ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143259 topics in this forum
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கத் தீர்மானித்துள்ள முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் இன்று அதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். முஸ்லிம் மக்களுக்கு எதிராக கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட அநீதிகளை உலகிற்கு எடுத்துக் கூறவே இவ்வாறு போட்டியிட தீர்மானித்ததாக ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். https://www.madawalaenews.com/2019/10/hhh_6.html
-
- 4 replies
- 539 views
-
-
நீராவியடி விகாரைக்கு புதிய விகாராதிபதி October 6, 2019 மயூரப்பிரியன் முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவிடியடிப் பிள்ளையார் ஆலய சுழலில் அமைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய விகாரைக்கு புதிய விகாராதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் அடாத்தாக குருகந்த புராண ரஜமகா பௌத்த விகாரை எனும் பெயரில் விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்த சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான மேதாலங்கார கீர்த்தி புற்று நோய் காரணமாக கடந்த 21ஆம் திகதி காலமானார். இந்த நிலையில் கடும்போக்கு பௌத்த பீடமான அமரபுர நிக்காயவால் புதிய விகாராதிபதி கடந்த 28ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை மலைக் கிராமமான மிகிந்தபுர என்ற இடத்தைச் சேர்ந்த ரத்தன…
-
- 0 replies
- 421 views
-
-
சிவாஜிலிங்கம் தன்னிச்சையாக செயற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது-செல்வம் அடைக்கலநாதன் Oct 07, 20190 தமிழீழ விடுதலை இயக்கத்தின் தவிசாளரான சிவாஜிலிங்கம் கட்சியின் தீர்மானத்திற்கு அப்பால், கட்சியுடன் எந்த கலந்துரையாடலையும் மேற்கொள்ளாது ஜனாபதி தேர்தலிலே போட்டி இடுவதற்கு தீர்மானித்துள்ளார். அவர் வேட்பு மனு தாக்கல் செய்யகூடாது என்று நாம் கோரி வருகிறோம். அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தால் அவரை கட்சியிலிருந்து நீக்குவதா, இல்லையா என்று தமிழீழ விடுதலை இயக்கம் தீர்மானம் எடுக்கும்.மேலும் எமது கட்சி ஒழுக்கமான கட்டுகோப்புள்ள ஒரு கட்சி, ஜனநாயாக ரீதியாக செயற்படும் கட்சி. அதில் முக்கிய பதவியை வகிக்கும் சிவாஜிலிங்கம் தன்னிச்சையாக செயற்படுவது ஏற்றுக்கொள்ள மு…
-
- 0 replies
- 294 views
-
-
திருகோணமலையில் பாதுகாப்பாக புதைத்து வைக்கப்பட்ட துப்பாக்கிகள், வெடி பொருட்கள் மீட்பு! திருகோணமலை, அலஸ்தோட்டம் மயானத்தில் பாதுகாப்பான முறையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களுடன் வெடிபொருட்கள் அடங்கிய கொள்கலன் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இறுதிக் கிரிகைகளுக்காக தோண்டப்பட்ட கிடங்கிலிருந்தே குறித்த கொள்கலன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீட்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் உப்புவெளி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த ஆயுதங்களை கைப்பற்றினர். பாதுகாப்பான முறையில் கிறீஸ் இட்டு பதப்படுத்தி பொலித்தீன் பைகளில் அடைக்கப்பட்டவாறு அவை புதைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த கொள்கலனில், M-70 ab 2 ரக துப்பாக்கிகள் …
-
- 0 replies
- 265 views
-
-
புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகின 2019ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய பரீட்சை முடிவுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பார்க்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்று முடிந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலமாக 2 இலட்சத்து 55 ஆயிரத்து 529 மாணவர்கள் தோற்றியிருந்தனர். அதேபோன்று தமிழ் மொழி மூலமாக 83 ஆயிரத்து 840 மாணவர்களும் தோற்றிருந்தனர். இரண்டாயிரத்து 995 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com…
-
- 3 replies
- 795 views
-
-
ஐ.தே.க. மாநாடு | இனப்பிரச்சினை பற்றி எதுவும் பேசப்படவில்லை? அரசியலமைப்புத் திருத்தம் தொடரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு நேற்று சுகததாச மைதான மண்டபத்தில் நடைபெற்றது. அதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 2015 இல் தொடங்கப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தைத் தொடர்வது பிரதமருடன் கலந்தாலோசித்து, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது. விக்கிரமசிங்கவையே தொடர்ந்தும் கட்சியின் தலைவராக வைத்திருப்பது சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது ஐ.தே.கட்சியில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது அபிவிருத்தியில் கவனம் செலுத்துவது உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பது ஒற்றுமையா…
-
- 2 replies
- 801 views
-
-
“கட்சி அரசியலுக்காக பேரினவாதிகளுக்கு களம் அமைத்துக்கொடுக்காமல் தமிழ் மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி ஒன்றுமையாக ஓரணியில் நின்று ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் முன்வரவேண்டும்”,என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் செயற்பாட்டாளர்களுடன் இன்று (06) காலை கண்டி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டபின்னர் ‘ஒற்றுமை’என்ற ஆயுதமே தமிழர்களுக்கு எஞ்சியிருக்கின்ற இறுதி அஸ்திரமாகும். எனவே, அந்த ஒற்றுமைய…
