ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143266 topics in this forum
-
கோத்தாவினால் சம்பள உயர்வு தர முடியுமானால் மஹிந்தவால் ஏன் பெற்றுக் கொடுக்க முடியவில்லை: திகா Published by Loga Dharshini on 2019-10-21 15:46:23 ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதியாக வந்தவுடன் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க முடியும் என்றால் மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தொழிலாளர்களுக்கு ஏன் சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்கவில்லையென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தொழிலாளர…
-
- 0 replies
- 246 views
-
-
முஸ்லிம் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் பஷில் ராஜபக்ஷ சந்திப்பு நாடளாவிய ரீதியிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றின் முஸ்லிம் உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களுடனான கலந்துரையாடலொன்று, நேற்று காலை, தெஹிவளை ஸ்ஹரான் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, உள்ளூராட்சி மன்ற நகரபிதாக்கள், தலைவர்கள், பிரதித்தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் அமைப்பாளர்களுடனும் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீலங்கா ப…
-
- 0 replies
- 219 views
-
-
சஹ்ரான் ஆதரவாளர்கள் இன்று சஜித்துடன் – மஹிந்த பகிரங்க உரை அடிப்படைவாதத்துக்கு உதவி வழங்கிய சில தலைவர்கள் தற்பொழுது அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அங்குணுகொலபெலஸ்ஸவில் நேற்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருவதில்லை. லட்சக்கணக்கானவர்களுக்கு தொழில் இல்லை. இந்த நிலைமையை ஏற்படுத்தியது யார்? இதற்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியது யார்? சஹ்ரானா? அல்லது இந்த அரசாங்கமா? அல்லது சஹ்ரானுக்கு ஆதரவு வழங்கிய அரசாங்கமா? சஹ்ரானை கைது செய்யும் போது சஹ்ரானைக் காப்பாற்றியது இந்த அரசாங…
-
- 0 replies
- 629 views
-
-
முகநூல் ‘உள்பெட்டி’ தகவல்களும் கண்காணிப்பு Oct 21, 2019 | 10:41by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்காவில் முகநூல் பயன்படுத்துனர்களால் உள்பெட்டியில் (inbox) பரிமாறப்படும் தகவல்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாக, முகநுநூல் சமூக ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது. முகநூல் நிறுவனத்தின் சிறிலங்காவுக்கான கொள்கை திட்ட முகாமையாளர் யசாஸ் அபேவிக்ரம, கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியின் போதே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். முகநூல் நிறுவனம் முதல் முறையாக இலங்கையர் ஒருவர், இந்தப் பதவிக்கு நியமித்துள்ளது. சிறிலங்காவில் அதிபர் தேர்தல் காலங்களில் போலிச் செய்திகள், மற்றும் இனவாதக் கருத்துக்கள் சம…
-
- 0 replies
- 250 views
-
-
ஞானசார தேரர் உள்ளிட்ட நால்வருக்கு நீதிமன்றம் அழைப்பு ஞானசார தேரர் உள்ளிட்ட 4 பேரை நவம்பர் மாதம் 8 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (21) உத்தரவு பிறப்பித்துள்ளது. முல்லைத்தீவு நாயாறு குருகந்த ரஜமஹா விஹாராதிபதியின் இறுதிக்கிரியை தொடர்பான நீதிமன்றின் உத்தரவை மீறிய வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஞானசார தேரர், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஶ்ரீஸ்கந்தராசாவால் நீதிமன்ற அவமதிப்பு மனு அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. குறித்த நீதிமன்ற அவமதிப்பு மனு, மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதியரசர்கள் யசந்த கோ…
-
- 0 replies
- 443 views
-
-
’பகிஸ்கரிப்பா அல்லது சிவாஜிலிங்கத்துக்கு ஆதரவா?’ தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து கொடுத்த கோரிக்கைகள் எந்தவொரு வேட்பாளரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்திருந்தும் மக்களிடம் தாங்கள் தேசியத்துக்காக பாடுபடுகின்றோம் என்று நாடகம் ஆடுவதற்காக கொடுக்கப்பட்டவை” என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அறிக்கையொன்றையும் இன்று (21) வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து கொடுத்த கோரிக்கைகள் எந்தவொரு வேட்பாளரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்திருந்தும் மக்களிடம் தாங்கள் தேசியத்துக்காக பாடுபடுகின்றோம் என்று நாடகம் ஆடுவதற்காக கொடுக்கப்பட்டவை. …
-
- 0 replies
- 485 views
-
-
விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுத்து விட்டார்கள் என்று கூற முடியாது-ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கடந்த வாரம் கிளிநொச்சியில் ஆயுதங்கள் மீட்கப்பட்டமை, விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையோர் என்ற குற்றச்சாட்டில் மலேசியாவில் ஏழு பேர் கைது செய்யப்பட்டமை போன்ற சம்பவங்கள், சிங்கள மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுக்கின்றனர் என்ற அச்சத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியா? என கேஷ் செனநாயக்கவிடம் தமிழ் தேசிய பத்திரிகை ஒன்று கேள்வி எழுப்புகையில் தேர்தல் நெருங்கும் போது இவ்வாறான பிரச்சினைகள் அதிகமாகத் தோற்றுவிக்கப்படலாம். இவ்வாறான பிரச்சினைகளை தோற்றுவித்து தேசிய பாதுகாப்பு பற்றி பேசுவார்கள்” என தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்…
-
- 0 replies
- 390 views
-
-
‘காலி கலந்துரையாடல்- 2019’ ஆரம்பம் – சித்திரவதை முகாம்கள் குறித்து ஆராயப்படுமா? கடற்படை ஆண்டு தோறும் நடத்தும் ‘காலி கலந்துரையாடல்- 2019’ எனும் கடல் பாதுகாப்பு மாநாடு கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு கோல்பேஸ் விடுதியில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகும் இந்த மாநாடு, நாளை வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டில் 55 நாடுகள், 10 அனைத்துலக அமைப்புகள், 3 பாதுகாப்பு தொழில்துறைகள் பங்கேற்கும் என கடற்படை தெரிவித்துள்ளது. இது இலங்கை கடற்படை நடத்தும் 10 ஆவது மாநாடாகும். இதேவேளை இந்த மாநாட்டில் பங்கேற்கும் அனைத்துலக கடற்படை பிரதிநிதிகள், இலங்கை கடற்படையின் சித்திரவதை முகாம்கள் தொடர்பாக நடக்கின்ற விசாரணைகளுக்கு, கடற்படை ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்த வேண்…
-
- 0 replies
- 242 views
-
-
கோட்டாவிற்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் படைத்தளபதிகள் யாழில் களமிறக்கம் ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக, முன்னாள் படைத்தளபதிகள் யாழ்ப்பாணத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர். கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலராக இருந்த காலகட்டத்தில், இறுதிக்கட்டப் போரின்போதும் போருக்குப் பின்னரான காலகட்டத்திலும் அவருடன் இணைந்து பணியாற்றிய, யாழ்ப்பாணத்தில் கட்டளைத் தளபதிகளாக இருந்த, இரண்டு மேஜர் ஜெனரல்களே இவ்வாறு தேர்தல் நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோரே யாழ்.குடாநாட்டில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளில்…
-
- 0 replies
- 347 views
-
-
தொடர்ந்தும் அச்சுறுத்தல்-பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்கிறார் சிவாஜிலிங்கம் தேர்தல் ஆணையாளருக்கு எழுத்து மூலம் அறிவித்தபோதிலும் தனது பாதுகாப்பு விடயத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அத்தோடு தொடர்ந்தும் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பு – வாழைச்சேனை பலநோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுகிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தனக்கு இதுவரைக்கும் பாதுகாப்பு வழங்கப்படவில்லையென்றும் தேர்தல் ஆணையாளருக்கு எழுத்து மூலம் தெரிவித்திருந்தும் எதுவிதமா…
-
- 0 replies
- 243 views
-
-
விடுதலைப் புலிகள் விவகாரத்தில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட 12 பேரில், பி. சுப்பிரமணியம் என்பவர் சார்பாக, தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு அக்டோபர் 21 ஆம் திகதி விசாரணை செய்ய உள்ளது கோலாலம்பூர் உயர் நீதிமன்றம். இதுபோன்று மேலும் சில வழக்குகள் தொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கைதானவர்களில் இருவர் அந்நாட்டின் இருவேறு மாநிலங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவர். மேலும், இருவரும் நாட்டை ஆளும் கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கும் ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்தவர்கள். எனினும் மதபோதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என தாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாலேயே விடுதலைப் புலிகள் விவகாரம் எழுந்துள்ளது என்கிறார் மலேசியாவின் பினாங்கு மாநில து…
-
- 0 replies
- 575 views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என எந்த முடிவும் தற்போது எடுக்கப்படவில்லை- சுமந்திரன் 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக ஐந்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அறிவித்திருந்தன.இதனையடுத்து குறித்த கோரிக்கைகள் உள்ளிட்ட ஆவணத்துடன் வந்தால், அது தொடர்பாக பேசத் தயாரில்லை என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கருத்துரைத்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசும் முடிவு ராஜபக்ஷ அணியினருக்கு இருந்ததென்றும் அந்த முடிவு தற்போதும் இருந்தால் அவர்களை சந்திக்கத் தயார் என தெரி…
-
- 2 replies
- 873 views
-
-
