. ஆறுகள் மற்றும் குளங்களில் பிடிக்கப்படும் மீன்களை உரிய இடத்திலேயே மீனவர்கள் விற்பனை செய்கின்றனர், விலை அதிகரிப்பினால் மீன்களை மக்கள் கொள்வனவு செய்வது குறைவாகவே காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் நஷ்டமடைவதையும் காண முடிகின்றது. இந்நிலையில் …
-
- 26 replies
- 2.7k views
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 11 பேரையும் வீடுகளில் தனிமைப்படுத்த கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார கால பகுதியில் மக்களை ஒன்று கூட்டி நிகழ்வுகளை மேற்கொண்டமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட குற்றசாட்டுகளை முன்வைத்து கடந்த 17ஆம் திகதி பொலிஸார் யாழ்.நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர். அதன்போது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் உட்பட பதினொரு பேரை எதிர்வரும் 14 நாட்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி 14 நாட்களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐந்து பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு யாழ்ப்பாண நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல் அன்றைய தினம…
-
- 0 replies
- 356 views
-
-
இலங்கை பிரஜைகளை சில நாடுகள் நடத்திய விதம் குறித்து அனில் ஜசிங்க சீற்றம்- மனிதாபிமானத்தை பின்பற்றவில்லை என சாடல் Rajeevan Arasaratnam May 29, 2020இலங்கை பிரஜைகளை சில நாடுகள் நடத்திய விதம் குறித்து அனில் ஜசிங்க சீற்றம்- மனிதாபிமானத்தை பின்பற்றவில்லை என சாடல்2020-05-29T08:13:32+00:00 இலங்கை வெளிநாடுகளை சேர்ந்த நோயாளிகளை நடத்தியது போன்று இலங்கையர்கள் பணிபுரியும் நாடுகளும் இலங்கையர்களை நடத்தியிருந்தால் நூற்றுக்கணக்கான நோயாளிகளை நாட்டிற்கு கொண்டுவரவேண்டிய பிரச்சினையை இலங்கை எதிர்கொண்டிராது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையை சேர்ந்தவர்கள் பணிபுரியும் நாடுகள் மனிதாபிமானத்துடன் சிந்தித்திருந்தால் நாங்கள் வெளி…
-
- 1 reply
- 424 views
-
-
மாவைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி by : Yuganthini தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கு, தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தினை, மக்களை கூட்டி யாழ்ப்பாணம் மார்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தலைமையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக தமக்கு புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாகவும் அதற்கு தடை விதிக்குமாறு கோரி யாழ்ப்பாண பொலிஸார் யாழ்.நீதவான் நீதிமன்றில் கடந்த 17ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்து தடையுத்தரவை பெற்று இருந்தனர். குறித்த வழக்…
-
- 0 replies
- 455 views
-
-
அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமிழர்களுக்கான தனி நாடு என்ற கருத்துக்கு ஆதரவளிக்க தொண்டமான் மறுத்தார் – ஜனாதிபதி! அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமிழர்களுக்கான தனி நாடு என்ற கருத்துக்கு ஆதரவளிக்க அவர் உறுதியாக மறுத்துவிட்டார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவினையடுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நலிவுற்ற தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானின் அகால மறை…
-
- 4 replies
- 558 views
-
-
இலங்கை இராணுவத்திற்கு எதிரான யுத்தகுற்றச்சாட்டுகளிற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை – ஜனாதிபதி ஊடகப்பிரிவு இலங்கை இராணுவத்திற்கு எதிரான யுத்தகுற்றச்சாட்டுகளிற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரையொன்று குறித்து அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரையில் இலங்கையின் பல படைவீரர்கள் குறிப்பாக சிரேஸ்ட அதிகாரிகள் யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் யுத்தகுற்றங்களில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி ஊடகப்பிரிவு, எந்த ஆயுதமோதலின் போதும் தனிநபரின் மனித உரிமையை பேணுவது மழைகா…
-
- 1 reply
- 468 views
-
-
