Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வரலாற்றுக் கடமையை தவறவிடாதீர்கள் ஈழமுரசு விடுக்கும் பணிவான வேண்டுகோள்! இன்னும் பல நூறு வருடங்கள் எம்மை கடந்து போனாலும் தமிழினத்தால் மறக்கமுடியாத வலிமிகுந்த ஓர் ஆண்டாக 2009 மே எமக்குள் ஆயிரம் இலட்சம் உணர்வுக் கலவைகளைத் தந்தபடியே இருக்கும். உன்னதம் மிகுந்த எமது விடுதலைப் போராட்டம் மௌனித்த பொழுது அது. பல ஆயிரம் எமது இரத்த உறவுகள் குதறி எறியப்பட்டு, கொன்று குவிக்கப்பட்ட குருதிகாயாத நாட்கள் அவை. உலகம் கள்ள மௌனத்துடன் பார்த்தும் பாரா முகமுமாக நின்றிருக்க, உலகின் பெரும் சக்திகள் சிங்கள பேரினவாதத்துக்கு ஆயுத, நிதி, வலுவூட்டல்களை எந்தவோர் அற உணர்வும் அற்று வழங்க, ஒரு தேசிய இனத்தின் மீது இனப்படுகொலை உச்சம் பெற்ற பொழுது அது. இப்போது பத்து வருடங்கள் …

  2. March 23, 2019 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை வரவேற்றுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, குறித்த தீர்மானத்தில் காலவரையறை விதிக்கப்படாமை கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. இனிமேலும் காலதாமதம் ஏற்படாத வகையில் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் அலுவலகத்துடன் இணைந்து இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் மூன்று தசாப்த காலமாகத் தொடர்ந்த யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்…

  3. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் சுகாதார அமைச்சர் ராஜித சோனரட்னவுடன் விசேட சந்திப்பொன்று நேற்று வெள்ளிக்கிழமை (22) மாலை சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் வைத்தியர்களும் இணைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். மன்னார் மாவட்டத்தி…

  4. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை மோட்டார் ரேசிங் சங்கம் , யாழ்ப்பாணம் மோட்டார் விளையாட்டு கழகம் , மற்றும் இராணுவ மோட்டார் விளையாட்டு கழகம் என்பன இணைந்து வடமாகாணத்தில் கார் பந்தய போட்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தய போட்டிகளை நடாத்தின. கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் குறித்த போட்டிகள் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றன. http://globaltamilnews.net/2019/116700/

  5. March 23, 2019 Add Comment முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவை நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக நியமிக்கும் அளவுக்கு நாட்டு மக்கள் முட்டாள்கள் இல்லை என இலங்கை சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரான விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர், யுத்தக் காலத்தில் கோத்தாபய பயனற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டதுடன் நாட்டில் பல கொலைகளை செய்தார் என்பதற்கான சாட்சிகளும் இருக்கின்ற நிலையில்…

  6. மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் மூன்று மாதங்கள் இடைநிறுத்தம் 5 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப்படம் மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் அடுத்த மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்படுவதாக மன்னார் சிறப்பு சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவி…

  7. சைவ மக்களின் காணி­களை சுவீ­க­ரிப்­பது அநீ­தி­யா­னது - கலா­நிதி ஆறு திரு­மு­ருகன் கண்­ட­னம் யாழ்ப்­பா­ணம், கீரி­மலை நகு­லேச்­சரத்தில் சைவ மக்­க­ளின் நிலங்­களை அரசு சுவீ­க­ரிக்க முயற்சி செய்­வ­தும், ஆன்­மி­கச் சூழலை சுற்­றுலா மைய­மாக அமைக்­கத் திட்­ட­மிட்­டுள்­ள­மை­யும் அநீ­தி­யான செயல் இதனை உடன் தடுத்து நிறுத்த வேண்­டும். இவ்­வாறு அகில இலங்கை இந்து மாமன்ற உப தலை­வ­ரும் தெல்­லிப்­பழை துர்க்­கா­தேவி ஆல­யத் தலை­வ­ரு­மான கலா­நிதி ஆறு திரு­மு­ருகன் தெரி­வித்­துள்ளார். சரித்­திர முக்­கி­யத்­து­வம் மிக்க கீரி­மலை நகு­லேச்­சர சூழ­லில் கீரி­மலை காங்­கே­சன்­துறை வீதி­யி­லுள்ள கோவில்கள், தனி­யார் நிலங்­கள், சமய நிறு­வ­னங்­க­ளின் நிலங்­க­ளைக் கடந்த 25 ஆண்­டு­க­ளுக்கு மேல் உ…

