ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142635 topics in this forum
-
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்! மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெர்மன் நாட்டவர் ஒருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். அந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்று தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜேர்மன் பெண் ஒரு சுயேச்சைக் குழுவின் வேட்பாளராக கலேவல பிரதேச சபைக்கு போட்டியிட உள்ளார். வைப்புத்தொகையை செலுத்திய பின்னர், இலங்கையில் மாற்றங்களைக் கொண்டுவரும் நம்பிக்கையுடன் தான் போட்டியிடுவதாக ஜெர்மன் பெண் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். https://athavannews.com/2025/1425754 @குமாரசாமி, @Kandiah57, @Paanch, @nochchi, @Kavi arunasalam, @shanthy
-
-
- 32 replies
- 1.4k views
- 2 followers
-
-
தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் எதிரொலிகள் சர்வதேசத்திடம் இருந்து இலங்கை அரசுக்கு அழுத்தங்களாக வெளிப்படுத்தப்படுகிறன. இந்நிலையில் இறுதியுத்தத்தில் போர்குற்றவாளிகளாக கருதப்பட்ட பல இலங்கையின் இராணுவ வீரர்களுக்கு எதிராக தடைகளையும் சர்வதேச நாடுகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகின்றன. இதன் பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள் அதிகம் வாழும் நாடான பிரித்தானியாவில், போர்க் குற்றவாளிகளை ஆதரித்தார் என்ற அடிப்படையில் இலங்கை பாடகி யோஹானிக்கு எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டது. யோஹானி தனது தந்தை மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா உட்பட போர்க்குற்றவாளிகளாக தடைவிதிக்கப்பட்டவர்களை பாராட்டியமையே இந்த எதிர்ப்புக்கு காரணமாகியது. மேலும் முன்னாள் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட தரப்புக்கு…
-
-
- 1 reply
- 257 views
-
-
மஹிந்தவின் தனி விழாவுக்கு அனுமதி மறுப்பு போர் வெற்றியின் 16ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், திங்கட்கிழமை (19) தேசிய போர் வீரர்களின் நினைவு விழாவில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கேட்டுக்கொள்கிறது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்படுவதாகவும், அது தங்கள் உயிர்களை தியாகம் செய்த போர் வீரர்களின் பெயரில் ஜனாதிபதி செய்யும் ஒரு பெரிய தவறு என்றும் ஞாயிற்றுக்கிழமை (18) அன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “ஒரு கட்சியாக, ஸ்ரீலங்கா பொதுஜன ப…
-
-
- 2 replies
- 243 views
-
-
19 MAY, 2025 | 12:02 PM 2009ம் ஆண்டின் பின்னர் இலங்கையை ஆண்ட ஆட்சியாளர்கள் ஆதாரமற்ற யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதில் தோல்வியடைந்துள்ளனர் என இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு படை பிரதானியும், இராணுவதளபதியும் இறுதி யுத்தத்தில் 58 வது படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றியருவமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்கங்களின் இந்த தோல்வி, விடுதலைப்புலிகளிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் உலக நாடுகளின் தண்டனைகளை எதிர்கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளது என சவேந்திர சில்வா தொலைக்காட்சி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். சவேந்திர சில்வா இந்த பேட்டியில் அரசாங்கங்கள் அரசியல் ரீதியில் இந்த பிரச்சினைகளிற்கு தீர்வை காணத்தவறியுள்ளமை குறித்து தனது சீற்றத்…
-
- 3 replies
- 253 views
- 1 follower
-
-
வெளிப்படைத்தன்மை இருந்தால்தான் வெளிநாடுகளிலுள்ளவர்கள் உதவிகளைச் செய்வார்கள்; ஆளுநர் வேதநாயகன் 19 MAY, 2025 | 01:34 PM (எம்.நியூட்டன்) நிறுவனம் வளர்ச்சியடைவதற்கு வெளிப்படைத்தன்மை முக்கியம் வெளிப்படைத்தன்மை இருந்தால்தான் வெளிநாடுகளிலுள்ளவர்கள் உதவிகளைச் செய்வார்கள் என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்தார். மாதகலைச் சேர்ந்த விசுவநாதர் சிற்றம்பலம் சமூகசேவைகளைப் பாராட்டி மதிப்பளித்து அவரின் வாழ்நாள் சாதனைகளை வாழும்போதே வாழ்த்தும் கௌரவிப்பு விழாவும் நூல் வெளியீடும் மாதகல் இளைஞர் சங்க கலையரங்கத்தில் சனிக்கிழமை (17) இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாதகல் மண்ணுக்கு நான் பிரத…
