ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
கொடூர பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு 10 வருட சிறைத்தண்டனை… September 1, 2019 பல்கலைக்கழக மாணவர்களை சித்திரவதைக்கு உள்ளாக்குவோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளதாக உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2018 – 2019 ஆம் கல்வி ஆண்டிற்காக பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களை உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் சித்திரவதைக்கு உட்படுத்தும் அல்லது அவ்வாறான செயற்பாட்டுடன் தொடர்புபடும் மாணவர்களையும், இந்தச் செயற்பாட்டிற்கு ஒத்தாசை வழங்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் யாராக இருப்பினும் அவர்களையும் உயர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக, உயர் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எம்.ரி.கே. மாயாதுன்னே தெரிவித்துள்ளார். கொடூர பகிடிவதையில் …
-
- 6 replies
- 593 views
-
-
(எம்.மனோசித்ரா) நாட்டின் தேசிய கடன் பிரச்சினையை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லப் போவதில்லை எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மாறாக 5 வருடத்திற்குள் நாட்டில் அனைத்து கடன்களையும் சரி செய்து நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவேன் என்றும் கூறினார். குளியாப்பிட்டி போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். நான் கால்வாய் புனரமைப்பவன் இல்லை. நாட்டைக்கட்டியெழுப்புவபன். அதுவே என்னுடைய இலக்கு. எனவே நாட்டைக் கட்டியெழுப்ப விரும்பும் அனைவரும் எம்முடன் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன். இனவாதத்தை தூண்டிவிட்டு அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற நாம் முயற்சிக்கவில…
-
- 0 replies
- 431 views
-
-
-எஸ்.நிதர்ஷன் ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து மக்களும் வாக்களிக்க வேண்டுமெனத் தெரிவித்த நவசமசமாஜ கடசியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன, ஏனெனில் வாக்களிப்பு குறைந்து இரண்டாவது விருப்பு வாக்குகளை எண்ண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பாரிய கலவரம் வெடிக்குமெனவும் எச்சரிக்கை விடுத்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில், நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஜனாதிபதித் தேர்தலில், இன வாதம், மத வாதம், பாசிச வாதம் போன்றவற்றைக் கொண்டு வெற்றி பெற ஒவ்வொரு கட்சிகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் இதனால் நாடு மிக மோசமான நெருக்கடிக்குள் செல்லப் போகிறதெனவும் கூறினார். எனவே, வடக்கு - கிழக்கு தமிழ் ம…
-
- 0 replies
- 358 views
-
-
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதியை வழங்குவதற்காக இலங்கைக்கு வெளியே பொறிமுறையை அமைக்குமாறு நான்கு புலம்பெயர் அமைப்புக்கள் சர்வதேச சமுகத்திடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன. சர்வதேச காணாமலாக்கப்பட்ட தினத்தினை முன்னிட்டு பிரித்தானிய தமிழர் பேரவை, அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், கனேடிய தமிழ் காங்கிரஸ், அமெரிக்க தமிழர் செயற்பாட்டு குழு ஆகிய நான்கு புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் 900நாட்களுக்கு அதிகமாக தமது வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கும் தாய்மார்கள் உள்ளிட்ட உறவினர்களுக்கு நாம் பூரண ஆதரவினை வழங்குகின்றோம். அத்துடன் புலம்…
-
- 0 replies
- 213 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக போராட்டத்திற்கு ஆசி வேண்டி பூஜை வழிபாடும், கவனயீர்ப்பு போராட்டமும் மலையக தன்னெழுச்சி இளைஞர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது நோர்வூட் சின்ன எலிபடை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக இன்று மதியம் 1 மணியளவில் இடம்பெற்றிருந்தது. கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசு காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து இதுவரை எந்த ஒரு தீர்க்கமான முடிவையும் அவர்களின் உறவினர்களுக்கு வழங்கவில்லை. எனவே இதற்கு உரிய தீர்வினை வெகுவிரைவில் அரசாங்கம் வழங்க வேண்டும் என இதன்போது போராட்டகா…
