Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இரண்டு நாட்களுக்கு ஒரு பனிஸ் மாத்திரமே உண்டு, தினமும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் குவைத்துக்கு வீட்டு பணிப்பெண்ணாகச் சென்ற பெண்ணொருவர் நாடு திரும்பியுள்ளார். அணிந்திருந்த ஆடையுடன் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடைந்துள்ள இவரை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளது. குறித்த பெண் எஹெலியகொட பிரசேத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தயான 49 வயதுடைய மாரிமுத்து சுலோசனா என்பவராவார். இவர் தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் அவர்களின் திருமண செலவிற்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்வதற்காக குவைத்திற்கு வீட்ட…

    • 1 reply
    • 412 views
  2. இலங்கையில் ஒருவித மூளைக்காய்ச்சல் பரவி வருவதால், இந்த வருடத்தில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகில் பழங்கள் விற்பனை செய்த 31 வயதான இளைஞன் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். ஏனைய பழ விற்பனையாளர்களுக்கு இந்த நோய் பரவாமல் இருப்பதற்கு உடனடியாக மருந்து பெற்றுக்கொள்ளுமாறு மருத்துவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நோய் பரவக்கூடியதல்ல எனினும் கிருமி பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மூளைக்காய்ச்சல் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அவ்வாறு உயிரிழந்த அனைவரையும் அன்றைய…

  3. ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் செப்டம்பர் மாத பிற்பகுதியில் வெளியிடுவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருப்பதாகத் தெரியவருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் ஜனவரி முதல் வாரத்தில் நிறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுவதால், ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதிக்குமிடையிலான ஒரு சனிக்கிழமை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளுக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவைக் கோரும் வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழுவே வெளியிடும். பதவியிலிருக்கும் ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையிலேயே வர்த்தமானி அறிவித்தலை ஆணைக்குழுத்…

    • 1 reply
    • 662 views
  4. 2012ம் ஆண்டு நுவரெலியா வைத்தியசாலையின் புதிய கட்டிட தொகுதியை கட்டுவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் அம்பாந்தோட்டை வைத்தியசாலையையும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் நான்கு வருட இழுத்தடிப்பின் பின்னர் இந்த வைத்தியசாலையை கட்டி முடிக்க முடிந்துள்ளது என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நுவரெலியா வைத்தியசாலையில் அமைக்கபட்ட ஒரு தொகுதி கட்டிடம் மக்கள் பாவனைக்கு இன்று (15.07.2019 ) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற…

  5. July 15, 2019 செல்போன்களில் படம் பிடிக்கும் கமெராக்கள் மேலதிக வசதியாக இணைக்கப்பட்டுள்ளன. இதனைக் கமெராக்களில் செல்போன் வசதி செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லமுடியாது. செல்போன்களில் வானொலி கேட்கமுடியும் என்பதற்காக அதனை வானொலியில் செல்போன் வசதி செய்யப்பட்டிருப்பதாகக் கூற முடியாது. அதே போன்றுதான் தொலைத்தொடர்புக் கம்பங்களில் மின்விளக்குகளைப் பொருத்திவிட்டு மின்விளக்குக் கம்பங்களில் மேலதிகமாகத் தொலைத்தொடர்பு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லமுடியாது. ஆனால், அதி உயர்வேகத் தொலைத் தொடர்புக் கம்பங்களைச் சாதாரண மின் விளக்குக் கம்பங்களாகக் காட்டி யாழ்ப்பாணம் மாநகரசபை மக்களை முட்டாள்களாக்கியுள்ளது என்று தமிழ்த் தேசி…

  6. தமிழர் தாயகம் வட மாகாணம் யாழ்ப்பாணம் நாவற்குழி விகாரை திறப்பு- வழக்கை வாபஸ் பெற்றது பிரதேச சபை அமைச்சர் சம்பிக்க ரணவக்க நோில் சென்று விகாரையில் வழிபாடு தமிழர் தாயகம் வடமாகாணம் யாழ்ப்பாணம் நாவற்குழிப் பிரதேசத்தில் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் கீழ் இயங்கும் இலங்கைத் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அனுமதியுடன் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்போடு புதிதாகக் கட்டப்பட்ட விகாரை எதிர்வரும் 13 ஆம் திகதி இரவு ஏழு மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. நாவற்குழி சம்புத்தி சுமன விகாரைத் திறப்பு விழா எனப் பெயரிடப்பட்ட அழைப்பிதழ் கொழும்பில் உள்ள பிரமுகர்களுக்கு அதிகாரபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டு…

