ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
இணுவில் மற்றும் ஏழாலை பகுதிகளில், சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த 13 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை இணுவிலில் தங்கியிருந்த இந்திய பிரஜை ஒருவர், அண்மையில் நாடு திரும்பிய நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக அங்கு இனங்காணப்பட்டுள்ளார்.இதையடுத்து, இணுவிலில் அவர் தங்கியிருந்த மற்றும் ஏழாவையில் தொடர்பு வைத்திருந்த மூன்று வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு, அங்கு வசிக்கும்13 பேர், சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.இவர்களின் மாதிரிகள் பெறப்பட்டு கொழும்புக்கு அனுப்பப்பட்டு தொற்று உள்ளதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இந்நிலையில் இணுவில் மற்றும் ஏழாலை பகுதிகளில், சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த, 13 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண…
-
- 0 replies
- 234 views
-
-
உயர்கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவித்தலால் குழப்பம்! யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் 1991ம் ஆண்டு முதல் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு – பட்டங்கள் பெற்று நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வெளியேறியுள்ள நிலையில், கணினி விஞ்ஞானத் துறையைப் புதிய துறையாகப் பிரகடனப்படுத்தும் உயர்கல்வி அமைச்சின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலால் குழப்ப நிலை தோன்றியிருக்கிறது. உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் கடந்த பெப்ரவரி மாதம் 19ம் திகதி, வெளியிடப்பட்ட 2163/21ம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் அடிப்படையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் 17வது புதிய துறையாக மொழி பெயர்ப்புக் கற்கைகள் துறையும், விஞ்ஞான பீடத்தில் 7வது கற்கைத் துறையான கடற்றொழில் துறையை உடனடுத்த…
-
- 0 replies
- 442 views
-
-
மீண்டும் சீருடைகளை வழங்க அரசு தீர்மானம்! சீருடை வவுச்சர்களுக்கு பதிலாக அடுத்த ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளை வழங்க அரசு தீர்மானித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சீருடைக்கு பதிலாக வவுச்சர்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. குறித்த நடைமுறையால் மோசடிகளும் சிக்கல்களும் எழுந்திருந்தன. இந்நிலையிலேயே மீண்டும் சீருடைகளை வழங்க அரசு தீர்மானித்துள்ளது. https://newuthayan.com/மீண்டும்-சீருடைகளை-வழங்க/
-
- 0 replies
- 602 views
-
-
பொலிஸாருக்கு எதிராக 14 வயது சிறுவன் முறைப்பாடு! காலி – எல்பிட்டிய பகுதியில் தந்தையை கைது செய்ய 14 வயது சிறுவனை தடுத்து வைத்த சம்பவம் அண்மையில் நடைபெற்றது. எனினும் அதனை மறுத்த பொலிஸார், தந்தையை கண்டுபிடிக்க சிறுவன் தம்மிடம் கோரிக்கை விடுத்து நடித்தான் என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தந்தையை கைது செய்ய தன்னை தாயாருக்கும் கூறாமல் பொலிஸார் அழைத்து சென்றனர் என்று தெரிவித்து பொலிஸாருக்கு எதிராக இன்று (10) குறித்த சிறுவனால் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தனது தாயாருடன் சென்று இந்த முறைப்பாட்டை குறித்த சிறுவன் பதிவு செய்துள்ளான் https://newuthayan.com/பொலிஸாருக்கு-எதிராக-14-வயத/
-
- 0 replies
- 361 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலின் பிரதான சந்தேக நபரான மொஹம்மட் சஹ்ரானின் புத்தளம், வனாத்தவில்லு பயிற்சி முகாமை கண்டுபிடித்த, சி.ஐ.டி.யின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜானக மாரசிங்கவை கொலை செய்ய பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியமை தொடர்பில் தற்போது தகவல்கள் அம்பலமாகியுள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சி.ஐ.டி. கைது செய்துள்ள சந்தேக நபர் ஒருவரின் கையடக்கத் தொலைபேசியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள புகைப்படம் ஒன்றினை ஆராய்ந்த போதும், அது சார்ந்த விசாரணைகளின் போதும் அந்த தகவல் வெளிபப்டுத்தப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே தற்போது தொலைபேசியிலிருந்து மீட்கப்பட்ட வனாத்துவில்லு முகாம் சுற்றிவளைக்கப்பட்ட போது எட…
-
- 0 replies
- 383 views
-
-