-
- 0 replies
- 210 views
-
-
யாழிற்கும் கொழும்புக்கும் இடையே மற்றுமொரு ரயில் சேவை. யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையில் தற்போது இடம்பெற்றுவரும் ரயில் சேவைக்கு மேலதிகமாக ஒரு சேவை இணைக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ரயில் சேவை எதிர்வரும் 5ஆம் திகதிக்கு பின்னர் இடம்பெறவுள்ளதாகவும் ரயில்வே திணைக்கள தரப்பினர் தெரிவித்துள்ளனர். தற்போது கொழும்பிலிருந்து மாலை 3.50 மணிக்கு வவுனியா நோக்கி பயணிக்கும் ரயில் சேவையே யாழ்ப்பாணம் வரை விஸ்தரிக்கப்படவுள்ளது. அதேபோல காலை 5.45 மணிக்கு வவுனியாவிலிருந்து கொழும்புக்கு பயணிக்கும் ரயில் சேவையை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு அனுப்ப திட்டமிடப்படுகின்றது. இந்நிலையில் மேற்படி இரு சேவைகளும் மக்களுக்கு பயன்படும் வகையில், நேரம…
-
- 0 replies
- 535 views
-
-
"ராஜபக்ஷ தரப்பினரை நாம் தனிமைப்படுத்துவோம்": எமது வெற்றி வேட்பாளரை 7ஆம் திகதி களமிறக்குவோம் (நமது நிருபர்) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் பரந்துபட்ட கூட்டணியை அமைத்து டிசம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் எமது வெற்றி வேட்பாளரை அறிவிப்போம். நாம் ராஜபக்ஷவை தனிமைபடுத்தவதோடு எமது வேட்பாளர் மைத்திரிபோலிருக்க மாட்டார் என்று அமைச்சர் ராஜித தெரிவித்தார். குளியாப்பிட்டியவில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், எமது வேட்பாளர் யார்? என எங்கு சென்றாலும் வினவுகின்றார்கள். நாம் பரந்து பட்ட கூட்டணியை அமைத்து கடந்த முறைபோன்று வெற்றிபெறும் வேட்பாளரை தக்க தருணத்தில் களமிறக்குவ…
-
- 0 replies
- 315 views
-
-
’90 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது’ Editorial / 2019 ஓகஸ்ட் 31 சனிக்கிழமை, பி.ப. 03:52 Comments - 0 30 வருடகாலமாக இடம்பெற்று வந்த யுத்தம் நிறைவடைந்தபோது, இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருந்த காணிகளில், 90 சதவீதமான காணிகள், உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது என, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார். யாழ். முற்றவெளியில், நேற்று (30) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற, “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், ஒவ்வொரு முறையும் தன்னைச் சந்திக்கும் போ…
-
- 1 reply
- 754 views
-
-
வலிந்து காணாமலாக்கப்படும் விடயத்தில் இலங்கை மிக நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினம் நேற்று வெள்ளிக்கிழமை நினைவு கூறப்பட்டது. இதனை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை யிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல்போனோர் அலுவலகம் மாபெரும் பொறுப்பு ஒன்றைக் கொண்டிருக்கிறது. குறித்த அலுவலகத்தின் சவால்மிக்க ஆணையை நிறைவேற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களினதும் ஒத்துழைப்பு அவசியமாகும். நீண்டகால நோக்கிலான நிலைபேறான முயற்சிகளின் ஊடாகவே துன்பத்தை அனு பவித்துக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக் கானோருக்கான தீர்வையும், மீட்சியையும் அளிக்க முடியும் என குறித்த அறிக…
-
- 0 replies
- 509 views
-
-
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சாத்தியம் இல்லையென தேர்தல்கள் ஆணையக தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நேற்று வெளியிட்ட அறிக்கையில் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த மஹிந்த தேசப்பிரிய இன்று, மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சாத்தியம் இல்லையென தெரிவித்துள்ளார். எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை உடனடியாக நடத்துமாறு உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு நேற்றைய தினம் அறிவித்திருந்தமையையடுத்து தேர்தல்கள் ஆணையக தலைவர் மாகாண சபை தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே இன்று ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது …
-
- 0 replies
- 288 views
-
-
உலக காணாமற்போனோர் நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போனோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்த நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. கொஸ்டா ரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட 'கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு' என்ற அரச சார்பற்ற அமைப்பினால் இலத்தீன் அமெரிக்காவில் சட்டமுறையற்ற கைதுகளை எதிர்த்து இந்த கோரிக்கை முதன் முதலில் விடுக்கப்பட்டது. இதன்அடிப்படையில் இன்றைய நாள் சர்வதேச அளவில் காணாமல் போனோருக்கான தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இலங்கையில் வவுனியாவில் 2014 ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி பன்னாட்டு காணாமற…
-
- 15 replies
- 1.6k views
-
-
காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் என்பது காலம் கடத்தும் செயற்பாடே : சிவசக்தி ஆனந்தன் அரசாங்கம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக கொண்டுவரப்படுகின்ற இந்த சட்டமூலத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பலிக்கடாவாகியிருக்கின்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் வவுனியா ஓமந்தையில் நேற்று இடம்பெற்றது. இப் போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல் போன உறவுகள் தங்களுக்கு ஒரு நீதி வேண்டி ஒரு …
-
- 2 replies
- 496 views
-
-
யாழில், நல்லூர் வரவேற்கின்றது எனும் வளைவுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் நல்லூர் வரவேற்கின்றது எனும் வளைவுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ஏ9 பிரதான வீதியை இணைக்கும் செம்மணி வீதியில், 6 மில்லியன் ரூபாய் நிதியில் நல்லூர் வரவேற்கின்றது வளைவு நிர்மாணிக்கப்படவுள்ளது. நல்லூர் ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்ற இந்த நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் நல்லூர் ஆலய நிர்வாகத்தினர் இணைந்து அடிக்கல்லினை நாட்டி வைத்தனர். குறித்த வளைவில், நல்லூர் ஆலயத்தினை அடையாளப்படுத்தும் சிற்பங்களும் வடிவமைக்கப்படவுள்ளன. இந்நிகழ்வில், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட், ஆணையாளர் த.ஜெயசீலன்,…
-
- 1 reply
- 532 views
-
-
பளை வைத்தியர் வழங்கிய முக்கிய தகவல் – பெருமளவான ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் மீட்பு பளை வைத்தியசாலையின் அத்தியட்சகர் மருத்துவர் சின்னையா சிவரூபன் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஏ.கே.47 ரக தூப்பாக்கி , அதற்குப் பயன்படுத்தப்படும் மகசின்கள் இரண்டு, 120 துப்பாக்கி ரவைகள், 11 கைக்குண்டுகள், 10 கிலோ கிராம் சக்திவாய்ந்த வெடிமருந்து என்பன கரந்தனில் இன்று (திங்கட்கிழமை) மீட்கப்பட்டுள்ளன. பளை வைத்தியசாலை அத்தியட்சகரும் சட்ட மருத்துவ அதிகாரியுமான சின்னையா சிவரூபன், பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தடுத்துவைக்கப்ப…
-
- 9 replies
- 1.3k views
- 1 follower
-
-
இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட பயங்கரவாதியின் உடல் தோண்டப்படவுள்ளது! சீயோன் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் உடற்பாகங்களை தோண்டி எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்று (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பு நீதவான் நீமதிமன்றில் இடம்பெற்றது. இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய புதைக்கப்பட்ட உடற்பாகங்களை இன்று 4 மணியளவில் தோண்டி எடுப்பதற்குரிய நடவடிக்கைகள் நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளன. குறித்த தற்கொலைதாரியின் உடலை பொதுமக்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில் மாவட்டத்தில் உள்ள ஒரு மயானத்தில் புதைக்கவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது என்றும் இந்து மயானத்தில் புதைத்து பொதுமக்கள…