  7. கிழக்கில் சமகால தமிழர் அரசியலின் செல்நெறிப்போக்கு மற்றும் அரசியல் கலாசாரத்தை தீர்க்கமாக புரிந்து கொண்டு எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றக் கூடிய தமிழர் பரப்பின் அரசியற் கட்சிகளை இணைத்து கிழக்கில் வாழும் ஈழத்தமிழர்களின் சமூகப் பொருளாதார, பண்பாட்டியல் இலக்குகளை அடைவதற்கான ஓர் பாரிய அரசியற் கூட்டமைப்பை உருவாக்கி காத்திரமாகப் பயணிப்பதற்கான ஓர் பூர்வாங்க கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது. கிழக்கின் ஈழத்தமிழரின் அரசியற் போக்கை நெறிப்படுத்த தேசப்பற்றுள்ள அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து கொள்ள வேண்டும் என்ற கிழக்கில் வாழ்கின்ற தமிழர்களின் அபிலாஷையை முன்னிறுத்தி ஈழத் தமிழர் பேரவை குறிப்பிட்ட கலந்துரையாடலுக்கான அழைப்பை விடுத்திருந்தது. ஈழத்தமிழர் பரப்…

    • 0 replies
    • 250 views
  8. கல்முனை வைத்தியசாலையில் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு ஊழியர்களுக்கும் இடையே இழுபறி… July 15, 2019 கல்முனை வைத்தியசாலையில் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட இழுபறியினால் பதற்ற நிலை ஏற்பட்டது. வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை ஞாயிற்றுக்கிழமை (14.07.190) மாலை பார்வையிட வந்த மக்களுக்கும் வைத்தியசாலையில் கடமையாற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் இப்பதற்றம் ஏற்பட்டது. கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில் பின்வாசல் நுழைவாயில் ஊடாக அண்மைக்காலங்களில் வைத்தியசாலையில் உள்ள நோயாளிகளை பார்வையிடுவதற்காக பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த அனுமதி விடயத்தில் நடைமுறைக்கு பொருத்தமான …

  9. வவுனியாவில், சிறைக்கைதி தப்பியோட்டம்! வவுனியாவில் சிறைக்கைதி ஒருவர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா சிறைச்சாலையில் இருந்து சிறைச்சாலைக்கு வெளியே சென்ற நபரே இவ்வாறு தப்பியோடியுள்ளார். இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை 2 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறைச்சாலையை சுற்றி சுத்தப்படுத்தி கொண்டிருந்த போதே ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கொழும்பை சேர்ந்த வீரசிங்கம் முதியன்சலாகே பியந்தஅப்புகாமி என்ற கைதி இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். வேலைசெய்த இடத்திலிருந்து கைதி பலமணிநேரமாக திரும்பாததால் சிறைக்காவலர் சென்று பார்த்தபோது கைதி தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்…

  10. கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விவகாரம் – கணக்காளர் அம்பாறை கச்சேரியில் இருந்தே செயற்படுவார்! கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு என நியமிக்கப்பட்டுள்ள கணக்காய்வாளர் அம்பாறை கச்சேரியில் இருந்தே செயற்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது. கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு கணக்காய்வாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம் இதனைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கையின் பிரகாரமே இறுதித் தீர்மானம். அதுவரை கணக்காளர் அம்பாறை கச்சேரியில் இ…

  11. எதிர்காலத்தில் எழக்கூடிய காணிப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள தெனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாவலப்பிட்டியில் தெரிவித்தார். வழங்கப்படும் காணியில் வாழ்வதற்கு, தொழில் செய்வதற்கு உரிமை இருக்கிறது என்பது அரசாங்கம் வழங்கும் உறுதி பத்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது என்றும் பிரதமர் கூறினார். நாவலப்பிட்டி பகுதியில் வசிக்கும் பல ஆண்டுகள் காணி உறுதி பத்திரமில்லாமல் இருந்த சுமார் 1,200பேருக்கு ‘ரன் பிம’ எனும் காணி உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு (13) நாவலப்பிட்டி பவ்வாகம பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந் நிகழ்வின் போது காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கய…

