ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
யாழ்.ஊடக அமையத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான விருதுவழகலும், ஒன்றுகூடல் நிகழ்வும்… December 31, 2019 யாழ்.ஊடக அமையத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான விருதுவழகலும், வருடத்தின் ஒன்றுகூடல் நிகழ்வும் நேற்று யூ.எஸ் விருந்தினர் விடுதியில் இடமபெற்றது. கொல்லப்படட்ட ஊடகவியலாளர்களுக்கான மௌன அஞ்சலியுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வின் பொது சுடரினை ஜயாத்துரை நடேசனின் துனைவியார் ஏற்றிவைத்தார். இவ்விருது வழங்கும் நிகழ்வில் அமரர் மயில்வாகனம் நிமலராஜன் விருதினை, பொன்னையா மாணிக்கவாசகத்திற்கும், அமரர் தராசி டி.சிவராம் விருதினை, நடேசப்பிள்ளை வித்தியாதரனுக்கும், அமரர் ஜயாத்துறை நடேசன் விருதினை விஸ்வராஜா காந்தகுமாருக்கும், வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் …
-
- 0 replies
- 277 views
-
-
முப்படைகளின் பதில் பிரதானியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவத் தளபதி பதவிக்கு மேலதிகமாகவே முப்படைகளின் பதில் பிரதானியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியாக செயற்பட்ட அட்மிரல் ரவீந்திர குணவர்தன இன்றுடன் ஓய்வுபெறுகின்றதை அடுத்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/72252
-
- 1 reply
- 777 views
-
-
யாழில் பொலிஸ் புலனாய்வாளர் எனக் கூறி கப்பம் வாங்கிய சம்பவம் – ஒருவர் கைது! பொலிஸ் புலனாய்வாளர் எனக் கூறி கப்பம் வாங்கிய குற்றச்சாட்டில் அளவெட்டியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்புடைய மற்றொருவர் யாழ்ப்பாணம் சிறையில் இருப்பதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவிக்கு வந்த பின்னர் முன்னாள் போராளிகள், போர்க் காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்தவர்கள் மற்றும் குற்றச்செயல்களில் குற்றம் சாட்டப்பட்டோரின் குடும்பங்களுக்கு புலனாய்வாளர்கள் எனக் கூறுவோரால் அலைபேசி ஊடாக கப்பம் கோரப்பட்டது. பொலிஸ் புலனாய்வாளர்கள் பேசுகின்றோம் எனத் தெரிவிக்கும் அவர்கள், குடும்பத்தில் ஒருவரின் பெயர…
-
- 1 reply
- 632 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேக நபர்களில் இருவருக்கு பிணை உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 63 பேர் இன்று (31) மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களுள் 61 பேரை தொடர்ந்து எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. றிஸ்வான் உத்தரவிட்டார். சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய இருவருக்கு இன்று மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டதுடன் ஏலவே ஒருவரது வழக்கு மேலதிக விசாரணைக்காக கொழும்பிற்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க…
-
- 0 replies
- 659 views
-
-
காங்கேசன்துறை துறைமுக விரிவாக்கம் தொடர்பில் அமைச்சர் ஜோன்ஸ்டன் அதிகாரிகளுக்கு ஆலோசனை காங்கேசன்துறை துறைமுக விரிவாக்கம் மற்றும் புதிய அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் வீதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இது தொடர்பில் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : அதன் அடிப்படையில் குறித்த அபிவிருத்தி செயற்பாட்டின் பொருட்டான செயன்முறை திட்டம் தீட்டல் செயற்பாட்டை மேற்கொள்வதற்காக துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளினால் ஆலோசனை சேவை நிறுவனத்திடம் கையளிப்பதற்கு தேவ…
-
- 0 replies
- 287 views
-
-
சுவிஸ் தூதரக அதிகாரி பிணையில் விடுதலை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுவிஸர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது http://www.dailyceylon.com/194548/
-
- 8 replies
- 999 views
-
-
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அதிகரிக்கப்படும் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் இம்முறையும் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய 2016ஆம் ஆண்டின் மூன்றாவது சுற்று நிருபத்திற்கு அமைய அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ளது. இதன் மூலம் 2015ஆம் ஆண்டைவிட அரசு ஊழியர்களின் சம்பளம் 107 சதவீதம் அதிகரிக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டின் மூன்றாவது சுற்று நிருபத்திற்கு அமைய ஐந்தாவது தடவையாக அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் பத்தாயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது. http://athavannews.com/அரச-ஊழியர்களுக்கு-மகிழ்-4/
