ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143218 topics in this forum
-
முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கை ; மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்புரிவோரின் நிலையை எண்ணிப் பார்க்கவும் (நா.தனுஜா) நாட்டின் பெரும்பான்மை சிங்களவர்கள் வேலைவாய்ப்பிற்காக மத்திய கிழக்கு நாடுகளான கட்டார், சவுதிஅரேபியா உள்ளிட்ட நாடுகளிலேயே பணிபுரிகின்றனர். எமது நாட்டில் குறுகிய நோக்கத்தில் முஸ்லிம் மக்கள் துன்புறுத்துதல், அவர்களது வணிக செயற்பாடுகளை நாசமாக்குதல் உள்ளிட்ட வன்முறைச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மத்திய கிழக்கில் தொழில்புரியும் சிங்களவர்கள் திருப்பியனுப்பப்பட்டால் எமது நாட்டின் பொருளாதாரம் என்னவாகும் என்பது குறித்து சற்றேனும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் ஏற…
-
- 2 replies
- 601 views
-
-
இலங்கையில் தொழில்செய்யும் சீனர்களுக்கு, சீனாவில் இருந்து விசேடமாக சிகரட் கொண்டுவர கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். நிதியமைச்சில் இன்று (30) மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில், செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்தார். https://newsline.lk/news/6690-2019-05-30-12-24-39?fbclid=IwAR1599cl5xSFvK8vlMfoxDDJraf-IhAFoADkRFcD-QnSwe_YHz23OuXu9_Y
-
- 5 replies
- 1.5k views
-
-
படத்தின் காப்புரிமை EYESWIDEOPEN/GETTY IMAGES இலங்கையில் அரச ஊழியர்கள் பணிநேரத்தில் அணிய வேண்டிய ஆடைகள் தொடர்பான உத்தரவினை, அந்த நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இலங்கையின் பொது நிர்வாக அமைச்சு எழுத்து மூலம் விடுத்துள்ள சுற்றறிக்கை மூலம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆண் ஊழியர்கள் பணிநேரத்தில் காற்சட்டை மற்றும் மேற் சட்டை அல்லது தேசிய உடை அணிய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பெண் ஊழியர்கள் சேலை அல்லது கண்டியச் சேலை (ஒசரி) அணிய வேண…
-
- 1 reply
- 942 views
-
-
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரண்டாவது முறையாகவும் இந்திய பிரதமராக பதவியேற்றார். இதற்கு உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து பலர் கலந்து கொண்டனர். இலங்கையில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றுள்ளார். இவருடன் அமைச்சர் மனோ கணேசனும் சென்றுள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். “நட்பான இந்திய நாட்டின், டெல்லி சூட்டில் (45c) பிரதமர் மோடியின் பதவியேற்பில் கலந்துக்கொள்ள ஜனாதிபதியுடன் வந்திறங்கினேன்” என குறிப்பிட்டுள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/121075
-
- 7 replies
- 952 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது – மஹிந்த, மைத்திரி தகவல் ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளார். அந்தவகையில், வரும் நவம்பர் 9 இலிருந்து டிசம்பர் 9 இற்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, டிசம்பர் 7ஆம் திகதி தேர்தல் நடத்தப்படவேண்டும் என தேர்தல் ஆணையாளர் தன்னிடம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். அத்துடன், இந்த வருட இறுதியுடன் ஜனாதிபதி ஆயுட்காலம் முடிவடைகின்ற நிலையில் மீண்டும் ஒரு தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் பதவியேற்பு…
-
- 0 replies
- 675 views
-
-
May 31, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் பயன்படுத்திய மடிக்கணினி , பணம், தங்க நகைகள் என்பன இன்றையதினம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். அட்டாளைச்சேனையிலுள்ள கால்வாயிலிருந்து மடிக்கணினி மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சஹ்ரானினால் அம்பாறை மாவட்டததுக்கு தலைவராக நியமிக்கப்பட்ட கல்முனை சியாம் என்பவர் வழங்கிய தகவலுக்கமையவே இவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காவல்துறையினர் 15 இலட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில் இன்று 35 இலட்சம் ரூபாயை கைப்பற்றிய…
-
- 0 replies
- 569 views
-
-
1 Min Read May 31, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn இலங்கையில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு வெடிப்புச் சம்பவங்களின் பின்னரான பாதுகாப்பு கெடுபிடிகள் தொடர்பாகவும் மக்கள் எதிர் நோக்கும் பிரச…
-
- 0 replies
- 300 views
-
-
