ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142976 topics in this forum
-
இறுதி யுத்த சமயத்தில் விடுதலைப்புலிகள் திருமாவளவனிடம் கூறிய தகவல் எதற்காகக் காங்கிரஸை எதிர்த்துப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் பேசப்பேச எங்கள் மேல் எக்ஸ்ட்ராவாகக் குண்டுகளைப் போடுகிறார்கள் என்று விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் இறுதி யுத்த சமயத்தில் தன்னிடம் தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாளவன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவில் விம்பம் கலை, இலக்கிய, திரைப்பட மற்றும் கலாச்சார அமைப்பின் ஏற்பாட்டில் லண்டனில் இடம் பெற்ற நிகழ்வில் பேசும்போது தொல் திருமாளவன் இதனை தெரிவித்தார். விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன், நிதர்சனம் நிறுவன பொறுப்பாளர் சேரலாதன் ஆகியோரே இதனை தன்னிடம் தெரிவித்ததாக குறிப்பிட்…
-
- 76 replies
- 8.2k views
- 2 followers
-
-
உலகில் இரசாயனக்கலப்புடனான விஷத்தன்மை கொண்ட உணவுவகைகளை உட்கொள்ளும் நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடம் வகிப்பதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்கள பணிப்பாளர் (அபிவிருத்தி) ஜனக லீன்தர தெரிவித்தார். மாத்தளையில் இடம் பெற்ற ஏற்றுமதி விவசாயத்திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுக்கான சேவைகாலப் பயிற்சி வகுப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, உணவு உற்பத்தி செய்யும் நிலம் முதல் உணவுத் தட்டுவரையான சகல விடயங்களிலும் உணவுப் பாதுகாப்பு பற்றி கவனம் செலுத்தவேண்டியுள்ளது. உற்பத்தி மற்றும் எடுத்துச் செல்லல், களஞ்சியப்படுத்தல் உட்பட பல்வேறு சந்தர்ப்பங்களில் உணவு பழுதடையாமல் இருக்க இராசாயனக் கலப்புகள் சேர்க்கப்படுகின்றன. அவை உட்கொள்ளக் கூடாதவைகளாகும். நல்ல விவசாயப் பழக்க…
-
- 2 replies
- 520 views
-
-
திருமண வீடியோ ஒளிப்பதிவை காண்பித்து கொள்ளை August 30, 2019 யாழில் இடம்பெற்ற திருமண விழாவின் வீடியோ ஒளிப்பதிவை காண்பித்து மணமகளின் தாலி உட்பட வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருந்த உறவினர்கள் அனைவரினதும் 60 பவுண் தங்க நகைகளை வீட்டினுள் புகுந்த கொள்ளைக்கும்பல் நேற்றைய தினம் (29) அதிகாலை கொள்ளையடித்து சென்றதுடன் , இருவர் மீது வாள் வீச்சினை மேற்கொண்டு தாக்கி காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளது. இச் சம்பவம் நவாலி கொத்துக்கட்டி வீதி நவாலி தெற்கில் இடம்பெற்றது. அதிகாலை 1.30 மணியளவில் 5 பேர் கொண்ட கொள்ளைக்கும்பல் வீட்டின் முன்வாயில் வழியாகவும் சமையல் அறையின் மேற்பகுதி வழியாகவும் வீட்டுக்குள் நுழைந்தது. வீட்டில் இருந்த பெரிய தந்தை வழிமுறைய…
-
- 1 reply
- 876 views
-
-
ஜனாதிபதி வேட்பாளரை ஒருபோதும் மாற்றமாட்டோம்: மஹிந்த எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி வேட்பாளரை நாம் ஒருபோதும் மாற்ற மாட்டோமென பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த மேலும் கூறியுள்ளதாவது, “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நிச்சயம் ஆதரவு வழங்கும். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் சரியான நேரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஐக்கிய தேசியக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாகவே இன்னும் ஜனாதிபதி வேட்பாளரை அவர்கள் அறிவிக்க முடியாத நிலையில் உள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி…
-
- 0 replies
- 427 views
-
-
கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு – அமெரிக்க, ஐரோப்பிய இராஜதந்திரிகள் புறக்கணிப்பு சிறப்புச் செய்தியாளர்Aug 30, 2019 by in செய்திகள் சிறிலங்கா இராணுவத்தின் ஏற்பாட்டில் நடக்கும் கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கை, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் தூதுவர்கள், இராஜதந்திரிகள் புறக்கணித்துள்ளனர். சிறிலங்கா இராணுவத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு- 2019 பண்டாநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்றுக் காலை ஆரம்பமானது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த மாநாட்டை ஆரம்பித்து வைத்தார். சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா வரவேற்புரை நிகழ்த்த, சிறிலங்கா பாதுகாப்பு செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொட சிறப்புரை நிகழ்த…
-
- 0 replies
- 454 views
-
-
பலாலியில் இருந்து விமான சேவை – பிட்ஸ் எயர் நிறுவனம் திட்டம் கார்வண்ணன்Aug 30, 2019 | 6:12 by in செய்திகள் கொழும்பு- இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து, சிறிலங்காவின் தனியார்துறை விமான நிறுவனமான பிட்ஸ் எயர் (FITS AIR) நிறுவனம், முதலாவது வெளிநாட்டு பயணிகள் விமான சேவையை ஆரம்பித்துள்ளது. இரத்மலானையில் இருந்து இந்தியாவின் விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கான இந்த விமான சேவை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை காலை 6 மணிக்கு இரத்மலானையில் இருந்து புறப்பட்ட, பிட்ஸ் எயர் நிறுவனத்தின் 70 ஆசனங்களைக் கொண்ட ATR 72 விமானம், காலை 9.10 மணியளவில் விசாகப்பட்டினத்தை சென்றடைந்தது. முன்னர், எக்ஸ்போ எயர் என்ற பெயரில் உள்நாட்டு விமான ச…
-
- 0 replies
- 908 views
-
-
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஆரம்பப்பிரிவு விபத்து அவசர சிகிச்சை பிரிவு திறப்புவிழா August 29, 2019 அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஆரம்பப்பிரிவு விபத்து அவசர சிகிச்சை பிரிவின் திறப்புவிழா வியாழக்கிழமை(29) காலை 10 மணியளவில் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் இணைந்து குறித்த கட்டடத்தை திறந்து வைத்ததுடன் கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் வைத்தியர்கள் தாதியர்கள் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர்களும் கலந்து கொண்டனர். அங்கு சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்…
-
- 0 replies
- 564 views
-
-
நல்லூர் வான்பரப்பில் பறந்த "ட்ரோன்" கமராவினால் சர்ச்சை! யாழ். மாநகரசபையின் கட்டுப்பாடுகளை மீறி கோயில் வான்பரப்பில் ட்ரோன் கமரா பறந்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று (வியாழக்கிழமை) சிறப்பாக இடம்பெற்றது. ஆலய உற்சவ காலத்தில் நல்லூர் ஆலய சூழலில் எந்தவிதமான ட்ரோன் கமராக்களும் பறக்கவிட தடை எனவும் அவ்வாறு பறக்க விடப்படின் சுட்டு வீழ்த்தப்படும் எனவும் யாழ். மாகர முதல்வரினால் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் நல்லூர் கந்தன் தேர் உற்சவம் இடம்பெற்றிருந்தவேளை தென்னிலங்கை அரச ஊடகமொன்றினால் குறித்த வளாகத்தில் தடை செய்யப்பட்ட ட்ரோன் கமறா பறக்கவிடப்பட்டிருந்தது. இதன…
-
- 3 replies
- 1.2k views
-
-
நாட்டின் அரச பல்கலைக்கழகங்களில் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. அதற்கமைய, 99 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், புதிதாக 22 பீடங்கள் அமைக்கப்படவுள்ளதோடு, மருத்துவபீடங்களுக்கு வருடாந்தம் இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 160 இனால் அதிகரிக்கப்படும் என்றும் அவ்வாணைக்குழு அறிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது. https://www.virakesari.lk/article/63640
-
- 3 replies
- 718 views
-
-
