Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது பொதுமக்களின் பொறுப்பாகும்…! கொவிட்-19 தொற்று தற்போது இலங்கையில் வெற்றிகரமான முறையில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், அது தொடர்பான சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது பொதுமக்களின் பொறுப்பாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொவிட்-19 காரணமாக 46 வழிகாட்டல் கோவைகள் நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. எனினும், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றும்போது, பொதுமக்கள் இது குறித்து கவனத்திற்கொள்ளாமல் செயற்படுவதை அவதானிக்க முடிவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், வைரஸ் தாக்க நிலையை தவிர்க்கும் பொறுப்பு அனைத்து மக்கள…

  2. மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை ! கொரோனா தொற்றுப்பரவலை கட்டுபடுத்தும் முகமாக பல சுகாதார நடைமுறைகளை சுகாதார அமைச்சினால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்படும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் முகக்கவசம் அணிவது மிக அவசியமாகும் என்று பிரதி பொலிஸ் மா அதியர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சுகாதார விதி முறைகளுக்கு மாறாக செயல்படுவோருக்கு எதிராக சட்ட சடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நாளைமுதல் முகக்கவசம் அணியாது பொது இடங்களில் நடமாடுபவர்களை தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறித்துள…

  3. இராணுவத்தைக் கொண்டு எம்மை என்றென்றும் அடிமைகளாக வாழவைக்க வழி தேடுகின்றீர்களா? – .விக்னேஸ்வரன் கேள்வி பாரம்பரியமாக தமிழ் மக்கள் 3000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் வடக்கு கிழக்கினுள், சிங்களவர்கள் எந்தக் காலத்திலும் பெரும்பான்மையாக வாழாத வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குள் சிங்கள மக்கள் குடிகொள்ளவும் வணிகத்தலங்களை ஏற்படுத்தவும் இராணுவத்தினரைத் தொடர்ந்து வைத்திருக்கவும் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களிடம் அனுமதிபெற வேண்டும்.அப்படி இல்லை என்றால் இந்த நாட்டின் ஜனநாயகம் சிங்களவரால், சிங்களவருக்கு, சிங்களவர் நடத்தும் அரசாங்கம் என்று பொருள் பட்டுவிடும் என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் சில கேள்விகள் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை…

    • 1 reply
    • 320 views
  4. பதவி விலகினார் பேராசிரியர் ஜயந்த தனபால! அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் நிலையில் இருந்து பேராசிரியர் ஜயந்த தனபால பதவிவிலகியுள்ளார். இது தொடர்பான கடிதத்தை அவர் பேரவைக்கு அனுப்பியுள்ளார். தமது முடிவுக்கு சுகவீனமே காரணம் என்று அவர் இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அவரின் முடிவை அரசியலமைப்பு பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது. இதனையடுத்து இந்த வெற்றிடத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒருவரை நியமிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேவேளை அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் படி நாடாளுமன்ற அதற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். எனவே பெரும்பாலும் இந்த வெற்றிடத்திற்கான புதிய நியமனம் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு பின்னர் நிரப்பப்பட…

  5. குருபரனுக்கு எதிராக ஆஜராக சட்டமா அதிபர் திணைக்களம் மறுப்பு! யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறையின் முன்னாள் தலைவரும், சட்டத்தரணியுமான குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவதற்கு தடை விதித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக அவர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகளின் போது, அரச நிறுவனங்களான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் – குருபரனுக்கு எதிராக வாதாடுவதற்குச் சட்டத்தரணிகளை நியமிக்க முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் மறுப்புத் தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்களுக்கு எதிரான வழக்குகளின் போது, அரச நிறுவனங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசன…

  6. நயினாதீவுக்கான பாஸ் நடைமுறை இரத்து! மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டினை தொடர்ந்து நீக்கப்படாமல் இருந்த நயினாதீவிற்கு செல்வதற்காக புதிதாக கொண்டுவரப்பட்ட பாஸ் நடைமுறை தற்போது நீக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, ‘இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, நேற்று (26) யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருடன் இவ்விடயம் தொடர்பில் தொலைபேசியில் வினவியது. இதன்போது எமக்கு பதிலளித்த பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மால், அவ்வாறான எந்த பாஸ் நடைமுறை மற்றும் மட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என ஆணைக்குழுவுக்கு தெரிவித்ததுடன் உடனடியாகவே நயினாதீவு மற்றும் குறிகாட்டுவான் உப.பொலிஸ் …