-
- 1 reply
- 551 views
-
-
விபத்தில் 4 விமானப்படை வீரர்கள் பலி இன்று (31) அதிகாலை 03.55 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நான்கு விமானப்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். வரகாபொல பகுதியில் ஓட்டோ மற்றும் கொள்கலன் வாகனம் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஓட்டோ சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கொள்கலன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் வரகாபொல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/வபததல-4-வமனபபட-வரரகள-பல/150-243240
-
- 0 replies
- 346 views
-
-
பாடப் புத்தகங்களில் பாலியல் கல்வி தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ´ஹதே அபே பொத´ என்ற சர்ச்சைக்குரிய பாலியல் கல்வி தொடர்பான விடயத்தை ஆராய்ந்து பதில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கல்வி அமைச்சுடனும் சுகாதார அமைச்சுடனும் கலந்துரையாடி எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிலேயே அனில் ஜசிங்க இதனை தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன தலையிட்டு 7ஆம் தர மாணவர்களுக்கு விநியோகித்த பாட புத்தகங்களில் பிள்ளைகள…
-
- 1 reply
- 357 views
-
-
கைதின்போது அரசியல்வாதிகள் வைத்தியசாலையில் தஞ்சம் கோரும் கலாசாரம் மாற்றமடைய வேண்டும் - ரோஹித Published by J Anojan on 2019-12-30 15:06:50 (இராஜதுரை ஹஷான்) கைதுசெய்யப்படும் சூழ்நிலை தோற்றம் பெறும் போது அரசியல்வாதிகள் வைத்தியசாலையில் நோயாளியை போன்று அனுமதிக்கப்பட்டு கைது செய்யப்படுவதில் இருந்து தப்பித்துக் கொள்ளும் முறையற்ற கலாச்சாரத்தை இல்லாதொழிக்க வேண்டும் என சக்திவலு இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வெள்ளைவேன் சாரதிகள் என்று குறிப்பிட்டுக் கொண்டவர்கள் தண்டனை சட்டக்…
-
- 7 replies
- 508 views
-
-
கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டு இருக்கின்றது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் அந்த புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்பும் இருக்கும் என நான் எதிர்பார்கின்றேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நுவரெலியாவில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இன்று 30.12.2019 இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த கருத்தை வெளியிட்டார். அவர் அங்கு தொடர்ந்து பேசியதாவது, இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு மலையகத்தில் போட்டியிட வேண்டுமா…
-
- 5 replies
- 651 views
-
-
விரல் நுனியில் குடிமக்களின் அனைத்து தரவுகளும் – கோத்தாவின் புதிய திட்டம் சிறிலங்காவின் அனைத்துக் குடிமக்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் அடங்கிய தேசிய தரவு மையம் (National data centre) ஒன்றை உருவாக்குவதற்கு சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளார். அதிபர் செயலகத்தில் இன்று தகவல் மற்றும் ஊடக தொழில்நுட்ப அமைச்சின் அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பின் போதே சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “குடிமக்கள் தொடர்பான, தேவையான அனைத்து தரவுகளையும் திரட்டுவது செலவுமிக்கதாக இருந்தாலும், நேரத்தை மிச்சப்படுத்தும். பல்வேறு திணைக்களங்களில் சேமிக்கப்படுவதற்குப் பதிலாக, ஒரே இடத்தில் அவற்றை சேகரித்து வைத்திர…
-
- 2 replies
- 868 views
-
-
வட மாகாண ஆளுநராக, சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ், இன்று(30) பதவிப் பிரமாணம் செய்துள்ளார். கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். முன்னதாக, வட மாகாண ஆளுநராக திருமதி சார்ள்ஸை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தாக தகவல் வெளியாகியிருந்தது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கடந்த 18 மாலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எட்டப்பட்டிருந்தது. இந்த தீர்மானத்தின்படி திருமதி சார்ள்ஸ் விரைவில் வட மாகாண ஆளுநராக பதவி ஏற்கவுள்ளதாக கூறப்பட்டது. எனினும், எதிர்வரும் 02ஆம் திக…
-
- 4 replies
- 939 views
-
-
