ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
நாங்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல! [Tuesday 2020-01-21 08:00] “இந்திய உள்ளிட்ட, சர்வதேச வல்லரசுகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தெரிவித்துள்ளார். அத்துடன் தங்களது உரிமைசார்ந்த கோரிக்கைகளையே தாம் முன்வைப்பதாகவும் அவர் கூறினார். சர்வதேச அரசியல் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வல்லரசு நாடுகளுகளை, தாங்கள் எதிரிகளாக பார்க்கவில்லை என்றும் அவர்களுக்கு எதிரான கொள்கைகளை தாங்கள் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் கூறினார். இந்…
-
- 9 replies
- 1.8k views
-
-
அமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அனுமதியோம்: சஜித் அமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கெஸ்பேவயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்ட போது அவர் இதனைக் கூறியுள்ளார். பெப்ரவரி 04ஆம் திகதி சுதந்திர தினத்தன்று கட்சி, எதிர்க்கட்சி பேதங்களின்றி, ஆளும் கட்சியுடன் இணைந்து, மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை சிறுசிறு துண்டுகளாக கிழிப்பதற்கு தாங்கள் தயார் எனவும் சஜித் பிரேதமதாச சுட்டிக்காட்டியுள்ளார். பொதுத்தேர்தலில் தான் பிரதமராக தெரிவானால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்ற தயார் எ…
-
- 0 replies
- 693 views
-
-
தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து துண்டுபிரசுரங்கள் விநியோகம் by : Dhackshala மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு துண்டுப்பிரசுரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. குறித்த துண்டு பிரசுரங்கள் மட்டக்களப்பு பேருந்து நிலையத்திற்கு மேல் உள்ள மட்டு. ஊடக அமையத்தின் அலுவலகத்திற்குள் போடப்பட்டுள்ளது. மட்டு. ஊடக அமையத்திற்குள் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு ஊடக சந்திப்பிற்காக ஊடகவியலாளர்கள் சென்று அலுவலகத்தை திறந்தபோது குறித்த துண்டு பிரசுரங்கள் போடப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர். குறித்த துண்டு பிரசுரத்தில், “எச்சரிக்கை! எச்சரிக்கை! இவர்கள்தான் வெளிநாட்டுப் புல…
-
- 0 replies
- 467 views
-
-
விடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடி முல்லைத்தீவில் அகழ்வு by : Dhackshala முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் பொலிஸாரால் அகழ்வு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது. எனினும் இதன்போது எந்த பொருட்களும் மீட்கப்படவில்லை. புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்துக்குப் பின்புறமாக இந்த அகழ்வுப் பணிகள் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. இறுதி யுத்தத்தின்போது, தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தைத் தேடியே இவ்வாறு அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக பொலிஸார், விசேட அதிரடிப்படை…
-
- 0 replies
- 248 views
-
-
யாழ்.பல்கலை மாணவி கொலை விவகாரம்: கணவருக்கு விளக்கமறியல் by : Litharsan யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான அவரது கணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதன்படி அவரை எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல் இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டார். குறித்த வழக்கில் கொல்லப்பட்ட மாணவியின் தாயாரும் சகோதரியும் மன்றில் முன்னிலையாகி இறப்பு விசாரணையில் சாட்சியமளித்தனர். தனது மகளை 2017ஆம் ஆண்டு பதிவுத் திருமணம் செய்ததுடன் அவருடன் வாழ்ந்து வந்ததாகவும் அண்மைக்காலமாக இருவருக்கும் முரண்பாடுகள் இருந்தன என்…
-
- 0 replies
- 425 views
-
-
ஷானி அபேசேகரவிடம் 6 மணிநேரம் வாக்குமூலம் by : Dhackshala பணி நீக்கம் செய்யப்பட்ட குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர குற்றப்புலனாய்வு பிரிவில் 6 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் வெளியேறியுள்ளார். ஷானி அபேசேகர குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலை குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுப் பிரிவில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார். அதற்கமைய அவர் இன்று (வியாழக்கிழமை) காலை அங்கு முன்னிலையாகியுள்ளாரென தெரிவிக்கப்படுகிறது. ரஞ்சன் ராமநாயக்க மாதிவெலயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து கடந்த நான்காம் திகதி கைது செய்யப்பட்ட…
-
- 0 replies
- 246 views
-
-