யாசகர்களுக்கு 20 ரூபா தண்டம் August 27, 2019 வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்து நல்லூர் ஆலய சூழலில் யாசகம் பெற்ற 9 பேருக்கு தலா 20 ரூபா தண்டம் விதித்து, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டனர். அத்துடன், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம், பாத்திரங்கள் உள்ளிட்ட உடமைகளை மீள வழங்குமாறும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார். வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா நடைபெற்று வருகிறது. நல்லூர் ஆலய சூழலில் யாசகம் கேட்டு அமர்ந்திருந்த 9 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் மலையகத்தைச் சேர்ந்தவர்கள். ய…
-
- 8 replies
- 1.2k views
-
-
(எம்.மனோசித்ரா) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்ஷ ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது. கொழும்பிலுள்ள கோதாபய ராஜபக்ஷவின் இல்லத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பில் சுதந்திர கட்சி சாரிபில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் சுதந்திர கட்சியின் பொருளாளர் லசந்த அழகியவண்ண ஆகியோர் கலந்து கொண்டனர். நாட்டின் எதிர்காலத்திற்கான கொள்ளைத்திட்டங்கள் மற்றும் தேர்தல்கள்…
-
- 3 replies
- 619 views
-
-
புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்தவர் கைது என்கிறது விசேட அதிரடிப்படை…. August 28, 2019 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் நபரொருவரை கைதுசெய்துள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கல்முனை பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில், முற்றாக அழிக்கப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர். http://globaltamilnews.net/2019/129618/
-
- 4 replies
- 1.1k views
-
-
ஜனநாயக தேசிய முன்னணிக்கான யாப்பு உருவாக்கம் முழுமையடைந்துள்ளது. கூட்டணி கைச்சாத்திடப்படும் போது ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார். எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்ப உறுப்பினரை களமிறக்கியதை போன்று குடும்ப உறுப்பினரை களமிறக்க வேண்டிய தேவை கிடையாது என சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அலரிமாளிகையில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/63666
-
- 0 replies
- 276 views
-
-
August 29, 2019 ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. அமைச்சர் மங்கள சமரவீரவின் கொழும்பு இல்லத்தில் இந்த கலந்துரையாடல் நடைப்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் மங்கள வழங்கிய இராபோசன நிகழ்விலும் அவர்கள் கலந்துக்கொண்டனர். இந்த கலந்துரையாடலில் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹசீம், முன்னாள் தவிசாளர் மலிக்சமர விக…
-
- 0 replies
- 379 views
-
-
ரஜீபன் காணாமல்போனவர்களை தேடிக்கொண்டிருக்கும் அவர்களது உறவினர்கள் பலருக்கு அவர்களது வாழ்நாளில் உரிய பதில் கிடைக்காமல் போகலாம் என காணாமல்போனவர்கள் குறித்த அமைப்பின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். காணாமல்போனவர்களின் விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கான அரசியல் உறுதிப்பாட்டை காணமுடியவில்லை என தெரிவித்துள்ள அவர் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளானவர்களிற்கு பதவி உயர்வு வழங்கவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார் கொழும்பில் இடம்பெற்று கண்ணண் அருணாச்சலத்தின் டென்ட் விவரணசித்திரம் மற்றும் ஸ்டீபன் சம்பியனின் புகைப்படக்கண்காட்சிஆகியவற்றை காட்சிப்படுத்தும் நிகழ்வுகளில் கலந்துகொண்ட உரையாற்றுகையில் சாலிய பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப…
-
- 2 replies
- 569 views
-
-
