ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142976 topics in this forum
-
-எஸ்.நிதர்ஷன் தமிழ் அரசியல்வாதிகளிடத்தே திட்டங்கள் இல்லாத கொள்கையே இருப்பதாகத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சிறிசற்குணராஜா, அவர்கள் காகிதப் புலிகளை வைத்து அரசியல் செய்வதையே பார்க்கக் கூடியதாக இருப்பதாகவும் கூறினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமர்ர் வி. தர்மலிங்கத்தின் 34ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு, யாழ்ப்பாணம் - தாவடியில் அமைந்துள்ள தர்மலிங்கத்தின் நினைவுத் தூபியில், நேற்று (02) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திட்டங்கள் எவையும் தமிழ் அரசியல்வாதிகளிடத்தே இல்லையெனவும் தெரிவித்தார். நாட்டில் தேர்தல்கள் வரவிருக்கின்ற…
-
- 1 reply
- 361 views
-
-
-செந்தூரன் பிரதீப் யாழ்ப்பாணத்தில், தற்போது நூதனமுறையில், வழிப்பறி கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்று வருவதாகத் தெரிவித்த யாழ்ப்பாணம் சிறுகுற்றத்தடுப்புப் பொலிஸார், இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில், குறிப்பாக இளைஞர்கள் விழிப்புடன் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர். இது குறித்து தொடர்ந்துரைத்த பொலிஸார், வீதி வழியே மோட்டார் சைக்கிளில் வரும் குழுவினர், அவர்கள் வரும் வழியில் மோட்டார் சைக்கிளில் வரும் இளைஞர்களை மறித்து, “எனது சகோதரியைப் புகைப்படம் எடுத்தாயா? அந்த புகைப்படம் உனது அலைபேசியில் இருகிறது” எனக் கூறி, அலைபேசியை வாங்கி பார்த்துக்கொள்வார்கள் எனவும் தெரிவித்தனர். பின்னர், வீதியில் மக்கள் நடமாட்டம் குறைந்த நேரம் பார்த்து, வாங்கிய அலைபேசியை அபகரித்துக்கொண்ட…
-
- 0 replies
- 411 views
-
-
பிரதமர் ரணிலின் கோரிக்கையை மீறி செயற்படும் சஜித் ஆதரவாளர்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக்க கோரும் போராட்டத்தை நிறுத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். இருந்த போதிலும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான சிலர் செப்டம்பர் 5 ஆம் திகதி குருநாகலில் பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகின்றது. குறிப்பாக சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக்க கோரி அவர்களின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, கூட்டம் ஒன்றுக்காக கட்சியின் உள்ளூர் அரசாங்க பிரதிநிதிகளை அவர்கள் கொழும்புக்கு அழைத்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கட்சித் தலைவராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தின்போது, கட்சியின் ஒப்புதல் இல்லாமல் அனை…
-
- 0 replies
- 374 views
-
-
சஜித் பொறுப்புடன் கருத்துக்களை வெளியிட வேண்டும்: பொன்சேகா அறிவுரை அமைச்சர் சஜித் பிரேதமதாச மிகவும் அவதானத்துடனும் பொறுப்புடனும் கருத்துக்களை வெளியிடுட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளதாவது, அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் சஜித் பிரேமதாஸ கூறினார். தான் ஜனாதிபதியாக வந்தால், பெண்கள் சமூகத்தை கோடீஸ்வரர்காக மாற்றுவதுடன் ஆண்கள் பத்திரிக்கையை வாசித்து கொண்டு இருக்க முடியும் என்றார். மேலும் இந்த நாட்டில் 14 ஆயிரம் கிராமங்கள் உள்ளதாகவும் அதற்கு தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொள்…
-
- 0 replies
- 241 views
-
-
பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – உச்சநீதிமன்றம் பழைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையின் அடிப்படையில், மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாது என்று, சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, உச்சநீதிமன்றம் இது தொடர்பான வியாக்கியானத்தை அளித்துள்ளது. மாகாணசபைகளுக்கான தேர்தலை கலப்பு முறையில் நடத்துவதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போதும், தேர்தல்களை நடத்துவதற்காக, எல்லைகளை வரையறை செய்யும் குழுவின் அறிக்கை இன்னமும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதனால் பழைய முறையில் தேர்தலுக்கு உத்தரவிடும் வாய்ப்பு உள்ளதா என, உச்சநீதிமன்றத்திடம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விளக்கம…