  7. ஷாபி விவகாரம்; பரிசோதனையில் பாதிப்பில்லை என கண்டறியப்பட்டது குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியராகவிருந்த சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி மீது, கருத்தடை விவகார முறைப்பாட்டை முன்வைத்த பெண் ஒருவருக்கு குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட எச்.எஸ்.ஜி பரிசோதனைகளில் அவரது பெலோபியன் குழாயில் எந்த தடைகளும் தடங்கல்களும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று (25) இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றில் இடம்பெற்ற போது இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது. சிங்கள தாய்மார்களுக்கு சட்ட விரோத கருத்தடைசெய்தார் என வைத்தியர் மொஹம்மட் ஷாபி மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, குருநாகல் நீதிமன்றின் …

  8. சிறுவன் விழுங்கிய ஊசி 25 நிமிட போராட்டத்தின் பின்னர் அகற்றப்பட்டது வவுனியாவிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 4 இல் கல்வி கற்றுவரும் 8 வயது சிறுவன் ஒருவனினால் தவறுதலாக விழுங்கப்பட்ட 3 அங்குல நீளமான ஊசி 25 நிமிட சிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை (20) மாலை குறித்த சிறுவன் ஊசியை விழுங்கிய நிலையில் மறுநாள் (21) வவுனியா வைத்திய சாலையில் அனுமதித்து கதிரியக்கப்படம் பிடிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. குறித்த ஊசி வாய்ப்பகுதி களச்சுவரில் குற்றிச் சென்று நெஞ்சடைக்கூட்டு பகுதிகளிலுள்ள இதயம் நுரையீரல் துளைக்க வாய்ப்புள்ள நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதே தினம் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அம்…

  9. குடியிருப்பு குளப்பகுதியை சீர்கேடான நிலைக்கு தள்ளும் குடிமகன்கள் வவுனியா – குடியிருப்பு குளப்பகுதியில் நின்று மது அருந்துபவர்கள் மதுப்போத்தல்களை அப்பகுதியில் வீசுவதால் சுகாதார சீர்கேடான நிலமை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் சிறுவர் பூங்கா மற்றும் சித்தி விநாயகர் ஆலயம் என்பன அமைந்துள்ளன. இதனால் மாலை வேளைகளில் அப்பகுதியில் அதிகளவான மக்கள் மற்றும் சிறுவர்கள் வந்து செல்லும் இடம் என்று தெரிவிக்கப்படுகிறது . இந்நிலையில் மாலை வேளைகளில் அங்கு நின்று மது அருந்துபவர்கள் மதுபோத்தல்களை குளத்தினுள் வீசுவதுடன், ஆலய சூழலுக்கு அண்மையில் வீசி வருவதும், போத்தல்களை வீதிகளில் போட்டு உடைக்கும் நிலையும் நீடித்து வருகின்றது. இத…

  10. மடு திருவிழாவில் 1000 பக்தர்களே கலந்து கொள்ள முடியும்! மன்னார் மடுமாதாவின் ஆடிமாத திருவிழாவில் ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள முடியும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். மன்னார் மறைமாவட்ட ஆயரின் தலைமையில், வருடந்தோறும் அரச அனுசரனையுடன் நடைபெறும் பெருவிழா ஆயத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று மாவட்ட அரச அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் நடைபெற்றது. கலந்துரையாடலை தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், மன்னார் மறைமாவட்ட யாத்திரிகர் ஸ்தலமான மருதமடு மாதாவின் ஆடிமாத திருவிழா திருப்பலி ஆடி மாதம் இரண்டாம் திகதி காலை 6.15 மணிக்கு நடைபெறும். த…