  8. புலிகளின் ஆயுதங்களை பாதாள உலகத்தவர்களுக்கு விற்கும் நடவடிக்கை தொடர்பில் கைதான 12 பேர் தொடர்ந்தும் தடுப்பு காவலில் (எம்.எப்.எம்.பஸீர்) புலிகள் மறைத்து வைத்த ஆயுதங்களை தேடிக் கண்டுபிடித்து, அவற்றை தெற்கின் பாதாள உலகக் குழுவினருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 12 சந்தேக நபர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலை புலிகள் இறுதி யுத்தத்தின் போது புதைத்த ஆயுதங்களை மீள தோண்டி எடுத்து தெற்கின் பாதாள உலக குழுவினருக்கு விற்பனை செய்யும் சட்டவிரோத நடவடிக்கை குறித்து விசாரணகளில் தமிழ் அரசியல் தலைவர் ஒருவரை கொலை செய்ய தீட்டப்பட்ட சதி தொடர்பிலும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. …

  9. கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு அருகில், படையினரின் செயற்பாடுகள் – மக்கள் விசனம்… March 23, 2019 குறித்த முகாம் கழிவுகளை ஓர் இடத்தில் குவிப்பதனால், பாடசாலை பிரதான வாயில் அமைந்துள்ள பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும், பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்தில் அவற்றை எரிப்பதனால் பாடசாலை சூழல் மாசடைவதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் நேற்று (22.03.19) பாடசாலைக்கு பெற்றோர் சென்றிருந்த சமயம் நச்சுமருந்து கலந்த வித்தியாசமான காற்றை சுவாசித்தது போன்ற உணர்வு காணப்பட்டதாக பெற்றோர் பாடசாலை அதிபரிடம் முறையிட்டுள்ளனர். பாடசாலை சூழலை மாசுபடுத்தும் வகையில் படையினர் முகாம் அமைத்துள்ள பகுதியில் அண்மை நாட்களாக துர்நாற்றம் வீசுகின்றமை தொடர்பில் தானும் உ…

  10. மன்னார் மனித எலும்புக்கூடுகள் – நீதிமன்றத்தில் அவசர கூட்டம் – பல்வேறு தீர்மானங்கள் March 23, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மனித புதை குழியின் கார்பன் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு அறிக்கைகள் இன்னும் கிடைக்கப்பெறவுள்ள நிலையில் அதற்கான நினைவூட்டல் கடிதங்களை அனுப்பி அறிக்கைகளை பெற்றுக்கொள்ளவுள்ளதோடு,குறித்த கலந்துரையாடலின் போது பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார். மன்னார் மனித புதைகுழி தொடர்பான கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (22) மாலை மன்னார் நீதி மன்றத்தில் இடம் பெற்றது. மன்னார் நீதவான் ரி.சரவணராஜா தலைமையில் இ…

  11. அல்லைப்பிட்டி – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் விபத்து – இளம் குடும்பத்தலைவர் பலி March 23, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அல்லைப்பிட்டி – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் இடம்பெற்ற டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றதாக ஊர்காவற்றுறை காவல்துறையினர் தெரிவித்தனர்.அளவெட்டி கிழக்கைச் சேர்ந்த 21 வயதான நிதர்ஷன் என்பவரே இதன் போது உயிரிழந்துள்ளார். மோட்டாா் சைக்கிளில் வந்த இளம் குடும்பத்தலைவர், டிப்பா் வாகனத்துடன் மோதி விபத்து இடம்பெற்றது எனவும் படுகாயமடைந்த குடும்பத்தலைவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார் எனவும் காவல்துறையினர் தெரி…

  12. போதைப்பொருள் விற்பனை மையமாக, கொக்குவில் புகையிரத நிலையப் பகுதி விளங்குவதாக தெரிவிப்பு… March 23, 2019 யாழ்ப்பாணம், கொக்குவில் புகையிரத நிலையத்தை அண்டிய பகுதியே ஹெரோயின், கஞ்சா போதைப்பொருள்களின் வியாபாரம் மற்றும் சட்டவிரோத மதுபான விநியோகம் என்பன இடம்பெறும் இடமாகவுள்ளது என கோப்பாய் காவற்துறையினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். கொக்குவில் புகையிரத நிலையத்தை அண்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நேற்றையதினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போதே காவற்துறையினர் இத் தகவலை மன்றில் தெரிவித்தனர். கொக்குவில…

