ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143229 topics in this forum
-
சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டடு இராணுவ வெற்றியின் 10 ஆண்டு நிறைவு நினைவு தினம் இன்றாகும். இந்நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை தேசிய போர் வீரர்களின் தினம் கொண்டாப்பட்டவுள்ளது. இதனை முன்னிட்டு 38 சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு ஜனாதிபதி தலைமையில் உயர் பதவி வழங்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவிததுள்ளார். http://www.virakesari.lk/article/56197
-
- 0 replies
- 561 views
-
-
தற்கொலை குண்டுதாரியின் பயங்கரவாத செயற்பாடுகளை புலிகளுடன் ஒப்பிடவேண்டாம்….. May 18, 2019 தற்கொலை குண்டுதாரியின் பயங்கரவாத செயற்பாடுகளையும், இந்தத் தாக்குதலையும், விடுதலைப் புலிகளுடன் ஒப்பிட வேண்டாம் என, மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டள்ளார். விடுதலைப் புலிகள் ஆரம்பத்தில் இவ்வாறான நிலைப்பாடுகளை எடுக்கவில்லை. இறுதியிலேயே தற்கொலை தாக்குதல் என்ற மோசமான நிலைப்பாடுகளை மேற்கொண்டார்கள். தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட வேலைவாய்ப்பின்மை, கல்வி சமத்துவமின்மை என்பவை விடுதலைப் புலிகளை இந்த நிலப்பாட்டுக்கு மாற்றியது எனவும் சுனில் ஹந்துன்நெத்தி சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை தற்கொலை குண்டுதாரியின் பயங்கரவ…
-
- 0 replies
- 590 views
-
-
மே18 எஞ்சிய ஈழத்தமிழர்களின் இருப்பை உறுதி செய்து கொள்வதற்கு உறுதியேற்கும் நாள்! AdminMay 17, 2019 சிதறிய பிணங்களும்,சிந்திய குருதியும்,எம் இழப்பிற்கான எடுத்துக்காட்டு மட்டுமல்ல – எம் மீள் எழுச்சிக்குமானதுதான் என அணிதிரள்வோம் – தமிழின அழிப்பு நாள் மே 18 – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை! மே-18 என்பது நாம் கூடியழுவதற்கான நாள் மட்டும் அல்ல. மாறாக, திட்டமிட்டு இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட எமது உறவுகளுக்கான நீதியை பெற்றுக் கொள்வதற்கும், எஞ்சிய ஈழத்தமிழர்களின் இருப்பினை உறுதி செய்து கொள்வதற்கும் உறுதியேற்கும் நாளாகும். அந்தவகையில் தமிழ்த் தேசிய பேரினமாக எம் அணிதிரழ்வே தமிழினத்தின் இருப்பை உறுதிசெய்வதனூடாக இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான நீதியையும் பெற்றுக்கொள்ள மு…
-
- 0 replies
- 639 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு வடக்கு கிழக்கில் மர நடுகை நிகழ்வுகள்! கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிர்நீத்த மக்களின் 10ஆவது ஆண்டு நினைகூரல் நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதனை முன்னிட்டு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரணையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் மரநடுகை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் பொது நிறுவனங்களுக்கும் வைத்தியசாலைகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வுடன் மர நடுகை நிகழ்வுவும் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. யுத்தத்தில் உயிரிழந்த மக்களின் நினைவு தினத்தை அர்த்தமுள்…
-
- 0 replies
- 339 views
-
-
“அரசிமலை” பகுதியில் நில ஆக்கிரமிப்பு - ஜனாதிபதி, பிரதமருக்கு சம்பந்தன் கடிதம் திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேசச் செயலகப் பிரிவில் அடங்கும் புல்மோட்டை கிராம உத்தியோகத்தர் பிரிவினுள் “அரசிமலை” பகுதியின் நில ஆக்கிரமிப்பு குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் மூலமாக அறிவித்தல் விடுத்துள்ளார். இந்தக் கடிதத்தின் பிரதிகளை வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச, காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக…
-
- 1 reply
- 482 views
-
-
-
- 141 replies
- 13.8k views
- 1 follower
-
-
(நா.தினுஷா) வைத்தியசபையின் அனுமதிக்கமைய மட்டக்களப்பு வளாகம் ( பெடிக்லோ கெம்பஸ்) தனியார் கல்வி நிறுவனத்தின் மருத்துவ பீடம் ஆரம்பிக்கப்படவில்லை. பல்கலைகழக சட்டமூலத்துகுக்கு அமைவாகவோ அல்லது வைத்திய கட்டளைச்சட்டத்துக்கு அமைவாகவோ இந்த மட்டகளப்பு வளாகம் ஆரம்பிக்கப்பட வில்லை என்றும் இந்த தனியார் கல்வி நிறுவனம் தொடர்பான கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் சட்டத்துக்கு புறம்பாக இடம்பெற்றவையாகும். ஆகவே இந்த நிறுவனத்தின் வைத்திய கல்வி நடவடிக்கைகளை இரத்து செய்ய வேண்டும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே மட்டக்களப்பு வளாகம் தனியார் கல்வி…
