ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143688 topics in this forum
-
மக்கள் கேள்வி கேட்டுவிடுவார்கள் என்ற அச்சத்தினால் தான் கூட்டமைப்பு முடிவு எடுக்க முடியாத நிலையிலுள்ளது ; ரெஜினோல் குரே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இறுதி நேரத்தில் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதைக் கூறுவார்கள் தற்போது கூறினால் மக்கள் கேள்வி கேட்டுவிடுவார்கள் என்ற அச்சத்தினால் தான் அவர்கள் இதனைச் செய்கின்றார்கள் என வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல் குரே தெரிவித்தார். யாழ்ப்பாணம் பாசையூர் மீன்பிடித் துறைமுகப் பகுதி மக்களை நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் தமிழ் மக்கள் மத்தியில் வந்து சஜித்துக்கு ஆதரவளிக்க கோர முடியாத நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக…
-
- 0 replies
- 195 views
-
-
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி 6ஆம் திகதி போராட்டம் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சத்தியாகக்கிரகப் போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளதாக தமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். எவ்விதமான அடக்குமுறை வந்தாலும் தான் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். யாழில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அவர், இது தேர்தல் விதிமுறைகளை மீறாத வகையிலேயே இடம்பெறும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் 15 வருடங்களுக்கு மேல் தண்டனை பெற்று வருபவர்களை பொதுமன்னிப்பின் கீழ் ஜனாதிபதி விடுதலை செய்…
-
- 0 replies
- 204 views
-
-
கிளிநொச்சி - தேராவில் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நிகழ்விற்கான ஆரம்ப கட்ட துப்புரவு செய்யும் பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்விற்காக, துயிலுமில்லங்களின் துப்புரவு செய்யும் பணிகள் தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்றுள்ளது. இதன் முதற்கட்டமாக தேராவில் துயிலுமில்ல பணிக்குழுவின் ஏற்பாட்டில் ஆரம்ப துப்புரவுப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் கார்த்திகை மாதம் 27ம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் சகலதும் பூர்த்தியாகியுள்ளதுடன், விரைவில் மாவீரர் பெற்றோர் மற்றும் உறவுகளை ஒருங்கிணைத்து மாபெரும் சிரமதானப் பணி விரைவில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என…
-
- 0 replies
- 284 views
-
-
Thursday, October 31, 2019 - 6:00am நிதி வழங்கும் நாடுகளை அழைக்கப்போவதாக உறுதி வடக்கு கிழக்குக்கு தனியான நிதியை வழங்கும் சர்வதேச நாடுகளை அழைத்து ‘சர்வதேச நிதி’ மாநாட்டை நடத்தி பிரதேசத்தை அபிவிருத்தி செய்யவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். வவுனியாவில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்ததாவது, நானும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவன். இந்த பிரதேசத்தில் வாழும் மக்களும் யுத்த…
-
- 0 replies
- 209 views
-
-
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் விருப்புவாக்கின் வகிபாகம் - மு.திருநாவுக்கரசு
-
- 1 reply
- 210 views
-
-
'கோட்டா வெற்றியடைந்தால் 30 வருடங்களுக்கு கடினம்' “ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிப்பெற்றால் இன்னும் 25 அல்லது 30 வருடங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை காண முடியாது” என, நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து இடம்பெற்ற பிரசார கூட்டமொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், “ ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிப்பெற்றால் இன்னும் 25 அல்லது 30 வருடங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை காண முடியாது. எமது வாழ்க்கையில் அத…
-
- 5 replies
- 708 views
-
-
தமிழ் மக்கள் தமது வாக்குரிமையைத் தவறாது பிரயோகிக்க வேண்டும் என ஐந்து தமிழ் கட்சிகளும் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன. ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தரப்பு யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கும் கூட்டம் இன்று மாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன்போது அனைத்து வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவராத நிலையில் நாளை இடம்பெறவுள்ள தபால் மூல வாக்களிப்பில் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கோர முடியாதுள்ளதாகவும் ஐந்து தமிழ் கட்சிகளும் தெரிவித்துள்ளன. இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி …
