ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143264 topics in this forum
-
மஹிந்தவை கைவிட்டு ரணிலுடன் கைகோர்த்த தொண்டா? 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வாக்களித்துள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது 119 வாக்குகள் ஆதரவாகவும், 76 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன ஆதரவாகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய தரப்புக்கள் எதிராகவும் வாக்களித்திருந்தன. இந்தநிலையில் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அதிக நெ…
-
- 0 replies
- 404 views
-
-
ஐ. நா வில் வடக்கு ஆளுநர் தமிழர் நலன் பேசமுடியும் என்பது கேள்விக்குறியே ;சீ.வீ.கே. சிவஞானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தமிழர் நலன் சார்ந்து எந்த அளவுக்கு அங்கு பேசமுடியும் என்பது கேள்விக்குறியாக தோன்றுகிறது என வட மாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டம் தொடர்பாக சீ.வீ.கே.சிவஞானம் ஆளுநர் சுரேன் ராகவனுக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த கடிதத்தில், இந்த கூட்டம் தொடர்பாக எமக்கும் ஏனைய முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் தங்கள் செயலாளர் எழுதிய கடிதம் சார்பாக எ…
-
- 0 replies
- 313 views
-
-
காணாமல் ஆக்கபட்டோரின் நிலையை வெளிப்படுத்தகோரியும், மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்க கூடாது என்பதை வலியுறுத்தியும் எதிர்வரும் 16 ஆம் திகதி யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்ட்டுள்ள போராட்டம் தொடர்பான கலந்துரையாடல் வவுனியாவில் இன்று நடைபெற்றது. கலந்துரையாடலில் பல்கலைகழக மாணவர்கள் மற்றும் வவுனியா மாவட்டப் பொது அமைப்புகள்,அரசியல் கட்சிகளை சார்ந்தோர் கலந்து கொண்டனர். கலந்துரையாடலில் போராட்டத்திற்கு அனைத்து தரப்பும் ஆதரவினை வழங்கவேண்டும் என்று பல்கலைகழக மாணவர்களால் கோரிக்கை விடுத்தனர்.வவுனியா வர்த்தகர்சங்கம், வவுனியா வரியிறுப்பாளர்சங்கம் ஆகியன குறித்த போராட்டத்துக்க…
-
- 0 replies
- 376 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலப்பகுதியில், வடக்கில் புதைத்த ஆயுதங்களை மீள தோண்டி எடுத்து அவற்றை தெற்கின் பாதாள உலக குழுக்களுக்கு விற்பனை செய்யும் சட்ட விரோத நடவடிக்கைகளை திட்டமிட்டு முன்னெடுத்ததாக கூறப்படும் 12 சந்தேக நபர்கள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்ச் பகுதியைச் சேர்ந்த பூசகர் ஒருவர் உட்பட விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்டிருந்த 5 பேரும் தெற்கின் பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7 பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். உளவுத் துறையினர் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசு…
-
- 0 replies
- 294 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தீவகத்தில் காவல்துறைச் சோதனை சாவடிகளை அமைக்குமாறு வடமாகாண பிரதிக் காவல்துறைமா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தீவாக பகுதிகளில் மாடுகள் களவாடப்பட்டு சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கப்பட்டு , கடத்தப்படுதல் , கற்றாளைகள் தீவகத்தில் இருந்து கடத்தப்படுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றன. குறித்த சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த தீவகத்தில் அராலி சந்தி , வங்களாவடி பகுதிகளில் காவல்துறை காவலரண்களை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு வேலணை பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டோர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பிர…
-
- 0 replies
- 214 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இரணைமடுகுளத்தின் கீழான 2019 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கை 15 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று(12) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற இரணைமடு சிறுபோகம் நெற்செய்கை கூட்டத்தின் போதே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரணைமடுகுளம் புனரமைப்புக்கு முன் சுமார் 8500 ஏக்கர் வரை மேற்கொள்ளப்பட்ட சிறுபோக நெற்செய்கை தற்போது 15 ஆயிரம் ஏக்கராக அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒன்று தொடக்கம் ஆறு ஏக்கர் வரை வயற்காணிகளை கொண்டவர்களுக்கு மூன்று ஏக்கரும், ஆறு தொடக்கம் எட்டு ஏக்கர் வரை நான்கு ஏக்கரும், எட்டு தொடக்கம் பத்து…
-
- 1 reply
- 432 views
-
-