-
- 5 replies
- 642 views
-
-
கடந்த நாட்களாக இடம்பெற்ற வன்முறைச் சம்பங்களினால் அரசாங்கத்தினால் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு முடக்கப்பட்டிருந்த சமூகவலைத்தளங்களானது மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன. வடமேல் மாகாணத்தில் குறிப்பாக குருணாகல், புத்தளம் மாவட்டங்களில் குளியாபிட்டி, நிக்கவரட்டி மற்றும் சிலாபம் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களினால் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு முடக்கப்பட்டிருந்த சமூகவலைத்தளங்களானது மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன. http://www.virakesari.lk/article/56176
-
- 0 replies
- 288 views
-
-
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கேல் ஆர். பொம்பேயோ இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவை இன்று சந்தித்துள்ளார். இதன்போது இலங்கையில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கான அமெரிக்காவின் கண்டனத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ள இராஜாங்க செயலாளர் பயங்கரவாத்திற்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் உறுதியான ஆதரவை மீள வலியுறுத்தியுள்ளார். இதேவேளை குறித்த குண்டு வெடிப்புகளை அடுத்து அமெரிக்கா வழங்கியிருந்த ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மாரப்பன எதிர்காலத்தில் இடம்பெறக் கூடிய தாக்குதல்களை தடுத்துக் கொள்வதற்கான பங்காண்மையை மேலும் ஆழப்படுத்திக் கொள்வதிலான இலங்கையின் ஆர்வத்தையு…
-
- 0 replies
- 680 views
-
-
முஸ்லிம்களை போன்று பெரும்பான்மை சமூகத்தினரும் நடந்துகொள்ள வேண்டும் – மஸ்தான் முஸ்லிம் மக்கள் எவ்வாறு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை காட்டிக்கொடுத்தார்களோ அதேபோல பெரும்பான்மை சமூகத்தில் இருக்கின்ற மக்கள் இனவாத தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவர்களை இனங்காட்ட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். குளியாப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் சந்தித்து கலந்துரையாடினார். குளியாபிட்டி – ஹெட்டிபொல அல் மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலுக்குச் சென்று மக்களுடன் கலந்துரையாடினார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் பெரும்பான்மை சமூகத்த…
-
- 1 reply
- 972 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முள்ளிவாய்க்காலில் அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டம் வட்டுவாகல் பொது நோக்கு மண்டபத்திற்கு அண்மையில் ஒன்று கூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றை முள்ளிவாய்க்காலில் முன்னெடுத்தனர்.மேலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், குறித்த இடத்திலேயே உயிரிழந்த உறவுகளுக்காக பொதுச் சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.இதேவேளை, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி வவுனியா மாவட்ட உறவினர்கள் மேற்கொண்டுவரும் போராட்டம், நேற்றுடன் 817ஆவது நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து ஐக்கிய ந…
-
- 0 replies
- 374 views
-
-
தமிழர் விடுதலையை நெஞ்சிலிருத்தி அதற்காய் உயிர் கொடுத்த உத்தமருக்கு அஞ்சலி செய்ய மாவை அழைப்பு May 17, 20190 தமிழ் இன விடுதலைக்காகத் தம்முயிரை அர்ப்பணித்த உத்தமர் தம் தியாகத்தைப் பேணிப் பாதுகாத்து ஆண்டு தோறும் நினைவுகூர்ந்து கண்ணீர் விட்டழுது ஆறுதல் பெறுவது தமிழர் பாரம்பரியம், மரபாகும்.கடந்த பத்து ஆண்டுகளிலும் அளவிடா நெருக்கடிகள் மத்தியிலும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் ஆங்காங்கே, குறிப்பாக முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவிடத்திலும் அணிதிரண்டு, ஒன்றுகூடி, கண்ணீரில் நனைந்து, உளமுருகிப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.எனவே தமிழர் விடுதலையை நெஞ்சிலிருத்தி அதற்காய் உயிர் கொடுத்த, களப்பலியாகி விட்ட உத்தமருக்கு அஞ்சலி செய்யும் ஒரே எண…
-
- 0 replies
- 360 views
-
-
