ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143259 topics in this forum
-
Monday, September 23, 2019 - 12:02pm அரசாங்கத்தில் பதவிகள் வகித்தும் பங்காளிகளாக இருந்தும் முஸ்லிம் சமூகம் முகம் கொடுக்கின்ற பழைய பிரச்சினைகளுக்கும் புதிய நெருக்கடிகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை நீடிப்பதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்று எதிர்க்கட்சியில் அமர்ந்து அரசாங்கத்திற்கு அழுத்தும் கொடுத்தும் ஆதரவளித்தும் செயலாற்றுவது குறித்து முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளும் முஸ்லிம் சமூகமும் சிந்திக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம். ஸுஹைர் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்தரப்பு ஆசனத்தில் அமர்ந்து தமிழ் சமூகத்திற்கு ஆற்றியுள்ள சேவைகளில் ஒரு பங்கைக்கூட ஆளுங்கட்சி அமைச்ச…
-
- 0 replies
- 390 views
-
-
பதற்றத்திற்கு மத்தியில், ஞானசார தேரர் தலைமையில்.. பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு வருகை! பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு சென்றுள்ளனர். முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த மதகுரு உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் மஹரகம வைத்தியசாலையில் உயிரிழந்திருந்தார். உயிரிழந்த பௌத்த மதகுருவின் பூதவுடலை ஆலய வளாத்தில் தகனம் செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்து பிரதேச மக்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர். இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் இந்த விவகாரம் நேற்று விசாரணைக்கு எடு…
-
- 3 replies
- 924 views
-
-
ஐதேக வேட்பாளரை தெரிவு செய்ய வியாழன்று இரகசிய வாக்கெடுப்பு Sep 23, 2019 | 2:39by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் ஐதேகவின் அதிபர் வேட்பாளரை, வரும் வியாழக்கிழமை கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்வதற்கு, முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றிரவு அலரி மாளிகையில், ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடலை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு நடந்த இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர்கள் வஜிர அபேவர்த்தன, லக்ஸ்மன் கிரியெல்ல, ரவி கருணாநாயக்க, ஜோன் அமரதுங்க, தயா கமகே ஆகியோர் பங்கேற்றனர். இரகசிய வாக்கெடுப்பை ந…
-
- 0 replies
- 268 views
-
-
சர்வாதிகாரி ஒருவர் அதிபராக சுதந்திரக் கட்சி அனுமதிக்காது – தயாசிறி Sep 23, 2019 | 2:41by கி.தவசீலன் in செய்திகள் ஒரு சர்வாதிகாரியை நாட்டின் அதிபராக உயர்த்துவதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி தயாராக இல்லை என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் பேசும் போது அவர் இவ்வாறு கூறினார். “வரும் தேர்தல்களில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி பேச்சுக்களை நடத்தி வருகிறது. ஆனாலும், அதில் இணைந்து கொள்வதற்கு கண்மூடித்தனமாக ஒப்புக்கொள்ளமாட்டோம். பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதற்கு, ச…
-
- 0 replies
- 243 views
-
-
திருகோணமலையில் நீர்க்காகம்- X கூட்டுப் பயிற்சியின் இறுதி ஒத்திகை விமானப்படை மற்றும் கடற்படையுடன் இணைந்து இராணுவம் நடத்தி வரும் நீர்க்காகம்- X கூட்டுப் பயிற்சியின் இறுதி ஒத்திகை திருகோணமலையில் இடம்பெறவுள்ளது. திருகோணமலை குச்சவெளி கடற்கரையில் இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு இந்த ஒத்திகை இடம்பெறவுள்ளது. செப்டெம்பர் 3ஆம் திகதி ஆரம்பமாகிய நீர்க்காகம்- X கூட்டுப் பயிற்சி நாளையுடன் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில், பிரமாண்டமான இறுதி ஒத்திகைப் பயிற்சி இன்று நடைபெறவுள்ளது. மூன்று வாரகால கூட்டுப் பயிற்சியில் 100 வெளிநாட்டுப் படையினர், நேரடியாகவும் பார்வையாளர்களாகவும் பங்கேற்றனர். இலங்கையின் 2400 இராணுவத்தினர், 400 கடற்படையினர், 200 விமானப்படையினரும் இந்த…
-
- 0 replies
- 295 views
-
-
இன்றைய செய்திகள் ஒரே பார்வையில் 23.09.2019
-
- 0 replies
- 393 views
-
-
-க. அகரன் தமிழர்களுக்கு கல்வி ஒன்று தான் கையில் இருக்கும் இறுதி ஆயுதமெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், அதன் மூலம் தான் தமிழர்கள் மீண்டெழ முடியுமெனவும் கூறினார். வவுனியா சைவ பிரகாச ஆரம்பப் பாடசாலையின் கற்றல் வள நிலையத்தை இன்று (09) திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால், அந்த இனத்தின் கல்வியில் தான் கை வைக்க வேண்டுமெனவும் அதனால் தான் தமிழர்களின் இருப்பை உருக்குலைப்பதற்காக, யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அத்துடன், ஓர் இனம் தன்னைப் பாதுகாத்து கொள்ள வேண்டுமானால், முதலில் தன்னுடைய கலாசாரம், மொழியை பேணிக்காக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், …