March 11, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் , இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்குத் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு குற்றப் புல…
-
- 3 replies
- 927 views
-
-
முற்றுகையில் உள்ள அரசிற்கு சர்வதேசம் நெருக்குதல் கொடுக்க முடியாது… March 11, 2019 முற்றுகை நிலையிலிருக்கும் அரசாங்கமொன்றை முன்னைய ஜெனீவா தீர்மானத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு அதீதமாக நெருக்குதலுக்கு உள்ளாக்க முடியாது என தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார். ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் அடுத்தவாரம் இலங்கை விவகாரம் ஆராய்விற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதன்போது இலங்கை சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரதிநிதிகளாக செல்லும் மூவர் குழுவும், வெளியுறவு அமைச்சின் சார்பில் கலந்துகொள்பவர்களும் கடந்த …
-
- 0 replies
- 385 views
-
-
இனப்படுகொலையினை காட்சிப்படுத்தும் ஊர்திப் பவனி யாழ். பல்கலையிலிருந்து ஆரம்பம் March 12, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி எதிர்வரும் சனிக்கிழமை அன்று மேற்கொள்ளப்படவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் இனப்படுகொலையினை காட்சிப்படுத்தும் ஊர்திப் பவனி இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலை வளாகத்தில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ள குறித்த ஊர்தி பவணி வடமாகாணம் முழுவதும் சென்று மீண்டும் பல்கலைகழகத்தை வந்தடைந்து பேரணியில் கலந்து கொள்ளும் என தெரிவிக்கப்படுகிறது. http://globaltamilnews.net/2019/115826/
-
- 0 replies
- 497 views
-
-
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் ஜேவிபியின் முயற்சிக்கு ஆதரவு – இரா.சம்பந்தன் நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி முறையை ஒழிப்பதற்கு, ஜேவிபி மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று கூட்டமைப்பின் தலைவர், இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜேவிபியின் தலைமையகத்தில் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுக்கும், ஜேவிபி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக, இதன்போது முக்கியமாகப் பேசப்பட்டது. இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இரா. சம்பந்தன், “நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபர் ஆட்சி முறையை ஒழிக்க ஜேவிபி மேற்கொள்ளும் முயற்சிக…
-
- 0 replies
- 436 views
-
-
தமிழ்பேசும் மக்கள் ஒற்றுமைப்பட்டால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் – ரவூப் ஹக்கீம் நாட்டின் அரசியல்போக்கு முஸ்லிம்களின் ஒற்றுமையினால் மாற்றியமைக்கப்பட முடியும். வட, கிழக்கிலும் வெளியிலும் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டால் சிறந்ததொரு அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். சம்மாந்துறையில் நகர திட்டமிடல் அமைச்சின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட கைகாட்டி சந்தி சிறுவர் பூங்கா, கல்லரிச்சல் வீதி மற்றும் சிறுவர் பூங்கா, அன்வர் இஸ்மாயில் மாவத்தை காபட் வீதி ஆகியவ…
-
- 0 replies
- 396 views
-
-
‘மொட்டு’ கட்சியை சேர்ந்தவர் தான் அதிபர் வேட்பாளர் – மகிந்த திட்டவட்டம் வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த வேட்பாளரே தமது தரப்பில் நிறுத்தப்படுவார் என்று, சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டியவில், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறினார். தமது தரப்பில் போட்டியில் நிறுத்தப்படும் அதிபர் வேட்பாளர், நிச்சயமாக, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் கீழ் தான் போட்டியிட வேண்டும் என்றும் அவர் கூறினார். அதேவேளை, நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறை நீக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.puthinappalaka…
-
- 0 replies
- 403 views
-
-
ஒப்புக்கொண்டார் அட்மிரல் கரன்னகொட – மீண்டும் நாளை விசாரணைக்கு அழைப்பு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய, கடற்படைப் பிரிவு தமது கட்டுப்பாட்டிலேயே இருந்தது என்று, சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட ஒப்புக் கொண்டுள்ளார். இந்த வழக்கில், 14 ஆவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள அட்மிரல் வசந்த கரன்னகொட, தலைமறைவாக இருந்து வந்தார். உச்சநீதிமன்றத்தின் மூலம், கைது செய்யப்படுவதற்கு இடைக்காலத் தடை உத்தரவு பெற்றுக் கொண்ட அவர், உச்சநீதிமன்றத்தில் கட்டளைக்கு அமைய நேற்றுக்காலை 9 மணியளவில், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சமூகமளித்தார். அவரிடம், மாலை 5 மணிவரை சுமார் 8 மண…