வடக்கு கிழக்கு கா.ஆ.உறவுகள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு மகஜர் by : Litharsan வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். மன்னாரில் இன்று (வியாழக்கிழமை) காலை வடக்கு மாகாண காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்று கூடி கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிசேலா பஸ்லெற் யெறியாவுக்கு இன்று மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். குறித்த மகஜரில், “மேற்படி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் கடந்த 10 ஆண்டுகளாக போராடியும் வருகின்றனர். காணாமல் ஆ…
-
- 0 replies
- 269 views
-
-
போலி ஆவணங்கள் மூலம் தலைமன்னாரில் காணி ஒன்று விற்கப்பட்ட விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசார்ட் பதியுதீன் எம் பியின் சகோதரர் றிப்கான் பதியுதீனை பெப்ரவரி 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார். போலி ஆவணங்கள் மூலம் தலைமன்னாரில் காணி ஒன்று விற்கப்பட்ட விவகாரம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. கொழும்பு நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் அவர் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. https://www.madawalaenews.com/2020/01/6_23.html
-
- 1 reply
- 376 views
-
-
இன்று முக்கிய குரல்பதிவுகளை வெளியிடுவேன் – நாடாளுமன்றில் அதிரடியாக அறிவித்தார் ரஞ்சன்! by : Jeyachandran Vithushan நாடாளுமன்றில் இன்று மாலை 6 மணிக்கு முன்னதாக தன்னிடம் இருக்கும் பல குரல் பதிவுகளை சமர்ப்பிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை தெரிவித்தார். அரச தலைவர்கள், நீதிபதிகள், அமைச்சர்கள், அமைச்சர்களின் குடும்ப உறவுகள் என அனைவரின் குரல் பதிவுகளும் உள்ளன என ரஞ்சன் ராமநாயக்க நேற்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். அத்தோடு அவற்றினை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பதாகவும் குரல் பதிவுகள் அ…
-
- 6 replies
- 883 views
-
-
ரெலோவில் இருந்து விலகுகிறார் விந்தன் – கட்சியின் முடிவுக்கு எதிர்ப்பு! தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பொறுப்புக்களிலிருந்தும் அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும் விலகுவதாக அக்கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் அறிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு ரெலோ சார்பில் கட்சியின் தேசிய அமைப்பாளரும், தலைமைக்குழு உறுப்பினருமான சுரேந்திரன் குருசுவாமியை வெற்றி வேட்பாளராக களமிறக்குவதாக அக்கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இதனையடுத்தே விந்தன் கனகரட்ணம் தமிழீழ விடுதலை…
-
- 5 replies
- 669 views
-
-
அரசியல் பாதிப்புக்குள்ளான வழக்குகளை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு – வர்த்தமானி வெளியானது! அரச ஊழியர்களை அரசியல் ரீதியாக துன்புறுத்திய அனைத்து வழக்குகளையும் விசாரணை செய்ய மூன்று பேர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை ஆணைக்குழுவில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன, மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தயா சந்திரசிறி ஜெயதிலக மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திர பெர்னாண்டோ ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இந்த விசாரணை ஆணைக்குழுவுக்கு 2015 ஜனவரி 08 முதல் 2019 நவம்பர் 16ஆம் திகதிகளுக்கிடையிலான காலக் கட்டத்தில் அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூற…
-
- 1 reply
- 382 views
-
-
Colombo (News 1st) எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ். மாவட்ட வேட்பாளராக சுரேந்திரன் குருசுவாமியை களமிறக்குவதற்கு TELO எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் தீர்மானித்துள்ளது. TELO சார்பில் கட்சியின் தேசிய அமைப்பாளரும் தலைமைக்குழு உறுப்பினருமான சுரேன் என்றழைக்கப்படுகின்ற சுரேந்திரன் குருசுவாமியை களமிறக்குவதற்கு கட்சி தீர்மானித்ததாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று அறிவித்துள்ளார். யாழ். தேர்தல் மாவட்டத்தில் ரெலோவிற்காக ஒதுக்கப்பட்ட ஒற்றை ஆசனத்தை நீண்ட கலந்துரையாடலின் பின்னர் அவருக்கு வழங்குவதற்குத் தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீண்ட அரசியல் வரலாற்றைக் கொண்டவர…
-
- 5 replies
- 594 views
-
-