-
- 12 replies
- 2k views
-
-
வடக்கில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்: வீதி ஒழுங்கு பாதுகாப்பு வாரம் பிரகடனம் வட மாகாணத்தில் அதிகரித்துச் செல்லும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காக வீதிப்பாதுகாப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி தொடக்கம் 13 ஆம் திகதி வரை இந்த வீதிப் பாதுகாப்பு வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இப்பாதுகாப்பு வாரத்தில் பொதுமக்களுக்கு அறிவூட்டும் வேலைத்திட்டங்கள் பல மேற்கொள்ளப்படவுள்ளதோடு, வட மாகாண ஆளுநர் செயலகம் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பான அறிவூட்டும் வேலைத்திட்டங்களுக்கு மேலதிகமாக பாடசாலை மாணவர்களிடையே போக்குவரத்துப் பிரிவை ஸ்தாபிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளமை முக்கிய அம்சமாகும். https://w…
-
- 0 replies
- 285 views
-
-
தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரம் கொழும்பில் திறப்பு! கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரமாகக் கூறப்படும் தாமரைக் கோபுரம் திறந்துவைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (திங்கட்கிழமை) மாலை இந்த கோபுரத்தை திறந்து வைக்கவுள்ளார். 356 மீற்றர் உயரமான இந்த கோபுரம் 12 பில்லியன் ரூபாய் முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதில் 80 வீதமான நிதி சீன அரசாங்கத்தின் நன்கொடையாகும். இந்த கோபுரத்தின் நிர்மாணப்பணிக்கான அனைத்து ஆலோசனை சேவைகளையும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் வழங்கி இருந்தனர். நட்சத்திர விடுதி, ஹோட்டல்கள், கேட்போர் கூடம், மாநாட்டு மண்டபம் உள்ளிட்ட பல வசதிகள் இந்தத் தாமரைக் கோபுரத்தில் காணப்படுகின்றன. …
-
- 15 replies
- 2.7k views
- 1 follower
-
-
முல்லையில் பிக்குவின் உடலை தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என காவற்துறையில் முறைப்பாடு… September 21, 2019 புற்றுநோய் காரணமாக உயிரிழந்த பௌத்த பிக்குவின் உடலை முல்லைத்தீவில் தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என முல்லைத்தீவு பொலிசாரிடம் பொதுமக்கள் முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளனர். முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் அடாத்தாக குருகந்த புராண ரஜமகா பௌத்த விகாரை எனும் பெயரில் விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்து முல்லைத்தீவு காவற்துறையினர் மற்றும் தொல்லியல் திணைக்களம் என்பவற்றின் ஆதரவுடன் பிள்ளையார் ஆலய வழிபாடுகளுக்கு செல்பவர்களுடன் முரண்பாடுகளை தோற்றுவித்து வந்த சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான மேதாலங்கார கீர்த்தி புற்று நோய் காரணமாக கொழும…
-
- 1 reply
- 696 views
-
-
நாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு.. September 22, 2019 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, பாஜகவின் ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி, பாஜக தேசிய செயலாளர் ராம் மாதவ் முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இலங்கைக்கு கடந்த சில வாரங்களாக இந்திய அரசியல் தலைவர்கள் தொடர்ந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மகள் திருமணத்தில் பங்கேற்க திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் கொழும்பு சென்றிருந்தனர். பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம…
-
- 0 replies
- 407 views
-
-
இராணுவ தளபதி – ஆளுநர் சந்திப்பு September 20, 2019 -மயூரப்பிரியன் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது போருக்கு பின்னரான வடமாகாணத்தில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நடவடிக்கைககள் குறித்து இராணுவ தளபதி, ஆளுநருக்கு இதன்போது விளக்கமளித்ததுடன் தனது தலைமைத்துவத்தின் கீழ் அதனை தொடந்தும் முன்னெடுத்து செல்வேன் என்றும் குறிப்பிட்டார். 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னர் இராணுவத்தின் செயற்பாடுகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டதை குறிப்பிட்ட ஆளுநர் வடம…
-
- 2 replies