  13. கோத்தபாயவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் பசிலுக்கு… எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவை நிறுத்துவது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பை பசில் ராஜபக்ஷவுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தான் பின்னர், மூன்று மாதங்களுக்குள் புதிய ஒரு கட்சியை உருவாக்கித் தேர்தலில் போட்டியிட்டு பாரிய வெற்றியை பசில் ராஜபக்ஷவின் தலைமையில் பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்டது. 340 பிரதேச சபைகளில் 231 சபைகளைப் பொதுஜன பெரமுன வெற்றிகொண்டது. 2005 ஆம…

    • 0 replies
    • 297 views
  14. கலப்பு விசாரணையை மறுத்தால் அனைத்துலக விசாரணை – சுமந்திரன் எச்சரிக்கை வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட விசாரணைப் பொறிமுறையை அமைக்கத் தவறினால், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எச்சரித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர், “சிறிலங்காவின் நீதிச் செயல்முறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஜெனிவாவில் உரையாற்றியமை ஏமாற்றம் அளிக்கிறது. மனித உரிமை மீறல்கள் தொடர்பான நீதிப் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை இணைத்துக் கொள்ள இணங்கி, 3 தீர்மானங்களி…

    • 0 replies
    • 418 views
  15. இந்தோ-பசுபிக் கட்டளைத் தளபதியுடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு இந்தோ- பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு விடயத்தில், சிறிலங்கா – அமெரிக்க கடற்படைக்கு இடையிலான ஒத்துழைப்பு வாய்ப்புகள் தொடர்பாக, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ், இந்தோ- பசுபிக் கட்டளைப் பீடத்தின் தளபதி அட்மிரல் டேவிட்சனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, இந்தோ- பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு விடயத்தில், சிறிலங்கா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளை உங்வாங்கிக் கொள்வது. அவற்றின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வது உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன. இதுகுறித்து தனது கீச்சகப் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ள அமெரிக்க தூது…

    • 0 replies
    • 128 views
  16. சிறிலங்காவில் முதல் முறையாக செயற்கை மழை சிறிலங்காவில் முதல்முறையாக நேற்று செயற்கை முறையில் மழை பெய்யும் திட்டம் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டது. வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மவுசாகல நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், முதல் முறையாக செயற்கை மழை பொழியச் செய்யப்பட்டது. சிறிலங்கா விமானப்படையின் வை-12 விமானத்தின் மூலம், மவுசாகல நீர்த்தேக்கப் பகுதிக்கு மேலாக 8000 அடி உயரத்துக்கு மேல், நேற்றுக்காலை சுமார் 45 நிமிடங்கள் மழை மேகங்களின் மீது இரசாயனப் பொருட்கள் தூவப்பட்டன. இதையடுத்து அந்தப் பகுதிகளில் சுமார் 24 நிமிடங்களுக்கு மழை பெய்தது. இந்த செயற்கை மழை பெய்யும் திட்டத்துக்கு உதவ தாய்லாந்தின் பொறியாளர் குழுவொன்…

    • 0 replies
    • 417 views
  17. கார்பன் பரிசோதனை அறிக்கையால் அகழ்வு நடவடிக்கைகள் நிறுத்தப்படக்கூடாது: சாலிய பீரிஸ் கார்பன் பரிசோதனை அறிக்கையினை மட்டும் வைத்துக்கொண்டு அகழ்வு நடவடிக்கைகளுக்கு கால வரையறையினை நிர்ணயம் செய்யத்தேவையில்லை என காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாகவும், கார்பன் பரிசோதனை அறிக்கை தொடர்பாகவும் மன்னார் மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் இன்று (வெள்ளிக்கிழமை) விசேட சந்திப்பு இடம்பெற்றது. மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது த…

  18. மஹிந்தவிற்கு எதிராக ஜே.வி.பியுடன் கைகோர்க்கும் புதிய கூட்டணி! நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு ஆதரவளிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் 20 ஆம் திருத்தம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி அனைத்துக் கட்சிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாக இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். குறித்த பேச்சுவார்த்தைகள் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, அனுரகுமார திசாநாயக, விஜித ஹேரத், நலி…