வட, கிழக்கு இணைப்புக்கு அரசு அடிக்கும் சாவுமணியே ''ஜனாதிபதி செயலணி'' - சிவசக்தி ஆனந்தன் மீண்டும் ராஜபக்ஷ அரசு ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் கணிசமான அளவு சிங்கள பெரும்பான்மை மக்கள் தொகையை மாற்றியமைப்பதற்கு திட்டமிடுகின்றமை புலனாகின்றது. அதன்மூலம் தமிழர்களின் வடக்கு கிழக்கு இணைப்புக் கோரிக்கைக்கு சாவுமணி அடிப்பதற்கே ராஜபக்ஷ அரசு முனைகின்றது. அதன் வெளிப்பாடே கிழக்கு மாகாண தொல்பொருள் பகுதிகளை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி விசேட செயலணி என தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் செயலாளரும் வன்னி மாவட்ட முன்னாள் எம்.பி.யுமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், கிழக்கு மாகாண தொல்பொருள் பகுதிகளை பாதுகாப்பதற்கு ஜனா…
-
- 0 replies
- 466 views
-
-
வேட்டைக்கு விரித்த வலையில் சிக்கிய கருஞ்சிறுத்தை நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷபான தோட்டத்தில் அழிந்து போனதாகக் கருதப்பட்ட அரிய வகை மிருகங்களில் ஒன்றாக கறுஞ்சிறுத்தையொன்று சிக்கியுள்ளது. வேட்டையாட விரிக்கப்பட்டிருந்த வலையிலேயே இந்த கறுஞ்சிறுத்தை இன்று சிக்கியுள்ளது. மஸ்கெலியா பொலிஸாரும் நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளும் இணைந்து இதனை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சுமார் 08 வயதுடைய கறுஞ்சிறுத்தை உயிருடன் மீட்கப்பட்டு அதனை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகள் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். http://thinakkural.lk/article/43535
-
- 3 replies
- 723 views
-
-
மணல் அகழ்வை தடுத்தோர் மீது தாக்குதல்; அறுவர் காயம்! மட்டக்களப்பு – வாகனேரி பகுதியில் சட்டவிரோதமாக மண் ஏற்றுவதற்கு சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று (28) இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட ஆறு பேர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாகனேரி குளம் பகுதியில் ஓட்டமாவடியை சேர்ந்தவர்களினால் தொடர்ச்சியாக சட்ட விரோத மண் அகழ்வது குறித்து அப்பகுதியை சேர்ந்த மக்களினால் பல்வேறு தடவைகள் ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்பட்டு உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அப்பகுதிகளில் தொடர்ச்சியான மண் அகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் நேற்று மாலை அப்பகுதிக்க…
-
- 0 replies
- 395 views
-
-
வெலிசர கடற்படை முகாமில் உள்ள அனைவரும் தனிமைப்படுதல் நிலையங்களிற்கு அனுப்பி வைப்பு! வெலிசர கடற்படை முகாமில் உள்ள அனைவரும் தனிமைப்படுதல் நிலையங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடற்படை பேச்சாளர் இசுரு சூரியபண்டார இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். வெலிசர முகாமிலிருந்த அனைத்து கடற்படையினரும் நாட்டின் பல பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார். வெலிசர முகாமில் சுமார் 4 ஆயிரம் கடற்படையினர் காணப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை கொழும்பின் கபூர் கட்டிடத்தில் தங…
-
- 0 replies
- 310 views
-
-
கப்பலுக்கு பயன்படுத்தும் போயா இரும்பு வங்காலை கடலில் மீட்பு! மன்னார் – வங்காலை கடற்பகுதியில் மீனவர்களினால் கப்பலுக்கு பயன்படுத்தும் “போயா” என அழைக்கப்படும் இரும்பு கண்டுபிடிக்கப்பட்டு இன்று (28) வங்காலை கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. “போயா” என அழைக்கப்படும் குறித்த இரும்பு வங்காலை கடலில் காணப்படுவதை அவதானித்த மீனவர்கள் சக மீனவர்களின் உதவியுடன் படகில் கட்டி இழுத்து வங்காலை கடற்கரைக்கு கொண்டு வந்தனர். https://newuthayan.com/கப்பலுக்கு-பயன்படுத்தும/
-
- 0 replies
- 415 views
-
-
குரும்பசிட்டி கிணறு ஒன்றில் பெருமளவு வெடி பொருட்கள் மீட்பு! யாழ்ப்பாணம் – வலி வடக்கு, குரும்பசிட்டி பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து இன்று (28) பெருமளவு வெடி பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளது. குறித்த கிணற்றினை சுத்தம் செய்யும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்ட போது அதற்குள் பெருமளவு வெடி பொருட்கள் இருப்பது அவதானிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த விசேட அதிரடி படையினரும், பொலிஸாரும் அங்கிருந்த வெடி பொருட்களை மீட்டுள்ளனர். https://newuthayan.com/யாழ்-வலி-வடக்கு-குரும்பச/