May 31, 2019 ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (31) புதுடில்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பின் போது இருநாட்டு உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது அண்மையில் இலங்கைக்கு முகங்கொடுக்க நேர்ந்த துரதிஷ்டவசமான தாக்குதல் குறித்து இந்திய பிரதமர் வருத்தம் தெரிவித்தார். சமாதானம் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் இருநாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துதல் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடினர். பயங்கரவாதத்தை ஒழிப்பதற…
-
- 0 replies
- 340 views
-
-
May 30, 2019 வடமராட்சி அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த வடமராட்சி மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் பலியான மக்களின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று (29) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அன்றைய தினம் உயிரிழந்த பொதுமக்களின் ஆத்மா சாந்தி பிராத்தனை வழிபாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ‘ஒப்பிரேசன் லிபரேசன்’ இராணுவ நடவடிக்கையை அடுத்து பாதுகாப்பான இடம் தேடி இடம்பெயர்ந்த வடமராட்சி மக்கள் பெருமளவில் தஞ்சமடைந்திருந்த அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத்தின் 29.05.1987ஆம் ஆண்டு மீது இராணுவத்தினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களி…
-
- 7 replies
- 1k views
-
-
வவுணதீவு பொலிஸார் கொலைத் திட்டம்: கட்டளையிட்டது யார்? – துப்புத் துலாவியதில் கிடைத்த அதிர்ச்சித் தகவல்! வவுணதீவில் இரு பொலிஸார் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் அடிப்படைவாத குழுவே செயப்பட்டுள்ளமை கடந்த ஈஸ்டர் தின தாக்குதல்களுக்குப் பின்னர் தெரியவந்தது. இந்த கொலை விவகாரத்தின் பின்னணியில் முன்னாள் போராளிகளை இணைத்து அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டதுடன், இருவர் கைதாகி தற்போது விடுதலையாகியுள்ளனர். இதனிடையே இந்த சம்பவத்துடன், தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரானின் கட்டளையில் ஆயுதங்களை எடுப்பதற்காகவே சிரியாவில் பயிற்சி பெற்ற நில்கான் தலைமையிலான குழு வவுணதீவில் இரு பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த விடயம் சஹ்ரானின்…
-
- 0 replies
- 798 views
-
-
உண்ணாவிரப் போராட்டத்தில் குதித்தார் அதுரலிய ரத்ன அதுரலிய ரத்ன தேரர் கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அமைச்சரான ரிசாத் பதியுதீன் , கிழக்கு மாகாண ஆளுநரான எம் .எல்.ஏ.எம் ஹிஸ்பல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநரான அசாத் சாலி ஆகியோரை பதவியிலிருந்து விலக்குமாறு கோரியே அத்துரலிய ரத்ன தேரர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தேரர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளதுடன் பொதுமக்களும் குறித்த உண்ணாவிராதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றும் சமர்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ht…
-
- 0 replies
- 776 views
-
-
ரிஷாத்தை விசாரித்தால் அக்கட்சியின் 4 எம்.பி. க்களும் வெளியேறுவார்கள் - எஸ்.பி. (எம்.ஆர்.எம்.வஸீம்) ரிஷாத் பதியுதீனை சட்டத்துக்கு முன்நிறுத்தினால் அவருடன் இருக்கும் ஐந்துபேரும் அந்த கட்சியில் இருந்து வெளியேறுவார்கள். அதனால் ஆட்சி தொடர்பில் சிந்திக்காமல் பிரதமர் ரிஷாத்தை விசாரணைக்குட்படுத்தவேண்டும். அத்துடன் அவருக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்கள் தற்போது ஒப்புவிக்கப்பட்டு வருகின்றன என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கேந்திர நிலையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கை…
-
- 0 replies
- 606 views
-
-
ரிஷாத் பதவி விலக வேண்டும் : சம்பிக ரணவக்க (எம்.மனோசித்ரா) அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சமர்பிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவை. இவை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய விடயங்கள் கிடையாது. இவ்வாறு விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ரிஷாத்தின் அரசியல் அதிகாரம் தடையாக இருக்கும் என்பதால் அவர் அமைச்சு பதவியிலிருந்து விலக வேண்டும் என்று பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் தலைவருமான சம்பிக ரணவக்க தெரிவித்தார். ஜாதிக ஹெல உறுமய தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்த…
-
- 0 replies
- 332 views
-
-