-
- 0 replies
- 124 views
- 1 follower
-
-
18 MAY, 2025 | 05:41 PM (எம்.மனோசித்ரா) கொடூரமான 30 ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டு வந்து தாயகத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத அமைப்பிடமிருந்து விடுவித்து 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. தாய் நாட்டுக்காக தமது உயிரை தியாகம் செய்த, அங்கவீனமுற்ற சகல பாதுகாப்பு படை வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 16ஆவது தேசிய போர் வீரர் நினைவு நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகால கொடூரமான போரை முடிவுக்குக் கொண்டு வந்து, வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய மலைநாட்டை ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைத்து, நமது தாயகத்தையும் மக்களையும் கொடூரமான புலி பயங்கரவாத அமைப்பிலிருந்து வி…
-
-
- 3 replies
- 241 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 19 MAY, 2025 | 12:06 PM மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முதலாவது ஆயர் ஓய்வுபெற்ற கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை இன்று திங்கட்கிழமை (19) நித்திய இளைப்பாறுதல் அடைந்தார். https://www.virakesari.lk/article/215131
-
- 0 replies
- 144 views
- 1 follower
-
-
30-வருட யுத்தத்தின் மூல காரணங்களுக்கு தீர்வு தேட முயலாமல் வெற்றி கொண்டாட்டமா? -மனோ கணேசன் இலங்கையின் அனைத்து மக்களும் இறந்த தம் அனைத்து உறவுகளையும் ஒன்றாக ஒரே நேரத்தில் இலங்கையர்களாக நினைவு கூறும் ஒரு எதிர்காலத்தை நோக்கி நம் நாடு பயணிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது” இலங்கை சமூகத்தில் சமூகத்தில் மரணித்து போன உறவுகள், இன்று முள்ளிவாய்க்காலிலும், தெற்கிலும் நினைவு கூர படுகிறார்கள். தெற்கில் இராணுவ வெற்றி விழா நடத்த படுகிறது. நினைவு கூரலும், வெற்றி விழாவும் ஒருசேர நடத்தலாம். அந்த நாள் வர வேண்டும். ஆனால் அந்த இலக்கை, முப்பது வருட காலம் யுத்தம் நிகழ்ந்தமைகான மூல…
-
- 0 replies
- 111 views
-
-
18 MAY, 2025 | 02:41 PM நான் உயிருடன் இல்லாவிட்டாலும், ஒற்றை சிங்கக் கொடியின் நிழலின் கீழ் இறையாண்மை கொண்ட நாடாக இலங்கை இருக்க வேண்டும் . இதுவே என்னுடைய ஒரே ஆசை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மே 19 ஆம் திகதி போர் வெற்றி நாள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/215060
-
-
- 5 replies
- 460 views
- 2 followers
-
-
Published By: VISHNU 19 MAY, 2025 | 05:22 AM தனியார் காணிகளை அரசுடமையாக்கும் அல்லது கையகப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது. நில அளவை வரைபடப் பகுதிக்குள் உள்ள காணிகளின் உரிமை தனியாருக்குச் சொந்தமானதா அல்லது அரசுக்கு சொந்தமானதா என்பதைத் தனித்தனியாக அடையாளம் காணவே தீர்மானிக்கப்பட்டது. இதனூடாக காணிப் பிரச்சினைகளை இதன்மூலம் முறையாக தீர்த்துக் கொள்ள முடியும். தீவின் அனைத்து மாகாணங்களிலும் காணி தீர்வுக்கான பூர்வாங்க அறிவிப்புக்களை வெளியிடுவதன் மூலம் நில தீர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வடக்கு மாகாணத்துக்கு மாத்திரம் விசேடமான முறையில் குறிப்பிட்ட தீர்வுக்கான பூர்வாங்க அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை என கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பா…
-
- 0 replies
- 114 views
- 1 follower
-
-