  11. கடந்த காலத்தில் இராணுவத்தை கொன்றதற்காக தற்போது நடவடிக்கை எடுப்பது என்பது பிழையான ஒன்று – அனந்தி சசிதரன் மக்களை பாதுகாக்கவே புலிகள் ஆயுதங்களை ஏந்தினார்கள் பாதுகாப்பு படைக்கு எதிராக யுத்தத்தை நடத்தினார்கள். கடந்த காலத்தில் இராணுவத்தை கொன்றதற்காக தற்போது நடவடிக்கை எடுப்பது என்பது பிழையான ஒன்று எனவும் கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோருவது தமிழ் இனம் தன்னை பாதுகாப்பதற்காக நடத்திய ஆயுதப்போராட்டத்தை பிழையாக காட்டுவதாகும் என அனந்தி சசிதரன் தெரிவித்தார்.கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது என்பது புனர்வாழ்வு பெற்ற, பெறாத அல்லது ஆயுதப்போராட்டத்துக்கு ஆதரவளித்த எல்லோருடைய மனங்களையும் கலங்கடிக்கும் நிலையை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். கருணா கடந்த காலங்க…

    • 14 replies
    • 1.3k views
  12. யாழ் ஆயரை சந்தித்த த.தே.ம முன்னணியினர் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையில் இன்று (26) காலை ஆயர் இல்லத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் பல விடயங்களை பேசிய முன்னணியினர், ஆயரின் ஆசியையும் பெற்றனர். இச்சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளிட்ட குழுவினர் பங்குபற்றியிருந்தனர். https://newuthayan.com/யாழ்-ஆயரை-சந்தித்த-த-தே-ம-ம/

    • 4 replies
    • 1k views
  13. "ஈழத்தில் நடந்தது தமிழினப் படுகொலை தான் என நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை" இப்படிக் கூறப்படும் சூழலில், அதை மறுதலித்து "நடந்தது இனப்படுகொலை" தான் என்று நிரூபிப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செய்தது என்ன? என்ற கேள்வியை அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிடமும் அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களிடமும் முன்வைத்தோம். ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் முன்னெடுத்த விசாரணைகளுக்கு இலங்கைத்தீவில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் சாட்சியங்களை திரட்டி அதனை சத்தியக் கடதாசிகளாக மாற்றி அனுப்பி வைத்திருக்கின்றோம். அந்த செயல்திட்டத்தை செய்த ஒரேயொரு கட்சி நாங்கள் மட்டும் தான். தமிழ் மக்கள் சார்பில் பேசுகின்ற உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தரப்பு…

    • 4 replies
    • 861 views
  14. எந்தக் காலத்திலும் கண்டிராத ஒரு இராணுவ ஆட்சி ஏற்பட போகிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் அவர்கள் இன்று வடமராட்சியில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் உரையாற்றினார்.

    • 3 replies
    • 990 views
  15. In இலங்கை June 25, 2020 2:03 pm GMT 0 Comments 1489 by : Vithushagan தேர்தல் பிரசாரத்திற்காக நான் தெரிவித்த கருத்துக்களை பூதாகரமாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை என கருணா அம்மான் எனப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். அண்மையில் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகிய அவர் 7 மணிநேர நீண்ட வாக்குமூலம் அளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “நான் நடந்த உண்மையைக் கூறியிருக்கிறேன். எதுவித தவறான கண்ணோட்டத்திலும் எதுவும் நான் சொல்லவில்லை. …

    • 3 replies
    • 716 views
  16. மாற்றுத் தலைமைகளைத் தோற்கடிக்க வேண்டும் என்ற பரப்புரையின் பின்னணியில் பாரிய சதி ; அருந்தவபாலன் June 26, 2020 “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் உட்பட அதன் தலைவர்கள் மாற்று அணியினரைத் தோற்கடிக்க வேண்டும் என்று செய்துவரும் பரப்புரையின் பின்னால் எம்மக்களுக்கெதிரான பாரிய சதித்திட்டம் ஒன்று பின்னிக் காணப்படுகின்றது” எனக் கூறியிருக்கின்றார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளரும், அதன் யாழ். மாவட்ட வேட்பாளருமான க.அருந்தவபாலன். கிளிநொச்சி விவேகானந்த நகர் மக்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார். இங்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் தெரிவித்தாவது: “இவர்களின் இவ்வாறான கருத்துக்கள மூலம் தாம் வெற்றி பெற்று தமது பாராளுமன்ற…