    • 0 replies
    • 608 views
  12. 30 வருடங்களாக மகனை தேடிய வியாழம்மா, காணாமலே உயிர் நீத்தார்! July 14, 2019 முப்பது வருடங்களாக தனது மகனை தேடியலைந்த தாய் ஒருவர் தனது மகனை காணாத நிலையில் உயிர் நீத்த சம்பவம் கேப்பாபுலவு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1989ஆம் ஆண்டு எருக்கலம்பிட்டி பகுதியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட வேலுப்பிள்ளை தியாகராஜா (ரஞ்சன்) என்ற இளைஞரின் தாயாரான வேலுப்பிள்ளை வியாழம்மா என்பவரே இவ்வாறு முதுமை காரணமாக உயிரிழந்தார். இவர் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி கடந்த 30 வருடங்களாகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டிருந்தார். மனித உரிமை ஆணைக்குழுக்களில் தனது மகனைத் தேடி வாக்குமூலங்கள் வழங்கியிருந்தார். எனினும், தனது மகனைக் காணாமலேயே அவர் உயிரிழந்துள்ளார். கேப்பாப்…

    • 1 reply
    • 680 views
  13. பலாலியில் இருந்து திருச்சி அல்லது மதுரைக்கு விமான சேவை – இந்தியா ஆர்வம் பலாலி விமான நிலையத்தில் இருந்து, தமிழ்நாட்டின் மதுரை அல்லது திருச்சி நகரங்களுக்கு அல்லது கேரளாவின் திருவனந்தபுரத்துக்கு நேரடி விமான சேவைகளை நடத்த இந்தியா விருப்பம் கொண்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு சிறிலங்கா அரசாங்கம் 1950 மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளது. இந்தியா 300 மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளது. தற்போது முதற்கட்டமாக ஓடுபாதையை சீரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்தப் பணிகள் நிறைவடைந்ததும், குறைந்த கட்டண விமான நிறுவனங்கள் பயன்படுத்தும் நெருக்கமான ஆசனங்களை…

    • 1 reply
    • 499 views
  14. திட்டமிட்டு அழிக்கப்படும் தமிழர் வரலாற்றுச் சின்னங்கள்..? : வாவெட்டி மலைக்கு சென்ற பக்தர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி ! (கே .குமணன் ) ஈழத் தமிழர் வர­லாற்­றுடன் தொடர்­பு­டை­யதும், ஒட்­டு­சுட்டான் தான்­தோன்­றீஸ்­வரர் ஆல­யத்­துடன் தொடர்­பு­டை­ய­து­மான வாவெட்டி மலை ஆபத்தை எதிர்­கொண்­டுள்­ள­தாக பிர­தேச மக்கள் கவலை தெரி­வித்­துள்­ளனர் . தொல்­பொருள் வல­ய­மாக காணப்­படும் இந்த மலையில் பாரிய அளவில் கல் அகழ்வு இடம்­பெற்றுச் செல்­கின்­ற­மையே இதற்கு கார­ண­மாகும். வர­லாற்றுச் சிறப்பு மிக்க முல்­லைத்­தீவு ஒட்­டு­சுட்டான் தான்­தோன்­றீஸ்­வரர் ஆல­யத்­துடன் தொடர்­பு­டைய வாவெட்டி மலையில் அமைந்­துள்ள வாவெட்டி ஈஸ்­வரர் ஆல­யத்தில் நேற்று மக்கள் வழி­பா­டு­களை மேற்­கொண்­டனர். …

  15. மக்களின் பூர்வீக விவசாய நிலங்களை ஆக்கிரமித்துள்ள வனஜீவராசிகள் திணைக்களம் ; மக்கள் விசனம் முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநலசேவை நிலயப் பிரிவுக்குட்பட்ட, தமிழ் மக்களின் பல பூர்வீக விவசாய நிலங்களை உள்ளடக்கி, வனஜீவராசிகள் திணைக்களம் சரணாலயத்திற்காக அபகரித்து வைத்துள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அபகரிப்புச் செய்யப்பட்டுள்ள தமிழ் மக்களுக்குரித்தான பூர்வீக அறுதி உறுதி விவசாய நிலங்களுக்குள், தற்போது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாதென வனஜீவராசிகள் திணைக்களம் தடை விதிப்பதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இதனால் தமது வாழ்வாதாரம் பெரிதும் கேள்விக்குறியாக்கப்பட்டிருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் கர…