இலங்கையில் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட பிரித்தானிய பெண் இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தியதாக குற்றம் சுமத்தி பிரித்தானிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த பெண்ணுக்கு துணை நிற்பதாக பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு லண்டனின் கூல்ஸ்டனைச் சேர்ந்த 21 வயதான சார்லோட் மே லீ, பெங்காக்கிலிருந்து விமானத்தில் வந்த பின்னர் திங்களன்று கொழும்பில் உள்ள முக்கிய விமான நிலையத்தில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 46 கிலோ (101 பவுண்டுகள்) கஞ்சா வகை குஷ் அடங்கிய இரண்டு போதைப் பொருள் பொதிகளை நாட்டிற்குள் கொண்டு வர முயன்றதாக இலங்கை அதிகாரிகளால் குறித்தப் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு …
-
- 0 replies
- 127 views
-
-
சமூக ஊடக பதிவுகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை நீதித்துறை அதிகாரிகளை குறிவைத்து சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் வெளியிடப்படும் பதிவுகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் கவலை வௌியிட்டுள்ள சட்டத்தரணிகள் சங்கம், நீதித்துறை அதிகாரிகளுக்கும் நீதி அமைப்புக்கும் தீங்கு விளைவிக்கும் சில கருத்துகள் மற்றும் பதிவுகளை சில சமூக ஊடக தளங்களில் பொதுமக்கள் பதிவிடுவதாக சுட்டிக்காட்டியுள்ளது. நீதி நிர்வாகத்தில் நீதித்துறை அதிகாரிகள் வகிக்கும் முக்கிய பங்கையும், நீதித்துறையின் கடமைகள், நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிசெய்தல் மற்றும் பாதுகாப்பின் அவசியத்தை கருத்தில் கொண்டு, நீதித்துறை நடத்தையை மறுபரிசீலனை செய்வதற்காக சட்டம் தெ…
-
- 0 replies
- 155 views
-
-
தேசிய போர் வீரர் நினைவு விழா; விசேட போக்குவரத்து! 16 ஆவது தேசிய போர் வீரர் நினைவு விழாவினை முன்னிட்டு, கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள நாடாளுமன்றப் பகுதியைச் சுற்றி இன்று (19) விசேட போக்குவரத்துத் திட்டம் அமலில் இருக்கும். இந்த நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை 4:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி, குறித்த காலகட்டத்தில் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். உள்நாட்டு போர் வெற்றியின் 16 ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இன்று நடைபெறும் தேசிய போர்வீரர் தின கொண்டாட்டங்களானது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் ஆயுதப்படைகளின் தளபதியுமான அனுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் நடைபெறும். இதில் பாதுக…
-
- 0 replies
- 111 views
-
-
நாடு திரும்புகின்றார் பசில் ராஜபக்ச May 18, 2025 2:12 pm ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச நாடு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, எதிர்வரும் வியாழக்கிழமை அவர் நாடு திரும்பவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், அமெரிக்காவிற்குச் சென்ற பசில் ராஜபக்ச அங்கேயே தங்கியிருந்தார். இந்நிலையிலேயே அவர் நாடு திரும்பவுள்ளார். எவ்வாறாயினும், அவர், நாடு திரும்பிய பின்னர் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்குவாரா இல்லையா என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. https://oruvan.com/basil-rajapaksa-returns-to-the-coun…
-
- 0 replies
- 177 views
-
-
கொழும்பு – வெள்ளவத்தையில் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு May 18, 2025 3:18 pm கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது கொல்லப்பட்ட தமிழ் பொதுமக்களை நினைவுகூரும் வகையில் கொழும்பு – வெள்ளவத்தையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தின் போது பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது. தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே 18 இன்றைய தினம் வடக்கு கிழக்கு உள்ளிட்ட புலம்பெயர் நாடுகளில் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதன்படி, இன்று காலை கொழும்பு – வெள்ளவத்தை கடற்கரையிலும் நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட சிவில் ச…