-
- 0 replies
- 539 views
-
-
எம்சிசி கொடைக்கு ஒப்புதல் – அமெரிக்கா வரவேற்பு Oct 30, 2019 | 3:23by கி.தவசீலன் in செய்திகள் மிலேனியம் சவால் நிறுவனத்தின், 480 மில்லியன் டொலர் கொடைக்கு அங்கீகாரம் அளிக்க சிறிலங்கா அமைச்சரவை எடுத்துள்ள முடிவுக்கு, அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. சிறிலங்கா அதிபரின் அனுமதி கிடைக்காமையால், நீண்ட நாட்களாக இந்தக் கொடையைப் பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற முடியாமல் இருந்து வந்தது. நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எம்சிசி கொடை உடன்பாட்டுக்கு அமைச்சரவை அனுமதி அளிக்கப்பட்டது. இதுகுறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,” இந்த உடன்பாட்டின் கீழ் சிறிலங்கா உத்தேச த…
-
- 4 replies
- 806 views
- 1 follower
-
-
போரில் பாதிக்கபட்ட குடும்ப உறுப்பினர் என்ற ரீதியில் உங்களின் கவலைகள், கஸ்டங்கள், துயரங்கள் என்பவற்றை நான் அறிந்து கொண்டவனாக இருக்கிறேன். எனவே உங்களது கவலை கஸ்டங்களை தீர்த்து உங்களது வாழ்வை வளமிக்கதாக மாற்றுவதில் எப்பொழுதும் பின்னிற்க போவதில்லை. என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். வவுனியா பிரதேசத்திலே வாழும் அனைத்து மக்களிற்கும் ஒரு விடயத்தை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். உங்களின் எதிர்காலத்தை சிறப்…
-
- 0 replies
- 677 views
-
-
நாடு திரும்பினார் சந்திரிகா – பதற்றத்தில் ‘கோத்தா முகாம்’ Oct 30, 2019 | 3:42by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க லண்டனில் இருந்து, நேற்று முன்தினம் இரவு நாடு திரும்பியுள்ளதை அடுத்து, கொழும்பு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள- குமார வெல்கம போன்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களை சந்தித்து ஆலோசனைகளை நடத்தி வருகிறார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உருவாகியுள்ள சந்திரிகா- வெல்கம அணியின் சிறப்பு மாநாடு, வரும் நொவம்பர் 5ஆம் நாள் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், எந்த வேட்பாளரை …
-
- 2 replies
- 906 views
-
-
தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மோதி 4 மாடுகள் பலி October 30, 2019 தலைமன்னாரில் இருந்து இன்று(30) புதன் கிழமை காலை 7.10 மணியளவில் மதவாச்சியூடாக கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மோதி 4 மாடுகள் உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் மன்னார்-மதவாச்சி பிரதான வீதி இசைமாளத்தாழ்வு பகுதியில் இன்று புதன் கிழமை (30)காலை 8.25 மணியளவில் இடம் பெற்றுள்ளது. தலைமன்னார் புகையிரத நிலையத்தில் இருந்து இன்று புதன் கிழமை காலை 7.10 மணியளவில் குறித்த புகையிரதம் பயணித்துள்ளது.இதன் போதே மன்னார்-மதவாச்சி பிரதான வீதி குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. விபத்தை தொடர்ந்து புகையிரதம் நிறுத்தப்பட்டு பின் மீண்டும் பயணிகளுடன் மதவாச…
-
- 1 reply
- 289 views
-
-
இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க ஐதேகவில் இருந்து நீக்கம் Oct 30, 2019 | 3:16by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்கவை உடனடியாக கட்சியில் இருந்து நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளதாக, கட்சியின் பொதுச்செயலர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அவர் விரைவில் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார் என்றும், அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார். ஐதேகவின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்க முடியாது என்று வசந்த சேனநாயக்க அண்மையில் அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். இந்த நிலையிலேயே வசந்த சேனநாயக்கவை கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக…
-
- 1 reply
- 273 views
-
-
எனது தந்தை கடத்தப்பட்டமைக்கு பின்னணியில் இருந்து செயற்பட்டவர் கோத்தாபயவே ; பார்த்திபன் Published by T Yuwaraj on 2019-10-30 15:32:47 தி.சோபிதன் யாழ்ப்பாணத்தில் பிரபல ஆசிரியராக இருந்த எனது தந்தையான வரதராஜன் கடத்தப்பட்டமைக்கு பின்னணியில் இருந்து செயற்பட்டவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவே என பலமான சந்தேகம் இருப்பதாக யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உருப்பினருமான வ.பார்த்திபன் தெரிவித்தார். சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று கருத்துக்களை தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்ப்…
