ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143264 topics in this forum
-
மன்னாரில் கிளைமோர் குண்டு ஒன்று மீட்பு! மன்னார் பெரியகடை பள்ளிவாசல் ஒழுங்கை மற்றும் மீன்சந்தை பகுதிக்கு செல்லும் பிரதான பாதைக்கு அருகிலிருந்து கிளைமோர் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை மன்னார் நகர சபை ஊழியர்களால் துப்பரவுப்பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், குப்பைக்குள் இருந்து குறித்த குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கிளைமோர் குண்டு சுமார் 3 கிலோ கிராம் நிறை கொண்டதெனவும், குறித்த பகுதியில் அதிகளவிலான பழைய இரும்புகள் கொள்வனவு கடைகள் காணப்படுகின்றதால் பழைய இரும்பு பொருட்களுடன் கலந்து இந்த கிளைமோரும் வந்திருக்கலாம் என சந்தேகத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குறித்த வெடிபொருள் தொடர்பான மேல…
-
- 0 replies
- 246 views
- 1 follower
-
-
இந்த நாட்டுக்காக வாங்கிய கடன்களில் 89 வீதமாக கடன்தொகை மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் பெறப்பட்டவை. அவற்றை செலுத்தவே கடுமையாக போராட வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இந்த கடன்களில் 80 வீதத்தை மக்களின் வரிப்பணத்தில் இருந்து அறவிட வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று வரவு செலவு திட்டம் மீதான முதல் நாள் விவாதத்தில் கலந்துகொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/51318
-
- 0 replies
- 364 views
-
-
இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் நிச்சியமாக பெரும் தோல்வியினையே சந்திக்கும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுகொடுப்பதற்கான ஏற்பாடுகளோ அல்லது இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினை மட்டுபடுத்தி உள்நாட்டு வருமானத்தை அதிகரிப்பதற்கான எந்தவித ஏற்பாடுகளும் இவ்வருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. இதேவேளை வரவு செலவுத்திட்டத்தை தோற்கடித்து நேரடியாக பொது தேர்தலுக்கு செல்வதினூடாகவே அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். http:…
-
- 0 replies
- 247 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில், முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் வசந்த கரன்னாகொட , நேவி சம்பத் எனும் லெப்டினன் கொமாண்டர் ஹெட்டி ஆரச்சி, லெப்டினன் கொமாண்டர் சம்பத் முனசிங்க உட்பட அனைத்து சந்தேக நபர்களுக்கும் எதிராக மனிதப் படுகொலை வழக்குப் பதிவு செய்ய சட்ட மா அதிபர் தீர்மானித்துள்ளார். இலங்கை தண்டனை சட்டக் கோவையின் 296 ஆவது அத்தியாயத்தின் கீழ் அனைத்து சந்தேக நபர்களுக்கு எதிராகவும் இவ்வாறு மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை முன்வைத்து வழக்குப் பதிவு செய்ய சட்ட மா அதிபர் …
-
- 0 replies
- 279 views
-
-
யாழ்.மட்டுவில் வீட்டில் அட்காசம் புரிந்தவர்களில் சிலரை, காவற்துறையினர் கைது செய்தனர்… செய்தனர்… யாழ்.மட்டுவில் பகுதியில் வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் மூவரை சாவகச்சேரி காவற்துறையினர் கைது செய்துள்ளனர். மட்டுவில் வின்சன் வீதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த கும்பல் ஒன்று வீட்டின் கதவினை கை கோடாலியினால் கொத்தி சேதப்படுத்தி அட்டகாசம் புரிந்துள்ளனர். …
-
- 0 replies
- 302 views
-
-
March 6, 2019 வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் இன்று நடைபெற்றது. அதன் போது பலர் கலந்து கொண்டு தமது தேவைகளை பூர்த்தி செய்யததுடன், தமது குறைகளையும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். http://globaltamilnews.net/2019/115293/
-
- 0 replies
- 245 views
-
-
இலங்கைக்கு சந்தர்ப்பம் வழங்குமாறுகோர, MY3யின் மூவரடங்கிய குழு ஜனீவா பயணம்…. March 6, 2019 தமது பிரச்சினைகளை தாமே தீர்த்துக்கொள்வதற்கு இலங்கைக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் வேண்டுகோள் விடுப்பதற்காக மூவரடங்கிய பிரதிநிதிகள் குழுவொன்றை ஜெனீவாவுக்கு அனுப்பவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட அவர், இதற்கமைவாக, கலாநிதி சரத் அமுனுகம, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் இந்தப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கவுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த வருடம் மு…
