Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (நா.தனுஜா) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கைப் பிரஜை கண்டறியப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, இதன் பாரதூரத்தன்மையைப் புரிந்துகொண்டு கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வலியுறுத்தினார். சீனா, அமெரிக்கா, இத்தாலி போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளே கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்குத் திணறிக்கொண்டிருக்கும் நிலையில், அது அபிவிருத்தியடைந்துவரும் எமது நாட்டிற்குள் பரவுமானால், அதனைக் கட்டுப்படுத்துவது மிகவும் சவாலான விடயமாக அமையும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். கொழும்பிலுள்…

    • 4 replies
    • 703 views
  2. (ஆர்.விதுஷா) அதிகரித்திருக்கும் பொருளாதார பிரச்சினையினால் நாட்டுமக்கள் மத்தியில் தோன்றியிருக்கும் அதிருப்தியை கருத்தில் கொண்டும் சஜித் பிரேமதாச தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பலம் பொருந்திய எதிர்த்தரப்பு கூட்டணிக்கு அஞ்சியும் பொதுத்தேர்தலை பிற்போடுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதனை அறிய கூடியதாகவிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். தேர்தலை காலம் கடத்திவிட்டு இராணுவரீதியான ஆட்சிமுறைமையை முன்னெடுத்து விட்டு பின்னராக தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளும் இடம்பெறுதவதாக அரசாங்க உயர் மட்ட தகவல்களின் ஊடாக அறிந்து கொள்க்கூடியதாகவிருப்பதாகவும் அவர்  மேலும் குறிப்பிட்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச…

    • 2 replies
    • 304 views
  3. எரிபொருளை பதுக்கினால் விற்பனை நிலையங்களின் அனுமதிப் பத்திரம் இரத்தாகும் எரிபொருளை பதுக்கி வைக்க முயற்சித்தால் எரிபொருள் விற்பனைக்கான அனுமதிப் பத்திரத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சிலர் செயற்கையாக எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கு செயற்பட்டு வரவதாகவும், தற்பொழுது சில எரிபொருள் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காணப்படுவதாகவும் மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் நாட்டில் எரிபொருளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை. பெருந்தொகை எரிபொருள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இருப்பதாகவும் மின் சக…

    • 0 replies
    • 262 views
  4. கொரோனா வைரஸ் தொற்று குறித்து ரணில் வௌியிட்டுள்ள அறிக்கை! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தற்போதைய நிலையில் உலகளாவிய தொற்றுநோயாக மாறியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகள் இதற்கு முகங்கொடுப்பதற்காக கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் தற்போதைய நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார். உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளும் இந்த வைரஸுக்கு முகங்கொடுக்க தமது சுகாதார வசதி போதுமானதாக இல்லை என அறிவித்துள்ளதாக அவர் குற…

    • 0 replies
    • 245 views
  5. Gavitha இலங்கையிலுள்ள மதரஸக்களையும் காதி நிதிமன்றங்களையும் இல்லாமல் ஒழிப்பதற்கு, தற்போதுள்ள இந்த அரசாங்கம், பொதுத் தேர்தலுக்கு முன்னர் பதிலளிக்கவேண்டும் என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வண.அத்துரலிய ரத்தண தேரர் தெரிவித்தார். கொழும்பில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டின் தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே, தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவுக்கு, தேர்தல் காலத்தில் ஆதரவு வழங்கியதாகவும் நாட்டிலுள்ள மதரஸாக்களை இல்லாமல் செய்வதாகவும் காதி நீதிமன்றங்களை இல்லாம் செய்வதாகவும் அப்போது வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், ப…

  6. எரிபொருள் விலையை குறைக்க முடியாது – அரசாங்கம்! உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை சடுதியாக குறைவடைந்துள்ள போதிலும், நாட்டில் எரிபொருள் விலையை குறைக்க முடியாது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘கடந்த இரண்டு மாதகாலமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவியது. அப்போது பத்து ரூபாவாலேனும் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியிருந்தது. ஆனால் நாம் அந்த சுமையை மக்களுக்கு கொடுக்கவில்லை. இப்போது எரிபொருள் விலை குறைவடைந்துள்ளமை உண்மையே. அதுவும் சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா ஆகிய நாட…