-
- 1 reply
- 378 views
-
-
நாட்டின் 71 வருட கால அரசியலை முழுமையாக மாற்றியமைப்பேன்: ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினார், நாகானந்த..! (இராஜதுரை ஹஷான்) நாட்டின் 71 வருட கால அரசியலமைப்பு முழுமையாக மாற்றியமைக்கப்படும். மக்களாணையினையும், மக்கள் அரசியல் அபிப்பிராயங்களையும் முன்னிலைப்படுத்திய நீதிக்கட்டமைப்பு பலம்பொருந்தியதாக அமைக்கப்படும். மைத்திரி, ரணில், மஹிந்த ஆகியோர் பயனற்ற அரசியல் கட்டமைப்பையே முன்னெடுத்து செல்வார்கள். ஆகவே இத்தரப்பினர்களை நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் ஒன்றிணைந்த அரசியல் கட்சிகளின் ஊடாக சுயாதீனமாக …
-
- 0 replies
- 516 views
-
-
FBI உள்ளிட்ட புலனாய்வு நிறுவனங்கள், உரிய அங்கீகாரத்துடனேயே இலங்கைக்குள் பிரவேசித்தன.. August 31, 2019 அமெரிக்காவின் FBI உள்ளிட்ட ஏனைய புலனாய்வு நிறுவனங்கள் உரிய அங்கீகாரத்துடனேயே இலங்கைக்குள் பிரவேசித்ததாக காவற்துறை ஊடகப் பேச்சாளர், காவற்துறை அத்தியட்சகர் றுவன் குணசேகர தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே இந்த நிறுவனங்களின் அதிகாரிகள் இலங்கைக்கு சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விசாரணைகளின் போது தடய மாதிரிகளை அவர்கள் பெற்றிருந்தால் அது சட்டரீதியான முறைகளுக்கு அமைவாகவே பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாகவே தடய மாதிரிகள் FBI அத…
-
- 0 replies
- 292 views
-
-
ஜனாதிபதி மைத்திரி வடக்கிற்கு பயணம்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். அதற்கமைய அவர் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்துக்குச் செல்லவுள்ளார். ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ வேலைத்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். அங்கு செல்லும் அவர் இன்று இடம்பெறவுள்ள 8 நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார். முதல் நிகழ்வாக பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்துக்கான அடிக்கல்லை மைத்திரிபால சிறிசேன நாட்டவுள்ளார். தொடர்ந்து அலுவலகம் ஒன்றையும் அங்கு திறப்பார். காலை 10 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டக் குடி தண்ணீர்ப் பிரச்சினையை தீர்ப்பதற்காக வடமராட்சியில் அமைக்கப்பட்டவுள்ள பெரும் நீர்த் தேக்கத்துக்கான வேலைகளையு…
-
- 3 replies
- 1.1k views
-
-
இலங்கையில் முக்கிய பிரமுகர்களை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்து தெரிவித்த அவர், பளை வைத்திய அதிகாரி உள்ளிட்ட ஏழு பேரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா, கருணா ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது. தனேஷ்வரன், ரத்னம் கிருஷ்ணராஜா, மோகனசுந்தரம் சின்னதுரை, விநாயகமூர்த்தி நெஜிலன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர். …
-
- 0 replies
- 744 views
-
-
அமைதியான தேசமொன்று உருவாக நல்லூர்க்கந்தனை பிரார்த்திக்கிறேன் - பிரதமர் நல்லூர்க் கந்தனை தரிசிப்பதற்கும் இரதோற்சவத்தில் பங்கேற்பதற்குமென ஒன்றிணையும் பெறுமதியான காலப்பகுதியில் பேதங்களை மறந்தவர்களாக ஒற்றுமைப்பட்டிருப்பதை தொடர்ந்தும் பேணிச் செல்வது நமது பொறுப்பாகும். ஐக்கியம், சகவாழ்வு, சகோதரத்துவம் மிகுந்த அமைதியான தேசமொன்று உருவாக வேண்டும் நல்லூர்க் கந்தனை பிரார்த்திப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நல்லூர் கந்தன் இரதோற்சவத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன்…
-
- 7 replies
- 724 views
-
-