இரண்டு தடவைகள் பிற்போடப்பட்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான தேதியை தேர்தல் ஆணைக்குழு இன்று அறிவித்தது. இதன்படி, நாடாளுமன்றத் தேர்தலை ஆகஸ்ட் மாதம் 05ஆம் தேதி நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு இன்று, புதன்கிழமை, வெளியிட்டது. இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி கலைத்திருந்தார். நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியானதை அடுத்து, நாடாளுமன்றத்திற்கான தேர்தலை ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டது. கொரோனா வைரஸ் காரணமாக ரத்ததான தேர்தல் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இட…
-
- 0 replies
- 286 views
-
-
சுதந்திரபுரம் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு முல்லைத்தீவு – சுதந்திரபுரம் பகுதியில், கடந்த 1998ம் ஆண்டு இலங்கை விமான படையாலும், இராணுவத்தினராலும் மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதல் மற்றும் எறிகணை தாக்குதலில் 33 பேர் படுகொலை செய்யப்பட்ட 22ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (10) அனுஷ்டிக்கப்பட்டது. கொரோனாத் தொற்றைக் காரணங் காட்டி பொலிஸார் குறித்த நினைவேந்தல் நிகழ்விற்கு தடை விதித்திருந்தனர். எனினும் தடையையும் மீறி படுகொலை செய்யப்பட்டவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது தாக்குதலில் 4 பிள்ளைகளை இழந்த தந்தை புஸ்பராசா பிரதான ஈகைச் சுடரினை ஏற்றி வைத்தார். …
-
- 0 replies
- 501 views
-
-
யாழ்.இணுவில் பகுதியில் தங்கியிருந்த இந்திய புடவை வியாபாரிக்கு கொரோனா..! வடக்கு சுகாதாரதுறை உசார் நிலையில்.. யாழ்.இணுவில் பகுதியில் தங்கியிருந்த இந்திய புடவை வியாபாரி ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த மாதத்தின் இறுதி நாட்களில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற குறித்த வியாபாரி இம் மாதம் 1ம் திகதி இந்தியாவுக்கு சென்றுள்ளார். இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கான விசேட படகு சேவை மூலமாக அவர் இந்தியா சென்றுள்ளார். அங்கு 2ம் திகதி நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.இணுவில் பகுதியில் 45 நாட்களுக்கும் மேலாக அவர் தங்கியிருந்துள்ளார். குறித்த நபருடைய …
-
- 3 replies
- 444 views
-
-
ராஜித சேனாரத்னவுக்கு பிணை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில், ராஜித சேனாரத்னகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/ரஜத-சனரதனவகக-பண/175-251671
-
- 0 replies
- 445 views
-
-
தேர்தல் ஆணைக்குழுவை சுயாதீனமான அமைப்பாக கருதமுடியாது – விமல் வீரவன்ச by : Benitlas தேர்தல் ஆணைக்குழுவை சுயாதீனமான அமைப்பாக கருதமுடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணைக்குழு இலங்கைக்கு எதிரான நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர், பக்கச்சார்பான தேர்தல் ஆணைக்குழு பதவி விலகவேண்டும் எனவும் கோரியுள்ளார். தேர்தல் ஆணைக்குழுவை சுயாதீனமான அமைப்பாக கருதமுடியாது என தெரிவித்துள்ள அவர், குறிப்பாக பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் நடந்துகொள்ளும் விதத்தினை வைத்து பார்க்கும்போ…
-
- 0 replies
- 305 views
-
-
ஜோர்ஜ் பிலோய்டின் மரணத்திற்கு நீதிகோரி கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது by : Jeyachandran Vithushan கறுப்பினத்தவர்கள் மீதான வன்முறைக்கு எதிராக கொழும்பில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி போராட்டம் நடத்தியதற்காக முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் ஜோர்ஜ் பிலோய்டின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக போராட்டம் நடத்த முன்னிலை சோசலிச கட்சியினரால் தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும் குறித்த போராட்டத்தினை நடத்துவதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவை நேற்று பிறப்பித்திருந்தது. இந்நிலையில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத…
-
- 5 replies
- 636 views
-
-
ஓகஸ்ட் 5 இல் பொதுத் தேர்தல் – அறிவிப்பு வெளியானது! by : Benitlas எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று(புதன்கிழமை) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இதன்போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/ஓகஸ்ட்-5-இல்-பொதுத்-தேர்தல/
-
- 0 replies
- 550 views
-
-
கல்முனையை பொறுத்தவரையில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள்.! முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் வாதிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகளும் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டவர்களும் தான் கல்முனையை பொறுத்தவரை குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர் .ஆனால் கல்முனை தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள் என உலமா கட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர எல்லைப்பிரச்சினை நிலைமை தொடர்பாக கல்முனையில் அமைந்துள்ள உலமா கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை(9) மதியம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் முஸ்லிம் காங…