-
- 0 replies
- 225 views
-
-
Published By: DIGITAL DESK 3 18 MAY, 2025 | 05:25 PM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 16ஆவது தேசிய போர் வீரர் நினைவு நாள் நாளை திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது. கோட்டை ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள தேசிய போர்வீரர் நினைவு தூபியில் தேசிய போர்வீரர் நினைவு நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராணுவீரர் சேவை அதிகாரசபையின் தலைவர் ஓய்வு பெற்ற பிரிகேடியர் செனரத் கொஹொன தெரிவித்தார். இன்று ஞாயிறுக்கிழமை (18) போர்வீரர் நினைவு நாள் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை மேற்பார்வை செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதில் தன்னலமின்றி பணியாற்றிய…
-
- 0 replies
- 191 views
- 1 follower
-
-
18 MAY, 2025 | 01:14 PM தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே 18 இன்று ஞாயிற்றுக்கிழமை (18) பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் நடைபெற்றது. 2009 ஆம் ஆண்டு யுத்த காலத்தில் இலங்கை இராணுவத்தினரால் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்ட மக்களை ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ஆம் திகதி நினைவு கூர்ந்து உணர்வெழுச்சியுடன் உறவுகள் அஞ்சலி செலுத்தி வருவது வழக்கமாகும். அந்தவகையில் இன்றையதினம் முள்ளிவாய்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் யுத்தத்தின் போது கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. காலை 10.15 மணிக்கு தவத்திரு அகத்தியர் அடிகளாரால் முள்ளிவாய்க்கால் கொள்கைப்பிரகடனம் வாசிப்புடன் ஆரம்பமாகிய குறித்த ந…
-
- 0 replies
- 179 views
- 1 follower
-
-
மட்டக்களப்பு கல்லடி பாலத்து வாவியில் மிதந்துவந்த நினைவு தூபி ! மட்டக்களப்பு கல்லடி பாலத்து வாவியில் தமிழின அழிப்பு வாரத்தை நினைவு கூர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு முள்ளிவாய்கால் தூபியினை கொண்ட புகைப்படங்கள் மற்றும் கறுப்பு, சிவப்பு, மஞ்சல் கொடிகள் ஏற்றப்பட்டு மிதக்கும் வகையில் அமைக்கப்பட்ட இரண்டு தூபிகளால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த மிதக்கும் தூபி நேற்று (17) இரவு ஒன்பது மணியளவில் மிதந்து வந்ததையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . மின் விளக்குகள் ஒளிர்ந்த நிலையில் இரு மிதக்கும் வகையிலான தமிழின அழப்பின் நினைவாக தயாரிக்கப்பட்ட தூபிகள் மிதந்து முகத்து வாரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மனிதர்க…
-
- 0 replies
- 184 views
-
-
17 MAY, 2025 | 11:14 PM தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ உட்பட மூன்று பேரை ஏற்றிச் சென்ற வாகனம் மீது துப்பாக்கிச் சூடு இன்று (17) மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுகளை தீர்த்துவிட்டு அவருக்குச் சொந்தமான ஆவணங்களின் கோப்புகளை பறித்துச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டி, கிரிமண்டல மாவத்தை பகுதியிலேயே குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். அண்மையில் ஜனாதிபதி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை துஷித ஹல்லொலுவ வெளியிட்டதுடன், தேசிய லொத்தர் சபையில் பணியாற்றிய காலத்…
-
- 1 reply
- 282 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 18 MAY, 2025 | 11:07 AM திருமணமாகி இரண்டு வாரத்தில் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் வரணி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய பெண்ணொருவரே நேற்று சனிக்கிழமை (17) தனது வீட்டில் உயிரை மாய்த்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணுக்கு இரு வாரங்களுக்கு முன்பே திருமணம் நடைபெற்றதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கொடிகாம பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/215031