- 625 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, அரசியல் கைதிகளை விடுதலை செய், இனஅழிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறியச் சர்வதேச விசாரணையை மேற்கோள் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய நடைப்பயணம் ஒன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியினால் இன்றையதினம் காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது. வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியிலிருந்து ஆரம்பமாகிய நடைப்பயணம், தியாக தீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவு திடலைச் சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஊர்தியில் அமைக்கப்பட்டிருந்த திலீபனின் திரு…
-
- 1 reply
- 473 views
-
-
நுண் நிதி நிறுவனங்கள் தொடர்பாண விழிப்புணர்வு வீதி நாடகம்… September 21, 2019 மாந்தை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட தேவன் பிட்டி கிராமத்தை சேர்ந்த அதிகளவான குடும்பங்கள் பெண்தலைமைத்துவ குடும்பங்களாக காணப்படுகின்ற நிலையில், குறித்த கிராமத்தை சேர்ந்த அதிகளவான பெண்கள் நுண்நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளனர். இந்தப் பெண்கள் மத்தியில் நுண் நிதி கடன் தொடர்பாகவும் நுண் நிதி நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி தொடர்பாக தேசிய ரீதியில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் தொடர்பாகவும் தெளிவு படுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட வீதி நாடகம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (MSEDO) ஏற்பாட்டில் அதன் குழு தலைவர்…
-
- 1 reply
- 552 views
-
-
ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை இன்று முதல் செலுத்த முடியும் என அறிவிப்பு! ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை இன்று(வியாழக்கிழமை) முதல் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி நண்பகல் வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் 7ஆம் திகதி வேட்பு மனுக்கள் கோரப்படவுள்ளன. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 7 ஆம் திகதி காலை 9 மணி முதல் 11 மணி வரையான காலப்பகுதிக்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மன…
-
- 1 reply
- 297 views
-
-
கேப்பாபுலவு காணிகள் விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல் கேப்பாபுலவு மக்கள் , முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையக இராணுவ உயர்அதிகாரி மற்றும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (20) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது இராணுவத்தினரால் விடுவிக்கப்படாத கேப்பாபுலவு மக்களின் 59.5 ஏக்கர் காணிகள் விடுவிப்பது தொடர்பில் ஆராய்ந்ததுடன் அப்பகுதி மக்கள் தங்களது காணிகளை அடையாளங்காண்பதற்காக இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். கேப்பாபுலவில் காணிகளை இனங்கண்டு அவை இராணுவத்திற்கு தேவையானதாக அமையின் அவற்றுக்கு இதே வளம் கொண்ட மாற்றுக்காணிகளையும் வாழ்வாதரமும் வழங்க முன்வருவதாக ஆளுநர் குறிப்பிட்டார். இதன்போது அப்பகுதி …
-
- 0 replies
- 451 views
-
-
முள்ளிவாய்க்காலில் இலங்கைக்கு அமைதி வேண்டி விஷேட பிரார்த்தனை முள்ளி வாய்க்கால் பகுதியில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை இலங்கைக்கு அமைதி வேண்டி விசேட பிரார்த்தனை நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்களைக் காவு கொண்ட முள்ளி வாய்க்கால் மேற்கு கனிஷ்ட வித்தியாலயத்தின் மைதானத்தில் நேற்று மாலை 6.30மணி முதல் இன்று அதிகாலை 5மணிவரையும் இவ்விசேட பிரார்த்தனை எழுப்புதலின் துதி ஆராதனைப் பெருவிழா நிகழ்வு இடம்பெற்றுள்ளது. ஆரம்ப நிகழ்வில் இறம்பைக்குளம் ஈஷி மிஷன் ஆலயத்தின் பிரதான பிஷப் பி. எம். இராஜசிங்கம் விசேட பிரதிநிதியாகக் கலந்துகொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். எஸ். சி…
-
- 0 replies
- 364 views
-
-
இந்தியாவுக்கு அகதிகளாக சென்றவர்கள் தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன், பேச்சுவார்த்தைகள் நடத்தி விரைவில் உரிய தரவுகளை திரட்டி பாராளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கையெடுப்பதாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்தது. 2009 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுவரை அகதிகளாக இந்தியாவுக்கு சென்றவர்களில் 7,753 பேர் இலங்கைக்கு திரும்பியுள்ளனர். மேலும் 11,356 இலங்கைக்கு திரும்ப விண்ணப்பித்திருந்ததாகவும் அமைச்சு குறிப்பிட்டது. அத்துடன் 1949 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை 5,10,000 பேர் எனவும் அமைச்சு தெரிவித்தது பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது, இந்தியாவ…
-
- 0 replies
- 283 views