-
- 0 replies
- 314 views
-
-
(இராஜதுரை ஹஷான்) இனவாதிகளினால் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது எனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனநாயக ரீதியில் குடும்ப ஆட்சியின் அரசியல் பிரவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் கூறினார். கடந்த அரசாங்கத்தில் அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் ராஜபக்ஷர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. திறமைகளின் அடிப்படையில் பதவிகள் எவருக்கும் கிடைக்கப் பெறவில்லை. ஆனால் இன்று அவர்களே ஜனநாயகத்தின் பிறப்பிடமாக கருத்துரைக்கின்றார்கள். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் திறமைக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது . இதுவே என்றும் தொடரும் என்றார். ஐ…
-
- 3 replies
- 379 views
-
-
ஞானசார தேரரைக் கைது செய்ய வலியுறுத்தி யாழ்.நகரில் ஆர்ப்பாட்டம்…. October 5, 2019 முல்லைத்தீவு- நீராவியடியில் நடைபெற்ற சம்பவத்தைக் கண்டித்தும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்ய வலியுறுத்தியும் யாழ்.நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (05.10.19) காலை இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறி, பௌத்த பிக்குவின் உடல் ஆலய முன்றிலில் எரிக்கப…
-
- 1 reply
- 553 views
-
-
இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தலில் இருந்து விலகியுள்ள அதிபர் சிறீசேனா, முன்னாள் அதிபர் ராஜபட்சவின் சகோதரர் கோத்தபய ராஜபட்சேவை ஆதரிக்க முடிவு செய்துள்ளார். இலங்கை அதிபர் பதவிக்கு நவம்பர் மாதம் 16ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலுக்கு இன்று மதியம் 12 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் சிறிசேனா தரப்பில் வேட்புமனு செய்யவில்லை என்பதால், அவர் போட்டியிலிருந்து விலகியுள்ளார். முன்னதாக, ராஜபட்சேவை சிறீசேனா சந்தித்துப் பேசினார். அப்போது அதிபர் பதவிக்கு போட்டியிடும் கோத்தபய ராஜபட்சேசவை ஆதரிப்பது என்று முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த 1982ம் ஆண்டு அதிபர் தேர்தலில் அப்போதைய அதிபர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய 3 பேர…
-
- 1 reply
- 380 views
-
-
விடுதலைப் புலிகளிடம் இருந்து கருணாவை பிரித்தது ரணிலின் இராஜதந்திரமே – அமைச்சர் தகவல் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணா அம்மானைப் பிரித்து சமாதானப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கச் செய்ததையடுத்து ஆயிரக்கணக்கான போராளிகள் ஜனநாயக வழிக்குத் திரும்பியுள்ளனர் என அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். இந்த நிலையை ஏற்படுத்த அலி ஸாஹிர் மௌலானாவும்,ஷ தலைமை தாங்கிய எமது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தான் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது தூர நோக்கான சிந்தனை கொண்ட நடவடிக்கையினால்தான் போரினை விரைவாக முடிக்கக் கூடியதாக அமைந்தது என்றும் அவர் கூறினார். மட்டக்களப்பில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். …
-
- 1 reply
- 376 views
-
-
மலையக பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வினை பெற்றுக்கொடுக்கும் வகையில் ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைக்க ஜனாதிபதி வேட்பாளரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச தனக்கு உத்தரவாதம் வழங்கியிருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் தான் ஜனாதிபதியாக வந்தவுடன் முதற்பணியாக மலையக மக்களுக்கு ஜனாதிபதி செயலணி அமைக்கப்படும் என்பதை உறுதியளித்துள்ளதாகவும், தெரிவித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் கூறினார். சஜித்துடன் நாட்டை வெற்றிக்கொள்ளும் போராட்டம் என்ற தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் முதலாவது பிரச்சார கூட்டம் இன்று காலை ஹட்டனில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் …
-
- 0 replies
- 229 views
-
-
ஜனாதிபதி தேர்தல் – 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரையில் 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக பணிப்பாளர் சமன் ரட்நாயக்க குறிப்பிட்டார். ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர் குறித்து ஒவ்வொரு கட்சியினரும் அறிவித்து வரும் நிலையில், பலர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். அதற்கமைய நேற்று (வெள்ளியக்கிழமை) வரையில் 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாச, சமல் ராஜபக்ஷ உட்பட 5 பேர் நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னாயக்க தெரிவி…
-
- 2 replies
- 421 views
-
-
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் தரம் 9 மாணவன் ரா. கனிந்திரன் என்ற மாணவன் தனது முயற்சியினால் வாகனம் ஒன்றை வடிவமைத்துள்ளார். பழைய வாகனங்களின் உதிரிகளைக் கொண்டு சைக்கிள் முறையில் உருவாக்கப்பட்ட வாகனம். https://www.virakesari.lk/article/66293
-
- 2 replies
- 503 views
-
-
கோட்ட அபய ராஜபக்சவின் இலங்கை குடியுரிமை செல்லாது எனத் தொடுக்கப்பட்ட வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 3 நீதிபதிகளினதும் ஏகமனதான தீர்ப்பு இது.