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
எனது சகோதரர் காணாமல்போனதற்கும் பிள்ளையானுக்கும் தொடர்புள்ளது எனது சகோதரர் காணாமல்போனமைக்கும் பிள்ளையானிற்கும் தொடர்புள்ளது என நான் உறுதியாக நம்புகின்றேன். இது குறித்து எனது மனதில் எந்த சந்தேகமும் இல்லை என 2006 இல் காணாமலாக்கப்பட்ட கிழக்கு பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத்தின் சகோதரர் ராஜ் தமிழ் கார்டியனிற்கு தெரிவித்துள்ளார் தமிழ் கார்டியனிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் தெரிவித்துள்ளதாவது, கேள்வி- உங்கள் சகோதரர் பற்றியும் அவர் எவ்வாறானவர் என்பது பற்றியும் தெரிவிக்க முடியுமா? பதில்- எனது சகோதாரர் சிறுவயதிலேயே மிகுந்த புத்திசாலி,அவர் அமைதியானவர் சிந்திப்பவர்,யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் அவர் கல்வி பயின்றார்,கல்வியில் சிறந்து விளங்கியமைக்காக பெயர் பெற்றார்,க…
-
- 1 reply
- 284 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 17 MAY, 2025 | 11:16 AM (செ.சுபதர்ஷனி) இலங்கையில் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுபவை பேருந்துகள் அல்ல அவை லொறிகளாகும். லொறியின் உடல் பாகத்தைக் கொண்டு அவை வடிவமைக்கப்பட்டுள்ளது. டூரிஸ்ட் பஸ் என்பதே பேருந்து. பேருந்துகளின் இறக்குமதிக்கு அதிகளவான தீர்வை வரி அறவிப்படுவதால், பயணிகள் போக்குவரத்துக்கு லொறிகளை கொள்வனவு செய்வதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர், விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் சமத் தர்மரத்ன தெரிவித்தார். வீதி விபத்துக்கள் நிவாரணம் தொடர்பில் இலங்கை மருத்துவ சங்கத்தில் வெள்ளிக்கிழமை (16) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், விபத்துக்களை குறைப்பதற்கான நடவடி…
-
-
- 3 replies
- 236 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 17 MAY, 2025 | 05:22 PM கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் செருக்கன் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து இரண்டு டிப்பர் வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/214998
-
- 0 replies
- 141 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 17 MAY, 2025 | 02:14 PM கண்டி நகரில் அமைந்துள்ள மல்வத்து, அஸ்கிரிய பீடங்களுக்கு இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, வெள்ளிக்கிழமை தனது (16) விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது, மல்வத்து பீடத்தின் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மஹாநாயக்க தேரரையும், அஸ்கிரிய பீடத்தின் வரகாகொட ஸ்ரீ ஞானரதன மஹாநாயக்க தேரரையும் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார். இந்த சந்திப்பின் போது, அண்மைய இலங்கைக்கான இந்திய பிரதமரின் அரச விஜயம் குறித்து மஹாநாயக்க தேரர்களிடம் உயர் ஸ்தானிகர் விளக்கமளித்தார். மேலும், இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் பலதரப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புகளுக்காக ஆசீர்வாதங்களை தேரர்களிடம் கோரினார். இதனையடுத்து, மல்வத்து அ…
-
- 0 replies
- 123 views
- 1 follower
-
-
14 MAY, 2025 | 05:13 PM யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகத்தின் ஒருங்கிணைப்பில் "குருதியால் தோய்ந்த நம் தேசத்திற்காய் ஒரு துளி குருதி" எனும் கருப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று இன்று புதன்கிழமை (14) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை நினைவுகூரும் முகமாக இந்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது. இதில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு குருதிக்கொடையில் ஈடுபட்டனர். தமிழ், சிங்கள, முஸ்லீம் மாணவர்கள் என அனைவரும் இனம், மதம், மொழி பேதங்களை கடந்து இந்த இரத்ததான முகாமில் ஈடுபட்டனர். https://www.virakesari.lk/article/214732
-
- 1 reply
- 130 views
- 1 follower
-