வைத்தியர் ஷாபிக்கு எதிராக 335 முறைப்பாடுகள்: அவர் சார்ந்த இடங்களில் கடும் சோதனை வருமானத்தை மீறி சொத்து சேர்த்தமை குறித்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபிக்கு எதிராக கருத்தடை சிகிச்சை குறித்து இதுவரை 335 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதில் 299 முறைப்பாடுகள் குருணாகல் போதன வைத்தியசாலைக்கும், தம்புள்ளை ஆதார வைத்தியசாலை மற்றும் கலேவல தள வைத்தியசாலைகளுக்கும் அதனை அண்டிய பொலிஸ் நிலையங்களுக்கும் ஏனைய முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அத்துடன் இன்று கெக்கிராவ – கலாவெவ பகுதியில் உள்ள வைத்தியர் ஷபியின் இல்லம் ஒன்றும் விஷேட பொலிஸ் குழுவொன்றினால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது…
-
- 1 reply
- 605 views
-
-
வவுனியாவில் இரகசியமாக நள்ளிரவில் குடியமர்த்தப்பட்டனர் வெளிநாட்டு அகதிகள்! லத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள அகதிகளில் ஒரு தொகுதியினர் வவுனியாவில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அதன்படி வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திற்கு நேற்று (வியாழக்கிழமை) இரவு 12 மணியளவில் 77 அகதிகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திலிருந்து ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் இரண்டாம் கட்டமாக குறித்த அகதிகள் வவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் கடந்த 22ஆம் திகதி 35 அகதிகள் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 77 அக…
-
- 0 replies
- 316 views
-
-
அரச ஊடகம் தனியார் ஊடகம் என ஊடகங்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தியுள்ள வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தனியார் ஊடகங்களை பொது நிகழ்வு ஒன்றில் இருந்து வெளியேற்றிய சம்பவம் இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முல்லைத்தீவு மாவட்டத்துக்கு மேற்கொள்ளும் விஜயத்தின் போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா வலியுறுத்தியமைக்கும் வடக்கு ஆளுநர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். முல்லைத்தீவுக்கு எதிர்வரும் எட்டாம் திகதி சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விஜயம் செய்யவு ள்ளமை தொடர்பாகவும் மூன்றாம் …
-
- 0 replies
- 542 views
-
-
கடந்த 40 வருடத்துக்கும் மேலான ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் மத்திய அரசாங்கத்தின் கைக்கூலிகளாக செயற்படுவதை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என கிழக்கு மாகாண முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார். தமிழர்களின் போராட்டம் என்பது ஒரு இனத்துக்கான போராட்டமாக இருந்தது எனவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது முஸ்லிம் பயங்கரவாதிகளினால் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டம் எனவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அங்கு தொ…
-
- 0 replies
- 646 views
-
-
களனி பல்கலைக்கழகம் கால வரையறை இன்றி மூடப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று வெளியாகிய எச்சரிக்கை பிரசுரத்திற்கு பின்னர் பல்கலைகழக நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக அனைத்துப் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் மஹீல் பண்டார தெஹிதெனிய தெரிவித்தார். மட்டக்களப்பு சட்டவிரோத 'சர்யா' பல்கலைகழகத்திற்கு எதிராக நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம் குறித்து இன்று கூடி திட்டமிட எதிர்பார்த்திருந்த நிலையில் இவ்வாறு எச்சரிக்கை கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார். இந்த கடிதம் குறித்து பாதுகாப்புத் தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இந்த எச்சரிக்கை குறித்து தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://newsline.lk/news/6685-2019-05…
-
- 2 replies
- 831 views
-
-
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள அகதிகளில் ஒரு தொகுதியினர் இன்று இரவு வவுனியா நோக்கி நகர்த்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திலிருந்து ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் அழைத்து வரப்படவுள்ள இவ் அகதிகளில் சுமார் 77 பேர் இரண்டாம் கட்டமாக வவுனியா நோக்கி நகர்த்தப்படுகின்றனர். அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களின் பலத்த எதிர்ப்புக்கு மதியில் வவுனியா நோக்கி நகர்த்தப்படும் இரண்டாம் கட்ட அகதிகள் இரவு 11மணியளவில் வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திற்கு கொண்டு வரப்படுவார்கள் என அறிய முடிகின்றது. …