தனித்துப் பேச்சுக்கு வரமாட்டோம் கூட்டணியாகவே பேச வருவோம் -ரணிலுக்கு விக்னேஸ்வரன் தெரிவிப்பு நான் தனித்துப் பேசவர முடியாது. நாங்கள் ஐந்து கட்சிக் கூட்டணியாகவே இவ்விடயங்கள் குறித்து பேசுவது என முடிவு செய்துள்ளோம். எனவே, ஐந்து தரப்புகளுக்கும் பொருத்தமான ஒரு நேரத்தில் சந்திக்க அழைப்புக் கிடைத்தால் வருவோம் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.மேலும் தென்னிலங்கைத் தரப்புகள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், வரவேற்றாலும் வரவேற்காவிட்டாலும் ஐந்து தமிழ்க் கட்சிகளின் பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 13 அம்சங்கள் அடங்கிய தமிழர்களின் கோரிக்கைப் பட்டியல் ஜனாதிபதித் தேர்தலின் பிரதான…
-
- 5 replies
- 772 views
-
-
கடந்த நான்கு வருடங்களாக புதிய அரசியலமைப்பை தயாரிப்பதில் பங்களிப்புச் செய்த தமிழ்க்கட்சிகள் இப்போது புதிய தீர்வு யோசனைகளை தயாரித்திருப்பது எதற்காக என மூத்த ஊடகவியலாளர் எஸ்.எஸ்.குகநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளும் தமிழ் மக்களின் வாக்குகளை எதிர்பார்த்துள்ள இந்த தருணத்தை, புதிய அரசியலமைப்பை பூர்த்தி செய்யக்கூடிய வகையில், சாதகமாக பயன்படுத்த தமிழ் மக்களின் தலைமைகள் முன்வரவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று காலை நடைபெற்ற கவிஞர் வேலணையூர் பொன்னண்ணாவின் நினைவேந்தல் நிகழ்வில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த நான்கு ஆண்டுக…
-
- 0 replies
- 365 views
-
-
ஜனாதிபதி தேர்தல் ;12 நாட்களுக்குள் 1034 முறைப்பாடுகள் (செ.தேன்மொழி) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 1,034 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. கடந்த 8 ஆம் திகதி முதல் நேற்று மாலை 4 மணிவரையான 12 நாட்களுக்குள் இவ்வாறு 1,034 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. இதன்போது தேர்தல் சட்டத்திட்டங்களை மீறியதாக 992 முறைப்பாடுகளும், வெவ்வேறு தேர்தல் முரண்பாடுகளின் காரணமாக 34 முறைப்பாடுகளும் மற்றும் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் எட்டு முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/67237
-
- 3 replies
- 850 views
-
-
யாழ்ப்பாண பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகொலையான யாழ்.பல்கலை கழக மாணவர்களின் மூன்றாம் ஆண்டு நினைகூரல் நிகழ்வுகள் நடைபெற்றன. யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்நிகழ்வு இடம்பெற்றது. மாணவர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாணவர்களின் உருவ படங்களுக்கு மலர் மாலை அணிவித்து , மலர் தூவி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன் ஆகியோர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது, கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் வைத்து அவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூ…
-
- 0 replies
- 304 views
-
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹரான் ஹசீம் உள்ளிட்ட குழுவினருடன் கலந்துரையாடும் வகையிலான காணொளியொன்று வெளியாகியுள்ளது. இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை இன்று வெளியிட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக மொஹமட் சஹ்ரான் ஹசீம் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/129575?ref=home-imp-parsely
-
- 1 reply
- 533 views
-
-
J Anojan on 2019-10-20 18:02:45 (ஆர்.யசி) தமிழ் கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகளை நிராகரிக்கும் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்த தாயரில்லை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் நியாயமான நிலைப்பாடுகள், அவர்களின் பிரச்சினைகள், அவர்களின் எதிர்பார்ப்பு என்பவற்றை உள்ளடக்கியதாகவே எமது 13 அம்சக்கோரிக்கைகளை முன்வதோம். அவ்வாறு இருக்கையில் எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளர் யாரோ அவர்களுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்துவோம். இது குறித்து ஆராய எமது கோரிக்கைகளை உருவாக்கிய ஐந்து தமிழ் கட்சிகளும் இந்த வாரத்தில் கூடி ஆராயவுள்ளோம். எதிர்வரும் …
-
- 1 reply
- 513 views
-
-
“ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மற்றுமொரு கிளை மாத்திரமே” என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், சில விடயங்கள் தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டாதக கூறியுள்ளார். எவ்வாறாயினும், நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விலகிய பின்னர், அதனுடன் இணையும் சந்தர்ப்பம் ஏற்பட்டதாகவும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/சதநதரக-கடசயன-கள-மததரம/175-240199 கோத்தாபயவின் பிரச்சாரக் கூட்டங்களில்…