-
- 9 replies
- 1.4k views
-
-
கர்தினால் மல்கம் ரஞ்சித் கத்தோலிக்க தேவாலயங்கள் மீது மற்றுமொரு தாக்குதல் இடம்பெறலாம் என எச்சரித்துள்ளார் என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து சண்டே டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவாது. ஓக்டோர்பர் மாதம் 15 திகதி முதல் 25 திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது மீண்டும் தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சம் காரணமாக பாதுகாப்பு தரப்பினரும் காவல்துறையினரும் நாடு முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். இது குறித்த முதலாவது எச்சரிக்கையை கர்தினால் மல்கம் ரஞ்சித்தே விடுத்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் பாதுகாப்பை அதிகரிப…
-
- 0 replies
- 161 views
-
-
அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செலவீனங்களை 10 வீதத்தால் குறைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. சுற்றறிக்கை ஒன்றின் ஊடாக திறைசேரியின் செயலாளர் ஆர்.எச்.எஸ் சமரதுங்க இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என குறித்த சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் அவசியமற்ற திட்டங்கள் மற்றும் ஆரம்பிக்கப்படாத திட்டங்களை ஆரம்பிக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தளபாடங்கள் மற்றும் வாகனங்களை கொள்வனவு செய்வதையும் தவிர்க்குமாறு இதன்போது கோரப்பட்டுள்ளது. அரச நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் மற்றும் மத நிகழ்வுகளுக்கு உதவித் …
-
- 1 reply
- 617 views
-
-
தமிழர்களை நாங்கள் கொல்லவில்லை- கோட்டாபய நாங்கள் போரை உருவாக்கி தமிழர்களை கொல்லவில்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் நாங்கள் செய்தது நாட்டில் நீண்டகாலமாக நடைபெற்ற யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்தது மாத்திரம்தான் எனக் குறிப்பிட்டுள்ளார். பத்தரமுல்லையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கோட்டாபய இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சாதாரண பொதுமக்களை கொன்றது நாங்கள்தான் என வீணாக பழி சுமத்தி தமிழ் மக்களிடத்தில் குற்றவாளிகளாக எங்களை காட்டுவதற்கு போரை தோற்றுவித்தவர்கள் முயற்சிக்கின்றார்கள். உண்மையாகவே நாங்கள் போரை உருவாக்குவதற்கு காரணமாக இருக்கவில்லை. அதனை மு…
-
- 2 replies
- 681 views
-
-
இராணுவத்தினரை, ரயில் ஓட்டுனர்களாக பயிற்றுவிப்பதற்கு அனுமதி! இராணுவத்தினரை ரயில் ஓட்டுனர்களாக பயிற்றுவிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் அசோக் அபேசிங்க இதுகுறித்த உத்தியோகப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார். இராணுவத்தளபதியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாளை(திங்கட்கிழமை) முதல் காரியாலய ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, சம்பள முரண்பாட்டு பிரச்சினையை தீர்க்குமாறு கோரி, ரயில் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் மேற்பார்வை அதிகாரிகள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று 11வது நாளாக முன்னெடுக்கப்…
-
- 1 reply
- 329 views
-
-
பாறுக் ஷிஹான் - யுத்தத்தின் பின்னர் இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்களிற்கு கிடைக்கப்பெற்ற வீட்டுத்திட்டம் அம்மக்களிற்கு ஓரளவு ஆறுதலளிப்பதாக உள்ளது எனவும் பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நியாஸ்( நிலாம்) தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் 250 முஸ்லிம் குடும்பங்களிற்கான வீட்டுத் திட்டம் அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதை அறிந்தேன்.இந்த வீட்டுத்திட்டத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் றிசாட் பதியுதீன் மேற்கொண்ட துரித முயற்சியினால் கிடைக்கப்பெற்றுள்ளது.கடந்த காலங்களில் மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் எமது கட்சியின் தலைவர் மிக நிதானமாக சில விடங்களை எனக்கு உத்தரவாக வழங்கி இருந்தார்.அத…
-
- 5 replies
- 687 views
-
-
