Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தங்கள் நாட்டினர் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. எதிர்வரும் விடுமுறை நாட்களில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது குடிமக்களுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது. தீவிரவாதிகள் எதிர்வரும் தினங்களில் சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தலாம் என அமெரிக்காவினால் விடுக்கப்பட்டுள்ள இந்த அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது குடிமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள சுற்றுலாத்தளங்கள், போக்குவரத்து நிலையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், விடுதிகள், அர…

    • 11 replies
    • 1.1k views
  2. நல்லூர் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் பிரவேசிக்க தடை? நல்லூர் முருகன் ஆலயத்திருவிழா இடம்பெற்று வரும் நிலையில் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் எவையும் பிரவேசிக்க முடியாது என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தூக்கு காவடியுடன் வரும் பக்தர்கள் நுழைவதற்கான எல்லைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தூக்கு காவடியுடன் வரும் பக்தர்கள் பருத்தித்துறை வீதியூடாக பிரவேசித்து செட்டித்தெரு வரையிலேயே வரமுடியும் எனவும் குறித்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியுடன் தூக்குக் காவடியுடன் வரும் உழவு இயந்திரங்கள் திருப்பி அனுப்பப்படும் எனவும் ஆலய நிர்வாகத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன…

  3. அமைச்சர் டெனீஸ்வரன் பதவி நீக்கம் விடயத்தில் பிழை ஆளுனருடையதே...: முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அமைச்சர் டெனீஸ்வரன் பதவி நீக்கம் விடயத்தில் பிழை ஆளுனருடையது. இதனை மதிப்பார்ந்த நீதியரசர்கள் கவனத்தில் கொள்ளவில்லை என முன்னாள் வடமகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மேல் நீதி மன்றத்தால் டெனீஸ்வரன் தொடர்பில் வெளியான அந்த தீர்ப்பு பிழை. அதில் ஒரு விடயத்தை மதிப்பார்ந்த நீதியரசர்கள் கவனத்தில் எடுக்காது விட்டு விட்டனர். நான் அந்த அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் போது அவருக்கு ஒரு விடயத்தை கடிதத்தில் எழுதியிருந்தேன். உங்களுக்கான உத்தியோகபூர்வமான கடிதம் வெகு விரைவில் கிடைக்கும் என தெரிவித்திருந்தேன். ஆளுனருக்கும் அனுப்பப்…

    • 1 reply
    • 599 views
  4. கடந்த நான்கு வருடங்களாக கோத்தபாய ராஜபக்சவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதுகாத்து வந்துள்ளார் என படுகொலை செய்யப்பட்ட சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க குற்றம்சாட்டியுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஐக்கியதேசிய கட்சிக்கும் அனுப்பியுள்ள பகிரங்க கடிதத்தில் அகிம்சா விக்கிரமதுங்க இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். நீங்கள் உங்கள் அரசியல் உரையில் எனது தந்தையும் உங்கள் நெருங்கிய நண்பருமான லசந்த விக்கிரமதுங்க குறித்து சுட்டிக்காட்டியிருந்தீர்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கான கடிதத்தில் அகிம்சா தெரிவித்துள்ளார். ஜனாதிபதியானதும் அச்சமற்ற சூழலை ஏற்படுத்துவேன் என கோத்தபாய ராஜபக்ச தெரிவி;த்துள்ளமைக்கு பதி…

    • 0 replies
    • 433 views
  5. இராணுவத்தினர் துயிலுமில்லத்தில் மேற்கொள்ளும் கட்டுமானப்பணிகளை உடன் நிறுத்த வேண்டும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உறுப்பினரும் சமூக ஆர்வலருமான ஜீவராசா தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது விஸ்வமடு தேராவில் துயிலுமில்ல வளாகத்தில் அண்மைக் காலமாக இராணுவத்தினரால் நிரந்தர கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது இது ஓர் சுமூகமான சூழ்நிலைக்கு எதிரானதொன்றாக நான் கருதுகின்றேன் இதனை உடனடியாக நிறுத்தி நிலைமைகளை சீர் செய்ய வேண்டும் யுத்தத்தில் இறந்த வீரர்ககளை ஒவ்வொரு வருடமும் அமைதியான முறையில் நினைவுகூர்ந்த…