  17. புகைப்படம் எடுத்த யாழ் ஊடகவியலாளர் மீது பொலிஸ் வழக்கு! யாழ்ப்பாணம் – வடமராட்சி, மாலுசந்திப் பகுதியில் நடந்த தமிழரசு கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் செய்தி கேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு எதிராக பொலிஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மற்றும் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களிடமும் பொலிஸார் கடுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதை புகைப்படம் எடுத்தமை தொடர்பில் தமது கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்று குற்றச்சாட்டியே ஊடவியலாளர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவ்விடயம் குறித்து சம்மந்தப்பட்ட ஊடகவியலாளர் கருத்து தெரிவிக்கையில், ‘மாலுசந்தி பிள்ளையார் ஆலய மண்டபத்தில் தமிழரசு கட்சி சார்…

  18. மட்டக்களப்பு வரலாறுகள் ஆவணப்படுத்தப்படுகின்றன எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன், ரீ.எல்.ஜவ்பர்கான், வ.சக்தி மட்டக்களப்பு மாவட்டத்தில், எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதி, மரபுரிமை ஆவணங்களை டிஜிட்டல் நவீன தொழில்நுட்ப முறையில் ஆவணப்படுத்தும் நடவடிக்கையை, மட்டக்களப்பு மாவட்டச் செயலக நூலகம் பௌண்டேஷன் மட்டக்களப்பு கிளையின் அனுசரணையில் மேற்கொண்டு வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி, மட்டக்களப்பு மாவட்ட கலாசாரக் கூடத்தில், கொலனித்துவ ஆட்சியாளர் காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட மரபுரிமை ஆவணங்களான வரலாற்றுச் சாதனங்கள், ஏடுகள், பண்டைய தொன்மை ஆவணங்கள், மென் பிரதியில் பதிவேற்றம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்விதம் ஆவணம் செய்யப்பட…

    • 3 replies
    • 840 views
  19. நாங்கள் ஒருபோதும் மண்டியிடப்போவதில்லை- சம்பிக்க by : Yuganthini எங்களை அரசியல் ரீதியாக அநாதையாக மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் இந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்காக நாங்கள் ஒருபோதும் மண்டியிடப்போவதில்லை என முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல் பிரசாரமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த பிரசார கூட்டத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எங்களை அரசியல் ரீதியாக அநாதையாக மாற்றுவதற்காக ஊடகங்களில் பிரச்சாரப் போரைத் தொடங்கியுள்ளனர். மேலும் எங்களை எந்ததொரு நடவடிக்கைகளாலும் தடுக்க முடியாது என்பதை ஜனாதிபதி க…

    • 0 replies
    • 724 views
  20. வெலிக்கடை சிறை வளாகத்தை பரபரப்பாக்கிய மர்மப் பொதி! கொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்துக்குள் இன்று (26) வீசப்பட்ட பொதியை குண்டு என்ற சந்தேகத்தில் பரிசோதித்த போது அதிலிருந்து, ஹெரோயின், ஐஸ் போதைப் பொருளும், கைபேசி ஒன்றும், அதற்கான சார்ச்சரும் மீட்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை சுவர் வழியாக சிறை வளாகத்துக்குள் வீசப்பட்ட குறித்த பொதியை வெடி குண்டு என்ற சந்தேகத்தில் குண்டு செயலிழப்பு பிரிவை வரவழைத்து ஆராயப்பட்டது. இதன்போதே குறித்த பொதியில் மேற்கூறப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/வெலிக்கடை-சிறை-வளாகத்தை/

  21. வெள்ளை வான் சாரதிகளுக்கு பிடியாணை! நீதிமன்றில் ஆஜராகத் தவறிய வெள்ளை வான் மனிதக் கடத்தல் சாரதிகள் என அறியப்படும் இருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் கடந்த ஆட்சியில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் நடத்தப்பட்ட வெள்ளை வான் மனிதக் கடத்தல் தொடர்பான ஊடக சந்திப்பில் தம்மை வெள்ளை வான் சாரதிகளாக அறிமுகப்படுத்தியதுடன், கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியான பின்னர் தாம் நாடகமாடியதாக தெரிவித்திருந்தனர். குறித்த வழக்கிலேயே இவர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/வெள்ளை-வான்-சாரதிகளுக்கு/