தனியார் பஸ் ஒன்று கனரக வாகனத்துடன் மோதி பாரிய விபத்து 12 பேர் படுகாயம் அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப்பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் தாண்டியடி தங்கவேலாயுதபுரம் சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) காலை வேளையில் தனியார் பஸ் கனரக வாகத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் 12பேர் காயமடைந்தள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ் விபத்து தொடர்பாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது பொத்துவில் நகரில் இருந்து கல்முனை நகர் நோக்கி பயணித்துக் கொண்டு இருந்த தனியார் பஸ் தங்கவேலாயுதபுரம் சந்தியில் கருங்கள் ஏற்றிய நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கனரக வாகத்தின் பின்புறமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றன. குறித்த கனரக வாகத்தில் பின்புற சில் வெடித்த நிலையில் …
-
- 0 replies
- 462 views
-
-
மக்களின் வீடுகளில் இராணுவத்தினர் சோதனை: வவுனியாவில் பதற்றம் வவுனியாவில் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று திடீர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டமையினால், மக்கள் பதற்றமான நிலைமையில் காணப்படுகின்றனர். வவுனியா- பூந்தோட்டம், மதீனாநகர் பகுதியில் திடீர் தேடுதல் நடவடிக்கையில் இராணுவத்தினர் நேற்று (சனிக்கிழமை) ஈடுபட்டிருந்தனர். இந்த தேடுதல் நடவடிக்கை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை வவுனியாவில் புதிதாக இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, சோதனை நடவடிக்கைகள் நேற்று இடம்பெற்றன. குறித்த சோதனை நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் தீவ…
-
- 0 replies
- 330 views
-
-
இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பதற்கு எமது கட்சி மேற்கொண்ட முயற்சிகளுக்கு கடந்த வருடம் ஜனாதிபதி மேற்கொண்ட சில அரசியல் முடிவுகளே தடையாக அமைந்தன. அதனாலேயே அம் முயற்சி இடைநடுவில் கைவிடப்பட்டது என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சுட்டிக்காட்டினார். நேற்று முன்தினம் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் உரையாற்றுகையில், இன,மத பேதமின்றி நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டுமானால் இந்த ஜனாதிபதி தேர்தலில் எமது வேட்பாளரான சஜித் பிரேமதாஸ வெற்றி பெற்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி மீண்டும் உருவாகவேண்டும். அதற்கேற்ற வகையில் நாம் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். டி.எஸ். சேனநாயக்க…
-
- 0 replies
- 327 views
-
-
ஜனாதிபதி தேர்தல் குறித்த தமிழ்த் தரப்புக்கள் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டுமென்ற அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அது எவ்வளவு சாத்தியமென்பது தெரியவில்லை எனத் தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் இத் தேர்தல் குறித்து தமிழர் தரப்பிலுள்ளஅனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒரே மேசையில் இருந்து பொதுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார். தமிழ் மக்கள் தரப்பில் பொதுவான ஒரு வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக சிவில் சமூக பிரதிநிதிகள், புத்திஜீவிகள் தமிழ் கட்சிகளை சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர். சுரேஸ் பிரேமச்சந்திரனை சந்தித்தும் இவர்கள் கலந்துரையாடினர். இக் கலந்துரையாடலி…
-
- 0 replies
- 307 views
-
-
இனவாதிகள் அரபு மொழியையும்,அரபிக்கொள்கையையும் இல்லாதொழிக்கவே முயற்சிகளை மேற்கொண்டார்கள் என துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார். கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வில்வெளி,ஹலிபா நகர்,அல் அமான் அரபிக் கல்லூரியின் சுற்று மதிலுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று(5)மாலை நடைபெற்ற போதே பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்: இந்த நாட்டில் சிறுபான்மை சமூகமான முஸ்லிம் மக்களையும் மத்ரஸாக்களையும் மியன்மாரில் செய்த அட்டுழியங்கள் போல் லேற்கொள்ள நினைத்தார்கள் அது கைகூட வில்லை. இதற்கு சில பேரின சக்திகள் தூண்களாக இருந்து செயற்பட்டார்கள். அவர்களால் நூற்…
-
- 1 reply
- 543 views
-