அரசாங்கம் 19 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாது செய்ய முயற்சிப்பது ஏன்? – லக்ஷமன் கேள்வி by : Jeyachandran Vithushan 19 ஆவது திருத்தச்சட்டத்தை எந்த நோக்கத்திற்காக அரசாங்கம் இல்லாது செய்ய முற்படுகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வியெழுப்பியுள்ளார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர் 18 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முழுமையான அதிகாரம் கொண்ட ஒருவராகத்தான் இருந்தார். இதன் ஊடாக, அவர் நீதிமன்றங்களுக்குக் கூட அழுத்தம் பி…
-
- 2 replies
- 467 views
-
-
ரணில் மேலதிக வரப்பிரசாதங்களை கோரியது உண்மையே – பிரதமர் மஹிந்த ! ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தனக்கு மேலதிக வசதிகளை செய்துதரும்படி கோரியது உண்மையே என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பில் பேசிய அவர், முன்னாள் பிரதமருக்கு வழங்கப்படும் வசதிகளை விட மேலதிகமாக சிறப்பு பாதுகாப்பு, வீடு மற்றும் பிற வசதிகளை ரணில் விக்ரமசிங்க கோரியதாக கூறினார். கடந்த காலத்தில் பிரதமராக இருந்தபோது வகித்த சலுகைகளைளை விட குறிப்பாக, சகல வசதிகளையும் கொண்ட கட்டடத் தொகுதி, உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என பல வசதிகளை கோரியதாக வெளியான தகவல்கள் குறி…
-
- 5 replies
- 641 views
-
-
மிருசுவிலில் காயங்களுடன் சடலம்! [Wednesday 2020-01-22 15:00] யாழ்ப்பாணம் – மிருசுவில், ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில், இன்று காலை, காயங்களுடன் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. வீதியில் சடலமொன்று காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள், குறித்த விடயம் தொடா்பாக உடனடியாக கொடிகாமம் பொலிஸாருக்கு கூறியுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், சடலத்தை மீட்டனர். சடலத்தின் தலை மற்றும் உடலில் காயங்கள் உள்…
-
- 2 replies
- 824 views
-
-
முன்னாள் இராணுவத்தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 பேரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு எழுத்தாளர் Bella Dalima Colombo (News 1st) முன்னாள் இராணுவத்தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 பேரையும் நாளை மறுதினம் (24) மன்றில் ஆஜராகுமாறு கொழும்பு விசேட மூவரடங்கிய மேல்நீதிமன்றம் அறிவித்தல் பிறப்பித்துள்ளது. 11 இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு தொடர்பிலேயே இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரினால் தொடரப்பட்டிருந்த வழக்கை விசாரித்த ஷம்பா ஜானகி ராஜரத்ன, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க உள்ளிட்ட விசேட மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம்…
-
- 1 reply
- 974 views
-
-
பாட்டலியின் சாரதி இரண்டாவது நாளாக கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் எழுத்தாளர் Bella Dalima Colombo (News 1st) முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான துசித்த திலும்குமார என்பவர் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக இன்று இரண்டாவது நாளாக கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 2016 ஆம் ஆண்டில் இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. நகர்த்தல் பத்திரமொன்றின் ஊடாக வழக்கு விசாரணைக்கு அழைப்பு விடுத்து மன்றில் ஆஜராகி…
-
- 0 replies
- 371 views
-
-
மத்திய வங்கி மோசடிகள் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை குறித்து இரண்டு நாள் விவாதம்! by : Jeyachandran Vithushan மத்திய வங்கி பிணைமுறி ஊழல் மோசடிகள் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றில் இரண்டு நாள் விவாதம் இடம்பெறவுள்ளது. அதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம்பெறும் முதல் நாடாளுமன்ற அமர்வின்போது இந்த விவாதம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பான தடயவியல் கணக்கறிக்கையை சபையில் சமர்பிப்பதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று நடவடிக்கை எடுத்திருந்தார். அந்தவகையில் இன்று (புதன்கிழமை) தடயவியல் கணக்காய்வு அறிக்கையின் பிரதியை தான் பெற்றுக்கொண்டதாக ஐக்கிய தேச…
-
- 0 replies
- 471 views
-
-
.adsBanner{ width: 100px; height:600px; position: fixed; z-index: 0; top:100px; display:none; } .ab-left { left:0;} .ab-right { right:0;} .counter{ position: absolute; top: 25px; right: 25px; font-size: 50px; z-index: 200; text-decoration: none; } கழுகினால் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்! டிக்கோயாவில் சம்பவம் ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா மேற்பிரிவு தோட்டப் பகுதியில் தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்ட…