    • 0 replies
    • 313 views
  6. "ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நாம் அவரசப்பட்டு எந்த முடிவுக்கும் செல்ல வேண்டியதில்லை. முதலில் கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவிக்கட்டும்." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக எமது நிலைப்பாடு என்ன என்று சிலர் கேட்கின்றனர். நாம் இப்போது அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. முதலில் போட்டியிடும் கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். யார், யார் போட்டியிடுகின்றனர் என…

  7. இலங்கையில் எங்களால் மட்டுமே பாதுகாப்பையும் அபிவிருத்தியையும் அளிக்க முடியும் என்பதை இந்தியா புரிந்து கொண்டிருப்பதாகவும், இந்தியாவின் மிகச் சிறந்த நண்பனாக தாமே இருப்பதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கு சில மணி நேரம் முன்னதாக, இந்திய ஊடகவியலாளர் பகவான் சிங்குக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அந்த செவ்வியில் மஹிந்த ராஜபக் ஷ மேலும் கூறியதாவது, கேள்வி: உங்கள் வேட்பாளர் யார் என்பது அனைவருக்கும் தெரியும். நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் பொது ஜன பெரமுனவின் வேட்பாளராக, உங்கள் சகோதரரும் முன்னாள் பாதுகாப்பு செய லருமான கோத்தபாய ராஜபக் ஷவையே தெரிவு செய்வார் என அவர்கள் சொல…

  8. விசேட தெரிவுக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டது… August 13, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை மேலும் ஒரு மாத காலத்துககு நீடிக்க எதிர்பார்ப்பதாக குழுவின்தலைவரும், பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 23ஆம் திகதியுடன் குறித்த குழுவின் பணிகள் முடிவுக்கு வரவிருந்தன. இருப்பினும் மேலும் காலம் தேவைப்படுவதாக குமாரசிறி குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதி மீண்டும் விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளதுடன், அன்றைய தினம் உயிர்த்த தாக்குதல் தொடர்பாக ஆராய நியமித்த ஜனாதிபதி குழுவின் உறுப்பினர்கள் மூவர் அழைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http…

  9. சஜித்துக்காக எந்தத் தீர்மானத்தையும் எடுப்போம்- ஹரீன் பெர்னாண்டோ ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனநாயக பொது கொள்கை இனியும் தொடரும் எனவும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்க முழு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் பொதுக் கூட்டம் பதுளை நகரில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். குடும்ப ஆட்சியினை ஏற்படுத்த வேண்டிய தேவை ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடையாது. ஐக்கிய தேசிய கட்சி மக்களாணையினை மதிக்கும் வேட்பாளரையே தொடர்ந்து களமிறக்கியுள்ளது. நாட்டு மக்களுக்கும், கட்சிக்கும் சேவையாற்றிய அமைச்சர் சஜித…

    • 0 replies
    • 482 views
  10. தற்போது நாட்டிற்கு முக்கிய தேவையாக உள்ளது ஒரு ஜனாதிபதி தேர்தல் அல்ல மாறாக ஒரு புதிய அரசியல் யாப்பேயாகும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயகம் மற்றும் தேர்தல் கண்காணிப்பு கொள்கை அதிகாரி ரிக்கார்டோ செலரி மற்றும் அரசியல் வர்த்தகம் மற்றும் தொடர்பாடல்களிற்கான பிரதி தலைவர் ஆன் வாகியர் சட்டர்ஜி தலைமையிலான குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை இன்று கொழும்பில் சந்தித்து உரையாடினர். குழுவினரை தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன், 1994 ஆம் ஆண்டிலிருந்து நாட்டு மக்கள் தொடர்ச்சியாக 25 வருடங்களாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவாகவே தேர்தல்க…