-
- 1 reply
- 440 views
-
-
கருணா, பிள்ளையான் வழிகாட்டலில் தேர்தல் சதிமுயற்சி – முஸ்லிம் காங்கிரஸ் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறையீடு ஜனாதிபதி தேர்தலின்போது வாக்காளர் மீதான அச்சுறுத்தல்கள், வாக்கு மோசடிகள், வன்முறைகள் என்பனவற்றை மேற்கொள்வதற்கு திட்டமிடப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா, பிள்ளையான் ஆகியோரின் கீழ் முன்னர் செயற்பட்ட இயக்கம் சார்ந்தவர்கள் களமிறக்கப்படும் அபாயம் நிலவுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவிடம் முறையிட்டுள்ளது. அவ்வமைப்பின் தேர்தல் கண்காணிப்பு குழுவின் அரசியல் பகுப்பாய்வாளர் மேரி பொலன்ட், தமது குழுவின் சார்பில் பிரியங்கா முனசிங்கவுடன் இன்று செவ்வாய்கிழமை (…
-
- 1 reply
- 267 views
-
-
தேர்தலில் எந்த ஒரு சிங்கள வேட்பாளருக்கும் வாக்களிக்கும் படி எமது விரலால் சுட்டிக் காட்ட முடியாது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் இன்று மாலை வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நேற்றைய தினம் திங்கட்கிழமை வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட 5 கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பின்னர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட எமது கட்சியின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய பின்னர் கீழ்வரும் தீர்மானங்களை எமது கட்சியின் நிலைப்பாடாக எடுத்து எமது நிலைப்பாட்டை பதின்மூன்று அம்சக் கோரிக்கைகளை முன் வைத்த ஏனைய நான்கு கட்சிகளுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்க…
-
- 3 replies
- 796 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறை – ஆணையாளர் விளக்கம் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தௌிவுபடுத்தியுள்ளார். தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். வாக்களிக்கும் போது இலக்கம் ஒன்றினை பயன்படுத்துமாறு அவர் தெரிவித்துள்ளார். அதற்கு மேலதிகமாக தேவை ஏற்பட்டால் மற்றுமொரு வேட்பாளருக்கு அல்லது இரண்டு வேட்பாளர்களுக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது வாக்குகளை அளிக்க முடியும். அதற்காக, குறித்த வாக்காளர்களுக்கு தனது விருப்பத்தின் பேரில் அவர்களின் பெயர் மற்றும் சின்னத்திற்கு அருகில் முறையே 2 மற்றும்…
-
- 0 replies
- 406 views
-
-
சஜித் ஜனாதிபதியானால் நானே பிரதமர் – ரணில் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் தானே தொடர்ந்தும் பிரதமராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் http://www.dailyceylon.com/191519/
-
- 0 replies
- 274 views
-
-
21/4 தாக்குதல் – தெரிவுக்குழு அறிக்கையை நிராகரித்தார் சிறிலங்கா அதிபர் Oct 30, 2019 | 3:20by கார்வண்ணன் in செய்திகள் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையை தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், தெரிவுக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போதே சிறிலங்கா அதிபர் இதனைக் கூறியுள்ளார். இந்த அறிக்கையை ஏற்க முடியாது எனக் கூறிய அதிபர் சிறிசேன, அதை அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக, பதிவு செய்ய வேண்டாம் என்றும், அமைச்சரவையை கேட்டுக்கொண்டார். அதற்குப் பதிலாக ப…
-
- 0 replies
- 336 views
-
-
சஜித் பிரேமதாசவுக்கு அசாத் சாலி ஆதரவு Oct 30, 2019by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் தேசிய ஒற்றுமை முன்னணியின் தலைவர் அசாத் சாலி, புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்றுக்காலை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நடத்திய பேச்சுக்களை அடுத்து, சஜித் பிரேமதாசவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக அசாத் சாலி தெரிவித்துள்ளார். “நாங்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்று தேசிய ஒற்றுமை முன்னணி விரிவாக ஆலோசனை நடத்தியது. கொலைகாரர்களையும் வெள்ளை வான் கலாச்சாரத்தைத் தொடங்கியவர்களையும் ஆதரிக்க முடியாது என்று நாங்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டோம். சிறுபான்மை சமூகங…
-
- 0 replies
- 233 views
-
-