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு வழிபாடு!! பதிவேற்றிய காலம்: May 17, 2019 முல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்ம சாந்திப் பிராத்தனை வழிபாடுகள் நாளை இடம்பெறவுள்ளன. வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பு சகாயமாதாபுரம் வீர துர்க்கை அம்மன் ஆலய நிர்வாக சபையும் இணைந்து நாளை காலை 9.30 மணியளவில் வழிபாடொன்றை ஒழுங்கமைத்துள்ளன. அதேநேரம் முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலயத்தில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு தலைவர் அருட்பணி மங்களரஜா தலைமையில் கூட்டுத் திருப்பலி நாளை காலை 9 மணியளவில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. https://newuthayan.com/story/10/மு…
-
- 0 replies
- 316 views
-
-
பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுவிப்பு!! பதிவேற்றிய காலம்: May 17, 2019 பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகிய மூவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா ஆள் பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 3ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் ஒளிப்படம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் என்பன மாணவர் ஒன்றியத்தின…
-
- 0 replies
- 422 views
-
-
நினைவேந்தலில் ஈடுபடலாம் (ஆர்.யசி) வடக்கு கிழக்கில் மக்கள் நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுபடலாம். அவர்களின் உணர்வுகளுக்கும் உரிமைக்கும் மதிப்பளிக்கவேண்டும். எனவே நினைவேந்தலை இராணுவம் ஒரு போதும் தடுக்காது என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்தார். எனினும் அவசரகால சட் டம் நடைமுறையில் உள்ளதை கருத்தில் கொண்டு அமைதியாக அனைவரும் செயற்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார். இராணுவ வெற்றிதின கொண்டாட்டங்கள் குறித்து இராணுவ தளபதியின் தலைமையில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் வடக்கின் நினைவேந்தல் நிகழ்வுகள் குறித்து கேள்வி எழுப்பிய போது அதற்கு பதிலளிக்கையிலேயே அவர…
-
- 0 replies
- 533 views
-
-
பயங்கரவாதிகளுடன் மிக நெருங்கிய தொடர்பை பேணிய கோடீஸ்வர வர்த்தகர் வத்தளையில் கைது (எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதாக கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் வத்தளை - மாபோல பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் ரிஸ்வான் எனும் நபரே மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதாக பொலிஸ…
-
- 0 replies
- 439 views
-
-
உளவுத்துறையினர் களத்தில் ; வடமேல் மாகாணத்தில் 81 பேர் கைது (எம்.எப்.எம்.பஸீர்) வடமேல் மாகாணத்தில் குறிப்பாக குருணாகல், புத்தளம் மாவட்டங்களில் குளியாபிட்டி, நிக்கவரட்டி மற்றும் சிலாபம் பொலிஸ் வலயங்களில் முன்னெடுக்கப்பட்ட வன்முறை சம்பவங்களுடன் தொடர்புபட்டோரையும் அவற்றை திட்டமிட்டவர்களையும் கைதுசெய்யும் பணியில் உளவுத் துறையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்களுக்கு மேலதிகமாக கம்பஹா, மினுவங்கொடை பகுதிகளில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்களை தாக்கிய விவகாரம் தொடர்பிலும் உளவுத்துறையினர் சூத்திரிகளை கைதுசெய்யும் பொறுப்பை ஏற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். இந் நிலையில் வட மேல் மாகாணத்தில் தற்போ…
-
- 0 replies
- 531 views
-
-
"வன்முறைகள் முஸ்லிம்களை வேறு திசைக்கு தள்ளிவிடும் அபாயம்" (எம்.ஆர்.எம்.வஸீம்) முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகள், நெருக்கடிகள் அவர்களை வேறு திசைக்கு தள்ளிவிடுமோ என்ற அச்சம் இருக்கின்றது. அதனால் இடம்பெற்ற சம்பவத்துடன் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் சந்தேகக்கண்கொண்டுபார்க்கக்கூடாது என முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரிவித்தார். முஸ்லிம் சிவில் அமைப்பினால் நேற்று இலங்கை மன்றக்கல்லூரியில் ஏற்பாடுசெய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்ற மறுதினமே …
-
- 0 replies
- 262 views
-
-
திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் வாரத்தின் நினைவேந்தல்! வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது. இந்த முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் கடந்த 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இதன் 18ஆவது நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) திருகோணமலையில் இடம்பெற்றது. இதன்போது இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்த உறவுகளுக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவு வார நிகழ்வுகள் இதற்கு முன்னர், வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பி…