  19. பற்றி எரியும் வயல்கள்!! வவுனியாவில் நெல் அறுவடை செய்யபட்ட நிலையில் உள்ள வயல்வெளிகள் எரியூட்டபடுவதால் வீதிகள் எங்கும் புகைமூட்டமாக காட்சியளிக்கின்றன. கடுமையான வெப்பநிலை நிலவிவரும் நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்திவ ருகின்றது. பூந்தோட்டம் வீதியின் இருபக்கமும் அமைந்துள்ள வயல்வெளிகள் கடந்த சில நாள்களாக எரிக்கப்பட்டு வருகின்றது. வவுனியா வைத்த…

  20. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) கொழும்பில் விடப்படுகின்ற வவுனியா பொருளதார மத்திய நிலையத்தின் கேள்விக் கோரல்களை வவுனியாவுக்கு மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்றில் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர், வவுனியா பொருளாதார மத்திய நிலையம் வடக்கு தமிழ் அரசியல்வாதிகளின் ஒற்றுமையின்மை காரணமாக தாண்டிக்குளத்தில் இருந்து இரட்டை பெரியகுளம் பகுதிக்கு இடம்மாறியது. …

  21. இலங்கையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள 6 ஆயிரம் ரூபா உதவித் தொகையானது 'பிச்சைக் காசு' எனத் தெரிவித்துள்ள - வடக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், விடுதலைப் புலிகளின் தளபதி எழிலனின் மனைவியுமான அனந்தி சசிதரன்; "குறித்த குடும்பங்களுக்கு ஆகக்குறைந்தது 20 லட்சம் ரூபாயினையாவது, இடைக்கால நஷ்டஈடாக அரசாங்கம் மொத்தமாக வழங்க வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்படும் வரை, அல்லது அவர்களுக்கு என்ன ஆனது என்பது பற்றிய முடிவு, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் வரை, அவர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 6 ஆயிரம் ரூபாவை உதவித்…

  22. March 22, 2019 துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெலியத்த பிரதேச சபை எதிர்க் கட்சி தலைவர் கபில அமரகோன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த புதன்கிழமை பல்லன்தர – மொரதவான பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்காள்ளப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். …

  23. யுத்தம் நடந்தபோது, வடக்கு- கிழக்கில் புலிகள் என்ன செய்தனர் – மைத்திரி விளக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தம் நடந்தபோது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள வனப்பகுதிகள் பாதுகாக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். திம்புலாகலை – வெஹெரகல பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சர்வதேச வனப் பாதுகாப்பு தின நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போதுள்ள வன அடர்த்தியை பாதுகாப்பதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்படாவிட்டால், சுமார் 15 வருடங்களில் இலங்கையின் வன வளம் அழியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டில் எஞ்சியுள்ள 28 சதவீத வன அடர்த்தியில் பெரு…

  24. லிமா -2019 பாதுகாப்பு கண்காட்சியில் சிறிலங்கா கடற்படை மலேசியாவின் லங்காவி நகரில் நடைபெறவுள்ள அனைத்துலக கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி (லிமா) – 2019 சிறிலங்கா கடற்படையும் பங்கேற்கவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா கடற்படையின் எஸ்எல்என்எஸ் சாகர என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை திருகோணமலைத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. கப்டன் அனில் போவத்தை தலைமையில் 180 கடற்படையினர் இந்த போர்க்கப்பலில் மலேசியா சென்றுள்ளனர். லிமா-2019 பாதுகாப்பு கண்காட்சியில் உலகின் பல்வேறு நாடுகளின் கடற்படைக் கப்பல்கள், விமானங்கள் பங்கேற்கின்றன. இந்தக் கண்காட்சி எதிர்வரும் மார்ச் 26ஆம் நாள் தொடக்கம், 3…

    • 0 replies
    • 374 views
  25. இளைஞர்கள் கடத்தல் கடற்படை உயர்மட்டத்துக்கு தெரியும் – சிஐடி கொழும்பில் சிறிலங்கா கடற்படையினர் சிலரால் இளைஞர்கள் கடத்தப்பட்டமை கடற்படை உயர்மட்டத்துக்குத் தெரியும் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் ஷெகானி பெரேரா முன்னிலையில் தெரிவித்தனர். 2008-09 காலப்பகுதியில் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவின் சார்பில் முன்னிலையான, அதன் பொறுப்பதிகாரி நிசாந்த சில்வா, விசாரணையின் முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளித்தார். இதன்போதே, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயந்த பெரேரா…

    • 0 replies
    • 240 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.