-எஸ்.நிதர்ஷன் வைத்திய அதிகாரி சிவரூபனுக்கு, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு, அவரது குடும்பத்தினரால், நேற்று (27) மாலை பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில், சிவரூபனை எவ்வித அடிப்படை காரணங்களுமின்றி, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட நாளில் இருந்து, அவரை மாலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சிறையில் அடைத்து காலையில் மீண்டும் விசாரணைக்காக அழைத்து செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை நாளாந்தம் சித்திரவதைக்கு உள்ளாக்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள…
-
- 7 replies
- 1.4k views
-
-
தமிழ் மக்களுக்கு சேவையாற்றவில்லை, அவர்களை நடு வீதியில்தான் வீட்டிருக்கின்றீர்கள் - ஆளுநரின் கருத்திற்கு ரவிகரன் பதிலடி அரசதலைவர் மைத்திரிபால சிறீசேன முல்லைத்தீவிற்கு சென்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், தமிழ்மக்களுக்கு எதிரான செயற்பாடுகளே இடம்பெற்றுள்ளன. அவ்வாறான செயற்பாடுகள் மூலம் அரசதலைவரும், ஆளுநரும் தமிழ் மக்களை நடு வீதியிலேயே விட்டிருக்கின்றனர் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அண்மையில் முல்லைத்தீவில் இடம்பெற்ற திருக்குறள் பெருவிழாவில் கலந்துகொண்ட வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், அரசதலைவரை தாம் மூன்று தடவைகள் முல்லைத்தீவிற்குஅழைத்து வந்ததாகவும், தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் சேவையாற்றுவதே தனது நோக்கம் என்றும் தெரிவித்திருந…
-
- 0 replies
- 513 views
-
-
இலங்கைக்கு இன்று விஜயம் தரும் கன்டபெரியின் பேராயர் கன்டபெரியின் பேராயர் அதிமேதகு ஜஸ்ரின் வெல்பெ ஆண்டகை இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். பேராயரின் விஜயம் ஒருமைப்பாட்டிற்கான விஜயமாகவே அமையும் என இலங்கை திருச்சபையின் ஆயர் டிலோராஜ் ஆர் கனகசபை ஆண்டகை தெரிவித்துள்ளார். கடந்த ஏப்பிரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் இலங்கை வரும் இவர் ஒருமைப்பாட்டை பலப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இன்று இலங்கை வரும் கன்டபெரியின் பேராயர் அதிமேதகு ஜஸ்ரின் வெல்பெ ஆண்டகை திர்வஷரம் சனிக்கிழமை வரையில் இலங்கையில் தங்கியிருப்பார். இன்று மாலை சர்வ மதத் தலைவர்களை சந்தித்து பேராயர் கலந்துரையாடலில் ஈடுபடுவார். தமது விஜயத்தின் ஞாபகா…
-
- 0 replies
- 390 views
-
-
காணாமல்போனவர்களின் உறவுகள் எதிபார்த்து காத்திருக்கும் நீதி கிடைக்குமா? சாலிய பீரிஸ் அதிர்ச்சி கருத்து. ரஜீபன் காணாமல்போனவர்களை தேடிக்கொண்டிருக்கும் அவர்களது உறவினர்கள் பலருக்கு அவர்களது வாழ்நாளில் உரிய பதில் கிடைக்காமல் போகலாம் என காணாமல்போனவர்கள் குறித்த அமைப்பின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். காணாமல்போனவர்களின் விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கான அரசியல் உறுதிப்பாட்டை காணமுடியவில்லை என தெரிவித்துள்ள அவர் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளானவர்களிற்கு பதவி உயர்வு வழங்கவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார் கொழும்பில் இடம்பெற்று கண்ணண் அருணாச்சலத்தின் டென்ட் விவரணசித்திரம் மற்றும் ஸ்டீபன் சம்பியனின் புகைப்படக்கண்காட்சிஆகியவற்றை காட்சிப்படு…
-
- 0 replies
- 401 views
-
-
காணி விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதி முக்கிய பணிப்புரை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் வடக்கில் காணிகளை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய துறைகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வடக்கின் நில விடுவிப்பு தொடர்பாக நேற்று (புதன்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார். யுத்தம் நிறைவடைந்தபோது, வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த தனியார் மற்றும் அரச காணிகளை மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்காக கடந்த 05 வருட காலமாக அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார். முப்படையினருடன…