-
- 4 replies
- 858 views
-
-
கத்தோலிக்கர்களை அச்சுறுத்தும் துண்டுப் பிரசுரங்கள்!! By லவனிஸ் பதிவேற்றிய காலம்: Mar 5, 2019 2 FacebookTwitterGoogle+Email ViberWhatsApp மன்னாரில் உள்ள கத்தோலிக்க அருட்தந்தையர்கள் மற்றும் கத்தோலிக்க மக்களை அச்சுறுத்தும் வகையில், திருக்கேதீஸ்வர ஆலயம் சார்ந்த பகுதிகளில் துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மன்னார் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரியின் போது குறித்த துண்டுப்பிரசுரங்கள் விந…
-
- 7 replies
- 1.5k views
-
-
சட்டபூர்வ கார்பன் பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்திற்கு கிடைத்துள்ளது. March 6, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் கார்பன் பரிசோதனையின் அறிக்கையானது சட்ட பூர்வமாக இன்றைய தினம் கிடைக்கப் பெற்றுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (6) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்…. மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் கடந்த மாதம் கார்பன் பரிசோதனைக்காக சட்டவைத்திய அதிகாரி தலைமையில் அமேரிக்காவில் உள்ள புளோரிடவில் உள்ள ஆய்வு கூடத்திற்கு மே…
-
- 0 replies
- 407 views
-
-
தமிழக மீனவர்களின் 6 மீன் பிடி படகுகள் அரசுடமையாக்க உத்ததரவு.. March 6, 2019 சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தமிழக மீனவர்களின் ஆறு மீன் பிடி படகுகள் அரசுடமையாக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி வரை எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட இராமேஸ்வரம், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த ஆறு மீன்பிடி படகுகளுக்கான வழக்கு நேற்று ஊர்காவற்த்துறை நீதிமன்ற நீதிபதி ஏ. யூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது படகின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தால் குறித்த ஆறு மீன் பிடி படகுகள் அரசுடமையாக்கப்படுவதாக…
-
- 0 replies
- 262 views
-
-
அநுராதபுரத்தில் உள்ள கம்பனிக்காக கற்றாளைகளை பிடுங்கிய ஐவர் கைது March 6, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அநுராதபுரத்தில் உள்ள கம்பனி ஒன்றுக்காக பொன்னாலையில் கற்றாளைகளைப் பிடுங்கிய இரு பெண்கள் உட்பட ஐந்து பேரை வட்டுக்கோட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். . கடந்த வாரம் வலி.மேற்கு பிரதேச சபையின் பொன்னாலை வட்டார உறுப்பினர் ந.பொன்ராசா, அராலி வட்டார உறுப்பினர் எஸ்.இலங்கேஸ்வரன் ஆகியோர் பொன்னாலையைச் சேர்ந்த ஒருவரி உதவியுடன் தென்னிலங்கையைச் சேர்ந்த நால்வரை மடக்கிப் பிடித்து கடும் எச்சரிக்கையின் பின்னர் விடுவித்தனர். இந்நிலையில், நேற்றைய தினம் இரு பெண்கள் உட்பட ஐவர் கற்றாளைகளைப் பிடுங்கியதனை அவதானித்த வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் வட்டுக்கோட்டைப் கா…
-
- 0 replies
- 455 views
-
-
வீதியை மூடிய மரண வீடு-நடவடிக்கை எடுப்பது யார்? March 5, 2019 நான்கு நாட்களாக பகல் இரவாக முக்கிய வீதி ஒன்று மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். கடந்த மார்ச் முதலாம் திகதி தொடக்கம் இவ்வீதியில் மரண வீட்டு நிகழ்வொன்றிற்காக நிழல் குடை ஒன்று வீதியின் குறுக்காக போடப்பட்டுள்ளது. இதனால் வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளதுடன் அவ்வீதியினால் பயணம் செய்வோர் மாற்று வீதியை பயன்படுத்துகின்றனர். கல்முனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட கிட்டங்கி நற்பிட்டிமுனை கிராமத்தை இணைக்கும் இவ்வீதி மூடப்பட்ட நிலையில் அந்நிழல் கூடையில் கரம் விளையாட்டு காட் கூட்டம் என்பன சில இளைஞர் குழுக்கள் …
-
- 0 replies
- 459 views
-
-
தெற்கிலிருந்து குழாய் மூலம் வடக்கிற்கு குடிநீர்! தெற்கிலிருந்து குழாய்கள் ஊடக குடிநீரை வடக்கிற்கு கொண்டுசெல்லும் திட்டம் ஆராயப்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், வடக்கு கிழக்கு பகுதியில் தமிழ் பேசும் பொலிஸாரின் பற்றாக்குறை பாரிய பிரச்சினையாக காணப்படுகிறதென்றும் அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் போதைப்பொருள், வறுமை, அபிவிருத்தி குறைபாடுகள், பொருளாதார பிரச்சினைகள், தொடர்பாகவும் ஆராயப்பட்டு வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://athavannews…
-