-
- 0 replies
- 297 views
-
-
பேச்சுவார்த்தை கைகூடாது போனால், தனித்துப் போட்டி- மஹிந்த அமரவீர ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் முடியுமான வரையில் உடன்பட்டுச் சென்று தேர்தலில் ஒன்றாகப் போட்டியிட முயற்சிப்பதாகவும், முடியாமல் போனால் தனித்துப் போட்டியிட நடவடிக்கை எடுப்பதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (02) கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். தனித்துப் போட்டியிடுவதற்கு நேர்ந்தால், அதனை எப்படி முன்னெடுப்பது என்பது குறித்து கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். http://…
-
- 0 replies
- 309 views
-
-
ஸ்ரீ ல.சு.கட்சியின் மாநாட்டில் ஜனாதிபதி இன்று விசேட அறிவிப்பு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இன்று (03) இடம்பெறவுள்ள 68 ஆவது தேசிய மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்றைய மாநாடு நடைபெறவுள்ளது. அரசியல் தீர்மானங்களை நாம் எடுக்க வேண்டிய நேரத்தில் உரிய முறையில் எடுப்போம். அதில் யாரும் சந்தேகங்களை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. இந்த மாநாட்டின் போது கட்சியின் எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஒரு வரையறையை அறிவிக்கவுள்ளோம். எதிர்வரும் அமையவுள்ள அரசாங்கத்தின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்…
-
- 0 replies
- 272 views
-
-
வேட்புமனு கோரும் அறிவித்தல் செப்.20 இற்குப் பின் எந்த நேரமும் வெளிவரலாம் அடுத்த அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு வரும் 20ஆம் நாளுக்குப் பின்னர், வெளியிடப்படும் என்று தேர்தல்கள் பணிப்பாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். செப்ரெம்பர் மாதம் 20ஆம் நாளுக்கும், ஒக்ரோபர் 15ஆம் நாளுக்கும் இடைப்பட்ட ஏதேனும் ஒரு நாளில் அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு வெளியிடப்படக் கூடும். என்றும் அவர் கூறியுள்ளார். அதேவேளை, நொவம்பர் 10ஆம் நாளில் இருந்து டிசெம்பர் 8ஆம் நாளுக்கு இடைப்பட்ட காலத்துக்குள், அதிபர் தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, கட்ச…
-
- 0 replies
- 695 views
-
-
ஒக்ரோபர் 11இல் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை ஒக்ரோபர் 11ஆம் நாள் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான சிறப்பு அரசிதழ் அறிவிப்பு காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியினால் வெளியிடப்பட்டுள்ளது. ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கினால், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் நடைபெறவில்லை. இந்த தேர்தலை உடனடியாக நடத்துமாறு உச்சநீதிமன்றம் கடந்தவாரம் உத்தரவிட்டது. http://www.puthinappalakai.net/2019/09/03/news/39840
-
- 0 replies
- 368 views
-
-
ஈ.பி.டி.பி உறுப்பினர்களை சந்தித்த டக்ளஸ் வவுனியா மாவட்டத்தில் செயற்பட்டு வரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுடன் அக்கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவாநந்தா இன்று (02.09) கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விடுதி மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் எதிர்கால அரசியல் நிலைப்பாடுகள், தமது கட்சியினால் முன்னெடுக்கப்படவேண்டிய விடயங்கள், எதிர்வரும் தேர்தலில் செயற்படுவது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் கட்சி உறுப்பிர்களுக்கிடையிலான கருத்துப்பகிர்வுகளும் இடம்பெற்றிருந்தது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, வவுனியா மாவட்ட அமைப்பாளர் திலீபன், கட்சியின் பிரமுகர்கள், ஈ…
-
- 6 replies
- 1.2k views
-
-