-
- 0 replies
- 862 views
-
-
கல்வி மறுசீரமைப்பு ஆணைக்குழுவில் சிறுபான்மை சமூகம் சார்பாக எவரும் நியமிக்கப்படவில்லை புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் நல்ல நடவடிக்கைகளுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க தயார் ஆனால் எமது சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நடவடிக்கைகளுக்கு நான் எனது எதிர்ப்பினை தெரிவிப்பதில் பின் நிற்க மாட்டேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் முன்னாள் அமைச்சரும் தற்போதைய நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின் ஆரம்ப பிரிவு பாடசாலையில் சுமார் 15 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா ஒன்றை திறந்து வைத…
-
- 0 replies
- 274 views
-
-
பிரதமர் தெரிவித்துள்ளதை வரவேற்கின்றேன் குரல் பதிவுகள் தொடர்பாக விசாரிக்க ஆணைக்குழுவொன்றை அமைக்க வேண்டுமென்று பிரதமர் தெரிவித்துள்ளதை வரவேற்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, சிறைச்சாலைகள் பஸ்ஸில் நேற்று (21) பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவர் பாராளுமன்றத்தில் விசேட உரையை ஆற்றுவதற்கு முயற்சித்தார். அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சின் ஒழுங்குவிதிகள் முன்மொழிகள் மீதான விவாதத்தில் உரையாற்றினார். குரல் பதிவுகள் தொடர்பாக விசாரிக்க ஆணைக்குழுவொன்றை அமைக்க வேண்டுமென பிரதமர் கூறுகின்றார். இதனை வரவேற்…
-
- 0 replies
- 479 views
-
-
சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு ஷானி அபேசேகரவிற்கு அழைப்பு by : Jeyachandran Vithushan குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை சி.ஐ.டியில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடனான தொலைபேசி உரையாடல்கள் அண்மையில் வெளியானதை அடுத்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். குறித்த தொலைபேசி உரையாடல்கள் குறித்து விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் நாளை (வியாழக்கிழமை) குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/சி-ஐ-டி-யில்-ஆஜராகுமாறு-ஷா/
-
- 0 replies
- 304 views
-
-
இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதால் சிங்கள மொழிக்குத்தான் முதலிடம் வழங்க முடியும், எந்த காரணம் கொண்டும் தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்க முடியாது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அதையும் மீறித் தமிழுக்கு முதலிடம் வழங்க சிங்களவர்கள் முட்டாள்கள் அல்லர் எனவும் குறிப்பிட்டுள்ளார். மன்னாரில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச் சபையின் பனந்தும்பு உற்பத்தி நிலையத்தின் மும்மொழி பெயர் பலகையைத் திறந்த அமைச்சர் விமல் வீரவன்ச, அந்தப் பலகையில் முதலில் இருந்த தமிழ்மொழி எழுத்துக்களை மாற்றி முதலில் சிங்களத்தில் எழுதப்பட வேண்டும் என பனை அபிவிருத்தி சபை தலைவருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். இதனையடுத்து தமிழில் முதலில் எழுதப்பட்ட மும்மொழிப் பெயர்ப்பலகை மாற்ற…
-
- 0 replies
- 261 views
-
-
ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் இராஜினாமா – பிரதி சபாநாயகர் அறிவிப்பு by : Jeyachandran Vithushan ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜயம்பதி விக்ரமரத்ன தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ளார் என, பிரதி சபாநாயகர் நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) அறிவித்தார். குறித்த கடிதத்தினை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சபையில் சமர்ப்பித்தார். ஜனவரி 20, 2020 முதல் அமுலாகும் வகையில் தனது இராஜினாமா செய்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் தனக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு செயலாளர் நாயகம் உள்ளிட்ட நாடாளுமன்ற பணியாளர்களுக்கு …
-
- 0 replies
- 392 views
-
-
தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு முதலிடம்! தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை உலகில் முதல் இடத்தில் உள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். 10 அளவுகோல்களின் அடிப்படையில் இலங்கைக்கு முதலிடம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார அதிகாரிகள் முன்னெடுத்த வேலைத்திட்டங்களுக்கு அமைய இந்த நிலையை அடைய முடிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://athavannews.com/தாய்ப்பால்-ஊட்டுவதை-ஊக்க/
-
- 1 reply
- 481 views
-