பொதுமக்களின் துன்பங்களை போக்கும் ஜனாதிபதியாகுவேன்… சஜித் பிரேமதாச October 30, 2019 தனது நிர்வாகத்தின் கீழ் ஒரு தேசிய அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்தப் போவதாகக் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வத்தளை பிரதேசத்தில் நேற்று (29.10.19) பிற்பகல் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், பொது மக்களை கேந்திரமாக கொண்ட சிறந்த பொது சேவையை மேற்கொள்ள தேசிய அபிவிருத்தி திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்நாட்டில் உள்ள அனைத்து பிரதேச சபை அலுவலகங்களிலும் ஜனாதிபதி அபிவிருத்தி பிரிவொன்றை ஸ்தாபித்து, அனைத்து தேர்தல் பிரிவுகளிலும், அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் பொதுமக்களின் தன…
-
- 0 replies
- 273 views
-
-
தபால் மூல வாக்குப்பதிவு நாளை ஆரம்பமாகிறது… October 30, 2019 2019 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு நாளை (31.10.19) முதல் ஆரம்பமாகிறது. அதன்படி, அரச தனியார் நிறுவன ஊழியர்கள் பாதுகாப்பு படையினரின் தபால் மூல வாக்காளர்கள் நாளையும் நாளை மறுதினமும் வாக்களிக்க உள்ளனர். மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தபால் வாக்காளர்களின் தபால் மூல வாக்குப்பதிவு எதிர்வரும் 04 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த தினத்தில் தபால் வாக்களிப்பினை மேற்கொள்ள முடியாத வாக்காளர்கள் எதிர்வரும் 07 ஆம் திகதி வாக்களிக்க கூடிய வாய்ப்பு காணப்படுகிறது. அதன்படி, தமது சேவை…
-
- 0 replies
- 371 views
-
-
தேர்தல் விஞ்ஞாபனத்திலுள்ள விடயங்களை ஏற்றுக்கொள்ளும் பிரதான வேட்பாளர்களில் ஒருவருக்கு எமது இரண்டாவது விருப்பு வாக்கை வழங்கப் போவதாக ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரும் முன்னாள் கிழக்கு ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். இது தொடர்பில் சிவில் சமூக குழுவினர் நேற்று முன்தினம் முதல் பிரதான வேட்பாளர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் வேட்பாளர்களின் முடிவை அறிவிக்க ஐந்து நாட்கள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி வேட்பாளர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் 'நமது கனவு 'எனும் 8 பிரதான திட்டங்களைக் கொண்ட தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று முன்தினம் இலங்கை மன்றக்கல்லூரியில் வெ ளியிடப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த அவர், எமது தேர்தல் விஞ்ஞாப…
-
- 3 replies
- 519 views
-
-
வறுமையை ஒழிப்பதற்கு ஒரு புதிய திட்டம் – சஜித் பிரேமதாச நாட்டில் தொழிநுட்ப புரட்சி ஏற்படுத்தப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்தோடு இலங்கை ஒரு புதிய தொழில்நுட்ப சகாப்தத்தின் முன்னோடியாக இருக்கும் என்றும் அவர் கூறினார். திவுலபிட்டிய பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், வறுமையை ஒழிப்பதற்கான ஒரு புதிய திட்டம் நாட்டில் செயற்படுத்தப்படும் எனவும் கூறினார். தற்போது நாட்டில் ஏராளமானோர் இன்னும் வறுமையில் வாழ்கிறார்கள் என கூறிய சஜித் பிரேமதாச அவர்களின் வறுமையை ஒழிப்பதற்காக சமுர்தி திட்டத்தை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறின…
-
- 0 replies
- 503 views
-
-
எமது ஆட்சியில் மக்களை நோக்கி படையினர் துப்பாக்கிகளை நீட்டமாட்டார்கள் – சரத் பொன்சேகா நாட்டில் வலுவான பாதுகாப்பு முறைமை அமுல்படுத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். திவுலபிட்டிய பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். ரத்துபஸ்வலவில் சுத்தமான குடிநீரைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய படையினர் சிறையில் இருக்க அந்த சம்பவத்திற்கு காரணமான ராஜபக்ஷ சுதந்திரமாக நடமாடித்திரிவதாக சரத் பொன்சேகா குற்றம் சாட்டினார். அத்தோடு சேமலாப நிதியைக் கோரி போராட்…
-
- 0 replies
- 228 views
-
-
இந்துமா சமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்து மையமாக இலங்கை உருவெடுக்க சீனா அனைத்து வகையிலும் ஒத்துழைப்புகளை வழங்கும். டுபாய் - கொழும்பு கப்பல் போக்கு வரத்து அடுத்தகட்ட முக்கிய நகர்வாகவே அமைந்துள்ளன. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு இன மற்றும் கட்சி அரசியலின் அடிப்படையிலனவையல்ல என சீன தூதுவர் ஷெங் யுவான் தெரிவித்தார். இலங்கையை கடன் பொறிக்குள் சிக்க வைத்து சீனா செயற்படுவதாக மேற்குலக நாடுகள் போலி பிரசாரங்களை முன்னெடுக்கின்றன. மறுப்புறம் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் போர்தளமெனவும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜப்பான் மற்றும் ஜேர்மன் நாடுகளின் போர்க்கப்பல்களே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இலங்கை - சீன திட்டங்கள் குறி…
-
- 5 replies
- 1.1k views
-