வல்வெட்டித்துறையில் ‘ஆழிக்குமரன்’ ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் திறந்து வைப்பு வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘ஆழிக்குமரன்’ ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நீச்சல் தடாகத்தினை இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைத்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளார்கள் 2014 ஆம் ஆண்டு நிதி அமைச்சின் நிதி திட்டத்தின் கீ…
-
- 15 replies
- 1.6k views
- 1 follower
-
-
(இராஜதுரை ஹஷான்) சிறுவர் துஷ்பிரயோகம், போதைப்பொருள் பாவனையற்ற தேசம் நிச்சயம் உருவாக்கப்படும். உலக சந்தையில் அதிக கேள்வியில் உள்ள தொழில்வாய்ப்புக்களை அரசாங்கம் இளம் தலைமுறையினர் மத்தியில் அறிமுகப்படுத்தவில்லை. இதுவே இன்றைய தொழிலில்லா பிரச்சினைக்கு பிரதான காரணம் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார். அத்துடன் எமது அரசாங்கத்தில் அனைத்து அடிப்படை பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும். நாட்டு மக்கள் சுயமாக பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைவதற்கு தேவையான செயற்திட்டங்கள் குறுகிய காலத்திற்குள் செயற்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் தாதியர் சங்கத்தின் தேசிய மாநாடு கொழும்பில் உள்ள கண்காட்சி க…
-
- 2 replies
- 467 views
-
-
பலாலி விமான நிலையம்: பயணத்துக்கா – பரப்புரைக்கா? தற்போதைய அரசாங்கம் தனது பதவிக்காலத்தின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக விரிவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது. பலாலி விமான நிலையம் பற்றிய செய்திகள் இப்போது ஊடகங்களில் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன. இங்கிருந்து தென்னிந்திய நகரங்களுக்கு மாத்திரமன்றி, மத்திய கிழக்கு, அவுஸ்ரேலியா, சீனாவுக்கும் பயணங்களை மேற்கொள்ள முடியும் என்றும் செய்திகளில் கூறப்படுகிறது. வடக்கிலுள்ள மக்களின் நலன்கருதி, இந்த அபிவிருத்திப் பணி மேற்கொள்ளப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது. பலாலி விமான நிலையத்தின் ஊடாக சர்வதேச விமான சேவைகள் இடம்பெறுவது, வடக்கில் உள்ள மக்கள…
-
- 6 replies
- 1.2k views
- 1 follower
-
-
படத்தின் கடந்த 35 வருடங்களாக இலங்கையுடன் மிகவும் நெருங்கிய உறவை பேணி வந்த அமெரிக்க பிரஜையான லுவிஸ் எலன், இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவராக இருக்கிறார். மாணிக்கக்கல் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள லுவிஸ் எலன், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இலங்கைக்கு வருகை தருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இலங்கையில் லுவிஸ் எலனுக்கு பல நெருங்கிய நண்பர்கள் இருக்கின்றனர். தனது வாழ்க்கை முன்னேற்றம் அடைவதற்காக இலங்கை வழங்கிய பாரிய ஒத்துழைப்புக்கு, நன்றிக் கடன் செலுத்தும் வகையில், லுவிஸ் எலன், இரத்தினபுரி வைத்தியசாலையின் சிறுவர் பிரிவிற்கான கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கான ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். இலங்கையிலுள்ள அவரது நண்பர்களின…
-
- 0 replies
- 517 views
-
-
சஜித்தை வேட்பாளராக அறிவிக்காவிட்டால் பதவி துறக்கத் தயாராகும் அமைச்சர்கள்! ஐ.தே.க.யின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை, இந்த மாத இறுதிக்குள் அறிவிக்காவிட்டால், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் அனைவரும் கூட்டாக பதவி விலக தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹெஷா விதானகே தெரிவித்துள்ளார். ஐ.தே.க.யில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஹெஷா விதானகே மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை அறிவிக்கும் விடயத்தை, கட்சி தொடர்ந்து பிற்போட்டு வருகின்றது. ஆகையால் சஜித்தின் ஆதரவாளர்களான அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் …
-
- 2 replies
- 636 views
-
-