-
-
Friday, September 20, 2019 - 11:15am 100வருடங்களுக்கு மேற்பட்ட பழைய விகாரைகளை புண்ணிய பூமிகளாக பிரகடனப்படுத்தி, அவ்விகாரைகளுக்கு தேவையான உதவிகளைப் பெற்றுக் கொடுக்க வேலைத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தவுள்ளது. அத்துடன் புத்த சாசனத்தை பாதுகாத்துக் கொண்டு ஏனைய சமயங்களையும் பாதுகாப்பதே எமது அரசின் நோக்கமாகும் என புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார். வெலிகம நகர மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், …
-
- 0 replies
- 329 views
-
-
நல்லாட்சியை நடத்தியவர்களின் செயற்பாடு வருத்தமளிக்கின்றது – சுமந்திரன் அதிருப்தி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை ஒழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நல்லாட்சியை நடத்தியவர்களின் செயற்பாடு வருத்தமளிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த விசேட அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது என்ற யோசனைக்கு பெரும்பாலான அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் டுவிட்டரில் கருத்து தெரிவித்த அவர் “நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை தொடர்பாக நல்லாட்சியை நடத்தியவர்களின் செயற்பாடு வருத்த…
-
- 12 replies
- 941 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption கோப்புப் படம். இலங்கையில் முகத்தை மூடி ஆடை அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விடயம் தொடர்பில் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமிற்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, அவசர கால சட்டம் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, முகத்தை முழுமையாக மறைத்து அணியும் ஆடைகள் மற்றும் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் தலைகவசங்களை அணிவற்கும் பாதுகாப்பு பிரிவினர் தடை விதித்திருந்தனர். …
-
- 0 replies
- 489 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு மாதாந்த கொடுப்பணவு வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு மாதாந்த கொடுப்பணவாக 6000 ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. https://www.virakesari.lk/article/65222
-
- 1 reply
- 394 views
-
-
கிளிநொச்சி, சிவபுரம் பகுதியில் கடற்படையினரால் அகழ்வு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விடுதலை புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் முக்கிய ஆவணங்கள், பெறுமதியான பொருட்கள் காணப்படலாம் என கடற்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் மற்றும் கண்டாவளை பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவையாளர் ஆகியோர் முன்னிலையில் கடற்படையினரால் குறித்த அகழ்வு பணிகள் முன்னடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த அகழ்வு பணியில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் த.சரவணராஜா பார்வையிட…
-
- 0 replies
- 415 views
-
-
யாழ் பல்கலை முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்… September 20, 2019 பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பினால் அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலிலும் 10.09.2019இலிருந்து தொடர் தொழிற்சங்கப் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அதன் ஒரு பகுதியாக விரைந்து தீர்வைப் பெறுவதற்கு பல்கலைக்கழகங்களின் அண்மைய நகரங்களில் சுவரொட்டிகள், பதாதைகளினை முன்நிறுத்தி வெள்ளிக்கிழமை 20.09.2019 இன்று பாரியளவிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படும். அந்த வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும், பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் யாழ் பல்கலை முன்றலில் இருந்து பரமேஸ்வரா சந்திவரை ஓர் கவனயீர்ப்பு பேரணி இன்று காலை 10 மணியளவில் நடத்தப்படும். பல்கலைக்கழக ஊழ…
-
- 0 replies
- 366 views
-
-
சஜித்துடன் பேச்சுவார்ததையில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை: சுதந்திரக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக அமைச்சர் சஜித் பிரேமதாஸவுடன் பேசவேண்டிய தேவை எமக்கு கிடையாதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. பொதுஜன பெரமுனவின் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், மக்கள் விடுதலை முன்னணி, ஏனைய கட்சிகள், சிவில் அமைப்புகள் ,தொழில் சார் நிபுணர்கள் போன்றோருடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளோம். ஆனால் ஒருபோதும சஜித் பிரேமதாஸவுடன் பேச்சுவ…
-
- 0 replies
- 326 views
-