  7. இன்றைய தினம் இத்தாலியிலிருந்து வருகை தந்த ஒருவரின் மனைவி தலைச்சுற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக வந்திருந்தார். எனினும் வைத்தியசாலையிலிருந்தவர்கள் கொரோனாவாக இருக்கலாம் என்ற அச்சத்தில் பீதி அடைந்த போதிலும் மருத்துவ பரிசோதனையின் போது அவருக்கு அவ்வாறான எந்த ஒரு சான்றும் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு உரியச் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார். எனினும் வடக்கில் கொரோனா தொற்றுவதற்குரிய சாத்தியங்கள் மிகக் குறைவு எனவே மக்கள் பீதியடையத் தேவையில்லை கொரோனா தொற்று உள்ளவர் ஒருவருடன் நெருக்கமாகப் பழகும் ஒருவருக்கே ஒரு தொற்று ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. எனவே வடக்கினை பொறுத்த வரைக்க…

    • 8 replies
    • 899 views
  8. கொரோனா வைரஸ் காரணமாக பொதுத்தேர்தலை ஒத்தி வைக்கும் நோக்கம் இல்லை – பந்துல! கொரோனா வைரஸ் காரணமாக பொதுத் தேர்தலை ஒத்தி வைக்கும் நோக்கம் இல்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இது தொடர்பாக முன்னெடுக்கப்படும் வதந்திகளை முற்றாக நிராகரிக்கின்றோம். மேலும், தேர்தலில் அமோக வெற்றி உறுதி என்பதை தெளிவாக காணக்கூடிய நிலையில் பொது தேர்தலை ஏன் ஒத்திவைக்க வேண்டும். அத்தோடு, தேர்தல் நடத்துவது தொடர்பாக அனைத்து தீர்மானங்களையும் மேற்கொள்வது சுயாதீன தோர்தல் ஆணைக்குழு மாத்திரமே.…

  9. யாழில் வாள் கொண்டு சென்ற பூசகர் மீது வழக்கு யாழ்ப்பாணம் – குப்பிளான் பகுதியில் ஆலய தேவைக்காக வாள் கொண்டு சென்ற ஆலய பூசகரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் விடுவித்துள்ளனர். இந்நிலையில் அவர் மீது வழக்க தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. குப்பிளான் பகுதியில் உள்ள ஆலயத்தில் பூஜையை முடித்துக்கொண்டு பூசகர் அங்கிருந்து, உரும்பிராய் பகுதியில் உள்ள ஆலயத்திற்கு பூஜைக்கு செல்லும் போது, அந்த ஆலய தேவைக்காக குப்பிளான் ஆலயத்தில் இருந்து வாள் ஒன்றினை கொண்டு சென்றுள்ளார். அவ்வேளை வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வாளுடன் சென்ற பூசகரை கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துசென்று விசார…

    • 18 replies
    • 1.6k views
  10. சுமந்திரன் தமிழருக்காக வாதாடி பெற்றுக்கொடுத்த சாதனைகள் இலங்கையில் ஜனநாயகத்தை காப்பிற்றியதாக சொல்லும் சுமந்திரன் தமிழர்களுக்காக வாதாடி பெற்றுக்கொடுத்த வழக்குகளை வரிசைப்படுத்தும் பிரபல சட்டத்தரணி காண்டீபன்

  11. வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு by கி.தவசீலன் in செய்திகள் சிறிலங்காவுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த வருகை நுழைவிசைவு (on-arrival visa) வசதி, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் செயலகம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை இடைநிறுத்துமாறு சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச நேற்றுக்காலை, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவும் ஆபத்தை ஏற்பட்டுள்ள நிலையிலேயே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த இந்த சலுகை மற…

    • 6 replies
    • 929 views
  12. வடமாகாணத்தில் உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை -வடக்கு ஆளுநர் வடமாகாணத்தில் உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என்றும், மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் வட மாகாண ஆளுநர் பிஎஸ்எம். சாள்ஸ் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், இது வரையிலும் இவற்றுக்கான எந்தவித தட்டுப்பாடும் வடமாகாணத்தில் இல்லை என்பதை தெரிவிப்பதோடு மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் அவசியம் ஏற்படின் கொழும்பிலிருந்து விரைவாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் குறித்த முன் ஆயத்த நடவடிக்கைகளை அடுத்து, வடமாகாணத்தின் பல மாவட்டங்களில் உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கான தட்டுப்பாடுகள் ஏற்பட்…

  13. கொரோனாவினை கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு ஒத்துழைப்பினை வழங்கத் தயார் – சீனா! கொரோனா வைரஸினை கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு சகல ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான முன்னாள் தூதுவர் சென் சுயுஹான் இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது பதவி காலத்தில் இலங்கையின் 9 மாவட்டங்களுக்கு சென்றதாகவும், இலங்கையின் இயற்கை அழகு தொடர்பாக தாம் பெரும் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அனைத்து இலங்கையர்களிடமும் தாம் விடைபெறுவது தொடர்பாக தம்மால் அறிவிக்க முடியாமை குறித்து கவலை அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் சீன மக்கள் தொடர்பாக…