-எஸ்.நிதர்ஷன் இந்து, பௌத்த, கலாசார பேராவையால், அச்சுவேலியில், இன்று (02), 2ஆம் மொழி கற்கை நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இதன் போது, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தினதேரர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, கற்கை நிலையத்தைத் திறந்து வைத்தார். இந்துக் கலாசாரப் பேரவையின் வடமாகாண தலைமைக் காரியாலயமாக இந்த நிலையம் விளங்கும் என்பதுடன், எதிர்வரும் காலத்தில் வடமாகாணத்தில் உள்ள ஏனைய மாவடங்களிலும், இந்த நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிலையத்தில் சிங்களம், ஆங்கில மொழிக் கற்கைநெறிகளை, மாணவர்கள் இலவசமாகக் கற்கமுடியும். இதுவரை காலமும் குறித்த நில…
-
- 0 replies
- 465 views
-
-
நேரடியாக தமிழ் மக்களுடைனேயே பேச்சு – ஜே.வி.பி. தமிழ அரசியல் கட்சிகளுடன் பேரம்பேசி தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஆகவே தமிழ அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை விடவும் தமிழ் மக்களுடன் நேராடியாக பேசி இணக்கம் காணவே தாம் விரும்புவதாகவும் கூறினார். தேர்தலில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அதன் பிரகாரம் விரைவாக வடக்கு கிழக்கில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கபடும் என கூறிய அவர், தேசிய அரசியல் கொள்கையின் பிரகாரம் இந்த வேலை திட்டங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். …
-
- 2 replies
- 436 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் (30) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய ஜனாதிபதி மைத்திரி யாழ்ப்பாணத்தில் நடந்த பொது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில் தமிழ் மக்களை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஏமாற்றிவிட்டது எனப் பகி ரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் தமிழ் மக்கள் அதீத கவனம் செலுத்துவர் என்பது உண்மை. அதேநேரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தமிழ் மக்களின் விடயத்தில் கரு சனை கொண்டிருக்கவில்லை என்ற மனக் கிலேசம் இருக்கவே செய்கிறது. அரசியல்கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கவில்லை. அதிலும் குறிப்பாக ஆனந்தசுதாகரன் என்ற தமிழ் அரசியல் கைதியின் பிள்ளைகள் தங்கள் தாயை…
-
- 4 replies
- 844 views
-
-
யாழ். புத்தகத் திருவிழா அடுத்த வருடம் பிரமாண்டமாக நடத்த முடிவு – ஆளுநர் யாழ். புத்தகத்திருவிழா அடுத்த ஆண்டும் இதேபோன்று மிகப் பிரமாண்டமாய் நடத்தப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று வடக்கின் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற யாழ். புத்தகத் திருவிழாவின் இறுதி நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அங்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வட மாகாண ஆளுநரின் எண்ணக்கருவிற்கு அமைய, இலங்கை புத்தக விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘யாழ் புத்தகத் திருவிழா 2019’ கடந்த 27ஆம் திகதி ஆரம்பமானது. யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற யாழ். புத்தகத் திருவிழாவின் இறு…
-
- 0 replies
- 386 views
-
-
கால நேர சூழ்நிலைகளை கவனத்திற் கொண்டு புத்தி சாதூரியமாக செயற்படுங்கள்… September 2, 2019 முஸ்லிம் பெண்களுக்கு ஜம்இய்யத்துல் உலமாவின் வேண்டுகோள்! முகத்திரை அணிந்து பொது இடங்களுக்குச் செல்வதால் ஏற்படும் அசெளகரியங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் கால நேர சூழ்நிலைகளை கவனத்திற் கொண்டு புத்தி சாதூரியமாகவும், அவதானத்தோடும் நடந்து கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அனைத்து முஸ்லிம் பெண்களையும் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையில் செயலாளர் அஷ்ஷைக் எச்.உமர்தீன் விடுத்துள்ள அறிக்கையில், நாட்டில் நாடைபெற்ற துன்பியல் நிகழ்வைத் தொடர்ந்து நாட்டில் அசாதார நிலை காணப்பட்டதுடன், அவசரகால சட்டமும் அமுல் செய்யப்பட்டது…
-
- 0 replies
- 445 views
-
-