-
- 0 replies
- 151 views
-
-
மிலேனியம் சவால் நிதியத்தினால் சிறிலங்காவுக்கு அச்சுறுத்தல் – விமல் வீரவன்ச அலரி மாளிகையில், புதிதாகச் செயற்படும் அமெரிக்க நிறுவனமான மிலேனியம் சவால் நிதியத்தினால், சிறிலங்காவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், “அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், கீழ் செயற்படும் மிலேனியம் சவால் நிதியத்தின் நோக்கம், காணி வங்கிச் சட்டம் என்ற பெயரில், சிறிலங்காவின் காணிச் சட்டங்களை மாற்றுவது தான். அனைத்து அரச காணிகளையும் இந்த காணி வங்கியின் கீழ் கொண்டு வரவும், அந்தக் காணிகளை வெளிநாடுகள் உள்ளிட்ட எவருக்கும் வழங்குவ…
-
- 0 replies
- 121 views
-
-
கால அட்டவணையுடன்கூடிய தீர்மானமே அவசியம்: சுரேஸ் பிரேமச்சந்திரன் ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்படவுள்ள புதிய தீர்மானமானது, கால அட்டவணையுடன் இருந்தால் அதனை பரிசீலிக்க முடியுமென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவ்வாறு கால அட்டவனையுடன் தீர்மானம் வந்தாலும் இலங்கை அரசாங்கம் அதனை எந்தளவுக்கு சாத்தியமாக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர் இவ்விடயங்களைக் கூறியுள்ளார். ஐ.நா மனித உரிமை பேரவையில் கண்காணிப்பு என்ற பெயரில் கால அவகாசம் வழங்கப்படவு…
-
- 0 replies
- 148 views
-
-
30/1 தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்: பிரித்தானியா- ஜேர்மன் புதிய தீர்மானம் 30/1 தீர்மானத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, பிரித்தானியாவும், ஜேர்மனும் புதிய தீர்மானமொன்றை முன்வைத்துள்ளது. இப்புதிய தீர்மானம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் பேரவையில் நேற்று (திங்கட்கிழமை) முன்வைக்கப்பட்டுள்ளது. ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில் இத்தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானியா, ஜேர்மனுடன் இணைந்து இலங்கை தொடர்பான இத்தீர்மானத்தை கனடா, அயர்லாந்து, மொன்ரெனிக்ரோ, வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் முன்வைத்துள்ளன. இத்தீர்மானத்திற்கமைய 2015ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவ…
-
- 0 replies
- 298 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் சேவையில் இல்லாமையைக் கண்டித்து, வைத்தியசாலை முன்றலில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் நடைபெற்று வருகின்றது. குறித்த வைத்தியசாலையில் நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் தொடர்சியாக 24 மணிநேரமும் சேவையில் ஈடுபட வேண்டும். ஆனால் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் வேறு வைத்திய சாலையில் பணியாற்றிவிட்டு சம்பளத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். அவர்கள் எமது வைத்திய சாலையில் சேவையாற்ற வேண்டும். என தெரிவித்து அப்பிரதேசத்தை சேர்ந்தவர…
-
- 2 replies
- 310 views
-
-
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் காணாமல் போன பலரை அவர்களது உறவுகள் தேடியலையும் நிலையில் காணாமற் போனதாக தேடப்படும் ஒருவரை இராணுவம் படுகொலை செய்துள்ளமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட ஒருவரின் தலையை துண்டித்து படுகொலை செய்து புகைப்படம் எடுத்த கொடூர சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. கிளிநொச்சி 8 ஆம் வாய்க்கால் பகுதியில் 1998 ஆம் ஆண்டு மார்கழி இறுதி வாரத்தில் சிறிலங்கா படையினரால் பிடித்துச்செல்லப்பட்ட 22 பேரில் ஒருவரின் புகைப்படமே இங்கே பதிவேற்றப்பட்டுள்ளது. மிகுதி 21 பேரின் நிலை இதுவரை தெரியவில்லை. காந்தன் என்று அழைக்கப்படும் நாகலிங்கம் ஸ்ரீறிஸ்கந்கராசா தனது சகோதரியின் கணவன் பரமேஸ்வரனுடன் வீடுபார்ப்பற்காக கிளிநொச…
-
- 12 replies
- 2.5k views
-
-
இலங்கையின் நீதித்துறையும் ஒரு தாயின் தேடலும் கடந்த 10 ஆண்டுகளாக அந்த 50 வயதான தாயார், சரோஜினி நாகநாதன், தனது மகனுக்கான நீதி கோரி சளைக்காமல் ஒரு நீதிமன்றதில் இருந்து அடுத்த நீதிமன்றம் வரை சென்றுகொண்டிருக்கிறார். கடந்த வியாழனன்று முன்னாள் நேவி கொமாண்டர், தான் கைது செய்யப் படக் கூடாதென்று தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமைகள் மனு விசாரணைக்கு, இலங்கையின் உச்ச நீதிமன்றின் மூன்று நீதிபதிகள் முன் வந்த போது, அங்கேயும் வந்திருந்தார். கருப்பு நிற சேலையில், 5 மணிநேரம் நீண்ட அந்த விசாரணையில், அயர்வுடன் ஆனால், கவனமாக விசாரணையினை கவனித்துக் கொண்டு இருந்தார் அந்த தாயார். மகனை இழந்து தேடும் அந்த தாயாரையும், அதற்கு காரணமானவர் என குற்றம் சுமத்தப் பட்டுள்ள இலங்கை முன்னாள் நே…