-
- 0 replies
- 374 views
-
-
அரசியல் சாயங்களை பூசி எமது போராட்டத்தின் குறிக்கோள்களை குழப்ப வேண்டாம் - காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வித அரசியல் தரப்பினரையும் ஆதரிக்கப் போவதில்லை, எனவே தயவு செய்து அரசியல் சாயங்களை பூசி எமது போராட்டத்தின் குறிக்கோள்களை குழப்ப வேண்டாம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனையில் இன்று செவ்வாய்க்கிழமை (9) தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எமது சங்கத்தின் பிரிவுத் தலைவியும் மகளிர் உரிமை செயற்பாட்டாருமான எஸ்.புவனேஸ்வரி திருக்கோவில் விநாயகபுரத்தில…
-
- 2 replies
- 513 views
-
-
ஸ்ரீலங்கா பொலிஸின் அடாவடி! பெண்களுக்கு ஏற்பட்ட அவல நிலை: வெளியானது காணொளி அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட கருப்பினத்தவருக்கு ஆதரவாக கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது. குறித்த போராட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்காததை அடுத்து இதில் கலந்து கொள்ள வந்த அனைவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். அந்த வகையில் ஸ்ரீலங்கா பொலிஸார் பெண் ஒருவரை கைது செய்து ஜீப் வண்டியில் தூக்கிப்போடும் காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண் ஒருவரை கைது செய்யும் போது பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் இருக்க வேண்டும் என்று ஒரு சட்டம் உள்ளது. ஆனால் இங்கு பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த பெண்ணை வழுக்கட்டாயமாக தூக்கி ஜீப் வண்டிக்குள் வீசியுள்ளனர். …
-
- 1 reply
- 726 views
-
-
விடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் அனைத்து தரப்பும் ஒன்றிணைய வேண்டும் – மாவை அழைப்பு விடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் கட்சிகள், அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சிக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையில் வவுனியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “விடுதலைப்புலி போராளிகள் பலர் என்னோடு சந்திக்கவேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்துவருகின்றனர். அந்தவகையில் இன்று புனர்வாழ்வுபெற்ற புலிகள் சார்ந்…
-
- 9 replies
- 1.4k views
-
-
வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு உலங்குவானூர்தியில் மலர் தூவிய விமானப்படையினர் வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்றைய தினம்(திங்கட்கிழமை) ஆரம்பமானது. குறித்த உற்சவம் இன்று அதிகாலை மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு சிறப்புற ஆரம்பமானது. கடந்த 01.06.2020 அன்று உப்பு நீரில் விளக்கெரிப்பதற்காக முல்லைத்தீவு சிலாவத்தை கடற்கரையில் தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கடந்த ஏழு நாட்களாக முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் விளக்ககெரிக்கப்பட்டு வரும் அற்புத காட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று காட்டு விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை அங்கிருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு வற்…
-
- 8 replies
- 1.8k views
-
-
அனலைதீவில் கடற்படையினர் மீது தாக்குதல்: தீவு முழுவதையும் முற்றுகையிட்டுள்ள கடற்படையினர் யாழ். அனலைதீவில் கடற்படையினர் மீது தாக்குதல் நடாத்திய 3 பேர் கொண்ட கும்பலை தேடி தீவு முழுவதையும் கடற்படையினர் தமது முற்றுகைக்குள் கொண்டுவந்துள்ளனர். இத்தாக்குதலில் கடற்படை அதிகாரியும், சிப்பாயும் காயமடைந்துள்ளதுடன் தாக்குதல் நடத்தியவர்கள் தலைமறைவாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், நேற்றைய தினம் இரு குழுக்களுக்கிடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது. இதனை கடற்படையினர் தலையிட்டு தீர்த்து வைத்துள்ளனர். இதனையடுத்து இன்று காலை குறித்த பிரச்சினையுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கடற்படை முகாமிற்கு சென்று நிறை மதுபோதையில் கடற்படையினரை தகாத வார்த்தைக…
-
- 0 replies
- 362 views
-
-