தனிக் குடும்ப தீர்மானத்தை விட ஐ.தே.க. தீர்மானம் சிறந்தது- சம்பிக்க ஒரு தனிப்பட்ட குடும்பம் தேனீர் அருந்திக் கொண்டு நாட்டின் கொள்கையை தீர்மானிப்பதை விடவும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் புத்திஜீவிகள் பலரும் இருந்து தீர்மானம் ஒன்றுக்கு வருவது சிறந்தது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். அக்கட்சிக்குள் நெருக்கடி நிலைமை இல்லை. கடந்த 31 ஆம் திகதி வேட்பாளர் குறித்து அறிவிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கூறியிருந்தார். இருப்பினும், அதனை அறிவிப்பதற்கு இன்னும் காலம் தேவையாக உள்ளதாக அவர் பின்னர் அறிவித்துள்ளார். அடுத்த வாரத்துக்குள் வேட்பாளர் குறித்து தீர்வொன்றை அக்கட்சி முன்வைக்கும் எ…
-
- 0 replies
- 303 views
-
-
அவுஸ்ரேலிய போராட்டங்களை நிராகரிக்கும் டட்டன்- நாடு கடத்துவதில் விடாப்பிடி சிறிலங்காவுக்கு தமிழ்க் குடும்பம் ஒன்றை நாடு கடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவுஸ்ரேலியாவின் பல்வேறு நகரங்களிலும் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. நடேசலிங்கம் – பிரியா தம்பதிகள் மற்றும் அவர்களின் 4 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளை நாடுகடத்துவதில் அவுஸ்ரேலிய அரசு விடாப்பிடியாக உள்ளது. கடந்த சனிக்கிழமை தனி விமானத்தில் ஏற்றப்பட்ட இந்தக் குடும்பத்தினரை, சிறிலங்காவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. விமானம் புறப்பட்ட பின்னர் நீதிபதி ஒருவர் தொலைபேசி மூலம் பிறப்பித்த உத்தரவினால் அந்த விமானம் மீண்டும் டார்வினுக்குத் திருப்பப்பட்டது. இதையடுத்து, அந…
-
- 0 replies
- 366 views
-
-
கோத்தாவுடன் மோதுகிறார் ரணில்? தேசிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளராக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே போட்டியிடக் கூடும் என, கட்சியின் மூத்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கட்சித் தலைவர் போட்டியிட மறுத்தால் அல்லது பரப்புரை மேற்கொள்ள முடியாமல் பலவீனமான நிலையில் இருந்தால் தவிர, கட்சியின் தலைவரே அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஐதேகவின் யாப்பில் கூறப்பட்டுள்ளது எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. கட்சியின் செயற்குழு மற்றும் நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் மத்தியில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், ரணில் விக்ரமசிங்கவுக்கே ஆதரவு கிடைக்கும் என்றும் தனது பெயரை வெளியிட விரும்…
-
- 0 replies
- 404 views
-
-
Monday, September 2, 2019 - 6:00am அவதானமாக நடக்குமாறு உலமா சபை கோரிக்கை சட்ட மாஅதிபரின் ஆலோசனையை நாடுகிறது பொலிஸ் முகத்திரை(புர்கா,நிகாப்)அணிந்துபொது இடங்களுக்குச் செல்வதால் ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்த்து கொள்ளுமாறும் காலநேர சூழ்நிலைகளைக் கவனத்தில் கொண்டு புத்திசாதுரியமாகவும் அவதானத்தோடும் நடந்துகொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கோரிக்கை விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து முகத்தை மறைக்கும் நிகாப் மற்றும் புர்க்கா என்பவற்றுக்கு அரசாங்கம் தடைவிதித்திருந்தது. அவசர கால சட்டம் நீடிக்கப்படாத நிலையில் முகத்திரை தடை நீக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந் நிலையில் முகத்திரை அணிந்து காலிமுகத்திடலுக்கு சென்ற நான்கு பெண…
-
- 0 replies
- 463 views
-
-
களனி ரஜமஹா விகாரையின் அறங்காவலர் சபையின் தலைவர் பதவியிலிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நீக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த விகாரையின் அறங்காவலர் சபையின் தலைவர் பதவியிலிருந்து ரணிலை நீக்குவதற்கு களனி ரஜமஹா விகாரையின் பெரும்பான்மையினரின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/63840 14 . 08. 2019 - வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோரை ஏமாற்றிய ரணில் (பிரதமர் - சிறிலங்கா ) Ranil should resign from UNP leadership: Upul Jayasuriya Former Bar Association of Sri Lanka (BASL) President Upul Jayasuriya on behalf of United Lawyers Association urged Prime Minister Ranil …
-
- 0 replies
- 279 views
-