-
- 2 replies
- 1k views
-
-
ஸ்ரீலங்கன் விமானத்தினுள் குர்ஆன் வாசித்தமையினால் குற்ற விசாரணை பிரிவினர் தன்னை கைது செய்து விசாரணை மேற்கொண்டதாக பயணி ஒருவர் வெளியிட்ட வட்ஸ்அப் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பதிவு தொடர்பில் தற்போது ஸ்ரீலங்கன் விமான சேவை அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளது. அந்த அறிக்கைக்கமைய கடந்த 23ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த UL-605 என்ற விமானத்தில் பயணித்த பயணி ஒரு வகையான மன அழுத்தத்தில் காணப்பட்டார். குறித்த குற்றச்சாட்டு முன்வைத்த இஸ்லாமிய பயணி மத ரீதியான விடயங்களை கலந்துரையாடியுள்ளார் என ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த சந்தர்ப்பத்தில் விமானத்தில் பயணிகளுக்கு உணவு வழங்க சென்ற ஊழியர்கள், குற்றச்சாட்டை முன…
-
- 1 reply
- 779 views
-
-
கார் மரத்துடன் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு! வவுனியா, ஓமந்தை பகுதியில் இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிப் புறப்பட்ட கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் நால்வர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்போது, வவுனியா பிரபல பாடசாலையின் முன்னாள் அதிபரான வையாபுரிநாதனின் மனைவியான திலகவதி (68 வயது) என்பவரே உயிரிழந்தார். இதேவேளை காமடைந்த மூவரில் ஒருவர் அநுராதபுரம்…
-
- 0 replies
- 513 views
-
-
பெரும்பாலான மக்களினால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேல்மாகாண மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்கள் தொடர்பில் ஏன் நிறைவேற்றதிகாரம் செயற்படவில்லை. ஆளுநர் பதயிவின் மதிப்புக்களும் தற்போது குறைவடைந்துள்ளது. குண்டு துளைக்காத வாகனம் அடுத்த வருடம் எதிர்க்கட்சி தலைவர் பதவி வகிக்கவுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பயன்படும் . என பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹ…
-
- 0 replies
- 439 views
-
-
தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர்… இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் ஒன்று இடம்பெறப்போகின்றது என்ற காரணியை பாதுகாப்பு செயலாள ருக்கும், காவற்துறை மா அதிபருக்கும் எடுத்துக் கூறிய போதிலும் அது குறித்து கவனம் செலுத்தப்படவில்லை. தாக்குதல் நடத்தப்படும் வரையில் பாதுகாப்பு சபைக் கூட்டத்தை கூட்டவில்லை என்று தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையில் தெரிவித்தார். சஹ்ரான் குறித்த தகவல்களையும் சிரியா சென்றவர்கள் இலங்கைக்கு வருகின்றார்கள் கைது ச…
-
- 0 replies
- 375 views
-
-
நாட்டின் பிரதான அமைச்சு ஒன்றில் பணியாற்றும் மொஹமட் அலி ஹசன் கைது இன்று செய்யப்படடுள்ளார். மல்வானையிலுள்ள அவரின் வீட்டினை பரிசோதனை செய்த போது 92 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டதாக பியமக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொஹமட் அலி ஹசன் நிதி அமைச்சின் ஊடக பணிப்பாளராக செயற்பட்டு வருகிறார். உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் அடுத்து நாடு பூராகவும் இராணுவத்தினர் தேடுல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்போது பயங்கரவாத அமைப்பான தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களை கைது செய்து வருகின்றனர். சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்பின் இலங்கை கிளையாக தவ்ஹித் ஜமாத் அமைப்பு செயற்பட்டு வருகிறது. இதன் தலைவராக தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த…
-
- 3 replies
- 1k views
-
-
குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷியாப்தீன் ஷாபியின் வீடு, பாதுகாப்பு தரப்பினரால் நேற்று (29.05.19) சோதனையிடப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம்- கலாவெவ பிரதேசத்தில் உள்ள அவரது வீடு சோதனையிடப்பட்ட போதும், அங்கிருந்து சந்தேகத்துக்கிடமான எவ்வித பொருள்களும் கைப்பற்றப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வைத்தியரின் தந்தை, நெருங்கிய உறவினர்களிடமும் காவற்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதேவேளை வைத்தியர் ஷாபி 4000 தாய்மாருக்கு கருத்தடை செய்துள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், நேற்று வரை 200 முறைபாடுகள் குருநாகல் போதனா வைத்தியசாலை, தம்…
-
- 0 replies
- 350 views
-