-
- 4 replies
- 872 views
-
-
மனித உரிமைகள் பேரவையின் அலுவலகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டும் ; சிவாஜிலிங்கம் மனித உரிமைகள் பேரவையின் அலுவலகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டும் என முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மனித உரிமைகள் பேரவையின் அலுவலகம் இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். அது சாத்தியமாகாவிட்டால் குறித்த அலுவலகம் கொழும்பில் என்றாலும் அமைக்கப்பட வேண்டும். எனினும் இந்த அலுவலகத்தினை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும். அத்துடன் குறித்த…
-
- 0 replies
- 224 views
-
-
"காணாமல்போனோரின் உறவுகளுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவை அதிகரிக்கவும்" (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) காணாமல் போனோரின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை அவர்களின் உறவுகளுக்கு வழங்கப்படவுள்ள 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவை அதிகரித்து வழங்க வேண்டுமென கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/51688
-
- 0 replies
- 352 views
-
-
மக்கள் விடுதலை முன்னணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில், இன்று (11) பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தம் தொடர்பிலேயே இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது http://globaltamilnews.net/2019/115743/
-
- 2 replies
- 430 views
-
-
இந்திய எல்லை அருகே பாக்கு நீரிணையில் படம் பிடித்த சீன அதிகாரிகள் குழு சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான் தலைமையிலான சீன அதிகாரிகள் குழு, தலைமன்னார் இறங்குதுறைப் பகுதி மற்றும், இந்திய எல்லைப் பகுதியில் உள்ள மணல் திட்டுகளைச் சென்று பார்வையிட்டுள்ளனர். சீனத் தூதுவர் செங் ஷியுவான் மற்றும் ஆறு சீன தூதரக அதிகாரிகள் கடந்த 5ஆம், 6ஆம் நாள்களில் வடக்கில் பயணம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது, கடந்த 6ஆம், நாள் தலைமன்னாரில் உள்ள வடமேற்குப் பிராந்திய கடற்படைத் தலைமையகத்துக்குச் சென்றிருந்த சீன அதிகாரிகள் குழு, அங்கு சிறிலங்கா கடற்படையினருடன் பேச்சுக்களை நடத்தியிருந்தனர். இதன்போது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள பாக்கு …
-
- 8 replies
- 874 views
-
-
தமிழர் கூட்டமைப்பிற்கு பொருத்தமான பெயரை இப்போதுதான் பெரும்பான்மை அரசியல்வாதி ஒருவர் வழங்கியுள்ளார். தந்தை செல்வா காலத்தில் இருந்து இந்த நிமிடம் வரை இவர்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். ஆனால் இவர்களுக்கு வேறு வழி எதுவும் கிடையாது.. சிறீலங்கா பெரும்பான்மை கட்சிகள் காதில் பூ சுற்ற இவர்கள் தமிழ் மக்கள் காதுகளில் 70 வருடங்களாக பூ சுற்றி வருகிறார்கள் என்ற உண்மை அம்பலத்திற்கு வர ஆரம்பித்துள்ளது.. இது குறித்த செய்தி.. பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியல் அமைப்பு என்ற கரட் மரக்கறியைக் காட்டிக் கொண்டு தான் தமிழ் தேசிய கூட்டமைப்பைக் கட்டி வைத்துள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். யாழில் நடைபெற்ற ஊடகவியாளலர் சந்திப்ப…
-
- 1 reply
- 511 views
-
-
மன்னார்ப் புதைகுழியில் எடுக்கப்பட்ட எலும் புக்கூடுகள் சுமார் 300 - 500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்ற காபன் பரிசோதனை அறிக்கை ஒரு பெரும் உண்மையை எடுத்துரைக்கிறது. அதாவது இலங்கை அரசின் அதிகாரத் துக்குட்பட்டு எது நடந்தாலும் அது தமிழ் மக் களுக்கு எப்போதும் எதிராகவும் பாதகமாக வுமே இருக்கும். அந்த அடிப்படையில் தான் மன்னார்ப் புதை குழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் மீதான காபன் பரிசோதனை அறிக்கையும் மிகத் தெளிவாக திட்டமிட்ட அடிப்படையில் உண்மையை மறைப்பதாக அமைந்துள்ளது. மன்னார் புதைகுழியில் தோண்டி எடுக் கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் விவகாரம் உலகறிந்த சம்பவம். இருந்தும் அதனைக்கூட 300 தொடக்கம் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கூறப்படுகிறது என்றால், …
-
- 0 replies
- 414 views
-