  16. யாழில் தனியார் காணியில் விகாரையை ஒத்த கட்டடமொன்றை அமைக்கும் இராணுவத்தினர் வலி.வடக்கு தையிட்டி பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணியில் இராணுவத்தினர் விகாரையை ஒத்த கட்டடமொன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 28 வருடங்களுக்கு மேலாக இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள குறித்த பகுதிகளில் சில இடங்கள் அண்மைக்காலமாக இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து , விடுவிக்கப்பட்டு வருகின்றன. அந்நிலையில் இன்னமும் விடுவிக்கப்படாது இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணி ஒன்றில் புதிதாக விகாரையை ஒத்த கட்டடம் ஒன்றை அமைக்கும் பணியினை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர். நாவற்குழி பகுதியில் பல எதிர்ப்புக்களின் மத்தியில் கட்டப்பட்ட விகாரை நேற்றைய தினம்…

  17. “கன்னியா தமிழரின் பூர்வீகம்” வரும் செவ்வாய்க்கிழமை போராட்டம்! July 14, 2019 திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கன்னியா வெந்நீரூற்று பகுதியில் தொல்லியல் திணைக்களம் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு முயற்சியை எதிர்த்து போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த போராட்டத்தினை கன்னியா மரபுரிமை அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு இப்போராட்டம் கன்னியாவில் இடம்பெற உள்ளது. கையை விட்டுப்போகும் கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் தமிழர்களின் பூர்வீக சொத்து என்பதை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கன்னியா மரபுரிமை அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன் கட்சி அமைப்பு வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் ஒன்றாக நின்று கன்னியா பகுதி…

  18. கேப்பாபுலவு இராணுவ முகாம் பகுதியில் விபத்து- சிப்பாய் ஒருவர் பலி 8பேர் காயம் ! July 14, 2019 முல்லைத்தீவு கேப்பாபுலவில், பாதுகாப்பு படைத் தலமையகம் அமைந்துள்ள பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவத்தினர் ஒருவர் பலியாகியதுடன் 8 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியின் வீதியின் வளைவு ஒன்றில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கப் ரக வாகனம் விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணம் செய்த இராணுவத்தினரில் ஒருவர் பலியாகியதுடன் மேலும் 8பேர் காயமடைந்துள்ளனர் . காயமடைந்தவர்களில் 3 இராணுவத்தினர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய 5பேர் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://…

  19. காங்கேசன்துறைக் கடற்பரப்பில், பணி முடித்த கடற்படைச் சிப்பாய் மின்சாரம் தாக்கி பலி… July 14, 2019 காங்கேசன்துறைக் கடற்பரப்பில் பணி முடிந்து 12ம் திகதி கரை திரும்பிய கடற்படைச் சிப்பாய் ஒருவர் மின்சாரம் தாக்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் 28 வயதுடைய சாமல்லசங்க- வெந்தசிங்க, என்னும் ககொஸ்வத்த, கொரனையைச் சேர்ந்த கடற்படைச் சிப்பாயே இவ்வாறு உயிரிழந்தவராவார். காங்கேசன்துறைப் பகுதியில் பணியில் இருந்த கடற்படை கப்பல் ஒன்று பணி முடித்து துறைமுகம் திரும்பிய நிலையில் அதில் இருந்த கடற்படையினர் தரை இறங்கியுள்ளனர். இதன்போது குறித்த கடற்படைச் சிப்பாயும் தரை இறங்கியுள்ளார். இவ்வாறு தரை இறங்குவதற்காக அருகில் இருந்த ஓர் மின் கம்பத்தை பற்றிப் …

  20. பகுப்பாய்வுத் திறன் வலுப்படுமா? 21/4 தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில், இரண்டு முக்கியமான முடிவுகளை எடுத்திருக்கிறார். முதலாவது, தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை ஒன்று, கலாநிதி சரத் அமுனுகமவின் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது, பாதுகாப்பு அமைச்சின் கீழ், மத தீவிரவாதம், வன்முறை அடிப்படைவாதம், மற்றும் சர்வதேச, உள்நாட்டு தீவிரவாதத்தை தடுக்கும் மற்றும் முறியடிக்கும் தேசிய திட்டம் என்ற பெயரில், சிறப்பு பிரிவு ஒன்று உருவாக்கப்படவுள்ளது. 21/4 தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தான், இந்த இரண்டு அமைப்புகளும் நிறுவப்படு…