-
- 1 reply
- 689 views
-
-
(இராஜதுரை ஹஷான்) தேசிய பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டுமாயின் பலவீனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு சார் விடயங்கள் அனைத்தும் ஆரம்பத்தில் இருந்து புதுப்பிக்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நீர்கொழும்பில் நேற்றிரவு இரவு இடம் பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஏப்ரல் 21 ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதல் தற்போது மறக்கடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்படவில்லை. அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணைக்குழுக்களின் விசாரணைகளின் மீது மத தலைவர்களும், பொது மக்களும் அதிருப்தி…
-
- 0 replies
- 291 views
-
-
Jayanthy on 2019-10-20 16:14:05 பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச அமைப்பான சர்வதேச நிதி நடவடிக்கை பணிக் குழுவின் (Financial action task force- FATF) சாம்பல் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நிதி நடவடிக்கை பணிக் குழுவின் ஆண்டுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் இறுதி நாளான நேற்றைய தினம் இலங்கையை சாம்பல் பட்டியலில் இருந்து நீக்க FATF முடிவு செய்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி எடுக்காமல் இலங்கை அரசு அமைதியாக இருப்பதாக குற்றம்சாட்டி அதனை சாம்பல் பட்டியலில் சேர்த்து கண்காணிப்புக்கு உட்படுத்த நிதி நடவடிக்கை பணிக் குழு முடி…
-
- 0 replies
- 323 views
-
-
வரி தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி வாக்குறுதியளித்ததன்படி வரிகளை நீக்கினால் எவ்வாறு நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லமுடியுமென ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் சிறிலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்றும் தடுமாற்றம் அடைந்தார். தேர்தல் வாக்குறுதிக்கமைய ‘வற்’ வரியை குறைத்தும் ஏனைய வரிகளை நீக்குவதுமாக இருந்தால் அதன் மூலம் வருடாந்தம் இழக்கப்படும் 350பில்லியன் ரூபாவை எவ்வாறு ஈடுசெய்யப் போகின்றாரென பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் விளக்கமளிக்க வேண்டுமென நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சவால் விடுத்திருந்தார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க வைச் சேர்ந்த விஜயதாச ராஜபக்ஷ எம…
-
- 1 reply
- 824 views
-
-
சஹ்ரானுடனான காணொளி – ஹக்கீம் – ஹிஸ்புல்லாஹ் – குண்டர்கள்… October 20, 2019 சஹ்ரானுடனான காணொளி தொடர்பில் ஹக்கீம் விளக்கம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த ஹிஸ்புல்லா, தனக்கு தேசியப்பட்டியல் கிடைத்தபின் குண்டர்களை வைத்து எங்களது கட்சி ஆதரவாளர்களைத் தாக்கினார். அதனை பார்வையிடச் சென்ற இடமொன்றில் பயங்கரவாதி ஸஹ்ரானும் இருந்திருக்கிறான். அந்த பழைய காணொளியை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் தேடுவதற்கு முற்பட்டுள்ளனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று (19.10.19) கண்டி, கலகெதர தேர்தல் தொகுதியில் ஹத்தரலியத்தவில் நடைபெற்ற…
-
- 1 reply
- 612 views
-
-
ஈழ தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு நாள் இன்று (19) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் சங்கத் தலைவர் வி.கிருஷ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டு - மாநகர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொன்.செல்வராஜா, பா.அரியநேத்திரன் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர். யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமல்ராஜன் அவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவு தினமாகவும், ஏனைய தமிழ், முஸ்லிம், சிங்கள ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி வேண்டியும் இந் நினைவு தினம் அனுட்டிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/67213
-
- 2 replies
- 598 views
-
-
கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கொழும்புக்கு அழைப்பு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு அடுத்த வாரத்தில் கூடவுள்ளது. இதன்படி எதிர்வரும் 23 , 24ஆம் திகதிகளில் தமது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொழும்புக்கு வருமாறு கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதன்போது வடக்கு கிழக்கு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்கக் கூடிய வேட்பாளருக்கு தமது ஆதரவை வழங்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது http://www.samakalam.com/செய்திகள்/கூட்டமைப்பின்-அனைத்து-பா/
-
- 0 replies
- 343 views
-