    • 1 reply
    • 662 views
  11. இலங்கை அரசாங்கம் நீதி வழங்குவதற்கு தவறிவிட்டது குற்றவாளிகளுடன் இணைந்து செயற்பட்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றது என மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் கொழும்பில் காணாமல்ஆக்கப்பட்ட 11 இளைஞர்களில் ஒருவரான டிலானின் தாயார் ஜெனீபர் வீரசிங்க குற்றம்சாட்டியுள்ளார். பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச நிறுத்தப்பட்ட அறிவிப்பு வெளியான பின்னர் தனது முகப்புத்தகத்தில் ஜெனீபர் வீரசிங்க இதனை பதிவு செய்துள்ளார். இந்த நாட்டின் நீதித்துறை எனக்கும் என்னை போன்ற பிள்ளைகளை இழந்த பெற்றோர்களிற்கும் நீதி வழங்க தவறிவிட்டதால் குற்றவாளிகளை இயற்கை தண்டிக்கும் என்ற ஒரேயொரு நம்பிக்கை மாத்திரம் எஞ்சியுள்ளது என அவர் பதிவு செய்துள்ளார். பதினொரு இளைஞர்களுடன் க…

    • 1 reply
    • 871 views
  12. கோத்தாபய ராஜபக்ஷ தமிழ் மக்களின் ஆதரவின்றி ஜனாதிபதி தேர்தலில் வெல்ல முடியாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.எம். சுமந்திரன் தெரிவித்துள்ளார். கட்சி ஆதரவளார்களை தெளிவூட்டும் வகையிலான தெளிவூட்டல் கருத்தரங்கு ஒன்று பட்டிருப்பு தொகுதி தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்றது. களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலையே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். அவர் தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், கோத்தாபய ரஜபக்ச நான் தமிழ் மக்களின் ஆதரவின்றி வெற்றி பொறுவேன்…

  13. ‘புலிகள் மௌனித்த பிற்பாடே த.தே.கூ அரசியலை முன்னெடுத்தது’ Editorial / 2019 ஓகஸ்ட் 12 திங்கட்கிழமை, பி.ப. 04:25 Comments - 0 க.விஜயரெத்தினம், வடிவேல் சக்திவேல், எஸ்.சபேசன் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டும்தான் தமிழ் மக்களுக்காகப் போராடியதாகத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், 2009ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் மௌனித்த பிற்பாடுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுநேர அரசியல் பணியை, ஜனநாயக ரீதியாக முன்னெடுத்ததாகத் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்களைத் தெளிவூட்டும் கூட்டம், அவரது தலைமையில், களுவாஞ்சிகுடியில் இன்று (12) நடைபெற்ற போதே, அவர் இவ…

  14. 1 Min Read August 12, 2019 விடுதலை புலிகள் இயக்கம் வலுவிழக்க கர்ணாவின் பிரிவே பிரதான காரணமாகியது. இதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே செயற்பட்டார். இதனால் கிடைத்த வெற்றியை இன்று ராஜபக்ஸ குடும் உரிமை கோருவதாக தெரிவித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஸவை இலகுவாக தோற்கடிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். கண்டி – குண்டசாலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அதேபோன்று கோத்தபாயவை தோற்கடிக்க கூடிய ஒரு வேட்பாளரை ஐக…

    • 6 replies
    • 1.1k views
  15. ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவை வரவேற்கும் முகமாக பதுளை - வில்ஸ்பாக் மைதானத்தில் சற்று முன்னர் இடம்பெற்றது. சர்வமத வழிப்பாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஏற்பாடு செய்திருந்தார். கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கலந்துக்கொண்டிருந்தனர். எதிர்கால ஜனாதிபதியே வழ்க , எங்கள் தலைவரே வாழ்க போன்ற வாழ்த்து கோஷங்களுடன் பெரும் மாலைகளை அணிவித்தும், பொன்னாடை கௌரவம் என சஜித் பிரேமதாசவிற்கு வர்வேற்பு அளிக்கப்பட்டது. இந்த பேரணியில் அமைச்சர்களான ரஞ்சித் மத்தும பண்டார, ரவீந்ர சமரவீர, அஜித் பி.பெரேரா, சுஜீவ சேனசிங்க, சந்ராணி பண்டார , லக்ஷ்மன் செனவிரத்ன, அரவிந்ந குமார், இராஜாங்க …