-
- 0 replies
- 449 views
-
-
வீதியால் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு விளக்கமறியல் வீதியால் சென்ற பெண்ணுக்கு வார்த்தைகளாலும் சைகைகளாலும் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மடம் வீதியில் நடந்து சென்ற 30 வயதுடைய பெண் ஒருவரை நோக்கி வார்த்தைகளாலும் சைகளாலும் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலும் அவரது மைத்துனர் வழங்கிய வாக்குமூலத்தில் அடிப்படையிலும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நே…
-
- 0 replies
- 363 views
-
-
இறை வழிபாடுகளில் ஈடுபட அனுமதியுங்கள் – ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைப்பு by : Dhackshala நாட்டில் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டு மக்களை ஆன்மீக இறை வழிபாடுகளிலும் ஈடுபட அனுமதியுங்கள் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டிலுள்ள வழிபாட்டிடங்களைத் திறக்க அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்து ஜனாதிபதிக்கு அவர் இன்று (வியாழக்கிழமை) கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவிக்கையில், “கொரோனா வைரஸ் தாக்கத்தினிடையே பொருளாதார வளர்ச்சியின்பால் மக்களை மீட்டெடுக்கும் முயற்சியாக பல தரப்பட்ட சேவ…
-
- 1 reply
- 890 views
-
-
கொரோனா குறித்து போலிப்பிரசாரங்கள் – விசாரணைகளுக்காக விசேட குழு கொரோனா குறித்து சமூக வலைத்தளங்களில் போலிப்பிரசாரங்களை முன்னெடுப்பவர்கள் குறித்த விசாரணைகளுக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் போலிப்பிரசாரங்களை பரப்பிய சுமார் 400 சம்பவங்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான போலித்தகவல்களை பரப்புவது தொடர்பில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் வைத்தியர்கள், பல்கலைக்கழக நிர்வாக உறுப்பினர்கள் மற்றும…
-
- 6 replies
- 742 views
-
-
மட்டக்களப்பில் சிக்கிய இராட்சத திருக்கை மட்டக்களப்பு – பூநொச்சிமுனை மீனவர்களினால் 500 கிலோ எடை கொண்ட பாரிய இராட்சத திருக்கை மீன் ஒன்று நேற்று (27) மாலை பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள பாரிய கடல் கொந்தளிப்பு காரணமாக குறித்த பாரிய திருக்கை மீன் கடல் அலைகளினால் கரைக்கு அடித்து வரப்பட்ட நிலையில் அப்பகுதி மீனவர்கள் இம்மீனைப் பிடித்துள்ளனர். குறித்த மீன் கரைக்கு பெருமளவு மீனவர்களால் இழுத்து வரப்பட்டு வெட்டப்பட்டு சுமார் ஒரு இலட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் குறித்த மீனின் பூ மாத்திரம் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். https://newuthayan.com/மட்டக்களப்பில்-சிக்கிய-இ/
-
- 0 replies
- 545 views
-
-
யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுச் சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறப்பு by : Dhackshala எதிர்வரும் திங்கட்கிழமை முதல் யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுச் சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். தற்போதைய நிலைமைகள் தொடர்பாக யாழில் இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “யாழ். மாவட்டத்தில் தற்பொழுது இயல்பு நிலை படிப்படியாக திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில், பொதுச்சந்தைகளையும் திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என பலராலும் கோரப்பட்டது. இது தொடர்…
-
- 0 replies
- 560 views
-
-
கிளிநொச்சி விபத்தில் தாய் பலி; மகள் படுகாயம்! கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (28) காலை 10.30 மணியளவில் பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது. பூநகரியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது கிளிநொச்சியில் இருந்து யாழ் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தல் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி செய்திநகர் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியம் அன்னலட்சுமி (64-வயது) என்ற வயோதிபப் பெண் உயிரிழந்ததுடன், மோட்டார் சைக்கிளை செலுத்திய உயிரிழந்தவரின் மகள் படுகாயமடைந்த நிலையில், கிள…
-
- 0 replies
- 518 views
-