    • 1 reply
    • 671 views
  22. ஐக்கிய தேசியக்கட்சியின் குழந்தையே ஐக்கிய மக்கள் சக்தி – இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் by : Vithushagan கறைபடியாத கரங்கள் கொண்ட அரசியல் தலைவரே சஜித் பிரேமதாச. அவருக்கு எதிராக எவரும் விரல்நீட்டி குற்றஞ்சாட்டமுடியாது என முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார். நுவரெலியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை கொன்றுவிட்டே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உருவானது. ஆனால், எமது ஐக்கிய மக்கள் சக்தி அவ்வாறு அல்ல.அக்கட்சியானது ஐக்கிய தேசியக…

    • 1 reply
    • 428 views
  23. இந்த ஆட்சியை எதிர்க்க முதுகெலும்புள்ள எம்பிகள் தேவை – சந்திரசேகர் “இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் ஆட்சியே தற்போது நடைபெற்று வருகின்றது. நாளைய ஆட்சி இதைவிட மிகக் கொடூரமானதாக இருக்கும். அராஜகத்தில் பயணிக்கும் அரசாங்கத்தை எதிர்க்க வலுவான எதிர்க்கட்சி தேவை” இவ்வாறு யாழ் ஊடக அமையத்தில் இன்று (26) இடம்பெற்ற சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட வேட்பாளர் இ.சந்திரசேகர் தெரிவித்தார். மேலும், ‘பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தீர்மானிக்கும் சக்தியாக உருவாகும். அதற்கு யாழ்ப்பாண மக்களும் எமக்கு உறுதுணையாக இருப்பார்கள் என நம்புகின்றோம். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எமது வேட்பாளர்கள் யாழ் மக்களுக்காக குரல் கொடுக்கக்கூடியவர்கள…

  24. 30 மாடுகள் மீட்பு! 8 பேர் கைது! வவுனியா புளியங்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட நொச்சிகுளம் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டு செல்லபட்ட 30 மாடுகளை பொலிசார் இன்று (26) மீட்டுள்ளனர். நொச்சிகுளம் பகுதியில் இன்று காலை 5 மணியளவில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் அவ்வீதியால் வருகைதந்த நான்கு வாகனங்களை வழி மறித்து சோதனை செய்தனர். இதன்போது குறித்த வாகனங்களில் 30 மாடுகள் அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டு செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. வாகனத்தில் பயணித்த அனுராதபுரத்தை சேர்ந்த 8 பேரை கைது செய்த பொலிசார் வாகனங்களையும், மாடுகளையும் புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். கைப்பற்றப்பட்ட மாடுகள் மருதோடை பகுதியிலிருந்து அனுராதப…

  25. கொரோனாவல் பாதிப்படைந்த சமையல்காரர்களுக்கு பயிற்சி நாட்டில் ஏற்பட்ட கொரோனா (கொவிட்-19) நெருக்கடியின் காரணமாக தொழில்ரீதியாக பாதிக்கப்பட்ட சமையல்காரர்களுக்கு அவர்களது தொழிலை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும் உல்லாச பிரயாணிகளை கவரும் வகையில் உணவுகளை தயாரிப்பது தொடர்பான பயிற்சி நெறி திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான், கும்புறுமூலையிலுள்ள கிழக்கு மாகாணத்திற்கான நிலையான அபிவிருத்தி மற்றும் கண்ணியமான அதிகாரமளிப்பதற்கான எம்.ஜே.எஃப் மையத்தில் செஃப் கில்ட் லங்காவுடன் ஒன்றிணைந்து ஐந்து நாட்கள் கொண்ட பயிற்சி நெறியின் இறுதி நாள் சான்றிதழ் மற்றும் சின்னம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இலங்கையை உள்ளடக்கிய வளர்ச்சிக்கான த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.