    • 2 replies
    • 883 views
  16. ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் அவருக்கு நெருக்கமானவர்களும் ஆரம்பித்துள்ளனர் என கொழும்பு டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது. பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கோத்தபாய அறிவிக்கப்பட்டு சில மணிநேரங்களில் இந்த முயற்சி ஆரம்பமாகிவிட்டதாக கொழும்புடெலிகிராவ் குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னர் ஐக்கியதேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து கோத்தபாய ராஜபக்ச சிந்தித்து வருகின்றார் எனவும் கொழும்புடெலிகிராவ் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் நாடாளுமன்றத்தை 2020 பெப்ரவரியில் கலைக்கலாம் என முன்னாள் பாதுகாப்பு…

    • 1 reply
    • 330 views
  17. கோத்தபாயராஜபக்சவின் வெள்ளைவான் கொடுங்கோன்மை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக மக்களை அணிதிரட்டப்போவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தனது பொறுப்புகளை கைவிட்டுவிட்டு நாட்டைவிட்டு ஒருபோதும் தப்பியோடாத வலுவான வேட்பாளரை நிறுத்தி ஐக்கியதேசிய கட்சி கோத்தபாயராஜபக்சவை தோற்கடிக்கும் என மங்களசமரவீர தெரிவித்துள்ளார். இந்த தேசத்தின் அடுத்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவோ அல்லது வேறு எந்த ராஜபக்சவோயில்லை, இலங்கையின் அடுத்த ஜனாதிபதி பல பத்திரிகையாளர்களினதும் அப்பாவிகளினதும் குருதிகளை தனது கைகளில் கொண்டுள்ள குற்றவாளியில்லை எனவும் மங்களசமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையின் அடுத்த ஜனாதிபதி இலங்கையில் பிறந்தவராகவும் இந்தநாட்டிலிருந்து தப்பியோடி இன்னொருநாட்டிற்கு விசுவாச…

    • 6 replies
    • 627 views
  18. உயிர்த்­த­ஞா­யிறு தினத் தாக்­கு­தல்­களை அடுத்து நாடு முழு­வ­தும் ஆரம்­பிக்­கப்­பட்ட பய­ணி­கள் சோதனை நட­வ­டிக்­கை­கள் வட­மா­கா­ணத்­தில் தற்­போ­தும் தொடர்­கின்­றன – என்று அதி­ருப்தி தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லின் பின்­னர் வடக்­கில் பாது­காப்பு கடு­மை­யாக்­கப்­பட்­டி­ருந்­தது. முதன்மை வீதி­கள், சந்­தி­கள் அனைத்­தி­லும் சாலை மறி­யல் சோத­னை­கள், திடீர் சுற்­றி­வ­ளைப்­புக்­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. வாக­னங்­கள் அனைத்­தும் வழி­ம­றிக்­கப்­பட்டு மக்­கள் இறக்கி ஏற்­றப்­பட்­ட­னர். தாக்­கு­ தல் இடம்­பெற்­ற­தன் பிற்­பாடு நாட்­டின் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு பல்­வேறு இடங்­க­ளில் சோத…

  19. August 12, 2019 வடக்கு- கிழக்கு மக்கள் கோத்தாபயவுக்கு தங்களது ஆதரவினை நிச்சயம் வழங்குவார்களென முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்ட அவர் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கோத்தாபய எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைவது உறுதி. அந்தவகையில் சிறுபான்மையினரும் அதற்கு முழுமையான ஆதரவினை வழங்குவார்களெனவும் விநாயகமூர்த்தி முரளிதரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். http://globaltamilnews.net/2019/128681/

  20. ஐக்கிய தேசியக் கட்சியின் கருவெலகஸ்வெவ பிரதேச சபை உறுப்பினரான தமயந்த ஏக்கநாயக்க என்பவரே இவ்வாறு ஆனமடுவ பகுதியில் வைத்து ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பிரதேச சபை உறுப்பினரிடமிருந்து 700 மில்லிகிராம் ஹெரோயினை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்நிலையில், குறித்த பிரதேச சபையின் உறுப்பினரை ஆனமடு நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/62476 யாழில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதியில் வைத்து 25 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 3 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்…