- 2 replies
- 517 views
- 1 follower
-
-
கண்ணிவெடிகளை அகற்ற 60 மில்லியன் குரோனர்களை வழங்கும் நோர்வே சிறிலங்காவில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 60 மில்லியன் குரோனர்களை வழங்க நோர்வே முன்வந்துள்ளது. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க செயலர் மரியன் ஹனென், நேற்று கொழும்பில் இதனை அறிவித்தார். நேற்றுக்காலை கொழும்பு வந்த அவர், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். இதன்போதே, கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைக்காக நோர்வேயின் நிதியுதவி பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். http://www.puthinappalakai.net/2019/03/06/news/36737
-
- 0 replies
- 205 views
-
-
ஐ.நா. அமர்வில் பங்கேற்கிறார் வடக்கு ஆளுநர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் அரசாங்கத்தின் சார்பில் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் கலந்துக் கொள்ளவுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வடக்கு ஆளுநருடன், அமைச்சர் மஹிந்த சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர். இவர்கள் எதிர்வரும் 20, 22 திகதிகளில் நடைபெறும் அமர்வில் கலந்து கொண்டு, சர்வதேச அழுத்தமில்லாத சூழலில் பிரச்சினைகளை தீர்க்க விரும்புவதாக ஐ.நா.வில் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும், இராணுவம் யுத்தக் குற்றச்சாட்டுகளில் ஈடு…
-
- 1 reply
- 1.3k views
- 1 follower
-
-
மகிந்தவை ஓரம்கட்டிய நோர்வே – சீற்றத்தில் கூட்டு எதிரணி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்கச் செயலர் மரியன் ஹகென், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்திக்காதமை, கூட்டு எதிரணியினருக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர், கெஹலிய ரம்புக்வெல, “சிறிலங்கா வந்துள்ள நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்கச் செயலர் மரியன் ஹகெனுடனான சந்திப்புக்கு, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை, கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் அழைக்கவில்லை. முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுடன் நிச்சயமாக ஒரு சந்திப்புக்கு, நோர்வே தூதரகம் ஏற்பாடு …
-
- 0 replies
- 282 views
-
-
வரவுசெலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்குமா? – சம்பந்தன் பதில் சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்த வரவுசெலவு திட்டத்தை ஆதரிப்பதா- இல்லையா என்பது குறித்து , ஆராய்ந்து முடிவெடுப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இரா.சம்பந்தன், “வரவுசெலவுத் திட்டத்தில் மக்களுக்கு நன்மைகள் உள்ளதா என்பதை கூறுவதை விட, தீமைகள் இல்லை என்று கூறலாம். வடக்கில் உள்ள மக்களுக்காக சிறிலங்கா அரசாங்கம் சில வேலைகளை செய்துள்ளது. எனினும் அது …
-
- 0 replies
- 232 views
-
-
2019ஐ இராணுவ ஆண்டாக பிரகடனம் செய்கிறது சிறிலங்கா அரசாங்கம் 2019 ஆம் ஆண்டை இராணுவ ஆண்டாகப் பிரகடனப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டே, இந்த ஆண்டை இராணுவ ஆண்டாகப் பிரகடனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இராணுவத்தினரை கௌரவிக்கும் நிகழ்வுகளை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. இதன் முதல் கட்டமாக, இராணுவ கொடி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொடியை ரணவிறு…
-
- 0 replies
- 216 views
-
-
கண்டி பேரணியில் பங்கேற்கமாட்டேன் – சரியான நேரத்தில் அரசியலுக்கு வருவேன் என்கிறார் கோத்தா கண்டியில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பேரணியில், தாம் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் கண்டியில் நடத்தப்படவுள்ள பேரணியில் கோத்தாபய ராஜபக்ச, முதலாவது அரசியல் மேடையில் ஏறவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தநிலையில், நேற்று முன்தினம் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய கோத்தாபய ராஜபக்ச, மார்ச் 8ஆம் நாள் நடைபெறவுள்ள பேரணிக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதில் நான் பங்கேற்கமாட்டேன். நான் அரசியலி…
-
- 0 replies
- 507 views
-
-