புதிய அரசாங்கமும் நாடக கலையை ஆரம்பித்துள்ளது! ஜே.வி.பி Ovihh எதிர்வரும் பொதுத்தேர்தலில் மக்கள் மீண்டும் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போது சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் ஊவா மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாட்டின் அரசியலில் கடந்த 71 ஆண்டுகளாக நடந்தவை தற்போது மாற்றமின்றி நடந்து வருகிறது. மாறி, மாறி அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்தாலும் அனைத்தும் ஒரே அரசாங்கமே. திருடர்களால் திருடர்களை பிடிக்க முடியாது. திருடர்களை பிடிக்க போவதாக கூறுவது தேர்தல் கோஷம் மாத்திரமே. தேர…
-
- 0 replies
- 313 views
-
-
பண்டாரவளை, ஊவஹைலண்டஸ் தோட்டம், எல்லவெல பிரிவு தோட்ட மக்கள் மீது கிராமத்தினை சேர்ந்த இனவாதிகளினால் நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஸ்தலத்திற்கு இன்று முற்பகல் நேரடி விஜயம் செய்தார். இதன்போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நேற்று இரவு ஊவா ஹைலண்டஸ் தோட்டத்தினைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை தாக்கியது மட்டுமல்லாது அடாவடித்தனமாக தோட்டத்திற்குள் உள்நுழைந்து தகாத இனவாதமிக்க வார்த்தைகளை பிரயோகித்து தோட்டத் தொழிலாளர்களையும் பெண்களையும் தாக்கியதுடன் ஏனையவர்களை தாக்க முற்பட்ட சம்பவம் தொடர்பாக மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகி மிகவும் மனம் வருந்திய நிலையில் என்…
-
- 2 replies
- 901 views
-
-
காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் இன்று போராட்டம் வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, கிளிநொச்சியில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று காலை இந்த கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.போராட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்காக வடக்கின் ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் காலை 7 மணி முதல் பேருந்து சேவை ஆரம்பமாகியது. போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் அந்தந்த பேருந்து சேவைக்குரிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.இந்த போராட்டத்தில் வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளிலிர…
-
- 3 replies
- 782 views
-
-
குத்துச்சண்டை போட்டியில் முதலிடம் பெற்ற யுவதி சடலமாக கண்டெடுப்பு வவுனியா கொக்குவெளிப்பகுதியில் கிணற்றிலிருந்து யுவதியொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வீட்டிற்கு வந்த அவரது உறவினர்கள் நீண்ட நேரமாகியும் யுவதியை காணாதநிலையில் அவரை தேடியுள்ளனர். இதனையடுத்து சந்தேகம் கொண்ட அவர்கள் இளைஞர்களின் உதவியுடன் வீட்டின் கிணற்றினுள் தேடுதல் நடத்தியுள்ளனர். இதன்போதே குறித்த யுவதி நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் வவுனியா கொக்குவெளி பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் சுலக்சனபிரியா (வயது -19) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வவ…
-
- 1 reply
- 890 views
-
-
நாட்டைக் காட்டிகொடுக்கும் எண்ணம் தனக்கு ஒருபோதும் வந்ததில்லையெனத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ, சிங்கள பௌத்தர்களுக்கு தான் ஒருபோதும் துரோகம் செய்யவில்லை’ என்றார். அநுராதபுரத்தில் நேற்று (29)நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்துரைத்த அவர், தான் எதிர்க்கட்சியில் இருந்தபோது, இலங்கை மீது, சர்வதேச அழுத்தங்கள் பெருமளவில் காணப்பட்டன. அந்தத் தருணங்களில் தான் எதிர்ப்பை வெளிப்படுத்தியதாகத் தெரிவித்தார். இவ்வாறிருக்க, 69இலட்சம் பேர், பொருள்களின் விலை குறையும் என்ற நம்பிக்கையில் புதிய ஆட்சியை உருவாக்கியயுள்ளனர் எனத் தெரிவித்த அவர், அரச அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு 4 வருடங்க…
-
- 0 replies
- 391 views
-
-
பிரபாகரன்கூட தேசிய கீதத்தை பிரிக்க நினைக்கவில்லை- ஆனந்த தேரர் நாட்டை துண்டாக பிரிக்க முயற்சித்த பிரபாகரனின் கூட எமது தேசிய கீதத்தை மாற்றுமாறு கோரிக்கை விடுக்கவில்லை என நாராஹென்பிடிய அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். அபயராம விகாரையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மாத்திரம் பாட வேண்டும் என எடுத்த தீர்மானம் வரவேற்கத்தக்கதோர் விடயமாகும். நாட்டை இரண்டாகப் பிரிக்க முயற்சித்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் காலத்தில் கூட எமது தேசிய கீதத்தை மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்படவில்லை. …
-
- 2 replies