    • 0 replies
    • 302 views
  21. நாட்டில் கோட்டாபய அல்ல யார் ஜனாதிபதியாக அல்லது பிரதமராக ஆட்சிக்கு வந்தாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நியாயமான நீதி கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடருமென, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்களின் தலைவிகள் தெரிவித்தனர். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, எதிர்வரும் 30ஆம் திகதி கல்முனையில் இடம்பெறவுள்ள மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு, திருக்கோவில், தம்பிலுவில் பொது சந்ததைக் கட்டத் தொகுதியில் அமைந்துள்ள அவர்களின் மாவட்ட அலுவலகத்தில் இன்று (12) இடம்பெற்றது. இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி தம்பிராசா ச…

    • 0 replies
    • 316 views
  22. ஜனாதிபதி வேட்பாளர் யாராக இருந்தாலும் தமிழ் மக்களுக்கு எதனைச் செய்யமுடியும் என்பது தொடர்பில் தென்னிலங்கை மக்களுடன் வெளிப்படையாகக் கதைக்கக்கூடியவர் யார் என்பதை அறிந்தே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஆதரவு வழங்கும் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் துணைத் தலைவருமான சி.வி.கே சிவஞானம் தெரிவித்தார். அவைத்தலைவரின் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தற்போது ஒவ்வொருகட்சிகளும் வேட்பாளர்களை அறிவிப்பதும் யாருக்கு ஆதரவு என்பதும் பேச்சுவார்த்தைகள் மற்றும் உரையாடல்களை ஆரம்பித்துள்ளார்கள்.இந்த நிலையில் தமிழ் மக்…

    • 0 replies
    • 492 views
  23. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அசமந்த போக்கே காரணம் - சிவசக்தி ஆனந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அசமந்த போக்கே தமிழ் மக்கள் மாற்று தலைமைகளை நாடுவதற்கான காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று தமிழ் மக்கள் கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கட் போட்டி ஒன்றில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். http://www.hirunews.lk/tamil/222045/தமிழ்-தேசியக்-கூட்டமைப்பின்-அசமந்த-போக்கே-காரணம்

    • 1 reply
    • 1.1k views
  24. ஐதேகவில் நான்கு அதிபர் வேட்பாளர்கள் வரும் அதிபர் தேர்தலில் ஐதேகவின் சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் என்று கருதப்படுவோரின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. ஐதேகவின் அதிபர் வேட்பாளராக போட்டியிடக் கூடும் என்று ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச ஆகியோர் எதிர்பார்க்கப்படுகின்றனர். இவர்களுக்கு சார்பான அணிகளும் ஐதேகவுக்குள் உருவாகியுள்ளது. இந்த நிலையில், நான்காவதாக, இன்னொருவரும் ஐதேகவின் வேட்பாளர் பட்டியலில் இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம கமகே. அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக் கூடியவர்களின் பட்டியலில் இருப்பதாக அலரி மாளிகையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பி…

    • 6 replies
    • 1k views
  25. திருகோணமலை மாணவர் படுகொலை – சட்டமா அதிபரின் நடவடிக்கையை, மன்னிப்புச் சபை வரவேற்றது… August 10, 2019 திருகோணமலையில் 2006 ஜனவரியில் விசேட அதிரடிப்படையினரால் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகின்ற 5 தமிழ் மாணவர்களின் கொலை தொடர்பாக மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு இலங்கையின் சட்டமா அதிபர் எடுத்திருக்கும் தீர்மானத்தை வரவேற்றிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, விசாரணைகள் பயனுறுதி உடையவையாக இருக்க வேண்டுமானால் சில சீர்திருத்தங்கள் அவசியம் என்றும் கூறியிருக்கிறது. இந்தக் கொலைகளுடன் தொடர்புடைய வழக்கின் குற்றஞ்சாட்டப்பட்ட விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 13 வீரர்களை, அவர்களுக்கு எதிராக சாட்சியங்கள் இல்லையென்ற காரணத்தைக் கூறி திருகோணமலை மேல் நீதிமன்றம் விடு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.