இந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் – அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் மைத்திரி இந்தவருடத்தில் பெரும்பாலும் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இருப்பினும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படுமென தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டுமென்றாலும், தற்போதைய நிலைமையில் பொதுத்தேர்தலே முதலில் நடைபெறக்கூடுமென தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து தற்போதைய பொருளாதார நிலையிலிருந்து நாட்டை மீட்க உழைக்…
-
- 1 reply
- 414 views
- 1 follower
-
-
ஏர் இந்தியா விமான ஊழியர், பணிப்பெண்கள் ஒவ்வொரு அறிவிப்பின்போதும் ஜெய்ஹிந்த் என கூற வேண்டும் என்று ஏர் இந்தியா சார்பில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குநர் அமிதாப் சிங், விமானி குழு தங்களது ஒவ்வொரு அறிவிப்பின் இறுதியிலும் ஜெய்ஹிந்த் எனும் முழக்கத்தை கூற வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார். இதுகுறித்து விமானிகள் குழு, விமான ஊழியர்கள் குழுவுக்கு ஏர் இந்தியா சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டிலும் இதே மாதிரியான அறிவிப்பு ஏர் இந்தியா விமானி குழுவிற்கு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ( தினமணி) https://www.madawalaenews.com/2019/03/ain.html
-
- 7 replies
- 734 views
-
-
யார் எதிர்த்தாலும் மரண தண்டனையை நிறைவேற்றுவேன்: ஜனாதிபதி மீண்டும் உறுதி யார் எதிர்த்தாலும் நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது நிச்சயம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் உறுதியளித்துள்ளார். ஊடக பிரதானிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஊடக சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் நாட்டில் போதைப்பொருளை ஒழிப்பதற்கு என்ன செய்தார்கள் என்றும் ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்காலத்தில் மரண தண்டனை கட்டாயமாக நிறைவேற்றப்படும் என்று தெரித்த ஜனாதிபதி, ஆனால், அது எப்போதிலிருந்து நடைமுறைக்கு வரும் என்பதை கூற முடியாது என்றும் கூறியுள்ளார். http://athavannews.com/யார்-எதிர்த்தாலும்-மரண-த/
-
- 0 replies
- 330 views
-
-
திருக்கோணேச்சர சிவலிங்கம், தாக்கப்பட்டு உடைக்கப்பட்டார்… March 1, 2019 ஈழத்தின் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருகோணமலை திருக்கோணேச்சரர் ஆலயத்தில் சிவலிங்கம் ஒன்று இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆலயத்தின் அன்னதானமடத்திற்கு அருகிலுள்ள சிவலிங்கமே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட் கிழமை சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதற்கு ஏதுவாக குறித்த இடத்தில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந…
-
- 31 replies
- 3.7k views
-
-
கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்விற்கு எதிராக நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளராக மீண்டும் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாந்தர அதிகாரியான எம்.கே.எம். மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று வழங்கியவிசேட தீர்ப்பின் பிரகாரம் அவர் மீண்டும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக தான் ஏலவே பணியாற்றி வந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தான் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக அவர் திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்நிலையில், ஒரு மாத காலத்தின் பின்னர் குறித்த வழக்கிற்கான தீ…
-
- 0 replies
- 807 views
-
-
புலனாய்வு துறையில் அதிகளவு முஸ்லிம்கள் இருந்து, புலிகளை அழித்தொழிப்பதில் பெரும் பங்காற்றினர்புலனாய்வுத்துறையில் முஸ்லிம்கள் அதிகளவில் இணைந்து நாட்டுக்காகப் பாரியளவில் பங்காற்றியுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். கண்டி மாவட்டத்தில் உடுநுவர எலமல்தெனியவில் “எலிய” அமைப்பினால் தொழிலதிபர் ஏ.எல்.எம். பாரிஸின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் நடாத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார் கண்டி மாவட்டத்தின் சகல பகுதிகளிலிருந்தும் பெருந்தொகையான முஸ்லிம்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பராளுமன்ற உறுப்பினர்களான மகிந்தானந்த அளுத்கமகே, கெஹலிய ரம்புக்வ…
-
- 40 replies
- 2.1k views
- 1 follower
-