    • 0 replies
    • 691 views
  21. இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களின் உறவினர்கள், இன்று மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பாக நீதி கிடைப்பதற்கு, சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என்கிற கோரிக்கையினை போராட்டக்காரர்கள் அப்போது முன்வைத்தனர். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடைய அமைப்பின் பிரதிநிதிகள், இந்தக் கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு வியாழக்கிழமையன்று வாக்களித்து. அரசாங்கத்தைக் காப்பாற்றியுள்ள நிலையில், மேற்பட…

    • 0 replies
    • 709 views
  22. ரிஷாத் பதியுதீனுக்கு மீண்டும் பதவி வழங்க கூடாது - ஐ.தே.க பின்வரிசை உறுப்பினர்கள் போர்க்கொடி (எம்.மனோசித்ரா) உயிரத்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் தெரிவுக்குழுவில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் உள்ளிட்ட ஏனைய விசாரணைகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடிய அனைத்து செயற்பாடுகளுக்கும் நாம் எதிர்ப்பினையே தெரிவிப்போம். முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீண்டும் பதவியேற்க தீர்மானித்தால் அதற்கு எதிராக கட்சி தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்துவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார். கூட்டாக அமைச்சுப்பதவிகளைத் துறந்த முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் மீண்டும் பதவியேற்றக்கப்போவதாகத் தெரிவித்துள்ளனர். எனினும் ரிஷாத் பதி…

  23. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதான அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யாத, முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலான வேட்பாளர் ஒருவர் தேர்தலில் களமிறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அனைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளின் சார்பிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த வேட்பாளரை பெயரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முஸ்லிம் வேட்பாளருக்கு அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. முஸ்லிம் கட்சிகள் கூட்டாக இணைந்து ஓர் முஸ்லிம் கூட்டணியை உருவாக்கி அதன் ஊடாக வேட்பாளரை நிறுத்துவது குறித்து பேசப்பட்டு வருவதாகத் தெரிவ…

    • 3 replies
    • 865 views
  24. அமெரிக்காவுடனான உத்தேச படைகளின் அந்தஸ்த்து ஒப்பந்தம் இலங்கையில் வெளிநாட்டு படைத்தளமொன்றிக்கு வழிவகுக்கும் நிலை காணப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது. இந்நிலையில் அமெரிக்க தளமொன்றை நிறுவும் எவ்விதமான நோக்கமும் கிடையாது. மாறாக இலங்கையுடன் மேற்கொள்ளப்படும் இரு தரப்பு ஒப்பந்தங்கள் இந்த நாட்டின் இறையாண்மைக்கு முழுமையாக மதிப்பளிக்கும் வகையிலேயே காணப்படும் என அமெரிக்க தெரிவித்துள்ளது. இதே வேளை , நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மீறுகின்ற எதையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என திட்டவட்டமாக இலங்கை அறிவித்துள்ளது. அமெரிக்காவுடனான உத்தேச படைகளின் அந்தஸ்த்து ஒப்பந்தம் (SOFA)குறித்து பல்வேறு சர்ச்சைக்குறிய கருத்துக்கள் மேலோங்கியுள…

    • 1 reply
    • 981 views
  25. இராணுவத்திடம் எமது உறவுகள் சரணடைந்தார்கள் என்பதற்கு நாங்களே சாட்சி : காணாமல்போனோரின் உறவுகள் அமையம் (நா.தனுஜா) தமிழ் மக்களின் உரிமைகளுக்கான ஆயுதம் ஏந்திப் போராடிய எமது உறவுகள் இராணுவத்தின் மீதும், அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்தே சரணடைந்தார்கள். அவ்வாறிருக்கையில் இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் எவரும் சரணடையவில்லை என்றுகூறி எம்மையும், சர்வதேசத்தையும் ஏமாற்ற முயற்சிக்கக் கூடாது. எமது போராட்டத்தின் வடிவத்தை மாற்றி இதற்கான எமது பதிலை விரைவில் அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்துவோம் என்று காணாமல்போனோரின் உறவுகள் அமையம் கூறியிருக்கிறது. https://www.virakesari.lk/article/60390

    • 1 reply
    • 708 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.