-
- 0 replies
- 603 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு! இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூருவதற்காக வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் கூடுமாறு முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று (வியாழக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த அழைப்பை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு அறிவித்துள்ளது. எந்தவிதமான சுய அரசியல் நோக்கங்களும் இன்றி இந்த நிகழ்வினை இந்தக் குழு ஏற்பாடு செ…
-
- 0 replies
- 623 views
-
-
அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிராக இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சில : * தற்கொலை குண்டுதாரிகளின் தாக்குதலை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு இராணுவ தளபதிக்கு அழுத்தம் கொடுத்தமை. * சினமன் கிரேன்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதலை நடத்திய இம்ஷான் அஹமட் இப்ராஹிமின் கைத்தொழிற்சாலைக்கு வரையறுக்களுக்குட்படாத வகையில் உற்பத்தி பொருட்கள் விநியோகித்மை. * வெடிப்பொருட்கள் தொழிற்சாலையில் இருந்து கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படாமல் குறுகிய காலத்திற்…
-
- 0 replies
- 483 views
-
-
ஊரடங்குவேளையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்கள் 1983ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதத்தை ஞாபகப்படுத்துவதாக தெரிவித்துள்ள வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்கினேஸ்வரன், இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்,சிங்கள மற்றும் முஸ்லிம் புத்திஜீவிகளும் நியாயமான அரசியல்வாதிகளும் சமயோசிதமாக காய்களை நகர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். முஸ்லிம் மக்களுக்கு எதிராக அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வன…
-
- 0 replies
- 371 views
-
-
காத்தான்குடியில் இருக்கும் பிரபல அரசியல்வாதியின் தலைமையில் இயங்கிய ஆயுதக் குழுவினால் கடந்த காலங்களில் காணாமலாக்கப்பட்டோரில் பலர் கொல்லப்பட்டு மட்டக்களப்பில் புதைக்கப்பட்டிருக்கின்றார்கள். குறித்த சடலங்கள் எங்கு புதைக்கப்பட்டுள்ளன என்பதை அடையாளப்படுத்துவதற்கான சாட்சியங்கள் எங்களிடம் இருக்கின்றது என்பதை கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதியிடம் தெரியப்படுத்தியிருக்கின்றோம் என மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் தெரிவித்தார். தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. அதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்க…
-
- 0 replies
- 379 views
-
-
May 16, 2019 இலங்கையின் இராணுவப் புலனாய்வு அதிகாரி மேஜர் பிரபாத் புலத்வத்த மீண்டும் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறித்து ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழு, அதிருப்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் கடந்த காலங்களில், ஊடகவியலாளர்கள்கொல்லப்பட்ட, தாக்கப்பட்ட மூன்று சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனக் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட இவர் குறித்து கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை, ஊடகவியலாளர்கள் உபாலி தென…
-
- 0 replies
- 655 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் நேற்று புதன் கிழமை (15) இரவு குடும்பத் தகராறு காரணமாக கைக்குண்டுடன் சென்று குண்டை வெடிக்க வைக்க முயற்சித்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (16) காலை மடு காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்பத்தில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக தந்தைக்கும் மகனுக்கு இடையே வாய்த் தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது. இதையடுத்து வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்ற தந்தை சற்று நேரத்தின் பின்னர் மறைத்து வைக்கப்பட்ட புதிய …
-
- 0 replies
- 649 views
-