-
- 0 replies
- 357 views
-
-
Wednesday, August 28, 2019 - 4:26pm வீசா கட்டண நீக்க நடைமுறையானது, 48 நாடுகளுக்கு நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக இலங்கைக்கு வீசா பெறும்போது அறவிடப்படும் கட்டாய வீசாக் கட்டணமான 35 அமெரிக்க டொலரிலிருந்து 48 நாடுகளுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.. இந்த நடைமுறை ஓகஸ்ட் மாதத்திலிருந்து 06 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “அண்மைய பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, சுற்றுலாப் பயணிக…
-
- 1 reply
- 518 views
-
-
காணி விடுவிப்பு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்தை தோல்வியடைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்றதன் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் இதனை தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களின் விடுவிப்பு மீள்குடியேற்றம் காணி அபகரிப்பு பலவந்தமாக தொடர்பில்லா பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுதல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவிருந்தது. எனினும் குறிப்பிட்ட சில விடயங்கள் தொடர்பிலே இன்றைய தினம் கலந்துரையாடப்பட்டத…
-
- 0 replies
- 354 views
-
-
-சண்முகம் தவசீலன், எஸ்.றொசேரியன் லெம்பேட், எஸ்.என்.நிபோஜன் காணி விடுப்பு கோரி, வடக்கின் பல பாகங்களிலும், இன்று (28) போராட்டங்கள், கவனயீர்ப்புப் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவ, மன்னார் ஆகிய பகுதிகளிலேயே, இந்தப் போராட்டங்கள், கவனயீர்ப்புப் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன. மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள் முல்லைத்தீவு – கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில், மகாவலி அபிவிருத்தி என்ற பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு கோரி, முல்லைத்தீவு மாவட்டமக்களால், இன்று (28) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில், முல்லைத்தீவு மாவட்டத்தி…
-
- 1 reply
- 494 views
-
-
தற்கொலைதாரியின் எச்சங்களை அகற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது! கள்ளியங்காட்டில் புதைக்கப்பட்டுள்ள தற்கொலைதாரியின் எச்சங்களை அங்கிருந்து அகற்றுவதற்கான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வது என மட்டக்களப்பு மாநகர சபையினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் விசேட அமர்வு இன்று(புதன்கிழமை) மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது. இந்த அமர்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் க.சித்திரவேல் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது மாநகர முதல்வரின் தலைமையுரையுடன் விசேட அமர்வு ஆரம்பமானது. குறித்த குண்டுதாரியின் எச்சங்களை மாநகரசபையின் எந்த அனுமதியும் பெறப்படாமல் மாநகரச…
-
- 0 replies
- 230 views
-
-
அதிகபட்சமாக ஒருமித்த இலங்கைக்குள் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதே தனது நோக்கம் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், நாட்டு மக்களை சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என வேறு படுத்துவது நியாயமற்றது என குறிப்பிட்டார். எவ்வாறாயினும் ஒருமித்த இலங்கை என்ற கொள்கையில் எந்தவித விட்டுக் கொடுப்பும் செய்து கொள்ளப்படாது எனவும் அவர் கூறினார். ஒருமித்த இலங்கை என்பது எழுதப்பட்ட ஆவணமாக மாத்திரம் இருக்கக் கூடாது. மாறாக அதனை ஒவ்வொரு இலங்கையர்களும் மனரீதியாக உணர வேண்டும் எனவும் அவர் தெர…
-
- 0 replies
- 626 views
-