  14. கொரோனாவில் இருந்து பாதுகாக்க இஞ்சி – ஆயுர்வேத மருந்தக கூட்டுத்தாபனத்தின் திட்டம் கொரோனா வைரஸில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க சுதேசிய ஆயுர்வேத முறையொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஆயுர்வேத மருந்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதற்கு தேவையான இஞ்சியை சரியான வகையில் உலர்த்துவதற்கான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு தயாராகி வருவதாகவும் அந்த கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸுக்கு ஆயர்வேத சுதேசிய மருந்தக கூட்டுத்தாபனம் ரத்த கல்க்கய, புத்தராய கல்க்கய, நவரத்ன கல்க்கய, சீதாராமகுலி ஆகியவற்றை பெருமளவில் சந்தைக்கு விநியோகித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் உற்பத்தியாளர்களிடம் இருந்து உலர்த்தப்படாத இஞ்சியை கொள்வனவு செய்வதற்கு …

  15. வடமாகாணத்தில் தனியார் கல்வி நிலையங்களுக்கு பூட்டு March 12, 2020 வடமாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிலையகளுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை விடுமுறையளிக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி பீ எஸ் எம் சார்ள்ஸ் சிறப்புப் பணிப்புரை விடுத்துள்ளார். இதுதொடர்பில் ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் ஏற்படகூடிய ஆபதில் இருந்து எமது மாணவ சமூகத்தை பாதுகாக்கும் நோக்கில் இன்று முதல் ஏப்ரல் 20ஆம் திகதிவரை இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நிலையில் மாணவர்களுடைய நலனை மேலும் உறுதிபடுத்தும் பொருட்டு…

    • 1 reply
    • 520 views
  16. அதிகாரத்தின் கடும் பணிப்புரை: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவு by : Litharsan அதிகார உயர்மட்டத்தின் கடுமையான அவசரப் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா உயிர்க் கொல்லி வைரஸ் தொற்றுநோய் சிகிச்சைப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைத்தியசாலையின் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவை அண்டியதாக கொரோனா உயிர்க் கொல்லி வைரஸ் தொற்று நோய் சிகிச்சைப் பிரிவு இன்று (வியாழக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேவேளை, அந்த சிகிச்சைப் பிரிவில் 24 மணி நேரமும் கடமையாற்றக்கூடிய வகையில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்…

    • 1 reply
    • 634 views
  17. இராணுவ அச்சுறுத்தலுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்தனை மட்டக்களப்பைச் சேர்ந்த இந்து மத குருக்களும் தனவந்தர் ஒருவரும் இணைந்து இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நேற்ற ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் பிதிர்க்கடன் தீர்க்கும் நிகழ்வும் இடம்பெற்றது.இந்தநிகழ்வு இடம்பெறும் இடத்துக்கு வருகைதந்த ஆயுதம் தரித்த இராணுவத்தினர் நிகழ்வில் கலந்துகொண்ட மக்களின் வாகன இலக்கங்களைப் பதிவுசெய்ததோடு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரிடமும் விசாரணை மேற்கொண்டனர். முள்ளிவாய்க்கால் நினைவுகூரலின் பதினோராவது ஆண்டு நினைவுக் காலம் ஆரம்பித்திருக்கின்ற நிலையில் வரும் மே மாதம் முள்ளிவாய்க்காலில் நினைவுகூரல் இடம்பெறவுள்ளது…

    • 12 replies
    • 1.2k views
  18. பிரதான செய்திகள் யாழில் முதல் வேட்புமனு தாக்கல்… யார் தெரியுமா? Ramanan பத்தரமுல்ல சீல ரத்தின தேரர் யாழில் வேட்புமனு தாக்கல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு முதலாவது வேட்பு மனுவினை ஜனசெத பெரமுன சார்பில் பத்தரமுல்ல சீல ரத்தின தேரர் தாக்கல் செய்தார். எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் ஆரம்பமானது. அந்தவகையில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்கான முதலாவது வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது. இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை வேட்…

    • 2 replies
    • 882 views
  19. வடக்கு மாகாணத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்படவில்லை. தட்டுப்பாடு செயற்கையாக உருவாக்கப்பட்டால் கொழும்பிலிருந்து போதிய பொருள்களை வடக்குக்கு அனுப்பிவைக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் அச்சநிலை ஏற்பட்ட நிலையில் அரசு, பாடசாலைகளுக்கு வரும் 5 வாரங்களுக்கு மேல் விடுமுறை வழங்கியதால் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை வியாபார நிலையங்களில் மக்கள் கூட்டமாகக் காணப்படுகின்றனர். இந்த நிலமை தெற்கிலும் ஏற்பட்டுள்ளது. பால்மா வகைகள், பிஸ்கட்டுக்…