யாழ்ப்பாணம் - குறிகட்டுவான் இறங்குதுறையில் இந்திய பிரஜைகள் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீசா நிபந்தனைகளை மீறிய மற்றும் வீசா அனுமதிப்பத்திரம் இல்லாமை ஆகிய குற்றச்சாட்டுகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடற்படையினர் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இறங்குதுறையில் தங்கியிருந்த சந்தேகத்திற்கிடமான இந்நபர்களிடம் சோதனை மேற்கொண்டனர். அவ் வேளையில், அவர்கள் இந்திய பிரஜைகள் என்று உறுதி செய்யப்பட்டதோடு, அவர்கள் நெடுந்தீவில் முன்னெடுக்கப்படும் கட்டுமானத் தொழிலுக்காக இவ்வாறு குறிகட்டுவான் இறங்குதுறையில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களின் கடவுச்சீட்டுகளை பரிசோதித்தபோது, அவை காலாவதியாகி…
-
- 0 replies
- 580 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தமிழ் மக்களின் நலன்களை விடவும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் நலன்கள்தான் அதி முக்கியமானவை. எனவே இவற்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டு கிழக்குத் தமிழர்கள் அரசியலில் மிக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தலைவர் த.கோபாலகிருஸ்ணன் தெரிவித்தார். சமகால தேர்தல் நிலைமை தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அண்மைக் காலமாகச் சில தமிழ் ஊடகங்கள் கருணா அம்மானைச் சாதாரண அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிரானவராகச் சித்தரித்துப் பொய்யும் புரட்டும் நிறைந்த கட்டுக்கதைகளைச் சோடித்து அவருக்கு எதிரான விசமத்தனமான பிரச்சாரங்களைத் திட்டமிட்டு ம…
-
- 1 reply
- 382 views
-
-
மக்கள் நாயகன் என்று சம்பந்தன் கூறுவது அரசியல் கபடத்தனம் என்கிறார் தவராஜா இலங்கையில் இராணுவ ஆட்சிக்கு வித்திடப்பட்டுள்ளதாக வெளிவரும் கருத்துக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று (09) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ‘எங்கு இராணுவ ஆட்சி என தெரிவிக்கின்றார்கள் என தெரியவில்லை. ஜனாதிபதியின் செயலணியில் இராணுவத்தினர் மட்டுமன்றி, படைத்தரப்பினரும் உள்வாங்கப்பட்டு உள்ளார்கள். வடக்கில் போதைப் பொருள் பாவணை அதிகரித்துக்கொண்டு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் போதைப்பொருள் பாவணைக்க…
-
- 1 reply
- 353 views
-
-
மாங்கேணி விபத்தில் ஒருவர் சாவு! மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் மாங்கேணி பிரதேசத்தில் இன்று (09) இடம்பெற்ற வாகன விபத்தில் காத்தான்குடியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காத்தான்குடி பிரதேசத்தில் இருந்து தோப்பூர் பிரதேசத்திற்கு தொழில் நிமித்தம் இன்று காலை முச்சக்கர வண்டியில் நால்வர் பயணித்துக் கொண்டிருந்த வேலையில் மாங்கேணி பிரதேசத்தில் வாகனம் தடம்புரண்டிதில் இவ் விபத்து இடம்பெற்றிருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக வாகரை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். இதில் முச்சக்கர வண்டியின் சாரதியான காத்தான்குடி சாவியா வீதியை சேர்ந்த முஹம்மது கனீபா முஹம்மது இர்பான் (வயது-31) என்பவர் உயிரிழந்துள்ளதுடன் அ…
-
- 0 replies
- 343 views
-
-
நாடாளுமன்ற தேர்தலில் இருந்து மங்கள விலகல்! ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக வேட்புமனு தாக்கல் செய்துள்ள முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் நாடாளுமன்ற அரசியலில் இருந்து தான் விலக தீர்மானித்துள்ளதாகவும் எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனக்கு வாக்களிப்பதை தவிர்க்குமாறும் அவர் மாத்தறை மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு இந்த முடிவை தான் எடு…
-
- 0 replies
- 301 views
-
-
எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை – அம்பாறை மாவட்ட கா.ஆ.உ.சங்கம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வித அரசியல் தரப்பினரையும் ஆதரிக்கப் போவதில்லை என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினை ஆதரிக்கப் போவதாக அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சிறு பிரிவுத் தலைவியும் மகளிர் உரிமை செயற்பாட்டாளருமான எஸ்.புவனேஸ்வரி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்ததாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று…
-
- 0 replies
- 436 views
-
-
மானுடத்திற்கு பணியாற்ற நமக்கும் ஒரு வாய்ப்பு!! கையெழுத்து இடுங்கள், தலையெழுத்தை மாற்றுங்கள்!! 0:07 / 3:09கோடிக்கணக்கான கையெழுத்தாக இதை மாற்றுவோம் | SEEMANISM | Support Australia MP Hugh McDermott https://www.change.org/p/mp-hugh-mcdermott-we-demand-that-hugh-mcdermott-sustain-his-support-for-the-australian-tamil-community
-
- 22 replies
- 1.7k views
-