- 777 views
-
-
பல்வேறு மொழிகள் நடைமுறையிலுள்ள இந்தியாவில், ஒரு மொழியில் தேசியக் கீதம் இசைக்கப்படும்போது, இலங்கையில் சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதத்தை பாடுவதற்கு எதிர்ப்பினை வெளியிடுவதன் நோக்கம் என்ன? என்று காணி மற்றும் காணி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கேள்வி எழுப்பினார். கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் இன்னமும் பிரபாகரனின் சிந்தனையே ஓடிக்கொண்டிருக்கிறது. வடக்கில் எமது உறவுகள், பிள்ளைகள் அனைவரும் கடந்த 30 வருடங்களாக பிரபாகரனுக்குக் கட்டுப்பட்டே வாழ்ந்தனர். இதனால், இளைஞர்களின் மனதில் பிரபாகரன் இருக்கிறார். இதனால் அவரது பெயரை கூறியவுடன் கைத்த…
-
- 7 replies
- 1.1k views
-
-
-க.அகரன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் மீது, நேற்று (29) இரவு, தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவரது பாதுகாவலர் காயமடைந்த நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா - பாவக்குளம் பகுதியில், மக்கள் சந்திப்புகளை முடித்து வவுனியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த மஸ்தான் எம்.பி, பாவக்குளம் கிராமப் பகுதியில் ஒருவரை இறக்குவதற்காக வாகனத்தை நிறுத்திய போது, அப்பகுதியில் நின்ற சிலர், வாள்களால் வெட்டித் தாக்க முயற்சித்துள்ளனர். இதன்போது சுதாகரித்துக்கொண்ட பாதுகாவலர்கள், குறித்த தாக்குதல் முயற்சியைத் தடுக்க முற்பட்ட போது, பாதுகாவலர் ஒருவரின் கை காயமடைந்துள்ளது. இந்நிலையில், எம்.பியைத் தாக்க முற்பட்டவர்கள் தப்…
-
- 0 replies
- 322 views
-
-
எதிர்கட்சி தலைவருக்குரிய வாகனம் மற்றும் வீடு இப்போதும் இரா.சம்மந்தனிடம்..! முழிக்கிறார் சஜித்.. எதிர்கட்சி தலைவராக இருந்தபோது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் பெற்றுக் கொண்ட வாகனம் மற்றும் வீடு ஆகியவற்றை மீள கையளிக்காத நிலையில், சஜித் பிறேமதாஸவுக்கு எதிர்கட்சி தலைவருக்கான வரப்பிரசாதங்கள் கொடுக்கப்படவில்லை. சிங்கள இணையத்தளமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.கடந்த ஆட்சி காலத்தில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.அப்போது KX-2330 மற்றும் KO-6339 ஆகிய இலக்கதகடுகளைக் கொண்ட இரண்டு வாகனங்கள் இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டிருந்தன. மேலும், கொழும்பு 07, மஹாகமசேகர மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவருக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலமும் அவருக…
-
- 1 reply
- 499 views
-
-
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியூதீனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மூன்று மணி நேரத்திற்கும் மேல் விசாரணையொன்றை முன்னெடுத்துள்ளனர். கடந்த 21/4 இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணையை முன்னெடுத்திருந்தனர். https://www.virakesari.lk/article/72110
-
- 0 replies
- 384 views
-
-
சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் ஊழியர் இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் ஊழியர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.அதற்கமைய அவர் இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரியான கானியா பனிஸ்ட பிரான்சிஸிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதற்கமைய கடந்த 16 ஆம் திகதி நான்காவது தடவையாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னி லையான குறித்த பெண் கொழும்பு சட்டவைத்திய அதிகாரியின் காரியாலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், விசேட வைத்திய நிபுணரிடம…
-
- 1 reply
- 284 views
-
-
கடந்த அரசாங்கத்தின் இலவச வீசா நடைமுறையை தொடர தீர்மானம் கடந்த அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட இலவச வீசா நடைமுறை, அடுத்த ஆண்டுடன் காலாவதியாகவுள்ளமையினால் அதனை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இலவச வீசா நடைமுறை குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரசன்ன ரணதுங்க மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் இலங்கையின் சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதற்காக இலவச வீசா நடைமுறையை 48 நாடுகளுக்கு விஸ்தரிக்க கடந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இந்த இலவச வீசா நடைமுறையால் 4 பில்லியன் ரூபாய் இல…
-
- 1 reply
- 296 views
-