இறுதி யுத்த சமயத்தில் விடுதலைப்புலிகள் திருமாவளவனிடம் கூறிய தகவல் எதற்காகக் காங்கிரஸை எதிர்த்துப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் பேசப்பேச எங்கள் மேல் எக்ஸ்ட்ராவாகக் குண்டுகளைப் போடுகிறார்கள் என்று விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் இறுதி யுத்த சமயத்தில் தன்னிடம் தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாளவன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவில் விம்பம் கலை, இலக்கிய, திரைப்பட மற்றும் கலாச்சார அமைப்பின் ஏற்பாட்டில் லண்டனில் இடம் பெற்ற நிகழ்வில் பேசும்போது தொல் திருமாளவன் இதனை தெரிவித்தார். விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன், நிதர்சனம் நிறுவன பொறுப்பாளர் சேரலாதன் ஆகியோரே இதனை தன்னிடம் தெரிவித்ததாக குறிப்பிட்…
-
- 76 replies
- 8.2k views
- 2 followers
-
-
உலகில் இரசாயனக்கலப்புடனான விஷத்தன்மை கொண்ட உணவுவகைகளை உட்கொள்ளும் நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடம் வகிப்பதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்கள பணிப்பாளர் (அபிவிருத்தி) ஜனக லீன்தர தெரிவித்தார். மாத்தளையில் இடம் பெற்ற ஏற்றுமதி விவசாயத்திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுக்கான சேவைகாலப் பயிற்சி வகுப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, உணவு உற்பத்தி செய்யும் நிலம் முதல் உணவுத் தட்டுவரையான சகல விடயங்களிலும் உணவுப் பாதுகாப்பு பற்றி கவனம் செலுத்தவேண்டியுள்ளது. உற்பத்தி மற்றும் எடுத்துச் செல்லல், களஞ்சியப்படுத்தல் உட்பட பல்வேறு சந்தர்ப்பங்களில் உணவு பழுதடையாமல் இருக்க இராசாயனக் கலப்புகள் சேர்க்கப்படுகின்றன. அவை உட்கொள்ளக் கூடாதவைகளாகும். நல்ல விவசாயப் பழக்க…
-
- 2 replies
- 519 views
-
-
திருமண வீடியோ ஒளிப்பதிவை காண்பித்து கொள்ளை August 30, 2019 யாழில் இடம்பெற்ற திருமண விழாவின் வீடியோ ஒளிப்பதிவை காண்பித்து மணமகளின் தாலி உட்பட வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருந்த உறவினர்கள் அனைவரினதும் 60 பவுண் தங்க நகைகளை வீட்டினுள் புகுந்த கொள்ளைக்கும்பல் நேற்றைய தினம் (29) அதிகாலை கொள்ளையடித்து சென்றதுடன் , இருவர் மீது வாள் வீச்சினை மேற்கொண்டு தாக்கி காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளது. இச் சம்பவம் நவாலி கொத்துக்கட்டி வீதி நவாலி தெற்கில் இடம்பெற்றது. அதிகாலை 1.30 மணியளவில் 5 பேர் கொண்ட கொள்ளைக்கும்பல் வீட்டின் முன்வாயில் வழியாகவும் சமையல் அறையின் மேற்பகுதி வழியாகவும் வீட்டுக்குள் நுழைந்தது. வீட்டில் இருந்த பெரிய தந்தை வழிமுறைய…
-
- 1 reply
- 876 views
-
-
ஜனாதிபதி வேட்பாளரை ஒருபோதும் மாற்றமாட்டோம்: மஹிந்த எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி வேட்பாளரை நாம் ஒருபோதும் மாற்ற மாட்டோமென பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த மேலும் கூறியுள்ளதாவது, “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நிச்சயம் ஆதரவு வழங்கும். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் சரியான நேரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஐக்கிய தேசியக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாகவே இன்னும் ஜனாதிபதி வேட்பாளரை அவர்கள் அறிவிக்க முடியாத நிலையில் உள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி…
-
- 0 replies
- 426 views
-
-
கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு – அமெரிக்க, ஐரோப்பிய இராஜதந்திரிகள் புறக்கணிப்பு சிறப்புச் செய்தியாளர்Aug 30, 2019 by in செய்திகள் சிறிலங்கா இராணுவத்தின் ஏற்பாட்டில் நடக்கும் கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கை, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் தூதுவர்கள், இராஜதந்திரிகள் புறக்கணித்துள்ளனர். சிறிலங்கா இராணுவத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு- 2019 பண்டாநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்றுக் காலை ஆரம்பமானது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த மாநாட்டை ஆரம்பித்து வைத்தார். சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா வரவேற்புரை நிகழ்த்த, சிறிலங்கா பாதுகாப்பு செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொட சிறப்புரை நிகழ்த…
-
- 0 replies
- 454 views
-