    • 0 replies
    • 281 views
  20. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் பதற்றமான நிலையில் சில பாடசாலைகளிலும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து நாளைமுதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் நாட்டு மக்கள் சற்று பதற்றமான நிலையிலேயே உள்ளதை அவதானிக்க முடிகின்றது. இன்று மாலை வேளைகளில் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்கள், பல்பொருள் அங்காடிகளில் மக்கள் கூட்டம் நிரம்பியுள்ளதைக் காணக்கூடியதாக இருந்தது. குறித்த கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை பாரிய அளவில் கொள்வனவு செய்து வரு…

    • 0 replies
    • 289 views
  21. கொரோனா தொற்றுக்குள்ளாகி அங்கொடை தேசிய தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெறும் நபருடன் வசித்த மற்றுமொருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து, இலங்கையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார். 44 வயதான குறித்த நபர் தற்போது அங்கொடை தேசிய தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார். இந்த நிலையில், சமூக வலைத்தளங்கள், அலைபேசிகள் ஊடாக இலங்கையின் கொரோனா நிலை தொடர்பில் உறுதிப்படுத்தப்படாத பல தகவல்கள் பகிரப்படுகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்ட…

    • 2 replies
    • 330 views
  22. (ஆர்.யசி) சீன பிரஜைகளால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் மிகக் குறைவாகவே உள்ளதால் அவர்களுக்கான பயணத்தடை விதிக்கப்படவில்லை என சுகாதார அமைச்சின் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். எனினும் தற்போதுள்ள அச்சுறுத்தலுக்கு அமைய இத்தாலி, ஈரான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் பயணிகளையே தடைசெய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் கூறினார். நாங்கள் எந்தவொரு நடவடிக்கையை முன்னெடுக்கும் போதும் விஞ்ஞான ரீதியிலான பின்னணியை அடிப்படையாக கொண்டே தீர்மானங்களை எடுக்கின்றோம். கொரோனா வைரஸ் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை நாங்கள் ஆரம்பத்திலேயே முன்னெடுத்துள…

    • 0 replies
    • 242 views
  23. மட்டக்களப்பு மாவட்டம் முற்றாக முடங்கியது கொரோனா வைரஸ் உலகை ஆக்கிரமித்து வரும் நிலையில், அந்நிய நாட்டு பிரஜைகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அழைத்துவரப்படுவதை எதிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.கொரொனா தொற்றிலிருந்து எமது மாவட்டத்தினை பாதுகாப்போம் என்னும் தலைப்பில் நேற்று தமிழ் உணர்வாளர் அமைப்பு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இவ்வாறு ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ள தமிழ் உணர்வாளர் அமைப்பு, “இத்தாலி, ஈரான், தென்கொரிய நாட்டில் இருந்து வரும் பயணிகள் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு அழைத்துவரப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு, அவர்களில் கொரோனா அறிகுறிகள் தென்படுவோரை மட்டக்களப்பு…

    • 2 replies
    • 558 views
  24. பாறுக் ஷிஹான், சகா தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் அம்பாறை மாவட்டத்துக்கு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படுமென, இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்ட நிலைப்பாடுகள் குறித்து ஆராயும் கூட்டமொன்று, காரைதீவு பிரதேசத்தில் நேற்று (11) நடைபெற்றது. இதன்பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் கருத்துத் தெரிவிக்கையில், “அம்பாறை மாவட்ட வேட்பாளர் தொடர்பான இறுதித் தீர்மானம், தமிழரசுக் கட்சியின் பங்காளிக் கட்சிகளான டெலோ இயக்கம், பளொட் இயக்கம் ஆகியவற்றில் வேட்பாளர் தெரிவின் இறுதித் தீர்மானம், திருமலை மாவட்டத்தில் நடைபெறும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மத்திய குழு கூட்டத்தி…

    • 0 replies
    • 212 views
  25. கொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு சிறிலங்காவின் அனைத்துப் பாடசாலைகளையும் நாளையுடன் மூடுமாறு சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. நாளை தொடக்கம் முதலாம் தவணை விடுமுறைக்காக பாடசாலைகள் மூடப்படுவதாகவும், ஏப்ரல் 20ஆம் நாள் இரண்டாம் தவணை ஆரம்பிக்கப்படும் என்றும், கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. http://www.puthinappalakai.net/2020/03/12/news/41922

    • 1 reply
    • 327 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.